ATM Tamil Romantic Novels

IMG-20240904-WA0001

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 12

12       இது காதலா..  இல்லை காமமா.. ஒரு பெண்ணிடம் உருவாகுமா..   தன் வீட்டு பால்கனியில் வழக்கம்போல சிகை கோதி நின்றவனின் மனதில் பல குழப்ப முடிச்சுகள்.   மயூரியை நெருங்கும்போது அவன் மனதில் பல்கிப் பெறுவது என்னமோ காதல் தான்! ஆனால் அதன் பின்னே இருக்கும் அவனது சுயநலமும்.. பழி உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள.. இது காதலா? காமமா? என்று பிரித்தறியா குழப்பத்தில் ஆரன்!   என்னதான் காதல் என்று நிலையிலிருந்தாலும்… அதையும் […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 12 Read More »

85AB2945-F19E-4807-AD3E-138655EB6819

18 – புயலோடு பூவுக்கென்ன மோம்

18 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

காலையில் எழுந்ததும் வீராவுக்கு கல்யாணியின் ஞாபகம் வந்தது. உடனே தலையை குலுக்கி கொண்டு அலுவலகம் கிளம்ப தயாராக சென்று விட்டான்.

குளித்து விட்டு வந்தவுடன் போனில் நோட்டிபிகேசன் சவுண்ட்.. . எடுத்து பார்த்தால்.. கல்யாணி லோ நெக் டைட் டீசர்ட் அணிந்து கவர்ச்சியாக சிரித்தாள் ‘குட் மார்னிங் மச்சான்’ எனும் வாசகத்தோடு…

‘போடி..’என பதிலுக்கு அனுப்பினான்.

‘எங்க போக..’

‘எங்கயோ போ..’

‘நீயும் வரியா..’

‘என்னால நீ ஒரு பொண்ணுங்கறதையே நம்ப முடியல..’

‘நம்ப வைக்க என்ன செய்யனும்..

‘நான் உன் கூட பேசனும்..’

‘இப்ப கால் பண்ணவா..’

‘இல்ல ஆபீஸ் போக டைம் ஆயிடுச்சு.. நைட் பேசிக்கலாம்..’ என முடித்து விட்டான்.

இரவு வீராவுக்கு கல்யாணி சேட்டிங்கு வருவாளா… கால் பண்ணுவாளா.. என ஒரு சொல்ல முடியாத எதிர்பார்ப்பு.

அன்று இரவு வெகு நேரமாகியும் கல்யாணி வரவில்லை. வீரா நிமிசத்துக்கு ஒரு முறை தன் செல்போனை வெறித்து வெறித்து பார்த்தான். அவனால் ஒரு இடத்தில் இருப்பு கொள்ளவில்லை. அறையில் குறுக்கு நெடுக்குமாக நடந்து கொண்டே…

“இல்ல.. பொம்பள இல்ல.. ஆம்பள தான்.. சும்மா ஏதோ பிக் போட்டு என்னை ஏமாத்தறான். ப்ரூப் பண்ணுனு சொன்னதும் எஸ் ஆயிட்டான்.. எத்தனை நாளைக்கு மச்சான்ட்டு வருவல்ல.. அப்ப பார்த்துக்கிறேன்..” என புலம்பி கொண்டு இருந்தான்.

“ஆமாம் ஆம்பள தான்..”

“ம்ம்..பொம்பள இல்ல..”

நடந்து கொண்டே இருக்க.. போன் அடித்தது.
ஓடி போய் எடுத்தான். திரையில் கல்யாண் அழைக்கிறான் என்ற வாசகம் ஆங்கிலத்தில் மின்னியது..

“என்ன மச்சான் ஒரே ரிங்கில் எடுத்துட்ட.. என் கால்கு ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்தியாடா மச்சான்..”என்றது ஒரு இனிமையான பெண் குரல்..

குரலின் இனிமையில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான்.

“என்ன மச்சான்.. இப்ப நம்புறியா.. நான் கல்யாணி தான்னு..”

“ஏய்.. உண்மையாகவே நீ ஒரு பொண்ணு தானா..”

“என்ன மச்சான்.. இன்னும் நீ நம்பலையா..”

“என்னவா வேணா இருந்துட்டு போ.. என்ன மச்சான்னு கூப்பிடாத..”

“ஏன் உன் மில்கி ஞாபகம் வருதா… என் கருத்த மச்சான்”

“ஏய்.. நீ அவள பத்தி பேசாத.. என் நிக்கி உன்னை மாதிரி சீட்டிங் கிடையாது..”

“ஏன் உன் மில்கி உனக்கு சரக்கு ஊத்தி கொடுத்து தான உன்ன கவுத்தா… அவ ரொம்ப யோக்கியமோ..”

“ஏய்.. என் மில்கி ஒன்னும் ஊத்தி கொடுக்கல.. நானே தான் குடிச்சேன்.. அவ எவ்வளவு லவ் அண்ட் கேரிங் தெரியுமா..”

“நீ உம்னு சொல்லு நான் அவள விட உன்ன லவ்வோ லவ்னு லவ்வுவேன்..”

“ச்சீ.. அடுத்தவ புருஷன் நான்.. என்கிட்ட அசிங்கமா பேசாத..”

“நீ தான் அவள விட்டுட்டு வந்துட்டல்ல.. அப்புறம் என்ன..”

“உன் பேச்சே சரியில்லை முதல்ல போனை வை…” என இவன் வைத்துவிட்டான்.

எதிர்முனையில் கல்யாணிக்கு சிரிப்பை அடக்க முடியலை

“மச்சான் பயந்துட்டான்” என சொல்லி சொல்லி சிரித்தாள்.

நிகிதாவுக்கு இரண்டு மூன்று நாட்களாகவே.. உடல் சோர்வாக இருக்க… அதுவும் காலையில் எழும் போது லேசான தலை சுற்றல் இருக்க.. நாட்கணக்கை பார்த்தவளுக்கு சந்தேகம் வந்தது.

விசாலாவிடம் கூட சொல்லாமல் பட்டறைக்கு போவதாக சொல்லி கொண்டு அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதனை செய்து கொண்டாள். பொன்னியையும் அழைத்து செல்லவில்லை. உறுதியாக தெரியாமல் யாரிடமும் சொல்ல விருப்பம் இல்லை நிகிதாவுக்கு..

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர் நிகிதாவை பரிசோதித்து விட்டு…

“நீ விசாலாம்மா மருமக தான.. அவங்க வரலையா..”

“நான் பட்டறைக்கு வந்தேன். தலை சுத்தலா இருக்குனு தான்.. இப்படியே வந்துட்டேன்..”

“நீ கர்ப்பமா இருக்க.. நாற்பது நாள் ஆகியிருக்கு.. தலை சுத்தல் வாந்தி இருக்கும்.. இருந்தாலும் நல்லா சாப்பிடனும். நாளைக்கு விசாலாம்மா கூட்டிட்டு வா..இன்னும் சில டெஸ்ட் எடுக்கனும்”

சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. சந்தோஷபடறதா.. கவலபடறதா.. என நிகிதாவுக்கு தெரியவில்லை. வீரா போல ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டாள். அப்போது வீரா அருகில் இருந்தான். வாழ்க்கை ஆனந்தமயமாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த குழந்தை வரவு தன் வாழ்க்கையில் என்ன மாற்றம் செய்யும் தெரியவில்லை. கணவனிடம சொல்லவேண்டும். வீட்டினரிடம் சொல்லவேண்டும். என்ன பேசுவார்கள் என்ன செய்வார்கள் குழந்தை வந்துவிட்டது என்ற கடமைக்காக தன்னோடு வாழ வருவானா.. அவனே வரலை என்றாலும் பேசி பேசியே அவனோடு சேர்த்து வைக்க பார்ப்பார்கள். அப்படி குழந்தையை காட்டி அவனோடு வாழ வேண்டுமா… என பல குழப்பங்கள்..

இது எல்லாம் யோசித்து கொண்டே நடந்து வரவும் மிகவும் சோர்வாக இருந்தது. வீட்டினுள் சென்றவள் ஒரு சொம்பு நீரை அருந்தி விட்டு விசாலாவை தேட.. அவர் பின்பக்கம் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தார்.

தங்கள் அறைக்கு வந்தவளுக்கு பலத்த யோசனை. புருசனுக்கு தான் சொல்லவில்லை என்றாலும் குடும்பத்தினர் சொல்லிவிடுவர். மற்றவர்கள் சொல்லி தெரிந்து கொள்வதை விட தானே சொல்லிவிடலாம் என முடிவு செய்தாள்.

அதற்காக அவனிடம் பேசவதற்கு எல்லாம் இஷ்டமில்லை. டெஸ்ட் ரிப்போர்டை போட்டோ எடுத்து அவனுக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பிய சமயம் அவன் ஆபீஸில் இருந்ததால் சைலண்ட் மோடில் போட்டு இருந்தான். அதனால் பார்க்கவில்லை.

அவன் பார்ப்பானா.. பார்த்து விட்டு என்ன செய்வான் என எதிர்பார்ப்போடு கொஞ்ச நேரம் போனையே பார்த்து கொண்டு இருந்தாள். அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றதும்.. மனதில் ஒரு சொல்லமுடியாத வலி..

ச்சே என்ற சலிப்போடு எழுந்து வந்தாள். அப்போது தான் அய்யாவும் மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தார்.

இருவரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை சொன்னாள். அய்யாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். ஆனால் விசாலாவிற்கு ஒரு நிமிடம் சந்தோஷம் தான். அதுக்கு பிறகு நிகிதா கோபத்தில் வீராவோடு வாழவே இல்லை என சொன்னதை நினைத்து குழம்பி போனார்.

அய்யாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. தன் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் வருகை. இதை வைத்தே மகனை இழுத்து விடலாம் என நினைத்தார்.

மாமனார் வீட்டுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்க.. உடனே அழைத்தார்.

சொக்கலிங்கம் அழைப்பை ஏற்றதும்..

“வணக்கம் மாமா.. நான் அய்யாவு பேசறேன்..”

“ம்ம்… தெரியுது சொல்லுங்க..”

“உங்க பேத்தி.. இல்ல என் மருமக உண்டாகியிருக்கா…”

அதை கேட்ட சொக்கலிங்கத்திற்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்.

தொண்டையை செருமி கொண்டு..

“ரொம்பவே சந்தோஷம் மாப்ள.. இனி பேத்தி வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பலாமா..”

“என் மருமக வாழ்க்கைய சரி பண்ற கடமை எப்பவுமே எனக்கு இருக்கு.. ”

“சரி நாங்க உடனே கிளம்பி வரோம்..” என சொல்லி வைத்துவிட்டார்.

ஒருமணி நேரத்தில் சொக்கலிங்கம் குடும்பத்துடன் வந்து இறங்கினார்.

வந்தவர்கள் நிகிதாவை பார்த்ததும் அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. எப்படி இருந்த பொண்ணு..

ரோஹிணி மகளை கட்டி கொண்டு அழுக…
மங்களம் பாட்டி “எதுக்கு அழுகறவ.. நல்ல விஷயம் தானே நடந்திருக்கு..” மருமகளை அதட்டினார்.

ராகவ் அக்காவை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

யாரும் எதுவும் பேசவில்லை. அய்யாவு தான் பேச்சை ஆரம்பித்தார்.

“மருமக உண்டாகியிருக்கா…”

“உங்க மகங்கிட்ட சொல்லிட்டிங்களா..” என்றார் ராகவ்

சற்றே தயக்கத்துடன் “இல்ல நைட் போன் பண்ணுவான்.. அப்ப தான் சொல்லனும்” என்றார்.

“சரி சொன்னதுக்கு அப்புறம்..”என்றார் கேள்வியாக…

“அவன் வர ஒரு வருஷம் ஆகும். நடுவுல லீவ் எல்லாம் எடுக்க முடியாது அவன் வரவரைக்கும் மருமகள நாங்க பார்த்துக்கிறோம்”

“அவன் வரவேணாம். என் பொண்ண நான் அனுப்பி வைக்கிறேன். வச்சு வாழ முடியுமானு கேட்டு சொல்லுங்க… இல்லை டைவர்ஸ் கொடுக்க சொல்லுங்க.. என் பொண்ணுக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வச்சுக்கிறேன்”

ராகவ்வின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போயினர். இவ்வளவு நேரம் அவன் பொண்ணு வாழ்க்கைகாக ஒரு தகப்பனாக அவன் பேசுகிறான் பேசட்டும் என பெரியவர்கள் அமைதி காத்தனர்.அவர் டைவர்ஸ் பற்றி பேசவும் எல்லோருக்கும் அதிர்ச்சி.

ஏன் நிகிதாவே இதை பற்றி யோசிக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சி போய் கோபம் வந்தது.

“ராகவ்.. ” என்றார் சொக்கலிங்கம் கண்டன குரலில்..

“உங்க பேச்சை கேட்டு இவங்க மகனுக்கு என் பொண்ணை கட்டி வச்சேன். என் பொண்ணை விட்டுட்டு யாருகிட்டயும் சொல்லாம நாட்டை விட்டே ஓடி போய்டான்”

நிகிதாவை பார்த்து கண்கள் கலங்க..

“எப்படி இருந்தவ என் பொண்ணு.. இப்ப இப்படி பார்க்க..மனசு எல்லாம் பதறுது.. என் பொண்ணு நல்லா வாழனும். அதுக்காக இன்னொரு கல்யாணம் கூட நான் பண்ணி வைப்பேன். நீங்க தான கட்டி வச்சிங்க.. நீங்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க..”

அய்யாவு கோபத்துடன் “என் மகன் உசிரோட இருக்க வரைக்கும் நிகிதா அவனுக்கு மட்டும் தான் பொண்டாட்டி..”

“அப்ப என் பொண்ணு இப்படியே தனியா இருந்து கஷ்டப்படனுமா… அக்கா நீ சொல்லு.. நீயும் ஒரு பெண்ண பெத்தவ தான..”

“சும்மா.. என் மவனையே குறை சொல்லாத தம்பி.. உன் பொண்ணு ஒழுங்கா அவனோட குடும்பம் நடத்தியிருந்தா.. அவன் ஏன் விட்டுட்டு போறான். உன் பொண்ணு தான் அவனோட வாழவே இல்லைனு சொன்னா.. வாழாம குழந்தை மட்டும் எப்படி வந்துச்சு..”

விசாலா இப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மங்களம் பாட்டி விசாலாவை அறைவதற்கே போய்விட்டார்.

நிகிதாவுக்கு தன் அத்தையின் பேச்சை கேட்டதும் உடம்பு எல்லாம் பத்திகிட்டு எரிவது போல இருந்தது. இருந்தும் எதுவும் பேசவில்லை. நீ எந்த மாதிரியான நிலைல என்னை வச்சிட்டு போயிருக்க பாரு என வீரா மேல் கட்டுக்கு அடங்காத கோபம் வந்தது.

“உனக்கு தெரியுமா.. அவங்க வாழலைனு சும்மா வாய் புளிச்சுதோ.. மாங்கா புளிச்சுதோனு பேசின.. நான் மனுசியா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ..” என மங்களம் பாட்டி சத்தமிட..

ராகவ்கு கண்கள் கலங்கி விட.. ரோஹிணியோ வாய் விட்டு அழுகவே ஆரம்பித்துவிட்டார்.

“எனக்கு என்னமா தெரியும்.. உங்க பேத்தி தான சொன்னா…” கழுத்தை வெட்டி நொடித்தார்.

“ஏதோ கோபத்துல சொன்னா.. அதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு பேசுவியா… அவங்க இரண்டு பேரும் எப்படி வாழ்ந்தாங்கனு எனக்கு தான தெரியும்.. என் பேத்திக்கு தான் புருஷனோட பொழைக்க தெரியாம வீணா போயிடுவாளோனு பயந்தேன். அவ உன் புள்ள கூட அனுசரிச்சு தான் போனா.. ஆனா உன் புள்ள அத புரிஞ்சுக்காம போயிட்டான்”

“சும்மா.. சும்மா அவனையே குத்தம் சொல்லாதிங்க.. அவன் மனசுல என்ன குறையோ.. இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டான்”என புடவை தலைப்பில் கண்ணை துடைக்க..

அய்யாவு”விசாலா போதும். நீ கொஞ்ச நேரம் வாயை மூடி அமைதியா இருந்தா போதும்”

முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டார் விசாலா..

ராகவ்வோ “என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க..”

“வீராகிட்ட பேசிட்டு தான் எதுனாலும் சொல்ல முடியும்..ஆனா டைவர்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்ல..”

“அதுவரைக்கும் எங்க பொண்ணு எங்க வீட்ல இருக்கட்டும் நாங்க கூட்டிட்டு போறோம்”

அதுவரை எல்லோரும் பேசுவதை அமைதியாக பார்த்து கொண்டு இருந்த நிகிதா..

“எல்லோரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டிங்களா…. இப்ப நான் பேசலாமா.. கல்யாணம் தான் உங்க இஷ்டத்துக்கு நடந்துச்சு.. ஆனா வாழறதா வேணாமானு நான் தான் முடிவு பண்ணனும்”

அய்யாவுவையும் விசாலாவையும் பார்த்து”எப்ப என்கிட்ட சொல்லாம அவரா ஒரு முடிவு எடுத்து என்ன விட்டுட்டு போனாரோ.. அப்பவே அவருக்கும் அந்த உரிமை இல்ல
இனி நான் தான் முடிவு பண்ணுவேன்”

விசாலாவின் அருகில் சென்றவள் தன் வயிற்றை தட்டி.. “இந்த குழந்தை உங்க மகனது இல்லைனு அவர் சொல்லிடுவாரா.. எங்கே சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் ” என்றவள் எல்லோரையும் பார்த்து

“நான் அவர் வர வரைக்கும் இங்க தான் இருப்பேன். எங்கயும் வரமாட்டேன் ” என்றவள் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.

கண்மண் தெரியாத கோபம் நிகிதாவிற்கு இப்போ மட்டும் வீரா கையில் சிக்கி இருந்தான் கிழித்து தோரணமாக தொங்க விட்டு இருப்பாள். சுவற்றில் மாட்டி இருந்த தங்கள் கல்யாண போட்டோவை கழட்டி எதிரில் இருந்த சுவற்றில் விட்டு எறிந்தாள். கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

சத்தத்தில் என்னவோ என பயந்து போய் வீட்டினர் கதவை தட்ட..

“நிகிதா.. கதவ திறடா..”

“நிக்கி கண்ணு…”

படாரென கதவை திறந்தாள். எல்லோரும் உள்ளே அவர்களின் கல்யாண போட்டோ உடைந்து கிடந்ததை பார்த்து போட்டோ தானா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

“என்ன ஏதாவது பண்ணிகிட்டேனு பயந்துடிங்களா.. அவர மாதிரி கோழை கிடையாது நான்.. என்ன தான் என இரண்டில் ஒன்று பார்க்காம விடமாட்டேன். என்னை தனியா விடுங்க போங்க எல்லோரும்..” என்று கத்தி விட்டு மீண்டும் கதவை சாத்தி கொண்டாள்.

அதிர்ச்சி டென்ஷன் கோபம் என எல்லாம் சேர்ந்து மயக்கமாக வர.. படுக்கையில் கண் மூடி படுத்து கொண்டாள். படுத்தவள் நன்றாக தூங்கிவிட்டாள்.

பொன்னி தான் நிகிதா வீட்டினரை சமாதானம் செய்து தான் பார்த்து கொள்வதாக சொல்லி அனுப்பி வைத்தாள். தூங்கும் நிகிதாவை பார்த்து விட்டு அவர்களும் கிளம்பினர்.

நன்றாக உறங்கி கொண்டு இருந்த நிகிதா தன் போன் ஓசையில் கண் விழித்தாள். அறையே இருட்டாக இருக்க.. எவ்வளவு நேரம் தூங்கி விட்டோம் என நினைத்தவள் லைட் போட்டுவிட்டு போனை எடுத்து பார்த்தாள்.

வீரா தான் அழைத்திருந்தான்.பார்த்தாள் எடுக்கவில்லை. அவனும் அழைத்து கொண்டே இருந்தான். இவளும் பார்த்து கொண்டே இருந்தாள்.

வீரா எதற்கு அழைத்தான் மனைவிக்காகவா.. அவனின் மகவுக்காக..

நிகிதா அழைப்பை ஏற்பாளா.. பேசுவாளா…

18 – புயலோடு பூவுக்கென்ன மோம் Read More »

675BE967-EB5C-4A37-BFB1-EE6D715E184A

17 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

17- புயலோடு பூவுக்கென்ன மோகம்

வீரா தன் அம்மாவிற்கு அழைத்த அடுத்த நாளே பொன்னிக்கும் அழைத்தான். பொன்னி அழைப்பை ஏற்றதும் வீராவை பேசவே விடவில்லை.

“ஏன்டா உனக்கு அறிவில்லையா.. போனதும் போன நிகிதாவையும் கூட்டிகிட்டு போக வேண்டியது தான..”

“க்கா…”

” பாவம்டா அவ… அவள கண்கொண்டு பார்க்கமுடியல.. அப்படியே ஓஞ்சு போயிட்டா…”

“க்கா… நான்..”

“எப்படி எல்லாம் இருந்த புள்ள.. இன்னைக்கு அது வாடி வதங்கி போய் நிக்குது.. எங்களுக்கே பாவமா இருக்கே.. உனக்கு வருத்தமே இல்லையா..”

“க்கா.. என்னைய பேச விடுக்கா.. அவ அந்த வீட்டோட இளவரசிக்கா.. அவளுக்கு நான் தகுதியில்லாதவன் கா.. நீ சொல்ற மாதிரி என்னோட கூட்டிகிட்டு வந்தாலும் அவளுக்கு வேலை செஞ்சு பழக்கமே இல்ல.. அவ இங்க எப்படிக்கா இருப்பா.. அவ ஸ்டேட்டஸ் தகுந்த வாழ்க்கை என்னால கொடுக்க முடியாது. அதுக்காக என்னால அவள கஷ்டபடுத்தவும் முடியாதுக்கா..”

அவனின் வருத்தமான குரல் இந்த பாசமிகு தமக்கையின் மனதை தாக்க..

“உனக்கு என்னடா குறைச்சல்.. ஏன் இப்படி பேசிகிட்டு இருக்க… உன் அறிவுக்கு நீ நல்லா சம்பாதிச்சு பெரிய ஆளா வருவ.. அவள மகராணி மாதிரி வச்சிருப்ப.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. ஆனா அத அவகிட்ட சொல்லிட்டே போயிருக்கலாம்.. வேணாம்னு தடுத்திருக்க மாட்டா..”

இப்படி கேட்கும் தன் அக்காவிடம் என்ன சொல்வது… அவள் மேல் தனக்கு காதல் இருக்கா.. இல்லையா.. இருந்தா எதுக்கு தன்னால அவளோட ஒன்றி போய் வாழ முடியல.. இது எல்லாம் புரியாம.. தள்ளி இருந்தா புரியுமோ.. என தானே விட்டுட்டு வந்தான். தங்கள் அந்தரங்கத்தை எப்படி அக்காவிடம் சொல்லமுடியும்.

“சொல்லியிருந்தா அவ தடுக்கறாளோ இல்லையோ.. அம்மாச்சியும் தாத்தாவும் விட்டுருக்கமாட்டாங்க.. க்கா..”

“என்னவோடா நீ சொல்ற.. நா கேட்டுகிறேன்..”என பொன்னிக்கு அப்படி ஒரு சலிப்பு குரலில்…

“சரிக்கா.. அடிக்கடி அவள போய் பார்த்துக்கக்கா..முடிஞ்சா பேசி அவங்க வீட்டுக்கு அனுப்ச்சிடு.. நம்ம வீடு வசதி பத்தாது அவளுக்கு..”

“அவ போவானு எனக்கு நம்பிக்கை இல்ல.. சரி நீ சொல்றதுக்காக பேசி பார்க்கிறேன்..”

“சரிக்கா.. நான் மறுபடியும் கூப்பிடறேன்..”

“சரி தம்பி உடம்ப பார்த்துக்கோ… வெச்சிடறேன்” என போனை வைத்த பொன்னிக்கு தன் தம்பியிடம் பேசிய பிறகு கோபம் போய் வருத்தம் தான் வந்தது.
இப்படி இரண்டு பேரும் பிழைக்க தெரியாம வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கிறார்களே..என்று இருந்தது பொன்னிக்கு..

அதில் இருந்து தினமும் நிகிதா பட்டறையில் இருந்து வந்த பிறகு சென்று சிறிது நேரம் அவளோடு இருந்து விட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டாள் பொன்னி.

தம்பி சொன்னது போல நிகிதாவிடம் பொன்னி பேச தான் செய்தாள்.

“நிகிதா.. நான் ஒன்னு சொல்வேன். கேட்பியா…”

“சொல்லுங்க அண்ணி..”

“நீ எவ்வளவு சுகமா வாழ்ந்தவ… இங்க இப்படி கஷ்டபடறத பார்த்தா.. எனக்கு வருத்தமா இருக்கு.. நீ எப்படி எல்லாம் இருந்தவ.. இங்க உனக்கு அந்த சவுகரியங்கள் இருக்காது. வீரா வர எப்படியும் ஒரு வருசம்னாலும் ஆகும். அதுவரைக்கும் நீ ஏன் இங்க இருந்து கஷ்டபடனும்.. தம்பி சென்னைக்கு தான வருவான்.நீ அங்க இருக்கறது தான் சரியா இருக்குமனு என தோனுது..”

“ஏன் அண்ணி.. உங்க தம்பி மாதிரியே நீங்களும் என்னை நினைக்கறிங்களா… அவருக்கு வீட்டோ மாப்பிள்ளையா இருக்க பிடிக்கலைனு தானே போனாரு… போனவர் எதுக்கு என்னை விட்டுட்டு போனாரு.. வசதி குறைவா இருந்தா என்னால இருக்க முடியாதுனு தானே… எனக்கு அவர விட வசதியா பெருசா போச்சு.. அத அவரே புரிஞ்சுக்கல.. உங்களுக்கு எப்படி புரியும்..”

“இல்ல.. நிகிதா உனக்கு கஷ்டமா இருக்குமேனு தான்…”

“எது அண்ணி கஷ்டம்.. நான் எப்படி.. அவர் எப்படி.. என எல்லாம் தெரிஞ்சு தானே எங்க விருப்பம் இல்லாமலே நீங்க எல்லோரும் கல்யாணம் பண்ணி வச்சிங்க… இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துடுவோம்னு நம்பி தான கட்டி வச்சிங்க… முதல்ல எனக்கும் அவர பிடிக்கல தான்.. போக போக அவர் கூட விரும்பி தான் வாழ ஆரம்பிச்சேன்.. அப்ப கூட அவரு என்னை பத்தி புரிஞ்சுக்கல.. விட்டுட்டு போய்ட்டார். எதனால அந்த வசதி அந்தஸ்து காரணமா வச்சு தானே.. அவரைவிட எனக்கு அந்தஸ்தா பெரிசு.. அதான் வேணாம்னு வந்துட்டேன்.. இங்கயும் நிகிதாவால வாழ முடியும்னு காமிப்பேன். ஆனா அதுக்காக உங்க தம்பிய மன்னிக்கவ எல்லாம் மாட்டேன். அவர் எனக்கு பண்ணியது மிகப்பெரிய துரோகம்.. அவரு வேணாம்னு விட்டுட்டு போனாருல.. எனக்கும் அவரு வேணாம்..” கண்களில் வலியுடன்.. கலங்கி கண்ணீர் வரவா வேணாமா என இருக்க.. அழுகையை கட்டுபடுத்தி கொண்டு இருந்த நிகிதாவை பார்க்க பொன்னிக்கு வருத்தமாக இருந்தது.

பொன்னிக்கு நிகிதாவின் கோபம் ஆற்றாமை புரிந்தாலும்.. மனதில் ஒரு சின்ன சந்தோஷம் ஏற்பட தான் செய்தது. என் தம்பி வேணாம்னு சொல்றவ… அவன் துணிகள் இவளுக்கு எதுக்கு.. என நினைத்து சிரிப்பு தான் வந்தது. வெள்ளந்தியான விசாலாவின் கண்களுக்கு தெரியாதது புத்திசாலியான பொன்னியின் கண்களுக்கு தப்பவில்லை.

“சரிங்க அண்ணி.. எனக்கு சில ஐடியா இருக்கு.. நீங்க என் கூடவே இருந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவிங்களா..”

“என்ன நிகிதா இப்படி கேட்கற.. நீ சொல்லு என்னால முடிஞ்சத நான் செய்யறேன்..” என நிகிதாவின் கைகளை பிடித்து கொண்டு சொல்ல..

“நான் கொஞ்சம் யோசிக்கனும்.. அப்புறம் சொல்றேன்..” என சொல்லி விட்டு பொன்னியின் மகனை எடுத்து மடியில் வைத்து கொண்டு அவனோட விளையாட ஆரம்பித்து விட்டாள்.

அவள் பேசியதை எல்லாம் அவள் அறியாமல் வீடியோவா எடுத்து அப்பவே தம்பிக்கு அனுப்பி வைத்தாள் பொன்னி.

வீராஆபீஸ்கு கிளம்பி கொண்டு இருக்க.. அவனின் போனில் நோட்டிபிகேசன் சவுண்ட் கேட்டு எடுத்து பார்க்க.. பொன்னி அனுப்பிய வீடியோவை பார்த்தான்.

பார்த்தவன் அப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான். அவள் பேச்சும்…. பேசும் போது அவளின் கசங்கிய முகமும்.. வலிகள் நிறைந்த கண்கள் கலங்கி கண்ணீர் இமை தட்டி நிற்க..

பார்த்தவனுக்கு உயிர் பறிக்கும் வலி.. அவளின் வலியை மனதால் நினைத்து பார்த்ததை விட அவள் வாய் வழியாக கேட்டவனுக்கு.. தப்பு செய்துவிட்டோமோ என முதல் முறையாக தோன்றியது.. வீடியோவில் பார்க்க.. அப்படி இருந்தது முகம்.. வழக்கமான மேக்கப் எதுவும் இல்லாமல் எப்பவும் மலர்ச்சியுடன் இருக்கும் முகம் பொலிவிழந்து இந்த ஒரு வாரத்துக்குள்ளேயே அப்படி ஓய்ந்து போன தோற்றம்.. பார்க்க.. பார்க்க.. நெஞ்சில் ஆயிரம் நெருஞ்சி முள் கொண்டு குத்தி கீறியது போல ரணமாய் வலித்தது.

திரும்ப.. திரும்ப.. பார்த்து கொண்டு இருந்தான். ஆபீஸ்கு செல்லவேண்டும். இன்னும் காணவில்லை என அவனின் அறைக்கு வந்து நண்பன் ரஞ்சித் அழைக்கும் வரை பார்த்து கொண்டு இருந்தான்.

அய்யாவு பட்டறைக்கு தினமும் சென்றதில் நிகிதா அறிந்தது கொண்டது இது தான். அய்யாவு பத்து கைத்தறி வைத்து இருந்தார். அவர் ஒரு தறியை எடுத்து கொண்டு மற்ற தறிகளுக்கு கூலிக்கு ஆள் வைத்து செய்து கொண்டு இருந்தார். பழைய முறையில்… எந்த நவீன வசதிகளின்றி.. செய்து கொண்டு இருந்தார்.

அதில் என்னன்ன நவீன முறைகள் உள்ளது என அவருக்கு தெரிந்து இருந்தாலும் அவருக்கு செயல் படுத்த தெரியவில்லை.அவர்கள் ஊரில் இன்றைய தலைமுறையினர் நசிந்து வரும் பட்டு தொழிலை நம்பாமல் படித்து வெளியூர் வேலைக்கு சென்றிருக்க.. இருந்த கொஞ்ச பேரும் அய்யாவு போலவே தான் இருந்தனர்.

நிகிதா அதை பற்றி தெரிந்து கொள்ள… காஞ்சிபுரம் சுற்றியுள்ள ஊர்களில் நவீன முறையில் தறி நெய்பவர்களின் பட்டறைக்கு சென்றாள். பொன்னியை அழைத்து கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டாள்.

பட்டதாரிக்களுக்கான தொழில் முனைவோர் திட்டத்தில் பேங்க் லோனுக்கு அப்ளை செய்தாள். சேலை டிசைனை வடிவமைக்கும் டிசைனர் படிப்புக்கு பகுதி நேர வகுப்பில் சேர்ந்தாள்.

வீராவுக்கும் கல்யாணுக்குமான நட்பு பேஸ்புக் மெஸஞ்சர் எல்லாம் தாண்டி இருவரும் வாட்ஸசப் சேட்டிங்கு முன்னேறி இருந்தனர்.

ஊர் உறவுகளை விட்டு வந்தவனுக்கு கல்யாணோட நட்பு பெரிய ஆறுதலாக இருந்தது. வேலை வாங்கி கொடுத்து தன்னுடனே தந்க வைத்து கொண்ட நண்பன் ரஞ்சித்திடம் கூட அவ்வளவு ஒட்டுதல் இல்லை.

மனம் விட்டு நிறைய விசயங்களை சேட்டிங் செய்தான். நிகிதா பற்றி அவள் அழகு அந்தஸ்து தன் மீதான அவளின் காதல் எல்லாம் சொல்லி இருந்தான்.

‘ஏய் என்ன அவ மேல லவ் இல்லைனு சொல்லிட்டு.. அவள பத்தியே புலம்பற..’

‘உனக்கு தெரியாது கல்யாண்.. அவ மில்கி கலர்.. அப்படியே அந்த கண்ணு இருக்கு பாரு.. ஆளையே அசர அடிக்கும்.. அதுல காஜல் வேற தீட்டி வச்சுருப்பா.. ரோஸ் பெடல்ஸ் மாதிரி லிப்ஸ் அவ்வளவு சாப்டா இருக்கும்..’

அவளுடைய உதட்டை கடித்து சுவைத்த சுகமான தருணங்களில் மூழ்கி போனான். சுகமான தருணங்களின் ருசிகள் எல்லாம் ஒவ்வொரு அணுவிலும் ஊசியாக தைக்க.. தையலவளின் அருகாமைக்காக ஏங்கினான் அந்த வீம்புக்கார கணவன்.

‘ஹலோ.. இருக்கியா..’

‘ஏதாவது சொல்லு..’

‘அச்சோ பொண்டாட்டி கூட கனவுல சல்சா பண்ண போயிட்டான் போல இருக்கே..’

‘ம்ஹீம்.. இதுக்கு தான் இந்த மாதிரி மிங்கிளஸ் கூட சகவாசமே வச்சுக்ககூடாது.’

‘ ஓகே குட்நைட்.. ஸ்வீட் ட்ரிம்ஸ்..’

ஒரு பதிலும் இல்லாமல் போக கல்யாண் அதோடு சேட்டிங் முடித்து கொண்டான்.

அடுத்த நாள் நைட்.. வீராவே சேட்டிங்கு வந்தான்

‘ஹாய் கல்யாண்..’

‘சொல்லு மச்சான்..’

‘என்னடா பண்ணிட்டு இருக்க..’

‘சாப்பிட்டு இருக்கேன்.. சொல்லு மச்சான்..’

‘ஏன்டா லேட்..’

‘இன்னைக்கு வந்ததே லேட்.. ‘

‘அப்ப சாப்பிட்டு வா..’

‘இல்லல்ல.. நீ சேட் பண்ணு… எப்படியும் நிகிதாவ தான் ஜொள்ளு வடிய வர்ணிப்ப.. அதை கேட்க மட்டும் தான நான் வேணும் உனக்கு.. ம்ம் ஆரம்பி.. நான் கேட்டுகிட்டே சாப்பிடறேன்..’

‘என்னவோ இன்னைக்கு நிகிதா ஞாபகம் அதிகமா இருக்கு..

‘ம்ம்’

‘அவளை பார்க்கனும் போல இருக்கு…’

‘அப்ப வீடியோ கால் பண்ணு..’

‘எந்த முகத்த வச்சுகிட்டு பேச..’

‘எல்லாம் கருவாயன் மூஞ்சிய வச்சிகிட்டு தான்..’

‘அவளும் கோபம் வந்தா என்னை கருவாயன் தான் சொல்லுவா..’

‘அப்ப லவ் மூட்ல இருக்கும் போது..’

‘அவளுக்கு லவ் மூட் வந்துட்டா.. என் மீசையை பிடித்து இழுப்பா.. லிப்லாக் பண்ணுவா..’

‘அப்புறம்…’

‘ச்சீ.. போடா.. நீ சின்ன பையன் இது எல்லாம் உன்கிட்ட சொல்லகூடாது’

‘ஆஹாங்.. இப்ப தான் சின்ன பையனா.. இவ்வளவு நாளா நிகிதா.. நிகிதானு புலம்பும் போது தெரியலயா..’

‘என்னவோ நிகிதா ஞாபகம் வந்தா.. உன்கிட்ட தான் ஷேர் பண்ணனும்னு தோனுது’

‘நீ சொல்ற பார்த்தா.. எனக்கே நிகிதாவ லவ் பண்ணனும் போல இருக்கு..’

‘டேய்.. அவ என் பொண்டாட்டி….’

‘நீ தான அவளுக்கு நான் மேட்ஜ் இல்ல.. டைவர்ஸ் கொடுத்துடுவேன்.. அவளுக்கு மேட்ச்சான ஆள பார்த்து மைரேஜ் பண்ணிக்கட்டும்னு சொன்ன..’

‘அதுக்கு..’

‘நான் மேட்ச்சா இருப்பேன்.. உன்னை மாதிரி இல்லாம நல்லா வாழ்க்கை அனுபவிச்சு வாழ்வேன்..’

‘அவ என் அமுல் பேபி அவளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். இப்படி பேசற மாதிரி இருந்தா இனி என்கிட்ட பேசாத..’என கோபமாக ஆப்லைன் போய்விட்டான்.

அதுக்கு பிறகு இரண்டு நாட்கள் இரவில் வீரா ஆன்லைன் வந்தாலும் கல்யாண் சேட் பண்ணினாலும் பதிலளிக்கவில்லை.

பார்த்துவிட்டான் என புளூ டிக் காட்டியது கல்யாண்கு… மூன்றாம் நாள் கல்யாண் ஒரு பெண்ணின் புகைப்படம் அனுப்பினான் வீராவுக்கு.. அந்த பெண் சற்று புசு புசுவென கொழுக் மொழுக் என உருண்டு திரண்டு சின்ன தர்பூசணி பழம் போல இருந்தாள்.

‘இந்த பெண் எப்படி இருக்கிறா..’

‘யாரு நீ கட்டிக்க போற பொண்ணா..’

‘முதல்ல எப்படி இருக்கா.. சொல்லு..’

இப்போ வீராவுக்கு தோன்றியது இது தான் சும்மா தள தளனு தக்காளி மாதிரி இருக்கா.. உடனே தன்னை தானே கடிந்து கொண்டான். நண்பன் கட்டிக்க போகும் பெண் தப்பாக பார்க்க கூடாது.

‘ம்ம் நல்லா இருக்காங்க..’

‘உனக்கு பிடிச்சிருக்கா..’

‘நீ மேரேஜ் பண்ணிக்க போற.. உனக்கு பிடிச்சிருக்கா. அத சொல்லு’

‘என்னைய எனக்கு பிடிக்காம போகுமா..’ என அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டான்…தப்பு தப்பு.. தூக்கி போட்டாள் கல்யாணி..

அதை பார்த்தும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை வீராவுக்கு.. தான் படித்ததை
உள் வாங்கி கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது. அப்பவும் ஏதோ விளையாடுகிறான் நண்பன் என நினைத்தான்.

‘ஏய் சும்மா சீட்டிங் பண்ணாத..’

‘ஆஹா..ஹா..ஹா..’

‘நான் நம்பமாட்டேன்..’

‘வரவா.. வீடியோ காலில் வரவா..’

‘வா.. அப்ப தான் நம்புவேன்..’

‘வந்துடுவேன்.. ஆனா.. நீ என் அழகுல மயங்கிடுவ.. அப்புறம் உன் நிகிதாவ விட்டுட்டு என் பின்னாடி வந்துடுவ பரவாயில்லையா..’

‘சும்மா வாய்ல வடை சுடாத.. முகத்தை காமி.. ‘ இன்னும் நம்பவில்லை வீரா நண்பன் தன்னிடம் விளையாடி பார்க்கிறான் என நினைத்தான். எப்பவும் குறும்பாக சேட்டையுடன் சேட்டிங் செய்பவன் தானே என…

அவளின் முகத்தை வித விதமான பிக்காக.. கண்ணடித்து இருவிரலை நீட்டி… முகத்தை சுருக்கி உதட்டை சுழித்து நாக்கை துருத்தி… உதட்டை குவித்து பறக்கும் முத்தம் வைத்து.. இரு கைகளை இதயம் சிம்பிளாக வைத்து.. அதில் தன் முகம் தெரியுமாறு.. என பல வித படங்கள் சுட சுட வந்து விழுந்தது .

பார்த்தவனுக்கு செய்வதறியாத திகைப்பு..சில நிமிடங்களில் திகைப்பு போய் கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது மூக்கின் நுனியில்..

‘அது நீ பையன் நினைச்சு.. இப்ப நீ ஒரு பொண்ணு.. அப்படி எல்லாம் என்னைய கூப்பிடாத..’

‘ஏன்டா.. மச்சான்.. உன் நிகிதா மச்சான் மச்சான்னு கூப்பிடுவாளா.. மச்சான்… அதனால தான் மச்சான்.. என்னை மச்சான்னு கூப்பிடவேனானு சொல்லறியா மச்சான்.. ‘ என வார்த்தைக்கு ஒரு மச்சான் போட..

கோபத்தில் கடுப்புடன்.. ‘போடி.. ‘என கோப ஸ்மைலி போட்டு விட்டு ஆப் லைனுக்கு போய்விட்டான்.

“போடியா.. நீ என் நம்பரை ப்ளாக் பண்ணாதது சொல்லிடுச்சு அப்ப என்னைய கேர்ள் ப்ரண்டா ஏத்துக்கட்ட டா மச்சான்.. அதே மாதிரி நிகிதாவ விட்டுட்டு என்கிட்ட சீக்கிரமே வந்துடுவ.. வர வைச்சிடுவா இந்த கல்யாணி..” என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

படுக்கையில் சரிந்த வீராவுக்கு கல்யாணியின் படங்களே கண்முன் வந்தது. நல்லா தள தளனு தான் இருக்கா.. இருந்தாலும் என் நிகிதா போல வருமா.. என் நிக்கி எப்படி சிக்னு உடம்ப மெயின்டென் பண்றா.. என் நிக்கி மாதிரி இல்ல… போடி.. என நினைத்து கொண்டு தூங்கி போனான்

17 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

IMG-20240828-WA0008

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 11

11     வித்யூத் தமிழில் நன்றாக பேசினாலும் அவ்வப்போது சில வார்த்தைகள் ஹிந்தியில் வந்து விழும். அதுவும் சிலசமயம் விளங்க முடியா அவன் குரலில் அந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் குளிரடிக்கும்!     இன்றும் அவனது “அச்சா-வில்” நிமிலன் சற்று நிதானித்தான்.     அந்த நிதானம் ஆரனை வெற்றி கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி பறந்து போய் இருந்தது. அதுவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு கப்பலை

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 11 Read More »

என் மோகத் தீயே குளிராதே 28

அத்தியாயம் 28   “சஜன்.. டிசைனிங் பார்ட்ல பேக்ரவுண்ட் செக் பண்ணு.. அந்த கலரை மாத்த சொல்லு..” என்று சஜனைப் பார்த்து கூறிய ஹர்ஷவர்தன், ப்ரியாவின் புறம் திரும்பி, சில பேப்பர்களை நீட்டி, “இந்த டீடெயில்ஸையும் சேர்த்து அப்டேட் பண்ணச் சொல்லு..” என்றவாறே நகுலைப் பார்த்து, “அப்புறம் நீ அந்த என்குயரிஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணிட்டியா.. இன்னும் அப்டேட் காட்டமாட்டேங்குது? இன்னைக்குள்ள ப்ரோக்ராம் டீம் வொர்க் முடிச்சுருக்கணும்..” என்றவன் தனது லேப்டாப்பிற்குள் மூழ்கி போக,   “வாவ்..”

என் மோகத் தீயே குளிராதே 28 Read More »

IMG-20240828-WA0007

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 10

10       ஏவி குரூப்ஸ் எம்டியாக அங்கே வித்யூத்தை எதிர்பார்க்கவில்லை மயூரி. அண்ணனுக்கு குறையாத அதே அதிர்ச்சியான முகபாவனைவுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து “உங்க குடும்பமே இப்படித்தானோ?” என்றான் எள்ளலாக ஆரன்.     “ஹான்.. ஹான்.. இல்ல.. அது..” என்று திக்கி திணறியவளை பார்த்து அவளிடம் சென்றவன், சற்றே இலகுவாக “என்ன மயூ பேபி.. அன்னைக்கு தானே சொன்னேன். நமக்குள்ள எல்லாம் கிளியர் கட் என்று.. இப்போ நீயே தேடி வந்திருக்க..?” என்று

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 10 Read More »

IMG-20240828-WA0004

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 9

  9       கப்பல் அதிகாரி அமர்ந்திருக்க வேண்டிய இருக்கையில் அமர்ந்திருக்க அதிர்ச்சியில் தன் மாமனை திரும்பி பார்த்தான் நிமிலன்.   அவருக்கும் அதே அதிர்ச்சி தான்! ஆனால் இத்தனை வருட தொழில் அனுபவத்தில் அதை முகத்தில் காட்டாமல் மறைக்க தெரிந்தவர். மருமகனின் தோளை ஆதரவாக தட்டி உள்ளே போ என்று கண்களால் செய்கை காட்டினார்.     அறைக்குள் நுழையும் இருவரையும் தான் அமர்ந்திருந்த இருக்கையில் அரைவட்டமாக அடித்துக் கொண்டே ஒரு கையை

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 9 Read More »

2EA36A6C-32D3-4C7D-95B7-ACE04A3C34B8

16 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

16 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா காஞ்சிபுரம் தாமரையூர் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. விசாலா மருமகளை அன்பாக தான் பார்த்து கொண்டார். என்ன தான் விசாலா அன்பாக பார்த்து கொண்டாலும் அவரிடமும் தேவைக்கு மேலே பேச்சின்றி ஒதுங்கி கொள்வாள்.

வீரா கனடாவில் வேலையில் ஜாயின் பண்ணி ஆபீஸ் தங்குமிடம் அங்கிருந்த சூழ்நிலை என ஓரளவு செட்டாக ஒரு வாரம் ஆனது. ஒரு வாரம் கழித்தே தங்கள் வீட்டிற்கு அழைத்தான். அழைக்கும் முன் அத்தனை தயக்கம்.. யோசனை..

சொல்லாமல் வந்தது அவன் மனதை உறுத்த தான் செய்தது. அதிலும் நிகிதாவை விட்டு வந்தது வீட்டினரிடம் என்ன சொல்வது.. என மனதில் உதறலாக தான் இருந்தது.

வீரா தனது தந்தைக்கு அழைக்கவும்.. தனது இந்திய நம்பரில் தான் அழைத்தான். அழைத்தது வீரா எனவும்.. அய்யாவு பேசவில்லை. விசாலாவிடம் கொடுத்து விட்டு அருகிலேயே நின்று கொண்டார். விசாலாவின் அலைபேசிக்கு அழைக்காமல்… முதலில் தந்தையிடம் பேசவேண்டும் என்று தான் அய்யாவுக்கு அழைத்தான்.

விசாலா அழைப்பை ஏற்றதும்.. தந்தை பேசாமல்

“அப்பா.. நான்.. வீரா.. பேசறேன்..” தயங்கி தயங்கி பேசவும்..

வெள்ளந்தியான விசாலாவிற்கு வீராவின் தயக்கம் எல்லாம் தெரியவில்லை. மகன் பேசுகிறான் என்பதே சந்தோஷமாகிவிட…

“வீரா நான் அம்மா பேசறேன் கண்ணு.. எப்படி இருக்க.. என்ன சாமி இப்படி பண்ணிட்ட.. ஊருக்கு போறேனு சொல்லிட்டு போலாம்ல.. ஒரு வாரமா.. நான் கிடந்து தவிச்ச தவிப்பு எனக்கு தான தெரியும்.. “என அவனை பேசவிடாமல் ஒரு மூச்சு புலம்பி தீர்க்க…

தந்தை பேசாமல் தாய் பேசவுமே வீராவுக்கு ஒருமாதிரி மனது சுணங்கியது. அவனுக்கு எப்படி பேசுவது.. என்ன சமாதானம் சொல்வது என தெரியவில்லை.

“அம்மா.. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கறிங்க.. தாத்தா அம்மாச்சி எப்படி இருக்காங்க.. தாத்தா ஏதாவது சண்டை போட்டாறா….”என்றவனிடம்

விசாலா நடந்த அத்தனையும் கூறிவிட.. நிகிதாவின் பேச்சு முதல் கூறிவிட.. வீராவுக்கு இப்ப குடும்பத்தினரை விட நிகிதாவை நினைத்து தான் பயம் வந்தது. ஆனாலும் தன் வீட்டில் இருக்கிறாள் என்றதும் ஒரு சின்ன சந்தோஷம் தோன்ற தான் செய்தது.

தயங்கியவாறே..” அவ.. எப்படிமா.. இருக்கா..”

“யாருப்பா.. நிகிதாவா.. புள்ள ரொம்ப தவிச்சு போயிட்டா.. தங்கம்.. நீ செஞ்சது தப்பு தான் சாமி..” என மகனை கண்டிக்காமல்.. தாங்கலாக பேச.. கேட்டு கொண்டு இருந்த அய்யாவுக்கு கோபமோ கோபம்.

நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா.. தங்க விக்ரகம் மாதிரி பொஞ்சாதி இருக்க.. வச்சு பொழைக்க துப்பு இல்லாம.. நாட்டை விட்டு ஓடி போனவனை கொஞ்சிகிட்டு இருக்கா… என கோபத்தில் மனைவியை முறைத்து பார்த்தார்.

“அம்மா.. அப்பா இல்லையா..” என வீரா கேட்க..

“ஏங்க… வீரா உங்ககிட்ட பேசனுமாம்..” விசாலா போனை நீட்ட..

வாங்க மறுத்து.. “அவன்கிட்ட சொல்லி வை இனி அவனுக்கும் எனக்கும் பேச்சில்லை. பொஞ்சாதிய வச்சு பொழைக்காம விட்டுட்டு போனவ.. எனக்கு மகனா இருக்க தகுதியில்ல.. இனி எனக்கு போன் போட வேணாம்னு சொல்லிரு.. எதுனாலும் உம்மவங்கிட்ட நீயே பேசிக்கோ..” என வீராவின் காதில் விழட்டும் என சத்தமாகவே கூறியவர் போனை வாங்கி ஆப் பண்ணி சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டு போய்விட்டார்.

கேட்டு இருந்த வீராவிற்கு முகம் தொங்கி போனது. வாரம் இரண்டு முறை வீரா அம்மாவுக்கு அழைத்து பேசுவான். தான் வெளிநாடு வந்த நோக்கத்தையும் கூறியிருந்தான். நிகிதாவிடம் பேச பயந்து கொண்டு பேசமாட்டான். தாயிடம் மட்டும் விசாரித்து கொள்வான்.

விசாலா நிகிதாவிடம் வீரா போன் செய்ததை சொல்ல… “உங்க மகனை பத்தி எங்கிட்ட பேசாதிங்க.. ” என முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டாள். அதில் விசாலாவிற்கு மருமகளின் மேல் ஒரு சின்ன மனத்தாங்கல்.. புருஷன் எங்க போயிட்டான் சம்பாதிக்க தானே போயிருக்கான்… இந்த புள்ளைக்கு இவ்வளவு வீம்பு கூடாது என்று…

தம்பி மகளாக எப்பவும் நிகிதாவை பிடிக்கும் தான் அதனால் தான் நிகிதா வீரா கல்யாணத்துக்கு அய்யாவு யோசித்து போது கூட அவரை பேசியே சம்மதிக்க வைத்தார். ஆனால் இப்போ மகனா..மருமகளா .. என வரும்போது மகனுக்கான தட்டு தாழ்ந்து தான் போனது விசாலாவின் மனதில்..

நிகிதா வீராவின் அறையில் தங்கி கொண்டாள். இவள் அறைபோல பெரியதாக டிரஸ்ஸிங் ரூம்.. அட்டாச்டு பாத்ரூம்.. கிங் சைஸ் பெட்டோ.. ஏசியோ.. ஏதும் இல்லை. பதினாறுக்கு பதினாரு கொண்ட அறை. சாதாராண டபுள்காட் பெட்.. ஒரு சீலீங் பேன் மட்டுமே வேற எந்த வசதியும் இல்லை.

வீராவால் ஏற்பட்ட மனக்காயத்திற்கு முன் இது எல்லாம் அவளுக்கு ஒரு பாதகமாக தெரியவில்லை. கல்யாணம் ஆகி வந்த போது இந்த வசதி குறைவு எல்லாம் பெரியதாக தெரிந்தது. ஆனால் இன்று வாழ்க்கையே கேள்வியாக இருக்க.. இருகோடுகள் தத்துவ நிலை தான் நிகிதாவின் இன்னறய நிலை.

ஒரு பத்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தவளுக்கு.. அப்படி இருக்க முடியவில்லை. மனதில் பல எண்ணங்கள்..
தன் காதலை அசிங்கப்படுத்தி விட்டானே.. தேடாமல் கிடைத்ததால் தானே அதன் அருமை தெரியவில்லை. நானும் என் காதலும் உனக்கு அவ்வளவு சீப்பாக போய்விட்டதா..இரு உன்னை கதறி கொண்டு ஓடி வர வைக்கிறேன் என சூளுரைத்தாள்.

விசாலாவே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து விட.. நாள் பூராவும் வெட்டியாக இருப்பதாக தோன்ற.. அதுமட்டும் அல்லாமல் தனக்கென ஒரு அடையாளத்தை தேடி கொள்ளனும். நீ விட்டு போனதால் உன்னை நினைத்து ஏங்கி பசலை நோய் கொண்டு வாடும் சங்க கால பெண்ணல்ல நான்.. அப்படியே பிரமித்து போய் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கும் நவ யுக பெண்ணாக இருப்பேன் என வைராக்கியம் கொண்டாள்.

இந்த ஊரில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என யோசித்தாள்.எந்த ஊரில் சம்பாதிக்க முடியாது என வெளிநாடு போனானோ.. தான் அந்த ஊரிலேயே சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தாள். இந்த ஊரில் என்ன இருக்கிறது.. என்ன இல்லை.. என்ன தேவை.. இதெல்லாம் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு எதுனாலும் செய்ய முடியும்.

அய்யாவுவிடம் போய் நின்றாள். தானும் தறிப்பட்டறைக்கு தினமும் வருவதாக கூறினாள். அய்யாவு தயங்க…

“வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. மனசு கண்டதையும் நினைக்குது.. அது தான் மனசுக்கு ஒரு மாற்றமா இருக்கும். வரேனே..” என கேட்க..

அய்யாவு ஏற்கனவே நிகிதாவை பார்க்கும் பொழுது எல்லாம் மனதளவில் நொடிந்து போனார். எப்படி இருந்த பொண்ணு இப்படி கஷ்டப்படுகிறதே.. மாமனார் மனைவி பேச்சை கேட்டு தப்பு செய்துவிட்டோமோ.. தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் தானே..
இந்த பெண்ணுக்கு என்ன செய்து பாவகணக்கை குறைப்பேனோ என மருகி கொண்டு இருந்தார்.

“வேணாம் மா..”

“ஏன் மாமா.. நான் வரனே..”

“இல்லமா.. அங்க வெக்கையா இருக்கும்..உன்னால தாங்க முடியாதுமா..”

“எல்லாம் எல்லாமே தாங்கி தான் ஆகனும் மாமா.. எனக்கு வாழ்கைல சாய்ஸே கொடுக்கலை உங்க மகன்.. என் மனசுல இருக்கற வெக்கயை விட.. இந்த வெக்கை என்னைய ஒன்னும் பண்ணிடாது”

இதுக்கு என்ன சொல்வது என சத்தியமாக அய்யாவுக்கு தெரியவில்லை. அவரால் பேச முடியவில்லை. அன்றிலிருந்து அய்யாவு கூட தினமும் தறிபட்டறைக்கு சென்றாள். ஏசியிலே இருந்தவள் வெயிலையும் வெக்கையும் பொருட்படுத்தாது தினமும் பட்டறைக்கு சென்றாள்.

வீராவுக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நிகிதாவின் நினைவுகள் வாட்ட… அவளை விட்டு விலகி வந்தால் அவளை மறந்து இருக்கலாம் என நினைத்த அவன் நினைப்பு மண்ணை கவ்வி கொண்டது. தேசம் விட்டு தேசம் வந்த பிறகு காதல் தாபம் வாட்டி எடுத்தது. ஏற்கனவே குளிர்தேசம் கடுங்குளிரை தாங்க முடியவில்லை. அவனின் நண்பன் ராஜேஷ் ஹாட் ரிங்க்ஸ் எடுத்துக்க சொல்ல.. குடிப்பழக்கம் இல்லாததால் வேண்டாம் என தவிர்த்து விட்டான். இரவில் மிக குளிராக இருக்க.. குளிருக்கு இதமாக அவளின் கதகதப்பு அவசியம் தேவை என தோன்றியது. அவள் காதலின் தாக்கம் அப்போது தான் உணர ஆரம்பித்தான். அவளின் அணைப்பு.. சின்ன சில்மிஷங்கள்.. இதழ் உரசல்.. எல்லாம் அவனின் எண்ணத்தில் அலையாக எழும்பி.. தீயாக அவனை தகிக்க வைக்க… தீயை அணைக்கும் மார்க்கம் அறியாது.. அதை தவிர்க்க … தன்னை சோஷியல் மீடியாவில் தொலைக்க ஆரம்பித்தான். இரவில் தன்னை மறந்து தூக்கம் வரும் வரை மூழ்கி போனான்.

பேஸ்புக்கில் புது பது நண்பர்களை தேடி கொண்டான். . நிகிதாவின் ஐடியை துலாவி கண்டு பிடித்து தினமும் ஏதாவது அப்டேட் பண்ணியிருக்காளா என பார்ப்பான்.அவன் கனடா வந்த பிறகு அவள் எதுவும் செய்யவில்லை என தெரிந்தது.

அதே போல வாட்சப்பில் ஏதாவது அனுப்பி இருக்காளா.. என பார்க்கும் போது தான் அவளுடைய டிபி பிக்கை பார்த்தான். அவனோடு காஞ்சிபுரம் பஸ்ஸில் செல்லும் போது அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்த படத்தை வைத்திருந்தாள். அதில் அவள் முகம் மகிழ்ச்சியாக புன்சிரிப்புடன் இருந்தது. இவன் இவ்வளவு நாளில் இதை எல்லாம் பார்த்ததில்லை. இப்போது தான் பார்க்கிறான். இந்த சிரிப்பு மகிழ்ச்சி எல்லாம் அவளிடம் இப்ப இருக்காது இல்ல.. அவளை மேரேஜ் பண்ணிக்காம இருந்திருந்தா அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள் என இப்பவும் தப்பாகவே யோசித்தானே தவிர தன்னோடு அழைத்து வந்திருக்கலாம் என நினைக்கவில்லை.

இப்படி பேஸ்புக் நண்பர்களோடு உரையாட.. அதில் கல்யாண் என ஒருவன் அறிமுகமாகினான். அவன் கனடா வாழ் தமிழன்.. வீராவோடு ஜாலியாக பழக.. அவனின் நகைச்சுவையான பேச்சில் லயித்து.. அவனோடு நெருங்கி பழக ஆரம்பித்தான்.

நிகிதா காலையில் இருந்து மாலை வரை பட்டறையில் இருப்பவள் பின்பு வீடு வந்து குளித்துவிட்டு சாப்பிட்டு விட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொள்வாள்.விசாலா மகனின் புராணம் பாடுவதால் விசாலாவிடம் கூட பேச்சை குறைத்து கொண்டாள்.

அறைக்கு வந்தவள் ஆராத்யாவுக்கு அழைத்தாள். வீட்டினர் யாரிடமும் பேசமாட்டாள். அவர்களாக அழைத்தால் சுருங்க பேசி முடித்து கொள்வாள். தினமும் ஆராத்யாவிடம் பேசிவிடுவாள்.இன்றும் அது போலவே..

“ஹலோ..ஆருமா.. என்னடா பண்ற..”

“பப்ளிக் எக்ஸாம்கு ரிவிஷன் போயிட்டு இருக்குகா.. அதான் படிச்சிட்டு இருக்கேன்”

“சரிடா லேட் நைட் வரைக்கும் படிக்காத.. டியூசன் போறியா..ஏற்பாடு பண்ணவா..”

வீரா இருந்த வரை ஆருவுக்கு பாடத்தில் சந்தேகங்களை நிவர்த்தி செய்வான். அவன் இல்லாததால் தான் டியூசன் வைக்க நிகிதா கேட்டாள்.

“இல்லக்கா.. நானே படிச்சுக்குவேன்.. இப்ப எல்லாம் மம்மி ஈவ்னீங் வீட்ல தான் இருக்காங்க.. சொல்லியும் தராங்க..”

என் வாழ்க்கை போய் தான்.. இவர்கள் எல்லாம் மாற வேண்டுமா.. என வேதனையாக நினைத்தாள்.

“அக்கா..க்கா.. லைன் தான் இருக்கியா..”

“ஆஹாங்.. சொல்லுடா ஆரு.. ”

“என்னக்கா.. மாமா.. நினைப்பா..” நிகிதா கோபப்படுவாள் என தெரிந்தே தயங்கி தயங்கி கேட்டாள்.

“ஆரூ..” என்றாள் கோபமாக கண்டிப்பான குரலில்..

“இல்லக்கா.. சாரி..”

“ஆரூ.. இனி அவர பத்தி என்கிட்ட பேசாத.. அப்புறம் உனக்கும் கால் பண்ணமாட்டேன்”

“சாரிக்கா.. சாரி..இனி பேசல..”்

“சரி.. பை..” சட்டென வைத்துவிட்டாள்.

வீரா சென்றது அவளுடைய மனதை பெரிய ரணமாக்கி இருக்க.. அதைவிட தனக்கு வாழ தெரியவில்லையா.. இந்த ஊர் பெண்கள் ஜாடையாக என்னை சொல்வது போல கணவனை இழுத்து பிடித்து வைத்து கொள்ள தெரியலையா..என்ற கழிவிரக்கமும் சேர்ந்து கொள்ள.. வீரா மேல அளவு கடந்த கோபமும் வெறுப்பும் உண்டானது. ஆனால் இரவானால் அவனின் அருகாமைக்காக ஏக்கமும் ஏற்பட்டது. தன் மனதின் போக்கை எண்ணி மிகவும் குழம்பி போனாள்.

வெறுக்கும் மனது எப்படி தனிமையில் அவனுக்காக ஏங்கும் என தன்னை நினைத்தே கவலை கொண்டாள். அவனுக்கு தான் என் காதல் புரியவில்லை. அதனால் என் காதல் இல்லை என்றாகி விடுமா.. அதான் நான் இன்னும் அவனை தேடுகிறேனோ..என நினைத்தாள்.

எவ்வளவோ அவளுக்கு அவளே சமாதானம் சொல்லி கொண்டாலும்.. அவனை உடலும் மனதும் தேட தான் செய்தது. அவனோடு கழித்த களிப்பான பொழுதுகள் ஞாபகம் வந்து வாட்டம் கொள்ள செய்தது.

அவனுடைய படுக்கை..அவன் தலையணை.. அவன் உடை.. எல்லாத்திலும் அவனுக்கே உரிய வாசத்தை தேடினாள். அவன் படுக்கையில் அவன் தலையணையை இறுக்கி கட்டிபிடித்து அவன் வேட்டியை போர்வையாக கொண்டால் மட்டுமே உறக்கம் வந்தது.

அப்படி படுத்தால் அவனே தன்னருகே தன்னை இறுக்கி அணைத்து இருப்பது போலவும்… அவனின் வேட்டி தன் உடலில் தீண்ட.. தீண்ட.. அவனே தீண்டுவது போன்ற உணர்வை கொடுத்தது.அதன் பிறகே அவளால் நிம்மதியான உறக்கம் கொள்ள முடிந்தது. அது விசாலாவுக்கு தெரிந்தால் மகனிடம் சொல்லி விடுவார். அவன் இன்னும் தன்னை இளக்காரமாக நினைப்பான் என விசாலாவுக்கு தெரியாது பார்த்து கொண்டாள்.

வெட்கம் கெட்டு போய் அவனை தேடுகிறோமே.. என கண்களில் கண்ணீர் வரும்.. வேண்டாம் நிகிதா நீ அழுககூடாது.. அவனை கதறி ஓடி வர செய்ய வேண்டும் என தன்னை திடப்படுத்தி கொள்வாள். எப்படி.. எப்படி வர வைப்பது என யோசிக்கலானாள்.

அடுத்து நிகிதா என்ன செய்ய போகிறாள். வீராவை கலங்கடிப்பாளா.. கதறி ஓடி வரவைப்பாளா… நிகிதாவின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்…

16 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

IMG-20240823-WA0012

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8

8     கண்களில் கணிக்க முடியா பாவம்.. உடற்மொழியில் நெருங்கி வரும் வேங்கையின் வேகம்.. வார்த்தைகளில் துள்ளிவரும் அலட்சியம்..   இவை எதுக்கும் சம்பந்தமே இல்லாமல் கைகளில் கிப்ட் பார்சல் ஒன்று..   ஏற்கனவே இரவு கனவுகளில் மட்டும் அல்லாமல் பகல்நேர நினைவுகளிலும் வந்து அவளுக்கு இம்சை கொடுக்கும் இந்த இம்சை அரசனை பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது என்னவோ உண்மை?   அதிலும் அவளருகே நெருங்கி அவளின் அந்த மச்சத்தை வருடியவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் தீப்பொறி

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8 Read More »

36358CD5-3A15-4A51-8FB4-ECF7C30E7878

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நண்பனிடம் பேசியவன் கிளம்பும் முடிவை எடுத்துவிட்டான் நிமிடத்தில் ஆனால் தன்னை அணைத்து கொண்டு படுத்திருந்தவளை பார்க்கும் போது நெஞ்சம் ஒரு நிமிடம் அதிர தான் செய்தது.

ஆனால் அவளோடு மனம் இசைந்து வாழ முடியாமல் தவிப்பாக இருக்கிறதே… இந்த தவிப்பு இவளை விட்டு பிரிந்தால் ஒரு வேளை நீங்க கூடுமோ.. அவள் வாழ்க்கை தரத்திற்கு இணையான ஒரு வாழ்வை என்னால் கொடுக்க முடியாது. இந்த வசதி எல்லாம் விட்டு என்னோடு வாழ வா என அழைத்தால் வருவாளா என தெரியவில்லை.வந்தாலும் அவள் கஷ்டப்படுவாள். அதை பார்க்க.. பார்க்க.. தனக்கும் வேதனை.

இதை எல்லாம் வீட்டினரிடம் சொல்லி அனுமதி வாங்க முடியாது. நிறைய போராடினாலும் அனுமதி கிடைக்காது. அவர்கள் இது தான் இப்படி தான் என முடித்து விடுவார்கள். அதன் பிறகு அவர்களை மீற முடியாது. எனவே சொல்லாமல் செல்வதே நல்லது என முடிவு எடுத்தான்.

விடியும் வரை அவளை இறுக்கி அணைத்து படுத்திருந்தான். மறுபடியும் இப்படி அணைக்க முடியாது என நினைத்தானோ என்னவோ அவனுக்கே தெளிவில்லை. நான்கு மணி போல எழுந்து குளித்து தயாரானான். ஒரு சிறு டிராலியில் நாலு செட் டிரஸ் எடுத்து வைத்தான். அதிகம் கொண்டு போக முடியாது சந்தேகத்திற்கு இடமாகிவிடும். தேவைபடுவதை போய் வாங்கி கொள்ளலாம் என நினைத்தான். கூடவே விசா பாஸ்போர்ட் முக்கிய ஆவணங்கள் எல்லாம் எடுத்து வைத்தான்.

நிகிதா எதுவும் அறியாமல் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அவளருகே சென்று அமர்ந்தவன் குனிந்து சில முத்தங்கள் கொடுத்து..

“சாரிடா… அமுல் பேபி.. உன்னைய விட்டுட்டு போறேன். என்னால இங்க மனசு ஒத்து இருக்க முடியலை.. நமக்கு இந்த பிரிவு அவசியம் தேவை. உனக்கு ஏத்தவன் நான் இல்ல.. கொஞ்சநாள் போனால் நீயே என்னை வேணாம்னு மறந்துடுவியோ என்னவோ… நானும் உன்னை விட்டு இருப்பனா தெரியலை. உன்னை விட்டு தள்ளி போனால் தான் எனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். பார்த்து பத்திரமா இருடி.. சந்தோஷமா இருக்கனும் அமுல்பேபி” என அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி நடந்தான்.

நேராக பெரியவர்களின் அறைக்கு வந்து கதவை மெல்ல தட்டினான். அப்போதுதான் எழுந்திருந்த பாட்டி கதவை திறக்க.. சத்தத்தில் தாத்தாவும் எழுந்து விட.. பெட்டியுடன் நின்ற வீராவை…

“என்னய்யா…. இந்த நேரத்துல பெட்டியோட..” என தாத்தா கேட்க..ஒரு நிமிடம் தயங்கியவன்.. சட்டென சுதாரித்து கொண்டு..

“என் ப்ரண்ட் மேரேஜ் பெங்களூருல இரண்டு நாள் போயிட்டு வந்திடறேன்”

“சரிப்பா… நிகிதாவையும் கூட்டிட்டு போலாம்ல.. நீங்க இரண்டு பேரும் எங்கயும் போனதில்லைல..” என பாட்டி கேட்க…

“இல்ல.. அம்மாச்சி…ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம்… யாரும் பேமிலியோட வரல..”

“சரி நிகிதா எங்க.. அவகிட்ட சொல்லிட்டல…”

“அவ தூங்கறா பாட்டி.. நைட்டே சொல்லிட்டேன்.. அவள டிஸ்டர்ப் பண்ண வேணாம்..”

“எப்படி போற..”என தாத்தா கேட்க..

“ப்ளைட்ல..”

“டிரைவர வர சொல்லிட்டயா…”

“இல்ல தாத்தா..கேப் புக் பண்ணியிருக்கேன்..”

“ஏன் நைட்டே டிரைவர கிட்ட வர சொல்லி இருக்கலாம்ல..”

“இல்ல..பரவாயில்லை..”

“சரி பார்த்து போயிட்டு வா.. ” என தாத்தா சொல்ல..

தலையாட்டி விட்டு விறுவிறுவென நிற்காமல் சென்று விட்டான். கேப் வாசலில் தயாராக நிற்க ஏறி அமர்ந்தவன்.. அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை “ஊப்” என விட்டு ஆசுவாமானான்.

ஹப்பா எத்தனை கேள்வி.. சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. இதில் அவளிடம் சொல்லி இருந்தால் அவ்வளவு தான் கல்யாணத்துக்கு தானே நானும் வரேன் சொன்னாலும் சொல்லுவா..என நினைத்தவாறே.. சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தான்.

நிகிதா வீரா சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் எழுந்துவிட்டாள். அருகில் வீரா இல்லை எனவும் நேரமாக ஜாகிங் போயிட்டாங்க போல என நினைத்து கொண்டு குளித்து தயாராகி வந்தாள்.

நிகிதா கிச்சனுக்கு வரவும் பாட்டியும் பின்னோடு வந்தார்.

நிகிதா ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காய்ச்சி டீ போட்டு நான்கு கோப்பைகளில் ஊற்ற.. பாட்டி புரியாமல் பார்த்தார்.

“நிகிதா.. யாருக்கு இன்னொரு கப்” என கேட்க.. இப்போது நிகிதா புரியாமல் பாட்டியை பார்த்தாள்.

“ஏன் கீரேனீ உங்களுக்கு தாத்தாவுக்கு எனக்கு மாமாவுக்கும்..” என்றாள்.

பாட்டிக்கு இவளிடம் அவன் சொல்லி விட்டு செல்லலையா.. என லேசாக அதிர்ச்சி.. ஒருவேளை இருவருக்குள் ஏதாவது சண்டையா..என நினைத்தவர் அதை அவளிடம் கேட்கவும் செய்தார்.

“உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.. நீ அவனிடம் ஏதாவது மரியாதை குறைவா பேசினியா..”

நிகிதாவிற்கு இன்னும் விசயம் தெரியாததால் இது எல்லாம் எதுக்கு கீரேனீ கேட்கறாங்க…நேத்து மாமா ஏதோ டென்ஷன்ல இருந்தாங்க தான்…ஆனா அதுக்கு அப்புறம் தான் என்கிட்ட அவ்வளவு காதலா… ரிலாக்ஸ் ஆகி தூங்கிட்டாங்களே..

“எதுக்கு கீரேனீ கேட்கறிங்க.. அப்படி எல்லாம் எதுவும் இல்லையே..”என மறுப்பாக தலை அசைத்தாள்.

“இல்ல..உன்கிட்ட சொல்லாம எப்படி போனான்..”

அவள் முகத்தில் சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டி கொண்டது.

“எங்க போயிட்டாங்க.. எங்கிட்ட எதுவும் சொல்லயே..”

“பெங்களூரு ப்ரண்ட் கல்யாணத்துக்கு போறேனு நாலரை மணிக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனானே.. கேட்டதுக்கு உன்கிட்ட நைட்டே சொல்லிட்டேனானே.. உங்கிட்ட சொல்லலையா..”

முணுக்கென கண்களில் நீர்.

பாட்டி அவளை பார்த்து கொண்டு இருந்தவர் “எதுக்கு கண்ணு கலங்கற.. நீ தூங்கிட்டு இருந்ததால சொல்லாம போயிருக்கலாம். போன் பண்ணுவான். இல்லாட்டி மெசேஜ் ஏதாவது போட்டு இருப்பான் பாரு..”

உடனே தங்கள் அறையில் இருந்த தனது போனை பார்க்க ஓடினாள்.போனை எடுத்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. மிஸ்டு கால் மெசேஜ் எதுவும் இல்லை.. அப்படியே சோர்வாக அமர்ந்து விட்டாள்.என்னவோ பெண் மனதில் சொல்ல முடியாத அலைப்புறுதல்.

எங்கிட்ட சொல்லாம போயிருக்காங்க..நைட் நடந்த சண்டை.. அதன் பிறகான சமாதானம்… அதில் சொல்ல மறந்திருந்தா கூட.. காலைல எழுப்பி சொல்லிட்டு கிளம்பியிருக்கலாமே… ஏன் சொல்லாம போனாங்க.. சொன்னால் நானும் வரேனு சொல்வேனு நினைச்சு சொல்லாத போயிட்டாங்களா.. நீ வேணாம்னு சொன்னா நான் என்ன பிடிவாதமா பண்ண போறேன்.. சொல்லிட்டு போயிருக்கலாமே…என மனதில் பல குழப்பங்கள்..

மாமாவுக்கு அழைக்கலாமா… பெங்களூரூ ரிச் ஆகியிருப்பாங்களா… எத்தனை மணி ப்ளைட்ல போனாங்களோ தெரியலையே.. என யோசித்தவள் அவனின் எண்ணிற்கு அழைக்க.. தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக அறிவிக்கவும்.. இன்னும் போய் சேரவில்லையா…என நினைத்தவள் உடனே தனது போனில் அன்றைய பெங்களூரூ ப்ளைட் அட்டவணையை பார்க்கலானாள்.

அவன் வீட்டில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு ரீச்சாகியிருக்கலாம். என்னவோ தெரியலையே.. ஒருவேளை ப்ரண்ட்ஸ் பார்த்ததும் போனை ஆன் பண்ண மறந்துட்டாங்க போல.. கொஞ்ச நேரம் கழித்து பார்க்கலாம் என தன்னை சமாதானம் செய்து கொண்டவள்… சிறிது நேரத்தில் அழைக்க.. சுவிட்ச்ஆப் என வர..
மதியம் வரை இப்படியே சுவிட்ச்ஆப்னு வர…இவளுக்கு வெவ்வேறு சந்தேகங்கள் எழ…

உடனே அவனது வார்ட்ரோப்பை திறந்து பார்க்க.. அங்கு அவனது பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இல்லை..இல்லை பெங்களூரு செல்லவில்லை.. வேறு எங்கோ சொல்லாமல் சென்று இருக்கார்.

உடனே தன் அத்தைக்கு அழைத்தாள்.

விசாலா எடுத்ததும் “அத்தை..மாமா..உங்களுக்கு போன் பண்ணினாரா..”

“என்னடா நிகிதா கண்ணு.. மூனு நாளைக்கு முன்னாடி போன்பண்ணினான். ஏன் என்னாச்சு..”

” இல்ல ப்ரண்ட் கல்யாணத்துக்கு பெங்களூரூ போறேன்னு இங்க சொல்லிட்டு போயிருக்காரு..ஆனா பெங்களூரு போன மாதிரி தெரியல.. அதான் உங்ககிட்ட ஏதாவது சொன்னாறா..”

“இல்லையேடா கண்ணு.. எங்களுக்கு ஏதும் பண்ணலையே.. நீ பதட்டப்படாதாடா வந்துருவான்”

இவங்களுக்கு ஒன்னும் தெரியல.. இவங்கிட்டயும் சொல்லல போல.. சம்திங் ராங்..என நினைத்தவளுக்கு பதட்டம் கூடி அழுகை பொங்கி கொண்டு வர.. அறையை விட்டு படிகளில் தடதடவென இறங்கி ஓடினாள். நிகிதா இறங்கி வரும் வேகத்தை கண்டு தாத்தா பாட்டி இருவரும் என்னவோ என பதறி எழுந்து வர…

நேராக அவர்களிடம் வந்தவள் கதறி அழுது கொண்டே..

“மாமா.. பெங்களூரூ போகலை.. வேற எங்கயோ போயிட்டாங்க.. என்னை விட்டுட்டு போயிட்டாங்க..” வெடித்து கதறி அழுக…

இருவரும் அவள் சொன்னதில் திகைத்து பார்க்க..

தாத்தா”நிகிதா.. அப்படி தான சொன்னான்.. எப்படி இல்லைங்கற..”

“பொய் சொல்லிட்டு போயிருக்காங்க.. அவங்க பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இங்க இல்ல… போனையும் சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்காங்க..” அழுது கொண்டே சொல்ல.. அவள் சொன்ன விசயங்களில்பெரியவர்களும் கலங்கி போயினர்.

அப்போது பாட்டி “இது ஆடி மாசம்ல இந்த மாசத்துல யாரும் கல்யாணம் வைக்கமாட்டாங்களே.. இந்த பய நம்மள ஏமாத்திட்டானே..” என ஆதங்கப்பட..

உடனே வெங்கட்டை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

வீட்டுக்கு வந்த வெங்கட்டும் என்ன செய்வது என திகைத்து போனார். நிகிதாவோ விடாமல் அழுது கொண்டே இருக்க..மகளை பார்த்து பயந்து போனார்.

சொக்கலிங்கம் வெங்கட்டிடம் “போன் போட்டு விசாலாவையும் அவ புருஷனையும் உடனே வர சொல்லுடா” என கத்தினார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் விசாலாவும் அய்யாவும் பதறியடித்து வந்தனர்.

அதற்குள் வெங்கட் தன் செல்வாக்கை பயன்படுத்தி வீரா பெயரை சொல்லி அன்று சென்ற அனைத்து வெளிநாட்டு விமானங்களில் சார்ட் லிஸ்டில் உள்ளதா என விசாரிக்க… கனடா சென்ற ப்ளைட் பேஸஞ்சர் லிஸ்ட்ல வீராசாமி அய்யாவு என்ற பெயர் உள்ளதை கண்டு பிடித்தார். அதை கேட்டு வீட்டினர் கோபத்தில் கொதித்து போயினர்.

விசாலா தம்பதியரும் வந்துவிட.. அவர்களுக்குமே வீரா செய்தது அதிர்ச்சி தான். அந்த அதிர்ச்சியை விட நிகிதாவின் அழுகையை கண்டு பயந்து போயினர்.

அய்யாவு மூலம் வீராவின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க.. எல்லோரும் தெரியாது என சொல்ல.. ஒருத்தன் மட்டும் கல்யாணத்திற்கு முன்பே வேலைக்கும் வெளிநாடு செல்வதற்கும் எல்லா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்ததும்.. இரண்டு வருட கான்ட்ராக்டில் கனடா சென்று இருப்பதாக சொல்ல.. மொத்த குடும்பமும் நிலை குலைந்து போயினர்.

இவர்களை பார்த்ததும் சொக்கலிங்கம் “விசாலா உம்மவன்.. பண்ண காரியத்த பார்த்தியா.. எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். பொறுப்பா எல்லாம் பார்த்துகிடுவான் தான..இப்படியா விட்டுட்டு ஓடுவான்..”

அவர்கள் என்ன சொல்வார்கள் அவர்களுமே வீரா இப்படி செய்வான் என நினைத்து பார்க்கவில்லையே…தலை குனிந்து நின்றனர். அவர்கள் பேசாமல் இருக்க.. வெங்கட்டிற்கும் கோபம் தலைக்கேற…

“அக்கா பதில் சொல்லு.. வீரா உங்ககிட்ட சொல்லிட்டு தான் போனானா.. பேசாம இருந்தா என்ன அர்த்தம்..”

அய்யாவு “வீரா பொறுப்பில்லாதவன் இல்ல.. அவன் இப்படி செய்ய.. ஏதோ காரணம் இருக்கும்..” என மகனுக்காக வக்காலத்து வாங்க..

“என்ன வேணா இருக்கட்டும் அத சொல்லிட்டே போயிருக்கலாம்ல.. எதுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம ஓடனும்.. ஓடறவன் என் பொண்ண கட்டிகிடறதுக்கு முன்னாடியே ஓடி இருக்கலாம்ல…”என வெங்கட் கோபத்தில் வார்த்தைகள் விட..

“மச்சான் வார்த்தைய பார்த்து பேசு..என் மகன் ஒழுக்கம் கெட்டவன் இல்ல.. வீட்டுக்கு பெரியவர் சொன்னாரேனு அவனுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டேன்” என பதிலுக்கு திருப்பி பேச..

சொக்கலிங்கம் “பேரனுக்கு பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சா ஒன்னுக்குள்ள ஒண்ணா போயிடும். எங்களுக்கு பிறகும் குடும்பமும் உடையாம இருக்குமேனு நினைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேன்” என ஆதங்கப்பட..

இவர்களுக்குள் சண்டை போட்டு கொள்ள…

“எல்லாம் கொஞ்சம் நிறுத்தறிங்களா..” என கூச்சலிட்டாள் நிகிதா. எல்லோரும் அதிர்ந்து பார்க்க..

“என்ன ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிகிட்டு இருக்கறிங்க.. என் வாழ்க்கையே போச்சு உங்களுக்கு அதை பத்தி கவலயில்ல.. சண்டை போட்டுட்டு இருக்கறிங்க..”

“நிக்கி பேபி..” என ரோஹிணி வந்து அணைக்க.. அவரை பிடித்து தள்ளிவிட்டாள்.

வெங்கட்”நிக்கி..”என அதட்ட..

“உங்க பொண்டாட்டிய தள்ளி விடவும் இவ்வளவு கோபம் வருதா..இவங்க என்னைக்காவது வீட்ல இருந்து பொறுப்பா எங்கள வளர்த்திருங்காங்களா.. இவங்களுக்கு இவங்க ப்ரண்ட்ஸ் கிளப் இதுதான் முக்கியம்.. உங்களுக்கு உங்க பிசினஸ் தான் பெரிசா போச்சு.. ஒரு நாளாவது நாங்க சாப்பிட்டமா..படிச்சமா.. அன்பா கேட்டு இருக்கறிங்களா..”

தாத்தாவும் கீரேனியும் வரலைனா நாங்க என்னவாகியிருப்போம் நினைச்சு
பார்க்கவே பயமா இருக்கு ”

“நீங்க பொறுப்பா இருந்திருந்தா என் ப்ரண்ட்ஸால தப்பான வழிக்கு போயிருக்க மாட்டேன்.. அதனால இவங்க.. அவங்க பேரனுக்கு கட்டி வச்சிருக்க மாட்டாங்கல்ல.. ஒரு பேரண்ட்ஸா நீங்க எங்களுக்கு நியாயம் செய்யல..”

அடுத்து தாத்தா பாட்டியிடம் ” உங்க பேரன் பொறுப்பானவர் தான கட்டி வச்சிங்க… பொறுப்பானவன் இப்படி தான் பொண்டாட்டிய விட்டுட்டு ஓடுவானா..வச்சு வாழற மாதிரி இருந்தா தாலி கட்டி இருக்கனும் இல்லையா..”

அடுத்து அய்யாவுவிடம் வந்தாள். யாரையும் விட்டு வைக்கவில்லை அவளுக்கு அளவுக்கு அதிகமான கோபம் ஆத்திரம். ஒருத்தரையும் விட்டு வைக்க தயாராக இல்லை. வீரா சிக்காத கோவத்தை அனைவரிடம் காட்டி கொண்டு இருந்தாள்.

“உங்க மகனுக்கு பொண்டாட்டிகிட்ட தான் சொல்ல தான் முடியல.. பெத்தவங்கிட்டயாவது சொல்லிட்டு போகனும்னு அறிவில்ல… இப்படி ஒரு பொறுப்பில்லாதவரை தான் நம்பி என் வாழ்க்கையை ஒப்படைச்சிங்க எல்லாரும்.. இப்ப உங்களுக்கு ஒரு கஷ்டமோ நஷ்டமோ இல்லை… நான் தான என் வாழ்க்கைல அடுத்து என்ன பண்ண தெரியாம நிக்கறேன்”
சர வெடியாக வெடித்தாள்.யாரிடம் அவள் கேள்விக்கு பதிலில்லை. அவளுக்கு கேட்டது போதவில்லை. மனம் ஆறவில்லை.

நான் இவன் மேலே இத்தனை காதலாக இருக்க.. இவனுக்கு என் காதல் புரியவில்லையா.. என் நேசத்தை உணரவிலாலையா..நான் தான் இவன் மேல் பைத்தியமாக இருந்தேனா.. என நினைத்து மருகினாள்.

இப்போது தான் அவளுக்கு தெளிவாக ஒன்று புரிந்தது. என்றைக்கு என் மேல் ஆசை வந்திருக்கு.. எப்பவும் நானே தானே அவனை அணைத்திருக்கேன்.. என் ஆசையை அவனிடம் நெருங்கி பலவழிகளில் தெரியப்படுத்தினால் மட்டுமே அவன் நெருங்கியிருக்கான்.. அவனாக இதுவரை அணைத்திருக்கவில்லையே.. இப்போ மேல விழும் வேசி போல தன்னை நினைத்து அருவருத்து போனாள்.

அருவருப்பில் குமட்டி கொண்டு வர.. ஓடி சென்று வாந்தி எடுத்தாள். வாந்தி எடுக்கவும் எல்லோரும் முகத்திலும் ஆராய்ச்சி பார்வை..

வாயை கொப்பளித்து கொண்டு வந்தவளுக்கு இவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் அடிவயிறு பத்தி கொண்டு வந்தது.

“என்ன .. நீங்க நினைக்கற மாதிரி.. இங்க ஒன்னும் இல்லை..” அடிவயிறை தட்டி சொன்னவள்..

“வாழ்ந்தானே இருக்கும்… வாழவே இல்லையே.. எப்பவும் உங்க பேரன் என்ன தள்ளி தான் வச்சிருந்தாரு..” என அவனாக மனைவியாக உரிமை எடுத்து கொள்ளாத ஆத்திரத்தில் சொல்ல.. பாட்டியை தவிர மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குள் எந்த ஒட்டு உறவில்லை என நினைத்தனர். ஆனால் பாட்டியோ இல்லையே என் பேரன் இவளோடு குடும்பம் நடத்தியிருக்கானே.. இவள் என்ன இப்படி சொல்கிறான் ஏன குழப்பம் கொண்டார்.

வெங்கட்டோ “நிக்கி பேபி நீ கவலப்பாடதா பேபி.. அவன் இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் நான் இழுத்து கிட்டு வரேன்”

“எப்ப நான் வேண்டாம்னு விட்டுட்டு போனாரோ.. இனி எனக்கும் அவரு வேண்டாம்..இதுநாள் வரை அவரு மனசு ஒத்து என்னோட வாழல.. இனி அவரா வந்தாலும் என் மனசு ஏத்துக்காது. எனக்கு அவரு வேண்டாம்”

“அப்ப அவன டைவர்ஸ் பண்ணிட்டு உனக்கு வேற நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன்”

“வெங்கட்”

“தம்பி”

“மச்சான்”

என எல்லோரும் ஆட்சேபிக்க..

நிகிதாவோ டைவர்ஸ் என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து போனாள்.அவன் மேல் கோபம் தான். அவன் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளகூடாது என நினைக்கிறாள் தான். ஆனால் ஒரே நாளில் டைவர்ஸ் என்ற வார்த்தையை அவளால் ஜீரணிக்க முடியவில்லை அதுவே இன்னும் கோபத்தை கூட்ட..

“உங்களுக்கு என்னை பார்த்தா நீங்க ஆட்டி வைக்கற பொம்மை மாதிரி தெரியுதா.. வீராவ கட்டிக்க சொன்னிங்க.. இப்ப அவன் ஓடிட்டானதும்.. இன்னொருத்தனா.. உங்களுக்கு அசிங்கமா இல்லை.. நீங்க எப்பவும் எனக்கு நல்லா அப்பாவ இருக்க போறதில்லை.. இனி இந்த வீட்ல நான் இருக்கமாட்டேன்..” என்றவள்..

யாரிடமும் எதுவும் பேசாமல் மகனின் செயலை நினைத்து சத்தமின்றி அழுது கொண்டு இருந்த விசாலாவிடம் சென்றவள்..

“அத்தை நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா.. ஆனால் உங்க மருமகளா இல்ல.. உங்க தம்பி பொண்ணா..எப்பவும் எதையும் எதிர்பார்க்காம நீங்க காட்ற பாசத்துக்காக தான் உங்க வீட்டுக்கு வரேன்.. உங்க மகனை பத்தி எப்பவும் பேசகூடாது அப்படினா வரேன்.. இல்லைனா நான் எங்கயாவது லேடீஸ் ஹாஸ்டல் பார்த்துகிறேன்” என்றாள்.

விசாலா என்ன சொல்ல என தெரியாமல் தன் கணவரையும் தந்தையும் பார்க்க இருவருமே நிகிதா அறியாமல் சரி சொல் என்பதாக தலை ஆட்ட..

” நான் அவன பத்தி உன்கிட்ட பேசமாட்டேன் வாடி ராசாத்தி நம்ம வீட்டுக்கு போகலாம்” என கைபிடித்து அழைக்க.. தன் உடமைகளை எடுத்து கொண்டு நிகிதா கிளம்பிவிட்டாள்.

இருபத்தியொரு மணிநேரம் பயணத்திற்கு பிறகு கனடா சென்று இறங்கினான் வீரா..இவனை விமான நிலையத்திற்கே வந்து அவன் நண்பன் அழைத்து அவனுடைய ப்ளாட்கு அழைத்து சென்றான்.

வீராவால் கனடா குளிரை தாங்க முடியவில்லை. அவன் அதிக துணிகள் கொண்டு வர முடியாததால் அவன் கொண்டு வந்த சாதாரண ஜெர்கினால் குளிர தாங்க இயலவில்லை.

குளிருக்கு ஏதாவது கதகதப்பாய் வேண்டும் என நினைத்த நொடி..நிகிதாவின் வெம்மை கொண்ட தேகமே… அவளை இறுக்கி அணைத்தால்தான் இந்தகுளிரை அடக்கமுடியும். அவனின் எண்ணம் செல்லும் பாதையை கண்டு திகைத்தான். அவளை விட்டு பிரிந்து முழுதாக இருபத்திநாலு மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அவளை நாடும் தன் புத்தியை தானே காறி துப்பி கொண்டான்.

உறவாய் நெருங்கியவள் மனமோ வேணாம் என ஒதுக்கி செல்ல.. உறவை வெட்டி சென்றவன் மனமோ வேணும் என நினைக்க… விதி விளையாடும் விளையாட்டின் ஆரம்பம் இனி தான்..

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top