ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே… 7

7       தேவாவிடம் சொல்லி வந்த மாதிரியே மகனை அழைத்த மனோகர்..   “நீ ஒரு 15 நாள் ஈரோப் சைட் சுத்திட்டு வா.. இதை சொல்லி உனக்கு நிச்சயம் பண்ண இடத்திலேயும் லேட் பண்ணிடுறேன்.. நீ சொன்ன பொண்ணு வீட்டில் பேசி வைக்கிறேன்.. அம்மாவையும் சமாளிக்கணும் பார்த்துக்கோ” நச்சுன்னு சொல்ல..     ” வேற வழியே இல்லையா?” என்றான் நந்தன் கோபமாக..   “குடும்ப கௌரவம் முக்கியம்.. சரியா? அவசரமில்ல யோசிச்சு […]

என் கர்வம் சரிந்ததடி சகியே… 7 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 6

6     வைசாலி பேச்சில் அதிர்ந்து நின்றான் நந்தன். இவன் சாவகாசமாக இருக்க அங்கே அவளுக்கு சம்பந்தம் பேச ஆள் வருகிறார்கள், என்ற செய்தியே அவனுக்கு இதுநாள் வரை உள்ளத்தில் அழுந்தி கொண்டிருந்த உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட.. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டான்.     மறுநாள் எப்படியாவது அவளிடம் தன் மனதை சொல்லியே தீர வேண்டும் என்ற சபத்துடன் தான் அவன் துயில் கொண்டான். அடுத்த நாள்

என் கர்வம் சரிந்ததடி சகியே… 6 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 5

5       காலையில் மிக சீக்கிரமே கல்லூரிக்கு வந்துவிட்டான் நந்தன். ஒரு கோரிக்கையோடு , வைஷாலி கேபின் எதிரில் நின்று கொண்டிருந்தான்.   எப்பொழுதும் போல யாரையும் பாராமல் நிமிர்ந்த நடையுடன் அவள் நடக்க.. அவள் நடைக்கு ஏற்ப போனி டையிலும் ஆட.. வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தவளை பார்த்தவுடன், நந்தன் மிக பவ்யமாக தனது முகத்தை மாற்றிக் கொண்டான்.     இவனை கிஞ்சித்தும் பாராமல் கேபினில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்

என் கர்வம் சரிந்ததடி சகியே… 5 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 4

4     ஒரு வாரம் அமைதியுடனே கழித்தான் நந்தன், கல்லூரி செல்வதும் அவனின் அல்லகைகளுடன் அளவளாவதுமாய் சென்றது நேரம் அவனுக்கு. ஹரிஷ் கூட அந்த பெண் பற்றி மறந்துவிட்டானோ என்று குழம்பும் அளவுக்கு இருத்தது நந்தனின் நடவடிக்கைகள் எல்லாம்.   தந்தையிடம் திரும்ப ஒரு வார்த்தை கூட டிபார்ட்மென்ட் மாற்றுவதை பற்றி பேசவில்லை அவன். எப்போதும் போலவே தான் இருந்தான். மனோகரும் அவனின் இந்த அதிக ஆர்வமின்மையை பார்த்து கொண்டு தான் இருந்தார். தேவாவிடம் இருந்து

என் கர்வம் சரிந்ததடி சகியே… 4 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 3

3         “என்னது லெக்சரரா?” என்று முதலில் அதிர்ந்து கூவியது ஹரிஷ் தான் …    சந்துரு மெல்ல தலையை அசைத்து, ” ஆமாம் .. அவங்க நேம் வைசாலி” என்றான்.    அங்குள்ளவர்களுக்கு எப்படி இதற்கு ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.. அப்படியொரு அமைதி அங்கே.. சந்துரு தலையை அசைத்து விட்டு நழுவி விட்டான் நந்தன் ஒன்றும் பேசவில்லை.. நெற்றி சுருக்கமும், தாடை இறுக்கமும் தான் அவனின் யோசனையை அனைவருக்கும் தெரியப்படுத்த,

என் கர்வம் சரிந்ததடி சகியே… 3 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 2

2     அதிகாலை நேரம், சூரியன் தன் இரவு தூக்கத்தை விடுத்து மெல்ல மெல்ல கண் விழித்து தன் பார்வை என்னும் கதிர்களை, பூமி பெண்ணவள் மீது மெதுவாக வீச, அதற்காகவே காத்திருந்தது போல தன் அதரங்களை விரித்து வாங்கி கொண்டாள் அவள்..    அந்த நடுத்தர ஒற்றை அடுக்கு வீட்டு மொட்டை மாடியில் அந்த அதிகாலை வேளையில், வெண்ணிற பைஜாமா அணிந்து, தன் பயிற்சியை தொடங்கினாள் பெண் ஒருத்தி…     சூரிய நமஸ்காரம்

என் கர்வம் சரிந்ததடி சகியே… 2 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1

என் கர்வம் சரிந்ததடி சகியே… ஜியா ஜானவி   1 இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஈரோடு..   பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக விளங்கிய ஈரோடு… என்னடா.. ஒரே ஈரோடு பற்றிய செய்திகளா இருக்கே என்று பார்க்கிறீர்களா.. ஆமாம், நம்ம

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1 Read More »

ஜான்வி – அத்தியாயம் இரண்டு

ஜான்வி – அத்தியாயம் இரண்டு கடற்கரையில் அவினாஷிடம் கைபேசி என்னை பெற்று கொண்டு அவனிடம் “எனக்கு உதவி தேவை பட்டால் போன் செய்கிறேன் .. உங்கள் பெயர் என்ன எப்படி பதிவு செய்து கொள்ளட்டும்” என்றாள். அவள் தமிழ் வித்தியாசமாக இருந்தது அதனை கவனித்து ” என் பெயர் அவினாஷ் , கனரா வங்கியில் கிளை மேலாளராக உள்ளேன் ” என்று கூறிவிட்டு மேலும் ” ஆமாம் நீங்கள் உண்மையில் தமிழ் நாடு தானா இல்லை வேறு

ஜான்வி – அத்தியாயம் இரண்டு Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா

இழை-5 அவளது படிய வாரிய சிகையும், நீண்ட பின்னல் ஜடையும், கிழிந்த உடையும்.. அசல், ‘பட்டிக்காடு’ என்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கலானது. அந்தத் தோற்றமே.. பார்த்த முதற்கொண்டு அவனுள் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது, மெய்!!    என்றுமே… நுனி நாவில் ஆங்கிலமும், மேலைத்தேய கலாச்சாரத்துக்கு சோரம் போகாத.. நவநாகரீக யுவதிகள் தான் அவனது தேர்வு!!    சிற்சில சமயங்களில் கேளிக்கை விருந்துகளிலும் கூட.. அப்படியாப்பட்ட நவநாகரீக மங்கைகளைத் தான் இரு வார்த்தை சிரித்துப் பேசவே.. நாடும் அவன் மனம்!! 

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா Read More »

error: Content is protected !!
Scroll to Top