மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 15&16
மோகனம்-15 மறுநாள் அலுவலகத்தில், அவனுடைய அறைக்கதவை திறக்க நாடிய போது… உள்ளிருந்து காக்கிச் சீருடை அணிந்து…. சற்று தொப்பை வைத்து.. முறுக்கு மீசையுடன்.. கூடிய ஒரு போலீஸ்காரரொருவர்… வெளியே வருவது புரிந்தது அவளுக்கு. அவளுக்கோ காக்கிச்சட்டையைக் கண்டதும்… குற்றமுள்ள நெஞ்சல்லவா?? உள்ளுக்குள் அதீதத்துக்கும், அதீதமாய் குறுகுறுக்க…காவல் அதிகாரியின் முகத்தைப் பார்க்கவும் வெகு சிரமப்பட்டுக் கொண்டு நின்றாள். நிமிடத்தில்.. அவளது பிறைநுதல் மற்றும் தேகத்திலெல்லாம் வியர்த்து வழியவும் ஆரம்பித்திருந்தது. இமைகள் படபடக்க… அறை வாசலில் நின்றிருந்தவளை.. காவல்துறை அதிகாரியோ… […]





