ATM Tamil Romantic Novels

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27

மோகனம்-25 மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஹாலின்.. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களின் அருகில் நின்று… கைகளைப் பிசைந்து கொண்டே.. தடுமாற்றத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மதுராக்ஷி. நேரம், காலை, “ஒன்பதே முக்கால்” என்று காட்டவே மதுராக்ஷியின் விழிகளும் தான் சற்றே விரிந்தது. இதழ்களோ தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்… எதையெதையோ பினாத்தவும் ஆரம்பித்தது. “என்ன?? ஒன்பதே முக்கால் ஆகிருச்சா..?? இன்னும் ஏன் அஜய் ஆபீஸ் போகாம இருக்கான்… ஆபிஸ் போறதுக்கு ரெடியாகி… டிரஸ்லாம் போட்டுக்கிட்டு நின்னானே… அப்றமும் […]

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17

17   யாருக்கும் நிற்காமல் காலம் நேரம் செல்வது போலத்தான் தெய்வானை அம்மாள் திருமண வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் மடமடவென்று செய்தார். மண்டபத்திற்கு பிரச்சினை கிடையாது. சொந்த மண்டபம் இருக்கிறது. நகைகளுக்கும் பஞ்சமில்லை.. ஏற்கனவே அவரவர் மகள்களுக்கு சேர்த்து வைத்த நகைகளும்.. கூடவே இன்னும் தேவைக்கு கடலைப் போல நகைக்கடை இருக்க.. வேண்டுமென்றதை கிள்ளி வைக்கலாம் இல்லை அள்ளியே வைத்தார் மூன்று பேருக்கும் சமமாய் தெய்வானை அம்மாள்.       அடுத்து பட்டுக்கு அவர்கள் வழக்கம்போல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24

மோகனம்-23 அது அவர்களின் திருமணத்திற்குப் பின்னரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, படுத்தால் அரையடி ஆழத்துக்குப் புதையும் சொகுசு மெத்தை! அதில்… துயிலின் உச்சக்கட்டத்தில்… தலையணையை மல்லாக்கப் படுத்தணைத்து துயின்றிருந்தான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!! அக்கணம்.. அவனின் புது மனையாளின்.. அரக்கப் பறக்க அழைக்கும் குரல் .. ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல.. அவனின் செவிகளைத் தீண்டியது. “அஜய்.. அஜய்… சீக்கிரம் எந்திரிங்க அஜய்.. அஜய்ய்!!!”என்று அவள் நேற்றில்லாத மரியாதையுடன்… ஏதோ பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டாற் போன்ற பரபரப்புடன்..எழுப்ப

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22

மோகனப் புன்னகை – 21 ஒரு மாதத்திற்கு பிறகு, அது சென்னையில் பெரும் பெருஞ்செல்வந்தர்களெல்லாம்… திருமணங்களுக்காக தேர்ந்தெடுக்கும்.. மிகப் பிரம்மாண்டமான மண்டபம்!!! அம்மண்டபம்… அன்றைய தினத்தில்.. பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களென சகலவிதமான தரப்பினர்களாலும் சூழப்பட்டிருந்தது. சுவர்களிலும், உத்திரங்களிலும் தொங்கும் வண்ண வண்ண மலர்களாலும்.. வாசனைத் திரவியங்களாலும்.. சிவப்புக் கம்பளமும் விரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில்.. நாதஸ்வரமும், மேளதாள வாத்தியங்களும் கொண்டு… கல்யாண இசைக்குழு… கூட்டமாக இணைந்து இசைத்துக் கொண்டிருக்கலாயினர். இன்னொரு பக்கத்தில்.. பின்குடுமி

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 19&20

மோகனம் – 19 மறுநாள்க்காலையில் அவள் எழுந்த போது.. மணி பத்து. ஞாயிற்றுக்கிழமையானாலே… ஜாகிங்கையும் கட் அடித்து விட்டு உறங்குவது அவள் வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொடர அவளுக்கு நன்றாகவே தூக்கம் பிடித்திருந்தது. அவள் வீடென்றெண்ணி… நெட்டி முறித்துக் கொண்டு.. கைமறைவில் கொட்டாவியொன்றையும் வெளியேற்றிக் கொண்டு… அவள் கண் விழித்த போது அவள் தூங்கிய இடம் மாறியிருப்பது கண்டு மெலிதாகத் தான் அதிர்ந்தாள் அவள்!! அவளெப்படி… அவனது கூர்க் வீட்டின் அழகிய அறையில் படுத்துக் கிடக்கிறாள்??

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 19&20 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18

மோகனம்-17 அவ்விரவு நேரத்தில்… சென்னையிலிருந்து கூர்க் என்னும் குடகுமலைக்கு… அவனுக்கேயென்ற சொந்தவிமானத்தில் வந்து சேர… கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களே பிடித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால்… கர்நாடகா மாநிலத்தின் எல்லைக்குள் வந்து விழுந்த…மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பிரதேசம் தானது. ஆங்கிலேயர்களால் “கூர்க்” என்றும்.. கன்னடமொழி பேசும் மக்களால் “கொடகு”என்றும் அர்த்தப்படும் வகையில்.. அமர்ந்திருந்த குடகுமலை… இயற்கை அன்னை தந்த ஓர் அரிய பொக்கிஷம் என்று… அங்கு வந்து சேர்ந்த முதல்நாளிலேயே அறிய முடியாமல் தான்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 15&16

மோகனம்-15 மறுநாள் அலுவலகத்தில், அவனுடைய அறைக்கதவை திறக்க நாடிய போது… உள்ளிருந்து காக்கிச் சீருடை அணிந்து…. சற்று தொப்பை வைத்து.. முறுக்கு மீசையுடன்.. கூடிய ஒரு போலீஸ்காரரொருவர்… வெளியே வருவது புரிந்தது அவளுக்கு. அவளுக்கோ காக்கிச்சட்டையைக் கண்டதும்… குற்றமுள்ள நெஞ்சல்லவா?? உள்ளுக்குள் அதீதத்துக்கும், அதீதமாய் குறுகுறுக்க…காவல் அதிகாரியின் முகத்தைப் பார்க்கவும் வெகு சிரமப்பட்டுக் கொண்டு நின்றாள். நிமிடத்தில்.. அவளது பிறைநுதல் மற்றும் தேகத்திலெல்லாம் வியர்த்து வழியவும் ஆரம்பித்திருந்தது. இமைகள் படபடக்க… அறை வாசலில் நின்றிருந்தவளை.. காவல்துறை அதிகாரியோ…

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 15&16 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-13&14

மோகனம்-13 இன்று அவள் அலுவலகப் படியேறும் போது அந்தக் கண்ணாடிக் கதவினைத் திறந்து விட்ட கூர்க்கா, சிரித்த முகமாக, “குட்மார்னிங் மேம்”என்று கூற, மதுராக்ஷிக்கும் உள்ளுக்குள் சற்று ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கா இந்த மரியாதை??அதுவும் நேற்று வரையில்லாத மரியாதை இன்றும் தான் ஏன்?! நேற்று வரை வெறுமனே கதவினைத் திறந்து விட்ட கூர்க்காவா.. இன்று காலை வந்தனங்கள் எல்லாம் சொல்வது?? கூடவே, “மேம்”என்று சேர்த்துக் கூறியது? உள்ளுக்குள் தோன்றிய ஆச்சரியத்தை.. வெளியில் காட்டிக் கொள்ளாமல்…. “குட்மார்னிங்க்”என்று சிநேகமாய்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-13&14 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-11

மோகனம்-11 அந்தப் புலர்காலைப் பொழுதினில்.. கீழ்வானில் ஆதவனும் இலேசாகத் தலைநீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க.. இருளைக் கிழித்துக் கொண்டு சிவந்திருந்தது வானம்!! ஒருபுறத்தில் சென்னையின் மெரினா கடற்கரையோ… விடியல் பொழுதிலும் கூட… பகற்போல பப்பரப்பாய்.. பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கையில்… காக்கைக் கூட்டங்கள் பறந்து கொண்டிருந்தன அங்குமிங்குமாய். தூரத்தோ ஒன்றையொன்றைத் துரத்தி வரும் வெண்ணிற அலைகளின் மீது பார்வையை.. மிருதுவாகப் பதித்த வண்ணமே… நடைபாதைக் கரையில்… ஹெட்செட்டில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே மெல்லோட்டம் ஓடிக் கொண்டிருந்தாள் நம் நாயகி

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-11 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 9

மோகனம் – 9 அலுவலக லிப்ட்டில் கீழ்த்தளத்திலிருந்து ஏறிக் கொண்டவளுக்கு… சரியாக மேல்த்தளத்தில்… அவனது தளம் வர… அவளது இதயம்…. நிமிடமாக ஆக…. அவளையும் மீறி, “பக் பக்” என்று அடித்துக் கொண்டது. அவள் அணிந்திருந்த சட்டை மற்றும் அலுவலக டெனிமில்… இடது கால் சிறிதாக நொண்டுவதையும், அதே இடது கையில் கட்டினையும் பார்த்து விட்டு…. அவள் தான் நேற்று வந்த திருடி என்று கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம் மதுராக்ஷிக்குள் அதீதமாக இருக்கவே செய்தது. அதன்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top