ATM Tamil Romantic Novels

5A6C269B-F32D-4710-9CC6-A088F63FC9B8

34 – ஆடி அசைந்து வரும் தென்றல்

34- ஆடி அசைந்து வரும் தென்றல்

அவனின் இதழ் பரிமாற்றத்தில் நிறைய கோபங்கள்… வருத்தங்கள் இருந்த போதும் கிறங்கி நின்றவளை பார்த்து அவளின் காதல் மனம் புரிய.. இத்தனைக்கு பிறகும் தன்னிடம் சொக்கி கிடக்கும் தன் மனையாளை கண்டு கர்வமாக இருந்தது. அவளை கண்டு மெல்ல சிரிக்க…

அவனின் சிரிப்பில் வெட்கம் மேலிட… “என்ன இளிப்பு ..” என அவனின் தோளில் அடித்தாள். அடித்த கையை பற்றி உள்ளங்கையில் மீசை உரச முத்தம் வைத்தான். கையை உருவிக் கொண்டவள்…

“என்னை டைவர்ட பண்ணாதிங்க… சொல்லுங்க உங்களுக்கு வருத்தமா இல்லையா..”

“என் திமிர்… ஈகோ பிடிவாதமா உன்னை மறக்க நினைத்தேன்.. நினைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் என்னை அறியாமலே மத்த பொண்ணுங்கிட்ட நீ எனக்கு கொடுத்த லவ்வ தேடியிருக்கேன்… ஒரு கட்டத்தில் எதை தேடறோம்னு தெரியாம பைத்தியம் புடிக்கற மாதிரி ஆகிடுச்சு… அப்புறம் இந்த பழக்கம் எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி அந்த ப்ளாட்ட வித்து அப்பாட்ட கொண்டு வந்து பண்த்தை கொடுத்தேன் பாரு அப்ப தான் அவ்வளவு ரிலாக்ஸா ஃபீல் பண்ணினேன்.. இருந்தாலும் என் மனசுல ஏதோ ஒன்ன இழந்துட்டோம்னு தவிப்பு மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு… அப்ப தான் ஷாஷிகாவ பார்த்தேன். பார்த்ததும் என்னையும் அறியாம ஒரு பாசம்.. கைகால் எல்லாம் என்னை மாதிரி நீளமா இருந்தாலும் முகம் கொஞ்சம் உன் சாயல் அதனால கூட இருக்கலாம். ஷாஷி என் பொண்ணுனு தெரியாமேயே அவளை பார்க்க அந்த பார்க்கு வருவேன்.. அன்னைக்கு அவளை தேடி தான் உங்க வீட்டுக்கு வந்தேன். உன்னை பார்த்தும் அவ்வளவு மகிழ்ச்சி.. ஷாஷி உன் பொண்ணுனு தெரிஞ்ச பிறகு அந்த மகிழ்ச்சி அப்படியே வத்திப் போச்சு..”

ஏன் என புரியாமல் அவனை பார்த்தாள். அவளின் கேள்வியாக வளைந்த புருவங்களை நீவி விட்டவன்..

“அது உனக்கு வேற யார் கூடவோ கல்யாணமாகிடுச்சுனு நினைச்சேன்… இருந்தாலும் அன்னைக்கு தான் உன் மேல நான வச்ச லவ்வ தெரிஞ்சுகிட்டேன்.. அன்னைக்கு நைட் அப்படியே கனவில் உன் கூட……. என அந்தரங்கமான காதல் பாஷைகள் பேச…

“ச்சீ… இப்படியா..” என முகத்தை மூடிக் கொண்டாள்..

“என்ன இப்படி சொல்லற… இதுவே கம்மி.. அடுத்தவன் பொண்டாட்டிய அப்படி நினைக்ககூடாதுனு என்னையே கண்ட்ரோல் பண்ணிகிட்டேன் தெரியுமா…” பாவமாக

தேவர்ஷி அவனை சரமாரியாக அடிக்க.. அவளை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான். அவள் இடையோடு கட்டிக் கொண்டு…

“உங்கப்பாவ விசாரிச்சு ஷாஷி என் பொண்ணுனு தெரிஞ்சுகிட்டேன் ஆனால் தாலி தான் கொஞ்சம் உறுத்துச்சு..” என இப்பவும் அவள் கழுத்தில் இருந்த மங்கள்சூத்ராவை தடவிப் பார்ததான்.

“நான் கூப்பிட்டா வரமாட்ட…. அதான் எங்கம்மாவ கிளப்பிவிட்டேன். கடைசில கங்காம்மா மருமகளை கைக்குள்ள போட்டுகிட்டு எனக்கு வழக்கம் போல ஆப்பு அடிச்சுட்டாங்க..” என சிரித்தான்.

“அத்த.. செம ஸ்மார்ட்ல..”

“ஆமாம் அவங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி குடும்பமா வாழனும்னு ஆசை.. அதுக்காக என்ன எல்லாம் பண்ணுனாங்க.. தெரியுமா..” என தன அம்மா செய்ததை எல்லாம் சொல்ல.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் கலகலவென சிரிக்க.. அவளையே பார்த்திருந்தவன் பின்புறமாக அணைத்திருந்த கைகளால் வயிற்றை தடவி கொடுத்து…

அவள் காதோரம் “ரொம்ப கஷ்டப்பட்டியா..” என கேட்க..

சட்டென அவள் சிரிப்பு மறைந்து.. முகம் வாடிப் போக..

“டேய் குட்டிம்மா.. என்னடா…” அவனின் கரிசனையில் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

அவன் புறம் திரும்பி அவன் நெஞ்சில் முகம் முட்டி நின்று சத்தமின்றி அழுகையில் கரைய…

“என்னடா லேபர் பெயின் அதிகமா இருந்ததா.. நானும் உன்னை வருத்திட்டேன்ல.. சொல்லுடா நான் இல்லாம எப்படி எல்லாம் கஷ்டப்பட்ட..”

அவனின் மார்ப்பில் சாய்நதவாறே தன் மனபாரத்தை எல்லாம் இறக்கி வைத்தாள். கேட்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர் கோடுகள்…

“அழுகாதடா… அடுத்த புள்ளைக்கு நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறேன்.. லேபர் வார்டுல கூட உன் கூடவே இருப்பேன்.. இனி உன்னை தனியா விடமாட்டேன் சந்தோஷமோ… துக்கமோ.. சேர்ந்தே அனுபவிப்போம்..” என அணைத்தான்

சிறிது நேரம் இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றவர் ஆறுதல் தேட… ஆறுதலாக இருந்தது ஆசையாக உருமாறி… இடையில் இருந்த கைகள் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து அவளின் பெண்மையின் மென்மையை சோதிக்க…

சுகம் தாளாமல் அவனின் முடிகளுக்குள் கை விட்டு இறுக்கினாள். இருவருக்கும மெல்ல உடலும் மனதும் நெகிழ… உடையை நெகிழ்த்தும் வேளையில்..

“ம்மா.. ப்பா..” என ஷாஷிகா கதவை தட்ட…

அவசர அவசரமாக இருவரும் பிரிந்து தங்களை சீர் படுத்திக் கொண்டு கதவை திறந்தனர்.

மகள் வரவும் தேவர்ஷி “சாப்பிட்டயா..”

“பாட்டி இட்லி ஊட்டி விட்டாங்க.. உங்கள சாப்பிட வர சொன்னாங்க..”

“ஷாஷிமா.. செல்லம்.. அம்மாவும் அப்பாவும் வராங்களாம் என சொல்லு போ..” என மகளை அனுப்பி வைத்தவன் அவசரமாக தேவர்ஷியை அணைத்தான்.

“ப்ச்ச்.. விடுங்க.. அத்த வர சொன்னாங்கல்ல..”

“ம்ம்ம்…போலாம்” என சில காதல் கல்மிஷங்களை செய்தே அவளை விடுவித்தான்.

“இப்ப விடறேன் இராத்திரிக்கு வட்டியும் முதலுமா வசுல் பண்ணிக்குவேன்.. ஆறு வருசம் வசூல் பண்ண வேண்டியது எவ்வளவு இருக்கு.. ஒரு புள்ளை பிறப்பை தான் பார்க்க விடாம பண்ணிட்ட.. ஆறு வருஷ கணக்குக்கு இன்னும் மூணு புள்ளை பெத்துக்கனும்.. ரெடியா இரு..”என பக்கா பிசினஸ்மேனா கணக்கு போட்டு சொல்லி கண்ணடித்து உதட்டை குவித்து முத்த சைகை செய்ய.. வெட்கத்தில் முகம் சிவந்து நின்றவளை ரசித்தான்.

இருவரும் புன்னகையுடன் படியிறங்கி வர.. கங்காவின் கண்கள் நிறைந்து போனது.

“ ம்மா.. சாப்பிட்டிங்களா..” என கேட்க…

“ம்ம் நாங்க எல்லாம் சாப்பிட்டோம்.. நீங்க இரண்டு பேரும் உட்காருங்க..” என இருவரையும் உட்கார வைத்து தானே பரிமாறினார்.

தேவர்ஷியோ”நீங்க இருங்க… நான் அவருக்கு பரிமாறறேன்.. நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்..”

“இப்பவே நேரம் தாண்டி போச்சு… நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றவர் தேவர்ஷிய உட்கார வைத்து பரிமாறியவர் எதிர் இருக்கையில் அமர்ந்து அவர்களையே கண்ணெடுக்காமல் பார்க்க..

அனிவர்த் “ம்மா..” என்றான் கூச்சத்துடன்… தேவர்ஷிக்கும் சங்கடமாக தான் இருந்தது.

“பேசாமல் சாப்பிடுடா.. இது எல்லாம் என்னோட சின்ன சின்ன ஏக்கங்கள்..” என சொல்லி கண் கலங்க..

பேத்தியோடு அங்கே வந்த சிதம்பரம் “ கங்கா.. “ என கண்டிக்க… கண்களை துடைத்து கொண்டார்.

“மூணு பேரும் கோயிலுக்கு போயிட்டு வாங்கடா…”

“நீங்க இரண்டு பேரும் வாங்கம்மா.. நிறைய வேண்டுதல் வச்சிருப்பிங்களே…”

“ஆமாம்டா.. திருப்பதி, பழநி, திருச்செந்தூர் எல்லாம் போகனும்..”

“சரிங்கம்மா.. எல்லாகோயிலுக்கும் உடனே போயிட்டு வந்திடலாம்..”

“ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தது ஆறு மாசமாவது இடைவெளி வேணும்டா..மகனே..”

மற்ற மூவரும் புரியாமல் பார்க்க…

“இல்ல… உனக்கும் உங்கப்பாவுக்கும் மொட்டை போடறேன்னு வேண்டி இருக்கேன்… முடி வளர ஒரு ஆறுமாசமாவது கேப் விட வேண்டாமா..” என அப்பாவி வேசம் கட்ட…

அனிவர்த்தும் சிதம்பரமும் கங்காவை முறைக்க.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.

ஷாஷிகாவும்”அய் அப்பாவுக்கு மொட்டை..” என கை தட்டி சிரிக்க..

அனிவர்த்தும் சிதம்பரமும் சிரித்து விட…தன் குடும்பத்தை கண் நிறைக்க பார்த்த கங்கா தன் கண்ணே பட்டு விடுமோ என பயந்து திருஷ்டி கழிக்க தேவையான பொருட்கள் எடுக்க சென்றார்…

அனிவர்த் தேவர்ஷி வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் கட்நதிருந்தது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மினிஹாலில் அனிவர்த் தேவர்ஷி இருவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு அறையில் அனிவர்த்தும் தேவர்ஷியும் வார்த்தை போர் நடத்திக் கொண்டிருக்க… ஷாஷிகா தன் உடன் பிறப்புக்களை பார்ப்பதா.. இவர்களை பாரப்பதா.. என முழி பிதுங்கி நின்று கொண்டிருந்தது. இன்று அவர்களின் வாரிசுகளுக்கு முதல் பிறந்தநாள்.

“உங்க பையன் உங்களை மாதிரியே ஒரே பிடிவாதம்.. பாருங்க டிரஸ் போட்டுக்க கூப்பிட்டா.. வரமாட்டேன்னு அங்க போய் நிக்கறான்..”

“அங்க பாரு உன் பொண்ணு மட்டும் என்ன.. உன்னை மாதிரியே ஜன்னல் பிடிச்சுகிட்டு தொங்கறா பாரு..”

“உங்களுக்கு பிடிக்கலையோ…” என முறைத்தாள்.

“யார் சொன்னா.. ஹீஹீஹீ.. அப்படி எல்லாம் இல்லையே..” என சிரித்து சமாளித்தான்.

தேவர்ஷியின் குறும்பில் தானே மொத்தமாக விழுந்தான். அதே போல இளைய மகள் இரு்க்கவும்.. நிதிலா மேல் தனி பாசம்.. அதில் தேவர்ஷிக்கு சற்று பொறாமை..

தேவர்ஷியை சமாளிப்பதற்காக பேச்சை மாற்றும் விதமாக..

“இவன் தான் என்னை மாதிரி அமைதியா இருக்கான்..”

“யாரு உங்களை மாதிரியா.. இவன் என்னை மாதிரி..” என கட்டிலில் உட்கார்ந்து அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த நிகித்தை காண்பித்து சண்டை நீள..

ஷாஷிகாவோ கங்கா வந்துவிட்டால் பரவாயில்லை என வாசலையே பார்த்தது..

அந்த அறையில் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆம் மூன்று குழந்தைகள்…ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் தேவர்ஷிக்கு… ட்ரிப்லெட்ஸ்… இரண்டு ஆண் ஒரு பெண்.. நிகில்,நிகித், நிதிலா… நிதிலா தேவர்ஷி போல ஓவர் சேட்டை.. தேவர்ஷியின் அத்தனை குறும்புகளையும் கொண்டிருந்தது. நிகில் அனிவர்த்தை போல பிடிவாதம்.. அழுத்தம்… இந்த இரண்டுக்கு நேர்மாறாக கடைக்குட்டி நிகித் அமைதி.

இந்த இரண்டு வருடங்களில் அனிவர்ததிடம் நிறைய மாற்றங்கள்.. முழு குடும்பஸ்தனாகி போனான். காலையில் ஷாஷிகாவை ஸ்கூலில் விட்டு சென்றால் மாலையில் ஷாஷிகாவோடு வீடு வந்திடுவான் அதன் பிறகு அவன் பொழுதுகள் மனைவி மகளோடு தான். மகள் உறங்கும் வரையில் மகளின் ஆட்சியில் தான் அவன்..

ஷாஷிகாவிற்கு எதற்கும் அப்பா வேண்டும். தேவர்ஷிக்கு பொறாமையாக இருந்தாலும் மகள் இத்தனை தூரமா தந்தை பாசத்திற்கு ஏங்கியிருக்காள் என்ற வருத்தமே அதிகமாக இருந்தது.

மகள் உறங்கிய பின்பு அவன் சேவை எல்லாம் காதல் தேவைக்காக தேவர்ஷியிடம்.. சொன்னது போலவே ஆறு வருடங்கள் பிரிவை ஈடு கட்ட பெரும் சேவையாற்றினான். தேவர்ஷியை மட்டும் கூட்டிக் கொண்டு ஒரு முறை பொன்முடி போய் வந்தான். அந்த மாதமே தேவர்ஷிக்கு நாள் தள்ளிப் போனது.

அனிவர்த்கு அத்தனை மகிழ்ச்சி. மருத்துவமனையில் கர்ப்பம் தான் உறுதி செய்த அன்று அவன் தந்தை என்ற உணர்வில் தத்தளித்து நின்றான். என்ன தான் ஷாஷிகா தந்தை ஸ்தானத்தை கொடுத்திருந்தாலும்..

கருவாகி உயிராகி உருவாகி கையில் ஏந்தும் காலம் வரை ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து வாழ வைக்க வந்த குழந்தை அல்லவா..

குழந்தை அல்ல குழந்தைகள்… மூன்று குழந்தைகள் என்றனர்.

34 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

04A3DADC-A0C2-4091-937B-883E696F0859

33 – ஆடி அசைந்து வரும் தென்றல்

33- ஆடி அசைந்து வரும் தென்றல்

“ஷாஷி.. டாய்லெட் போனியா..”

“ம்ம்ம் ம்மா.”

“ப்ரஸ் பண்ணிட்டியா..”

“அப்பாவும் நானும் பண்ணி்ட்டோம்..”

“பால் குடிக்கலாம் வா”

“ம்மா.. நீங்க போங்க.. நானும் அப்பாவும் வரோம்..”

தன்னை கவனிக்காமல் தகப்பனுக்கு பவுடர் பூசிக் கொண்டே மகள் பதில்சொல்ல்…

இது நாள் வரை எதற்கும் தன்னையே எதிர்பார்க்கும் மகள் இன்று எல்லாத்திற்கும் அப்பாவையே முன்னிருத்த.. என்னவோ மகள் தன் கை விட்டுப் போனது போல ஒரு ஸ்திரமற்ற தன்மை மனதில் தோன்ற…

அனிவர்த் மேல் இருந்த ஆதங்கமும் இவளுக்கும் நான் வேண்டாமா..என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள.. கோபமாக உருவெடுக்க..

“ஷாஷி வா.. பால் குடிச்சிட்டு வந்து குளிக்கனும்.. ஸ்கூல் போக வேண்டாமா..” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்து..

“ம்மா.. இன்னைக்கும் நான் லீவு..”

“ஒரு வாரமா ஸ்கூல் போகல.. ஒழுங்கா கிளம்பு..” என்றாள் சற்று கோபமாக…

“அதேல்லாம் போக முடியாது… நான் அப்பா கூட தான் இருப்பேன்..” பிடிவாத குரலில் தாயை சட்டை செய்யாது தகப்பனுக்கு மையிட்டு கொண்டிருந்தது..

தேவர்ஷியின் இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் மிதமான நிலையில் இருந்து அதீத வேகத்திற்கு தடம் மாற….

“நான் சொல்லிகிட்டே இருக்கேன்.. நீ அழிச்சாட்டியமா பண்ற…” என மகளை அடிக்க வர..

தேவர்ஷிக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த ஷாஷிகா முதுகில் அடி விழுகும் முன்பே.. மனைவியே பார்த்திருந்த அனிவர்த் சட்டென ஒரு கையால் அவளின் கையை பிடித்து தடுத்தவன்.. மறு கையால் ஓங்கி அவளை அறைந்திருந்தான்.

“எதுக்குடி இப்ப பாப்பாவ அடிக்க வந்த… ஒரு நாள் ஸ்கூல் போகலைனா குடியா முழுகிடும்.. என்ன உன் மனசுல ஓடுது.. நானும் பார்த்துட்டே இருக்கேன் முகத்தை தூக்கி வச்சுகிட்டு திரியற… என்னனு சொல்லித் தொலை..” என உறுமினான்.

தாய் தந்தை கோபத்தில் பயந்து ஷாஷிகா சத்தமாக அழுக…

இத்தனை நாளில் அனிவர்த் அவளை அடித்ததில்லை.. பிரிந்த நாளில் கூட அடிக்க கையை ஓங்கினானே தவிர அடித்ததில்லை. அவன் அடித்ததில் கன்னத்தை பிடித்து மிரண்டு போய் நின்றாள்

மகள் அழுகவும் மகளை தூக்க செல்லவும்.. அவளுக்கு முன்பு மகளை வாரி அணைத்துக் கொண்டவன்..

“பாப்பாவை தொட்டின பாரு..” விரல் நீட்டி மிரட்டினான்.

அவனின் மிரட்டல் இவளை சீண்டி விட…

“ஓஹோ.. புதுசா.. புள்ள பாசம் பொத்துகிட்டு வருதா.. நான் தொடகூடாதா.. நான் தொடாம இருந்திருந்தா.. உங்க பொண்ணு இந்நேரம் எதாவது ஆசிரமத்துல் தான் இருந்திருக்கனும்.. நான் தொட்டு தூக்கி பாலூட்டி சீராட்டி வளர்க்கவும் தான இன்னைக்கு உங்க மகனு சொந்தம் கொண்டாடறிங்க.. இல்லைனா இப்படி ஒரு மக இருக்கறதே உங்களுக்கு தெரிஞ்சிருக்காது தான.. சொல்லுங்க..”

ஷாஷிகாவிற்கு தாயின் இந்த கோபமுகம் புதிது.. மேலும் பெருங்குரலெடுத்து அழுக… ஷாஷிகாவை சமாதனம் பண்ண அவளை வாங்க வந்த தேவர்ஷியின் கைகளை தட்டிவிட்டவன் மகளின் கண்களை துடைத்து..

“ஒன்னுமில்லடா.. செல்லக்குட்டி.. அம்மா சும்மா பேசறா…” தோளில் தட்டிக் கொடுக்க.. ஷாஷிகாவின் அழுகை சத்தத்தால் கங்கா மேலே வந்துவிட்டார்.

கங்கா “அனிவர்த்..அனிவர்த்..” என அறை கதவை தட்ட.. அனிவர்த் சென்று கதவை திறந்தான். மகனின் கையில் இருந்த பேத்தியின் அழுகையை கண்டு..

“ஏன்டா பாப்பா அழுகறா..” என கேட்க..

அனிவர்த் திரும்பி தேவர்ஷியை முறைத்தான். தேவர்ஷியோ மாமியார் வரவும் என்ன சொல்வாரோ என அச்சப்பட்டு நிற்க…

அனிவர்த் பார்வை சென்ற திக்கை கவனித்தவர் அப்போது தான் தேவர்ஷியையும் நன்றாக பார்த்தார். அவளின் கன்னத்தில் கைதடம் இருக்க.. வேகமாக சென்று அவளின் கன்னத்தை வருடியவர்…

“என்னடா பண்ணின என் மருமகள..” என அனிவர்த்திடம் சண்டைக்கு போக…

“ ப்ச்ச்… ஏம்மா நீங்க ஒரு பக்கம்..” என்றான் சலிப்பாக..

“ஏன்டா.. என்னடா..” இருவருக்குள் இன்னும் எதுவும் தீர்க்கப்படவில்லையோ என்ற பரிதவிப்பில் கேட்டார.

“ம்மா ஒன்னும் இல்லை.. ஒரு சின்ன சண்டை.. அத பார்த்துட்டு ஷாஷி பயந்துட்டா.. உங்க பேத்திய கூட்டிட்டு போய் ஏதாவது குடிங்க கொடுங்க.. நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்..” என மகளை தாயிடம் ஒப்படைக்க..

“எதுனாலும் இன்னைக்கே பேசி முடிச்சுங்குங்க.. நீங்க சந்தோஷமா இருந்தா தான் எங்களுக்கு நிம்மதி..” என சொல்லி பேத்தியை கை பிடித்து அழைத்து சென்றார்.

அவர்கள் சென்றதும் கதவடைத்து வந்தவன்…

“உன் மனசுல என்ன தான் இருக்கு.. சொல்லு.. எழுந்ததில் இருந்தே முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க.. சொல்லுடி..”

வாயை அழுந்த மூடிக் கொண்டு எதுவும் பேசாமல்அழுத்தமாக நின்றாள். அவளின் பிடிவாதமாக இறுக்கமான முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளின் அருகில் நெருங்கி…

“ என்னடா குட்டிம்மா.. சொன்னா தானே தெரியும்..” என்றான் கனிவாக..

அப்பவும் அமைதியாக நின்றாள் லேசாக கண்கள் கலங்க..

அவளை இழுத்து அணைத்தான். அவன் கைகளுக்குள்அடங்காமல் திமிறி விடுபட்டவள்…

“எப்ப பாரு.. உங்களுக்கு உங்க சுகம் தான் முக்கியம்.. என்னைக்காவது என்னை பத்தி யோசிச்சு இருக்கறிங்களா.. அப்பவும் இல்லை.. இப்பவும் இல்லை..” என வெடித்தாள்.

“என்னது என் சுகமா.. உன்னை கட்டாயப்படுத்தி நான் யூஸ் பண்ணிகிட்ட மாதிரி சொல்லற…”

“ஆமாம் அப்படி தான் பண்ணுனிங்க.. இங்க வா.. அங்க வானு.. என்னை புரிஞ்சுக்காம எவ்வளவு கஷ்டப்படுத்தினிங்க..”

“உனக்கு பிடிக்கலைனா.. பிடிக்கலைனு சொல்லிட்டு போயிருக்க வேண்டியது தான.. எதுக்குடி நாய்குட்டி மாதிரி பின்னாடியே வந்த..”

தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுபவனிடம் என்ன பேச.. இவன் எப்பவும் என்னை புரிந்து கொள்ளமாட்டான் என பார்த்தாள்.

அவளின் பார்வையில் என்னவோ இருக்கு என நினைத்து.. அவளிடம் கொஞ்சம் தணிந்து போனான்.

“எதுனாலும் வெளிப்படையா பேசிடு.. என்னை எதாவது கேட்கனும்னாலும் கேட்டுரு..”

“நான் என்ன உங்க பின்னாடியே நாய் மாதிரி உங்க பணத்துக்காக வந்தேனா.. என்னயும் உங்ககிட்ட இளையற மத்த பொண்ணுங்க மாதிரி நினைச்சிங்களா.. ..” என கோபமாக கேட்க..

“ச்சீச்சீ.. என்னடி பேசற.. நீயும் மத்தவங்களும் ஒன்னா..”

“நான் என்ன ஸ்பெஷல் உங்களுக்கு.. நீங்க கூப்பிட்ட இடத்துக்கு அவங்களும் வந்தாங்க.. நானும் அப்படி தானே வந்தேன்.. உங்களுக்கு சலிப்பு தட்டியதும் என்னை வேணாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டிங்க…”

“வேணாம் வர்ஷி.. உன் வசதிக்கு தகுந்த மாதிரி மாத்திப் பேசாத.. நான் ஒன்னும் உன்னை பொய் சொல்லி ஏமாத்தலையே.. புடிச்சிருக்க வரைக்கும் ரிலேஷன்ஷிப்ல இருப்போம்.. வேணாம்னு நினைக்கிற போது கட் பண்ணிக்கலாம்னு சொல்லி நீ ஓகே சொன்னதும் தானே நான் உன்னை டச் பண்ணினேன். அதுவும் நீ கல்யாணம் பத்தி பேசவும் தான் நமக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சோம்..”

“ஆமாம் நீங்க எப்பவும் கரெக்ட் தான்.. நான் தான் தப்பு போதுமா… நான் உங்களை லவ் பண்ணினேன் பாருங்க அதான் எல்லாத்தையும் விட பெரிய தப்பு..” என பாப்கார்னாக பொரிந்தாள்.

மறுபடியும் பேச்சு சண்டைக்கு இழுத்து செல்வதை உணர்ந்தவன்.. அவளை பிடித்து இழுத்து சோபாவில் அமர வைத்தவன் அவளருகே தானும் அமர்ந்தான்.

“சொல்லுடா.. நீ சொன்னா தானே தெரியும். நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்கிட்ட கேட்டு சண்டை வேணாலும் போடு.. ஆனால் பேசாம மட்டும் இருக்காத..”

“நீங்க உங்க பொண்ணுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டிங்களா..”

“ப்ச்ச.. இவ்வளவு தான் நீ என்னை புரிஞ்சுகிட்டதா.. நான் முதல் முதல்ல என் ஆபீஸ்ல உன்னைபார்த்ததும் ஒரு அட்ராக்‌ஷன்.. நீ பண்ணின சேட்டை.. உன் சிறுபிள்ளைதனமான பேச்சு எல்லாம் எனக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு உண்டாக்குச்சு.. நான் ஜெர்மன்ல இருந்தப்ப அந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருந்தது. வயிற்றுப் பசி போல தானே உடல்பசியும் அதுக்கு எதுக்கு கல்யாணம்… என் ப்ரண்ட்ஸலாம் லிவிங்ல இருக்கும் வரை சந்தோஷமா இருந்திட்டு சுமூகமா பிரிச்சிடுவாங்க.. அதை பார்த்த எனக்கு வாழ்க்கையை எவ்வளவு ஈஸியா வாழ்றாங்க… நம் நாட்ல தான் கல்யாணம் குடும்பம் ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்.. சுலபமா வாழ வேண்டிய வாழ்க்கையை எதுக்கு இப்படி கட்டுப்பாடுகளோட வாழனும்னு தோணிச்சு… அதனால தான் அம்மா எவ்வளவு கட்டாயப்படுத்தியும் கல்யாணம் பண்ணிக்கல.. உன் அளவுக்கு என்னை எந்தபொண்ணும் ஈர்க்கல… உன்னை பார்க்கும் வரைக்கும் என்னோட பெட் ஷேர் பண்ணிக்க பெண் தேவையா இருந்துச்சு..”

அவனுக்கு மற்ற பெண்களோடான பழக்கம் தெரியும் தான். இருந்த போதும் ஒரு மனைவியாக அதை அவன் வாய்மொழியாக் கேட்கும் போது மனம் வலிக்க தான் செய்தது. அவளின் முகம் பார்த்து பேசியவனுக்கு அவளின் எண்ணவோட்டம் புரிய.. அவளின் தோளில் கைப் போட்டு அணைத்து தட்டிக் கொடுத்தான்.

“ஆனால் நீ என் ஆபீஸ்க்கு வந்த பிறகு உன்னை பார்க்க.. பாரக்க… என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ண… எந்த நேரமும் உன்னை கண் பார்வைக்குள்ள வச்சுக்கனும் தோனுச்சு… அதனாலதான் என் ரூம்ல உனக்கு ஒரு கேபின் போட்டேன்.. உன் மேல ஒரு விருப்பம் வந்த பிறகு வேற பொண்ணுங்கள நான் தேடிப் போகல.. அப்ப அது எனக்கு ஏன்னு புரியல… பிடிச்சிருக்கு சேர்ந்து இருப்போம்… விருப்பம் உள்ள வரை வாழ்வோம்
பிடிக்காத போது சுமூகமா பிரிஞ்சிடலாம்னு தான் நினைச்சேன்..”

மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன்.. தன்மனதில் உள்ளதை எல்லாம் கொட்டினான்.

“உன் கூட நான் இருந்த போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு மனசு இறக்க கட்டி பறந்துச்சு.. எந்த பொண்ணுங்ககிட்டயும் கிடைக்காத ஏதோ ஒன்னு எனக்கு நீ கொடுத்த… அந்த பீலிங் எனக்கு பிடிச்சிருந்துச்சு.. அதனால தான் உன்னை நான் அடிக்கடி வா போகலாம்னு தொல்லை பண்ணினேன்… கடைசியா நீ கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டப்ப… எனக்கு பயங்கர கோபம்.. எல்லாம் சொல்லி தானே நாம இவ கூட பழகினோம்.. நம்ம வீக்னஸை பயன்படுத்தி நம்ம கூட செட்டில் ஆக பார்க்கறாளானு…”

தேவர்ஷி அவனை முறைத்துக் கொண்டே “நான் சுந்தரமூர்த்தி பேத்தி.. நான் உங்களை உங்களுக்காக மட்டும் தான் லவ் பண்ணினேன்.. உங்க பணத்துக்காக இல்லை” என்றாள் சுள்ளென்று..

“நான் அப்படி நினைக்கறதுக்கும் நீ தான் காரணம்.. என்னைக்காவது என்கிட்ட உன் பேமிலி பத்தி சொல்லியிருக்கறியா… எப்ப பாரு வீட்ல திட்டுவாங்க… பர்மிஷன் கொடுக்கமாட்டாங்கனு கட்டுப்பெட்டி தனமா சொல்லிட்டே இருந்தியா.. அதான் அப்படி நினைச்சேன்…”

“நாளைக்கு உங்க பொண்ணுகிட்ட ஒருத்தன் கேட்டா.. நீங்க என்ன பண்ணுவிங்க.. பர்மிஷன் கொடுத்து போய்ட்டு வாம்மானு வழி அனுப்பி வைப்பிங்ங்களா..”

“அதெப்படி பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போகட்டும்..” என்றான் வேகமாக..

“உங்க பொண்ணு உடனே வேகமா மறுப்பு வருது.. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம்… ஊரான் பொண்ணுக்கு ஒரு நியாயமா…” என கோபப்பட..

“வர்ஷி்ம்மா.. கூல் டவுன்… நான் பழைய அனிவர்த் இல்லை… அப்ப நான் அப்படி தான் இருந்தேன்.. ஆனா இப்ப அப்படி இல்லை நீ புரிஞ்சுக்கனும்… ஆனால் நீ சண்டை போட்டுட்டு போனதுக்கப்புறம் அப்படி ஒரு கோபம்… போடி நீ இல்லைனா எனக்கு வேற பொண்ணுங்க… என்ற வீம்பு…”

“அப்போ உங்களுக்கு நான் போயிட்டேன்ற வருத்தமே இல்லையா…” என இவனுக்கு நான் ஒன்றுமே இல்லையா… என்ற மனகிலேசம் அவளிடம்…

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் மனது புரிய… அவளின் வருத்தம் தாங்காமல்..

“டேய் குட்டிம்மா..” என அவளை தன் முகத்தின் அருகே இழுத்து இன்ஸ்டன்டா ஒரு இதழ் முத்தம் பதித்தான்.

33 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

என் மோகக் தீயே குளிராதே 25

அத்தியாயம் 25   “ஹேய் ஹரி சார்.. எதுக்கு நம்ம எல்லோரையும் கூப்பிட்டுருக்காரு?”   “தெரியலையே?! ஏதாவது புது ப்ராஜெக்ட் கிடைச்சுருச்சா?”   “ப்ச்.. தேவையில்லாம நம்ம எல்லோரையும் எதுக்கு கூப்பிடப்போறாரு?”   “சரி.. சரி.. சீக்கிரம் வா.. போகலாம்.. இல்லேன்னா அதுக்கும் திட்டு விழும்..” என்றவாறே அலுவலகத்தில் இருந்த அனைவரும் ஹரிஷான்த் முன்னே வந்து நிற்க,   “இந்த ஹாசினி எதுக்கு ஹரி சார் கூட நிற்குறா?” என்றவாறே அசோக்கும் அங்கு வந்து நிற்க, என்னவென்று

என் மோகக் தீயே குளிராதே 25 Read More »

7C972E0A-AB1E-4951-B286-48B675BD2A73

32 – ஆடி அசைந்து வரும் தென்றல்

32 – ஆடி அசைந்து வரும் தென்றல்

கௌசல்யா வந்தவர்களை வரவேற்று உபசரிப்பு எல்லாம் முடியவும்..

அனிவர்த மடியில் வைத்திருந்த மகளை எடுத்துக் கொண்டு.. ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த தேவர்ஷியிடம் சென்று அவளை கைபிடித்து அழைத்து வந்தவன் குடும்பமாக சுந்தரமூர்த்தி காலில் விழுந்து வணங்கினான்.

“தாத்தா.. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க..” என காலில் விழுக.. சுந்தரமூர்த்தி மொத்தமாக அவனின் வலையில் விழுந்துட்டார்.

எல்லோருக்கும் அவனின் சாமர்த்தியத்தில் மெச்சுதலான புன்னகை..

கங்காவோ ‘அடப்பாவி ஒரே பால்ல மொத்த விக்கட்டையும் அவுட் பண்ணிட்டானே..’ என பார்த்திருந்தார்.

கங்கா தான் பேச்சை ஆரம்பித்தார்.

“ஏதோ வயசு கோளாறுல எல்லாம் தப்பும் தவறுமா பண்ணிட்டாங்க.. அப்பவே நம்மகிட்ட சொல்லியிருந்தா.. சரி பண்ணியிருக்கலாம்.. சரி விடுங்க நடந்ததை பத்தி பேசி சங்கடப்படுத்திக் கொள்ள வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம்..” என கேட்டார்.

பெரியவர்கள் எல்லாம் கலந்து பேசி குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ள கோவிலில் வைத்து கல்யாணம்.. தொழில் முறையில் ஒரு வரவேற்பு என முடிவு செய்ய…

தேவர்ஷியோ “ரிசப்ஷன் மட்டும் போதும்.. அதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுல்ல..” என மறுத்தாள். ஐந்து வயது மகளை வைத்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ள மனம் குறுகி போனது.

வந்ததில் இருந்து சரண் அனிவர்த்தை முறைத்து கொண்டிருந்தவன் தேவர்ஷியின் பேச்சில் இன்னும் கூடுதலாக முறைத்தான்.

‘இவ அண்ணங்காரன் ஏற்கனவே ரொம்ப பாசமா பார்க்குறான்.. இதுல இவ வேற இன்னும் உசுப்பேத்தற மாதிரியே பேசறாளே..’ என நினைத்தவன் கங்காவை பார்த்தான்.

கங்கா ஆபத்துபாந்தவனாக அனிவர்த்தை காப்பாற்றும் விதமாக..

“நாங்க எல்லாம் உங்க கல்யாணத்தை பார்க்கலைல தேவா.. எங்களுக்காக கல்யாணம் வச்சுக்கலாம்.. என்னம்மா சரினு சொல்லு..”

வேறு வழியில்லாமல் கங்காவின் பேச்சை தட்ட முடியாமலும் தன் குடும்பத்திற்காகவும் சம்மதம் சொன்னாள்.

தேவர்ஷியின் குடும்பத்தில் அனிவர்த்தை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவனது தொழில் சாதுரியமும் சாமர்த்தியமான பேச்சும் கண்டு தங்கள் மாப்பிள்ளை என பெருமை வேறு..

இது எல்லாம் சேர்ந்து தேவர்ஷியை தான் திட்டினர். மாப்பிள்ளைய சரியாக புரிந்து கொள்ளாமல் இத்தனை வருடம் வாழ்க்கையை வீண் பண்ணி வச்சிருக்க.. இனியாவது ஒழுங்காக அனுசரித்துப் போ..

நல்லவன் மாதிரி காரியத்தை சாதித்துக் கொண்டதோடு அல்லாமல் தனக்கும் பேச்சு வாங்கி வைத்துவிட்டானே என மீண்டும் கோபம் தலை தூக்கியது தேவர்ஷிக்கு..

அந்த வாரத்திலேயே ஒரு முகூர்த்தநாள் பார்த்து திருமணத்தை கங்கா தங்கள் குலதெய்வ கோவிலில் வைத்தார்.

அம்மன் சன்னதியில் அனிவர்த் தேவர்ஷி கழுத்தில் இரண்டாவது முறையாக.. தான் அறிந்து உள்ளம் நிறைவோடு… குடும்ப உறவுகள் சூழ.. முழு மனதாக அந்த அ்ம்மனை வேண்டி மங்களநாணை பூட்டினான்.

தாலி கட்டியதும் மகளை வாங்கி கொண்டவன் மகளோடே எல்லா சம்பிரதாயங்களும் முடித்து பெரியவர்களிடம் குடும்பமாக ஆசி பெற்றான்.

தேவர்ஷி யாரிடமும் சகஜமாக பேசவில்லை. ஏனோ மனம் சஞ்சலமாக இருந்தது. ஆனால் அவன் தாலி கட்டிய அந்த நொடி மனதில் ஒரு எல்லையில்லாத நிம்மதி தோன்றியது. என்னவோ இத்தனை வருடம் மனதின் ஒரு ஓரத்தில் முணுமுணுவென இருந்த வலி கரைந்து காணாமல் போனது.

அன்று மாலையே வரவேற்பு.. இரு பக்கமும் உறவுகள் தொழில்முறை நண்பர்கள் என அந்த பெரிய மண்டபம் நிறைந்து வழிந்தது.

அனிவர்த் தேவர்ஷி மகளோடு தான் மேடை ஏறினர். மூவரும் ஒரே மாதிரி கருநீல வண்ணத்தில் உடை அணிந்து இருந்தனர். பார்த்தவர்களுக்கு கண்ணையும் கருத்தையும் நிறைத்தது. கூட்டத்தை பார்த்து சற்று மிரண்டு போயிருந்தாள் தேவர்ஷி. என்னன்ன பேச்சுக்கள் வருமோ..

ஆனால் அனிவர்த்கு அந்த கவலை எல்லாம் இல்லை. அவன் தான் அழகாக ஒரு கதை பரப்பி இருந்தானே..

காதலித்தோம்.. பெற்றவர்களுக்கு பயந்து ரகசிய திருமணம் செயது கொண்டோம். இன்று பேத்திக்காக ஏற்றுக் கொண்டார்கள் என ஒரு காதல் கதையை கேட்டவர்கள் அச்சோ பாவம் என நினைக்க வைத்திருந்தான்.

தேவர்ஷியின் வாட்டத்தை கண்டவன்… தோளில் கை போட்டு லேசாக அணைத்தவன்..

“ஹேய் குட்டிம்மா.. நம்ம வாழ்க்கையின் அழகான மொமண்ட்ஸ்.. பின்னால நினைச்சு பார்ரக்க ஸ்வீட் மெமரிஸா இருக்க வேண்டியது இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க.. சந்தோஷமா இருடா…” என்றான் வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவன் பேச்சு..

அவனின் அரவணைப்பில் அனுசரணையில் மெலிதான நீர்படலம் அவளுள்.. அவன் மீது மனத்தாங்கலும் உண்டு. இவனுக்கு சாதகமாக நடத்திக் கொண்டானே..

“ப்ச்ச் பாரு போட்டோ எடுக்கறாங்க.. அழுமூஞ்சியா நிற்பியா..” என தானே டிஷ்யூ கொண்டு மேக்கப் கலையாமல் கண்ணீரை ஒற்றி எடுத்தான். அவனின் கரிசணை எல்லாம் அவளின் கருக்கலை கரைத்திட.. அதன் பிறகு அவளும் மகிழச்சியாகவே வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

ஷாஷிகா தன் உறவில் இருந்த தன் நண்பர்களை அழைத்து வந்து “இது தான் எங்க அப்பா..” என காண்பிக்க.. மகளின் ஏக்கமும் சந்தோஷமும் மகளுக்காக யார் என்ன பேசினாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க வைத்தது இருவரையும்…

நிகழ்ச்சி முடிந்து வீடு வர பின்னிரவு ஆகிவிட.. அந்த நேரத்திலும் கங்கா ஆலம் சுற்றியே மகன் குடும்பத்தை அழைத்துக் கொண்டார். அனிவர்த் கையில் இருந்த ஷாஷிகாவை தன்னோடு வைத்துக் கொண்டு மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்கலாம் என நினைத்து பேத்தியை வாங்க போக.. இளையதோ அரை தூக்கத்தில் தகப்பனின் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதது.

தாயின் எண்ணத்தை புரிந்த அனிவர்த் மகளை தட்டிக் கொடுத்தவாறே.. “பரவாயில்லை விடுங்கமா.. நாங்க பார்த்துக்கிறோம்..” என தன் அறைக்கு தேவர்ஷியோடு சென்றுவிட..

கங்கா எப்படியோ நல்லா இருந்தாங்கனா சரி என நினைத்து கொண்டார்.

ஷாஷிகா சிணுங்கிக் கொண்டே இருக்க.. தேவர்ஷி அணைத்துக் கொண்டு உறங்க வைக்க.. மகள் நன்றாக தூங்கும் வரை அவர்களை பார்த்தவாறே ஷோபாவில் அமர்ந்திருந்தவன்.. மகள் உறங்கியதும் மகளை அணைத்து படுத்திருந்த தேவர்ஷியை பின்னோடு அணைத்தான்.

தேவர்ஷியோ இதனை எதிர்பார்த்திருந்தவள் போல அவன் அணைக்கவும் அவனை பிடித்து தள்ளிவிட்டாள். தன் உள்ள கிடக்கை எல்லாம் கோபமாக அவனை எதிர்ப்பதில் காண்பிக்க.. சற்று நேரம் இருவருக்குள்ளும் தள்ளு முள்ளு போராட்டம் தான்.

அனிவர்த்திடம் இவளின் எதிர்ப்புகள் எல்லாம் எடுபடுமா… அவளை மயக்கும் வித்தை அறிந்தவனாயிற்றே.. மயங்க வைத்தான் மயங்கி போனான்…

ஒரு கட்டத்தில் அவளை இழுத்து அணைத்து அவள் கோவ்வை பழ இதழை வலுவாக கடித்து அவளின் வாய் அமிர்தத்தை இழுத்து உறிஞ்சு பருகினான். அவள் மூச்சுக்கு தவிக்கும் வேளையில் அவளின் இதழுக்கு விடுதலை கொடுத்தவன்..

தன் உதடு என்னும் தூரிகை கொண்டு தனது உமிழ்நீரின் குளிர்ச்சியை வர்ணங்களாக அவள் உடல் எங்கும் தீட்டினான். தீட்ட.. தீண்ட.. அவளின் மன வெக்கை தணிந்து.. உடல் வேட்கை அதிகரிக்க… அவளாகவே அவனை இழுத்து அணைத்தாள். மனைவியின் ஒப்புதலில் மனம் குத்தாட்டம் போட.. அவள் முகம் எங்கும் சின்ன முத்தங்கள் இட்டான்… கழுத்து நரம்புகளை நுனி நாக்கில் வருடி கொடுத்தவன்.. அவனின் நாவின் குறும்பில் தொண்டை குழி ஏறி இறங்க..

அவளோடு தன்னை இறுக்கி பிணைத்தவன் குட்டி குட்டி முத்தங்கள் கொடுத்து சாரலாக ஆரம்பித்து.. பின் வேகமெடுத்து மூச்சு வாங்க அவள் கழுத்தை வலிக்க கடித்து… இறுதியில் அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி பனிதூறலாக தன் காதல் மழையில் அவளை நனைத்தான்.

ஆறு வருடங்களாக அவளிடம் பெற்ற காதல் சுகத்தை எங்கெங்கோ தேடி திரிந்து கிடைக்காமல் மழை நீருக்காக ஏங்கும் சாதகபறவை போல தவித்து கிடந்தவன் மீண்டும் அவளிடம் பெற்ற பிறகே அவனின் காதல் மனம் தவிப்பு அடங்கி.. சாந்தி அடைந்தது…

அனிவ்ரத் தேவர்ஷியை அணைத்தவாறே வெகுநாள் கழித்து நிம்மதியாக உறங்கி போனான்.

உறங்குபவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் தேவர்ஷி.. ஆறு வருடங்கள் பாரக்க ஆசைப்பட்ட முகம்.. பார்க்ககூடாது என பிடிவாதமாக மனதை அடக்கி வைக்க காரணமான முகம்… காதலாக கசிந்துருகாத விழிகள்… தனிமையான நேரங்களில்.. சோர்வான பொழுதுளில்.. அணைத்து ஆறுதல் தராத கைகள்.. வலிக்க வலிக்க பிள்ளை பெறும் போது துணையாக நிற்காத கால்கள்… இப்படியான எண்ணங்கள் தான் உச்சி முதல் பாதம் அவனை அவனை பார்க்கும் போது அவளுக்கு தோன்றியது.

ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது. அவனுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் தேவை தன் உடலோடான உறவு மட்டுமே.. மனதோடு உறவாடமாட்டான். அவனுக்கும் என் மீது காதல் என்றான். அந்த காதல் இது தானா.. இத்தனை வருடங்கள் என்ன செய்தாய்..என கேட்டானா.. பிள்ளைக்காக வந்தான். நான் ஏமாற்றியதாக சொன்னான். திருமணம் முடித்தான். இப்போ தன் தேவையை முடித்துக் கொண்டான். நிம்மதியாக தூங்கிவிட்டான். என்று தான் என் பக்க நியாயத்தை யோசித்தான் இன்று யோசிக்க.. என நினைத்தாள் ஒரு கசந்த முறுவலோடு..

ஏன் காதல் இல்லாமலா.. சற்று முன்பு ஆயிரம் குட்டிம்மாவால் அர்ச்சித்தானா.. என மனம் கேள்வி எழுப்ப… அப்போதும் அப்படி தான் இருந்தார் அது காதலா..என வாதிட்டாள்.

அது காதல் தான் அதை அவன் உணராமல் இருந்திருக்கலாம்.. அவன் காதலை நீ உணரவில்லை என்று சொல்லுப் பார்க்கலாம்.. அவர் பழகிய பெண்களிடம் எல்லாம் அப்படி தான் இருந்திருப்பார் என மறுப்புரைத்தாள்.

அவன் பழகிய பெண்களும் நீயும் ஒன்னா.. உண்மையை சொல்லு உன்னை மற்ற பெண்களை போலவா நடத்தினான். என்னை என்ன நேசிக்கிறேனா சொன்னார்.. பிடித்தம் உள்ள வரை சேர்ந்திருப்போம் என்று தானே சொன்னார்.. என மல்லு கட்டினாள்.

அந்த பிடித்தமே உன்னிடம் மட்டும் தானே வந்தது.. நீ என் மனசாட்சி தானா.. என்னுள்ளே இருந்து கொண்டு அவருக்கு வாதிடுகிறாய் என சண்டை பிடித்தாள்..

உன் நல்லதுக்கு தான் சொன்னேன்.. கேட்டால் கேளு கேட்காட்டி போ.. என உள்ளே பதுங்கிவிட்டது..

பலவாறாக அவனுக்கு தன் மேல் ப்ரியம் இருக்கா இல்லையா என யோசித்து யோசித்தே ஒரு கட்டத்தில் உடலும் உள்ளமும் சோர்வுற உறங்கிவிட்டாள்.

தேவர்ஷி காலையில் கண் விழித்ததே அப்பா மகள் பேச்சு சத்தத்தில் தான்.. பார்ததும் பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு…

அனிவர்த் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்க.. ஷாஷிகா அவனின் முன் நின்று அவனுக்கு தலை வாரி தன் ஹேர்கிளிப்பை குத்தி விட்டுக் கொண்டிருந்தது.

“ப்பா.. கிளிப் போட்டாச்சு.. அடுத்து பவுடர் பூசனும்.. பொட்டு வைக்கனும்..”

“ம்ம்ம் சரிடாம்மா..” என மகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அமர்ந்திருந்தான்.

தேவர்ஷி அனிவர்த்தை முறைத்துக் கொண்டே குளியலறைக்கு சென்றாள். மனைவி எழுந்ததும் அவளையே தான் பார்த்திருந்தான். சதா சர்வகாலமும் கடல் அலையென ஆர்பரித்த அவன் மனம் முன் தினம் நடந்த கூடலினால் ஆழ்கடல் போல அமைதியாக சாந்தமடைந்துவிட்டது.

தன்னை போலவே அவளுக்கும் தன்னி(இ)டம் சேர்ந்த நிம்மதி இருக்குமா என ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு.. அதை மனைவியின் முகம் பார்த்து படிக்க முயன்றான். ஆனால் அங்கோ எதிர்மறையான பதிலே கிடைக்கவும்.. என்னவோ தெரியலையே என்ற குழப்பம் மனதில் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.

உடல் மகளின் செயலுக்கு ஒத்துழைக்க.. மனம் மனைவியின் செயலில் சண்டிதனம் செய்தது…

குளியலறையே பார்த்திருந்தான்.. தேவர்ஷி வரவும் அவளை விடாமல் உற்றுப் பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் மகளை கவனிக்க வந்தாள்.

.

32 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

ei5KQWC72213

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 4, 5,6&7

காதல்காரா-4  அது..நம் வீர ராகவன்.. தலைவியாளின் மெய்க்காவலனாக நியமிக்கப்பட்டிருந்த பிரதம நாள்!! நேரமோ.. இரவு பதினொன்றரை மணியைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கலானது.   அவள் அன்றிரவு இருந்த இடத்திலேயே ‘காப்பாளனாக’ தானும் நின்றிருந்தான் ராகவன்!!    நாயகி பூஜாவும்.. நேரம் கடந்து சென்று விட்டிருந்த போதிலும்.. வீட்டுக்குச் செல்லாமல்.. தன் நெருங்கிய தோழியான துவாரகாவின் வீட்டில்.. இன்னும் தங்கியிருந்து கொட்டமடித்துக் கொண்டேயிருக்கலானாள்.    தோழி துவாரகா ஒன்றும்.. பூஜாவைப் போல மல்ட்டி மில்லியனரின்.. ஏகப் புதல்வியோ.. தனவந்திரியோ

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 4, 5,6&7 Read More »

7911868A-2E61-431E-BD0A-B8C6423266D2

31 – ஆடி அசைந்து வரும் தென்றல்

31 – ஆடி அசைந்து வரும் தென்றல்

உன் மனதிலும் எனக்கான காதல் உண்டு… அதை நீ உணர்ந்து என்னிடம் வந்து சேரும் வரை என் காதலும் காத்து கிடக்கும்.. என்ற மனநிலையில் தான் எப்போதும் அவள்…

கோபமாக இருப்பாள்.. எப்படியாவது பேசி சரி கட்டி விடலாம் என நினைத்து வந்தவனுக்கு அவளின் அழுகையை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் வலிக்கவே.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் பண்ண ஆரம்பித்தான். அப்பவும் உதடு பிதுக்கி தேம்பிக் கொண்டு அழுதாள்.

பிதுங்கிய உதடுகளை பார்த்ததும் அவனுள் காதல் ரசவாதம்… இழுத்து வைத்து தன் வாய்க்குள் அதக்கி கடித்து வலிக்க சப்பினான். மெல்ல விசும்பல் குறைந்து சின்ன காதல் ஒசும்பல் அவளிடம்… அவளின் அணைப்பு இறுகி.. மனம் இளக.. இப்பவும் தன்னிடம் கிறங்கி போகும் தன் கந்தர்வ காதலியை கண்டு கர்வம் தான்..

தேவர்ஷியின் உடலும் மனதும் அனிவர்த்தின் காதலில் சற்று இளைப்பாற.. மனம் தெளிவுற…சட்டென அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.

“என்னடி..” என்றான் மனத்தாங்கலோடு..

“அத்தையை கேட்கனும்..” என்றாலே பார்க்கலாம்…

“என்னாது.. அத்தையை கேட்கனுமா…” என்றான் அதிர்ந்து..

“ஆமாம்.. ஊருக்கு வந்ததும் நேரா உன்னை தேடி தான் வருவான்.. பேசி மயக்கி அவன் பாட்டுக்கு உன்னை தாளம் போட வைப்பான்… நம்பிடாத.. இத்தனை வருஷம் உன்னை கஷ்டப்பட விட்டான்ல.. கொஞ்ச நாளைக்கு அவனை தாராட்டுல விடுவோம்.. என்னை கேட்காம அவன்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட கூட சேர்க்ககூடாதுனு சொல்லிருக்காங்க..” என சொல்லி அவனை விட்டு இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தாள்.

அனிவர்த் கடுப்பாகி போனான். என்ன ஒரு கொழுப்பு…மாமியாருக்கும் மருமகளுக்கும்… கங்காம்மா… ஒன்னும் தெரியாத என் பொண்டாட்டிக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்கறியே…

“உனக்கு ஏத்தம் அதிகமாகி போச்சுடி.. இந்நேரம் வரைக்கும் கட்டி பிடிச்சு அழுகும் போது உங்க அத்தை சொன்னது நினைப்பு வரல.. பொண்டாட்டி அழுகறாளே.. ஏதோ நமக்கு தெரிஞ்ச மாதிரி நம்ம ஸ்டைல்ல சமாதானப்படுத்தலாம்னு பார்ததா.. இப்ப தான் உங்க அத்தை சொன்னது மண்டைல மின்னுச்சாக்கும்..” என திட்டினான்.

முகத்தை துக்கி வைத்து கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டாள். அவள்கிட்ட நெருங்கி அவளை வலுகட்டயமாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ம்ம் சொல்லு.. எனக்கு தெரியாம நானே கட்டின தாலியை பத்தி..”

தேவர்ஷி கழுத்து வரை மூடியிருந்த பிளவுஸிற்குள் இருந்த செயினை எடுத்துக் காட்டினாள்.

“ஹேய்.. இது பொன்முடில நான் உனக்கு போட்ட செயின் தான..”

ஆமாம் என தலை அசைத்தாள். செயினை கையில் எடுத்துப் பார்த்தவன்..

“இதையா.. தாலிங்கற..” என்றான் சந்தேகமாக..

அவனையே பார்த்தவாறு…”இது மங்கள்சூத்ரா..”

அவளை புரியாமல் பார்த்தான்.

“இது கேரள தாலி..”

ஒரு நிமிடம் அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.ஆச்சரியம்.. ஆசுவாசம்..ஒரு நிம்மதி.. என.. எல்லாம் கலந்த ஒருகலவையான உணர்வு.. மெல்ல மெல்ல இதை எல்லாம் அழுத்திக் கொண்டு வந்தது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கா தக்கையாக..

எப்பவும் அனிவர்த் பொறுப்பானவன். தன் பொறுப்புகளையோ கடமைகளையோ தட்டி கழிப்பவன் அல்ல.. அவனின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் எப்படி இருந்த போதும் மகனாக தன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதில்லை. ஒரு தகப்பனாக தன் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்யவிடாமல் தன் மகளை எத்தனை இடங்களில் தவிக்க விட்டோமோ.. அது எல்லாம் இவளால் தானே.. கர்ப்பம் என சொல்லியிருந்தால் விட்டு இருக்கமாட்டேனே.. எல்லாம் மறைத்து ஆறு வருடங்கள் கண்ணில் படாமல் இருந்து கொண்டு என்னை குற்றம் சொல்லுகிறாள்… என நினைக்க நினைக்க கோபம் மிகுந்தது.

“ஏன்டி.. என்னை ஏமாத்தி தாலிய கட்டிட்டு.. எனக்கு தெரியாம புள்ளையும் பெத்துட்டு.. ஆறு வருசமா அதையும் மறைச்சிட்டு நான் உன்னை ஏமாத்திட்ட மாதிரி பில்டப்பு பண்ணி வச்சிருக்க.. உன்னை வர கோபத்துக்கு..” என அடிக்க கையை ஓங்க.. பயந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள்.

அவள் பயத்தில் ஓங்கிய கையை சுவற்றில் இறக்கினான்.

“ஏன்டி.. இப்படி பண்ண.. சொல்லு.. என் பிள்ளைய அப்பன் பேரு தெரியாத பிள்ளைனு எத்தன இடத்துல அசிங்கபட விட்ட.. என் பொண்ணு அப்பாங்கற உறவுக்காக ஏங்க வைச்சுட்டில்ல.. என்கிட்ட ஒருதடவை பேசியிருக்கலாம்ல… எதையும் என்கிட்ட சொல்லாம எதுக்குடி மறைச்ச சொல்லு.. என்கிட்ட சொல்லாம நீயா எப்படி முடிவு பண்ணலாம்… எனக்கு கல்யாணம் பிடிக்கலைனு சொன்னேன் தான்.. அதுக்காக குழந்தை இருக்குனு தெரிஞ்சா.. வேண்டாம்னு கை கழுவ நான் என்ன அவ்வளவு தரங்கெட்டவனா… அவ்வளவு தூரம் பழகி என்னை பத்தி நீ தெரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா.. ஏன் இப்படி பண்ண சொல்லு..” மகளை பற்றி பேசும் போது இயலாமையில் தவிப்பாக பேசியவன்.. கடைசியாக அவள் மீது கொண்ட கோபத்தில் உறுமினான்.

அவனின் கோபம் கண்டு அரண்டு போனாள். பயத்தில் அவனிடம் எல்லாம் ஒப்புவித்தாள். அவனோடு சண்டை போட்டு வந்த பிறகு அவனை பற்றி தான் நினைத்தது.. அதன் பிறகு வீட்டில் நடந்த எல்லாவற்றையும் வேகமாக சொல்லி முடித்தாள்.

“இது வரைக்கும் நீ நினைச்சது.. பண்ணியது எல்லாம் போதும்… இனி நான் சொல்லறது மட்டும் தான் கேட்கற.. செய்யற…” என விரல் நீட்டி மிரட்டினான். தன் போல் அவள் தலை சம்மதம் சொன்னது..

அறையை விட்டு வெளியே வந்தவன் திருகுமரனிடம் “அப்பா அம்மாவை கூட்டிட்டு கொஞ்ச நேரத்தில் வரேன்.. உங்க வீட்ல போய் பேசலாம் மாமா..” என சொன்னவன் மகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

மகளோடு வீட்டிற்கு வந்த அனிவர்த்தை கண்டு கங்காஆசையாக மகனையும் மகன் கைகளில் தாங்கி நின்ற பேத்தியையும் கண்கள் கலங்கி முகம் விசிக்க வாத்சல்யமாக பார்த்து நின்றார். வீட்டின் உள்ளே கால் எடுத்து வைக்கப் போனவனை…

“அங்கயே நில்லுடா..” என்றார்.

புரியாமல் தாயை பார்க்க.. வேகமாக வாசலுக்கு வந்தவர்…

“எங்கடா.. என் மருமக.. உன் புள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்திருக்க..” என்றார் கோபமாக…

“உன் பாட்டிக்கு கோபத்தை பாருடா.. உன் அம்மாவ விட்டுட்டு வந்துட்டமாம்..” தாயின் கோபத்தில் சற்று மிரண்டு பயந்து போயிருந்த மகளை சமாதானம் செய்யும் பொருட்டு.. முதுகை நீவி கொடுத்தவாறே பேசினான்.

பேத்தியின் முகத்தை பார்த்து அமைதியான கங்கா.. அனிவர்த்தை முறைப்பதை மட்டும் விடவில்லை.

“கங்காம்மா என் பொண்டாட்டிக்கு நல்லா தூபம் போட்டு ஏத்தி விட்டு எங்களுக்குள்ள பத்த வச்சிட்டு இப்ப எங்கடா என் மருமகனு ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறிங்க..” என்றான் பதிலுக்கு முறைத்தவாறே..

“ஆமாம்டா.. நீ ரொம்ப நல்லவன்.. உன் பொண்டாட்டி கூட குளுகுளுனு குடும்பம் நடத்தின..நாங்க வில்லி வேல பார்த்து பிரிச்சு வச்சுட்டமோ..”

“குடும்பம் நடத்தாமயா புள்ளை இருக்கு..” என முணுமுணுத்தான்.

“இப்ப என்னடா சொன்ன..”

“கங்கா.. அவனை வாசல்லயே நிறுத்தி எல்லாம் பேசனுமா.. உள்ள வந்ததுக்கு அப்புறம் பேசகூடாதா..” என சிதம்பரம் லேசாக அதட்ட…

“வாசல்லயே வச்சு பேசனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலையா.. அவனை குடும்பமா நிக்க வச்சு ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கனும்னு பார்த்தா.. மருமகளோடு இல்லாம பேத்திய மட்டும் கூட்டிட்டு வந்திருக்கான்..” என ஆதங்கப்பட..

“இப்ப என்ன.. பேத்தியோடு எடு.. மருமக வரும் போது இன்னொருக்கா எடுத்துகிட்டா போகுது..” என சிதம்பரம் சொல்லவும்..

வள்ளி கொண்டு வந்து கொடுத்த ஆரத்தியை ஆலம் சுற்றி மகனை பேத்தியோடு அழைத்துக் கொண்டார்.

உள்ளே வந்தவன் ஷோபாவில் மகளை மடியில் வைத்து கொண்டு அமர்ந்தவன் அவனை கோபமாக பார்த்துக் கொண்ட வந்த கங்காவிடம்…

“போங்க… போய் உங்க பேத்திக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க..” என விரட்டினான்.

அவனின் ஏவலுக்கு எல்லாம் செவி சாய்த்தால் அவர் கங்கா இல்லையே..

அனிவர்த் அருகில் அமர்ந்தவர் மெல்ல ஷாஷிகாவிடம் பேச்சு கொடுத்தார்.

“ஷாஷிகா.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்.. பூஸ்ட்.. ஹார்லிக்ஸ.. என்ன வேணும்.. அம்மா என்ன கொடுப்பாங்க..”

“எனக்கு ஐஸ்கீரிம் தான் வேணும்..”

இப்ப என்ன பண்ணுவிங்க என கங்காவை பார்த்தான் அனிவர்த்.

அதை எல்லாம் அவர் எங்கு கவனித்தார் பேத்தியோடு ஒன்றி போயிருந்தார்.

“தாத்தாவை வாங்கிட்டு வர சொல்றேன். ஆனால் ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உனக்கு கோல்ட் வராதா.. அம்மாவை கேட்கனும்.. அம்மா வரல..” என மெல்ல போட்டு வாங்கினார்.

அனிவர்த் கங்காவை முறைத்து கொண்டே.. “ம்மா..” என மறுப்பாக ஏதோ சொல்ல வருவதற்குள்..

ஷாஷிகா.. ”ப்பா.. அம்மா கூட சண்டை போட்டாங்க.. அம்மா ஒரே அழுவாச்சி.. அம்மா அதான் வரல..” என உதட்டை பிதுக்கி கைகளை விரித்து பேசிய தோரணையில் லயித்து போயினர்.

“என்னடா.. பண்ணின என் மருமகள..” என பாய்ந்தார்.

“நீங்க என்ன சொல்லி கொடுத்திங்க என் பொண்டாட்டிக்கு..”

“ஆமாம்டா.. சொல்லி தான் கொடுத்தேன்.. நீ பண்ணறது எல்லாம் பண்ணிட்டு என் மருமகள கூட்டிட்டு வானு சொன்னா நான் போய் கூட்டிட்டு வரனுமா..”

இவர்கள் சண்டையில் ஷாஷிகா பயந்து அழுகைக்கு தயாராக.. சிதம்பரம் சட்டென பேத்தியை அள்ளிக் கொண்டு..

“செல்லகுட்டி.. நாம ஐஸ்கீரிம் வாங்க போகலாமா..” என கேட்க..

அப்போது தான் ஷாஷிகாவை கவனித்தனர் இருவரும்.. இருவரையும் கண்டிக்கும் பார்வை பார்த்த சிதம்பரம்..

“நான் பாப்பாவை கூட்டிகிட்டு கடைக்கு போறேன். நாங்க வரதுக்குள்ள பேசி முடிச்சிருங்க..” என சொல்லி விட்டு கிளம்பிவிட..

மீண்டும் இருவரும் மோதிக் கொண்டனர். வாக்குவாதங்கள் முற்று பெறாமல் போக…. கங்கவால் மகனின் செயலை மன்னிக்கவே முடியவில்லை. கடைசியில் அனிவரத் தான் கங்காவிடம் தழைந்து போனான்.

“நான் பண்ணினது எல்லாம் தப்பு தான்.. இப்ப என்ன உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனுமா..” என்றவன் சட்டென ஷோபாவை விட்டு இறங்கி தாயின் காலடியில் அமர்ந்து காலை கட்டிக் கொள்ள..

மகனின் செயலில் கங்காவிற்கு தாளவில்லை. மகனின் சிகையை கோதிவிட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்.

அன்னையின் அழுகையில் அனிவர்த் முகமும் கசங்கியது. சடுதியில் தன்னை மீட்டுக் கொண்டவன் எழுந்து மண்டியிட்டவன் கங்காவின் கண்களை துடைத்து விட்டான்.

“மன்னிச்சிடுங்கமா… நான் தேவையில்லாத பழக்கவழங்களால உங்களை ரொம்ப கஷ்டபடுத்திடேன்ல… எனக்கு அது பெரிய தப்பா தெரியல.. ஆனால் எனக்கு வர்ஷி மேல காதல் வந்த பிறகு தான் நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்திட்டு இருந்திருக்கேன்.. என புரிஞ்சுது.. அவ என்கிட்ட காதல் சொன்ன போது நான் அவளை தூக்கி எறிஞ்சு மடத்தனமா என் வாழ்க்கையை நானே சிக்கல் பண்ணிகிட்டேன்.. இப்போ என் பொண்ணை பார்க்கும் போது வாழ்க்கைல எவ்வளவு சந்தோஷங்களை தொலைச்சிட்டேனு இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு.. எனக்கு என் மனைவியும் மகளும் வேணும்மா…” என கேட்ட அனிவர்த்.. பள்ளி படிக்கும் போது சைக்கிள் வேணும்மா என கேட்ட சிறு பையனாக தெரிந்தான் கங்காவிற்கு…

மகனின் வாயில் இருந்து இந்த வார்த்தை வருவதற்கு தானே இவ்வளவு போராடினார். இருந்த போதிலும் அவருக்கு இன்னும் தெளிவு பெற வேண்டி இருந்தது. அனிவர்த்தை பார்த்து..

“உன்னை நம்பலாமா.. பொண்டாட்டி புள்ளைனு குடும்பமாகிட்டா உன்னோட இந்த பழைய வீணான போன கொள்கைய பிடிச்சிட்டு தொங்ககூடாது.. உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா.. உன் புள்ளைக்கு ஒரு நல்ல தகப்பனா.. இருப்பியா.. எல்லா புள்ளைகளுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோ.. உன் பொண்ணுக்கு நீ ஒரு ரோல்மாடலா இருக்கனும் இருப்பியா.. “ என மகன் முன் கையை நீட்டினார்.

அன்னை நீட்டிய கையில் தன் கையை வைத்து அழுத்தியவன்…

“சத்தியமா இருப்பேன் மா.. வர்ஷி தான் என் வாழ்க்கைனு உணர்ந்த போதே.. என்னோட எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுட்டேன்.. உங்களுக்கே தெரியும் தான.. இனி இதுல இருந்து மாறமாட்டேன்..”

இப்போது தான் கங்காவின் மனதில் எல்லையில்லாத நிம்மதி..

“சரி.. நான் போய் நைட் டின்னருக்கு என்னனு வள்ளிகிட்ட சொல்லிட்டு வரேன்..” வேண்டும் என்றே அவனிடம் வம்பு பண்ணும் நோக்கில் சொல்லி விட்டு செல்ல..

“ம்மா.. நாம வர்ஷி வீட்டுக்கு போகனும்..” என பின்னாலயே வந்தான்.

“வள்ளி நீ என்ன பண்ற நைட்டுக்கு சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் பண்ணிடு.. அப்படியே பாப்பாவுக்கு இட்லியும் காரமில்லாம தக்காளி குழம்பும் வச்சிடு..”

வள்ளியோ தாயும் மகனையும் பார்தது சிரித்து கொண்டிருந்தார்.

“வள்ளிக்கா.. எதுவும் செய்ய வேண்டாம் நீங்க கிளம்புங்க…” என்க அதற்கும் அவர் சிரித்து கொண்டே நின்றார்.

“தம்பி.. அம்மா சும்மா உங்ககிட்ட விளையாடறாங்க..”

“ம்மா.. உங்களை..” என்றான் சலுகையாக..

“போடா.. நீ வரங்காட்டிமே சம்மந்தி போன் பண்ணி சொல்லிட்டார். நைட் அங்க தான் சாப்பிடனும்னு..”

“சீக்கிரம் கிளம்புங்கம்மா.. வர்ஷி தாத்தாவை வேற சரி கட்டனும்.. இன்னும் யாரை எல்லாம் சமாளிக்கனுமோ..” என புலம்ப…

“மகனே உன் திருவிளையாடல் மகிமை அப்படி..” என நக்கலடிக்க..

தாயிடம் “எல்லாம் என் நேரம்..” சடைஞ்சு கொள்ள… அந்த நேரம் சிதம்பரமும் ஷாஷிகாவும் கை நிறைய பொருட்களோடு வந்தனர். ஒரு வழியாக அனிவர்த் தன் பெற்றவர்களையும்.. தான் பெற்றவளையும் அழைத்துக் கொண்டு தேவர்ஷி வீடு வந்து சேர்நதான்.

அனிவர்த் குடும்பம் வரும் முன்பே திருகுமரன் தனது தந்தையும் தனது உடன்பிறந்தவர்களையும் வரவழைத்திருந்தார்.

சற்று சங்கடமான சூழ்நிலை தான்.. அறிமுகம் ஆவதற்க்கே சற்று தயக்கமான நிலை..

அனிவர்த் மகளை தோளில் சுமந்து கொண்டு வந்ததை பார்த்தவர்களுக்கு பார்த்ததும் ஒரு மனதிருப்தி..

31 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

8F1167FA-10C7-4040-A577-BE730EEB61BA

30 -ஆடி அசைந்து வரும் தென்றல்

30 – ஆடி அசைந்து வரும் தென்றல்

உடனே திருகுமரனுக்கு அழைத்தான் அனிவர்த். அவர் கடமை தவறாத மாமனாராக சிதம்பரம் கங்கா வந்தது.. கங்கா மயங்கியது.. அப்புறம் கங்காவும் தேவர்ஷியும் தனி அறையில் பேசியது. அதன் பிறகு அனிவர்த் வந்த பிறகு அழைத்து கொள்வதாக சொன்னது எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.

அனிவர்த்டோ எண்ணம் ‘தான் போய் அழைத்தால் தேவர்ஷி வரமாட்டாள். மருமகள் வேண்டும் என ஆசையில் இருக்கும் தாயை வைத்து தன் வீட்டிற்கு வரவழைத்துவிட்டாள் எப்படியாவது அவளோடு வாழ்ந்து விடலாம். அதான் தன் பார்வைக்கே மயங்குவாளே.. ஈசியாக சரி கட்டி விடலாம்’ என நினைத்திருக்க..

‘மாமியாரும் மருமகளும் புது திட்டம் தீட்டி என்னையே மடக்குகிறார்களா.. வரேன் வந்து பாரத்துக்கிறேன்.. என் பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியாது. இந்த கங்கா தான் வில்லி வேலை பார்த்திருக்கு.. கங்காம்மா வந்து பேசிக்கிறேன்… அதற்கு முன்பு தேவர்ஷியை கொஞ்சமாவது மலை இறக்கனும்’

எப்படி என யோசித்தவனுக்கு மகள் தான் கண் முன்னால் வந்தாள். இந்த ஒரு வாரமாக திருகுமரனின் போனில் மகளிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான். அங்கிள் இல்லை அப்பா என மாற்றவே மகளிடம் நிறைய போராடினான். புத்திசாலி குழந்தை… மற்ற குழந்தைகளின் தந்தையோடான உறவை பார்த்து ஏங்கி போயிருந்தது. நிறைய கேட்டது..அத்தனையும் சமாளித்தே பிள்ளை பாசத்தை வென்றான்.

தேவர்ஷியின் முகம் பார்க்காமல் அவள் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவன் திட்டம் வகுத்து மகளை கொண்டே செய்தான். மகளிடம்..

“ஷாஷி செல்லம் அப்பாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியாடா..” என்றான் பாவம் போல முகத்தை வைத்து..

“சொல்லுங்கப்பா.. நான் செய்யறேன்..” என்றது தந்தை தன்னிடம் உதவி கேட்கிறார் என்ற மகிழ்ச்சியில்..

“என் கூட அம்மா டூ விட்டுட்டா.. பேசமாட்டங்கறா.. அப்பா பாவம் தான.. நீ தினமும் நைட்ல அம்மா போன்ல இருந்து வீடியோ கால் பண்ணறயா.. அம்மா மடில உட்கார்ந்து தான் பேசனும்.. அப்ப தான் அம்மாவ சமாதானம் பண்ண முடியும்” என சொல்ல..

அன்றிலிருந்து அப்பாவின் பேச்சை தட்டாமல் சரியாக செய்து வருகிறது. ஜெர்மன்ல இருந்து கிளம்பி வருதற்கு முந்தைய நாள் வழக்கம் போல..மகளுடன் வீடியோ காலி்ல்..

“செல்லகுட்டி.. அப்பா ஊரில் இருந்து வரும் போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்..”

“ப்பா.. டாய்ஸ்.. சாக்லேட்.. டிரஸ்.. சைக்கிள் அப்புறம்..” என தாடையை தட்டி யோசித்தது..

“ம்ம் அப்பா.. எஃப் ப்ளாக் வீராட் ஒரு ரோபோ டாய் வச்சிருக்கான். அது அவங்க அப்பா டெல்லி போனப்ப வாங்கி வந்ததுனு சொல்லி எனக்கு தரமாட்டான் ப்பா.. எனக்கு அது மாதிரி வாங்கிட்டு வாங்க..அவன்கிட்ட எங்கப்பா வாங்கி தந்ததுனு காட்டனும்” என்றது..

மகளின் ஏக்கம் புரிந்து இருவருக்கும் கண்களில் கண்ணீர்.

‘அழுகறியா.. எல்லாம் உன்னால தான்..’ என கண்களை மகள் அறியாமல் துடைத்து கொண்டு அவனை முறைத்தாள்.

‘ஆத்தா.. உக்கிரமா பார்க்கறாளே.. அனிவர்த் ரூட்ட மாத்து..’

“ஷாஷி குட்டி.. லவ் யூ டா.. பட்டுகுட்டி லவ் யூ டா.. செல்லகுட்டி லவ் யூ டா..” என மகளைப் பார்த்து கொஞ்சி கொண்டிருந்தான்.

அதுவும் “லவ் யூ ப்பா.” என சொல்லி கொண்டிருந்தது.

கடைசியாக “குட்டிம்மா.. லவ் யூ டா..” என்றான்

ஷாஷிகா “ ம்மா.. அப்பா உனக்கு தான் சொல்றாங்க.. நீயும் சொல்லும்மா..” என ஒரே போடாக போட்டது.

“ஷாஷி.. பேசாம இரு..” என்றாள். அவளுக்கும் தெரியும் தனக்கு தான் என… வெட்கத்தில் முகம் சிவந்து விட.. அதை அவனிடம் காட்டமால் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ம்மா.. அப்பா குட்டிம்மா சொன்னா.. உன்னை தான் மா.. நீயும் சொல்லுமா..” என்றது.

மகள் கண்டுபிடிக்கும் அளவிற்கா பேசி இருக்கேன்..என தலையை கோதிக் கொண்டு அசடு வழிந்தான்.

“ஷாஷி பேசாம இருக்கல.. அடி போட்டுருவேன்..” என கையை ஓங்கி கொண்டு செல்ல…

“ஏய்.. பிள்ளையை அடிக்காதடி..” என சத்தமிட்டான்.

“எல்லாம் உங்களால் தான்.. அவளையும் கெடுத்து வைச்சிருக்கிங்க.. இனி அவ முன்னால இப்படி எல்லாம் பேசாதிங்க..”

“நீ என்கிட்ட தனியா பேசமாட்டேங்கற.. நான் என்ன பண்ண..” என அவளையே குறை கூறினான்.

அவனை முறைத்து கொண்டு.. முணுமுணு என சத்தமில்லாமல் அவனை திட்டி விட்டு போனை அணைத்துவிட்டாள்.

“ரொம்ப கோபமாக இருக்கா போல.. இவளை எல்லாம் சமாதானம் பண்ண முடியாது.. ஆக்‌ஷன்ல இறங்கிட வேண்டியது தான். இருடி வரேன்”என சொல்லி கொண்டான்.

மகள் கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு பிடித்ததை எல்லாம் மகளுக்காவும் மனைவிக்காவும் வாங்கி கொண்டான். இது தான் முதல் முறை இப்படி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கி செல்வது.. இது கூட பிடித்திருந்தது..

அனிவர்த் இந்தியா வந்துகொண்டிருக்கிறான்.. கங்கா.. தேவர்ஷி இருவரையும் எப்படி சரி பண்ணுவானோ…

அனிவர்த் அந்தி சாயும் நேரம் வந்திறங்கினான். திருகுமரன் தம்பதியர் ஷாஷிகாவோடு விமானநிலையம் வந்திருந்தனர். சிதம்பரம் மட்டுமே வந்திருந்தார். தேவர்ஷியும் வரவில்லை. கங்காவும் வரவில்லை. திருகுமரன் மகளை அழைத்தார் தான். தேவர்ஷிக்கு நான் ஏன் போகவேண்டும்.. அவனே வரட்டும் என்ற வீம்பு. இப்பயாவது வருவானா பார்க்கலாம்… அது மட்டுமில்லாமல் கங்காவும் அழைத்து நானும் போகமாட்டேன் நீயும் போககூடாது என கட்டளையாக சொல்லிவிட.. இப்போதைக்கு தனக்கு இருக்கும் ஒரே ஆதரவையும் வாகாக பற்றிக் கொண்டாள். மாமியார் மருமகளும் கூட்டணி அமைத்து இருவரும் விமானநிலையம் போகவில்லை.

அனிவர்த் இதை எதிர்பார்த்தான் தான். இவனை பார்த்ததும் ஷாஷிகா ஓடி வந்து “அப்பா..” என காலை கட்டிக் கொண்டது. மகளை சந்தோஷமாக அள்ளி தூக்கி தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் கன்னத்தில் முத்தம் வைத்து கிளுக்கி கொண்டு சிரித்தது. மகளின் சிரிப்பை கண்டு மனம் பூரித்து போனான். மகளாக உணர்ந்த பிறகு கொடுக்கும் முதல் முத்தம்… ஒரு அப்பாவாக முழுதாக உணர்ந்த தருணம்.. அதை சில நிமிடங்கள் ஆழ்ந்து அனுபவித்தான்.

மகளின் காதில் “அம்மா எங்க..” என்றான் கிசுகிசுப்பாக..

அந்த சின்ன சிட்டும் அப்பாவின் காதருகே போய் ரகசியமாக..”அம்மா வரல.. தாத்தா கூப்பிட்டாங்க.. வரலைனு சொல்லிட்டாங்க…” என்றது. பார்க்கவே அழகோவியமாக இருந்தது. அப்பா மகள் பாசம் கண்டு மற்றவர்கள் நெகிழ்ந்து போயினர். சிதம்பரம் தன் போனில்இதை எல்லாம் நிழல்படமாக பதிவு செய்து கொண்டார் கங்காவிடம் காண்பிப்பதற்காக..

அனிவர்த் தனது காரை எடுத்துக் கொண்டு அசோக்கை வர சொல்லியிருந்தான். இதை எல்லாம் பார்த்த அசோக் ‘என்னது அப்பாவா.. இவருக்கு இன்னும் கல்யாணமே ஆகலைனு சொன்னாங்க… அப்புறம் எப்படி பொண்ணு..’ என நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்துவிட்டான்.

எல்லோரிடமும் ஓரிரு வார்த்தை பேசினவன்.. அசோக்கிடம் வந்து கார் சாவி கேட்க.. அவனோ பேந்த பேந்த முழித்தான். அவன் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சாவியை எடுத்துக் கொண்டு அனிவர்த கிளம்ப..

ஷாஷிகா அனிவர்ததிடம் “அப்பா.. அந்த அங்கிள் ஏன் அப்படி முழிக்கிறாரு..” என்றது.

“அவன் அப்படி தான்.. அப்பப்ப லூசு மாதிரி பிகேவ் பண்ணுவான்.. அவன் கிடக்கறான்… நீ வாடா செல்லகுட்டி..” என மகளை அழைத்துக் கொண்டு கார் இருக்குமிடம் சென்றான்.

“என்னது நான் லூசாகிடறனா.. என்னை பைத்தியமாக்கறதே நீங்க தான்டா.. நல்ல குடும்பத்துல வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.. இவங்க கொடுக்கற சம்பளம் வெளிய கிடைக்காதேனு பார்க்கறேன்.. இல்லனா நீங்களாச்சு.. உங்க வேலையாச்சுனு தூக்கி எறிஞ்சிட்டு ராஜ நடை போட்டு போயிட்டே இருப்பேன்..” என புலம்பி முடித்து பார்க்க.. ஒருவரும் இல்லை. அவனை அம்போனு விட்டுட்டு போயிட்டர்கள்.

அனிவர்த் மகளோடு திருகுமரன் வீட்டிற்கு தான் சென்றான். திருகுமரன் தம்பதியர் வருவதற்குள் அனிவர்த் சென்றுவிட்டான் அவனுக்கு தேவர்ஷியிடம் பேச வேண்டும். காலிங்பெல் அடித்தான். தேவர்ஷி வந்து கதவை திறந்தவள் அனிவர்த்தை கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்று கதவடைக்க போக..

அவள் கதவை தாழிடும் முன் மகளை இறக்கி விட்டு.. வாயு வேகத்தில் உள்ளே நுழைந்து கதவை அவனே தாழிட்டான்.

அவனை பார்க்காமல் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்று கொண்டாள். அவளின் பின்புறம் பார்த்தவனுக்கு ஏக்க பெருமூச்சு.. ‘இந்த ஆறு வருடத்தில் கொஞ்சம் அபரிதமான வளர்ச்சி தான்..’

அவன் அழுத்தமான நடையோடு அவளை நெருங்க.. அவனின் காலடியோசை சத்தத்தில் அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்து கோபத்தில் வேகமாக திரும்பினாள்.

அவனும் நெருங்கியிருக்க.. திரும்பிய வேகத்தில் அவளின் மெத்தனங்கள் அவனின் மார்பில் மோத.. அவனுள் மொத்தமும் கனமாகி போனது. ஆறு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.. தீண்டாமல் தீண்டி அவனுள் உணர்வை கடத்த.. அவள் வேண்டும் என்ற உணர்வுகளின் உந்துதலில் இறுக அணைத்தான்.

அவளோ அவனுள் அடங்காமல் திமற.. அவனோ அவளை அடக்கி ஆண்டுவிடும் வேட்கையில்..

“ம்ப்ச்.. என்னடி உன் பிரச்சினை..” என்றான் சலிப்பாக..

“இதோ.. இது தான் பிரச்சினை..” என அவளை வளைத்திருக்கும் அவன் கைகளை காண்பித்தாள்.

“எப்ப பாரு உங்கள பத்தி மட்டும் தான் நினைப்பிங்களா.. என்ன பத்தி யோசிக்கவே மாட்டிங்களா… இன்னும் நம்ம உறவு நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனுமா.. எனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மாட்டிங்களா.. இப்பவும் வானு கூப்பிட்டா வந்து படுக்கனுமா.. படுக்கைக்கு மட்டும் தான் என் உறவா.. “ என பேச..

பட்டென் கைகளை விலக்கிக் கொண்டான். அவன் கைகளை விலக்கிய வேகமும் அவளின் மனதிற்கு ஒப்பவில்லை. இருந்த போதும் அவனிடம் தெளிவாக பேசி முடிவு எடுத்த பின் தான் தீண்டலும் சீண்டலும்.. ஊடலும் கூடலும்… ஒரு தடவை பட்டது போதும்.. அவனிடம் தனக்கான உறவின் உரிமையை நிலைப் படுத்தாமல் எதுவும்.. எதுவும் இல்லை என்பதில் தீர்க்கமாக இருந்தாள்.

அனிவர்த பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு அவள் பேசட்டும் என அமைதியாக பார்த்தான். ஆனால் உள்ளுக்குள் கோபம் குமிழிட்டு கொண்டிருந்தது. அவள் பேசிய பேச்சிற்கு அவளை அடித்து விட துடித்த கைகளை இறுக கட்டிக் கொண்டான்.

‘பேச்சை பாரு.. பேசுடி இன்னும் எவ்வளவு தூரம் பேசறினு பார்க்கறேன்’ என அவளையே பார்த்திருந்தான்.

அவன் பேசாமல் தன்னையே பார்த்திருக்கவும் தேவர்ஷிக்கு ஆத்திரம் அதிகமாகியது.

“நான் பேசிகிட்டு இருக்கேன்.. இப்பவும் எனக்கென்னனு அமைதியா இருப்பிங்களா.. இப்ப கூட கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்க தோனலைல…”

‘அப்படி வாடி வழிக்கு..’ என நினைத்தவன் “நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல.. அப்புறம் எதுக்கு நான் கேட்கனும்..”

இவன் என்ன சொல்லுகிறான் என விழித்தாள். ‘கல்யாணம் எப்ப எங்க ஆச்சு.. நான் தானே இவருக்கு தெரியாம் தாலி செயின் போட வைச்சேன். இவர் என்ன இப்படி சொல்றாரு..’

அவள் விழிப்பதை பார்த்து கோபம் குறைந்து சிரிப்பு வர அதை கன்ன கதுப்புக்குள் அடக்கி வைத்தான்.

“எப்ப கல்யாணம் ஆச்சு.. ஊரை கூட்டி மண்டபம் பாரத்து.. பெத்தவங்க.. பெரியவங்க.. ஆசிர்வாதத்தோடு.. அய்யர் மந்திரம் சொல்லி தாலி எடுத்து கொடுக்க.. நீங்க கட்டினிங்களா..” என்றாள் கோபமாக…

“நீ சொன்ன இது எல்லாம் நடக்கலை தான்.. இன்ஃபேக்ட்.. எனக்கு தெரிஞ்சு நான் உனக்கு தாலியே கட்டல தான்.. ஆனா நீ தான் நான் தாலி கட்டினதா சொல்லி எல்லோரையும் ஏமாத்தியிருக்க… என்னையும் ஏமாத்திட்டு இருக்க..” என குற்றம் சாட்டினான்.

அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.. எல்லாம் இவர் பண்ணிட்டு என்னை குத்தம் சொல்வதா.. அவனை எதை கொண்டு அடிக்கலாம் என சுற்றியும் தேடினாள். அவள் கண்களுக்கு ஷாஷிகா விளையாடும் பிளாஸ்டிக் பேட் கண்ணில் பட.. அதை எடுத்து வந்து அவன் முதுகில் நாலு சாத்து சாத்தினாள். சிரித்துக் கொண்டு அடிகளை வாங்கினான். அவன் சிரிக்க.. சிரிக்க.. அவளுக்கு ஆத்திரம் அதிகமானது. ஒரு கட்டத்தில் பேட்டை தூக்கி எறிந்து விட்டு மடிந்து அமர்ந்து முகத்தை மூடி கொண்டு அழுதாள்.

அவனை பார்க்காத போது எல்லாம் அவன் உனக்கு வேண்டாம் என உருப் போட்டு.. உருப் போட்டே காதல் மனதை கட்டுக்குள் வைத்திருக்க…அவனை பார்த்த நொடி உருவேற்றி வைத்தது எல்லாம் உருத் தெரியாமல் போக… கட்டுக்குள் அடங்கா காதல் உடைப்பெடுத்து மனதை பலஹீனப்படுத்த.. ஆற்ற முடியாத அழுகை…

கீழே அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை கண்டு அவனுள்ளும் வேதனை.. அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கைகளை விலக்க.. அவனின் கையை தட்டிவிட்டாள்.

“குட்டிம்மா.. இங்க பாருடா.. ம்ப்ச்.. பாரு சொல்றேன்ல..”

மெல்ல இடது கையால் தாடையை உயர்த்தி வலது கையால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான். சுவற்றில் சாய்நது அமர்ந்தவன் அவளை இழுத்து மாரோடு அணைத்துக் கொண்டான். அப்பவும் அவள் அவனின் அணைப்பில் இருந்து திமிறிக் கொண்டு விலகப் பார்க்க…

“ப்ச்ச்.. வர்ஷி.. வர்ஷிம்மா.. சாரிடி.. எல்லாத்துக்கும் சாரிடி…” என அடி மனதில் இருந்து உணர்ந்து சொன்னான்.

அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள். அவளின் கதறல் அவனின் மனதை பிசைய.. அவளிடம் இன்னும் அணைப்பை இறுக்கினான். இது வரை அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் கண்ணீராய் ஊற்றெடு்க்க.. ஒரே அழுகை தான். அழுது அழுதே அழுத்தங்களை கரைத்தாள்.

அனிவர்த்க்கே அவளை எப்படி சமாதானம் செய்வதே என தெரியவில்லை.. என்ன இப்படி அழுகிறா..என நினைத்து வருத்தப்பட்டான்.

தேவர்ஷிக்கு அனிவர்த் மேல் கோபம் ஆத்திரம் எல்லாம் இருக்கு தான். ஆனால் அதை எல்லாம் விட அவள் மனதில் அவன் மேலான காதல் தான் அதிகமாக இருக்க.. அவளால் அவன் மீது கோப படவோ.. அவனை வெறுத்து ஒதுக்கவோ முடியவில்லை… அவனை பார்த்தும் கோபத்தை மீறி இயலாமையில் அழுகை தான் வந்தது..

அப்படி தானே பெண்களே.. புருஷன் என்ன தவறு செய்தாலும்.. அவன் மீதான சிறுதுளி அன்பு மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒட்டி கிடந்தாலும்.. அத்துளி அன்பு எத்தவறையும் மன்னிக்கும் மாட்சிமை பெற்றுவிடும்.

30 -ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

2DF8403F-07E9-47AA-98D5-0F3C8B0EDA3C

29 – ஆடி அசைந்து வரும் தென்றல்

29 – ஆடி அசைந்து வரும் தென்றல்

“அப்பா..” என்றது அழுத்தமாக ஷாஷிகா..

“சொல்லுடா.. ஷாஷி என்ன பண்ணிட்டு இருக்கறிங்க.. சாப்பிட்டிங்களா..”

“ம்ம்.. அப்பா.. டூ தோசை.. நீங்க ப்பா..”

“நான் இன்னும் சாப்பிடலை..”

“ஏன் பா..”

“எனக்கு புட் கொடுக்க யாருமே இல்லை..” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஸ்கீரினின் ஓரத்தில் தெரியும் தேவர்ஷியை பார்த்தவாறு சொன்னான். தேவர்ஷி மடியில் மகளை இருத்தி முகத்தை திருப்பி கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர விழிப்பார்வை இவனிடம்…

மகளோடு வீடியோ காலில் அனிவர்த்…

”உலக மகா நடிப்புடா சாமி.. மூஞ்சை பாரு.. இந்த பூனையும் பால் குடிக்குமானு.. போர் ட்வென்டி..” தேவர்ஷி உதட்டை சுழித்தாள்..

அவள் உதட்டு சுழிப்பை கண்கள் தெறிக்க பார்ததான் அனிவர்த்.. கொய்யாவை கடித்து தின்றும் அணிலாக அவள் உதட்டை கடித்து தின்ன ஆசை கொண்டான். எத்தனை நாட்களாச்சு… அவள் இதழ் சாறின் ருசி.. அம்மம்மா… ஹா… நினைவே தித்திப்பா இருக்குதே… வேண்டும் என துடிக்குதே… ஆனால் முடியாதே என ஏக்க பெருமூச்சு.. அவள் உதட்டு அசைவிலேயே.. அவள் வாய் வார்த்தைகளை கண்டு கொண்டான். அவளை சீண்டி பார்க்க ஆசை தான்.. ஆனால் மகள் முன்னிலையில் செய்ய முடியாமல்…

‘இருடி இதுக்கு எல்லாம் நேர்ல வந்து பதில் கொடுக்கறேன் நான் போர ட்வென்டியா.. போர் ட்வென்டி என்ன செய்வானு காமிக்கறேன்…‘ மனதுள் சொல்லி வைத்தான்.

“ப்பா நீங்க இண்டியா வாங்க நான் ஊட்டி விடறேன்..” என்றது அந்த சின்ன குட்டி..

“சரிடா..க்யூட்டி.. உன்னை விட்டா எனக்கு யாருமில்ல.. என்கிட்ட யாரும் பேசறதில்ல.. நான் இங்க கேட்க ஆளில்லாம தனியா கிடக்கறேன்.. நீயாவது என் மேல பாசமா இருக்கியே.. அப்பா பாவம் தான மா..”

இது எல்லாம் தேவர்ஷியிடம் பரிதாபத்தை சம்பாதித்து கொள்ள.. ஷாஷிகாவிடம் சொல்வது போல தேவர்ஷியிடம் சொல்லப்பட்டது..

தேவர்ஷியோ அவனின் பேச்சில் எரிச்சல் அடைந்தாள்.. மகளுக்கோ என்ன புரிந்ததோ…

“அப்பா.. டோன்ட்ஒரி.. ஷாஷிகா இருக்கேன்..” தந்தையின் பரிதாப நாடகத்தை நம்பி சாமாதனம் செய்தது..

“ஆமாம் நீ மட்டும் தான் இருக்க..” அவனின் மாய்மாலத்தை அவனின் இளையாட்டி தான் நம்பியது.. அவனின் இணையாட்டியோ எரிச்சல் தாளாமல் மடியில் இருந்த மகளை இறக்கி படுக்கையில் உட்கார வைக்க போக..

“ம்மா..” என்றாள் கண்டன குரலில்..

“ஷாஷி.. எனக்கு வேலை இருக்கு..”

“ம்மா நைட் தான என்ன வேலை.. “ என்றது விவரமாக..

“அப்பா மாதிரியே.. கேட்குது பாரு..” என முணுமுணுத்தவள்.. மகளை சமாளிக்க முடியாமல்…

“இப்ப தூங்க வரியா… என்ன.. காலைல ஸ்கூல் போக எழுந்திரிக்க மாட்ட.”

“ம்மா இன்னும் டைம் இருக்கு…” என முறைத்து நின்றது..

மனைவி மகளுக்கு இடையேயான சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் அனிவர்த்..அது இன்னும் எரிச்சலை கொடுத்தது தேவர்ஷிக்கு..

“இப்ப போனை வச்சிட்டு தூங்க வரல.. அடி விழுகும் பார்த்துக்கோ..”

தேவர்ஷியின் கோபத்தின் அளவீடு அதிகமாகி கொண்டிருப்பதை கண்ட அனிவர்த் இன்னைக்கு இது போதும் என.. மகளிடம்..

“ஓகே.. ஷாஷிமா.. நாளைக்கு பேசலாம்.. பை..”

“ப்பா.. “ எனவும்..

“என் செல்லகுட்டி.. என் பட்டு குட்டி.. என் புஜ்ஜூ குட்டி..” என ஒவ்வொரு கொஞ்சலுக்கும் மகளை தொட்டு முத்தம் வைத்தவன்.. கடைசியாக..

“என் குட்டிம்மா..” என மனைவியை பார்த்தவாறே மகளை முத்தம் வைக்க.. தேவர்ஷி முகத்தில் பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடித்தது… அனிவர்த் அடக்கமாட்டாமல் வாய் விட்டு சத்தமாக சிரிக்க…

“பேசினது.. போதும் வந்து படுடி..” என போனை பிடுங்கி அணைக்க.. அணைக்க போகும் முன அவள் முகம் அருகில் தெரியும் அந்த நொடிக்காகவே அவளை சீண்டி வம்பிழுப்பான்..

அனிவர்த் ஜெர்மனில் தன் நணபர்களோடு படித்து முடித்ததும் ஆரம்பித்த கம்பெனியில் இன்னும் பங்குதாராக இருக்க.. ரெனவேஷன் ஒர்க் நடப்பதால் அவன் ஒரு மாதம் ஜெர்மன் போயே ஆக வேண்டிய கட்டாயம்.. இதை சாக்காக வைத்து தேவர்ஷியை தன் வீடு வர வைக்க பிளான் பண்ணி கங்காவிடம் சொல்லி விட்டு ஜெர்மன் சென்றுவிட்டான்.

கங்காவும் என்ன வில்லங்கத்தை பண்ணி வைத்து இருக்கானோ என பயத்துடன் தான் சிதம்பரத்துடன் சென்றார்.

அவர்கள் சென்றது ஒரு மாலை பொழுது.. அழைப்பு மணியை அடிக்கவும் தாத்தாவிற்கு முன்பு ஓடி வந்து எக்கி கொண்டு கதவை திறந்தது பேத்தி..

அழகான பெண் குழந்தை கதவை திறக்கவும் தன்னால் முகத்தில் ஒரு மலர்ச்சி கங்காவிற்கு..

திருகுமரனுக்கு வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும் அவர்களின் மதிப்பான தோற்றம் வரவேற்க செய்தது.

“வாங்க.. உட்காருங்க..”என்றவர்

அவர்கள் அமர்ந்ததும் கேள்வியாக பார்க்க…

“நாங்க அனிவர்த் பேரண்ட்ஸ்..” என்றதும்..

திருகுமரன் சந்தோஷமாக..” வாங்க சம்பந்தி..” என மறுபடியும் வரவேற்க..

‘என்னது சம்மந்தியா.. இன்னும் ஒன்னும் கல்யாண பேச்சு வார்ததையே ஆரம்பிக்கலயே..’ கங்கா லேசாக அதிர்ந்தார்.

“கௌசி இங்க வாம்மா.. சம்மந்திங்க வந்திருக்காங்க பாரு..” என குரல் கொடுக்க..

கௌசல்யாவும் வந்தவர்களை வரவேற்று.. காபி ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிப்புகள் முடிய..பேச்சு வார்த்தை ஆரம்பமானது.. கங்காவிற்கு தொடர் அதிர்ச்சிகளும் ஆரம்பமானது…

“அப்புறம் சம்மந்தி மாப்பிள்ளை சொன்னார். நீங்க வருவிங்கனு.. ரொம்ப சந்தோஷம்..” என திருகுமரன் சிதம்பரத்திடம் சொல்ல..

ஒன்றும் புரியாமல்… என்ன பேச என தெரியாமல் ஒரு சிரிப்பை உதிர்த்து வைத்தனர் இருவரும்..

திருகுமரனை தொடர்நது கௌசல்யாவும..” அன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்கு வந்தப்ப நான் கோயிலுக்கு போயிட்டேன்.. என்னால மாப்பிள்ளையை பார்க்க முடியாம போச்சு..” என வருத்தப்பட்டு சொல்ல..

‘அவ்வளவு நல்லவனா.. எம்மகன்.. எனக்கே தெரியலையே.. பயபுள்ள.. ஓவர் பெர்மான்ஸ் பண்ணி இருக்கும் போல.. அதை போய் நம்பி இருக்காங்களே.. ரொம்ப அப்பாவிங்க போல..’ கங்காம்மா மைண்ட் வாய்ஸ்…

கங்கா”உங்க பொண்ண பார்க்கலாமா..”என கங்கா கேட்க..

கௌசல்யா “தேவாம்மா..” என அழைக்க..

தேவர்ஷி மகளை கையில் பிடித்து கொண்டு வந்தாள். அனிவர்த் வந்து சென்ற அன்றே கௌசல்யாவிடம் சொல்லி தேவர்ஷியிடம் பேச சொன்னார் திருகுமரன். இருவரும் அனிவர்த்தை தாங்கி பேசவும் பொறுக்கவில்லை தேவர்ஷிக்கு.. அதை அவர்களிடம் காட்டவும் முடியவில்லை. நடந்த உண்மையை சொன்னால் தாங்கமாட்டார்கள் என்பதால் அவர்களிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அத்தனையும் அனிவர்த் மேல் கோபமாக வளர்த்தாள்.

எந்த புருஷன் பொண்டாட்டிக்குள் சண்டை இல்லை. இதற்காக எல்லாம் கோவித்து கொண்டு பிரிந்து வாழ்வார்களா.. ஆம்பளைகள் முன்னபின்ன இருந்தாலும் பொம்பளைங்க தான் அனுசரிச்சு போகனும்.. அவரே சமாதானமாகி இறங்கி வரும் போது.. நீ பண்ணுவது சரியில்ல.. உன் மகளுக்காக வேணும் சேர்ந்து வாழனும் என பெற்றவர்கள் மாற்றி மாற்றி பேசி பேசியே தேவர்ஷியை கரைத்தார்கள்..அவர்களிடம் ஒன்றும் பேச முடியாமல் அவர்கள் பேச்சிற்கு தலையாட்டி வைத்தாள்…

தேவர்ஷி வந்தவள் ஒன்றும் பேசாமல் கங்காவிற்ககு எதிரே இருந்த ஷோபாவில் மகளை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். இருவரையும் பார்ததவுடன் முக ஜாடையே எல்லாம் சொல்லிவிட.. கங்கா சிதம்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் அதிர்ந்த முகமே அவர்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்பதை காட்டி விட..

பக்குவப்பட்ட திருகுமரனுக்கு புரிந்தது. அனிவர்த் அவரிடம் என்ன சொன்னானோ.. அதையே அவரும் சொல்ல.. கங்காவால் தாங்கமுடியாமல் பிபி அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது. அவர் மயங்கவும் பதறி போயினர். சிதம்பரம் கங்காவின் பேகில் இருந்து ஒரு பிபி மாத்திரையை எடுத்து தண்ணீர்கொடுத்து விழுங்க செய்தார். சற்று நேரத்திற்கு எல்லாம் மயக்கம் தெளிந்து சரியாக.. கௌசி கொடுத்த ஜூஸை வாங்கி குடிக்கவும் சற்று திடமாக உணர்ந்தார். உண்மையை ஜீரணித்து கொள்ள ஒரு மணி நேரம் பிடித்தது இருவருக்கும்.. அது வரை அங்கு கனத்த அமைதி.. ஷாஷிகா போனில் கேம் விளையாடி கொண்டிருந்தது.

“நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியாக பேசலாமா..” திருகுமரனிடம் கங்கா கேட்டார்.

“தேவாம்மா…அவங்கள உன் ரூம்கு கூட்டிட்டு போம்மா..” என திருகுமரன் சொல்ல..

கங்காவை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்த கங்கா..

“என்ன செய்தான் என் மகன்..” என தேவர்ஷியை நேருக்கு நேர் பார்த்து பார்த்து கேட்டார்.

எப்பவும் தங்கள் மகன்கள் மேல் தவறு இருந்தாலும் பெண்ணை தானே குற்றம் சொல்லும் தாய்மார்களை தானே பார்ததிருக்கிறோம்.. ஆனால் கங்கா தன் மகன் மேல் தான் தவறு இருக்கும் என சொல்லவும்.. தேவர்ஷி வியப்பாக பார்த்தாள்.

அவளின் பார்வையை வைத்தே அவளை படித்தவர்.. “எனக்கு தெரியும் என் மகனை பற்றி.. ஆனால் ஒரு குழந்தை இருக்கு என தெரிந்த பிறகு கை விடும் அளவிற்கு மோசமானவன் இல்லை.. நான் அந்தளவிற்கு மோசமாக வளர்க்கவில்லை” சொல்லும் போதே அவர் முகம் கசங்கி போனது…

“எனக்கு எல்லாம் எல்லாமே சொல்லி விடும்மா ப்ளீஸ்..” என்றார் அழுத்தமாக..

தேவர்ஷி தங்களுக்கான அந்தரங்கத்தை தவிர்த்து எல்லாம் சொல்லிவிட்டாள். கேட்டிருந்த கங்காவிற்கு மீண்டும் பிபி ஏறியது.. ஆனால் மயங்கும் அளவிற்கு இல்லை.. அடுத்தடுத்த அதிரச்சி அவரிற்கு பழகிவிட்டது.

“பரதேசி நாயி.. பண்றது எல்லாம் பண்ணிட்டு.. என்கிட்ட ஒன்னும் சொல்லாம இங்க உங்க மருமக இருக்கா.. போய் கூட்டிட்டு வாங்கனு எங்களையும் சேர்த்து ஏமாத்தி இருக்கான்.. வரட்டும் அவனை பேசிக்கிறேன்.. அப்பவும் நினைச்சேன் கல்யாணம் பேசிட்டு வாங்கனு சொல்லாம.. என்னடா கூட்டிட்டு வர சொல்றானே.. என்ன வில்லங்கம் இருக்ககுமோ.. என பயந்தேன். பயந்த மாதிரியே பண்ணி வச்சிருக்கானே..”அங்கலாய்ப்பு அவருக்கு..

அனிவர்த்தை மேலும் சில பல நிமிடங்கள் திட்டி தீர்த்த கங்கா தேவர்ஷி அருகில் வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியை உள்ளே இருந்து எடுத்து வெளியே எடுத்துப் பார்த்தார். பின்பு தேவர்ஷியிடம்..

“என் மருமகளை சொந்த பந்தங்களோடு ஊரறிய முறையா அழைச்சிட்டு தான் போவேன்.. தப்பு எல்லாம் இவன் பண்ணிட்டு.. எங்கயோ போய் உட்கார்ந்து கிட்டு கூட்டிட்டு வாங்கனு சொல்வானா.. அவ்வளவு ஈசியா நீ கிடைச்சிட்டா அவன் தன் தப்பை உணரமாட்டான்.. நாம தான் உணர வைக்கனும்.. அவன் வரட்டும் பேசிக்கறேன்.. அதுவரைக்கும் நீ அவன்கிட்ட பேசாத.. யாருகிட்ட.. இந்த கங்காகிட்டயே அவன் வேலையை காமிக்கறானா.. அவன் வந்து உன்கிட்ட பேசி மன்னிப்பு கேட்கட்டும்.. அப்புறம் பேசிக்கலாம்.. அதுவரைக்கும் அவன் பேசினா கூட நீ பேசாத..” என சொல்லி அவள் அறையை விட்டு வெளியே சென்றவர் பேத்தியுடன் ஆசையாக பேசிக் கொண்டிருந்த சிதம்பரத்திடம் சென்று தானும் ஷாஷிகாவோடு பேச..

ஷாஷிகாவை தொட்டு தடவி வாஞ்சையாக பேசிக் கொண்டிருந்த இருவரின் ஏக்கத்தை பார்த்தவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.. இரவு வரை பேத்தியுடன் இருந்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு சென்றனர்.

போகும் முன்பு திருகுமரனிடம் அனிவர்த் வந்த பிறகு முறைப்படி மருமகளையும் பேத்தியையும் அழைத்து கொள்வதாக சொல்லி சென்றனர்.

ஏற்கவே அனிவர்த் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள் தேவர்ஷி. அப்போ தான் இங்கு வா.. அங்கு வா என்பார். இப்பவும் வா என்றால்.. அதுவும் இவர் வராமல் பெற்றவர்களை அனுப்பி வைத்தால் போகனுமா… முடியாது நடையா நடக்க வச்சு சங்க வைத்து தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை சும்மா விடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தாள்.

கங்கா மற்ற தாய்களை போல மகன் தப்பை மறைத்து மருமகளை ஏசவில்லை. மகனை திட்டி மருமகளை தாங்கி நிற்கவும் அவளின் கோபம் சற்று குறைந்தது. மாமியாரையும் மிகவும் பிடித்துவிட்டது. மாமியாரின் பேச்சே அவளின் கோபத்தை கொஞ்சம் இளக்க வைத்தது. எதுனாலும் மாமியார் பார்த்து கொள்வார் என்ற தைரியமும் நம்பிக்கையும் வந்தது.

கங்கா அனிவர்த்திடம் தானும் பேச போவதில்லை.. சிதம்பரத்தையும் பேசகூடாது என சொல்லிவிட்டார கண்டிப்புடன்.. மகன் செய்ததை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. மனது சமாதானம் ஆக மறுக்கிறது. அவனின் பழக்கங்கள் அறிந்தவர் தான்.. நல்ல குடும்பத்து பெண்ணிடம் பழகி ஒரு குழந்தையை கொடுத்து.. அது கூட தெரியாமல் ஆறு வருடங்கள் வேறு பெண்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். என்ன மனுஷன் இவன் என்ற கோபம்..

ஒருவாரம் பொறுத்துப் பார்த்தவன் எந்த தகவலும் வரவில்லை.. பெற்றவர்களும் பேசவில்லை எனவும்…தாய்க்கு அழைத்தான். அழைப்பு போய் கொண்டே இருந்தது எடுக்கவில்லை எனவும் தந்தைக்கு அழைத்தான். அவரும் எடுக்கவில்லை எனவும் என்னவோ என பயந்து அசோக்கிற்கு அழைத்தான்.

“ஹலோ.. சொல்லுங்க பாஸ்..”

“அசோக் அம்மா.. அப்பா.. இரண்டு பேருமே போனை எடுக்கலை.. நல்லா இருக்காங்கல்ல.. அம்மாவுக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே.. “

“இல்ல பாஸ்.. சிதம்பரம் சார் நேத்து கூட ஆபிஸ் வந்தாரே.. ஒன்னும் சொல்லையே..”

‘அப்போ நல்லா தான் இருக்காங்க.. தேவர்ஷி வீ்ட்டுக்கு போயிருக்காங்க.. அங்க தான் ப்ராப்ளம் போல..’

“கான் கால் அம்மாவுக்கு கனெக்ட் பண்ணு… ஆனா நான் லைன்ல இருக்கேனு சொல்லாத

“ம்ம்.. ஓகே பாஸ்..”

அசோக் உடனே கங்காவிற்கு அழைத்தான்.

எடுத்த எடுப்பிலேயே.. “சொல்லுங்க அடிமை சார்..” என குதர்கமாக பேச..

ஆரம்பமே அனர்த்தமா இருக்கே என ஜெர்க் ஆனான் அசோக்.. ம்ம் சமாளிப்போம்..

“ஹீஹீ.. நல்லா இருக்கறிங்களா ம்மா.. உடம்புக்கு ஒன்னும் இல்லையே..”

“நீ கேட்கறத பார்த்தா.. என் உடம்புக்கு ஏதாவது வரனும்னு வேண்டிக்கற மாதிரி இருக்கே…”

“அய்யோ… அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க ம்மா..” என அலறினான்.

“சரி அதை விடு.. இப்ப எதுக்கு கூப்பிட்ட.. நான் பெத்த மவராசன் என்னனு கேட்க சொன்னானா..”

“அய்யோ.. அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..நானே தான் பேசலாம்னு கூப்பிட்டேன்..”

“அவன் குடுக்கற சம்பளத்துக்கு மேல ஓவரா நடிக்காதடா.. நானா கூப்பிட்டாவே நீ எடுத்து பேசமாட்ட.. இதுல நீ பேச தான் கால் பண்ணினேன் சொன்னா சின்ன புள்ள கூட நம்பாதுடா..”

கேட்டுக் கொண்டிருந்த அனிவர்த்துக்கு சிரிப்பை அடங்க பெரும் பாடாகி போனது…

“அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..”

“டேய் டேய்.. ஓவர் சீன் போடாத.. நீ எதுக்கு கால் பண்ணியிருக்கனு எனக்கு தெரியும். உன் கொள்ளை கூட்டத் தலைவன் சொல்லி இருப்பான்.. அதான.. அவன்கிட்ட சொல்லிரு அவன் பண்ணின வேலைக்கு அவன்கிட்ட பேசனும்னு எதிர்பார்க்க வேண்டாம்னு .. அவன் சொன்னதை செய்ய முடியாது.. அவனுக்கு வேணும்னா அவனே வந்து கூட்டிட்டு வரட்டும்.. அப்புறம் இன்னொன்னு எனக்கு கால் பண்ணினா நான் அட்டென்ட் பண்ணமாட்டேன் சொல்லிரு.. நீ என்ன சொல்லறது.. கேட்டுகிட்டு இருக்கற அவனுக்கு புரியும்..” என அழைப்பை துண்டித்து… நான் அனிவர்ததின் அம்மாவாக்கும் என நிருபித்தார்.

அனிவர்த்கு அது வரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது. சத்தமாக சிரித்தான்

‘பாஸ் என்ன செஞ்சாரு.. இந்தம்மா பேசமாட்டேங்குது.. இவரு என்ன செய்ய சொன்னாரு.. செய்யமுடியாதுனு சொல்லிட்டாங்க.. இவரு வந்து யாரை கூட்டிட்டு வரனும்.. இவரு சிரிக்கறாரு… அய்யோ.. தலையும் புரியல.. வாலும் புரியல..’ என தலைமுடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

“டேய் தகப்பா.. நல்லா லூசு குடும்பத்துல சிக்க வைச்சிட்டு போயிட்டடா..” என வழக்கம் போல புலம்பினான்.

29 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

error: Content is protected !!
Scroll to Top