ATM Tamil Romantic Novels

Photo-20240402-144052-S-993x1291

6 ஆசை வெட்கமறியாது

AV 6 பொறாமைகளும் பகைகளும் சாதாரண மக்களுக்கே வரும்போது அபாயகரமான தொழிலை சட்டத்துக்கு புறம்பாய் செய்யும் ரகுவுக்கு வராதா என்ன?!! அவனும் தன்னோடு உறவாடும் பாம்புகளின் விஷ அளவு தெரிந்துதான் தள்ளி நிற்கிறான்.. இப்படி யாருக்கோ யாரோ வைத்த வலையில் இவர்கள் புறம் வன்மம் திரும்பியதும் விதியே… “ரகு தம்பி.. லட்சுமிம்மா” “சொல்லுங்கம்மா” “விஜி பாப்பா படிப்பு முடிக்குது” “ஆமாம்..” “கல்யாணம் பத்தி ..” “செய்யலாம் .. அதுக்கு இப்போ அவசரம் இல்லம்மா..” “பொண்ணுங்கள விவரம் தெரியும் […]

6 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

5 ஆசை வெட்கமறியாது

AV 5 “எருமை என்னை போலி டாக்டர் சொல்றியா? சொல்லு சொல்லு..” செல்வாவின் பின்னாடியே ஓடிவந்த விஜி கத்தி ஸீன் போட.. “எப்ப சொன்னேன்?வார்ட்ரோப்பில் இருந்து துணிகளை எடுத்தவாறே ஆண் தெனாவெட்டு பதில் செல்வா .. “நல்ல டாக்டர் ன்னா என்னா?” “நல்ல டாக்டர் விஜிமா” வெறுபேத்தாத பன்னி.. விஜி முதுகு காட்டி நின்றவனின் இடுப்பு பகுதியை ஆத்திரத்தில் கிள்ள.. அந்த உயர பிரமாண்ட சிலைக்கு கிச்சு கிச்சு மூட்டிய உணர்வு வர.. நெளிந்து எடுத்து அது

5 ஆசை வெட்கமறியாது Read More »

BC3D4C8B-56B2-4697-ABED-3DFB6AC3FE2E

புள்ளி மேவாத மான் – 20

20 – புள்ளி மேவாத மான்

எழிலின் காதல் அறிந்த நொடி தனா தன்னை ஒரு மகாராஜா போல கர்வம் கொண்டான். முன்பை விட இப்போது எழில் மேல் ஏக்கம் அதிகமானது. முதல் வேலையாக ஏழிலை கூட்டி வந்திட வேணும் என முடிவு செய்தே பிறகே நிம்மதியான உறக்கம் கொண்டான்.
வழக்கத்தை விட நேரமாக எழுந்து கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது பேக்டரியில் இருந்து போன் வந்தது. ஏதோ இயந்திரம் பழுதாகி விட்டதாக… உடனே டெக்னீஷியனுக்கு போன் செய்துவிட்டு தானும் கிளம்பி சென்றான்.
எழிலின் தந்தைக்கோ தனா மேல் மிகுந்த கோபம். எழிலோ வந்ததில் இருந்து கணவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை யாரையும் பேசவிடலை. கற்பகம் தான் என்ன நடந்தது என உருட்டி மிரட்டி தெரிந்து கொண்டார்.
தெரிந்ததை கணவரிடமும் சொல்லி தெரியாமலேயே ஒரு பிழை செய்தார். பெண்களுக்கு மகள் வாழ்க்கையில் சிக்கல் என்றால் பக்குவமாக கையாண்டு குடும்பம் என்றால் அப்படி தான் என அதையும் இதையும் சொல்லி புருஷனோடு அனுப்பி விடுவர்.
இந்த சூட்சமம் அறியாத ஆண்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தில் மருமகனிடம் பகைத்து கொண்டு மகளின் வாழ்வை சிக்கலாக்கி விடுவர்.அதே தவறை முத்துக்குமாரும் செய்தார்.
சுந்தரத்தை செல்பேசியில் அழைத்து என் சிநேகிதனின் மகன் என்பதாலும் கௌரவமான குடும்பம் என்பதாலும் தான் என் மகளை உன் அண்ணன் மகனுக்கு கொடுத்தேன்.
அவன் காதல் கண்றாவி எல்லாம் தெரிந்திருந்தும் நீ வந்து கேட்டதால் கொடுத்தேன். என் மகள் இருக்கும் போது பழைய காதலியை தேடி போறானோ.. என காச்மூச் என கத்தி என் மகளை இனி அனுப்பமாட்டேன் நானே வைத்து பார்த்து கொள்கிறேன் என சத்தம் போட்டு வைத்துவிட்டார்.
சுந்தரம் காலங்கார்த்தாலயே இது என்னடா சிக்கல் என டென்ஷன் ஆகிவிட்டார். பேக்டரியில் பிரச்சினை என வெற்றியும் சென்று இருக்க… வரட்டும் பேசி கொள்ளலாம் என அமைதி காத்தார்.
தனா வர மதியம் ஆகிவிட்டது. வந்தவன் கசகசப்பு நீங்க குளித்து எழிலை பார்க்க தயராக…
சுந்தரம் வீட்டிற்கே வந்துவிட்டார் மனைவி சகிதமாக.. வரும்போதே தம்பிக்கும் அழைத்து சொல்லிவிட்டு தான் வந்தார்.
சுந்தரம் வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் கண்ணனும் வந்துவிட.. இவர்களின் வருகையும்… சுந்தரத்தின் கோப முகமும் தனாவிற்கு ஓரளவு விஷயத்தை சொல்லிவிட்டது.
சுந்தரம் மிக கோபமாக ” நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. அரசி எதுக்கு கோவிச்சுகிட்டு போச்சு”
தனா அமைதியாக இருக்க… சுந்தரத்திற்கு ஏகத்திற்கும் கோபம் ஏற…
“இப்படியே அமைதியாக இருந்தா எதுவும் எங்களுக்கு தெரியாது என நினைச்சிட்டு இருக்கறியா..உனக்கு கல்யாணம் ஆகி உனக்குனு ஒரு குடும்பம் ஆகி போச்சு.. இப்ப அந்த பூங்கொடி புள்ளய பார்த்து பேசினா நல்லாவ இருக்கு..”
அவர் அவ்வாறு கேட்கவும் தனா கோபமாக “என்னைய தப்பா நினைக்கறிங்களா..பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு பொண்ண தேடி போறவனா நானு…”
உடனே கண்ணன் தணிவாக “தம்பி உன்னை எங்க அண்ணனோட மறுபதிப்பா தான் பார்க்கிறோம். உங்கள எப்படி தப்பா பேசுவோம். அண்ணன் என்ன சொல்ல வராங்கனு பொறுமையா கேளு தம்பி”
“உங்கள தப்பா பேசல தம்பி பனை மரத்துக்கடிய நின்னு பால குடிச்சாலும் ஊரு உலகம் கள்ளுனு தான சொல்லும். நீங்க அந்த புள்ளைக்கு நல்லது செய்ய நினைச்சாலும் ஊரு கண்ணுக்கு அது தப்பா தான் தெரியும்”
“நான் நல்லா வாழும் போது அவ கஷ்டபடறத பார்த்தா எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு”
அவனின் பேச்சில் சுந்தரம் பல்லை கடித்து கோபத்தை அடக்கியவாறு..
“அந்த புள்ள வாழ்க்கையை பார்க்க பெத்தவன் இருக்கான்.. நாங்க பெரியவங்க இருக்கோம் பார்த்து ஏதாவது செய்வோம்”
“இல்லையில்லை அவ புருஷன் கொடுமைக்கு என்னை வச்சு தான பேசறான்.அதனால நான் தான் ஏதாவது செய்யனும்”
அவனின் பேச்சில் சுந்தரம் கோபத்தின் உச்சிக்கே சென்று விட”அவ அப்பன் தான உங்களுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேனு சொன்னாரு..அவரே தான பொண்ணுக்கு இந்த பையன பார்த்து கட்டி வச்சாரு.. அவரு தேடி தந்த வாழ்க்கை தான.. அவரு தான் சரி பண்ணனும். நீங்க உங்க பொழப்ப மட்டும் பாருங்க…நீங்க தேவையில்லாம தலையிட்டு அந்த புள்ள பேரு இன்னும் கெட்டு போறதும் இல்லாம உங்க வாழ்க்கையும் சிக்கல் பண்ணிக்காதிங்க”
“உங்களுக்குனு கௌரவம் அந்தஸ்து பிரசிடென்ட் பதவி எல்லாம் இருக்கு அதுக்கு தக்கன நடந்துங்குங்க அதான் உங்க வாழ்க்கைக்கும் நல்லது நம்ம குடும்பத்திற்கும் நல்லது”
“முத்துக்குமார் மாமா கேட்கற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல.. போய் முதல்ல அரசிய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வழியை பாருங்க” என சொல்லிவிட்டு விருட்டென எழுந்து சென்றுவிட்டார்.
கண்ணன் தேவி திலகா மூவரும் அவனிடம் பொறுமையாக பேசி சில விஷயங்களை புரிய வைத்து விட்டு சென்றனர்.
அதன் பிறகே தனா கொஞ்சம் தெளிந்தான்.உடனே எழிலை கூட்டிட்டு வர கீரனூர் சென்றான்.
இவன் சென்ற நேரம் முத்துக்குமார் வீட்டில் இருந்தார். மருமகனை வா என அழைக்காமல் முகத்தை திருப்பி கொண்டார்.
என் பொண்ணு இவனுக்கு அவ்வளவு இளக்காரமா போயிட்டாளா… சிநேகிதன் மகனாச்சேனு பார்க்கறேன்.. இல்ல நடக்கறதே வேற.. என மனதில் தனாவை தாளித்து கொண்டு இருந்தார்.
தனாவிற்கு அவரின் செயல் முகத்தில் அடித்தாற் போல இருக்க அவரை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
இவரு என்ன இப்படி முகத்தை திருப்பி கிட்டு இருக்காரு.. என் பொண்டாட்டி நான் சண்ட போடுவேன். கொஞ்சுவேன் எதுனாலும் நானாச்சு… என் பொண்டிட்டியாச்சு.. இந்தாளுக்கு என்ன வந்துச்சாம்.. என மனதோடு வசை பாடி கொண்டு இருந்தான்.
கற்பகம் தான் வரவேற்று காபி பலகாரம் என உபசரித்தார். எழில் அவன் வந்தது தெரியாமல் அவள் அறையில் உறங்கி கொண்டு இருந்தாள்.
தனா எழிலை பார்வையாலே தேடினான். மருமகனின் பார்வை உணர்ந்து கற்பகம் தான்
“அரசி தூங்கிட்டு இருக்கா மாப்பிள்ள.. இருங்க எழுப்பி விடறேன்”
“இல்லல்ல வேணாம் எழுப்ப வேணாம் அத்தை.. நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு சிறு தயக்கத்துடன் எழிலின் அறைக்கு சென்றான்.
இவன் சென்று பார்த்த போது எழில் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள். என்ன செய்வது என தெரியாமல் அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.
அப்போதும் அவள் பாதங்கள் சற்று வீக்கமாயிருக்க… மெல்ல பிடித்து விட ஆரம்பித்தான்.
அவனின் செயலில் சற்று தூக்கம் கலைய “ம்மா விடுங்க தூங்கனும்”என சொல்லி அசைந்து படுத்து மீண்டும் தூங்கிவிட்டாள்.
தன் செயல் அவள் தூக்கத்தை கெடுக்கிறதை உணர்ந்து மெல்ல நகர்ந்து அவள் அருகில் அவளை தொந்தரவு செய்யாமல் படுத்து கொண்டான்.
அவள் மேடிட்டு இருந்த வயிறு அவள் ஒருக்களித்து படுத்து இருந்ததில் சற்று சரிந்து புடவை விலகி இருக்க… எழில் தான் தூங்கி கொண்டு இருந்தாள். ஆனால் அவள் பிள்ளை தூங்கவில்லை.
பிள்ளை துள்ளலோடு அம்மாவின் வயிற்றை உதைக்க.. ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் என்றாலும் தனாவின் பார்வைக்கு அது தப்பவில்லை.
தான் பார்த்தது நிஜமா.. பிரம்மையா என அவன் உணரும் முன்னமே.. வயிறு இயல்பாகி விட பிரம்மிப்பில் இருந்தான்.
அவனோ எழுந்து அமர்ந்து எழிலின் வயிறையே பார்த்து கொண்டு இருக்க.. மறுபடியும் ஒரு துள்ளல்…
தனாவிற்கோ மனதில் சொல்ல முடியாத பரவசம். தன்னை தந்தையாக உணர்ந்தான் அந்த நொடி. அவனை அறியாமல் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது.
இதை எல்லாம் கவனிக்காமல் உணராமல் தேவை இல்லாத பிரச்சினையில் தன்னை தொலைக்க இருந்த மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.
குழந்தைக்கு பசி எடுத்துவிட மீண்டும் மீண்டும் தாயின் வயிற்றை முட்ட.. தனா மெதுவாக எழிலின் வயிற்றில் கை வைத்து அதன் ஸ்பரிசத்தை உணர முயன்றான்.
பிள்ளையின் துடிப்போ…. தனாவின் கை அழுத்தமோ… எழிலின் தூக்கத்தை தடை செய்ய…
மெல்ல எழுந்தவள் தன்னருகில் இருந்த தனாவை அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவள் பார்வையே சொன்னது.
சட்டென பார்வையை மாற்றி கொண்டு அவனை முறைத்து பார்த்து கொண்டே இருக்க..
அவளின் கோபத்தை கலைக்கவென பிள்ளை என்னை முதல்ல பாருமா என துள்ளாட்டம் போட்டது. உடனே தன் தாயை தேடி சென்றாள்.
தனாவிற்கோ பிள்ளை பற்றிய சிந்தனையில் அவளின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளவில்லை..
என் பிள்ளை என்னை போல அமைதியாக இல்லாமல் இவளை போல துறு துறுனு இருப்பான் போல… இருந்தாலும் என்னை போல ஆக்டிவா தான் இருப்பான்.என என் பிள்ளை… என் பிள்ளை… என பூரித்து போய் இருந்தான்.
சற்று நேரத்தில் எழில் திரும்பி வர.. தனா உட்கார்ந்து கொண்டு கனவுலகில் தன் பிள்ளையோடு உறவாடி கொண்டு இருக்க..
கற்பகம் எழிலுக்காக சுண்டல் தாளித்து இருக்க.. அதையும் எழிலிடம் மருமகனுக்காக கொடுக்க..
அதை வாங்க மறுத்த எழிலை கண்டித்து அவள் கைகளில் திணித்து அனுப்பி விட…
ஏற்கனவே தனா மேல் கோபத்தில் இருந்தவளுக்கு இந்த மாப்பிள்ளை உபச்சாரம் எரியற தீயில் எண்ணை வார்க்க…
கடுப்புடன் சுண்டல் கப்பை நங்கென்று அங்கிருந்த டீப்பாயில் வைக்கவும்.. அந்த சத்தத்தில் கனவுலகில் இருந்து மீண்டு நிகழ்விற்கு வந்தான்.
அப்போதும் அவன் பார்வை ஆசையாக எழிலின் வயிற்றின் மேலேயே இருக்க…
பார்த்தவளுக்கு பற்றி கொண்டு வந்தது.
“எழில் கிட்ட வாயேன். பாப்பவ தொட்டு பார்க்கனும் போல ஆசையா இருக்கு.. ”
“இப்ப இங்க எதுக்கு வந்திங்க”
“என்னடி இது கேள்வி பாப்பவ பார்க்கனும் போல இருக்கு” என புதிதாக தோன்றிய பிள்ளை பாசத்தில் என்ன சொல்லுகிறோம் என தெரியாமல் உளறி வைத்தான்.
“ஆக என் மேல உள்ள அன்பினால வரலை..புள்ள பாசத்துல வந்திருங்கிங்க..”
“என்னடி இப்படி பேசற.. நம்ம புள்ள..”என்றான்.
“பிள்ளைக்காக வந்திங்களா.. எனக்காக வந்திங்களா..” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கேட்க..
“அப்படி எல்லாம் இல்ல.. உன்ன பார்க்க தான் வந்தேன். உன்னைய கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்”
“ஓஓஓ… அப்படி எல்லாம் வரமுடியாது. நீங்க கூப்பிட்டா வந்திடனுமா.. வந்து என்ன செய்ய.. மறுபடியும் அந்த பூங்கொடி நினைப்புல சுத்துவிங்க.. என்னைய ஒதுங்குவிங்க.. பார்த்துட்டு மூலை உட்கார்ந்துட்டு கண்ணீர் வடிக்கனுமோ…”
“இனி பூங்கொடி பத்தி பேசவேமாட்டேன். நம்ம வாழ்க்கைல இனி எப்பவும் பூங்கொடி கிடையாது. உன் காதல புரிஞ்சுக்காம நான் பண்ணினது தப்பு தான்”
“எந்த மரத்துல இந்த ஞானோதயம் வந்துச்சு”
மிகவும் தயங்கி தயங்கி “உன் டைரி… படிச்சேன்…” என்றான்.
அவ்வளவு தான் பொங்கிவிட்டாள் எழில்.
“ஓஹோ… டைரி படிச்சதால வந்த பரிதாபமா.. இத்தனை நாள் கூட வாழ்ந்த போது தெரியல.. டைரி படிச்சு தான் தெரிஞ்சுதோ..”
“இல்ல டைரி படிக்காததுக்கு முன்னாடியே உன்னை வந்து கூட்டிட்டு போவனும் தான் இருந்தேன். நைட் நீ இல்லாம தூக்கம் வரலையா.. அதான் டைம் பாஸ்கு படிச்சேனா.. அப்படி தான் தெரிஞ்சுகிட்டேன்”
என்னது டைம் பாஸ்கா… என அதிர்ந்தவள் “நான் உயிர கொடுத்து காதலிச்சா..யோவ் உனக்கு டைம் பாஸா” என கத்த ஆரம்பித்தாள்..
அவசர அவசரமாக கிட்ட வந்து அவள் வாயை மூடியவன்..
” ஏய்.. மெதுவா பேசுடி.. ஏற்கனவே உங்க அப்பா முறைச்சிகிட்டு இருக்காரு.. பத்தாதுக்கு சித்தப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி சித்தப்பா வந்து என்னை திட்டு திட்டுனு திட்டி உடனே அரசி கூட்டிட்டு வர என சொல்லிட்டார்”
எழிலுக்கு முத்துகுமார் சுந்தரத்திடம் பேசினது எல்லாம் தெரியாது.
“இது எப்போ..”
“இப்ப தான் மத்தியானம்”
“அப்ப உங்களுக்கா என்னை வந்து பார்க்கனும்னு தோனல..டைரி படிச்சதாலயும்… மாமா திட்டுனதாலும் வந்திருங்கிங்க இதெல்லாம் நடக்கலைனா இப்பவும் வந்திருக்கமாட்டிங்க..”
அய்யோ நானா ஒரு ப்ளோல எல்லாத்தையும் உளறிட்டேன் போல இருக்கே.. மொத்தமா மலை ஏறிட்டாளே.. எப்படி இறக்க போறேனோ தெரியலையே… என மௌனமாக புலம்பியவாறே பரிதாபமாக அவளை பார்த்தான்.
“ம்ம்ம்.. அப்படி தான் வந்ததும் என்னைய பார்த்திங்களா.. உங்க புள்ளய தான பார்த்திங்க…” என அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்.
“இல்லடி உன்னைய தான் பார்த்தேன் உன் கால எல்லாம் அமுத்திவிட்டேன் தெரியுமா… உன் தூக்கத்துக்கு தொந்தரவா இருக்கவும் விட்டுட்டேன். அப்புறம் தான் பாப்பாவ பார்த்தேன்” என்றான் அவசரமாக பதட்டத்துடன்…
அவனின் பேச்சில் உண்மை இருப்பது போல தெரியவும்.. எழிலுக்கு மனதுக்குள் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் கெத்தாக..
“சரி சரி இப்ப எதுக்கு வந்திங்க.. அத சொல்லுங்க” என்றாளே….
அய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா என தனா தனக்குள்ளயே புலம்பியவாறே…
“அம்மா… தாயே… நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. மீ ரொம்ப பாவம்.. அறியாத புள்ள தெரியாம பண்ணிட்டதா.. நினைச்சு மன்னிச்சு விட்று” என்றான் நொந்து போய்…
“மன்னிச்சறு.. மன்னிச்சுறுனா மன்னிப்பு கேட்காம எப்படி மன்னிக்கறது ம்ம்” என்றாள் அதிகாரமாக…
சட்டென அவளை நெருங்கி அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு
“நான் பண்ணினது தப்பு தான். சாரி..சாரி..இனி இது மாதிரி பண்ணமாட்டேன். சாரி.. மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான் தன் தப்பை உணர்ந்து..
எழில் தனாவை மன்னித்தாளா.. தனாவுடன் சென்றாளா…

புள்ளி மேவாத மான் – 20 Read More »

Photo-20240402-144052-S-993x1291

4 ஆசை வெட்கமறியாது

AV 4 அழுகிறாளே!! இந்த வெட்கத்தை விட அவசரம் அவசியம் என்று பல்லை கடித்து கடைக்காரர் முகம் பாராது சீட்டு கொடுத்து வாங்கி கொடுத்தால்.. அடுத்து சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம்.. இதை எப்படி யூஸ் பண்ணுறது செல்லு ன்னு.. அவனிடமே கேட்க நொந்து போய்ட்டான்.. செல்வா.. வீட்டில் பெண்ணின் தேவை புரிய.. இதுவரை பழகி வைக்காத பக்கத்து வீட்டு அக்காக்களை தேடி போய் விஜி நிலைமை சொல்லி உதவி கேட்க.. அந்த சேரிப்பகுதியே திரண்டுவிட்டது அவளை பார்த்துக்க..

4 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

3 ஆசை வெட்கமறியாது

3 ஆசை வெட்கமறியாது ஹோட்டல் பாத்ரூமிலேயே தன் கறையை போக்கி குளித்த ரகு சோர்ந்து கிடந்த உடலை கேவலமாய் பார்த்தான்.. போதுமா? உனக்கு இந்த ஆட்டம் தானே வேணும்.. எவ குழிலேயாவது இறங்கனும் உனக்கு பைத்தியம் போல இயங்கனும் முடிஞ்சிச்சா.. உன்னோடு என் மனசால போட்டி போட முடில.. பொங்கி எழுந்து அறிவையும் கெடுக்குற.. உன் தேவைக்கு தான் பெண்கள் எனக்கு இல்லை சரியா? அறிவு அதிகம்.. தாள முடியாத சக்தி .. அவனால் பெண் இல்லாமல்

3 ஆசை வெட்கமறியாது Read More »

2 ஆசை வெட்கமறியாது

2 ஆசை வெட்கமறியாது     “தையல் போடணும் செல்லு”   முதுகின் வெட்டு ஆழம் கண்டு செல்வாவின் காதுக்கு எக்கி கிசுகிசு வென்று விஜி சொல்ல.. கூசி சிலிர்த்தான் அந்த ப்ரவுனி ஹல்க்…. முதுகில் சுண்டி இழுத்து வலித்து எரிந்த பகுதி காதலி கைப்பட குணமே பெற்ற மாதிரிதான் இருந்தது.. கழற்றிய சட்டையை கொண்டு அகன்ற நெஞ்சை மூடி.. உதட்டை அலட்சியமா சுழித்த செல்வா, மயக்கங்கள் தெளிந்து.. வெளியே செல்லலாம் சமிஞ்சை காட்ட…   கருப்பழகை மறைக்க

2 ஆசை வெட்கமறியாது Read More »

1 ஆசை வெட்கமறியாது

ஆசை வெட்கமறியாது 1 ஆசை வெட்கமறியாது.. “விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…” மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள், “யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க “சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..” அந்த ஆணவக்காரி .. “அவனா?” விழி உயர்த்தி.. ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க.. அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து

1 ஆசை வெட்கமறியாது Read More »

D15F938D-4C55-43DE-BAA0-7EE2AD4637DA

புள்ளி மேவாத மான் – 19

19-புள்ளி மேவாத மான்

தனா தன் பெற்றோர் அறையில் சிறிது நேரத்திலேயே உறங்கி விட… எழில் தான் தன் காதலுக்கு இவ்வளவு தான் மதிப்பா.. தன் அன்பு கொஞ்சம் கூட அவர் மனதில் அரும்பலையா..அப்போ என் கூட வாழ்ந்தது எல்லாம் கடமைக்காக தானா..
என் காதல் மேல் நம்பிக்கை கொண்டு தான் கல்யாணம் செய்தேன். அந்த காதல் அவரின் மனதில் என்னை நிறுத்தவில்லையா.. என் அன்பில் தான் குற்றம் குறையா… என கழிவிரக்கத்தில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் விட்டாள்.
எதுவாக இருந்த போதிலும் மனைவிங்கற ஸ்தானத்திற்கு மதிப்பில்லையா.. வாழ்ந்த வாழ்க்கைக்குஅர்த்தமில்லையா… இப்படியாக தான் இருந்தது பேதையவளின் மனதின் சிந்தனை.
தனக்கு மதிப்பில்லாத போது இங்கு எதற்கு இருக்கவேண்டும். தன்னை உணராத கணவனிடம் தன்னை இருத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவள் தன்மானம் விழித்து கொள்ள .. அந்த நொடி அழுகை நின்றது.
விடிந்தும் விடியாத பொழுதில் தன் அன்னைக்கு போன் செய்தாள். தன் அன்னையிடம் அழுகவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தனா பூங்கொடி காதல் தெரிந்த போது தன் காதல் வலியை தன்னுள் அழுத்திக் கொண்டு வலிய வைத்த சிரிப்புடன் வலம் வந்தவள்… இதற்கா அழுக போகிறாள்.
கற்பகமும் மகளை பொறுமையாக இருக்க சொன்னார்.ஆனால் எழில் பிடிவாதமாக வந்தே தீருவேன் என்று நின்ற நிலையிலேயே இருக்க…
கற்பகம் கணவரை எழுப்பி சொன்னால் மகள் மேல் உள்ள பாசத்தில் நாலு சுவற்றுக்குள் முடிக்க வேண்டியதை ஊரை கூட்டி அம்பலத்தில் ஏற்றி விடுவார் என தமிழரசனை அனுப்பி வைத்தார்.
தமிழரசன் வந்த போது தனா எழுந்திருக்கவில்லை. அவனுக்கும் கோபம் இருந்த போதும் மாமன் மேல் இருந்த மதிப்பும் தங்கையின் வாழ்க்கையும் அவனை அடக்கி வைத்திருந்தது.
தனக்கு தேவையானதை எடுத்து வைத்தவள் தனா எழுந்து வந்ததும் கிளம்பிவிட்டாள்.
தனா எழுந்து வந்தவன் பார்த்தது டிராவல் பேக்கோடு இருந்த எழிலையும் தமிழரசனையும் தான்.
தனா ‘நான் என்ன சொல்லிட்டேன். இப்படி கிளம்பி நிற்கிறா.. ராங்கிகாரி.. போடி போ..’ என எழிலின் முகத்தையே பார்த்து நிற்க..
‘ ஏன்.. என்னனு… கேட்டா தான் என்ன…திமிரு.. திமிரு அவ்வளவும் திமிரு’
மனதுக்குள் பொறுமியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவனும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. அவனை முறைத்துக் கொண்டே சென்று காரில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசனுக்கு என்ன செய்வது என தெரியாமல் விடை பெறும் விதமாக தலையை அசைத்து விட்டு கிளம்பவிட்டான்.
எழில் வருவதற்குள் கற்பகம் முத்துக்குமாரிடம் எழில் சொன்னதை சொல்லி,
“ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை.. நாம அமைதியா இருந்தா அவங்களே சரியாடுவாங்க.. நீங்க தலையிட்டு பெரிசு பண்ணிடாதிங்க..”
“மசக்கை சமயத்துல கூட புருஷன விட்டு வரமாட்டேனு இருந்தா.. இப்ப அவளுக்கு பார்த்து செய்து அனுப்புவோம்”
“மறுபடியும் சொல்றேன் நீங்க அமைதியா இருங்க..”
மனைவி சொன்னதற்கு அமைதியாக கேட்டு கொண்டாலும் உள்ளுக்குள் தனாவின் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.
எழில் வந்து இரண்டு நாட்களாகி இருக்க… தனாவும் போன் பண்ணவில்லை. இவளும் பேசவில்லை. இருவரும் வீம்புடன் இருந்தனர்.
எழில் சென்றது தெரியாமல் தேவி மீன் சமைத்து அதை கீர்த்தியிடம் கொடுத்துவிட… தனா பேக்டரிக்கு சென்றிருக்க…இருளாயி பாட்டி வருத்ததுடன் எழில் சென்றதை சொல்லிவிட..
கீர்த்தி சென்று சொன்னதும் சுந்தரம் தனாவை வீட்டுக்கு அழைத்து,
“என்ன சண்டை உங்களுக்குள்ள”என்று எவ்வளவு கேட்டும் பேசவில்லை.
சொல்வதற்கு விருப்பம் இல்லாமல் அமைதியாக.. அழுத்தமாக நின்றான்.
கேட்டு சலித்து போய்”எதா இருந்தாலும் இரண்டு நாளில் பேசி கூட்டிட்டு வந்திடு..”என்றார் கோபத்துடன்.
ஒரு நான்கு நாட்கள் விரைப்பாக இருந்தவனால்.. அதற்கு மேல் முடியவில்லை. வீட்டின் தனிமையும் அவளின் அன்பான கவனிப்பும் இல்லாமல் இருக்க முடியவில்லை.இரவோ கொடுமையிலும் கொடுமை..
அன்று எழிலின் ஞாபகம் அதிகமாக இருக்க.. மாலை மானஜேரிடம் சொல்லி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். சிறிது நேரத்தில் மானேஜர் ஏதோ பைல் தேவை என ஆள் அனுப்ப.. அதை எடுக்கும் போது அங்கு ஒரு மூலையில் அன்று அவன் எறிந்த எழிலின் டைரி இருந்தது.
ஆளை அனுப்பி விட்டு வந்து தங்கள் அறையில் டைரியோடு வந்தவன்
வசதியாக முதுகுக்கு ஒரு தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்து அன்று விட்டதில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.
அக்டோபர் மாதம்:
மாமா காலேஜ் சென்று நான்கு மாதங்கள் கழித்து தீபாவளிக்கு வந்திட்டு ஒரு வாரம் இருந்துட்டு போயிட்டாங்க… அப்ப நானும் ஊருக்கு போயிட்டேன். மாமாவ பார்க்கல..அதுக்கு பிறகு மாமா ஊருக்கு வரல..
அத்தைக்கு தினமும் போன் பண்ணுவாங்க..சில சமயம் நான் இருக்கும் போதும் பேசுவாங்க.. அத்தை மாமா பேசினது எல்லாம் சொல்வாங்க.. எனக்கு அதை கேட்டு கேட்டு மாமா மேல என்னையும் அறியாம ஒரு பிடித்தம்..ஜெய் மாமா… அப்படி எனக்குள்ள சொல்லும் போதே.. தித்திப்பா மனசு இனிக்கும்.
அவன் பக்கங்களை புரட்ட எழுதாத பக்கங்களில் எல்லாம் ஜெய் மாமா லவ் யூ என்று மந்திரம் போல் எழுதி இருந்தாள்.

ஒருவருடத்திற்கு பிறகு:
மாமா அடுத்த தீபாவளிக்கு தான் வந்தாங்க….ஹப்பா..பா…ஆஆஆ.. ஏற்கனவே ஹைட்டு.. இப்ப இன்னும் ஹைட்டா…வாட்டசாட்டமா..முறுக்கு மீசை வச்சிட்டு.. நல்லா கலரா இருப்பாங்க.. இப்ப இன்னும் செவசெவனு ஹிந்தி பட ஹுரோ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாங்க…
கீழே அவன் மீசையை அழகாக வரைத்திருந்தாள்.
இந்த தடவை நான் ஊருக்கு போகல..அம்மா அப்பா எல்லாரும் மலையனூர் வந்திட்டாங்க.. அதனால தான் மாமாவ பார்க்க முடிந்ததது..
மாமாவ பார்த்ததும் மனசு படபடப்பா…ஏதோ சில்லுனு இறங்கற மாதிரி.. மிதக்கற மாதிரி ஒரு பீலிங்..ஏதோ ஒரு சிலிர்ப்பு…என்னனு சொல்ல தெரியல எனக்கு. ஆனா மாமாவ பார்த்துகிட்டே இருக்கனும் போல இருந்துச்சு.. அப்படி பார்க்கறதும் தப்புன்னும் தோனுச்சு..

சடுதியில் மாறியது என் உலகம்

உன்னை கண்ட விநாடி…

நான் ஏன் இப்படி இருக்கேன்.. கெட்ட பொண்ணாகிட்டனா.. அழுகையா வந்துச்சு.. அந்த அழுகையும் பிடிச்சிருந்துச்சு… நான் ஏன் இப்படி இருக்கறேனு எனக்கே புரியல…
மாமா அத்தைகிட்ட தவிர யாருகிட்டயும் அதிகம் பேசமாட்டாங்க.. ஆனா என்னை பார்த்தும் என்ன படிக்கற கேட்டாங்க.. என் மனசுல அப்படி ஒரு சந்தோஷம் மாமா என்கிட்ட பேசினதுல… இறக்கை இல்லாம வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு..
மாமா கிளம்பி போனதும் மனசு பொசுக்குனு போயிடுச்சு.. ஏதோ கலரா இருந்த உலகம் வெளுப்பா ஆன மாதிரி..மனசுல ஏதோ அழுத்தற மாதிரி…

கங்குலான என் உலகை
உன் வருகை
வானவில்லாக
ஆயிரம் வர்ணங்களை
பாய்ச்சுகிறது.
அதுக்கு பிறகு மாமா தினமும் அத்தைக்கு போன் பண்ணும் டைமுக்கு அத்தை வீட்டுக்கு போயிடுவேன். அததை பக்கத்துல இருந்து கேட்கறதும்.. பேசிட்டு அத்தை மாமா சொன்னத சொல்லறத கேட்கவும்…
மாமா ஒரு நாள் அத்தைகிட்ட பேசலைனாலும் எனக்கு அழுகையா வரும்..மாமா மேல கோபமா வரும் ஏன் பேசலைனு…
மாமா வரும் போது என் சந்தோஷமும் வரும் போகும் போது என் சந்தோஷமும் அவர் கூடவே போயிடும்.

என் உள்ளமதில் உன் வாசம்
நீ வாசம் செய்யும் நெஞ்சை
ஆயிரம் பூக்கள் கொண்டு
அர்ச்சிக்கிறேன்.

கவிதைக்கு கீழே இவன் கண்கள் இரண்டையும் வரைந்து வைத்திருந்தாள்.

மேலும் ஒரு வருடம் கழித்து:

மாமா தேர்ட் இயர் செம் லீவுல வந்தாங்க.. அப்ப நான் டென்த் எக்ஸாம் முடித்து லீவுல இருந்தேன். அடுத்த வருடம் ப்ளஸ் ஒன் எங்க ஊரில் படிச்சிகலாம்னு அப்பா சொல்லிட்டாங்க..
இனி இது போல மாமாவ பக்கத்தில் இருந்து பார்க்க முடியாதே என மனசுல ஒரே தவிப்பா இருந்துச்சு.. அதனால அத்தை வீடே கதினு இருந்தேன். எனக்கு நல்லாவே புரிஞ்சுது நான் மாமாவ லவ் பண்றேனு..
ஆனால் ஒரு பயம் இந்த வயசுல இது தப்போனு… யாருக்கும் தெரியாம என் காதல பொக்கிஷமா எனக்குள்ளயே வச்சுகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு.. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணானதும் நானே மாமாகிட்ட சொல்லுவேன். அதுவரைக்கும் யாருக்கும் தெரியாம இருக்கனும்.

நெஞ்சாகூட்டில்
பொதித்து வைத்து
பொக்கிஷமாய்
போற்றி பூட்டி
வைத்தேன்
உன் வரைபடத்தை..
தனாவின் கண் காது மூக்கு மீசை உதடு என தனி தனியாக வரைத்திருந்தாள்.
நெஞ்சில் உள்ள வரைபடத்தை தாளில் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.
படிக்க… படிக்க… தனாவிற்கு இந்த அடாவடிக்குள்ள இப்படி ஒரு பப்பி லவ்வா… என தோன்றியது. அந்த காலகட்டத்தில் தனாவின் நினைவு பெட்டகத்தில் எங்கும்
எழில் இல்லை.எழிலை போல தனா ரசனையான பார்வை என்ன ஆராய்ச்சி பார்வை கூட பார்த்தது இல்லை.
மாமா லீவ் முடிந்து காலேஜ் போகும் முன்னாடியே… எங்க அப்பா என்னையும் பாட்டியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஊருக்கு போகும் முன்ன அத்தையை கட்டிகிட்டு தேம்பி தேம்பி அழுதேன்.
ஆனா இந்த ஜெய் மாமா நான் அழுகறத பார்த்து சிரிச்சாரு… போய்யானு முணுமுணுத்து உதட்டை சுழித்து நொடித்து கொள்ள.. மாமா முறைச்சு பார்த்தாங்க..
படித்ததும் சட்டென சிரித்துவிட்டான் தனா..
மாமா படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு கோயில்லயோ… பேக்டரி போற வழியிலயோ எப்படியும் காத்திருந்து பார்த்துடுவேன். நான் பார்க்கறது மாமாவுக்கு தெரியாது.

உன் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
எப்போ….
இதற்காகவே அப்பாகிட்ட சண்டை போட்டு ஸ்கூட்டி வாங்கினேன்.
ப்ளஸ்டூ ரிசல்ட் நான் நல்ல மார்க் எடுத்திருந்தேன். அப்பா என்னைய சென்னைல படிக்க சொன்னாங்க…. ஆனால் நான் பொள்ளாச்சிலயே படிக்கறேன்னு சொன்னேன் அப்பாகிட்ட… ரொம்ப சந்தோஷமா மாமாகிட்ட என் மனசுல உள்ளத சொல்லனும்னு பார்க்க போன போது மாமாவும் பூங்கொடிக்காவும் நெருக்கமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க..
அதை பார்த்ததும் என் மனசுல சுருக்குனு ஒரு வலி நெஞ்சு பூரா பரவி நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு…

கரை காணாமல்
கரை கடக்காமல்
தேம்பி தேங்கி
நிற்கிறது
என் காதல்
என் காதல் அவ்வளவு தானா… என் ஜெய் மாமா எனக்கில்லையா… மாமா இல்லாம என்னால வாழ முடியுமா… எதுனா செஞ்சு செத்து போயிடலாமா… என யோசித்து யோசித்து அழுது கொண்டே இருந்தேன்.. அம்மா கேட்டாங்க… செத்து போன பாட்டி ஞாபகம் என சொல்லி சமாளித்தேன்.
இரண்டு நாட்களில் அழுதழுது காய்ச்சல் வந்திட… பத்து நாளானது படுக்கையில் இருந்து எழ.. எனக்காக துடிச்ச பெத்தவங்கள பார்த்து மனச ஆறுதல் படுத்திக்கிட்டேன்…

உன்னோடு ஊடல்கள்
கூடல் பொழுதுகள்
எதிர்கால கனவுகள்
என் காதலின் ஏக்கங்கள்
கரையும் காலங்கள்
குறையும் ஆயுள்கள்..

மாமா யாரை காதலிச்சா என்ன.. நான் மாமாவ காதலிக்கிறேன். எப்பவும் காதலிப்பேன்..என் அன்பு அவருக்கு தெரியாட்டி என்ன எப்பவும் போல எட்ட நின்று அவரை காதலிப்பேன்.

உன் நேசம் எங்கோ…
உன் பார்வை எங்கோ…
இருந்த போதும்
என் காலத்தின்.
ஒவ்வொரு நொடிப்
பொழுதும் நீயாகவே
நீ மட்டுமே…
அந்த வரிகளில் தனாவின் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் சொட்டியது.

என்ன தான் மாமா யாரை காதலிச்சா என்னனு எனக்கு நானே சொல்லிகிட்டாலும் … அவங்க இரண்டு பேரையும் சேர்த்து பாக்கும் போது மனசு வலிக்க தான் செய்தது.

அதனால நான் சென்னைக்கு படிக்க போனேன். ஊருக்கு வரும்போது எல்லாம் மாமாவ எப்பவும் போல எட்ட நின்று பார்த்திட்டு வந்திடுவேன்.

காதல் கண்ணன் நீ
உன்னை தள்ளி நின்று
தரிசிக்கும் பக்தை நான்..

நான் ஸ்டடி லீவுக்கு வந்திருந்த போது:
பூங்கொடி அக்காவிற்கு வேறு ஒருவர் கூட கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாங்க.. அத்தையும் மாமாவும் பூங்கொடிக்காகவை பெண் கேட்டு போனாங்க. கோவிந்தன் பெரியப்பா அவமானப்படுத்தி அனுப்பிட்டாருனு தெரிஞ்சுது..
மாமாவ நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாமா இதை எப்படி தாங்கிகிட்டாங்க… மாமாவ உடனே பார்க்கனும் போல இருக்கு.. பேக்டரிக்கு போனேன்.
எங்க ஊர் கல்யாணிக்காவ பார்க்கற மாதிரி போய் பார்த்தேன். மாமாவ முகம் இறுகி போயி ஏற்கனவே சிரிக்கமாட்டாங்க.. இப்ப சிரிப்பையே தொலைச்சு பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு..
சரியான அராத்து என்னைப் பார்க்க பேக்டரிக்கே வந்திருக்கிறாளே.. துணிச்சல் தான்…நான் சிரிக்கவே மாட்டனா.. என நினைத்து சிரித்தான்.

மூன்று மாதங்கள் கழித்து:

நான் எப்பவும் போல நைட் அம்மாவுக்கு போன் பண்ணினேன். அத்தை மாமா இறந்ததுட்டாங்க சொன்னாங்க.. என்னால தாங்க முடியல.. என் அத்தை இந்த உலகத்துல இல்லயா.. கதறி கதறி அழுதேன். மாமா.. மாமா.. இதை எப்படி தாங்குவாங்க…
மாமாவுக்கு தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல முடியாத என் நிலையை அறவே வெறுத்தேன்.. செமஸ்டர் சமயம் என்னால மாமவ தள்ளி நின்னு கூட பார்க்க முடியாது..

ஒரு மாதம் கழித்து:
செமஸ்டர் முடிந்து ஊருக்கு போனதும் மாமாவை முதல்ல போய்பார்த்தேன். வழக்கம் போல் எட்ட நின்று…
அநாதரவான குழந்தை போல எனக்கு தெரிஞ்சாங்க.. என் மாமாவுக்கு நான் ஆறுதலா இருக்கனும் அவருக்கு எல்லா உறவாகவும் நான் இருக்கனும்..அப்ப முடிவு பண்ணினேன் . படிப்பு முடிந்து வந்ததும் என்ன செய்தாவது மாமாவ கல்யாணம் பண்ணியே தீரனும் என…

என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..

இப்படி தான் எழுதி இருந்தாள் எழில் அதில்..
அதை படித்ததும் தனாவுக்கு அழுகனும் போலவும்.. சிரிக்கனும் போலவும் .. என உணர்ச்சி குவியலாக இருந்தான்.
என்ன மாதிரியான காதல் இது. இந்த காதலுக்கு நான் தகுதியானவன் தானா… இருந்த போதும் எழிலின் காதல் அவனுக்கு கர்வத்தை தந்தது.
இந்த காதல் முன்னால் என் காதல் வெறும் கானல் நீர் தானோ.. கானல் நீருக்காக அவள் காதலை எட்டி உதைத்து விட்டேனே.. என வருந்தினான். கண்ணன் மேல் மீரா கொண்ட காதலாக அவனுக்கு எழிலின் காதல் தெரிந்தது.
டைரியை அணைத்து கொண்டு விடிய விடிய.. உறங்காமல் இருந்தான். விடிந்தும் எழிலை கூட்டி வந்திடும் முடிவில்…
ஆனால் இவன் நினைவுக்கு எழில் வடிவம் கொடுப்பாளா…..

புள்ளி மேவாத மான் – 19 Read More »

4F17E300-9045-4AAE-BC7E-20498F9D246F

புள்ளி மேவாத மான் – 18

18 – புள்ளி மேவாத மான்

எழிலுக்கு ஆறுமாதங்கள் ஆன நிலையில் சற்று மேடிட்ட வயிறுடன் உடம்பு கொஞ்சம் பூசினாற் போல தாய்மை பூரிப்புடன் பார்க்கவே மிக அழகாக இருந்தாள்.
டாக்டரிடம் பிரச்சினை பண்ணிய பிறகு அடுத்த மாதம் செக்கப்பிற்கு எழில் மாமியார்கள் துணையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்க…
அழைத்து வந்தவனோ அமைதியாக அமர்ந்திருக்க…அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தார் அந்த பெண் மருத்துவர்.
திலகா தான் டாக்டரிடம் சமாதானமாக பேசி சரிகட்டினார்.
எழிலுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் குறைந்திருந்த போதும்… பிரஷர் மட்டும் குறையவில்லை. கற்பகம் ஐந்து மாதம் முடியவும் கடினமில்லாத வேலைகளை செய்ய சொல்ல..
மாமியார்களின் உதவியை மறுத்து அவளே சமையல் மற்ற வேலைகளை மெதுவாக செய்ய.. அவர்களும் பிரசவம் சுலபமாக இருக்கும் என அதை ஆமோதிக்க..
தனா தான் புரிந்து கொள்ளாமல் எழிலிடம் சிடுசிடுத்து கொண்டு இருந்தான்.
“சித்திங்க சமைத்து தரமாட்டாங்களா… இவ்வளவு நாள் செய்தாங்கல்ல.. இன்னும் கொஞ்ச நாள் செய்யலாம்ல”
“இப்ப மார்னிங் சிக்னஸ் இல்லாம நல்லா தான இருக்கேன். மெல்ல செஞ்சுக்குவேன்”
“பாரு நாள் பூரா நின்னுகிட்டு வேலை செஞ்சா இராத்திரில கால் வீங்கி வலில தூங்கமா கஷ்டப்படற”
“அம்மா தான் சொன்னாங்க.. சின்ன சின்ன வேலை எல்லாம் செய்யலாம்னு”
“ஏது நீ செய்யறது எல்லாம் சின்ன வேலையா..ஆளுங்கள வேணாம்னுட்டு வீடு பெருக்கிற.. துணி துவைக்கற.. இதில்லாம சமைக்கற…” என அங்காலய்க்க….
“குனிந்து நிமிர்ந்து வேலை செய்தா தான் சுகப்பிரசவம் ஆகும். எனக்கு சிரமில்லை”
“ஆயாவாலயும் முடியலைல.. சமைக்க மட்டும் ஆள் வச்சுக்கலாமா..”
“நமக்கு தான சமைக்கறது பெரிசா இல்லை. முடியாத போது பார்த்துக்கலாம்” என்றிட…
தனா மனதில் பொறுமிக்கொண்டே அமைதியாக அவனால் முடிந்த உதவிகளை எழிலுக்கு செய்தான். எழிலோ தனாவின் அன்பில் உருகிப் போனாள்.
பூங்கொடி வாழ்க்கையை நினைத்து கோவிந்தன் கவலை பட்டு நிலை குழைந்து போனார். ஊரார் எள்ளல் பேச்சு ஒருபுறம்.. தன்னைப் பார்த்து பார்த்து தந்தை கவலைப்பட்டு உடலை கெடுத்துக் கொள்வது கண்டு பூங்கொடி மௌனமாக கண்ணீர் வடிக்க..
அதை தந்தை பார்த்தால் அவருடைய வருத்தம் அதிகமாகும் என மறைக்க.. மனதுக்குள் போட்டு அழுத்த… அழுத்தம் தாங்காமல் பைத்தியம் பிடிக்கும் நிலையில் …வினையின் வீபரிதம் அறியாமல்… தவறான முடிவை எடுத்தாள்.
காலையில் அறையில் முடங்கிய மகள் மதிய உணவுக்கும் வராமல் போக.. அழைக்க சென்ற கோவிந்தன் மகளின் நிலை கண்டு சத்தமிட்டு கதறி துடிக்க…
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பூங்கொடியை மருத்துவமனையில் அனுமதித்தனர். வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்திருந்தாள்.
பெரிய போராட்டத்திற்கு பிறகே அவளை காப்பாற்ற முடிந்தது. மகளைப் பார்த்து கோவிந்தன் மிகவும் மனமொடிந்துப் போனார்.
இது தனாவின் காதுகளுக்கும் சென்றது.எழிலிடம் சொல்லாமல் பூங்கோடியை பார்க்கச் சென்றான். பார்த்தவுடன் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
கொஞ்ச நாள் தந்தையாகும் சந்தோஷத்தில்.. எழிலின் மேலேயே கவனம் இருக்க..அவன் அடிமனதில் அமிழ்ந்து போயிருந்த குற்றவுணர்வு மனைவி பிள்ளை பாசத்தை பின்னுக்கு தள்ளி.. நீர்குமிழி போல மேலெழும்பி வெடித்து கிளம்பியது.
எதிலும் கவனம் வைக்காமல்.. எழிலையும் சட்டை செய்யாமல்… தன் பழைய காதலுக்கு பரிகாரம் தேடும் சிந்தனையில் மூழ்கி போனான்.
வீட்டை விட்டு வெளியே செல்லாததால் எழிலுக்கு தெரியவில்லை தனாவும் எழிலிடம் சொல்ல சங்கடப்பட்டு சொல்லவில்லை.
தனாவை எழிலும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். ஏதோ தொழில் சிக்கல் என நினைத்து கொண்டாள். இரண்டு நாட்களாகியும் அவன் முகம் தெளியாமல் போக என்ன என கேட்க ஒன்றுமில்லை என மழுப்பிவிட்டான்.
கட்டாந்தரையில் நெல் காய வைத்து கொண்டு இருந்த பெண்கள் புறணி பேசியதில் விபரம் அறிந்து கொண்டாள் எழில்.
தனாவிடம் சென்று கேட்க…
“பூங்கொடிக்கா மருந்து குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா…”
“ஆமாம் உனக்கு யார் சொன்னா..”
“கட்டாந்தரையில் வேல செய்யறவங்க பேசிகிட்டாங்க…”
தனா ஆமாம் எனும் விதமாகதலையாட்டினான். அடுத்து அவள் கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்தான்.
“நீங்க போயி பார்த்திங்களா..அதான் கவலையா இருக்கறிங்களா..”
ஒருநிமிடம் என்ன சொல்வது என தடுமாறி.. பின்பு சுதாரித்து அவசர அவசரமாக இல்லை என தலையாட்டினான்.
இல்லை என சொல்லி பெரிய தவறை செய்தான். போனேன் என உண்மையை சொல்லி இருந்தால் கூட எதார்த்தமாக எடுத்து கொண்டு அமைதியாக இருந்திருப்பாள்.
அவன் பேச்சில் வேறு ஏதோ கவலை போல என சமாதானம் ஆகிவிட்டாள்.
பத்து நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு பூங்கொடி வீடு திரும்பினாள். அவளை பார்க்க வீட்டிற்கே சென்றான் தனா.
வாய் குடல் எல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் மிகவும் இளைத்து கருத்திருந்தவளை பார்த்தவனுக்கு மனம் இதுக்கு நீதான் காரணம் என ஓலமிட்டது.
அவளிடமும் கோவிந்தனிடமும் ஆறுதலாக சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்தான்.
தான் மட்டும் சந்தோஷமாக வாழ.. அவள் கஷ்டப்படுகிறாள் என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மறுகினான். அந்த மறுகலே எழிலை நெருங்க விடாமல் தடுக்க.. எழிலை தவிர்த்தான்.
இரவு வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த எழில் கண்டது ஏதோ வீரிய சிந்தனையில் இருந்த கணவனை தான்.
என்னாச்சு.. இன்னும் கவலையா யோசிச்சிட்டு இருக்காங்க.. இன்னும் இவங்க பிரச்சினை தீரலையா என எண்ணிக் கொண்டே..
கணவனின் அருகில் வந்து அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள். அதை கூட அவன் உணரவில்லை.
தன் தலையை உயர்த்தி தனாவின் முகம் பார்த்து,
“ஏன் மாமா என்ன ப்ராப்ளம். ஏன் எப்பவும் யோசனையா ஒரு மாதிரி இருக்கிறிங்க.. என்கிட்ட கூட சொல்லமாட்டறிங்க…”
அவளிடம் சொல்ல முடியாமல் எரிச்சலாகி “எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா.. நை நைனு மனுசன நச்சு பண்ணாம தள்ளி படு” என கோபப்பட்டான்.
சட்டென எழிலின் முகம் கூம்பி.. கண்களில் நீர் கரை கட்டி நிற்க.. வேகமாக நகர்ந்து படுத்தாள். தலையணையில் முகம் புதைத்து மௌனமாக அழுதவள் சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள்.
இதை எதையும் அறியாமல் தன்னுள் மூழ்கி போனான். மறுநாள் காலை எழுந்தும் அவன் பாராமுகமாக இருக்க.. தன்னை சமாதனப் படுத்த ஏதாவது பேசுவான் என அவன் முகம் பார்த்து ஏமாந்து போனாள்.தன்மானம் சீண்டப்பட.. எழிலும் அவனிடம் பேசாமல் அவனின் தேவையை மட்டும் கவனித்தாள்.
அவனோ எழிலுக்கு செய்யும் சின்ன சின்ன உதவிகளை கூட மறந்து தன் போக்கில் இருந்தான். அவனின் உதவிகளை விட இரவில் அவன் தன் பாதம் தாங்கி மென்மையாக பிடித்து விடும் சுகத்திற்காக பெரிதும் ஏங்கினாள்.
இதேநிலை ஒருவாரம் நீடிக்க… அவன் வருவதும் சாப்பிடவும் போகவும் இருக்க… தொழிலில் தான் பெரிய பிரச்சினையோ.. இல்ல வேற எதாவதா.. என யோசித்து குழம்பினாள்.
என்ன என தெரிந்தே ஆகவேண்டும். யாரை கேட்டால் தெரியும். வெற்றியை கேட்கலாம் என முடிவு செய்து வெற்றிக்கு போன் செய்தாள்.
“சொல்லுங்க அண்ணி”
“தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வீட்டுக்கு வாங்க” என சொல்லி வைத்துவிட்டாள்.
வெற்றி என்ன ஏது என தெரியாமல் கொஞ்சம் பதறி தான் வந்தான்.
வந்தவனிடம் எந்த முகாந்திரம் இல்லாமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்துவிட்டாள்.
“உங்க அண்ணன் பத்து நாளாவே ஏதோ கவலையா இருக்காரு.. என்னனு கேட்டால் சொல்லவே மாட்டேங்கறாரு.. தொழில்ல ஏதாவது சிக்கலா.. ”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி” என்றான் கொஞ்சம் தயக்கமாக..
அவனுக்கு தான் தெரியுமே.. தனா பூங்கொடியை பார்த்து விட்டு வந்ததும்.. பூங்கொடியை பத்தி கருணாவிடம் புலம்பியதும்.. அதற்கு கருணா தனாவை கடிந்து கொண்டதையும்…
அதை எழிலிடம் சொல்லலாமா.. வேணாமா… என தடுமாறி பார்க்க..
அவனின் முகத்தை பார்த்ததும் புரிந்து விட்டது விஷயம் வேற என..
“எதா இருந்தாலும் சொல்லிடுங்க தம்பி. உங்க அண்ணன் அவரா இல்லை.. சதா நேரமும் ஏதோ கவலையோடு யோசனையாவே இருக்காரு.. என்னால பார்க்க முடியலை” என சொல்லும் போதே கண்கள் கலங்கி விட..
பதறி போய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். கேட்டவளுக்கோ பூங்கொடியின் தற்கொலை தெரிந்த விஷயம் தான். ஆனால் அதற்காக கணவன் தன்னை தவிர்த்ததை எண்ணி மனசு வலித்தது.
வெற்றிக்கு அண்ணியின் முகத்தை பார்க்க
பரிதாபமாக இருந்தது. தனா மேல் கோபமும் வந்தது. செய்வதறியாது சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.
இத்தனை காலம் தான் காட்டிய அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே… இன்னும் கணவன் மனதில் அவள் தான் இருக்கிறாளா.. என நினைக்க நினைக்க அவள் காதல் அடிவாங்கியது.
வெகு நேரம் தன்னுள் உழன்று கொண்டு இருந்தவளுக்கு தனா வந்தது கூட தெரியவில்லை. தனா அழைத்து பார்த்து விட்டு தோள் தட்டவும் தான் உணர்வு பெற்றாள்.
“எழில் என்ன சிந்தனை.. வா வந்து சாப்பாடு எடுத்து வை” என சொல்ல..
எதுவும் பேசாமல் பரிமாற அவள் அமைதியை கண்டு மனம் கொஞ்சம் பயப்பட தான் செய்தது. அவன் உள்மனசு ஏதோ பெரியதாக நடக்க போகிறது என மணியடிக்க..
சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான்.எழிலும் சாப்பிட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு அறைக்கு வந்து கதவை அடைத்தவள் தனாவை பார்த்து
“உங்களுக்கு என்ன பிரச்சினை எதுக்கு இப்படி இருக்கறிங்க”என தன்மையாக தான் கேட்டாள்.
“இல்லையே எனக்கு எதும் இல்லையே”
அவளுக்கு தெரிந்து விட்டது என அறியாமல் பொய் சொன்னான்.
அவனின் பொய்யில் உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கி கொண்டு
“அப்ப ஏன் ஒருமாதிரி குழப்பமா இருக்கறிங்க… மாமா”
“அப்படி எல்லாம் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்” சுழட்டி அடிக்க போகும் புயலை அறியாமல் மீண்டும் பொய்.
பொங்கி வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கி கொண்டு..
“பூங்கொடிக்காவை போயி பார்த்திங்களா..”
“இல்லை நான் போகலை”
அவ்வளவு தான் அடக்கி வைத்த கோபம் எல்லாம் வெடித்து சிதற..
“நீங்க போய் பார்க்கவே இல்லை. ஏன் மாமா பொய் சொல்லறிங்க…”
“நீங்க இரண்டு தடவை போய் பார்த்து இருக்கறிங்க.. அதை என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன..”
“ஆமாம் போய் பார்த்தேன். அதுக்கு இப்ப என்னங்கற..”
அவள் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிறாள் என்ற எரிச்சலில் பதில் சொன்னான்.
“அப்போ அவங்கள நினனைச்சு தான் இத்தனை நாளா என்கிட்ட பேசாம இருந்திங்களா..”
“என்னைய காதலிச்ச பாவத்துக்கு அவ வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறா…”
“அது அவங்க தலைஎழுத்து.. அவங்க புருஷன் சரியில்லை அதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும்”
“நான் தான் ஏதாவது பண்ணனும். அவ அப்படி இருக்கும் போது .. நான் சந்தோஷமா பொண்டாட்டி பிள்ளைனு இருக்கறது ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி மனச அறுக்குது..”
அவன் பேச்சு மனசளவில் அவளை நோகடிக்க…
“உங்களுக்கு என்ன மனச அறுக்குது. அப்ப இன்னும் உங்க மனசுல அவங்க நினைப்பு இருக்கா அந்த நினைப்போட தான் என்கூட குடும்பம் நடத்துனிங்களா”என கோபத்துடன் கேட்க..
“ஏய் புரியாம பேசாத. என்னால தான் இப்படி ஆகிடுச்சோனு உள்ளுக்குள்ள குடையுது”
“அவங்க வாழ்க்கையை சரி பண்ண பெத்தவரு சொந்தபந்தம் இருக்கு. நீங்க அனாவசியமா தலையிடாம இருந்தா போதும்”
“என்னால அப்படி எல்லாம் இருக்கமுடியாது”
“ஏன்….ஏன்.. இருக்கமுடியாது. இருந்து தான் ஆகனும். இனி போய் பார்க்கறது .. கவலைபடறது எல்லாம் இருந்திங்க.. நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துங்க” என சத்தமிட..
“என்ன பண்ணுவ நீ.. என்ன மிரட்டறியா… நான் அவ வாழ்க்கைக்கு ஏதாவது பண்ண தான் போறேன். அத நீன்னு இல்ல யாரு சொன்னாலும் கேட்கமாட்டேன்.”
“நான் முக்கியமா..இல்ல அந்த சிறுக்கி முக்கியமா. இப்பவே முடிவ பண்ணுங்க”
“மரியாதை இல்லாம பேசின பல்லப் பேத்துடுவேன்”
“ஓ..ஓ..ஓ..அவளுக்காக என்ன அடிப்பிங்களா…எங்க அடிங்க பார்க்கலாம்”என சிலிர்த்து கொண்டு நின்றாள்.
அவள் எதிர்க்க.. இவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வைத்தான்.
“நான் பூங்கொடிய விரும்பினேன் தெரிஞ்சிருந்தும்… கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்தவன் பின்னாடியே அலைஞ்சு தான கட்டிகிட்ட..உனக்கு எல்லாம் அவள பேசற தகுதி கிடையாது” என மூர்க்கமாக கத்த…
அவனின் சுடு வார்த்தைகள் மிக சரியாக அவள் காதல் நெஞ்சை குறிபார்த்து தாக்க..தன் காதலை கொச்சைப்படுத்தி விட்டவனை வெறித்த பார்வை பார்த்தாள்.
அவளை பார்க்க பிடிக்காமல் “ச்சை’என்று வெறுப்பாக தன் பெற்றோர் அறையில் புகுந்து கொண்டான்.
அவனின் சுடுசொல்லையும் வெறுப்பையும் தாங்காமல் மௌனமாக கண்ணீர் வடித்தவள் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினாள்.
கொட்டிவிட்டால் நெல்லை அள்ளலாம்.சொல்லை அள்ளமுடியுமா..
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் . இதை அறியாமல் தனா சொல்லிய சொற்கள் அவன் வாழ்க்கையை வினாவுக்கு உள்ளாக்கியது

புள்ளி மேவாத மான் – 18 Read More »

B0E2668F-2B5F-4540-A6B4-B777B55BB35D

புள்ளி மேவாத மான் – 17

17 – புள்ளி மேவாத மான்

தனா எழிலை ரொம்பவே பொறுப்பாக பார்த்து கொண்டான். எழில் தன்னை கவனித்து கொண்டது போல தானும் கவனித்து கொள்வது தனது கடமை என எண்ணினான்.
எழில் செய்தது எல்லாம் தனா மேல் கொண்ட காதலால்.. ஆனால் தனாவோ கடமையுணர்வில் செய்தான். அது தான் பின் நாளில் பிழையாகி போனது.
தனா மில்லுக்கு கிளம்பும் முன் எழிலை சாப்பாடு மருந்து எல்லாம் கொடுத்து விட்டு தான் கிளம்புவான். நடுவே குடிக்க ஜீஸ் எடுத்து வைத்து விட்டு செல்வான்.
அதை குடித்தாளா.. தூங்கினாளா…. என்ன செய்தாள்.. என கேட்டு இடையிடையே போன் செய்வான்.
அதை பார்த்த கருணாவோ கடுப்பாகி…
“டேய் என் தங்கச்சி போன் பண்ணி இதை தானடா கேட்கும். அப்ப நீ என்ன எகிறு எகிறுவ…இப்ப நீ பண்றது மட்டும் என்னவாம். அந்த புள்ளய ஓயாம போன போட்டு ரெஸ்ட் எடுக்க விடாம தொல்லை பண்ணிகிட்டு இருக்கற..”
“ஏன்டா மாசமா இருக்கா… தனியா வேற இருக்கா..கேட்கறது ஒரு குத்தமாடா..”
“அதானே எங்க அண்ண.. அண்ணி மேல உள்ள பாசத்துல கேட்குது.. யோவ் மாமா உனக்கு ஏன்யா இவ்வளவு காண்டு” என வெற்றி தனாவுக்கு கொடி பிடிக்க…
“ஆமாம்டா உங்க அண்ணன் பாசத்துல தீய வைக்க… இவ்வளவு நாளா என் தங்கச்சி தனியா தான இருந்தா… அப்ப எங்கடா போச்சு உங்க பாசம்”
“போதும் நிறுத்துடா.. சும்மா பாசமலர் படம் ஓட்டாத..” என தனா சிரித்து கொண்டே சொல்ல..
“ஆமாம் டா நாங்க பாசமலர் படம் தான் ஓட்டறோம். நீ என்ன காதலுக்கு மரியாதை செய்யறியா.. நீயும் பாசமலர் படம் தான் ஓட்டற..”
தனா மேலும் சத்தமாக சிரிக்க…வெற்றி புரியாமல் முழிக்க…
“என்னடா மாப்புள்ள புரியலையா.. உங்க நொண்ணன் பொண்டாட்டி பாசத்துல இதெல்லாம் பண்ணல.. புள்ள பாசத்துல பண்றான்”
தனாவின் சிரிப்பில் காண்டாகிய கருணா
” வேணா… இங்கிருந்தா சிரிச்சே எரிச்சல கிளப்புவான்..வாடா மாப்புள்ள வேலைய பார்ப்போம்”என வெற்றியை இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.
எழிலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் நாள் வர.. திலகா எழிலை தேடி வந்தார்.
“அரசி நாளைக்கு உனக்கு ஹாஸ்பிடல் போகனும் தான..”
“ஆமாங்கத்தை நாளைக்கு தான் போகனும்”
“இல்ல… நாளைக்கு நான் எங்க ஊருக்கு என் சொந்தத்துல ஒரு முக்கியமான கல்யாணம் கட்டாயம் போகனும். தப்பா எடுத்துக்காதே.. நான் வந்த பிறகு ஹாஸ்பிடலுக்கு போகலாமா..” என எழிலின் கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் தயக்கத்துடன் கேட்க..
அவர் கேட்ட விதத்தில் எழிலுக்கே கொஞ்சம் சங்கடமாகி போனது.
“அத்தை நீங்க வந்ததுமே போலாம். நீங்க கவலைப்படாம போயிட்டு எல்லாம் முடிச்சிட்டு வாங்க..” சமாதனமாக சொல்ல..
“நான் வந்ததும் போலாம்.நான்போயிட்டு வந்திரேன்”
ஒருவாறாக திலகா கிளம்பி சென்றார். அடுத்த நாள் காலையில் தனா ஹாஸ்பிடலுக்கு போகனும்ல நானே உங்களை கூட்டி போகிறேன்னு சொல்ல..
எழில் திலகா சொல்லி சென்றதை சொல்ல… தனாவோ யாரும் வேணாம் நானே கூட்டிட்டு போகிறேன். என்று எழில் சொல்ல சொல்ல… கேட்காமல்… பிடிவாதமாக அழைத்து சென்றான்
மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்து தனா டாக்டரிடம் சந்தேகங்கள் என்ற பெயரில் கேள்விகளாலேயே துளைத்து எடுக்க..
அவனுக்கு பதில் சொல்லியே கலைத்து போன டாக்டர் எரிச்சலுடன் எழிலிடம்
“எழிலரசி வீட்டு பெரியவங்க யாரும் வரலையா..இனி அடுத்த தடவை வரும் போது பெண்கள யாராவது கூட்டிட்டு வா”என்றிட..
சர்ரென கோபம் ஏற தனா “அப்ப என்னைய வர வேணான்னு சொல்லறிங்களா.. அதெல்லாம் நீங்க சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது.” என்றான் அழுத்தமாக…
“மிஸ்டர் என்ன ஓவரா பேசறிங்க..”
“கேட்கற பீஸ் கொடுக்கறோம்ல… அப்ப கேட்கறதுக்கு பதில் சொல்லி தான் ஆகனும்”
“என்ன மிரட்டறிங்களா…” என டாக்டருக்கும் தனாவுக்கும் வாக்குவாதமாக..
“பேஷண்டா நாங்க கேட்கற சந்தேகங்களை தீர்க்க வேண்டியது உங்க கடமை. பொறுப்பில்லாம பேசறிங்க”
“நொய் நொய்னு கேள்வியா கேட்டுட்டு எனக்கு பொறுப்பில்லைனு சொல்வீங்களா..”
“ஆமாம் அப்படி தான். பேஷன்ட்டோ ஹெல்த் பத்தி கேட்டா கோபம் வருமா.. பொறுமையா சொல்லமுடியாட்டி எதுக்கு டாக்டர் தொழிலுக்கு வர்றிங்க”
எழில் “மாமா பிரச்சினை வேணாம். வாங்க போலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க.. இவன் திமிறிக்கொண்டு சண்டைக்கு போக
“விடு என்னை… யாராவது கேட்டா தான் இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு பயம் இருக்கும்”
“சொன்னா கேளுங்க மாமா வீட்டுக்கு போகலாம் வாங்க” என இழுத்து கொண்டு கார் நிறத்துமிடத்திற்கு வந்தாள்.
காரில் ஏறி தனா கதவை அறைந்து சாத்தியதில் எழிலின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்து நடுங்கியது.
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எதுவும் பேசமால் வந்தான். எழில் அவனின் கோபத்தை கண்டு அரண்டு போயிருந்தாள்.
இறுகிய முகத்துடன் வந்தவன் வாசலிலையே இறக்கி விட்டு சென்றுவிட்டான்.
தனா பண்ணிய அழிச்சாட்டியத்தில் எழிலுக்கு டென்ஷனில் ப்ரஷர் அதிகமாகி படபடப்புடன் மயக்கம் வர… ஏற்கனவே எழிலுக்கு டாக்டர் ப்ரஷர் இருப்பதாக சொல்லி அதற்கான ஆலோசனையும் சொல்லி இருந்தார்.
தங்கள் அறையில் எதுவும் சாப்பிடாமல் போய் படுத்துக் கொண்டாள். சாப்பிடலையே என அழைக்க வந்த இருளாயி சோர்வாக வேர்த்து சற்று கிறக்கத்துடன் இருந்த எழிலை பார்த்து விட்டு பதறி போய் உப்பும் சர்க்கரையும் கலந்த எலுமிச்சை சாற்றை கொண்டு வந்து குடிக்க வைத்து விட்டு தேவியை கூட்டி வர போனார்.
இருளாயி சொல்லவும் தேவியும் பதறி போய் வந்தவர் எழிலை சாப்பிட வைத்து.. வீங்கியிருந்த கைகால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உறங்க வைத்தார்.
தனா வரும் வரை அங்கேயே இருந்தார். அவரை தேடிக்கொண்டு கண்ணனும் வந்திட…தூங்கி எழுந்து வந்த எழில் நடந்தவற்றை சொல்லிவிட்டாள்.
இருவரும் தனா வருகைக்காக கோபத்துடன் காத்திருந்தனர். தனாவும் வந்தவன் சித்தப்பா சித்தியைப் பார்த்து வரேவேற்கும் விதமாக சிரித்து தலை ஆட்ட…
இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.இவங்க எதுக்குடா முறைக்கிறாங்க என யோசித்து கொண்டே உடை மாற்ற சென்றான்.
அவன் பின்னாடியே போகப் போன எழிலை தேவி “எங்க அவன் பின்னாடியே போற… இப்படி பார்த்துப் பார்த்து செய்து தான் அவன் உன்னை புரிஞ்சுக்காம இருக்கான். பேசாம உட்காரு” என தன் அருகில் இருத்திக் கொண்டார்.
எப்பவும் தன்னையே வால் பிடித்துக்கொண்டு வரும் எழில் வராமல் போகவும்..கண்ணன் முறைப்பையும் வைத்து இரண்டும் இரண்டு நாலு என கணக்கு போட்டவன் ஹாஸ்பிடல் சண்டையை கேட்க வந்திருப்பதை அறிந்து கொண்டான்.
“எங்க யார்க்கிட்டயும் சொல்லாம இன்னைக்கு எதுக்குடா அரசிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன..” என கண்ணன் கோபமாக கேட்க…
“இன்னைக்கு தான செக்கப் டேட்” என்றான் கடுப்புடன்
“அது எங்களுக்கும் தெரியும். அண்ணி தான் இரண்டு நாள் கழிச்சு போலாம்னு வந்து சொல்லிட்டு போனாங்கல்ல.. அப்புறம் எதுக்கு கூட்டிட்டு போன”
“இப்ப கூட்டிட்டு போனதால என்னாச்சு” என்றான் விட்டேற்றியாக..
அவனின் பேச்சில் அது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை கைவிட்டவராக..
“இப்ப என்னாச்சா.. டாக்டர் கிட்ட சண்டை போட்டு பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்க.. அடுத்தாப்புல அந்த ஹாஸ்பிடலுக்கு எப்படி போக முடியும்”
“அந்த டாக்டர் விட்டா வேற டாக்டரா ஊருல இல்லை. இவங்கள விட நல்ல டாக்டர் நிறையா இருக்காங்க பார்த்துக்கலாம்”
“நீ இப்படி பேசி வைச்சா இந்த டாக்டர்னு எந்த டாக்டரும் டெலிவரி பார்க்கமாட்டாங்க.. அத முதல்ல தெரிஞ்சிக்கோ”என தேவியும் திட்ட..
இது வரை யாரும் அவனை இப்படி கேள்வி கேட்டதில்லை என்பதால் உள்ளுக்குள் பொசு பொசுவென பொங்கி கொண்டு வந்த கோபத்தை பல்லிடுக்கில் அடக்கி கொண்டு
“சந்தேகத்தை கேட்டா சொல்லனும் தான.. அத விட்டுட்டு தேவையில்லாம பேசினா யாரு தான் பொறுத்துப்பா…”
“அதெல்லாம் பொம்பளைங்களுக்கு தெரியும். எது கேட்கறதா இருந்தாலும் பக்குவமா கேட்டுக்குவாங்க.. தேவையில்லாம அரசிய டென்ஷன் பண்ணி.. ப்ரஷர் அதிகமாகி புள்ள துவண்டு போயிட்டா… ஒழுங்கா நாங்க சொல்றபடி கேட்டு செய்யு.. இல்ல அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம்.பிள்ளை பேறு முடிஞ்சு அழைச்சிக்கலாம். என்ன சொல்ற..” என கண்ணன் ஒரே போடாக போட..
எழில் துவண்டு போயிட்டா என்றதும் அப்போது தான் அவளை நன்றாக கவனித்து பார்த்தான்.
அவளின் சோர்ந்த முகம் மனதை பிசைய.. பொங்கி கொண்டு இருந்த கோபம் நீர்த்துப் போய்விட.. எழிலை அனுப்பிவிடலாம் என்ற பேச்சில் சர்வமும் அடங்கிவிட்டது அவனுக்கு.
அவன் அமைதியாக”நீங்க சொல்றபடியே செய்யறேன்” என சரணாகதி ஆகிவிட..
அவனுக்கு சிலபல அறிவுரைகளால் அர்ச்சனை நடத்தி விட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.
“மாமா.. சாப்பிட வாங்க..” என சொல்லிவிட்டு சோபாவை பிடித்து எழுந்து எட்டு எடுத்து வைக்க தடுமாற..
நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அவளை சாப்பிட அமர வைத்து அவள் தடுக்க தடுக்க..தானே பரிமாறினான்.
எழில் சாப்பாட்டை கைகளில் அள்ள சிரமப்பட.. அப்போது தான் கவனித்தான் அவள் கைகால் வீங்கி இருப்பதை… நெஞ்சில் பாரமாகி போனது.
பெண்கள் வலிகளையும் வேதனைகளையும் பிரசவித்த பிறகே பிள்ளைகளை பிரசவிக்க முடியும் என்பதை ஆண்களுக்கு யார் தான் சொல்வது…
அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு அவளை தூக்கி கொண்டு வந்து படுக்கையில் கிடத்தி விட்டு வேகமாக வெளியேசென்றான்.
சிறிது நேரத்தில் வெந்நீரோடு வந்தவன் அங்கிருந்த சிறு மேஜை மேல் வைத்துவிட்டு எழிலின் காலடியில் அமர்ந்து அவள் கால்களை தன் மடியில் வைக்க..
“வேணாம் மாமா..” என பதறிப்போய் காலை இழுத்துக் கொள்ள.. அவளின் காலை பிடித்து கட்டாயமாக தன் மடியில் வைத்து
“பேசாம இரு.. எப்படி வீங்கி இருக்கு பாரு..” என ஒத்தடம் கொடுக்க.. சற்று வீக்கம் குறையவும்..
“நான் கால்களை அழுத்தி விடறேன்.தூங்கு” என கால்களை அழுத்த.. அழுத்த.. அவளுக்கோ அவன் கைப்பட்ட இடமெல்லாம் குறு குறுப்பை உண்டாக்க…
பேதையோ போதை கொள்ள… நெளிந்து கொண்டே கால்களை மறுபடியும் இழுத்து கொள்ள…
“ப்ச்ச்” என சலித்து கொண்டே அவள் முகம் காண… அதில் மீகிய காதல் இருக்க… இவனோ அவளின் உடல்நிலையை மனதில் நிறுத்தி தயங்க… அவளோ மாமா என்று சிணுங்க… கூடலுக்கான அழைப்பை ஏற்றவன் அவள் மென் பாதங்களில் இருந்து முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறினான்.
முத்த ஊர்வலம் மெத்த உடலில் மெல்ல மெல்ல நடத்தி மாதுளை நிறம் கொண்ட இதழில் வந்து மொத்தமாக மூழ்கி போனான். காதல் ரசம் பருகி பித்தாகி கிறங்கினான். அவளின் உடலின் மேடு பள்ளங்களும் அபாயகரமான வளைவுகளும் அவனின் சித்தம் கலங்க வைத்திட.. மீளா போதையில் சிக்கி சின்னாபின்னமாகி போனான்.
தானும் தெளிந்து தன் இணையையும் தெளிய வைக்கும் செயலில் சேவகனாகி சேவைகள் செய்திட.. அவனின் இணையோ தலைவனின் சேவையில் கர்வம் கொண்டு… அந்த ஆனந்தத்தில் வீழ்ந்து போனாள்.
இந்த ஆனந்த சேவைகள் விடியலில் நிறைவுக்கு வர… ஊரெல்லாம் நித்திரையில் இருந்து விடுபட.. இவர்கள் மட்டும் நித்ராதேவியின் மடியில் சயனம் கொண்டனர்.
இவர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… நாம் வந்த பிறகு எழிலை கடுமையாக பேசி இருப்பானோ என தேவி பதறி வந்து பார்க்க..திறக்காமல் இருந்த கதவை கண்டு சிரித்து கொண்டு திரும்பி சென்று விட்டார்.

புள்ளி மேவாத மான் – 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top