ATM Tamil Romantic Novels

Photo-20240402-144052-S-993x1291

20 ஆசை வெட்கமறியாது

20.2 ஆசை   நம்பவே மாட்டேன் போடா போடான்னு ரொம்ப வெறி பிடிச்ச யட்சிணி போல அவனை உதைச்சி கிள்ளி கடித்து காதலோடு ஊடல் விஜி.. அவன் சொல்வதை அவளால் ஏற்க முடில..   நீ ஏன் பெரிய விஷயமா எடுத்துக்கிற.. விவரம் இல்லாதப்போ நடந்ததை இப்போ போட்டு பிரட்டாதே   டேய் தடியா என்னை சொல்ற நீ அதுதான் காண்டாவுது.. முறைத்தாள் விஜி..   விஜியின் காது மடலை தன் நாவால் நீவி முத்தமிட்டு கோவம் […]

20 ஆசை வெட்கமறியாது Read More »

4 சில்லுன்னு ஒருவிவாகரத்து

4 ஜில்லு   ஸ்ரீ.. புது பெண்ணுக்கு ட்ரெஸ் கோட் சொல்லலயா?   அவங்க போர்த் பிளேஸ்ல இருந்ததால் சொல்லல.. ஸ்ரீனி நெளிந்தான்.   பேன்ட் ஷர்ட் ஹை ஹீல்ஸ் அல்லது புஷ் ஷர்ட் லாங் ஸ்கர்ட்  அதெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியாச்சு. லியா  டிசைனர் சுடிதார் போட்டு மயிலாய் வருவாளே தவிர வெஸ்டர்ன் கிட்டே போக மாட்டா. ஏனோ சட்டத்திட்டதுக்கு அடங்கல.   இனி சொல்லிடுங்க.. இன்னைக்கு ஷெட்யுல்?   ஸ்ரீனி நோட் எடுக்க..  

4 சில்லுன்னு ஒருவிவாகரத்து Read More »

5084B066-540D-4AC3-A08E-4D1B268ABF71

புள்ளி மேவாத மான் – 24

24- புள்ளி மேவாத மான்

இதோ வெகு விமரிசையாக ஊரையே அழைத்து எழிலுக்கு வளைகாப்பு நடத்தி கொண்டு இருந்தான் தனா. மண்டபம் பார்த்து வைக்கலாம் என வீட்டார் சொல்ல வேண்டாம் என மறுத்து வீட்டிலேயே வைத்து கொண்டான். அவனிற்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டிலேயே தன் வாரிசின் வரவுக்கான விழா நடை பெறவேண்டும் என நினைத்தான்.அவன் சொன்னது போலேவே ஒன்பதாம் மாதம் தான்.
தனக்கு இருக்கும் ஒரே உறவு அவள் தான்.அதுவும் தன் காதல் மனைவி. தன் வாழ்க்கையில் விடிவெள்ளியாக வந்து வாழ்வை பிரகாசமாக்கினாள் என்றால் .. மண்ணில் உதிக்கும் முன்பே தந்தை மீதான அளப்பற்கரிய பாசம் கொண்ட அவனுடைய பாப்புகுட்டியின் வருகையை உலகுக்கு பறை சாற்றும் விழா. இவர்களுக்கான விழா கொண்டாடி மகிழ்ந்தான்.
மனம் நிறைந்த ஆசைகளோடு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். முத்துக்குமார் தன் செல்லமகளுக்காக செய்ய மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் தனாவோ சீர்வரிசை மட்டும் செய்யுங்கள் போதும். என் மனைவிக்கு நான் செய்து கொள்கிறேன் என்க..
ஏழாம் மாதம் அனுப்பாததாலேயே ஏக கடுப்பில் இருந்தவர் வழக்கம் போல முத்துக்குமார் சுந்தரத்திடம் பஞ்சாயத்து வைக்க.. சுந்தரம் சொல்லியும் தனா கேட்கவில்லை. ஒரே பிடிவாதமாக தன் நிலையில் நின்று விட்டான்.
முத்துக்குமாரை சமாதானம் செய்வதற்குள் சுந்தரம் தான் சலித்து போனார். “முதப் புள்ள இல்லையா.. அதான் ஆட்டம் போடறான். அடுத்து இரண்டு மூன்று பொறந்தா அடக்கிடுவான். அடுத்த புள்ளபேறும் நீங்க தான் பார்க்க போறிங்க மாமா.. இப்ப அவன் போக்குல விட்டு புடிப்போம்” என சமாதானம் செய்தார்.
சுந்தரம் சொன்னதில் இரண்டு மூன்று பேரக்குழந்தைகள் என்ற நினைப்பே தித்திப்பாக இருக்க.. எளிதில் விட்டு கொடுத்தார்.
இருந்த போதும் வழக்கம் போல மாமனார் மருமகனும் பார்க்கும் போது எல்லாம் முறைத்துக் கொண்டு இருந்தனர்.
கற்பகத்திற்கமும் ஏழாம் மாதம் அழைத்து வந்து மகளை சீராட்ட ஆசைப்பட்டார். தனா மறுத்ததில் மனக்குறை இருந்த போதும்.. மகளின் மீதான மருமகனின் பாசத்தில் மனம் நிறைந்து போனார்.
அவ்வப்போது மகளிற்கு பிடித்ததை செய்து தமிழரசனோடு வந்து பார்த்து விட்டு சென்றார்.
தனா இதுக்கும் அதுக்கும் என நில்லாமல் சுற்றி சுற்றி அலைந்து எல்லாமே சரியாக நடக்கிறதா என பார்க்க.. கருணா இவனின் அலும்பை பார்த்து..
“டேய் மாப்பிள்ளை.. எதுக்குடா இப்ப ஓரிடம் நில்லாமல் அலைந்து கொண்டு இருக்கிற..”
“அது எல்லாம் சரியா இருக்கானு பார்த்தேன்”
அவனை கருணா முறைத்து பார்த்தான்.
“ஏன்டா உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..”
ஒன்றும் தெரியாதவன் போல “என்னடா” என்றான் சிரிப்பை உதட்டை மடித்து அடக்கி கொண்டு..
அதில் மேலும் கடுப்பாவன் “என்ன… என்னடா..ஏற்கனவே நீ பண்ற அட்டகாசத்துல எங்க பொண்டாட்டிங்க எங்களை மதிக்கறதே இல்லை.. மானக்கேடா பேசறாங்க”
“இதுல இப்படி எல்லாம் பண்ணினா..ஒரு வாரமா எங்களை கூட நம்பாம நீ தான எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணின.. காலைல இருந்து மேற்ப்பார்வை பார்க்கறேனு அலையற…அதுததுக்கு ஆள் போட்டு இருக்கு..அடங்கி ஒரு இடத்துல இருக்க மாட்டியா” என்றான்.
“போடா”என சிரித்து கொண்டே அவனை கைகளால் நகர்த்தி விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
“அடேய்” என பல்லை கடித்தான் கருணா. பின்ன அவனும் தான் என்ன பண்ணுவான். தனா யார் எங்க என இல்லாமல் எப்பவும் எழில்… எழில்.. என என்று எழில் ஜபம் படிக்க ஆரம்பித்தானோ.. அன்று ஆரம்பித்தது அந்த குடும்ப ஆண்களுக்கு ஏச்சும் பேச்சும் அவர்களின் மனைவிமார்களால்…
“தனா அண்ணா பாருங்க..எழில எப்படி தாங்கறாரு.. நீங்களும் அவர் கூடத்தான இருக்கறிங்க.. அவரப் பார்த்தாவது கொஞ்சம் பழககூடாது”
“தனா மாமா அக்கா வாய திறந்து சொல்லாமலே மனசறிஞ்சு பார்த்து பார்த்து செய்றாரு.. அவரு ரத்தம் தான உங்க உடம்புலயும் ஓடுது.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கறிங்க..”
என்று ஏற்கனவே பல ஏச்சு பேச்சுகள வாங்கி கொடுத்துவிட்டு இப்படி அவர்கள் கண் முன்னாடியே அட்டகாசம் செய்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
“இன்னைக்கு இவன் மொத்தமா டைவர்ஸ் வாங்கி கொடுக்காம அடங்கமாட்டான்” என கருணா மற்றவர்களிடம் கூற அவர்களும் புலம்பி சலித்தனர்.
கொஞ்ச நேரத்தில் தான் வளைகாப்புக்கு என பிரத்யேகமாக எடுத்துக் கொடுத்த மயில் வண்ண பட்டில் தன் திருமணத்தின் போது வாங்கி கொடுத்த நகைகள் பூட்டி.. ஒன்பதாம் மாத வயிறு சற்று பெரிதாக..திருவாரூர் தேரை போல அசைந்து வந்தவளை… சற்று தள்ளி நின்று கண் எடுக்காமல் ரசித்து கொண்டு இருந்தான்.எழில் மணையில் அமர வைக்கப்பட்டு…நலுங்கு வைக்க ஆரம்பிக்க.. தனா எழலின் அருகில் வந்து நின்று கொண்டான்.
முதலில் திலகா நலுங்கு வைத்து வளையல் போட்டு ஆரம்பித்து வைக்க… அடுத்து கற்பகம் நலுங்கு வைத்து மகளுக்கு தங்க வளையல் கைக்கு இரண்டாக போட்டு மகிழ்ந்தார். பிறகு தேவி வசந்தி என பெண்கள் அனைவரும் வளையல் அணிவித்து முடிக்க…
முத்துகுமார் சுந்தரம் கண்ணன் என குடும்பத்தில் மூத்த ஆண்கள் சந்தன பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.
கடைசியாக தனாவை அழைக்க… தனா எழிலின் முன் வந்தவன்.. நெற்றி கன்னம் என சந்தனம் துலங்க… அலங்காரமான சற்று பெரிதான ஒற்றை சோபாவில் இவ்வளவு நேரம் நிமிர்ந்து அமர்ந்து இருந்ததில் இடுப்பும் முதுகும் வலிக்க.. சற்று சாய்ந்து ஆசுவாசமாக இடக்கையை பின்னால் ஊன்றி அமர்ந்து சோபையாக தனாவை பார்த்து மென்னகை புரிய…
தனாவிற்கோ பிள்ளை சுமக்கும் கிள்ளையை அணைத்து கொஞ்சிட வேகம் பிறந்தது. மெல்ல தன் இரு கைகளிலும் சந்தனத்தை எடுத்து தடவி அவள் கன்னங்களில் தடவ.. சந்தனத்தின் குளுமையை விட அவன் கைகளின் குளுமை அவளின் உடலெங்கும் சிலிர்ப்பை உண்டாக்க.. கோதையின் கண்களோ ஏக்கத்தை பிரதிபலிக்க.. கண்ணளானின் உள்ளமோ கள்வெறி கொண்டது.
நான்கு கண்களும் நேர்கோட்டில் சஞ்சாரமிட… இருவரும் மௌனமான மோனநிலையில்…
“க்க்கும்…க்க்கும்…” என சுற்றியும் கருணா வெற்றி திரு பிரசாத் தமிழரசன் கீர்த்தி கனி வசந்தி என ஒரு பட்டாளமே கணைத்து சத்தமிட…
தனா திரும்பி அவர்களை முறைக்க.. எழிலோ வெக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
தனா மெதுவாக எழிலின் கைகளை பிடித்து தன் சட்டைபையில் இருந்த இரு ஜோடி வளையல்களை அணிவித்தான். அதுவரை வெட்கத்தில் தலை குனிந்திருந்த எழில் தனா தன் கைகளில் அணிவித்த வளையல்களை பார்த்தவுடன் சராலென நிமிர்ந்து தனாவை நோக்கினாள்.
பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க… அந்த வளையல்கள் தனாவின் தாய் லட்சுமியின் வைரவளையல்கள் ஒரு ஜோடியும் நவரத்தின கற்கள் வளையல்கள் ஒரு ஜோடியும்… தன் அன்பு அத்தையின் வளையல்கள் கணவன் அணிவித்ததில் மங்கை அவளுக்கு அத்தனை ஆனந்தம். அதனால் வந்த ஆனந்த கண்ணீர்.
தனாவிற்கு புதிதாக வளையல் வாங்க இஷ்டமில்லை. தன் தாய்க்கு மிகவும் பிடித்தவள் அதுமட்டுமின்றி தன் மனைவிக்கும் மகவுக்கும் தன் பெற்றோரின் ஆசிர்வாதம் வேண்டும் என நினைத்தே இவ்வாறு செய்தான்.
“உஷ்ஷ்” என மெல்ல அதட்டி அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன்.. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து.. அவளின் புடவையை லேசாக விலக்க.. சுற்றி நின்றவர்கள் இவன் என்னடா செய்யறான் என்று குறுகுறுப்புடன் பார்க்க..
அவளுக்கோ அவன் என்ன செய்ய போகிறான் என தெரிந்ததால்.. அனைவரும் முன்பும் இப்படி செய்ய சுற்றி நின்றவர்களில் பார்வையில் கூச்சமாகி நெளிந்தவாறே…
“மாமா என்ன பண்றிங்க..எல்லோரும் பார்க்கறாங்க” என அவனின் கைகளை பிடித்து தடுக்க..
“ஏய் என் பாப்புகுட்டிக்கு முத்தம் கொடுக்கறேன்டி. உனக்கு கொடுத்திட்டு பாப்புகுட்டிக்கு கொடுக்கலைனா கோவிச்சுக்குவாங்க..”
“மாமா.. எல்லாரும் முன்னாடி சேலையை விலக்கி.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”
“லேசா தாண்டி.. யார் பார்த்தா என்ன நீ ஏன் அவங்களை பார்க்கற.. என்னை பாரு”
தனா “பாப்புக்குட்டி” என அழைத்து இரண்டு மூன்று முத்தங்கள் வைக்க… உடனே குழந்தை வயிற்றில் வேகமாக துள்ளாட்டம் போட..
இவன் என்ன செய்கிறான் என குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இவன் முத்தம் வைத்ததும் குழந்தை துடிப்பாக துள்ளவும்.. இவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்த இரு குடும்பத்தாரும் பேச்சின்றி வியந்து போய் நின்றனர்.
உடனே கீர்த்தி “அண்ணா நான் நான் ணா..” என்று ஓடி வந்து தனா அருகில் மண்டியிட..
தனா கீர்த்தியின் கைகளை எடுத்து மெதுவாக எழிலின் வயிற்றில் வைத்து..
“பாப்புகுட்டி.. இவங்க அத்தடா.. பாப்புகுட்டியோட அத்த…”
தந்தையின் குரலோ.. கீர்த்தியின் ஸ்பரிசமோ.. மீண்டும் குழந்தை அசைந்தாடியது.குழந்தையின் அசைவை உணர்ந்த கீர்த்தியின் கைகள் கூச செய்ய… கீர்த்திக்கோ சொல்ல முடியாத உணர்வில் தத்தளிக்க.. தன் அண்ணனை திரும்பி பார்த்தாள். தனா ஆம் என்பது போல கண்களை மூடி தலை அசைக்க…
பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இம்முறை முகத்தில் வியப்பை மீறிய ஆனந்தம் கூத்தாடியது.
தங்களின் வாரிசு பிறக்கும் முன்பே எவ்வளவு துடிப்பாக பாசமாக இருக்கிறது என தனாவின் சித்தப்பா சித்திகளும் கற்பகமும் பூரித்து போய் இருக்க ….
முத்துகுமார் தான் என் புள்ளைய மயக்கி வச்சிருக்கிற மாதிரி.. என் பேரபுள்ளயையும் மயக்கி வெச்சிருக்கான் என மனதில் வசை பாடினார்.
அடுத்து பிரசாத் “நான்.. நான் தொட்டு பார்க்கிறேன்” என வர..
எல்லோரும் முன்பு இப்படி இருக்க எழில் சங்கடமாக உணர்ந்தாள். அவளின் நிலை உணர்ந்த திலகா தான்..
“போதும் இது என்ன புள்ளதாச்சிய வச்சிகிட்டு விளையாட்டா..எல்லோரும் போங்க.. போயி ஆகற வேலையை பாருங்க..”என சத்தமிட..
எல்லோரும் அமைதியாக… கடைசியாக திலகா தேவி கற்பகம் ஆரத்தி சுற்றி முடித்து எழிலை தனாவோடு சாப்பிட அனுப்பி வைத்தனர்.
சாப்பிட்டு சிறிது நேரத்தில் எழிலை முத்துக்குமார் குடும்பத்தினர் அழைத்துச் செல்ல..தனாவோ அவளை எங்கே அனுப்பினான். அவளின் கைகளை பிடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றவன்..
“இங்கயே இருந்துடேன்டி.. நீயும் பாப்புகுட்டியும் இல்லாம நான் இங்க தனியா எப்படி இருப்பேன்”
“மாமா..”என எழில் பரிதாபமாக பார்த்தாள்.
“நான் நல்லா பார்த்துகறேன்டி.. வேணும்னா உங்க அம்மாவை இங்கேயே வச்சிக்கலாம்”
“மாமா..”
“நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி.. சொன்னா புரிஞ்சுக்கோ..”
தனாவின் முகத்தை பார்த்து அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஏழாம் மாதம் அனுப்பததால் முத்துக்குமார் கற்பகத்திடம் அத்தனை சத்தம் போட்டு இருக்க.. அதை தாயின் மூலம் அறிந்திருந்த எழில் இப்போது என்ன செய்ய என முழித்தாள்.
சுந்தரம் “தனா நல்ல நேரம் போயிட்டு இருக்கு.. அரசி கிளம்பனும். என்ன பண்ணறிங்க.. வாங்க சீக்கிரம்” என்க..
“இதோ வரோம் சித்தப்பா” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தவன் எழிலை ஏக்கமாகப் பார்க்க..
எழில் தனாவினை லேசாக அணைத்து “மாமா.. சொன்னா புரிஞ்சிக்குங்க.. இப்ப போய் வரலைனு சொன்னா பெரியவங்க என்ன சொல்வாங்க.. எங்க அப்பா கோவிச்சுகுவாரு..”
“போடி அந்த விருமாண்டிக்கு நான் எல்லாம் பயப்படுவேனா..”
“மாமா.. அவங்களுக்கும் பொண்ண பக்கத்தில் வச்சு பார்த்திகிடனும்னு ஆசை இருக்காதா.. என்ன ஒரு மூனு நாலு மாசம் நிமிசமா ஓடி போயிடும்”
“போடி” என முறுக்கி கொள்ள.. அவன் தாடையை பிடித்து கொஞ்சி கெஞ்சி என சமாதானப்படுத்தினாள் எழில். அப்போதும் மனசில்லாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் அனுப்பி வைத்தான் தனா.
அவனின் முகவாட்டம் அவள் மனதை பிசைந்தது.
முத்துக்குமார் குடும்பம் எல்லோரிடம் சொல்லி கொண்டு எழிலை அழைத்து சென்றனர்.எழில் தனாவை திரும்பி திரும்பி பார்த்தவாறே காருக்கு சென்றாள்.
தமிழரசனோ கீர்த்தியை முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றான். இன்று எப்படியாவது கீர்த்தியிடம் தனியாக பேசி காதலிக்க சம்மதம் வாங்கி விட நினைத்தான்.
அவளோ இவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். வீட்டின் பின்புறம் கீர்த்தி எதற்கோ செல்ல.. தமிழரசன் யாரும் அறியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அங்கு யாரும் இல்லாமல் போக இது தான் சரியான சமயம் என நினைத்து..
“ஏய் இங்க பாருடி.. என்ன… சும்மா உன் பின்னாடியே அலைய விட்டுட்டு இருக்க..”
கீர்த்தியோ அவ்விடம் விட்டு நகரப் பார்க்க.. சட்டென் அவள் கைகளை பிடித்துக் கொண்டான் தமிழரசன்.
அவனின் அந்த தீடீர் செயலில் பெண்ணவளோ பதறி போய் கையை உதறிக் கொண்டே யாராவது பார்த்தால் என்ன நடக்குமோ பதட்டத்துடன் சுற்றியும் பார்க்க..
அவள் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயல… இன்னும் இறுக்கிப் பிடித்தான். இன்று பதில் தெரியாமல் விடமாட்டேன் என்பதை போல..
அவன் இறுக்கிப் பிடித்ததில் வலியால் முகம் சுருக்கி”ஷ்ஷ்… வலிக்குது விடுங்க..”
“இன்னைக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும் கீர்த்தி அதுவரைக்கும் இப்படி தான் கையை விடமாட்டேன்”
“சொன்னா கேளுங்க.. யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும் விடுங்க மாமா..” தன்னை அறியாமல் அவனை மாமா என அழைத்து விட்டதில் மென் சிரிப்போடு கண்களை சுருக்கி நுனி நாக்கை கடித்து நின்றாள்.
அவளின் அந்த அழகில் சொக்கி போய்..அவளுடைய மாமா என்ற அழைப்பிலும் சந்தோஷம் கொண்டவன் “அப்ப என்னைய லவ் பண்றேனு சொல்லு.. கைய விட்டுடறேன்”
“ஹூம்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..” என சட்டென்று சொன்னாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் பொய் சொல்கிறாள் என அறிந்தவன் அவளிடம்..
“நிஜமா.. ஒன்னும் இல்லையாடி.. ஆனா நான் இருக்குனு சொல்லறேன் நிருபிக்கவா..” என்றவன் என்னவென்று உணரும் முன்பே அவளின் இடை வளைத்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிடப் போக..
அவனின் தீடிர் செயலில் புரியாமல் முழித்தவள்.. பின்பு சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விடுபட முயல..
அங்கு “தமிழ்” என திருவின் குரல் கேட்க..அவனின் உறுமலில் இருவரும் விதிர்விதிர்த்து விலக…
தன் தங்கையின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயப்படுத்தி தப்பாக நடக்க முயற்சிக்கிறான் என நினைத்துக் கொண்டான் திரு
தங்கையின் கையை பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டவன் “என்ன பண்ணிகிட்டு இருக்கறிங்க.. விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தப்பா நடந்துக்க பார்க்கறிங்க.. அசிங்கமா இல்ல..”
தமிழோ “மச்சான்”என ஏதோ சொல்ல வர..அதை எல்லாம் எங்கே காது கொடுத்து கேட்டான் திரு..
“அண்ணியோட அண்ணாங்கறதால … தனா அண்ணா முகத்துக்காக சும்மா விடறேன். இதே வேற யாராவதா இருந்தா நடக்கறதே வேற..”
தமிழ் கீர்த்தியை பார்க்க.. அவளோ என்ன என உணரும் முன்பே எல்லாம் நடந்திருக்க.. செய்வதறியாது திகைத்து நின்றாள்.
தனக்கு சாதகமாக அவள் அண்ணணிடம் சொல்வாளா

புள்ளி மேவாத மான் – 24 Read More »

inbound3960724304124879389

என் மோகத் தீயே குளிராதே 08

அத்தியாயம் 8   “அய்யோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்? நாளைக்கு அவனோட கம்பெனிக்கு போனா.. என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானே.. இப்ப என்ன பண்ணுவேன்?” என்றவாறே சாப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவளின் கவனம் சமையலில் இல்லை. சிறிது நேரத்தில் சமையலறைக்கு வந்த ஹரிஷான்த், குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றியவன், கண்ணில் யோசனையுடன் நின்றிருந்தவள் பட,   “இப்ப யாரை ஏமாத்தப் போற?” என்று கேட்க, அவன் கேட்பது புரியாது மலங்க

என் மோகத் தீயே குளிராதே 08 Read More »

Photo-20240402-144052-S-993x1291

19 ஆசை வெட்கமறியாது

19 ஆசை கட்டிலுக்கு செல்ல பாவையவள் நெளிய.. வலிய கரம் சேர்த்து அழைத்து போனான் அவளின் செல்வா.. தன் ஆவலெல்லாம் இன்றே தீர்ப்பவன் போல அவனுள் ஒரு வேட்கை.. முன்போ ஒரு தரம் போதும் என ஏகிய மனது ருசித்ததும் போதல.. சரியா செய்யல.. சாதா பெண்ணெயிருந்தாலும் கூட இது இத்தகையது தெரியாது சும்மாயிருக்கும்.. ஆனால் விஜியோ டாக்டர்.. தன்னுடைய இந்த உடனடி உச்சத்தை கண்டு பிடிச்சிருப்பா.. கேலியா நினைச்சிருப்பா.. சிறுபிள்ளை போல மனசை உழற்றினான் செல்வா..

19 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

18 ஆசை வெட்கமறியாது

18 ஆண்களுக்கு அந்த ரெட்டை கோபுரங்களின் மீது அப்படியென்ன வெறியோ?? மலைத்தாள்.. செல்லுவின் ஆர்வம் இவ்வாறு யோசிக்க தோணியது.. கொஞ்சம் விட்டு கொடுத்தா இவன் ரொம்ப பண்றான் என்று சலித்தாலும் இவளுக்குமே ரெண்டு பக்கமும் அவன் பல் படனும் வலிக்க வலிக்க பிசையனும் கசக்கனும் .. பிச்சே எடுக்கணும் என்றெல்லாம் உள்மனம் ரகசியமாய் ஏங்கியது.. இவ்ளோ மோசமா நான்! தன் மீதே குறையும் பட்டுக்கொண்டாள்.. வாழ்க்கையை ஆரம்பித்த முத நாளே இவ்ளோ குழப்பம் ஆகாதுடி.. இன்றா தொடங்குச்சி..

18 ஆசை வெட்கமறியாது Read More »

3 ஜில்லுன்னு ஒரு விவகாரத்து

3 ஜில்லு   மாயமில்லை மந்திரமில்லை.    இதயம் ஒரு நிமிஷம் நின்றதும் உண்மை . அப்புறம் லேசா துடிச்சி துடிச்சி பழைய லயத்துக்கு வந்ததும் உண்மை.   வாசலில் சிலையாய் நின்றவளை முதலில் கண்டதும் நாயகன் தான்.      ஹு ஆர் யூ? ஆண்மை ததும்பிய குரலில் அதட்டியதும் அவன் தான்.   காலக்கொடுமை! கேளு! கேளு! நல்லா கேளு!   அறையிலிருந்த அத்தனை பேரின் கண்களும் இவளையே நோக்க, லஜ்ஜையா போச்சு லியாவுக்கு.

3 ஜில்லுன்னு ஒரு விவகாரத்து Read More »

0618CB9A-441D-4453-8FDA-6D85617BBC5D

புள்ளி மேவாத மான் – 23

23 – புள்ளி மேவாத மான்

எழில் சமாதானம் ஆகி சமரசம் கொண்டு சரசம் ஆடிய பின்பு மேற்கொண்டு இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அந்த இரண்டு நாளும் அவ்வப்போது எழிலின் முகத்தையே சில நிமிடங்கள் விடாது பார்ப்பான். என்னவென்று எழில் கேட்டால் ஒன்றுமில்லை என தலை அசைத்துவிடுவான்.
அவன் விழிப் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.முதலில் எழிலுக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. சற்று யோசித்து பார்த்தப் பொழுது அந்த பார்வை தன்னிடம் எதையோ கேட்கிறது இல்லை எதிர்பார்க்கிறது என புரிந்து கொண்டாள்.
அன்று இரவில் தங்கள் அறையில் இருந்த பொழுதும் அதே பார்வை. தனாவை கேட்க மழுப்பலாக பதில் சொல்ல… விடாது இழுத்து வைத்து கேட்டாள் எழில்.
“மாமா.. எதுக்கு இப்படி பார்க்கறிங்க…”
“ஒன்னுமில்லை நீ தூங்கு”
“இப்ப சொல்லப் போறிங்களா.. இல்லையா..”
“ம்கூம்.. சொல்லமாட்டேன். நீயே கண்டுபிடி”
“எங்கிட்ட ஏதோ எதிர்பார்க்கறிங்க..கேட்காமேயே அத நான் செய்யனும்னு நினைக்கறிங்க..”
எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்திருக்க…
“அப்படி தானா… ஆனா என்னன்னு தெரியலையே..”அழகாக உதடு பிதுக்கினாள்.
அவள் பாவனையில் இவன் சொக்கி தான் போனான். அவளை காதலோடு பார்க்க…
“என்ன்னு சொல்லுங்க மாமா..எனக்கு தெரியல.. மண்டயே வெடிச்சிடும் போல இருக்கு.. ப்ளீ…ஸ்..”என அவன் தாடையை பிடித்து கொஞ்சலாக கெஞ்சினாள்.
அள்ளி அணைத்திட துடித்த கைகளை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.அவள் கொஞ்சல் மொழியில் மனம் இரங்கி தன் வலக்கை நீட்டி தா என்பது போல பார்த்தான்.
என்ன தரனும் என புரியாமல் “என்ன மாமா..என்ன தரனும்” முழித்தாள் சிறு குழந்தையாக…
அவள் செய்கை எல்லாம் அவனை பித்தனாக்கியது. அவளை ஆண்டு விட துடித்த உணர்வுகளை அடக்கி வைத்தான். அவளிடம் தனக்கு வேண்டியதை பெற்ற பிறகே மற்றது எல்லாம் என அவளை தீர்க்கமாக பார்த்தவாறே..
“என் கிப்ட் எல்லாம் கொடுடி”என்றான் அவள் முன் கையை நீட்டினான்.
“மா..மா..”என்றாள் அவனை ஆச்சரியமாக பார்த்தபடி..
எல்லாம் எனக்கு தெரியும் என்பதாக லேசாக தலை அசைத்து இமைமூடி திறந்தான்.
மாமாவுக்கு தெரிந்திருக்கா… தன் காதலை சொல்லாமல் தனக்குள்ளேயே பொத்தி வைத்திருக்க.. அந்த காதல் சொல்லாமலேயே தன் மாமனுக்கு தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு இருந்தவளுக்கு தன் காதல் பரிசுகளும் சொல்லாமலேயே தெரிந்ததில்..லேசாக கண் கலங்க.. அதை துடைக்க கூட மறந்தவளாக.. சென்று தன் அலமாரியில் வைத்திருந்த சற்றே பெரியதான அலங்கார மரப்பெட்டியை தூக்கி கொண்டு வந்தாள்.
வேகமாக சென்று அவளிடம் இருந்து வாங்கி வந்து படுக்கையில் வைத்தான்.
அதன் சிறு பூட்டை சாவி கொண்டு திறந்தாள். அந்த பெட்டி பரிசுப் பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும் நிரப்பப்பட்டு இருந்தது.
ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து”இது தான் நான் உங்களுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் வாங்கின பர்த்டே கார்டு. நீங்க காலேஜ் போய் ஒரு வருசம் கழிச்சு வந்திங்கல்ல.. அதுக்கப்புறம் வந்த உங்க பர்த்டேவுக்கு நான் வாங்கினது. கொடுக்க தைரியமில்லா வச்சுகிட்டேன்.”
அந்த கார்டை வாங்கி பார்த்தான். அதில் உள்ளே ‘ஹாப்பி பர்த்டே மாமா” என எழிதியிருந்தது. அதை தவிர அதில் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் அவள் கொடுக்காமல் வைத்திருந்தில் ஒன்றில் அழகான இதயம்.. மற்றொன்றில் கொஞ்சி கொள்ளும் லவ்பேர்ட்ஸ்.. இன்னொன்றில் அவளுடைய உதடும் பக்கத்தில் அவன் மீசையும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வரைந்திருந்தாள். பத்து வருட காதலில் பத்து பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள்.
சில காதலர் தின வாழ்த்து அட்டைகளும் அவன் கையில் இருந்தன.அதை பிரித்து படித்தவனால் சத்தியமாக அவனால் நார்மலாக இருக்க. முடியவில்லை. எதையோ இழந்து விட்டதாகவும்…ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போலவும் இரு வேறு உணர்வுகளுக்கு ஆட் கொண்டான்.

காதல் பேதை என்னை
ஒரு மையல் பார்வை
பாரடா என் காதல் தேவா
அந்த பார்வை போதும்
என் காதல் வாழ…
அந்த காதலை உயிராக
கொண்டு நான் வாழ்ந்திடுவேன்.

என ஒரு வாழ்த்து அட்டையில்..

இன்னொன்றில்….

உன் மீசையும்
அதில் மறைந்திருக்கும்
உன் உதட்டில் பளீரிடும்
உன் வெண் சிரிப்பும்
எனை பித்து கொள்ள செய்கிறதடா…

இப்படி சில கவிதைகளும் இருந்தன.
அதை எல்லாம் பார்க்க.. பார்க்க.. அவனை பேச்சற்ற மௌனமே ஆட்சி செய்தது.
ஒவ்வொரு பரிசு பொருளாக கையில் கொடுக்க ஆரம்பித்தாள்.

“உங்களை நான் லவ் பண்றேனு தெரிஞ்ச அந்த வருடம் நான் ஸ்கூல் டூர் கேரளா போயிருந்த போது உங்களுக்காக நான் வாங்கியது”என அவன் கைகளில் வைத்தாள் சந்தன மரத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேனா.
“இது நான் அத்தை கூட உங்க பர்த்டேவுக்கு டிரஸ் எடுக்க போன போது பார்த்தேனா.. பிடிச்சிருந்தது. யாருக்கும் தெரியாம அடுத்த நாள் ஸ்கூல் இருந்து போய் வாங்கிட்டு வந்தேன்” என கொடுத்தாள் சாண்டில் கலர் சட்டை ஒன்று.
“குவாலியர்ல ரொம்ப குளிரும்னு அத்தை சொன்னாங்களா.. அதான் ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன். ப்ப்ச் கொடுக்க தான் இல்லை” என்றாள் ஒரு ஸ்வெட்டரை எடுத்து..
“நீங்க காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கினதுக்காக ஏதாவது கொடுக்கனும்னு தோனுச்சா.. கோல்டு மெடல்ங்கற போது.. பெரிசா ஒர்த்தா கொடுக்கனுமில்ல..அதான் ஏதாவது தங்கத்தில கொடுக்கலாம்னு யோசிச்சு என் தோட்டை வித்து இதை வாங்கினேன்”என ஒரு மோதிரத்தை கொடுத்தாள்.
அவள் கண்களில் காதல் மின்ன.. மின்ன.. ஒவ்வொன்றாக சொல்லி எடுத்து கொடுக்க தன்னை மறந்து அவளிடமே லயித்து இருந்தவன்.
“அடிப்பாவி தோட்டை வித்துட்டயா..உங்க வீட்ல ஒன்னும் கேட்கலையா..”
“கேட்டாங்க.. கேட்டாங்க.. கேட்காம இருப்பாங்களா.. அதான் யோசிச்சு முன்னாடியே ஒரு பிளான் பண்ணிருந்தேன்”
“என்னாது அது”
“ஸ்கூல் விட்டு வரும் போது யாரும் இல்லாத ரோட்ல சைக்கிளை மறிச்சு கத்திய காட்டி ஒரு திருடன் கேட்டான். பயத்துல கழட்டி கொடுத்துட்டேனு சொல்லிட்டேன் ஐயோ பாவம் புள்ளனு விட்டுட்டாங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..
“அடிப்பாவி.. நீ பெரிய கேடியா இருப்ப போல இருக்கே..” என வாய் மேல் கை வைத்து கொண்டான் தனா.
அடுத்தடுத்த சில பொருட்களை கையில் கொடுத்து “நீங்க பூங்கொடிக்காவ லவ் பண்ணறிங்கனு தெரிஞ்சும் இதெல்லாம் வேஸ்ட் இனி வாங்க வேணாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால உங்கள மறந்து உங்களுக்கு வாங்காம இருக்க முடியல.. அதான் என் காதல் எங்கும் தோற்காது என என்னோடவே பொத்தி பொக்கிஷமா வச்சுகிட்டேன்” என்றாள். சொல்லும் போதே கண்களில் சிறுவலி வந்து போனது.
அவளின் காதலில் மிரண்டு தான் போனான் தனா. அவளை தாவி அணைத்து கொண்டான். அவள் காதல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் தான் செய்த மடத்தனத்தை நினைத்து இப்போதும் தன்னையே திட்டிக் கொண்டான் மனதோடு..
அந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி எடுத்து கொண்டு போய் தன் அலமாரியில் வைத்து விட்டு வந்தான்.
படுக்கையில் அவளருகே வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டான்.
எதுவும் பேசாமல் எழிலும் தலை கோதி கொடுக்க..சிறிது நேரத்தில் தன் சேலையில் ஈரம் உணர்ந்தவள்பதறி போய் தனாவின் முகத்தை திருப்ப முயற்சிக்க.. பிடிவாதமாக முகம் திருப்ப மறுக்க..
“என்னாச்ச மாமா.. ஏன் அழுகறிங்க.”
“உன் காதலுக்கு நான் தகுதியானவனே இல்லை தான”
“ஐயோ.. மாமா.. ஏன் அப்படி நினைக்கறிங்க..முதல்லயே என் காதலை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா.. நீங்க என்னைய தான லவ் பண்ணியிருப்பிங்க.. சொல்லாத காதலுக்கு ஏது மாமா மதிப்பு” என்றாள் ஏக்கத்தோடு..
உடனே வாயை பொத்தி”அப்படி சொல்லாதடி உன் காதலை எல்லாம் காதல்னு சொல்லகூடாது. தெய்வீக அன்பு அப்படி தான் சொல்லனும் சும்மா என்னை சமாதானம் செய்ய எதுவும் சொல்லாத பேசாம இரு.”மீண்டும் அமைதியாக கட்டிக்கொள்ள..
எழில் மீண்டும் தலை கோதிவிட.. அவனுடைய பாப்புகுட்டியோ தந்தையின் கன்னத்தை உராய்ந்து உராய்ந்து கவலையை போக்கியது.
மகவின் பாசத்தில் ” பாப்புகுட்டி.. பாப்புக்குட்டி..” என முத்தமிட..
தந்தை பாசத்தில் அவனோ மீசை உரச முத்தமிட.. எழிலுக்கோ மீசை உரசலில் அவஸ்தையாக நெளிந்தாள்.
அவள் நெளியவும்”ப்ப்ச் என்னடி”என அவள் முகத்தை பார்க்க..அவள் கண்களில் தெரிந்த மையலில் தந்தை வேசத்தை கலைத்து காதலன் பதவிக்கு மீண்டுவிட்டான்.
அதன் பிறகு அவளின் காதல் மழையில் நனைந்தவன் அவளை மோக மழையில் குளிப்பாட்டினான்.
அன்றிலிருந்து தனா எழில்.. எழில்.. என எழில்தாசனாகி போனான். எழுந்தது முதல் தூங்கும் வரை எழிலின் பின்னாலேயே சுற்றி திரிந்தான்.
அவளின் காதல் பொக்கிஷத்தை தனக்குள் வாங்கி கொண்டவன். தன் காதல் தேவதையை தினம் தினம் ஆராதித்தான்.
பகல் எல்லாம் எழில் என்றால் இரவில் பாப்பு குட்டி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்.
மாதங்கள் தள்ள தள்ள.. எழிலால் எந்த வேலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியவில்லை. எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் இருப்பதை விட இவள் வயிறும் சற்று பெரியதாகவே இருக்க.. வேலை செய்தால் மேல் மூச்சு வாங்கியது.
கற்பகமோ வீடு பெருக்கு.. துணி துவை குனிந்து நிமிர்ந்து வேலை செய் என போன் செய்து சொல்லவும்… அவளால் முடியாவிட்டாலும் சுற்று வேலைக்கு வரும் பெண்ணை நிறுத்தி விட்டு மெது மெதுவாக செய்ய..
தனாவோ எழில் கஷ்டப்படுவதை கண்டு மாமியாரிடம் போன் செய்து சண்டைக்கு போக.. அவரும் மருமகனிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.
எங்கே அதெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை தனா. அந்தளவுக்கு எழிலின் காதலுக்கு அடிமையாகி இருந்தான்.
எழிலையும் வேலை செய்ய விடவில்லை. இதை அறிந்த கற்பகம் வழக்கம் போல திலகாவிடம் பஞ்சாயத்து வைக்க…
அன்று மாலையே திலகாவும் தேவியும் தனா வீட்டிற்கு வந்தனர். தனாவும் வீட்டில் தான் இருந்தான்.வெற்றி மூலம் அதை அறிந்து தானே வந்திருந்தனர்.
இப்போழுது எல்லாம் சரியாக பேக்டரில அவன் இருப்பதே இல்லை. சமையல் கூட எழிலை செய்ய விடுவதில்லை. இருளாயியால் முடியவில்லை என வயலில் வேலை செய்யும் பெண்களில் ஒருவரை சமையலுக்கு வைத்திருந்தான்.
காலையில் எழுந்து அந்த பெண்ணை இதை செய் அதை செய் என படுத்தி எடுத்து.. அதை எல்லாம் அவளுக்கு மூச்சு முட்டி போகும் அளவுக்கு சாப்பிட வைத்து மாத்திரைகள் கொடுத்து என அவன் பேக்டரி கிளம்பவே பதினொரு மணி ஆகிவிடும்.
சென்ற ஒருமணி நேரத்தில் வந்துவிடுவான். தன் கையாலேயே ஏதாவது பழஜீஸ் எடுத்து அருகில் இருந்து குடிக்க வைத்து விட்டு செல்வான். அடுத்த ஒருமணி நேரத்தில் மதியசாப்பாட்டிற்கு வந்துவிடுவான்.
அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு இருவரும் ஓய்வாக தூங்கி எழுந்து என மாலை ஐந்து மணிக்கு தான் செல்வான்.அடுத்த ஒரு மணிநேரம்.. அடுத்த ஒருமணி நேரம் என பேக்டரிக்கும் வீட்டுக்கும் காவடி எடுப்பான் . இரவு ஏழு மணிக்கு எல்லாம் வீடு வந்துவிடுவான் வேலை இருந்தாலும் இல்லை என்றாலும்.. வெற்றி கருணாவிடம் சொல்லி கொண்டு…
திலகா “தனா.. சொல்றத கேளு..எழில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சா தான் பிரசவம் சுபலமா இருக்கும். சுகப்பிரசவம் தான் நல்லது.சிசேரியன் பண்ணா எழில் தான் கஷ்டப்படுவா..பெரியவங்க எங்களுக்கு தெரியாதா.. நாங்க சொல்லற படி எழில் இருக்கட்டும். நீ அமைதியா இரு”
எப்பவும் போல பேசாமல் இறுகிய முகத்துடன் இருந்தான் தனா.
அதில் கடுப்பான திலகா “வேணா அடுத்த மாதமே வளைகாப்பு வைச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடலாமா..”என கேட்க
தனா பதறி போய் “வேணா.. வேணாம்.. நீங்க சொல்றபடியே செஞ்சுகிறோம்”
அதில் திலகா அது என கெத்தாக ஒரு பார்வை பார்த்தார். தேவி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்.
பின்னே எழிலை ஏழாம் மாதம் வளையல் போட்டு அழைத்து கொள்ள முத்துக்குமார் கேட்டிருக்க.. தனா தான் ஒன்பதாம் மாதம் அனுப்புவேன் பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
அதைக் கொண்டு தான் தனாவை மடக்கினார் திலகா. சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட.. இவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.
“அவங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிட்டாங்க..எனக்கு தான் நீ வேலை செய்யறத பார்த்தா கஷ்டமா இருக்கு..”
“பார்த்துக்கலாம் விடுங்க மாமா.. மெதுவா மெதுவா செய்யறேன்” என தனாவை சமாளித்தாள்.
ஆனால் அதற்காக தனா அமைதியாக எல்லாம் இருந்து விடவில்லை. அவன் செய்த அழும்புகள் சொல்ல முடியாதவை.
தனாவிற்காக எழில் சுற்றிய காலங்கள் போய் தனா எழில் பின்னாடி சுற்றுவதை கண்டு.. தனா குடும்பத்தில் உள்ள கல்யாணமான பெண்கள் எல்லாம் எப்படி இப்படி.. எங்களுக்கும் சொல்லு.. என எழிலை நச்சரிக்க ஆரம்பித்தனர்.
ஒருபடி மேலே போய் கனியோ இதற்கென ஒரு வாட்சப் குரூப் ஆரம்பித்தாள். அதில் ஓயாத மெசேஜ் தான். அதில் எப்படி ஒற்றுமையா.. காதலாக… வாழ்வது என கேட்டு நச்சரித்தனர். எழிலுக்கு தான் வெட்கமாகி போனது.
தன் காதலை மெல்ல பட்டும் படாமல் சொல்ல.. அதற்கே ஆஹா.. ஓஹோ என கேலியும் கிண்டல் தான். கனி வாட்சப் குரூப்பிற்கு தனா எழில் படத்தை வைத்து அன்றில் பறவைகள் என பெயரிட்டாள்.

புள்ளி மேவாத மான் – 23 Read More »

images (31)

17 ஆசை வெட்கமறியாது

17 ஆசை வெட்கமறியாது சேவைகள் பெண்ணுக்கு கடனே.. ஆனால் காதல் சேவை ஆணுக்கு கடமை.. டாக்டர் பொண்ணு கிட்டே எதிப்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கல செல்லுக்கு.. கண் மூடி கிடந்தாள் தூங்கும் அழகி போல.. அது இதயத்தில் பெருங்கலகம் மாப்பிள்ளைக்கு தர, மொச்சு மொச்சுன்னு முத்தம் கண்ட இடங்களில்.. கடைசியில் உதட்டுல வந்து நின்று பெண்ணவளின் கால்களை வி போன்ற அமைப்பில் விரியச்செய்து தன் முனை மழுங்கிய ஆசை முள்ளை செலுத்த முனைய.. கன்னி கதவு வாசலில் முட்டி

17 ஆசை வெட்கமறியாது Read More »

19B76D90-43C4-4961-828C-46901CF91AC7

புள்ளி மேவாத மான் – 22

22 – புள்ளி மேவாத மான்

நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு.. புரண்டு படுத்தவன்…அவள் நன்கு உறங்கிவிட்டதை அறிந்து அவளை நெருங்கி லேசாக அணைத்தாற் போல படுத்து உறங்க முயற்சிக்க…
அவள் வயிற்றில் கைகளை மெதுவாக படரவிட்டு கண்களை மூட… சில நிமிடங்களில் பிள்ளை ஸ்பரிசத்தை இவன் கைகளில் உணர்ந்தான்.
அந்த நொடி அவன் மனதில் வெண்மையாக இருந்த வெறுமை எல்லாம் வர்ண ஜாலங்களால் நிரப்பப்பட்டது.
உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன் அப்பா என அவன் குழந்தை சொல்வது போல உணர்ந்தான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு என்ன தெரியுதா… நான் அப்பா.. உங்க அப்பா…”
“நான் பேசறது உங்களுக்கு புரியுதா..நீங்க கவனிக்கறிங்களா..”
உடனே குழந்தை வேகமாக துள்ளியது.தன் குழந்தை தான் பேசுவதை கேட்கிறது என்ற மகிழ்ச்சியில் எழிலின் வயிற்றில் கையை வைத்து அதன் ஸ்பரிசம் உணர்ந்தவாறே அதனிடம் பேசினான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு அப்பாவ பிடிக்குமா…”
“எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க அம்மாவை அதை விட அதிகமா பிடிக்கும் பாப்பு குட்டி”
தன் தலையை தந்தையின் கைகளில் வேகமாக முட்டி தன் எதிர்ப்பை காண்பித்தது.
“ஹாஹா… ஹா… இப்பவே உங்களுக்கு பொறாமையா… “என சிரித்தான்.
அடுத்த நொடி சிரிப்பு மறைந்து முகத்தில் கவலை படர்ந்தது தனாவிற்கு…
“பாருடா குட்டி அம்மா என்ட்ட பேச மாட்டேங்கறா..”
“உங்க அம்மா அன்பை நான் புரிஞ்சுகலை தான். உங்க அம்மா எம் மேல உசிரா இருக்கானு இப்ப தான் தெரிஞ்சுது.. சொன்னா தான எனக்கு தெரியும். அவ சொல்லாம எங்கிட்ட கோவிச்சுகிட்டு இப்படி பண்றா.. நீயே சொல்லு பாப்பு குட்டி அப்பா பாவம் தானே..”
தன் மனக்குறைகளை யாரும் காது கொடுத்து கேட்காததால் வயிற்று பிள்ளையிடம் பிதற்றி கொண்டு இருந்தான்.
“நான் பண்ணினது தப்பு தான் இல்லேனு சொல்ல.. ஆனா இவ்வளவு பிரச்சினை ஆகும்னு தெரியாம பண்ணிட்டேன் பாப்பு குட்டி. என்னை பாவம்னு மன்னிச்சு விடலாம்ல”
“பாப்பு குட்டி.. உங்க அம்மாவை விட்டா.. எனக்கு யாருடா இருக்கா..”
உடனே குழந்தை அவன் கைகளில் ஒரு உதை விட்டது.
“சாரி.. சாரி..உங்களை சொல்லைனு கோபமா.. நீங்களும் தான் எனக்கு ஓகேவா..”
மனைவியிடம் மன்னிப்பு கேட்க கௌரவம் பார்த்தவன் இன்னும் கண்ணிலே காணாத கருவறை பிள்ளையிடம் மண்டியிட்டான். தன் உதிரத்தில் உதித்தது என்பதாலோ…
“போங்க பாப்பு குட்டி உங்க அம்மா மாதிரியே உங்களுக்கும் கோபம் வருது” என செல்ல கோபம் கொண்டான்.
குழந்தை தன் தலையை தந்தையின் கைகளில் முட்டி முட்டி சமாதானம் செய்தது.
“நீங்க உடனே சமாதானம் ஆகிட்டிங்க.. ஆனா உங்க அம்மா சமாதானம் ஆகாம அப்பாவை கஷ்டப்படுத்தறா.. தெரியுமா..”
“நீங்க கொஞ்சம் அப்பாவுக்காக அம்மாட்ட சொல்லறிங்களா..”
குழந்தை அவன் கைகளில் லேசாக அசைந்து அவனை ஆறுதல் படுத்தியது..
வார்த்தைக்கு ஒரு பாப்பு குட்டி போட்டு ஏதோ ஏதோ பேசியவாறு உறங்கி போனான் தனா.
தந்தை உறங்கியது அறிந்தோ என்னவோ குழந்தையும் தாயின் வயிற்றில் அமைதியாகி உறக்கம் கொண்டது.
தந்தை மகவு பரிபாஷணை அறியாமல்
எழில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
எழிலும் கோபித்து கொண்டு தாய் வீடு சென்றுவிட்டாளே தவிர.. எப்போதும் தனாவின் ஞாபகமே.. நேரத்திற்கு உண்டானா.. உறங்கினானா.. என
பகலில் கூட வீட்டிலுள்ளவர்களோடு பொழுதை கழித்துவிடுவாள். ஆனால் இரவில் தனாவின் அருகாமையோ.. அணைப்போ.. இன்றி அவளுக்கு முழுமையான உறக்கம் என்பதில்லை.
இன்று தனாவின் அணைப்பை கோபத்தில் நிராகரித்தாலும்.. அவனின் அருகாமையில் ஆழ்ந்த உறக்கம். அதனால் தந்தை பிள்ளை பாசபிணைப்பை அவள் அறியவில்லை.
நாம் இவரை உயிராக காதலித்து கொண்டு இருக்கோம். இவரோ எப்பவோ முடிந்து போன காதலுக்கு நியாயம் செஞ்சிட்டு இருக்காரு.. என ஆதங்கத்தில் இருந்தாள்.
தினமும் ஊரே உறங்கும் வேளையில் எழிலும் உறங்கியதும் தனாவும் அவனுடைய பாப்பு குட்டியும் வெகு நேரம் உரையாடி விட்டே உறங்க செல்வது வழக்கமானது.
மேலும் சில நாட்கள் தனா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எழிலின் பின்னாலேயே சுற்றி கொண்டு இருக்க… அவளோ பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.
வெளியில் கோபம் முகம் கொண்டு இருந்தாலும்.. உள்ளுக்குள் அவனின் செயலால் மனம் குளிர்ந்து தான் போயிருந்தது.
தனா தன்னை சமாதனம் செய்வதற்காக.. கெஞ்சி கொண்டும்.. கொஞ்சி கொண்டும் பின்னாலேயே சுற்றுவது எழில் மனதில் சாரலாக சாமரம் வீசிக் கொண்டு இருந்தது.
எப்பவும் நாம் தானே பின்னாலேயே சுத்துவோம். இவரை சுத்தல்ல விடறது கூட நல்லா கிக்கா தான் இருக்கு என நினைத்தே
தனாவோடு சமரசம் ஆகாமல் போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க…எழிலின் பாராமுகத்தில் தனா மிகவும் துவண்டு போனான். அன்று பேக்டரியில் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மனமும் உடலும் சோர்வாக இருக்க…
வெற்றியிடம் பேக்டரியை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தன் ராயல் என்பீல்டை எடுத்து கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் மனம் போன போக்கில் மெதுவாக ஓட்டி கொண்டு வந்தவனுக்கு அவனின் வயற்காடு கண்ணில் பட…
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக வரப்பில் காலாற நடக்க ஆரம்பித்தான். எழிலின் நினைவிலேயே வயற்காடு தென்னந்தோப்பு எல்லாம் தாண்டி மாந்தோப்பிற்குள் வந்திருந்தான்.
நடந்து வந்து கொண்டு இருந்தவனின் காதில் கிசுகிசுப்பான பேச்சு குரல் கேட்க…. குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
அங்கே தோப்பை கவனித்து கொள்ளும் செங்கான் மனைவி வேலாயியை வலுகட்டயமாக இழுத்து அணைத்து கொள்ள… அவளோ கழுத்தை நொடித்து கொண்டு கணவனின் அணைப்பில் இருந்து திமிற…அங்கே இருவருக்குள் ஒரு காதல் கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருந்தது.
தனாவோ அவர்களின் காதலை கண்டு தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். ஆம் ரசித்து கொண்டு தான் இருந்தான்.
அவர்களின் அகவை அறுபதிற்கு மேல்.. நரை கூடி..கூன் விழுந்து.. தோல் சுருங்கி..பொக்கை வாயோடு.. அந்த காதலர்கள் பெரிய அழகு இல்லை.. ஆனால் அவர்களின் காதல் கொண்ட மனம் அழகாக இருந்தது. அது அவர்களின் செயலில் மிளிரந்தது.
எதற்கோ வேலாயி கோவித்து கொள்ள… செங்கான் மனைவியை இழுத்து அணைக்க.. வேறு திசையில் பார்த்து கொண்டு இருந்தவளை கன்னத்தில் முத்தம் கொடுக்க..
அதில் வேலாயி வெட்கப்பட்டு கணவரின் நெஞ்சில் முகத்தை புதைத்து கொள்ள.. மனைவியை ஒரு கையால் அணைத்து கொண்டு.. மனைவியின் காதில் கிசுகிசுப்பாக… எதோ சொல்ல..
“மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலையா என் மச்சானுக்கு” என குமட்டில் இடிக்க..
அவரோ பெருங்குரல் சிரிப்போடு மீசையை நீவிக் கொண்டார். பிறகு மனைவியின் காய்ப்பு காய்ந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மென்மயாக நீவிவிட்டு அதில் முத்தம் பதித்து
“உனக்குனு நான் எதுவும் பெரிசா செஞ்சதில்ல.எனக்காக.. நம்ம குடும்பத்துக்காக உழைச்சு கையெல்லாம் காப்பு காஞ்சு போச்சுல…” கவலையுடன் உரைக்க…
அதற்கு மனையாளோ”யாருக்கு செஞ்சேன்.. எம் புருஷ சுமைய பாதி வாங்கிட்டே.. அதுல எனக்கு சந்தோசந்தான்.. விசனப்பட ஒன்னுல்ல..” மனம் நிறைந்த வாழ்வுகான புன்னகை முகத்தில் பிரதிபலிக்க சிரிக்க..
அந்த சிரிப்பில் மயங்கிய செங்கானோ தன்னை மறந்து மனைவியை அணைத்து கொண்டார்.அங்கு கலவியில்லாத ஒரு காதல் அரங்கேற்றமானது.
தனாவிற்கு அவர்களின் காதலை காண காண தானும் இது போல எழிலோடு வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவேண்டும் என ஆசை கொண்டான்.
மனமும் உடலும் சோர்ந்து வந்தவனுக்கு இந்த மூப்பு காதல் அவனை உற்சாகமாக மீட்டெடுத்தது.ஏனோ சொல்ல தெரியாத சந்தோஷம்.. உள்ளத்தில் உடனே எழிலை பார்க்க வேண்டும் என்ற பேராவல்..
அந்த காதல பறவைகளை தொந்தரவு செய்யாமல் … சத்தம் செய்யாமல்.. வந்த சுவடு தெரியாமல்.. ஆனால் வரும் போது இருந்ததிற்கு நேர்மாறாக மிகுந்த துடிப்புடன் சென்றான்.
மாலை மங்கி.. இரவுக்கான ஆயத்த வேலைகளில் வானம் களமிறங்க.. கதிர் முற்றி நெற்குதர்கள் நிறைந்திருந்த பயிர்களை தீண்டி வந்த சில்லென்ற காற்று.. என சுற்றுசூழலும் அவன் மனதை போலவே ரம்யமாக இருக்க..
அவனின் நடையில் இப்போ துள்ளல் வந்தது. நம்மை சுற்றி உள்ளவை ஏற்கனவே தினமும் பார்த்து பழகியதாக இருந்தாலும்.. காதல் கொண்ட மனதிற்கு அவை புதிதாக ரசிக்க கூடியதாக தான் இருக்கும்..
பைக்கை எடுத்தவன் வீட்டிற்கு எதிர்திசையில் சென்றான்.. நேராக தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் டிபார்மெண்ட் ஸ்டோரில் எழிலுக்கு பிடித்த டெய்ரிமில்க் சில்க் பெரிய பார் இன்னும் அவளுக்கு பிடித்த சில ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு.. வரும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகை சரம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டிற்குள் நுழையும் போதே “எழில்.. எழில்.. எங்கிருக்க..”என உற்சாகமான குரலில்..
அவனின் குரலில் உள்ளறையில் இருந்து வந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள். என்னாச்சு நாம கோபமாக இருக்கோம்னு சோகமாக சுத்திட்டு இருந்தாரு.. இப்ப என்ன திடீர்னு மூஞ்சி ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.. என்னனு தெரியலயே.. எதுக்கும் உஷாரா இருந்துக்கோ எழிலரசி… என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இது எதையும் கண்டு கொள்ளாமல்.. அவள் வந்ததும் அவளை இழுத்து சோபாவில் அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு சாக்லேட் பாரை எடுத்து..
“எழில் இந்தா உன்னோட பேவரட் சாக்லேட்.. இப்ப சாப்பிடறியா.. இல்லல்ல வேணாம் உனக்கு கொஞ்சம் மெல்டானதான பிடிக்கும். அப்புறமா சாப்பிடு.. இப்ப வேணா ட்ரைப்ரூட்ஸ் பால்ஸ் சாப்பிடறியா..உனக்கு பிடிக்கும்ல.. வேணா வேணாம் நேந்திரங்கா சிப்ஸ் சாப்பிடறியா..” தனா தன் போக்கில் பேசி கொண்டே போக..
இவருக்கு என்னாச்சு நான் இவரிடம் சண்டை போட்டது எல்லாம் மறந்து போச்சா.. நான் பேசமாட்டேனு தெரிஞ்சு இவர் பாட்டுக்கு நான்ஸ்டாப்பா பேசிகிட்டே போறாரே…என நினைத்தாள்.
தனாவோ இப்ப பூச்சரத்தை கையில் எடுத்து
“நெருக்கமா கட்டிய மல்லிகப்பூ உனக்கு பிடிக்கும்ல.. இப்பவே வச்சுகறியா..”என ஆசையோடு கேட்க..
அவனின் மகிழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் முகத்தில் தெரிந்த பொலிவும்… அவன் உதடுகளோடு கண்களின் சிரிப்பும்…
கண்டவளுக்கு அவனை பேசி காயப்படுத்த விரும்பாமல்.. அமைதியாக பூவை வாங்கி தலையில் சூடிக் கொண்டாள்.
எதுவும் எதிர்மறையாக பேசாமல் பூவை வாங்கி வைத்து கொள்ளவும்.. தனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
எழிலை தாவி அணைத்து கொண்டான்.அவனின் வேகமான அணைப்பில் எழில் தான் சற்று மிரண்டுவிட்டாள்.
“அச்சோ.. பாப்பா.. “என கத்திவிட்டாள். அதன் பின்பு தான் எழிலின் நிலையறிந்து தன் வேகத்தை சற்று குறைத்து..
அவளின் சேலையை லேசாக விலக்கி.. வயிற்றில் கை வைத்து..
“சாரிடா பாப்புகுட்டி.. சாரி.. உங்களுக்கு வலிக்குதா.. அப்பா தெரியாம பண்ணிட்டேன்.. சாரி”
அடப்போடா தகப்பா.. உனக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு.. தப்பு பண்ணிட்டு சாரி கேட்க வேண்டியது.. உனக்கு எங்க அம்மா தான் கரெக்ட்..என ஒரு உதை கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டது.
தனாவின் பேச்சிற்கு வயிற்று குழந்தையின் பதிலடி இதை எல்லாம் பார்த்தவள்.. என்னடா நடக்குது இங்கே..என புரியாமல் முழித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா…
அவளின் முழியை கண்டவன் “நீயும் பேசலையா.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா என்ட பேச… அதான் நீ தூங்கியதும் நானும் பாப்பு குட்டியும் தூக்கம் வரவரை பேசிட்டு இருப்போம்”என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு..
அவன் சொல்லியது உண்மை தானே என நினைத்து வருத்தபட்டாள். ரொம்ப ஓவரா தான் பண்றமோ.. என நினைத்து கொண்டிருக்க..
அவளின் முகமாற்றைத்தை சரியாக படித்தவன் அவள் இளகி வரும் தருணம் அறிந்து…
“சாரிடி.. சாரி.. எல்லாத்துக்கும் சாரி”என அவள் தாடையை பிடித்து கொஞ்சினான்.அவனின் கொஞ்சலில் மெல்லிதாக சிரிக்க..
அந்த சிரிப்பே.. அவனுக்கு போதுமானதாக இருக்க..இன்னும் நெருங்கி அவளை மெல்ல அணைக்க… அவளும் அவனின் நெஞ்சில் சாய..
அவளை கைகளில் அள்ளி கொண்டவன் தங்கள் அறையை நோக்கி சென்றான்.
எழில் தான் சிணுங்கி கொண்டே..
” மாமா வாசற்கதவு திறந்திருக்கு”
“இருளாயி முன்னால திண்ணைல உட்கார்ந்திருக்கு”
“விளக்கு வைக்கற நேரம் வேணாம்”
“விளக்கு அணைக்கற நேரமே வந்திடுச்சு”
“நான் இன்னும் டிபன் பண்ணல..”
“எனக்கு இன்னைக்கு பசிக்கலடி”
“எனக்கு பசிக்கும் மாமா”
“உன் பசியை மறக்க வைக்கற வித்தை மாமனுக்கு தெரியும்”
“மாமா..”மேலும் அவள் ஏதோ சொல்ல வர..
“அமைதியா வாடி.. இன்னைக்கு உன் சால்ஜாப்பு எல்லாம் மாமன்கிட்ட பலிக்காது”
அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட..அவன் கழுத்தை தன் கைகளால் கோர்த்து கொண்டு வழக்கம் போல் அவனை சைட் அடித்து கொண்டு வந்தாள்.
அவள் பார்வைக்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தவன்.. அவளை படுக்கையில் விட்டு அவள் அருகில் இடைவெளியின்றி படுத்தவன்
கிசுகிசுப்பாக அவள் காதுகளில் “நாம இப்படி… பாப்பு குட்டிக்கு ஏதாவது ஆகிடுமா..”பயத்துடன் கேட்க.. அவனின் முகத்தில் பயத்தை மீறிய ஆசை தென்பட…
அவனின் முகத்தை காதல் பார்வையால் வருடியவாறே… இல்லை என்பதாக மெல்ல தலையை ஆட்டினாள்.
அவள் பதிலில் சீறிப் பாயும் காளையாக.. அவள் மேல் படர…

“மாமா.. மாமா. மெதுவா..” என அவனின் வேகத்திற்கு அணைப்போட.. வருடும் தென்றலாக அவளை ஆட்சி செய்தான்.
நீண்ட நாட்கள் ஊடலுக்கு பின் உண்டான கூடல் அல்லவா..
காமன் கலைகள் பயில… இரு பட்சிகள் முனைப்போடு இயங்க…
தாய்மை கொண்ட பேடையின் நிலையே வேகத்தடையாக இருக்க…
இருந்த போதிலும் அந்த கூடலை அணு அணுவாய் அனுபவிக்க விருப்பம் கொண்டது காதல் பறவைகள்.
பெண்ணவளின் மோகனங்கள் எல்லாம் மன்மதனின் மோகம் தீர்க்கும் மார்க்கமாக அமைய…
அவளின் இதழ்ரசம் மதுரசத்தை விட அதிக போதை ஊட்டுவதாக இருக்க… மேலும் மேலும் அவள் இதழிலேயே குடி கொண்டான்.
மங்கையின் பொன்னுடலில் காதல் ராஜன் கர்ம வீரனாக.. இதழும் கைகளும் காட்டிய மாய வித்தையில்..
மாயங்கள் யாவும் காயங்களாக.. காதல் அச்சாரங்களாக பதிய..
அச்சாரங்கள் கண்டு நாணம் கொண்ட காதல் தேவதையோ.. தலைவனின் ஆசைகளுக்கு தன்னை ஈடு கொடுத்து..
காதல் தந்து காதல் மீட்டாள்.
தன்னை தொலைத்து.. தன்னை தொலைத்த இடத்திலேயே மீட்டு கொண்டான் மீகிய காதலோடு அந்த காதல் கண்ணன்.

“என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..”

அவள் காது மடலை உரசியவாறே ரசனையாக அவள் கவிதையை அவளுக்கே படித்தான்.
” ஸ்பரிசித்ததா… சங்கமித்ததா..” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்
நிறைவான கூடலில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் நிறைந்திருக்க.. அவளை அள்ளி தன் மார்பில் சாய்ந்து கொண்டு….

“என் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
வந்ததா… ”
என்றான் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து.. எழிலுக்கு எழிலானவன்..

புள்ளி மேவாத மான் – 22 Read More »

error: Content is protected !!
Scroll to Top