ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 5

கதைப்போமா 5   நிழலோவியமாக நிற்கும் நிலவவளின் இளையவளை பார்த்தப்படி அந்த மாடியின் நுழைவு வாயிலில் சாய்ந்து நின்றிருந்தான் விதுரன் இரு கைகளையும் கட்டியப்படி!!   அன்றொரு நாள்.. இதே இரவில்.. இதே நிலவொளியில்.. நடந்தேறிய சம்பவங்கள் மெல்லியதாய் மிக மெல்லியதாக அவனின் நினைவு அலைகளில்!!   அவன் நினைத்துப் பார்க்க வேண்டாம் என்று நினைத்த ஒன்று!! நினைத்து பார்க்கவே பயந்த ஒன்று!!    இன்று அவள் அருகில் சென்றால், அதைப் பற்றிய சம்பாஷனைகள் வந்துவிடுமோ? என்று […]

கதைப்போமா காதலே‌.. 5 Read More »

கதைப்போமா காதலே‌.. 4

கதைப்போமா 4   “விட்டுக்கொடுக்கவா நிதா?” என்று அவன் கேட்டதும் அவளுக்குள் பல நிகழ்வுகளின் தாக்கங்கள்!!   எதை விட்டு கொடுப்பானாம்? விளையாட்டை என்னிடமா? இல்லை என்னை விளையாட்டுக்காகவா? என்று விரிந்த அந்த நீள நயனங்களில் தொலைய தான் விரும்பினான் விதுரன். ஆனால்.. தொலையும் நாள் இன்னும் வரவில்லை போலும். சட்டென்று தன் பார்வையை அவளிடம் இருந்து மீட்டுக் கொண்டான். மீள முடியுமா என்று தெரியவில்லை ஆணவனுக்கு!! அதனால் திருப்பிக் கொண்டான்.   மீண்டும் இசை இசைக்கப்பட்டது

கதைப்போமா காதலே‌.. 4 Read More »

கதைப்போமா காதலே‌.. 3

கதைப்போமா 3   இரண்டு நாட்கள் பொது ட்ரைனிங் எடுக்கப்பட்ட போது இடையிடையே அவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என்று விளையாட்டுடன் கூடிய ஷெஷன்கள் தான் கொடுக்கப்பட்டன. பின்னே அவ்வளவு செலவு செய்வது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து வரவழைத்து இருப்பவர்கள், வெறும் பொழுது போக்கு அம்சத்தை மட்டுமே அவர்களுக்கு காட்டுவார்கள்??    முன்னே கம்பில் கேரட்டை கட்டி, அதை காட்டியே குதிரை மேல் பயணித்தவாறு அதை தன் வழிக்குக் கொண்டு வரும் வியாபார உத்தி உலகம்தான்

கதைப்போமா காதலே‌.. 3 Read More »

கதைப்போமா காதலே‌.. 2

கதைப்போமா 2   ஆச்சரியமா இல்லை அதிர்ச்சியா என்று தெரியாத புரியாத மனநிலை தான்‌ நவிக்கு.   மும்பைக்கு செல்ல வேண்டும்‌ என்று கம்பெனியில் இருந்து அவளுக்கு ஆர்டர் வந்தது முதல் இவன் வருவானா? மாட்டானா?   வந்தால் இவனிடம் எப்படி நடந்து கொள்வது? என்று பல்வேறு அலைப்புறுதல்கள் மனதின் உள்ளே நடந்து கொண்டிருக்க.. இப்பொழுது அனைத்தும் மறந்து விரிந்த சிரிப்புடன் “ஹாய்.. விதுரன்!!” என்று பதில் கூறினாள்.   இவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இம்லியும் அவனைப்

கதைப்போமா காதலே‌.. 2 Read More »

நான் கடலாம் நீ அலையாம்

அத்தியாயம் 34   எப்போதும் போல் அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை கவனித்துக் கொண்டிருந்தார் பட்டு மாமி. வழக்கம் போல் தன் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் குழந்தையென உறங்கும் வியனி தான் விழுந்தாள்.  ‘என்னை ராத்திரிப் பூரா தூங்கவிடாம பண்ணிட்டு நீ மட்டும் கும்பகர்ணி மாதிரி நல்லா குறட்டை விட்டு தூங்கும்?! இருடி வர்றேன்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், நேரே வியனியின் அருகே சென்று அவளை அணைத்தவாறு நெருங்கிப் படுத்துக் கொண்டான். அவளை பின்னால் இருந்து,

நான் கடலாம் நீ அலையாம் Read More »

காதல் பறவைகள்… !! – பாகம் 1: “உனக்காக நான்…!!” – 37

உனக்காக நான்…!! – அத்தியாயம் 37-சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” குணமும் உண்டுகோவமும் உண்டு காதலுடன் சொன்னால் கேட்டுக்கொள்ளும்மனமும் உண்டு காதல் எனும்மாயக்கோல்வைத்து உன் கோபத்தைமாற்றும்வித்தை இந்தகாரிகை அறிவாளடா…!! கொல்லும் கோவம் விடுத்துகண்களை அள்ளும் அன்புக்காதல்கொள்வாயடா…!! காதலால் கோவத்தைவென்றுகாவியமாய் வாழ்வோமடா..!! காலமெல்லாம் உன்னைகாக்கும் என்கடைக்கண்ணின்காதல் பார்வை…!! ################# காதல் பார்வை…!! ஆனந்தும் லேகாவும் கொடைக்கானல் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன… இன்று அவன் தன் காரில் ஒரு வாடிக்கையாளரை படகு சவாரிக்கு கூட்டிச் செல்ல வேண்டியதாய் இருந்தது…

காதல் பறவைகள்… !! – பாகம் 1: “உனக்காக நான்…!!” – 37 Read More »

6 – இத இதமாய் கொன்றாயடி

  6 – இத இதமாய் கொன்றாயடி          அதற்குப் பிறகு இரண்டு பேர் மனதில் பகை வளர்ந்துக் கொண்டே போனது. பார்க்கும் இடத்தில் எதிரியாய் பாவித்து சண்டைப் போட்டனர். இவர்கள் இப்படி இருக்கும் போது இவர்களுக்கு திருமணமா… விதி நினைத்தால் நடக்காமல் போய்விடுமா…   ஊராரை திரட்டிக் கொண்டு வசந்தா பெண் பார்க்க வந்திருந்தார். தமிழ் யாருக்கோ வந்த விருந்து என உட்கார்ந்திருந்தான். மகிழ்விழியை கூடத்திற்கு அழைத்து வந்தனர். அவளும் தமிழை

6 – இத இதமாய் கொன்றாயடி Read More »

5-இத இதமாய் கொன்றாயடி

    5 – இத இதமாய் கொன்றாயடி       மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள்  தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம்.

5-இத இதமாய் கொன்றாயடி Read More »

4 இத இதமாய் கொன்றாயடி

  4 – இத இதமாய் கொன்றாயடி             வசந்தா சொன்னதும்,”முடியாதம்மா… அவளை எல்லாம கட்டிக்க முடியாது. அவள கண்ணாலம் பண்ணிக்கற நேரம் நல்ல பாழுங்கிணற பார்த்து விழுந்து சாவலாம்…”   வசந்தா,”அப்படி எல்லாம் சொல்லாதப்பா… நா சொல்றத செத்த கேளுப்பா…” வர என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் அவரின் பேச்சை இடைமறித்து,”நீ அவள் பத்தி எதுவும் சொல்லாதம்மா… நா கேட்கற மூடில்ல…”    அவரும் எவ்வளவோ கேட்டுப்

4 இத இதமாய் கொன்றாயடி Read More »

error: Content is protected !!
Scroll to Top