ATM Tamil Romantic Novels

1D36D68A-326B-4B1E-B65E-88BF2529476E

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு போகாமல் இருந்தால் பயந்த போய் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என நினைத்திருக்க.. அவர்களின் அமைதி அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆனது. பெண் பார்த்து இருக்கிறார்கள் பாரு.. ஒரு முக லட்சணம் உண்டா.. கலரும் கறுப்பு.. குட்ட வாத்து மாதிரி படிக்காத பட்டிக்காடு போல…

இவங்க அழகு படிப்பு நாகரிகத்துல பாதியாவது இருக்கற மாதிரி பார்க்க கூடாது. சி். கே எண்டர்பிரைசஸ் எம்டிக்கு ஒய்பா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணாமா.. இந்த மாதிரி பொண்ணை என்ஆபீஸ் ப்யூன் கூட மேரேஜ் பண்ணிக்க யோசிப்பான். ச்சே எனக்கு போய் இப்படி ஒரு பெண் லைப் பார்ட்னரா என கடுங் கோபம் கொண்டான்.

அவன் மேல் ஒரு பந்து வந்து விழுகவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர்ந்து பந்தை கையில் எடுக்கவும்.. பந்தை வாங்க வந்தாள் ஷாஷிகா. அனிவர்த்தை பார்த்தும்…

“ஹாய் அங்கிள்” என அவனருகே அமர்ந்து கொண்டது.

அனிவர்த்துக்கும் ஷாஷிகாவை பார்த்தும் அவன் மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் வடிந்து ஒரு புது உற்சாகம் தொற்றிக் கொள்ள…

“ஹேய்.. பேபிடால்..” என்றான்.

ஷாஷிகா அவனை பார்த்து முறைக்க.. அதை பார்க்க அனிவர்த்துக்கு அன்று அவள் சொன்னது நினைவில் வர…

“ஹே…சாரி சாரி ஷாஷிகா..” என தன்னை திருத்திக் கொள்ள..

“அஃது” விரலை நீட்டி எச்சரிப்பது போல மிரட்டினாள் குட்டி பொண்ணு..

அவளும் ஏதோ கேட்க இவனும் பதில் சொல்ல.. நெடுநேரம் குட்டி கைகளை ஆட்டி… கண்ணை உருட்டி….சலசலத்து கொண்டிருக்க.. இவனும் பதிலுக்கு வாயாடி கொண்டு இருந்தான். நடுவே அவளின் தோழர்கள் வந்து அழைத்த போது கூட.. செல்லாமல் நீங்க விளையாடுங்க.. என அனுப்பிவிட்டாள் பெண்.

மாலை மங்கும் நேரத்தில் “ஏய்… ஷாஷி வீட்டுக்கு போகலாம் வா..” என வந்து நின்றான் ஒரு சிறுவன்.

“இரு ரித்தீஷ் வரேன்.. இவன் என் கஷின் பிரதர் ரித்தீஷ்.. “

ரித்தீஷோ..”நீ இப்ப வரையா இல்லயா..” என மிரட்ட..

“சாரி அங்கிள்.. இவன் இப்படி தான் யார்கூடயும் பேசமாட்டான். சிடுசிடுனுனே இருப்பான்..” என ஷாஷிகா சொல்ல..

ரித்தீஷ் முறைக்க.. “பை அங்கிள்.” என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் குட்டி..

வந்த போது இருந்த மனநிலைக்கு நேர்மாறாக சந்தோஷமாக… உற்சாகமாக திரும்பி சென்றான்.

அனிவர்த் வீட்டிற்கு வராததில் கங்கா மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. கங்காவிற்கு மட்டும் என்ன ஆசையா மகனிற்கு இப்படி ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க.. அழகாக இல்லைனாலும் படிப்பாவது இருக்க வேண்டும் என நினைத்தார் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகும் மகனின் வீக் என்ட் பழக்கம் தொடருமேயானால் படித்த பெண்ணாக இருந்தால் நியாயம் கேட்டு நின்றால் குடும்ப மானம் போகப் போவது உறதி.

அழகு இல்லைனாலும் படிக்காத வெகுளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற பத்தாம் பசலி நாகரிகத்தில் ஊறிப் போன பெண் தான் தன் மகனுக்கு சரி. அப்போது தான் குடும்பம் உடையாது என கல்யாண தரகருக்கு பத்து மடங்கு கமிஷன் கொடுத்தது தான் நினைத்தது போல பெண் பார்த்து முடித்தார். கங்காவிற்கு மனதே ஆறவில்லை தான். தன் மகனின் அழகிற்கும் படிப்புக்கும் இணையாக பெண் பார்த்து கண் நிறைவாக மணமுடித்து… மனம் நிறைவாக வாழ்வதை பார்க்க ஆசை தான் ஆனால் என்ன செய்ய அப்படி பட்ட பெண் வீட்டிற்கு இவர் செல்லும் முன்பே மகனின் அருமை பெருமைகள் போய் நின்று விடுகிறதே…

இதை எல்லாம் நினைத்து கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவருக்கு நடு இரவில் மாரடைப்பு வந்து விட சிதம்பரம் பதறி போனார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கங்காவை அள்ளி போட்டு கொண்டு சென்றார்.

அனிவர்த்கு சிதம்பரம் அழைக்க.. அனிவர்த்தோ நல்ல உறக்கத்தில்…

ஷாஷிகாவோடு பேசியதில் மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து மனம் இலகுவாகிட.. ரொம்ப நாள் கழித்து நிம்மதியான உறக்கம்..

சிதம்பரம் மகனுக்கு விடாமல் அழைக்க… ஒரு கட்டத்தில் போனை எடுத்தான் அனிவர்த் ஒரு வழியாக… நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ போன் மணி அடிப்பது போல இருக்க..
கண்களை கசக்கி கொண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் தந்தையின் எண்ணை பார்த்ததும் பதறி போய் எடுத்துப் பேசினான். அவர் கூறிய செய்தில் அதிர்ந்து போய் அரக்கப் பறக்க காரை ஓட்டி கொண்டு வந்தவன் தன் அம்மாவை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனான்.

தீவிர சிகிச்சை பிரிவில் கைகள் மூக்கில் நெஞ்சில் என நிறைய ஒயர்களோடு.. மயக்கத்தில் இருந்தார் கங்கா.. தன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான் அனிவர்த்..

எந்த உறவுக்கும் கட்டுப்படாதவர்கள் அம்மா என்ற உறவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…

அத்தனை ட்யூப் ஒயர்களுக்கு நடுவே தனது அம்மாவை பார்க்கவும் ஆடி போய்விட்டான் அனிவர்த். எப்பவும் அவன் அம்மாவை தான் அதிகம் தேடுவான். நடுவில் கொஞ்ச காலம் தேவை இல்லாத பழக்கவழக்கங்கள் அவனை தள்ளி நிறுத்தி இருந்தது. தன் கல்யாணம் தான் அவர்களை அதிகம் பாதிக்குது போல அம்மாவிற்காக அவர்கள் கைகாட்டும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நொடி முடிவு செய்தான்.

கங்கா கண் விழித்திருக்க காத்திருந்தனர். காலையில் ஒரு ஏழு மணி போல கண் விழித்தவரை பல டெஸட்கள் அப்சர்வேசன் என ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார்.அறைக்கு மாற்றப்பட்டதும் தன்அம்மாவின் கையை பிடித்து கொண்டு…

“உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டு அழுதான். மகனி்ன் அழுகையை கண்டு கங்காவின் மனம் துடிக்க.. அவர் கண்களிலும் கண்ணீர் திரை.

“அனிவர்த் கல்யாணம் பண்ணினா நீ அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கனும். உன்னோட வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் விட்டுடனும்”அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு வேதனை..

அவரின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தவனுக்கு அந்த வேதனை எல்லாம் தன்னாலே தான். அவனுக்கு தெரிந்து அவன் அன்னை என்றும் கவலையாகவோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை. எப்பவும் சிரிப்புடன் கலகலப்பான டைப் தான்.எதற்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.

கங்கா சிதம்பரத்தை கல்யாணம் செய்யும் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக தான் இருந்தார். குரூப் தேர்வுகள் எழுதியும் சர்வீஸ் அடிப்பையிலும் தாசிலதார், சப் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று ரிடையர் ஆகிவிட்டார். இருவருக்கும் கூடப் பிறந்தவரகள் யாரும் கிடையாது. ஒன்றுவிட்ட சொந்தங்கள மட்டுமே.. இருவருக்குமே பூர்வீக சொத்துக்கள் சில இருந்தது. அனிவர்த் பிறந்த சில வருடங்களிலேயே இவர்களின் பெற்றவர்களும் அடுத்தடுத்து இறந்து விட.. கங்காவிற்கு உறவுகளாலோ வருமானத்திலோ எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை.

கங்காவின் ஒரே கவலை.. அனிவர்த் தங்களை போலவே ஒற்றை பிள்ளையாக போய் விட்டது தான். எப்பவும் கங்கா எதற்காகவும் கவலை பட்டதில்லை. அப்படிபட்டவரை அனிவர்த் தன் செயலால் வருத்தி கொண்டு இருந்தான்.

அனிவர்த் தன் தாயின் கைகளின் மேல் தனது கைகளை வைத்து…

“இந்த பதினைந்து நாட்களில் ப்ளாட்டில் தனியாக தான் இருந்தேன். பப் கூட போகல.. யாரையும் வீட்டிக்கு வரவைக்கல.. இனியும் இப்ப எப்படி இருக்கேனோ அப்படி தான்..” என்றான் சின்ன குரலில்… பெற்றோரை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டான்.

மகனை பார்க்க பார்க்க… பெற்றவர்கள் இருவருக்கும் மனது துடித்தது. சிதம்பரம் மகனின் தோளில் தட்டி கொடுக்க… அவரின் கையை பிடித்து புறங்கையில் முத்தம் கொடுத்தான். அவனின் இந்த பழக்கங்கள் பிடிக்காத போதும் கங்கா தான் அவ்வப்போது பிடிக்கவில்லை என எதிர்ப்பை காட்டுவாரே தவிர செய்யாதே என கண்டித்தது இல்லை.. அதிலும் சிதம்பரம் அந்த எதிர்ப்பை கூட காட்டியது இல்லை.

சிதம்பரத்தை பொறுத்த வரை மகன் புத்திசாலி படிப்பு தொழில் எல்லாம் சுய முயற்சியில் ஏற்படுத்திக் கொண்டான். அவன் தப்பு என உணர்ந்து விட்டால் அதை செய்யமாட்டேன். உணரும் காலத்திற்காக தான் அமைதியாக இருந்தார்.

அவனுக்கு தெரியவில்லை அழகு படிப்பு இதை எல்லாம் விட பெண்ணை பெற்றவர்களுக்கு பையனின் நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்கள் தான் முன் வந்து நிற்கும என்று..

ஆபீஸ் சென்று வந்த பின்னால் ப்ளாட்டில் தனிமை இவனுக்கு ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது. இங்கு வந்த பின்பு பப்பிற்கு சென்றவனுக்கு ஏனோ மனதில் இருந்த அழுத்தம் பெண்கள் துணையையும் நாட அனுமதிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம் பப்பிற்கு போக கூட ஏனோ பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருக்க முடியாமல் சற்று காலார நடக்கலாம் என நினைத்தவன்… தனது ப்ளாட்டுல் இருந்து கிளம்பி கால் போன போக்கில் நடக்க.. வழியில் ஒரு பார்க் தென்பட உள்ளே சென்று அங்கு உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ யோசனையில் இருந்தான்.. ஏதோ யோசனை என்ன.. தன் திருமணத்தை நிறுத்தும் யோசனை தான்..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4 Read More »

என் மோகத் தீயே குளிராதே 10

அத்தியாயம் 10   “ம்ம்.. ப்ச்.. தலையெல்லாம் ஒரே  வலி..” என்றவாறே எழுந்த ஹரிஷான்த், தான் இருக்கும் கோலத்தை உணர்ந்ததும், அருகினில்  இருப்பது யார் என்று பார்க்க, அங்கே யாரும் இல்லாது குழம்பிப் போனான்.    “ஹாசி.. ஹாசி..” என்று குரல் கொடுத்தவாறே தனது ஆடைகளை அணிந்தவன்,   “எங்க போனா இவ?” என்று தன் வாயிற்குள் முணுமுணுத்தவாறே ஹாலிற்கு வந்தவனின் கண்ணில், இன்னும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் பட,   “டேய்.. எந்திரிங்கடா..

என் மோகத் தீயே குளிராதே 10 Read More »

C1D6F803-2A1B-417F-924C-532BB0E3F042

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3

3 -ஆடி அசைந்து வரும் தென்றல்

தனது ப்ளாட்டிற்கு செல்லப் பிடிக்காமல் வீட்டிற்கு சென்றான்.இவன் போன நேரம் சிதம்பரமும் கங்காவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். கங்கா தான் இவனை முதலில் கவனித்தார்.
தனது தட்டில்இருந்த மட்டன் பிரியாணியை படுமும்மரமாக சாப்பிட்டு கொண்டு இருந்த சிதம்பரத்திடம்…

“ஏங்க மழை வருதானு பாருங்க..” என்றார் கங்கா.

அப்போதும் மகனை கவனிக்கவில்லை சிதம்பரம்.

“ஏன் கங்கா வெளியே துணி காயப் போட்டு இருக்கறியா..வள்ளிய விட்டு எடுக்க சொல்லு..”

“ம்ம்ம.. நீங்க மழைல கரைஞ்சிடுவிங்களானு செக் பண்ணனும்”என்றார் கடுப்புடன்..

“என்னது..” கங்காவை பார்க்க…

கங்கா இவரை கண்டு கொள்ளாமல் “அனிவர்த்… இன்னைக்கு சன்டே மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டியா.. அச்சச்சோ..” என நக்கலாக கேட்க…

அனிவர்த் கடுப்பாகி தனது அம்மாவை பார்த்து முறைத்தவாறு..

“தெரிஞ்சு தான் வந்துருக்கேன்… ஏன் இந்த வீட்டுக்கு நினைச்ச நேரம் வர எனக்கு உரிமையில்லயா…”

“அப்போ உன்னோட உருப்படாத பழக்கவழக்கத்தை எல்லாம் விட்டு ஒழிச்சிட்டியா.. அப்ப பொண்ணு பார்க்கவா..” என்றார்.

கங்காவிற்கு தெரியும் தன் மகன் பிடிவாதக்கரன். அப்படி எல்லாம் உடனே மாறி விடமாட்டான்என…

“எப்ப பாரு இதே பேச்சு தானா… எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு ஒருத்தி வந்து என் தலைல ஏறி உட்கார்ந்து என்னை ஆட்டி படைக்கனும்… அத பார்த்து ரசிக்கனும் உங்களுக்கு அதானே..”

“ஆமாம்டா மகனே… வர வர லைப் திங்க தூங்கனு ரொம்ப போரிங்கா போகுது.. உங்கப்பாவும் என் கூட சண்ட போடமாட்டேங்கறாரு.. நான் எது பேசினாலும் வாயை கப்னு மூடிக்கிறாரு.. இப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்டேனு வை..பகல்ல உன் பொண்டாட்டி கூட சண்ட போடுவேன். அப்படியே ஜாலியா பொழுது போயிடும். இராத்திரி நீ வந்ததும் உன் பொண்டாட்டி என்னை பத்தி புகார் வாசிப்பா.. நானும் என் மருமகளும் உனக்கு நாட்டாமை பதவி எல்லாம் கொடுப்போம். நீயும் பஞ்சாயத்து பேச.. அப்படியே நைட் சாப்பாட்டு நேரம் வந்திடும். சாப்பிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்..” என கங்கா சிரிக்காமல் பேச…

சிதம்பரத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினார். ஏற்கனவே கங்காவின் பேச்சால் அனிவர்த் கடுங்கோபத்தில் இருக்க.. தானும் சிரித்தால் சிவபெருமானைப் போல நெற்றிகண்ணை திறந்து பஸ்பமாக்கிடுவான் என உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார்.

“உங்களுக்கு பொழுது போக… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு… என்னை நிம்மதி இல்லாம பண்ணனும் அப்படி தான..” என்று கத்த…

“அது அப்படி இல்லடா மகனே..”

“கங்கா..போதும் அவன் சாப்பிட்டானா என்னனு தெரியல..அதப்பாரு முதல்ல..” சிதம்பரம் அப்போதைக்கு மகனையும் மனைவியையும் விலக்கிவிட்டார்.அப்போதைக்கு அமைதியாகிவிட்டார் கங்கா. ஆனால் அதற்காக எப்போதும் அமைதியாகவா இருப்பார். தனக்கு ஒரு மருமகளை கொண்டு வராமல் ஓய்வதில்லை என உறுதியாக இருந்தார்.

ஒரு வாரம் பிரச்சனை இல்லாமல் சென்றது. மகனை ரொம்ப படுத்த வேண்டாம் ஒரு வாரம் கேப் விட்டு செய்யலாம் என விட்டுவிட்டார்.

அடுத்த வாரத்தின் மத்தியில் ஒரு நாள் கங்கா அனிவர்த்கு போன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கு வந்திருப்பதாகவும் உடனே கிளம்பி வா.. என சொன்னார்.

அனிவர்த் தனது தொழில் துறை மீட்டிங் ஒன்றிற்காக அசோக் கூட காரில் சென்று கொண்டு இருந்தான். அப்போது அனிவர்த் போன்அடிக்க.. பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் தனது தாய் தான் என தெரிந்ததும் சைலண்ட் மோடில் வைத்துவிட்டான்

அனிவர்த்கு கங்கா எதற்கு அழைக்கிறார் என தெரியும். காலையில அனிவர்த் அலுவலத்துக்கு செல்லும் முன் சாப்பிட வந்தவனிடம் …

“அனிவர்த்…. சாயங்காலம் நாம ஒரு இடத்துக்குபோகனும்… சீக்கிரம் வந்துடு…”என இட்லியை தட்டில் வைத்துசாம்பார் ஊற்றிக் கொண்டே கூறினார்.

உடனே உஷாராகிய அனிவர்த்”எதுக்கு.. எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டீங் இருக்கு…”

“எந்த மீட்டிங்கா இருந்தாலும் கேன்சல் பண்ணிடு.. உன்னை மாப்பிள்ள.. பார்கக வராங்க..”

“என்னது மாப்பிள்ள பார்க்க வராங்களா.. எல்லாம் பொண்ணு தான பார்ப்பாங்க…”

“நீ ஒரு பொண்ணப் பார்த்து ஓகே சொல்லி.. கல்யாணம் பண்ண முடியுமானு..எனக்கு தெரியல… அதான் பொண்ணு ஓகே சொன்னா கல்யாணம் தான்..” கங்கா சொல்ல.. சொல்ல..அனிவர்த்கு கோபம் ஏறிக் கொண்டே போனது.

“என் பெர்மிஷன் இல்லாம மேரேஜ் எப்படி பண்ணுவிங்க.. நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. புரிஞ்சுக்கவே மாட்டிங்களா..
எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம் இதை தவிர வேற பேசமாட்டிங்களா..இட்லிய தட்டுல போட்டுட்டு இடியை தலைல போடறிங்க..”

“இனி இட்லிக்கு பதிலா இடியாப்பம் போடறேன்..”

“என்னது..” என ஒரு நிமிடம் புரியாமல் விழித்தான்.

“இட்லிய தட்டுல போட்டு இடியை தலைல போடறே..ஏ..ஏ.. னு சொன்னில்ல..ல..ல.” என இழுக்க..

“அதுக்கு..” என்றான் இன்னும் புரியாமல்..

“இல்ல.. இனி இட்லிக்கு பதிலா.. இடியாப்பம் போடறேன்.. இட்லி மாதிரி இல்லாம இடியாப்பம் சாப்ட்டா இருக்கும்..”

“ச்சே.. உங்ககிட்ட மனுசன் பேசுவானா..”என கோபமாக கத்தி விட்டு சாப்பிடாமல் கிளம்பி சென்றுவிட்டான்.

அதை கண்டு கொள்ளாத கங்கா தட்டில் அரை டஜன் இட்லிகளை வைத்து சாப்பிட ஆரம்பித்தவர் சிதம்ரம் சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை பார்த்தவர்….

“என்னை பார்க்காம நல்லா தட்டு நிறையா வச்சு சாப்பிடுங்க.. இந்த வீட்டுக்கு மருமக வரனும்னா இவன்கிட்ட காவடி எடுத்து நடையா நடக்கனும்.. அதுக்கு தெம்பு வேணாம்.. ம்.. நல்லா சாப்பிடுங்க..”

“ஏன் கங்கா கொஞ்சம் விட்டு புடிக்காலாம்ல..”

“ரொம்ப விட்டாச்சுங்க… அதான் புடிக்க முடியாத தூரத்துக்கு போயிட்டான். இனிமே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு குடும்பம்னு ஒன்னு இருக்கவே இருக்காது.. நான் கண்ணை மூடறதுக்குள்ள அவன் குடும்பமா வாழறத பார்த்துடனும்..” என்ற கங்கா கண்களில் சிறு துளி கண்ணீர்…

“கங்கா அழுகறாளா.. என் கங்காவுக்கு அழுக கூட தெரியுமா..” கங்காவின் மனதை மாற்றும் விதமாக சிதம்பரம் சிறு கிண்டலுடன் பேச…

“அதானே கங்கா.. நீ இதுக்கே அழுகளாமா..இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு.. செய்ய வேண்டி இருக்கு..” தன்னை தானே தேற்றிக் கொள்ள…

பார்த்து இருந்த சிதம்பரம் கங்காவின் கையை ஆறுதலாக பிடித்து “சாப்பிடு..” என்றார்.கணவரின் ஆறுதலில் இன்னும் கொஞ்சம் திடமாக உணர்ந்தார்.

மீண்டும்.. மீண்டும் கங்கா அழைக்க.. ஒரு கட்டத்தில் வழக்கம்போல் சுவிட்ச்ஆப் பண்ணிவிட்டான். உடனே அசோக் போனையும் அணைத்து வைக்க சொல்லிவிட்டான்.

இரண்டு மணிநேரம் கழித்து மீட்டிங் முடிந்து கார் பார்க்கிங் வந்தான். இவனின் கார் அருகில் கங்கா நின்று கொண்டு இருந்தார்.

அனிவர்த் அம்மாவை பார்த்தவன் இவங்க எங்க இங்க..என பார்த்தவன்.. திரும்பி அசோக்கை பார்த்து முறைத்தான்.

“நோ பாஸ்.. அம்மா தான்..”

தனது அம்மாவை பார்ததவன் “ இங்க எதுக்கு வந்திங்க..”

“நீ வரல.. அதான் நான் வந்துட்டேன்..”

சற்று தள்ளி நின்று இருந்தவர்களை “இங்க வாங்க” என கூப்பிட்டார் கங்கா..

ஒரு இளம்பெண் அந்த பெண்ணின் பெற்றோர் வந்தனர். அவர்களிடம் கங்கா..

“இது தான் என் மகன்.. நல்லா பார்த்துக்குங்க..”

அந்த பெண்ணோ அனிவர்த்தை விடாமல் பார்த்தது மேலிருந்து கீழாக… அந்த பார்வையில் அனிவர்த்கு தான் கூச்சமாகி போனது. அந்த பெண் ரொம்பவே சுமாரான ரகம்.

ஐயோ இது தான் பொண்ணா.. எங்க பாஸ் அழகென்ன.. அறிவென்ன.. அவர் கூட வீக் என்ட்ல பார்ட்டி பண்ண வரவளுகங்க கூட மாடல் ரேஞ்சுக்கு இருப்பாளுக..இந்த கங்காம்மாவுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ.. என அசோக்கின் மைண்ட் வாய்ஸ்..

அசோக் நினைப்பது போல தான் அனிவர்த் நல்ல கலராக… அடர்த்தியான அலை அலையாக அவனை போலவே அடங்காமல சிலிர்த்து கிட்டு நிற்கும் கேசம்… பட்டை மீசை.. தினமும உடற்பயற்சி செய்வதால் உறுதியான பரந்த தோள்களை கொண்ட ஆறடி உயர தேகம்… பார்த்தவுடன் யாரையும் ஈர்க்கும் வசீகரமான முகம்.. அதுவும் ஜெர்மன வாசம் அவனை இன்னும் வசீகரனாக்கி இருந்தது.

கங்கா “ பார்த்துட்டிங்கல்ல்.. ஏம்மா உனக்கு என் பையனை பிடிச்சருக்குல்ல…” என கேட்க..

அந்த பொண்ணு எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தது.

“சரி வாங்க..” என தான் வந்த காரிலேயே அவர்களை கூட்டி கொண்டு சென்றுவிட்டார்.

கங்காவின் செயலை அனிவர்த்தால் ஜீரணிக்க முடியவில்லை. அசோக்கோ என்னடா நடக்குது என முழித்தான். வந்தாங்க.. பார்த்தாங்க.. போயிட்டாங்க.. அந்த பொண்ணு இருக்கற லட்சணத்துக்கு பாஸை பார்த்து போனா போகுது கட்டிங்கற மாதரி மண்டைய ஆட்டுது.. பாஸ்க்கு சம்மதமானு கேட்கல.. போயிட்டாங்க.. கேட்டாலும் இவரு சம்மதிக்க போவதில்லை.. அதான் அதிரடியாக கங்காம்மா களத்துல இறங்கிட்டாங்க போல.. என நினைத்தவாறே நின்று கொண்டு இருந்தவனை அனிவர்த்தின் கார் ஹாரன் சத்தம் கலைக்க..

“இப்ப காருல ஏறியா.. இல்ல உன் டீரிம் எல்லாம் முடிச்சிட்டு கேப்ல வந்துடு..” என அனிவர்த்தின் மிரட்டலில்… அடித்து பிடித்து ஏறினான். அசோக் ஏறியதும் கார் தாறுமாறாக பறந்தது. அன்னை மேல் இருக்கம் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்தான்.

அனிவர்த் வீடு வந்தவன் ஒன்றும் தெரியாத சாது போல அமைதியாக உட்கார்ந்து இருந்த கங்காவை பார்த்ததும் தன் கைகளில் இருந்த கார்கீ மொபைல் இரண்டையும் விசிறி அடித்தான். மொபைல் தரையில் சிதறி விழுந்தது.

அவனின் கோபம் கண்டு சிதம்பரம் தான் பதறினார். கங்காவோ அமைதியாக “ வாங்க வந்து படுங்க.. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.. நாளைக்கே போய் பாலப்பட்டி ஜோசியர பார்த்து நாள் குறிச்சிட்டு வரனும்..” என சிதம்பரத்தை கூப்பிட..

சிதம்பரமோ மகனையும் மனைவியையும் பார்த்துக் கொண்டே நின்றார்.

“மாம்.. என்னை கட்டாயப்படுத்தி எல்லாம் மேரேஜ் பண்ணி வைக்க முடியாது..”

“கண்டிப்பா உன் கல்யாணம் ஜோசியர் சொல்லற தேதில நடக்கும்.. நடத்தி காட்டுவேன்”

“நான் இருந்தா தான கல்யாணம் பண்ணுவிங்க.. நீங்க இத ஸ்டாப் பண்ணல நான் வீட்டுக்கே வரமாட்டேன்..”

அவன் பேசும் வரை அமைதியாக இருந்த கங்கா எதுவும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றுவிட…தன் பேச்சில் பயந்து போய்விட்டார் கங்கா.. இத்தோடு கல்யாண பேச்சை விட்டுவிடுவார் என நினைத்தான். அப்படி எல்லாம் விட முடியாது என காலையிலேயே நிருபித்தார் கங்கா

காலையில் அனிவர்த் தனது ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன்…

“மாம் காபி..”

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவனிடம்.. “தம்பி காபி “ என வள்ளி நீட்ட..

“அம்மா.. எங்க க்கா..” என கேட்டுக் கொண்டே வாங்கியவன்…

“அம்மாவும் அப்பாவும் பாலப்பட்டி ஜோசியர பார்க்கப் போயிருக்காங்க தம்பி..” சொல்லி விட்டு அவர் சென்று விட..

காபியை குடிக்காமல் வைத்து விட்டு தனது அறைக்கு சென்று குளித்து கிளம்பி சாப்பிடாமலேயே ஆபீஸ்கு கிளம்பிவிட்டான்.

அன்று சென்றவன் தான் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவில்லை. ஜோசியரை பார்த்து விட்டு மாலை தான் வந்தனர். வந்ததும் வள்ளி மூலம் அனிவர்த் சாப்பிடாமல் சென்றதை அறிந்தவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை அப்போது.. ஆனால் இரண்டு நாட்களாகியும் வீடு வராமல் போகவும் மெல்ல கவலை எட்டிப் பார்த்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3 Read More »

என் மோகத் தீயே குளிராதே 9

அத்தியாயம் 9   “அது.. அது வந்து..”    “ப்ச்.. இவளுக்கு இப்ப தான் மேரேஜாச்சு.. திடீர் மேரேஜ்.. சோ, யாரையும் கூப்பிட முடியல..”   “ஹஸ்பெண்ட்..”   “இப்போதைக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க.. எப்போ, ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்குறாங்களோ.. அப்போ சேர்ந்திருப்பாங்க.. போதுமா? இப்ப வந்த வேலைய பாருங்க.. எப்பப்பாரு தொணத்தொணன்னு..”   “சரி அதை விடுடா.. அவ‌ ஏன் உன் கூட இருக்கா?”   “அவளோட ஜாப் இங்க தான்.. சோ, என் கூட

என் மோகத் தீயே குளிராதே 9 Read More »

Elevate Your Aesthetic Experience_ Devi Ambika AI Images Unveiled

ஏகாந்த இரவில் வா தேவதா! – 5&6 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா  [5] பஞ்சாயத்து நடந்து முடிந்த அதே இரவு!  என்ன தான் கொழும்பு மாநகரத்தில் அவள் மாடர்ன் பெண்ணாக திரிந்து கொண்டிருந்தாலும் கூட,  சொந்த ஊருக்கு வந்ததும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே அமைந்திருந்தது அவளது ஆடைகள் எல்லாம்.  கண்டியின் குளிரைத் தாக்குப் பிடிக்கும் வகையில் தன் மணிக்கட்டு வரை மறக்கும் கை நீண்ட டீஷேர்ட்டும், இடுப்புக்கு கீழே ஒரு பிலோசோபேன்ட்டும் அணிந்து, தன் சொந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தவளுக்கோ,  ஏனோ முன்பின் தெரியாத

ஏகாந்த இரவில் வா தேவதா! – 5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

269CB941-7CDB-483C-8051-70E203456C6B

ஆடி அசைந்து வரும் தென்றல் – 2

2-ஆடி அசைந்து வரும் தென்றல்

பார்த்திருந்த அனிவர்த்கு கூட கீற்றலான புன்னகை.. மகனின் புன்னகையை பார்த்த கங்கா…

“அழகான குழந்தை இல்ல.. எப்படி பேசறா..”

ஆமாம் என்பதாக அனிவர்த்மும் தலை அசைத்தான்.

“நீயும் கல்யாணம் பண்ணிகிட்டா..நம்ம வீட்லயும் இப்படி ஒரு குழந்தை இருக்கும்ல..”

“எங்க சுத்தினாலும் கல்யாணத்துல தான் வந்து முடிப்பிங்களா.. வாங்க.. நான் ஆபிஸ்ல என் வேலை எல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன். ஆமாம் நீங்க எப்படி வந்திங்க..”

“வீட்டு காருல வந்திட்டு டிரைவர அனுப்பிட்டேன்..”

“உங்களை.. வாங்க வந்து சேருங்க.. வீட்ல டிராப் பண்ணிட்டு போறேன்..”

காரில் ஏறிய சில நிமிடங்கள் கழித்து அவனை பார்ப்பதும் முகத்தை திருப்பவுமாக இருக்க…

“என்ன சொல்லுங்க..”என்றான் அனிவர்த்.

“இல்ல.. சின்ன டப்பாவுல தான் சாதம் கொண்டு வந்தேனா.. பசி அடங்கல..”

“அதுக்கு..” என்றான் எரிச்சலாக..

“போற வழில ஏடூபில மினி டிபன் வாங்கி கொடு..”

“வீட்டுக்கு தான போறிங்க.. வீட்ல போய் சாப்பிட்டுங்க..”

உடனே தலையை பிடித்துக் கொண்டு “தல சுத்தது.. சுகர் டவுனாயிடுச்சு போல..வீடு போற வரைக்கும் தாங்காது அனிவர்த்” இன்ஸ்டன்டா ஒரு டிராமாவை கிரியேட் பண்ண..

“என்னை டார்ச்சர் பண்ணறிங்க..”

“அதுக்கு தான் சொல்றேன்.. எனக்கு ஒரு மருமக வந்தா அவள் டார்ச்சர் பண்ணுவேன். நீ நிம்மதியா இருக்கலாம்”

“உங்களையே டால்ரேட் பண்ண முடியல… இதுல இன்னொருத்தியா…”

ஆஹா பயபுள்ள எப்படி பந்து போட்டாலும் சிக்சரா அடிக்கிறானே.. சோர்ந்து போயிடாத கங்கா.. உனக்கு மருமக வரனும்னா இன்னும் எஃபோர்ட் போடனும்..என தன்னை தானே தேற்றி கொண்டார்.

பணத்தை பணமாக மதிக்காமல் பொழுதுபோக்கிற்காக லட்சங்களை ஒரே இரவில் செலவளிக்கும் விஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நவீன கிளப் அது.

சனிக்கிழமை இரவு …. கைகளில் பொன்திரவம் அடங்கிய கண்ணாடி கோப்பையில் பனிகட்டிகள் மிதங்க.. ஒவ்வொரு மிடறாக ரசித்து ருசித்து கொண்டு இருந்தான் அனிவர்த்.

வாரம் முழுவதும் தொழிலின் பின் ஓடும் அனிவர்த் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு இரவு வரை அவனுக்கே அவனுக்கான பொழுதுகள்… அதில் அவன் அனுமதியின்றி யாரும் தலையிட முடியாது.

எதை மறைக்க உடை உடுத்துவோமோ.. அதை எல்லாம் தாரளமாக காட்டி கொண்டு கையில் மது கோப்பையுடன் நளினமாக நடந்து வந்த நவயுக நங்கை ஒருத்தி அனிவர்த் அமர்ந்திருந்த ஒற்றை சோபாவின் கை பகுதியில் அமரந்து…

“கேன் ஐ ஜாயின் வித் யூ டார்லிங்” என மிழற்ற…

அனிவர்த்தின் பார்வை அவளை மேலிருந்து கீழாக இஞ்ச் பை இஞ்ச்சாக அளந்து கொண்டு இருந்தது. அந்த பார்வை தான் இவளுக்கு கொடுக்கும் பணத்திற்கு இவள் ஒர்த்தா என ஆராயும் பார்வை..

அவனின் பார்வையை சரியாக படித்தவளோ.. அவனிடம் நெருக்கத்தை கூட்டி.. தாரளமாக தன் உடல் உரசுமாறு அவனை லேசாக அணைத்து அவன் முகம் பார்க்க..

“ம்ம்ம்.. ஓகே..” என்றான். என்னவோ அடிமைக்கு வாழ்வளிக்கும் ராஜாவை போல ராஜதோரணையில்…

“லெட்ஸ் கோ..”என அனிவர்த் எழுந்து கை நீட்ட அவளோ அவனின் தோளில் தொத்திக் கொண்டாள். அவளை தனது காரில் ஏற்றி கொண்டு இந்த மாதிரியான மன்மத லீலைகளுக்கென வாங்கி இருந்த ப்ளாட்டிற்கு பறந்தான்.

அனிவர்த்தின் கார் அந்த அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என தெரியாத.. தெரிந்து கொள்ள விரும்பாத.. தனிதீவுகளாக வாழும் ஹை சொசைட்டி பீப்புள் வாழும் பகுதி.

கார் பார்கிங்கில் காரை நிறுத்தி அனிவர்த் காரை விட்டு இறக்கியதும்.. அவளும் காரை விட்டு இறங்கி காரை சுற்றி கொண்டு ஓடி வந்து அனிவர்த்தை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளின் இடுப்பில் கை போட்டு நெருக்கத்தை அதிகப்படுத்தியவாறே… லிப்ட்டுக்குள் நுழைந்தான்.

லிப்ட் கதவு மூடும் வரை கூட பொறுக்காமல் தன்உடல் அங்கங்கள் அவன் மேல் அழுந்துமாறு இறுக்கி அணைத்தவள் வாயோடு வாய் பொருத்தினாள். அந்த இதழ் முத்தம் லிப்ட் பதினெட்டாவது மாடியில் போய் நிற்கும் வரை நீடித்தது. அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் தொடை வரை மட்டுமே இருந்த பாடிகான் டிரஸ் அவனின் கைகளின் அந்தரங்க அத்துமீறலுக்கு வசதியாக இருந்தது.

தனது ப்ளாட்டிற்கு வந்ததும் நேராக தனது படுக்கையறைக்குள் அவளோடு சென்றவன் அவளை அங்கிருந்த இருக்கையில அமர வைத்து விட்டு ஏசியை ஆன் பண்ணி அதனின் குளிரை அதிகப் படுத்தினான்.

அவளோ அந்த பெரிய படுக்கையறையே கண்களால் அளந்து கொண்டு இருந்தாள். கிங் சைஸ பெட்.. பெட்கு நேரேதிர் சுவற்றில் அறுபத்தைந்து இஞ்ச் டிவி.. வலதுபுறம் ஒரு மினி பார். இடதுபுறம் ஜக்குஸியோடு கண்ணாடி கதவுகள் கொண்ட குளியலறை.. என எங்கும் பணத்தின் செழுமை.. அவனின் மன்மதலீலைக்கென அழகாக வடிவமைத்து கொண்ட அந்தபுரம் தான் அந்தப்ளாட்.

கண்களால் அளந்து கணக்கீடு செய்தவள்இன்று பெரியதாக தேறும் என எண்ணி மகிழ்ந்து போனாள். அனிவர்த் இரண்டு பெரிய கண்ணாடி கோப்பைகளில் பனிகட்டிகள் மிதங்க வைன் எடுத்து வந்து அவள் கைகளில் ஒன்றை கொடுத்து விட்டு அவளை இடித்தாற் போல் கொஞ்சம் பெரியதாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான்.

ஒருவருக்கொருவர் மதுரசத்தோடு இதழ் ரசமும் பருகி உடையை நெகிழ்த்தி நெகிழ்ந்து படுக்கைக்கு வந்திருந்தனர். மென்மையாக ஆரம்பித்தவன் வன்மையாக கையாண்டும் உடலின் தேடல் தீர்ந்த போதும்.. அவனின் மனதின் தேடல் தீரவில்லை.

அன்றொரு பனிக்காலத்தில் இரவு பகல் பாராமல் காரிகை ஒருத்தியோடு கொண்ட கூடல் போல நிறைவை இதுவரை யாரும் தரவில்லை. காதலோடு இணைந்தவளிடம் காமத்தோடு கூடியவன்.. அவளை மறந்தும் போனான். ஆனால் லயிப்போடு கொண்ட உறவு என்பதாலோ என்னவோ… அவனின் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

பொருளுக்காக காமத்தை விலை பேசும் மாதரிடம் எதை தேடுகிறோம் என தெரியாமல் உடல்பசி தான் தணிந்தது.. அதன் பின் ஆழ்மனம் விழித்துக் கொள்ள.. மனம் எங்கும் தோன்றும் எண்ணச் சிதறல்கள் அவனை அமைதி கொள்ள விடுவதில்லை. எதை தேடுகிறோம்.. எதை நாடுகிறோம்… என புரியவில்லை.

அந்த தேடல் தான் காதலின் ஆரம்பபுள்ளி என்பதையும் அறியவில்லை அனிவர்த். வந்தவளோ போதையின் தயவில் உறங்கி விட.. எதற்காக மனம் அலைப்புறுகிறது என அறியாமல் உறக்கம் பிடிபடவில்லை. இப்படி உறவு கொள்ளும் நாள் எல்லாம் உறக்கம் கொள்வதில்லை. தன் மனதின் போக்கும் அவனுக்கு புரியவில்லை.

வர வர இந்த உறவுகளின் பிடித்தமும் குறைந்து கொண்டே வருகிறது. உறக்கம் கொள்ள.. மதுவை நாடியவனுக்கோ தன்னை மறக்கடிக்கும் போதையும் பிடிக்கவில்லை. மது மாது பந்தம் பாசம்
என்று யாரும் எதுவும் தன்னை அடிமைப் படுத்தக்கூடாது.

மூன்று வருட ஜெர்மன் வாசம் அவனை அப்படி மாற்றி இருந்தது. எல்லா ஆண்பிள்ளைகள் போலவே அனிவர்த்துக்கும் அம்மா என்றால் அலாதி பிரியம் தான். அம்மா மகன் உறவை மீறிய நட்பு அவர்களுக்குள் இருந்தது. சிதம்பரம் ஒரு கடமை தவறாத சராசரி தந்தை அவ்வளவு தான்.

மேற்படிப்புக்காக சென்றவன் யாரும் யாருக்கும் கட்டுபடாத சுகந்திர வாழ்க்கை பிடித்து போய் அதில ஊறி திளைத்துப் போய் வந்தான். கட்டுகடங்காத களரியாக தான் மாறி போனான் மகனின் பிரிவும் மாற்றமும் கங்காவின் நோய்களுக்கு காரணமாகி போனது..

விடிய விடிய பலவித யோசனையில் தூங்காமல் விழித்து இருந்தவன் எங்கேயாவது வெளியே சென்று வந்தால் நல்லா இருக்கும் என நினைத்து குளித்து தயாராகி தன்னோடு வந்தவள் விழிப்பதற்காக காத்திருந்தான்.

பதினொருமணி வாக்கில் விழித்தவள் உடல் மொழியால் அழைப்பு விடுக்க.. அதை புறகணித்து தான் அமர்ந்து இருந்த சோபாவை விட்டு எழாமல் தனது வாட்ச்சில் மணி பார்த்தவன்…

“உனக்கான கவர் அதோ..” படுக்கையின் அருகே இருந்த டேபிளை காண்பித்தவன்…

“நீ கிளம்பலாம்..” என கை அசைத்து சொல்ல.. அவளோ இன்று முழுவதும் இவனோடு இருந்து பெருத்த தொகை பார்த்துவிடலாம் என நினைத்திருந்தாள். அவனின் உதாசீனத்தில் முகம் அஷ்டகோணலாகிவிட.. நினைத்து வந்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் கிளம்பிவிட்டாள்.

அந்த பெரிய ஷாப்பிங் மாலில் தனது பேவரிட் பிராண்டட் ஷோருமில் தனக்கான உடைகளை தேர்வு செய்து கொண்டு இருந்தான் அனிவர்த்.

“ஹாய் அங்கிள்..” என தனதருகே குரல் கேட்க.. திரும்பி பார்த்தவனுக்கு யார் என தெரியவில்லை.

“என்னை தெரியலையா.. ஐயம் ஷாஷிகா..” என்றது பெரிய மனுசி தோரணையில்..

சத்தியமாக அனிவர்த்கு யார் என தெரியவில்லை. அந்த குட்டி பொண்ணு அவனின் ஞாபகத்தில் இல்லை. அறிமுகம் இல்லாத பார்வை பார்க்க..

“ம்ப்ச்.. டூ பேட்.. உங்களுக்கு மறந்து போச்சா.. மென்டேக்ட் டெய்லி டூ டைம்ஸ் சாப்பிடுங்க.. ரித்தீஷ் சாப்பிடுவான்”

ஷாஷிகாவின் பேச்சு அவனின் தாளம் தப்பிய மனதிற்கு லயம் சேர்த்தது. மனதில் கூடிய இதம் இதழில் புன்னகையாக மலர… ஷாஷிகாவின் நினைவு மின்னலாக ஒளிர…

“ஹேய் பேபி டால் நீ அந்த கோவிலில் பார்த்த பாப்பா தான..”

“ஹப்பாடா ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டிங்களா.. ரித்தீஷ் மாதிரி இல்லை..” என தன் கையை உதறி கிளுக்கி சிரித்தது.

ஷாஷிகாவின் பேச்சும் செயலும் பிடித்திருக்க… விரும்பியே பேச்சை வளர்த்தான்.

“யாரு அந்த ரித்தீஷ்..”

“என் சுவாதி சித்தி சன்”

“ஓகே பேபி டால்.. நீ யார்கூட வந்த.. உன்னை தேட போறாங்க..”

“அச்சோ…சித்தி தேடுவாங்க.. பை..“ நெற்றியில் தட்டி கொண்டு இரண்டு அடி வைத்தவள் திரும்பி ஓடி வந்து அனிவர்த்திடம்

“அந்த பாட்டிக்கு கால்வலி இப்ப பரவாயில்லையா..”

“ம்ம்..இப்ப அவங்க ஓகே பேபி டால்”

“டோன்ட் கால் பேபி டால்… கால் மீ ஷாஷிகா..” என்றது உத்தரவாக…

“உத்தரவு ஷாஷிகா அவர்களே..”கொஞ்சம் பணிவாக.. நிறைய சிரிப்போடு அனிவர்த் சிரம் தாழ்த்தி சொல்ல…

“வெரி குட்..” ஷாஷிகா சொல்லி கொண்டிருக்கும்போதே ஒரு பெண் ஷாஷிகாவை தேடி கொண்டு வந்தவள்.

“ஷாஷி..ஷாஷி.. இங்க என்ன பண்ற..”என கையை பிடித்து அழைத்து சென்றாள்.

“முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட பேசாதேனு சொல்லி இருக்கோம்ல..”

“அந்த அங்கிள்ல நான் கோயில்ல பார்த்து இருக்கேன்”

“முதல்ல தொண தொணனு பேசறத நிறுத்து..”

எப்படி க்யூட்டா பேசற குழந்தையை போய் இப்படி திட்டறாளே.. என்ன பெண்இவள் என அனிவர்த் நினைத்தவன் மனதிற்கு ஒரு மாற்றமாக இருக்க ஷாப்பிங் வந்தவனுக்கு வந்த வேலை சிறப்பாக முடிய.. வாங்கிய வரை போதும் என கிளம்பிவிட்டான்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 2 Read More »

Elevate Your Aesthetic Experience_ Devi Ambika AI Images Unveiled

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [3]   அன்று மதியம் உணவினை முடித்து விட்டு அப்படியே வாஷ் ரூம் சென்றவள், தன்னுடைய உடையினை இலேசாக சரி செய்த வண்ணம்,  ஆடையின் நேர்த்தி பிசகாமல் வெளியே வந்த போது.. அலுவலகமே பரபரப்பாக இருப்பதை உணர்ந்தாள்.  அதிலும் குறிப்பாக அவளுடன் பணி புரியும் பெண் அலுவலகர்கள், அந்த வெண்மையான டைல்ஸ் தரையில் ஹீல்ஸ் பாதங்களை தடதடவென பதித்த வண்ணம்,  இவளொருத்தி இருப்பதைக் கூட கணக்கில் எடுக்காமல், போகிற போக்கில் யௌவனத்தமிழ்ச்செல்வியையும்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா) Read More »

7E9EA1A8-2516-4F31-9F2D-B72E91C7CFF9

ஆடி அசைந்து வரும் தென்றல் – 1

1- ஆடி அசைந்து வரும் தென்றல்

சி.கே டிரேடர்ஸ் சென்னையின் மையப் பகுதியில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு நடுவே ஐந்து அடுக்கு மாடிகட்டிடமாக கம்பீரமாக வியாபித்து இருந்தது. அங்கு மூன்றாவது தளத்தில் கான்ப்ரன்ஸ் ஹாலில் நீளமான டேபிளின் இருபக்கமும் ப்ரொடக்‌ஷன் அண்ட் சேல்ஸ் டிப்பாரட்மெண்ட்களில் வேலை செய்யும் முக்கிய நபர்கள்அமர்ந்திருக்க டேபிளின் வலது பக்கம் நடுநாயமாக அனிவர்த்சிதம்பரம் அமர்ந்திருந்தான்.

அந்த மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ரிப்போர்ட்கள் வாசிக்கப்பட… தீர்க்கமான பார்வையோடு அதை கவனித்து கொண்டு இருந்தான் அனிவர்த் சிதம்பரம். அப்போது அவன் இடது பக்கம் டேபிள் மேல் இருந்த மொபைல் வைப்ரேசனில் அதிர்ந்தது. சிறிதும் அலட்டிக்காமல் கண் விழியை மட்டும் இடது புறம் திருப்பி பார்க்க… திரையில் மாம் காலிங் என ஒளிர… அதை சட்டை செய்யாது தனது பார்வையை மாற்றி மீட்டிங்கில் கவனத்தை செலுத்தினான்.

அவனது மொபைல் மீண்டும் மீண்டும் ஒளிர.. ஒரு கட்டத்தில் அதை அணைத்து வைத்துவிட்டான். மீட்டிங் முடிந்து தனது அறைக்கு வந்தவன் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எப்படி எக்ஸ்கியூட்டிவ் பண்ணுவது பற்றிய சிந்தனையில் தனது லேப்டாப்பில் மூழ்கி போனான். தனது மொபைலை உயிர்ப்பிக்கவும் மறந்தான். தன் தாய் அழைத்ததையும் மறந்துவிட்டான்.

மேலும் ஒரு மணிநேரம் சென்ற நிலையில் அவனின் அறை கதவு அவனின் அனுமதிக்காக தட்டப்பட….

“எஸ்..” என அவன் அனுமதிக்கவும்…

உள்ளே வந்த அவனது பி.ஏ அசோக் அனிவர்த்தை பார்த்து தயங்கி நிற்க….

லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்க..

அசோக் “பாஸ்” என்று வார்த்தையை மென்று முழுங்க..

அவன் என்ன சொல்ல வந்துள்ளான் என அறிந்திருந்த அனிவர்த்..

“ம்ம் சொல்லு.. என்னசொன்னாங்க..”

“அம்மா.. கோவிலில்..”

நிறுத்து என்பது போல கையை உயர்த்தியவனுக்கு தெரியும் அவன் அம்மா என்ன சொல்லி இருப்பார் என…

நான் எத்தனை பேரை தெறிக்க விடறேன். இவங்க என்னயவே தெறிக்க விடுவாங்க.. என பல்லை கடித்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று முடியாமல் தனது வாட்ச்சில் மணியை பார்க்க..அது மணி மூன்று என காட்ட..

மேலும் கோபம் அதிகரிக்க.. தனது மொபைலையும் கார் கீயையும எடுத்து கொண்டு தனது வேக நடையுடன் அறையை விட்டு வெளியேறினான்.

அடுத்த நிமிடம் அசோக்கின் அலைபேசி அடித்தது. திரையை பார்த்தும் ஜெர்காகினான். கங்காம்மா என திரையில் காட்ட..

உடனே அட்டென்சன் பொசிஷனுக்கு வந்து அலைபேசியை காதில் வைத்தவுடன் இவன் ஹலோ சொல்லும் தேவையின்றி எடுத்த எடுப்பிலேயே…

“ஏன்டா அசோக்கு உங்க பாஸ் இன்னும் கிளம்பலையா.. பாஸாம் பாஸ்.. கொள்ளகூட்டத் தலைவன கூப்பிடற மாதிரி… ஏன்டா நா கேட்டுட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம புத்திய என்ன புல் மேய விட்டுட்டியா…”

ஐயோ.. கேப் விடாம பேசினா நான் எப்படி தான் சொல்லறது.. டேய் தகப்பா நல்ல லூசு குடும்பத்துல என்ன சிக்க வச்சுட்டு நீ மட்டும் ரம்பா ஊர்வசியோட செட்டில் ஆகிட்ட.. என மேலே அண்ணாந்து பார்த்து புலம்பினான்.

அதற்குள் கங்கா “டேய் லூசுப்பயலே.. லைன்ல இருக்கறியா…”

ஏதூ.. நான் லூசா.. உங்களுக்கு வாக்கப்பட்டா நான் லூசா தான் திரியனும்.. என்னது வாக்கப்பட்டாவா ஐயோ அசோக் லூசாவே ஆகிட்டியா… இல்லவே இல்ல.. ஆக்கிட்டாங்கடா… மைண்ட் வாய்சில் புலம்ப… அடுத்து கங்கா பேசியதில் அசோக்கிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.

“டேய் மங்கூஸ் மண்டையா.. இருக்கறியா.. மண்டைய போட்டுட்டியா…” என கேட்டுட்டு…

“அச்சோ பகல் பூரா இவன டார்ச்சர் பண்றதால… எனக்கு சேதாரம் கம்மியா இருக்கு… இவனும் போயிட்டான்னா நா பெத்த மகராசன் என்னை டார்ச்சர் பண்றத முழு நேர ஹாபியா வச்சுக்குவானே.. முருகா என்னை மட்டும் காப்பாத்து ” என தனக்கு தானே புலம்ப… கேட்டிருந்த அசோக் நெஞ்சை பிடித்து கொண்டு அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தான்.

“ஹலோ.. ஹலோ.. நிசமாவே போயிட்டான் போல..”என போனை வைத்துவிட்டார் கங்கா.

அதிர்ச்சியில் பேச முடியாவிட்டாலும் கங்கா சொல்வதை எல்லாம் கேட்டிருந்தவன் “இந்த பொழப்பு உனக்கு தேவையா.. இந்த பொழப்புக்கு ஊருல போய் கருவாட்டு கடை வச்சு கூட பொழச்சுக்கலாம் டா..” என அவனை அவனே இரண்டு கன்னத்தில் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள…

அப்போது எம்டியிடம் சைன் வாங்க வந்த ரஷிகா.. அசோக்கை பார்த்து கையில் வைத்திருந்த பைலை கீழே போட்டு விட்டு பயந்து போய் ஓடிவிட்டாள்.

“இந்த ஆபீஸ்ல என்னை சைட் அடிச்ச ஒரே பிகரையும் ஓட வச்சுட்டாங்களே.. நல்ல குடும்பம் டா நீங்க மட்டும் நல்லா இருங்க…” என தலையை கைகளால் தாங்கி கொண்டு பொருமினான்.

தனது தாயின் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்து ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கோவிலுக்கு அரை மணி நேரத்தில் வந்து இருந்தான் அனிவர்த்.

தாறுமாறாக காரை பார்க் செய்தவன் தாயை தேடியவாறு உள்ளே வேகமாக வந்தான். அவன வந்த வேகத்தில் எதிரே வந்த சிறுமியின் மேல் இடித்து விட்டு இருந்த கோபத்தில் கவனிக்காமல் செல்ல..

“ஹலோ மிஸ்டர்.. இடிச்சிட்டு சாரி கூட கேட்காம போறிங்க.. பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா…”

யாரது என திரும்பி பார்க்க.. அந்த சிறுமி கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து அனிவர்த்தை பார்த்து முறைத்து கொண்டு நின்றது.

“ஓய்.. என்ன..”என மிரட்ட..

“ஏய் மேன் நீ இடிச்சுட்டு என்னை மிரட்டறியா..”

“இப்படி தான் ரெஸ்பெக்ட் இல்லாம பேசுவியா… உங்கம்மா உனக்கு பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்னு சொல்லி தரலையா…”

“உங்கம்மா தப்பு செஞ்சா சாரி கேட்கனும்னு சொல்லி தரலையா…” என அந்த சிறுமியும் பதிலுக்கு பதில் வாயாட..

அனிவர்த்தின் கோபமோ எல்லை கடந்து கொண்டு இருந்தது.உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு என எண்ணி அனிவர்த் நகர..

“சாரி கேளு..” என ஆர்ட்ர போட்டது வாண்டு.

குட்டி சாத்தானா இருக்கும்போல.. இதுகிட்ட பேச நேரமில்ல..என நினைத்தவன்..

“சாரி” என்றான் எரிச்சலான குரலில்..

“இட்ஸ்..ஓகே..” என்றது போனா போகுது பாவனையில் கையை அசைத்து..

“ஹேய்… கிரேசி..”லேசாக சிரித்துவிட்டான்.

அவன் கோபத்துடன் வந்ததது என்ன.. இப்போ சிரிப்பது என்ன…
சின்ன சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.

கோவில் மண்டபத்தில் பரிகார பூஜை செய்வதற்கான ஏற்பாட்டோடு அந்த கோவிலின் அர்ச்சகர் ஓமகுண்டத்தின் முன் அமர்ந்திருக்க… அவரின் அருகில் பயபக்தியோடு கங்கா அமர்ந்திருந்தார்.

அனிவர்த்கு தன் அன்னையை பார்த்தும் குறைந்திருந்த கோபம் டாப் கியரில் எகிறியது. வேகமாக அன்னையின் அருகே சென்றவன் “என்ன பண்ணிட்டு இருக்கறிங்க…” என அடிக்குரலில் சீறினான்.

‘போடா உன் பூ்ச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படுவனா..’என நினைத்தவர்.. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு..

“என்ன அனிவர்த்.. உன்கிட்ட காலையிலேயே சொன்னேன்ல..” என கண்ணை சிமிட்டி சிமிட்டி பேச..

“உங்க டிராமாவை நிறுத்தறிங்களா..” என்றான் கடுப்போடு…

“ஏங்கம்மா இவர் தான் உங்க புள்ளையாண்டானா.. வாங்கோ வந்து மனையில் அமருங்கோ..ரொம்ப நாழியாயிடுத்து..”என அர்ச்சகர் சொல்ல..

இப்போ அன்னையை விடுத்து அர்ச்சகரை முறைத்து பார்த்தான்.

அவனின் பாசப் பார்வையில் அர்ச்சகர்அமைதியாகி விட.. திரும்பி அன்னையை பார்த்தவன்…

“நீங்க இன்னும சாப்பிடல தான…”

“ஆமாம்..”என முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.

“உடம்புல சுகர் பிரசர்.. ஹார்ட் ப்ராப்ளம் என ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்… டைம்கு சாப்பிடாம…மெடிசன் எடுக்காம.. இங்க என்ன பண்ணறீங்க…”

“காலையிலேயே சொன்னேன்ல அனிவர்த்… இப்படி கேட்கற…”

“உங்களுக்கு சொன்னா புரியாதா…எனக்கு மேரஜ் லைப்ல இன்டரஸ்ட் இல்லைனு சொல்லறேன்ல…”

“அடியே கங்கா.. உனக்கு கடைசி வரைக்கும் மருமகளோட சண்ட போடற பாக்கியம் இல்லடி.. இல்லவே இல்ல.. பக்கத்து வீட்டு பங்கஜம் இரண்டு மருமகளோட தினமும் சண்டையும் ச்ச்சரவுமா.. நல்ல என்டர்டெயினோட என்ஜாய் பண்றா.. நீ இப்படியே பினாத்தியே காலம் போயிடும் போல..” என சத்தமாகவே அனிவர்த் காதில விழவேண்டும் என்றே பேச…

“போதும்..இப்ப உங்களுக்கு நான் என்ன பண்ணனும் .. அங்க உட்காரனும் அவ்வளவு தான… வாங்க முதல்ல இங்க பக்கத்தில் இருக்கற ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டு வந்து இதை பார்க்கலாம்..”

“நீ மனைல உட்காரு நான் சாப்பிடறேன்..”

அனிவர்த் கங்காவை உறுத்துப் பார்க்க.. தனது பேகில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து காட்ட..

“எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி ஒரு செட்டப்போட தான் வந்திருக்கறிங்க.. போய் உட்காருகிறேன்..” நெற்றயில் அடித்துக கொண்டு போய் மனையில் அமர…

அர்ச்சகரோ.. “வேஷ்டி கட்டிண்டு வாங்கோ..” என்க..

அவரை டெர்ர் லுக் விட.. ‘அம்பி பெரிய பிஸ்தாவோ இருப்பான் போல..’கப்பென வாயை மூடிக் கொண்டார்.

அவ்வ் என வடிவேலு பாணியில் முகத்தை வைத்து கொண்ட கங்கா..

“சாமி ஆரம்பிங்கோ.. “ என சொல்லி விட்டு.. அங்கேயே தூணில் சாய்ந்து அமர்ந்து டப்பாவில் இருந்த லெமன் ரைஸை ஸ்பூனால அள்ளி சாப்பிட ஆரம்பித்தார் நல்லா எண்ணெய் உப்பும் நிறைந்த ஊறுகாயோடு…

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தவன்… ‘என்னை பண்ற டார்ச்சர்ல இவங்கள மாதிரியே எனக்கும் சுகர் ப்ரசர் எல்லாம் வந்துடும்.. ‘ மனதுள் பொருமியவாறு.. கங்காவை பார்த்தான்.

வாய் நிறைய சோறோடு ஹீஹீ… என கங்கா சிரிக்க… கோப மிகுதியில்… அர்ச்சகர் கொஞ்சம் கொஞ்சமாக ஹோமத்தீயில் போட சொன்ன சமத்துக் குச்சிகளை மொத்தமாக போட்டுவிட்டான்.இவனை போலவே அதுவும் புகைய.. அனிவர்த்கு கண்கள் எரிச்சலாடு.. இருமலும் வர..இன்னும் இன்னும் காண்டானான்.

எல்லாம் முடிந்து அனிவர்த் கையால ஒரு ஏழை பெண்ணிற்கு தாலி தானம் செய்ய.. அதை அந்த பெண்ணின் பெற்றோர் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல..அதை கண்டு கொள்ளாமல்..

“கிளம்பலாமா..”என கங்காவிடம வந்து நின்றான். முழங்கால் வலியோடு தட்டு தடுமாறி எழ கை பிடித்து தூக்கிவிட்டான். பாதங்கள் மறுத்து போயிருக்க.. தூணை பிடித்து கொண்டு கால்களை மாற்றி மாற்றி உதறினார் கங்கா..

எங்கிருந்தோ ஓடி வந்தாள் அதே சிறுமி. கங்காவின் அருகே குத்து காலிட்டு அமர்ந்து கங்காவின் பாதங்களை தன் பிஞ்சு விரல்களால் நீவிவிட்டது்.

“எங்க பாட்டிக்கும் இப்படி தான் ஆகிடும். நான் பிடிச்சு விட்டா சரியாகிடும்.. சரியா..”என்று கங்காவை அண்ணாந்து பார்த்து சொன்னது. அந்த குழந்தையின் பேச்சிலும் செயலிலும் கங்காவின் கண்கள் கலங்கிவிட்டது.

கருவறையில் இருந்த அம்மனை பார்த்து கங்கா… என் காலம் முடிவதற்குள் இது போல பேரப்பிள்ளைகளை தொட்டு தூக்கும் பாக்கியம் கொடுமா.. தாயே.. என வேதனையோடு வேண்டுதல் வைத்தார்.

“இப்ப மெதுவா வாக் பண்ணுங்க..”என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் அந்த சிறுமி.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 1 Read More »

SAVE_20240403_163620

8 சில்லுன்னு ஒரு விவாகரத்து

8 ஜில்லு முத்தம் கொடுத்தான் அது கூட ஏதோ வயசுக்கோளாறு கூட வச்சுக்கலாம் அது என்ன பச்சக்குன்னு அமுக்குறது.. வலிக்குதுல.. பன்னி! பிசாசு! எருமை! திட்டி தீர்த்தாள் ஷால்யா. மேடுகள் சிவந்து வலித்தாலும் குறுமிளகுகள் ரெண்டு குறு குறுன்னு உறுத்தியது. ஏற்கனவே அவன் கையில் உருகிய வெண்ணெய் குன்றுகளாச்சே!! கைகொண்டவன் சேவைக்கு ஏங்கின. சொந்தக்காரிக்கு நன்றியில்லாது நடந்து கொண்டன. புருஷன் தானே ஒத்துகிட்டா இவ்ளோ எல்லை மீறுறான். எந்த பொம்பளை ஓகே சொன்னாலும் செஞ்சுருவான் போல.. இருடா

8 சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »

Screenshot_20240422-194056_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா)

 ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [2]   இந்தியா, தில்லி.  டெராஸிலிருந்தும் வந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் நிற மின்விளக்கொளி அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் பட்டுத் தெறிக்க,  கரை தட்டிக் கொண்டிருந்த நீர் அலைகளோ பொன் வண்ணமாக காட்சி தருவது… பார்ப்பதற்கு அத்தனை இரம்மியம்.  சீமெந்திலான மூன்று பக்கச் சுவர்களும், இன்னொரு பக்கம் பாரிய கதவுகள் கொண்ட ஓர் கண்ணாடிச் சுவரும்…  அதனையொட்டி அமைந்த டெராஸூம்… டெராஸோடு மினுங்கும் நீச்சல் தடாகமும் என… வெகுசொகுசான அறை தான்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top