ATM Tamil Romantic Novels

தொடர் கதை

Photo-20240402-144052-S-993x1291

4 ஆசை வெட்கமறியாது

AV 4 அழுகிறாளே!! இந்த வெட்கத்தை விட அவசரம் அவசியம் என்று பல்லை கடித்து கடைக்காரர் முகம் பாராது சீட்டு கொடுத்து வாங்கி கொடுத்தால்.. அடுத்து சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம்.. இதை எப்படி யூஸ் பண்ணுறது செல்லு ன்னு.. அவனிடமே கேட்க நொந்து போய்ட்டான்.. செல்வா.. வீட்டில் பெண்ணின் தேவை புரிய.. இதுவரை பழகி வைக்காத பக்கத்து வீட்டு அக்காக்களை தேடி போய் விஜி நிலைமை சொல்லி உதவி கேட்க.. அந்த சேரிப்பகுதியே திரண்டுவிட்டது அவளை பார்த்துக்க.. […]

4 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

3 ஆசை வெட்கமறியாது

3 ஆசை வெட்கமறியாது ஹோட்டல் பாத்ரூமிலேயே தன் கறையை போக்கி குளித்த ரகு சோர்ந்து கிடந்த உடலை கேவலமாய் பார்த்தான்.. போதுமா? உனக்கு இந்த ஆட்டம் தானே வேணும்.. எவ குழிலேயாவது இறங்கனும் உனக்கு பைத்தியம் போல இயங்கனும் முடிஞ்சிச்சா.. உன்னோடு என் மனசால போட்டி போட முடில.. பொங்கி எழுந்து அறிவையும் கெடுக்குற.. உன் தேவைக்கு தான் பெண்கள் எனக்கு இல்லை சரியா? அறிவு அதிகம்.. தாள முடியாத சக்தி .. அவனால் பெண் இல்லாமல்

3 ஆசை வெட்கமறியாது Read More »

1 ஆசை வெட்கமறியாது

ஆசை வெட்கமறியாது 1 ஆசை வெட்கமறியாது.. “விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…” மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள், “யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க “சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..” அந்த ஆணவக்காரி .. “அவனா?” விழி உயர்த்தி.. ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க.. அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து

1 ஆசை வெட்கமறியாது Read More »

D15F938D-4C55-43DE-BAA0-7EE2AD4637DA

புள்ளி மேவாத மான் – 19

19-புள்ளி மேவாத மான்

தனா தன் பெற்றோர் அறையில் சிறிது நேரத்திலேயே உறங்கி விட… எழில் தான் தன் காதலுக்கு இவ்வளவு தான் மதிப்பா.. தன் அன்பு கொஞ்சம் கூட அவர் மனதில் அரும்பலையா..அப்போ என் கூட வாழ்ந்தது எல்லாம் கடமைக்காக தானா..
என் காதல் மேல் நம்பிக்கை கொண்டு தான் கல்யாணம் செய்தேன். அந்த காதல் அவரின் மனதில் என்னை நிறுத்தவில்லையா.. என் அன்பில் தான் குற்றம் குறையா… என கழிவிரக்கத்தில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் விட்டாள்.
எதுவாக இருந்த போதிலும் மனைவிங்கற ஸ்தானத்திற்கு மதிப்பில்லையா.. வாழ்ந்த வாழ்க்கைக்குஅர்த்தமில்லையா… இப்படியாக தான் இருந்தது பேதையவளின் மனதின் சிந்தனை.
தனக்கு மதிப்பில்லாத போது இங்கு எதற்கு இருக்கவேண்டும். தன்னை உணராத கணவனிடம் தன்னை இருத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவள் தன்மானம் விழித்து கொள்ள .. அந்த நொடி அழுகை நின்றது.
விடிந்தும் விடியாத பொழுதில் தன் அன்னைக்கு போன் செய்தாள். தன் அன்னையிடம் அழுகவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தனா பூங்கொடி காதல் தெரிந்த போது தன் காதல் வலியை தன்னுள் அழுத்திக் கொண்டு வலிய வைத்த சிரிப்புடன் வலம் வந்தவள்… இதற்கா அழுக போகிறாள்.
கற்பகமும் மகளை பொறுமையாக இருக்க சொன்னார்.ஆனால் எழில் பிடிவாதமாக வந்தே தீருவேன் என்று நின்ற நிலையிலேயே இருக்க…
கற்பகம் கணவரை எழுப்பி சொன்னால் மகள் மேல் உள்ள பாசத்தில் நாலு சுவற்றுக்குள் முடிக்க வேண்டியதை ஊரை கூட்டி அம்பலத்தில் ஏற்றி விடுவார் என தமிழரசனை அனுப்பி வைத்தார்.
தமிழரசன் வந்த போது தனா எழுந்திருக்கவில்லை. அவனுக்கும் கோபம் இருந்த போதும் மாமன் மேல் இருந்த மதிப்பும் தங்கையின் வாழ்க்கையும் அவனை அடக்கி வைத்திருந்தது.
தனக்கு தேவையானதை எடுத்து வைத்தவள் தனா எழுந்து வந்ததும் கிளம்பிவிட்டாள்.
தனா எழுந்து வந்தவன் பார்த்தது டிராவல் பேக்கோடு இருந்த எழிலையும் தமிழரசனையும் தான்.
தனா ‘நான் என்ன சொல்லிட்டேன். இப்படி கிளம்பி நிற்கிறா.. ராங்கிகாரி.. போடி போ..’ என எழிலின் முகத்தையே பார்த்து நிற்க..
‘ ஏன்.. என்னனு… கேட்டா தான் என்ன…திமிரு.. திமிரு அவ்வளவும் திமிரு’
மனதுக்குள் பொறுமியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவனும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. அவனை முறைத்துக் கொண்டே சென்று காரில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசனுக்கு என்ன செய்வது என தெரியாமல் விடை பெறும் விதமாக தலையை அசைத்து விட்டு கிளம்பவிட்டான்.
எழில் வருவதற்குள் கற்பகம் முத்துக்குமாரிடம் எழில் சொன்னதை சொல்லி,
“ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை.. நாம அமைதியா இருந்தா அவங்களே சரியாடுவாங்க.. நீங்க தலையிட்டு பெரிசு பண்ணிடாதிங்க..”
“மசக்கை சமயத்துல கூட புருஷன விட்டு வரமாட்டேனு இருந்தா.. இப்ப அவளுக்கு பார்த்து செய்து அனுப்புவோம்”
“மறுபடியும் சொல்றேன் நீங்க அமைதியா இருங்க..”
மனைவி சொன்னதற்கு அமைதியாக கேட்டு கொண்டாலும் உள்ளுக்குள் தனாவின் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.
எழில் வந்து இரண்டு நாட்களாகி இருக்க… தனாவும் போன் பண்ணவில்லை. இவளும் பேசவில்லை. இருவரும் வீம்புடன் இருந்தனர்.
எழில் சென்றது தெரியாமல் தேவி மீன் சமைத்து அதை கீர்த்தியிடம் கொடுத்துவிட… தனா பேக்டரிக்கு சென்றிருக்க…இருளாயி பாட்டி வருத்ததுடன் எழில் சென்றதை சொல்லிவிட..
கீர்த்தி சென்று சொன்னதும் சுந்தரம் தனாவை வீட்டுக்கு அழைத்து,
“என்ன சண்டை உங்களுக்குள்ள”என்று எவ்வளவு கேட்டும் பேசவில்லை.
சொல்வதற்கு விருப்பம் இல்லாமல் அமைதியாக.. அழுத்தமாக நின்றான்.
கேட்டு சலித்து போய்”எதா இருந்தாலும் இரண்டு நாளில் பேசி கூட்டிட்டு வந்திடு..”என்றார் கோபத்துடன்.
ஒரு நான்கு நாட்கள் விரைப்பாக இருந்தவனால்.. அதற்கு மேல் முடியவில்லை. வீட்டின் தனிமையும் அவளின் அன்பான கவனிப்பும் இல்லாமல் இருக்க முடியவில்லை.இரவோ கொடுமையிலும் கொடுமை..
அன்று எழிலின் ஞாபகம் அதிகமாக இருக்க.. மாலை மானஜேரிடம் சொல்லி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். சிறிது நேரத்தில் மானேஜர் ஏதோ பைல் தேவை என ஆள் அனுப்ப.. அதை எடுக்கும் போது அங்கு ஒரு மூலையில் அன்று அவன் எறிந்த எழிலின் டைரி இருந்தது.
ஆளை அனுப்பி விட்டு வந்து தங்கள் அறையில் டைரியோடு வந்தவன்
வசதியாக முதுகுக்கு ஒரு தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்து அன்று விட்டதில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.
அக்டோபர் மாதம்:
மாமா காலேஜ் சென்று நான்கு மாதங்கள் கழித்து தீபாவளிக்கு வந்திட்டு ஒரு வாரம் இருந்துட்டு போயிட்டாங்க… அப்ப நானும் ஊருக்கு போயிட்டேன். மாமாவ பார்க்கல..அதுக்கு பிறகு மாமா ஊருக்கு வரல..
அத்தைக்கு தினமும் போன் பண்ணுவாங்க..சில சமயம் நான் இருக்கும் போதும் பேசுவாங்க.. அத்தை மாமா பேசினது எல்லாம் சொல்வாங்க.. எனக்கு அதை கேட்டு கேட்டு மாமா மேல என்னையும் அறியாம ஒரு பிடித்தம்..ஜெய் மாமா… அப்படி எனக்குள்ள சொல்லும் போதே.. தித்திப்பா மனசு இனிக்கும்.
அவன் பக்கங்களை புரட்ட எழுதாத பக்கங்களில் எல்லாம் ஜெய் மாமா லவ் யூ என்று மந்திரம் போல் எழுதி இருந்தாள்.

ஒருவருடத்திற்கு பிறகு:
மாமா அடுத்த தீபாவளிக்கு தான் வந்தாங்க….ஹப்பா..பா…ஆஆஆ.. ஏற்கனவே ஹைட்டு.. இப்ப இன்னும் ஹைட்டா…வாட்டசாட்டமா..முறுக்கு மீசை வச்சிட்டு.. நல்லா கலரா இருப்பாங்க.. இப்ப இன்னும் செவசெவனு ஹிந்தி பட ஹுரோ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாங்க…
கீழே அவன் மீசையை அழகாக வரைத்திருந்தாள்.
இந்த தடவை நான் ஊருக்கு போகல..அம்மா அப்பா எல்லாரும் மலையனூர் வந்திட்டாங்க.. அதனால தான் மாமாவ பார்க்க முடிந்ததது..
மாமாவ பார்த்ததும் மனசு படபடப்பா…ஏதோ சில்லுனு இறங்கற மாதிரி.. மிதக்கற மாதிரி ஒரு பீலிங்..ஏதோ ஒரு சிலிர்ப்பு…என்னனு சொல்ல தெரியல எனக்கு. ஆனா மாமாவ பார்த்துகிட்டே இருக்கனும் போல இருந்துச்சு.. அப்படி பார்க்கறதும் தப்புன்னும் தோனுச்சு..

சடுதியில் மாறியது என் உலகம்

உன்னை கண்ட விநாடி…

நான் ஏன் இப்படி இருக்கேன்.. கெட்ட பொண்ணாகிட்டனா.. அழுகையா வந்துச்சு.. அந்த அழுகையும் பிடிச்சிருந்துச்சு… நான் ஏன் இப்படி இருக்கறேனு எனக்கே புரியல…
மாமா அத்தைகிட்ட தவிர யாருகிட்டயும் அதிகம் பேசமாட்டாங்க.. ஆனா என்னை பார்த்தும் என்ன படிக்கற கேட்டாங்க.. என் மனசுல அப்படி ஒரு சந்தோஷம் மாமா என்கிட்ட பேசினதுல… இறக்கை இல்லாம வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு..
மாமா கிளம்பி போனதும் மனசு பொசுக்குனு போயிடுச்சு.. ஏதோ கலரா இருந்த உலகம் வெளுப்பா ஆன மாதிரி..மனசுல ஏதோ அழுத்தற மாதிரி…

கங்குலான என் உலகை
உன் வருகை
வானவில்லாக
ஆயிரம் வர்ணங்களை
பாய்ச்சுகிறது.
அதுக்கு பிறகு மாமா தினமும் அத்தைக்கு போன் பண்ணும் டைமுக்கு அத்தை வீட்டுக்கு போயிடுவேன். அததை பக்கத்துல இருந்து கேட்கறதும்.. பேசிட்டு அத்தை மாமா சொன்னத சொல்லறத கேட்கவும்…
மாமா ஒரு நாள் அத்தைகிட்ட பேசலைனாலும் எனக்கு அழுகையா வரும்..மாமா மேல கோபமா வரும் ஏன் பேசலைனு…
மாமா வரும் போது என் சந்தோஷமும் வரும் போகும் போது என் சந்தோஷமும் அவர் கூடவே போயிடும்.

என் உள்ளமதில் உன் வாசம்
நீ வாசம் செய்யும் நெஞ்சை
ஆயிரம் பூக்கள் கொண்டு
அர்ச்சிக்கிறேன்.

கவிதைக்கு கீழே இவன் கண்கள் இரண்டையும் வரைந்து வைத்திருந்தாள்.

மேலும் ஒரு வருடம் கழித்து:

மாமா தேர்ட் இயர் செம் லீவுல வந்தாங்க.. அப்ப நான் டென்த் எக்ஸாம் முடித்து லீவுல இருந்தேன். அடுத்த வருடம் ப்ளஸ் ஒன் எங்க ஊரில் படிச்சிகலாம்னு அப்பா சொல்லிட்டாங்க..
இனி இது போல மாமாவ பக்கத்தில் இருந்து பார்க்க முடியாதே என மனசுல ஒரே தவிப்பா இருந்துச்சு.. அதனால அத்தை வீடே கதினு இருந்தேன். எனக்கு நல்லாவே புரிஞ்சுது நான் மாமாவ லவ் பண்றேனு..
ஆனால் ஒரு பயம் இந்த வயசுல இது தப்போனு… யாருக்கும் தெரியாம என் காதல பொக்கிஷமா எனக்குள்ளயே வச்சுகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு.. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணானதும் நானே மாமாகிட்ட சொல்லுவேன். அதுவரைக்கும் யாருக்கும் தெரியாம இருக்கனும்.

நெஞ்சாகூட்டில்
பொதித்து வைத்து
பொக்கிஷமாய்
போற்றி பூட்டி
வைத்தேன்
உன் வரைபடத்தை..
தனாவின் கண் காது மூக்கு மீசை உதடு என தனி தனியாக வரைத்திருந்தாள்.
நெஞ்சில் உள்ள வரைபடத்தை தாளில் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.
படிக்க… படிக்க… தனாவிற்கு இந்த அடாவடிக்குள்ள இப்படி ஒரு பப்பி லவ்வா… என தோன்றியது. அந்த காலகட்டத்தில் தனாவின் நினைவு பெட்டகத்தில் எங்கும்
எழில் இல்லை.எழிலை போல தனா ரசனையான பார்வை என்ன ஆராய்ச்சி பார்வை கூட பார்த்தது இல்லை.
மாமா லீவ் முடிந்து காலேஜ் போகும் முன்னாடியே… எங்க அப்பா என்னையும் பாட்டியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஊருக்கு போகும் முன்ன அத்தையை கட்டிகிட்டு தேம்பி தேம்பி அழுதேன்.
ஆனா இந்த ஜெய் மாமா நான் அழுகறத பார்த்து சிரிச்சாரு… போய்யானு முணுமுணுத்து உதட்டை சுழித்து நொடித்து கொள்ள.. மாமா முறைச்சு பார்த்தாங்க..
படித்ததும் சட்டென சிரித்துவிட்டான் தனா..
மாமா படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு கோயில்லயோ… பேக்டரி போற வழியிலயோ எப்படியும் காத்திருந்து பார்த்துடுவேன். நான் பார்க்கறது மாமாவுக்கு தெரியாது.

உன் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
எப்போ….
இதற்காகவே அப்பாகிட்ட சண்டை போட்டு ஸ்கூட்டி வாங்கினேன்.
ப்ளஸ்டூ ரிசல்ட் நான் நல்ல மார்க் எடுத்திருந்தேன். அப்பா என்னைய சென்னைல படிக்க சொன்னாங்க…. ஆனால் நான் பொள்ளாச்சிலயே படிக்கறேன்னு சொன்னேன் அப்பாகிட்ட… ரொம்ப சந்தோஷமா மாமாகிட்ட என் மனசுல உள்ளத சொல்லனும்னு பார்க்க போன போது மாமாவும் பூங்கொடிக்காவும் நெருக்கமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க..
அதை பார்த்ததும் என் மனசுல சுருக்குனு ஒரு வலி நெஞ்சு பூரா பரவி நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு…

கரை காணாமல்
கரை கடக்காமல்
தேம்பி தேங்கி
நிற்கிறது
என் காதல்
என் காதல் அவ்வளவு தானா… என் ஜெய் மாமா எனக்கில்லையா… மாமா இல்லாம என்னால வாழ முடியுமா… எதுனா செஞ்சு செத்து போயிடலாமா… என யோசித்து யோசித்து அழுது கொண்டே இருந்தேன்.. அம்மா கேட்டாங்க… செத்து போன பாட்டி ஞாபகம் என சொல்லி சமாளித்தேன்.
இரண்டு நாட்களில் அழுதழுது காய்ச்சல் வந்திட… பத்து நாளானது படுக்கையில் இருந்து எழ.. எனக்காக துடிச்ச பெத்தவங்கள பார்த்து மனச ஆறுதல் படுத்திக்கிட்டேன்…

உன்னோடு ஊடல்கள்
கூடல் பொழுதுகள்
எதிர்கால கனவுகள்
என் காதலின் ஏக்கங்கள்
கரையும் காலங்கள்
குறையும் ஆயுள்கள்..

மாமா யாரை காதலிச்சா என்ன.. நான் மாமாவ காதலிக்கிறேன். எப்பவும் காதலிப்பேன்..என் அன்பு அவருக்கு தெரியாட்டி என்ன எப்பவும் போல எட்ட நின்று அவரை காதலிப்பேன்.

உன் நேசம் எங்கோ…
உன் பார்வை எங்கோ…
இருந்த போதும்
என் காலத்தின்.
ஒவ்வொரு நொடிப்
பொழுதும் நீயாகவே
நீ மட்டுமே…
அந்த வரிகளில் தனாவின் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் சொட்டியது.

என்ன தான் மாமா யாரை காதலிச்சா என்னனு எனக்கு நானே சொல்லிகிட்டாலும் … அவங்க இரண்டு பேரையும் சேர்த்து பாக்கும் போது மனசு வலிக்க தான் செய்தது.

அதனால நான் சென்னைக்கு படிக்க போனேன். ஊருக்கு வரும்போது எல்லாம் மாமாவ எப்பவும் போல எட்ட நின்று பார்த்திட்டு வந்திடுவேன்.

காதல் கண்ணன் நீ
உன்னை தள்ளி நின்று
தரிசிக்கும் பக்தை நான்..

நான் ஸ்டடி லீவுக்கு வந்திருந்த போது:
பூங்கொடி அக்காவிற்கு வேறு ஒருவர் கூட கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாங்க.. அத்தையும் மாமாவும் பூங்கொடிக்காகவை பெண் கேட்டு போனாங்க. கோவிந்தன் பெரியப்பா அவமானப்படுத்தி அனுப்பிட்டாருனு தெரிஞ்சுது..
மாமாவ நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாமா இதை எப்படி தாங்கிகிட்டாங்க… மாமாவ உடனே பார்க்கனும் போல இருக்கு.. பேக்டரிக்கு போனேன்.
எங்க ஊர் கல்யாணிக்காவ பார்க்கற மாதிரி போய் பார்த்தேன். மாமாவ முகம் இறுகி போயி ஏற்கனவே சிரிக்கமாட்டாங்க.. இப்ப சிரிப்பையே தொலைச்சு பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு..
சரியான அராத்து என்னைப் பார்க்க பேக்டரிக்கே வந்திருக்கிறாளே.. துணிச்சல் தான்…நான் சிரிக்கவே மாட்டனா.. என நினைத்து சிரித்தான்.

மூன்று மாதங்கள் கழித்து:

நான் எப்பவும் போல நைட் அம்மாவுக்கு போன் பண்ணினேன். அத்தை மாமா இறந்ததுட்டாங்க சொன்னாங்க.. என்னால தாங்க முடியல.. என் அத்தை இந்த உலகத்துல இல்லயா.. கதறி கதறி அழுதேன். மாமா.. மாமா.. இதை எப்படி தாங்குவாங்க…
மாமாவுக்கு தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல முடியாத என் நிலையை அறவே வெறுத்தேன்.. செமஸ்டர் சமயம் என்னால மாமவ தள்ளி நின்னு கூட பார்க்க முடியாது..

ஒரு மாதம் கழித்து:
செமஸ்டர் முடிந்து ஊருக்கு போனதும் மாமாவை முதல்ல போய்பார்த்தேன். வழக்கம் போல் எட்ட நின்று…
அநாதரவான குழந்தை போல எனக்கு தெரிஞ்சாங்க.. என் மாமாவுக்கு நான் ஆறுதலா இருக்கனும் அவருக்கு எல்லா உறவாகவும் நான் இருக்கனும்..அப்ப முடிவு பண்ணினேன் . படிப்பு முடிந்து வந்ததும் என்ன செய்தாவது மாமாவ கல்யாணம் பண்ணியே தீரனும் என…

என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..

இப்படி தான் எழுதி இருந்தாள் எழில் அதில்..
அதை படித்ததும் தனாவுக்கு அழுகனும் போலவும்.. சிரிக்கனும் போலவும் .. என உணர்ச்சி குவியலாக இருந்தான்.
என்ன மாதிரியான காதல் இது. இந்த காதலுக்கு நான் தகுதியானவன் தானா… இருந்த போதும் எழிலின் காதல் அவனுக்கு கர்வத்தை தந்தது.
இந்த காதல் முன்னால் என் காதல் வெறும் கானல் நீர் தானோ.. கானல் நீருக்காக அவள் காதலை எட்டி உதைத்து விட்டேனே.. என வருந்தினான். கண்ணன் மேல் மீரா கொண்ட காதலாக அவனுக்கு எழிலின் காதல் தெரிந்தது.
டைரியை அணைத்து கொண்டு விடிய விடிய.. உறங்காமல் இருந்தான். விடிந்தும் எழிலை கூட்டி வந்திடும் முடிவில்…
ஆனால் இவன் நினைவுக்கு எழில் வடிவம் கொடுப்பாளா…..

புள்ளி மேவாத மான் – 19 Read More »

4F17E300-9045-4AAE-BC7E-20498F9D246F

புள்ளி மேவாத மான் – 18

18 – புள்ளி மேவாத மான்

எழிலுக்கு ஆறுமாதங்கள் ஆன நிலையில் சற்று மேடிட்ட வயிறுடன் உடம்பு கொஞ்சம் பூசினாற் போல தாய்மை பூரிப்புடன் பார்க்கவே மிக அழகாக இருந்தாள்.
டாக்டரிடம் பிரச்சினை பண்ணிய பிறகு அடுத்த மாதம் செக்கப்பிற்கு எழில் மாமியார்கள் துணையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்க…
அழைத்து வந்தவனோ அமைதியாக அமர்ந்திருக்க…அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தார் அந்த பெண் மருத்துவர்.
திலகா தான் டாக்டரிடம் சமாதானமாக பேசி சரிகட்டினார்.
எழிலுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் குறைந்திருந்த போதும்… பிரஷர் மட்டும் குறையவில்லை. கற்பகம் ஐந்து மாதம் முடியவும் கடினமில்லாத வேலைகளை செய்ய சொல்ல..
மாமியார்களின் உதவியை மறுத்து அவளே சமையல் மற்ற வேலைகளை மெதுவாக செய்ய.. அவர்களும் பிரசவம் சுலபமாக இருக்கும் என அதை ஆமோதிக்க..
தனா தான் புரிந்து கொள்ளாமல் எழிலிடம் சிடுசிடுத்து கொண்டு இருந்தான்.
“சித்திங்க சமைத்து தரமாட்டாங்களா… இவ்வளவு நாள் செய்தாங்கல்ல.. இன்னும் கொஞ்ச நாள் செய்யலாம்ல”
“இப்ப மார்னிங் சிக்னஸ் இல்லாம நல்லா தான இருக்கேன். மெல்ல செஞ்சுக்குவேன்”
“பாரு நாள் பூரா நின்னுகிட்டு வேலை செஞ்சா இராத்திரில கால் வீங்கி வலில தூங்கமா கஷ்டப்படற”
“அம்மா தான் சொன்னாங்க.. சின்ன சின்ன வேலை எல்லாம் செய்யலாம்னு”
“ஏது நீ செய்யறது எல்லாம் சின்ன வேலையா..ஆளுங்கள வேணாம்னுட்டு வீடு பெருக்கிற.. துணி துவைக்கற.. இதில்லாம சமைக்கற…” என அங்காலய்க்க….
“குனிந்து நிமிர்ந்து வேலை செய்தா தான் சுகப்பிரசவம் ஆகும். எனக்கு சிரமில்லை”
“ஆயாவாலயும் முடியலைல.. சமைக்க மட்டும் ஆள் வச்சுக்கலாமா..”
“நமக்கு தான சமைக்கறது பெரிசா இல்லை. முடியாத போது பார்த்துக்கலாம்” என்றிட…
தனா மனதில் பொறுமிக்கொண்டே அமைதியாக அவனால் முடிந்த உதவிகளை எழிலுக்கு செய்தான். எழிலோ தனாவின் அன்பில் உருகிப் போனாள்.
பூங்கொடி வாழ்க்கையை நினைத்து கோவிந்தன் கவலை பட்டு நிலை குழைந்து போனார். ஊரார் எள்ளல் பேச்சு ஒருபுறம்.. தன்னைப் பார்த்து பார்த்து தந்தை கவலைப்பட்டு உடலை கெடுத்துக் கொள்வது கண்டு பூங்கொடி மௌனமாக கண்ணீர் வடிக்க..
அதை தந்தை பார்த்தால் அவருடைய வருத்தம் அதிகமாகும் என மறைக்க.. மனதுக்குள் போட்டு அழுத்த… அழுத்தம் தாங்காமல் பைத்தியம் பிடிக்கும் நிலையில் …வினையின் வீபரிதம் அறியாமல்… தவறான முடிவை எடுத்தாள்.
காலையில் அறையில் முடங்கிய மகள் மதிய உணவுக்கும் வராமல் போக.. அழைக்க சென்ற கோவிந்தன் மகளின் நிலை கண்டு சத்தமிட்டு கதறி துடிக்க…
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பூங்கொடியை மருத்துவமனையில் அனுமதித்தனர். வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்திருந்தாள்.
பெரிய போராட்டத்திற்கு பிறகே அவளை காப்பாற்ற முடிந்தது. மகளைப் பார்த்து கோவிந்தன் மிகவும் மனமொடிந்துப் போனார்.
இது தனாவின் காதுகளுக்கும் சென்றது.எழிலிடம் சொல்லாமல் பூங்கோடியை பார்க்கச் சென்றான். பார்த்தவுடன் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
கொஞ்ச நாள் தந்தையாகும் சந்தோஷத்தில்.. எழிலின் மேலேயே கவனம் இருக்க..அவன் அடிமனதில் அமிழ்ந்து போயிருந்த குற்றவுணர்வு மனைவி பிள்ளை பாசத்தை பின்னுக்கு தள்ளி.. நீர்குமிழி போல மேலெழும்பி வெடித்து கிளம்பியது.
எதிலும் கவனம் வைக்காமல்.. எழிலையும் சட்டை செய்யாமல்… தன் பழைய காதலுக்கு பரிகாரம் தேடும் சிந்தனையில் மூழ்கி போனான்.
வீட்டை விட்டு வெளியே செல்லாததால் எழிலுக்கு தெரியவில்லை தனாவும் எழிலிடம் சொல்ல சங்கடப்பட்டு சொல்லவில்லை.
தனாவை எழிலும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். ஏதோ தொழில் சிக்கல் என நினைத்து கொண்டாள். இரண்டு நாட்களாகியும் அவன் முகம் தெளியாமல் போக என்ன என கேட்க ஒன்றுமில்லை என மழுப்பிவிட்டான்.
கட்டாந்தரையில் நெல் காய வைத்து கொண்டு இருந்த பெண்கள் புறணி பேசியதில் விபரம் அறிந்து கொண்டாள் எழில்.
தனாவிடம் சென்று கேட்க…
“பூங்கொடிக்கா மருந்து குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா…”
“ஆமாம் உனக்கு யார் சொன்னா..”
“கட்டாந்தரையில் வேல செய்யறவங்க பேசிகிட்டாங்க…”
தனா ஆமாம் எனும் விதமாகதலையாட்டினான். அடுத்து அவள் கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்தான்.
“நீங்க போயி பார்த்திங்களா..அதான் கவலையா இருக்கறிங்களா..”
ஒருநிமிடம் என்ன சொல்வது என தடுமாறி.. பின்பு சுதாரித்து அவசர அவசரமாக இல்லை என தலையாட்டினான்.
இல்லை என சொல்லி பெரிய தவறை செய்தான். போனேன் என உண்மையை சொல்லி இருந்தால் கூட எதார்த்தமாக எடுத்து கொண்டு அமைதியாக இருந்திருப்பாள்.
அவன் பேச்சில் வேறு ஏதோ கவலை போல என சமாதானம் ஆகிவிட்டாள்.
பத்து நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு பூங்கொடி வீடு திரும்பினாள். அவளை பார்க்க வீட்டிற்கே சென்றான் தனா.
வாய் குடல் எல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் மிகவும் இளைத்து கருத்திருந்தவளை பார்த்தவனுக்கு மனம் இதுக்கு நீதான் காரணம் என ஓலமிட்டது.
அவளிடமும் கோவிந்தனிடமும் ஆறுதலாக சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்தான்.
தான் மட்டும் சந்தோஷமாக வாழ.. அவள் கஷ்டப்படுகிறாள் என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மறுகினான். அந்த மறுகலே எழிலை நெருங்க விடாமல் தடுக்க.. எழிலை தவிர்த்தான்.
இரவு வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த எழில் கண்டது ஏதோ வீரிய சிந்தனையில் இருந்த கணவனை தான்.
என்னாச்சு.. இன்னும் கவலையா யோசிச்சிட்டு இருக்காங்க.. இன்னும் இவங்க பிரச்சினை தீரலையா என எண்ணிக் கொண்டே..
கணவனின் அருகில் வந்து அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள். அதை கூட அவன் உணரவில்லை.
தன் தலையை உயர்த்தி தனாவின் முகம் பார்த்து,
“ஏன் மாமா என்ன ப்ராப்ளம். ஏன் எப்பவும் யோசனையா ஒரு மாதிரி இருக்கிறிங்க.. என்கிட்ட கூட சொல்லமாட்டறிங்க…”
அவளிடம் சொல்ல முடியாமல் எரிச்சலாகி “எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா.. நை நைனு மனுசன நச்சு பண்ணாம தள்ளி படு” என கோபப்பட்டான்.
சட்டென எழிலின் முகம் கூம்பி.. கண்களில் நீர் கரை கட்டி நிற்க.. வேகமாக நகர்ந்து படுத்தாள். தலையணையில் முகம் புதைத்து மௌனமாக அழுதவள் சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள்.
இதை எதையும் அறியாமல் தன்னுள் மூழ்கி போனான். மறுநாள் காலை எழுந்தும் அவன் பாராமுகமாக இருக்க.. தன்னை சமாதனப் படுத்த ஏதாவது பேசுவான் என அவன் முகம் பார்த்து ஏமாந்து போனாள்.தன்மானம் சீண்டப்பட.. எழிலும் அவனிடம் பேசாமல் அவனின் தேவையை மட்டும் கவனித்தாள்.
அவனோ எழிலுக்கு செய்யும் சின்ன சின்ன உதவிகளை கூட மறந்து தன் போக்கில் இருந்தான். அவனின் உதவிகளை விட இரவில் அவன் தன் பாதம் தாங்கி மென்மையாக பிடித்து விடும் சுகத்திற்காக பெரிதும் ஏங்கினாள்.
இதேநிலை ஒருவாரம் நீடிக்க… அவன் வருவதும் சாப்பிடவும் போகவும் இருக்க… தொழிலில் தான் பெரிய பிரச்சினையோ.. இல்ல வேற எதாவதா.. என யோசித்து குழம்பினாள்.
என்ன என தெரிந்தே ஆகவேண்டும். யாரை கேட்டால் தெரியும். வெற்றியை கேட்கலாம் என முடிவு செய்து வெற்றிக்கு போன் செய்தாள்.
“சொல்லுங்க அண்ணி”
“தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வீட்டுக்கு வாங்க” என சொல்லி வைத்துவிட்டாள்.
வெற்றி என்ன ஏது என தெரியாமல் கொஞ்சம் பதறி தான் வந்தான்.
வந்தவனிடம் எந்த முகாந்திரம் இல்லாமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்துவிட்டாள்.
“உங்க அண்ணன் பத்து நாளாவே ஏதோ கவலையா இருக்காரு.. என்னனு கேட்டால் சொல்லவே மாட்டேங்கறாரு.. தொழில்ல ஏதாவது சிக்கலா.. ”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி” என்றான் கொஞ்சம் தயக்கமாக..
அவனுக்கு தான் தெரியுமே.. தனா பூங்கொடியை பார்த்து விட்டு வந்ததும்.. பூங்கொடியை பத்தி கருணாவிடம் புலம்பியதும்.. அதற்கு கருணா தனாவை கடிந்து கொண்டதையும்…
அதை எழிலிடம் சொல்லலாமா.. வேணாமா… என தடுமாறி பார்க்க..
அவனின் முகத்தை பார்த்ததும் புரிந்து விட்டது விஷயம் வேற என..
“எதா இருந்தாலும் சொல்லிடுங்க தம்பி. உங்க அண்ணன் அவரா இல்லை.. சதா நேரமும் ஏதோ கவலையோடு யோசனையாவே இருக்காரு.. என்னால பார்க்க முடியலை” என சொல்லும் போதே கண்கள் கலங்கி விட..
பதறி போய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். கேட்டவளுக்கோ பூங்கொடியின் தற்கொலை தெரிந்த விஷயம் தான். ஆனால் அதற்காக கணவன் தன்னை தவிர்த்ததை எண்ணி மனசு வலித்தது.
வெற்றிக்கு அண்ணியின் முகத்தை பார்க்க
பரிதாபமாக இருந்தது. தனா மேல் கோபமும் வந்தது. செய்வதறியாது சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.
இத்தனை காலம் தான் காட்டிய அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே… இன்னும் கணவன் மனதில் அவள் தான் இருக்கிறாளா.. என நினைக்க நினைக்க அவள் காதல் அடிவாங்கியது.
வெகு நேரம் தன்னுள் உழன்று கொண்டு இருந்தவளுக்கு தனா வந்தது கூட தெரியவில்லை. தனா அழைத்து பார்த்து விட்டு தோள் தட்டவும் தான் உணர்வு பெற்றாள்.
“எழில் என்ன சிந்தனை.. வா வந்து சாப்பாடு எடுத்து வை” என சொல்ல..
எதுவும் பேசாமல் பரிமாற அவள் அமைதியை கண்டு மனம் கொஞ்சம் பயப்பட தான் செய்தது. அவன் உள்மனசு ஏதோ பெரியதாக நடக்க போகிறது என மணியடிக்க..
சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான்.எழிலும் சாப்பிட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு அறைக்கு வந்து கதவை அடைத்தவள் தனாவை பார்த்து
“உங்களுக்கு என்ன பிரச்சினை எதுக்கு இப்படி இருக்கறிங்க”என தன்மையாக தான் கேட்டாள்.
“இல்லையே எனக்கு எதும் இல்லையே”
அவளுக்கு தெரிந்து விட்டது என அறியாமல் பொய் சொன்னான்.
அவனின் பொய்யில் உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கி கொண்டு
“அப்ப ஏன் ஒருமாதிரி குழப்பமா இருக்கறிங்க… மாமா”
“அப்படி எல்லாம் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்” சுழட்டி அடிக்க போகும் புயலை அறியாமல் மீண்டும் பொய்.
பொங்கி வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கி கொண்டு..
“பூங்கொடிக்காவை போயி பார்த்திங்களா..”
“இல்லை நான் போகலை”
அவ்வளவு தான் அடக்கி வைத்த கோபம் எல்லாம் வெடித்து சிதற..
“நீங்க போய் பார்க்கவே இல்லை. ஏன் மாமா பொய் சொல்லறிங்க…”
“நீங்க இரண்டு தடவை போய் பார்த்து இருக்கறிங்க.. அதை என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன..”
“ஆமாம் போய் பார்த்தேன். அதுக்கு இப்ப என்னங்கற..”
அவள் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிறாள் என்ற எரிச்சலில் பதில் சொன்னான்.
“அப்போ அவங்கள நினனைச்சு தான் இத்தனை நாளா என்கிட்ட பேசாம இருந்திங்களா..”
“என்னைய காதலிச்ச பாவத்துக்கு அவ வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறா…”
“அது அவங்க தலைஎழுத்து.. அவங்க புருஷன் சரியில்லை அதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும்”
“நான் தான் ஏதாவது பண்ணனும். அவ அப்படி இருக்கும் போது .. நான் சந்தோஷமா பொண்டாட்டி பிள்ளைனு இருக்கறது ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி மனச அறுக்குது..”
அவன் பேச்சு மனசளவில் அவளை நோகடிக்க…
“உங்களுக்கு என்ன மனச அறுக்குது. அப்ப இன்னும் உங்க மனசுல அவங்க நினைப்பு இருக்கா அந்த நினைப்போட தான் என்கூட குடும்பம் நடத்துனிங்களா”என கோபத்துடன் கேட்க..
“ஏய் புரியாம பேசாத. என்னால தான் இப்படி ஆகிடுச்சோனு உள்ளுக்குள்ள குடையுது”
“அவங்க வாழ்க்கையை சரி பண்ண பெத்தவரு சொந்தபந்தம் இருக்கு. நீங்க அனாவசியமா தலையிடாம இருந்தா போதும்”
“என்னால அப்படி எல்லாம் இருக்கமுடியாது”
“ஏன்….ஏன்.. இருக்கமுடியாது. இருந்து தான் ஆகனும். இனி போய் பார்க்கறது .. கவலைபடறது எல்லாம் இருந்திங்க.. நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துங்க” என சத்தமிட..
“என்ன பண்ணுவ நீ.. என்ன மிரட்டறியா… நான் அவ வாழ்க்கைக்கு ஏதாவது பண்ண தான் போறேன். அத நீன்னு இல்ல யாரு சொன்னாலும் கேட்கமாட்டேன்.”
“நான் முக்கியமா..இல்ல அந்த சிறுக்கி முக்கியமா. இப்பவே முடிவ பண்ணுங்க”
“மரியாதை இல்லாம பேசின பல்லப் பேத்துடுவேன்”
“ஓ..ஓ..ஓ..அவளுக்காக என்ன அடிப்பிங்களா…எங்க அடிங்க பார்க்கலாம்”என சிலிர்த்து கொண்டு நின்றாள்.
அவள் எதிர்க்க.. இவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வைத்தான்.
“நான் பூங்கொடிய விரும்பினேன் தெரிஞ்சிருந்தும்… கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்தவன் பின்னாடியே அலைஞ்சு தான கட்டிகிட்ட..உனக்கு எல்லாம் அவள பேசற தகுதி கிடையாது” என மூர்க்கமாக கத்த…
அவனின் சுடு வார்த்தைகள் மிக சரியாக அவள் காதல் நெஞ்சை குறிபார்த்து தாக்க..தன் காதலை கொச்சைப்படுத்தி விட்டவனை வெறித்த பார்வை பார்த்தாள்.
அவளை பார்க்க பிடிக்காமல் “ச்சை’என்று வெறுப்பாக தன் பெற்றோர் அறையில் புகுந்து கொண்டான்.
அவனின் சுடுசொல்லையும் வெறுப்பையும் தாங்காமல் மௌனமாக கண்ணீர் வடித்தவள் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினாள்.
கொட்டிவிட்டால் நெல்லை அள்ளலாம்.சொல்லை அள்ளமுடியுமா..
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் . இதை அறியாமல் தனா சொல்லிய சொற்கள் அவன் வாழ்க்கையை வினாவுக்கு உள்ளாக்கியது

புள்ளி மேவாத மான் – 18 Read More »

B0E2668F-2B5F-4540-A6B4-B777B55BB35D

புள்ளி மேவாத மான் – 17

17 – புள்ளி மேவாத மான்

தனா எழிலை ரொம்பவே பொறுப்பாக பார்த்து கொண்டான். எழில் தன்னை கவனித்து கொண்டது போல தானும் கவனித்து கொள்வது தனது கடமை என எண்ணினான்.
எழில் செய்தது எல்லாம் தனா மேல் கொண்ட காதலால்.. ஆனால் தனாவோ கடமையுணர்வில் செய்தான். அது தான் பின் நாளில் பிழையாகி போனது.
தனா மில்லுக்கு கிளம்பும் முன் எழிலை சாப்பாடு மருந்து எல்லாம் கொடுத்து விட்டு தான் கிளம்புவான். நடுவே குடிக்க ஜீஸ் எடுத்து வைத்து விட்டு செல்வான்.
அதை குடித்தாளா.. தூங்கினாளா…. என்ன செய்தாள்.. என கேட்டு இடையிடையே போன் செய்வான்.
அதை பார்த்த கருணாவோ கடுப்பாகி…
“டேய் என் தங்கச்சி போன் பண்ணி இதை தானடா கேட்கும். அப்ப நீ என்ன எகிறு எகிறுவ…இப்ப நீ பண்றது மட்டும் என்னவாம். அந்த புள்ளய ஓயாம போன போட்டு ரெஸ்ட் எடுக்க விடாம தொல்லை பண்ணிகிட்டு இருக்கற..”
“ஏன்டா மாசமா இருக்கா… தனியா வேற இருக்கா..கேட்கறது ஒரு குத்தமாடா..”
“அதானே எங்க அண்ண.. அண்ணி மேல உள்ள பாசத்துல கேட்குது.. யோவ் மாமா உனக்கு ஏன்யா இவ்வளவு காண்டு” என வெற்றி தனாவுக்கு கொடி பிடிக்க…
“ஆமாம்டா உங்க அண்ணன் பாசத்துல தீய வைக்க… இவ்வளவு நாளா என் தங்கச்சி தனியா தான இருந்தா… அப்ப எங்கடா போச்சு உங்க பாசம்”
“போதும் நிறுத்துடா.. சும்மா பாசமலர் படம் ஓட்டாத..” என தனா சிரித்து கொண்டே சொல்ல..
“ஆமாம் டா நாங்க பாசமலர் படம் தான் ஓட்டறோம். நீ என்ன காதலுக்கு மரியாதை செய்யறியா.. நீயும் பாசமலர் படம் தான் ஓட்டற..”
தனா மேலும் சத்தமாக சிரிக்க…வெற்றி புரியாமல் முழிக்க…
“என்னடா மாப்புள்ள புரியலையா.. உங்க நொண்ணன் பொண்டாட்டி பாசத்துல இதெல்லாம் பண்ணல.. புள்ள பாசத்துல பண்றான்”
தனாவின் சிரிப்பில் காண்டாகிய கருணா
” வேணா… இங்கிருந்தா சிரிச்சே எரிச்சல கிளப்புவான்..வாடா மாப்புள்ள வேலைய பார்ப்போம்”என வெற்றியை இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.
எழிலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் நாள் வர.. திலகா எழிலை தேடி வந்தார்.
“அரசி நாளைக்கு உனக்கு ஹாஸ்பிடல் போகனும் தான..”
“ஆமாங்கத்தை நாளைக்கு தான் போகனும்”
“இல்ல… நாளைக்கு நான் எங்க ஊருக்கு என் சொந்தத்துல ஒரு முக்கியமான கல்யாணம் கட்டாயம் போகனும். தப்பா எடுத்துக்காதே.. நான் வந்த பிறகு ஹாஸ்பிடலுக்கு போகலாமா..” என எழிலின் கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் தயக்கத்துடன் கேட்க..
அவர் கேட்ட விதத்தில் எழிலுக்கே கொஞ்சம் சங்கடமாகி போனது.
“அத்தை நீங்க வந்ததுமே போலாம். நீங்க கவலைப்படாம போயிட்டு எல்லாம் முடிச்சிட்டு வாங்க..” சமாதனமாக சொல்ல..
“நான் வந்ததும் போலாம்.நான்போயிட்டு வந்திரேன்”
ஒருவாறாக திலகா கிளம்பி சென்றார். அடுத்த நாள் காலையில் தனா ஹாஸ்பிடலுக்கு போகனும்ல நானே உங்களை கூட்டி போகிறேன்னு சொல்ல..
எழில் திலகா சொல்லி சென்றதை சொல்ல… தனாவோ யாரும் வேணாம் நானே கூட்டிட்டு போகிறேன். என்று எழில் சொல்ல சொல்ல… கேட்காமல்… பிடிவாதமாக அழைத்து சென்றான்
மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்து தனா டாக்டரிடம் சந்தேகங்கள் என்ற பெயரில் கேள்விகளாலேயே துளைத்து எடுக்க..
அவனுக்கு பதில் சொல்லியே கலைத்து போன டாக்டர் எரிச்சலுடன் எழிலிடம்
“எழிலரசி வீட்டு பெரியவங்க யாரும் வரலையா..இனி அடுத்த தடவை வரும் போது பெண்கள யாராவது கூட்டிட்டு வா”என்றிட..
சர்ரென கோபம் ஏற தனா “அப்ப என்னைய வர வேணான்னு சொல்லறிங்களா.. அதெல்லாம் நீங்க சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது.” என்றான் அழுத்தமாக…
“மிஸ்டர் என்ன ஓவரா பேசறிங்க..”
“கேட்கற பீஸ் கொடுக்கறோம்ல… அப்ப கேட்கறதுக்கு பதில் சொல்லி தான் ஆகனும்”
“என்ன மிரட்டறிங்களா…” என டாக்டருக்கும் தனாவுக்கும் வாக்குவாதமாக..
“பேஷண்டா நாங்க கேட்கற சந்தேகங்களை தீர்க்க வேண்டியது உங்க கடமை. பொறுப்பில்லாம பேசறிங்க”
“நொய் நொய்னு கேள்வியா கேட்டுட்டு எனக்கு பொறுப்பில்லைனு சொல்வீங்களா..”
“ஆமாம் அப்படி தான். பேஷன்ட்டோ ஹெல்த் பத்தி கேட்டா கோபம் வருமா.. பொறுமையா சொல்லமுடியாட்டி எதுக்கு டாக்டர் தொழிலுக்கு வர்றிங்க”
எழில் “மாமா பிரச்சினை வேணாம். வாங்க போலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க.. இவன் திமிறிக்கொண்டு சண்டைக்கு போக
“விடு என்னை… யாராவது கேட்டா தான் இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு பயம் இருக்கும்”
“சொன்னா கேளுங்க மாமா வீட்டுக்கு போகலாம் வாங்க” என இழுத்து கொண்டு கார் நிறத்துமிடத்திற்கு வந்தாள்.
காரில் ஏறி தனா கதவை அறைந்து சாத்தியதில் எழிலின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்து நடுங்கியது.
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எதுவும் பேசமால் வந்தான். எழில் அவனின் கோபத்தை கண்டு அரண்டு போயிருந்தாள்.
இறுகிய முகத்துடன் வந்தவன் வாசலிலையே இறக்கி விட்டு சென்றுவிட்டான்.
தனா பண்ணிய அழிச்சாட்டியத்தில் எழிலுக்கு டென்ஷனில் ப்ரஷர் அதிகமாகி படபடப்புடன் மயக்கம் வர… ஏற்கனவே எழிலுக்கு டாக்டர் ப்ரஷர் இருப்பதாக சொல்லி அதற்கான ஆலோசனையும் சொல்லி இருந்தார்.
தங்கள் அறையில் எதுவும் சாப்பிடாமல் போய் படுத்துக் கொண்டாள். சாப்பிடலையே என அழைக்க வந்த இருளாயி சோர்வாக வேர்த்து சற்று கிறக்கத்துடன் இருந்த எழிலை பார்த்து விட்டு பதறி போய் உப்பும் சர்க்கரையும் கலந்த எலுமிச்சை சாற்றை கொண்டு வந்து குடிக்க வைத்து விட்டு தேவியை கூட்டி வர போனார்.
இருளாயி சொல்லவும் தேவியும் பதறி போய் வந்தவர் எழிலை சாப்பிட வைத்து.. வீங்கியிருந்த கைகால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உறங்க வைத்தார்.
தனா வரும் வரை அங்கேயே இருந்தார். அவரை தேடிக்கொண்டு கண்ணனும் வந்திட…தூங்கி எழுந்து வந்த எழில் நடந்தவற்றை சொல்லிவிட்டாள்.
இருவரும் தனா வருகைக்காக கோபத்துடன் காத்திருந்தனர். தனாவும் வந்தவன் சித்தப்பா சித்தியைப் பார்த்து வரேவேற்கும் விதமாக சிரித்து தலை ஆட்ட…
இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.இவங்க எதுக்குடா முறைக்கிறாங்க என யோசித்து கொண்டே உடை மாற்ற சென்றான்.
அவன் பின்னாடியே போகப் போன எழிலை தேவி “எங்க அவன் பின்னாடியே போற… இப்படி பார்த்துப் பார்த்து செய்து தான் அவன் உன்னை புரிஞ்சுக்காம இருக்கான். பேசாம உட்காரு” என தன் அருகில் இருத்திக் கொண்டார்.
எப்பவும் தன்னையே வால் பிடித்துக்கொண்டு வரும் எழில் வராமல் போகவும்..கண்ணன் முறைப்பையும் வைத்து இரண்டும் இரண்டு நாலு என கணக்கு போட்டவன் ஹாஸ்பிடல் சண்டையை கேட்க வந்திருப்பதை அறிந்து கொண்டான்.
“எங்க யார்க்கிட்டயும் சொல்லாம இன்னைக்கு எதுக்குடா அரசிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன..” என கண்ணன் கோபமாக கேட்க…
“இன்னைக்கு தான செக்கப் டேட்” என்றான் கடுப்புடன்
“அது எங்களுக்கும் தெரியும். அண்ணி தான் இரண்டு நாள் கழிச்சு போலாம்னு வந்து சொல்லிட்டு போனாங்கல்ல.. அப்புறம் எதுக்கு கூட்டிட்டு போன”
“இப்ப கூட்டிட்டு போனதால என்னாச்சு” என்றான் விட்டேற்றியாக..
அவனின் பேச்சில் அது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை கைவிட்டவராக..
“இப்ப என்னாச்சா.. டாக்டர் கிட்ட சண்டை போட்டு பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்க.. அடுத்தாப்புல அந்த ஹாஸ்பிடலுக்கு எப்படி போக முடியும்”
“அந்த டாக்டர் விட்டா வேற டாக்டரா ஊருல இல்லை. இவங்கள விட நல்ல டாக்டர் நிறையா இருக்காங்க பார்த்துக்கலாம்”
“நீ இப்படி பேசி வைச்சா இந்த டாக்டர்னு எந்த டாக்டரும் டெலிவரி பார்க்கமாட்டாங்க.. அத முதல்ல தெரிஞ்சிக்கோ”என தேவியும் திட்ட..
இது வரை யாரும் அவனை இப்படி கேள்வி கேட்டதில்லை என்பதால் உள்ளுக்குள் பொசு பொசுவென பொங்கி கொண்டு வந்த கோபத்தை பல்லிடுக்கில் அடக்கி கொண்டு
“சந்தேகத்தை கேட்டா சொல்லனும் தான.. அத விட்டுட்டு தேவையில்லாம பேசினா யாரு தான் பொறுத்துப்பா…”
“அதெல்லாம் பொம்பளைங்களுக்கு தெரியும். எது கேட்கறதா இருந்தாலும் பக்குவமா கேட்டுக்குவாங்க.. தேவையில்லாம அரசிய டென்ஷன் பண்ணி.. ப்ரஷர் அதிகமாகி புள்ள துவண்டு போயிட்டா… ஒழுங்கா நாங்க சொல்றபடி கேட்டு செய்யு.. இல்ல அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம்.பிள்ளை பேறு முடிஞ்சு அழைச்சிக்கலாம். என்ன சொல்ற..” என கண்ணன் ஒரே போடாக போட..
எழில் துவண்டு போயிட்டா என்றதும் அப்போது தான் அவளை நன்றாக கவனித்து பார்த்தான்.
அவளின் சோர்ந்த முகம் மனதை பிசைய.. பொங்கி கொண்டு இருந்த கோபம் நீர்த்துப் போய்விட.. எழிலை அனுப்பிவிடலாம் என்ற பேச்சில் சர்வமும் அடங்கிவிட்டது அவனுக்கு.
அவன் அமைதியாக”நீங்க சொல்றபடியே செய்யறேன்” என சரணாகதி ஆகிவிட..
அவனுக்கு சிலபல அறிவுரைகளால் அர்ச்சனை நடத்தி விட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.
“மாமா.. சாப்பிட வாங்க..” என சொல்லிவிட்டு சோபாவை பிடித்து எழுந்து எட்டு எடுத்து வைக்க தடுமாற..
நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அவளை சாப்பிட அமர வைத்து அவள் தடுக்க தடுக்க..தானே பரிமாறினான்.
எழில் சாப்பாட்டை கைகளில் அள்ள சிரமப்பட.. அப்போது தான் கவனித்தான் அவள் கைகால் வீங்கி இருப்பதை… நெஞ்சில் பாரமாகி போனது.
பெண்கள் வலிகளையும் வேதனைகளையும் பிரசவித்த பிறகே பிள்ளைகளை பிரசவிக்க முடியும் என்பதை ஆண்களுக்கு யார் தான் சொல்வது…
அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு அவளை தூக்கி கொண்டு வந்து படுக்கையில் கிடத்தி விட்டு வேகமாக வெளியேசென்றான்.
சிறிது நேரத்தில் வெந்நீரோடு வந்தவன் அங்கிருந்த சிறு மேஜை மேல் வைத்துவிட்டு எழிலின் காலடியில் அமர்ந்து அவள் கால்களை தன் மடியில் வைக்க..
“வேணாம் மாமா..” என பதறிப்போய் காலை இழுத்துக் கொள்ள.. அவளின் காலை பிடித்து கட்டாயமாக தன் மடியில் வைத்து
“பேசாம இரு.. எப்படி வீங்கி இருக்கு பாரு..” என ஒத்தடம் கொடுக்க.. சற்று வீக்கம் குறையவும்..
“நான் கால்களை அழுத்தி விடறேன்.தூங்கு” என கால்களை அழுத்த.. அழுத்த.. அவளுக்கோ அவன் கைப்பட்ட இடமெல்லாம் குறு குறுப்பை உண்டாக்க…
பேதையோ போதை கொள்ள… நெளிந்து கொண்டே கால்களை மறுபடியும் இழுத்து கொள்ள…
“ப்ச்ச்” என சலித்து கொண்டே அவள் முகம் காண… அதில் மீகிய காதல் இருக்க… இவனோ அவளின் உடல்நிலையை மனதில் நிறுத்தி தயங்க… அவளோ மாமா என்று சிணுங்க… கூடலுக்கான அழைப்பை ஏற்றவன் அவள் மென் பாதங்களில் இருந்து முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறினான்.
முத்த ஊர்வலம் மெத்த உடலில் மெல்ல மெல்ல நடத்தி மாதுளை நிறம் கொண்ட இதழில் வந்து மொத்தமாக மூழ்கி போனான். காதல் ரசம் பருகி பித்தாகி கிறங்கினான். அவளின் உடலின் மேடு பள்ளங்களும் அபாயகரமான வளைவுகளும் அவனின் சித்தம் கலங்க வைத்திட.. மீளா போதையில் சிக்கி சின்னாபின்னமாகி போனான்.
தானும் தெளிந்து தன் இணையையும் தெளிய வைக்கும் செயலில் சேவகனாகி சேவைகள் செய்திட.. அவனின் இணையோ தலைவனின் சேவையில் கர்வம் கொண்டு… அந்த ஆனந்தத்தில் வீழ்ந்து போனாள்.
இந்த ஆனந்த சேவைகள் விடியலில் நிறைவுக்கு வர… ஊரெல்லாம் நித்திரையில் இருந்து விடுபட.. இவர்கள் மட்டும் நித்ராதேவியின் மடியில் சயனம் கொண்டனர்.
இவர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… நாம் வந்த பிறகு எழிலை கடுமையாக பேசி இருப்பானோ என தேவி பதறி வந்து பார்க்க..திறக்காமல் இருந்த கதவை கண்டு சிரித்து கொண்டு திரும்பி சென்று விட்டார்.

புள்ளி மேவாத மான் – 17 Read More »

என் மோகத் தீயே குளிராதே 07

அத்தியாயம் 7   “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.. எனக்கொரு கவலையில்லை.. நான் தான்டா.. என் மனசுக்கு ராஜா.. வாங்குகடா வெள்ளில கூஜா..” என்று பாடியபடியே இறங்கி வந்தான் அகில்.    “என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு..” என்றவாறு அவனை வழிமறித்து நின்ற நகுலனை ஏன் இறங்க பார்த்த அகில்,   “பின்ன உங்களை மாதிரி வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அடைகாக்க சொல்றியா? என்னால முடியாதுப்பா.. நான் ஊட்டிய சுத்திப் பார்க்க போறேன்.. சரி.. சரி வழிய விடு.. நரி

என் மோகத் தீயே குளிராதே 07 Read More »

26019B55-102A-4D00-9D07-ED3CEE1CACC4

புள்ளி மேவாத மான் – 16

16 – புள்ளி மேவாத மான்

கோயிலுக்கு செல்லும் போதே எழிலுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. வயிற்றை பிரட்டி கொண்டு வருவது போல இருக்க.. அதிகாலையில் எழுந்தது.. அதோடு கார் பயணம்.. அதனால் அப்படி இருக்கிறதோ.. என நினைத்து கொண்டாள்.
கோயிலுக்கு சென்று பூஜைக்கான வேலைகள் செய்ய மிகவும் களைத்து போனாள். கனிமொழியை பொங்கல் வைக்க சொல்லி எழிலை உதவிக்கு வைத்து விட்டு திலகாவும் தேவியும் உரலில் மாவு இடிக்க சென்றனர்.
அடுப்பின் அருகே உட்கார்ந்து வெல்லம் உடைத்து கொண்டு இருந்தவளுக்கு விறகு புகையால் இருமி ஓக்கரித்து கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள்.
கனி பதறி “அத்த.. அத்த.. இங்க வாங்க..”என கூப்பிட.. கனியின் சத்தத்தில் அனைவருமே வந்தனர். திலகாவும் தேவியும் எழிலை அருகே சென்று தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி கூட்டி வந்து கோயில் மண்டபத்தில் உட்கார வைத்தனர். அதற்குள் அனைவரும் என்ன என வந்துவிட்டனர்.
திலகா “என்ன அரசி என்ன பண்ணுது காலைல சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா…”
“இல்லைங்க அத்த இட்லி தான சாப்பிட்டேன். புகை தான் ஒத்துக்கல போல..”
“ஏன் அண்ணி புகையால கண் எரிச்சல்னா கூட பரவாயில்ல… வாந்தி வருதுனா லாஜிக் இடிக்குதே…” என பிரசாத் நக்கல் பேச…
“டேய் தம்பி… உனக்கு நேரம் சரியில்லடா….”என்ற திரு சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு சிரிக்க…
சுந்தரம் இவர்களை பார்த்து முறைக்க… கண்ணன் அமைதியா இருங்களேன்டா என கை ஜாடையாக பேச…
மகன் சொன்னதை யோசித்த தேவி திலகாவின் காதில் ஏதோ சொல்ல.. திலகாவும் எழிலிடம் மெதுவான குரலில்,
“கடைசியா எப்ப பீரியட்ஸ் ஆன..”
முதலில் முழித்தவள்… பின்பு எப்போ என யோசித்தாள்.
இரண்டு மாதத்திற்கு முன்பு… தனாவின் விபத்திற்கு முன்பு… தனாவை கவனிப்பதில் தன்னை கவனிக்க மறந்துவிட்டாள்.
“அத்த இரண்டு மாசாமாச்சு”சொல்லும் போதே எழிலுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. நிஜமா… தனக்கா… கடவுள் கருணை காட்டிட்டாரா… என உள்ளம் பூரித்து போக..
“நாளு தள்ளி போயிருக்கு தேவி” என சொன்னவர் வேகமாக கடவுளின் முன் போய் நின்று,
“ஆத்தா… அங்காளம்மா… குலம் தழைக்க வச்சிருக்க.. சந்தோஷமா இருக்கு.. தாயும் பிள்ளையும் நல்லா இருக்கனும்” என மனதார வேண்டி கொண்டு விபூதி எடுத்து வந்து எழிலின் நெற்றியில் இட்டுவிட்டார்.
பெண்கள் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசிக் கொள்ள ஆண்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரம் திலகாவிடம் என்னவென்று கேட்க.. திலகா சொல்லவும் குடும்பத்திற்கே மகிழ்ச்சி.
திலகா மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்யும் வரை வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றிட… சுந்தரம் சீக்கிரம் பூஜையை முடித்துவிட்டு கிளம்பலாம் சொல்லவும்,
விரைவாக பூஜையை முடித்து கொண்டு வந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஊர் திரும்பினர்.எழிலை வீட்டில் கொண்டு வந்து விட்டு திலகாவும் தேவியும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்றனர்.
தனா இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான். வர லேட்டாகும் என நினைத்திருக்க..சீக்கிரம் வந்ததோடு இல்லாமல் தன் சித்திகள் எழிலிடம் ஏதோ மெதுவாக சொல்லிவிட்டு செல்வதையும் பார்த்தான். அதைவிட எழில் வழக்கத்துக்கு மாறாக இட்ட அடி நோகுமோ என மெல்ல நடந்து வருவதை பார்த்து இவளுக்கு என்னாச்சு என குழம்பி தான் போனான்.
தனாவிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட… எப்பவும் மாமா என்ற அழைப்போடு தனது டிரேட் மார்க் புன்னகையோடு வருபவள் அமைதியாக செல்ல… எதாவது பிரச்சினையா என யோசித்து டிவியை அணைத்து விட்டு அறைக்கு வந்தான்.
எழில் கட்டிலில் உட்கார்ந்திருக்க…தனா அவளின் அருகே சென்று தோளில் தட்டி
“ஹேய்…எழில் என்னாச்சு ஏன் இப்படி இருக்க..”என கேட்கவும்… அவனை இடுப்போடு கட்டி கொண்டு மௌனமாக கண்ணீர் வடிக்க….
அவள் அழுகையில் இவன் கவலையுடன் “ஏம்மா அழுகற… யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா”
தனாவை இழுத்து தன் அருகே அமர வைக்க.. சற்று தடுமாறி அமர்ந்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு
“மாமா.. நமக்கு பாப்பா…”
தான் கருவுற்றிருப்பதை அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.
அவள் சொல்ல வருவது சரியாக புரியாமல் அவள் முகம் நிமிர்த்தி பார்க்க… அவனின் கண்கள் வழி விடுத்த கேள்விக்கு பதிலாக அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து
“நம்மள அப்பா அம்மானு கூப்பிட பாப்பா வர போகுது மாமா…”
அவளின் செய்தியில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவளை அணைத்து கொள்ள.. இருவரும் ஆர்பாட்டமின்றியே அந்த மகிழ்ச்சியை அமைதியாக அனுபவித்தனர்.
குழந்தைக்காக எவ்வளவு எதிர்பார்த்து ஏங்கி தவித்தாள் என அவனுக்கு தானே தெரியும். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள்… ஏச்சுபேச்சுக்கள்…
கோவிலில் நடந்தவற்றை சொல்லி முடிக்க.. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் இருளாயின் குரலில் தான் வெளியே வந்தனர்.
எழிலரசியை தன் கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்,
“இப்ப தான் திலகாத்தா… சொல்லுச்சு… ரொம்ப சந்தோஷம் தாயி.. ஐய்யா.. ராசா… ஐயனும் அம்மாவுமே உனக்கு புள்ளையா பிறப்பாங்க ராசா… இனி நீ கொப்பும் குலையுமா.. இருப்ப எனக்கு அது போதுமய்யா.. இனி இந்த கட்டை சந்தோஷமா வேகும்..” என கண் கலங்க… பொக்கை வாய் கொள்ளா சிரிப்புடன்..
“ப்ச்ச் ஆயா..என்னை வளர்த்த மாதிரி என் பிள்ளையும் நீ தான் வளர்த்துவ.. இப்ப குடிக்க எழிலுக்கு ஏதாவது கொண்டு வா” என்க.. தள்ளாத வயதை மறந்து சிறுபிள்ளை போல சுறுசுறுப்பாக சென்றார்.
“எழில் உங்க வீட்ல சொல்லிட்டியா” என்று தனா கேட்க..
“இல்ல மாமா.. உங்ககிட்ட சொல்லிட்டு சொல்லலாம்னு இருந்தேன்”
தனா தனது போனில் இருந்தே அழைத்து எழிலின் கையில் கொடுக்க தன் தாயிடம் விபரம் சொல்ல..
உடனே எழிலின் குடும்பம் எழிலை பார்க்க வந்துவிட்டனர். முத்துக்குமார் மகளுக்கு பிடித்த பலகாரங்கள் பழவகைகள் என அத்தனை வாங்கி வந்திருந்தார்.
தனா அதை பார்த்து ஏன் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தரமாட்டனா… என கடுப்பானான்.
சற்று நேரத்தில் சுந்தரம் குடும்பமும் கண்ணன் குடும்பமும் வர பேசி சிரித்து.. திலகா தேவி கற்பகம் மூவரும் இரவு விருந்து தடபுடலாக சமைக்க… எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு….என அடுத்த தலைமுறை வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
எல்லோரும் கிளம்பி சென்றதும் தங்கள் அறைக்கு எழிலோடு வந்தவன் அவளை நெருங்கி அவள் வயிற்றில் புடவையை விலக்கி முத்தம் தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தவள்..
“மாமா.. கூசுது… போதும் விடுங்க”
“என் புள்ளைக்கு கொடுக்கறேன் உனக்கென்னடி பொறாமையா..”
“ஆமாம் எங்களுக்கு பொறாமையாம் பொறாமை.. ஒரு ஆமையும் இல்ல..”படபட பட்டாசாய் வெடிக்க..
தனா சத்தமாக சிரிக்க.. அவனின் சிரிப்பை கண்டு உதட்டை சுழிக்க.. சுழித்த உதட்டை தன் உதடு கொண்டு அடக்க… அவள் மாமனை இறுக்கி அணைக்க.. இவனுக்கு தான் அடங்காமல் தாபம் கிளர்ந்தெழ.. தன் தாபத்த தீர்த்துக் கொள்ள மேலும் முன்னேறியவனுக்கு குழந்தையின் ஞாபகம் வர.. சட்டென தாப அலை ஓய்ந்தது. அவன் நெற்றியில் முத்தமிட்டு விலகி படுத்துக் கொண்டான்.
கேள்வியாக மாமனை பார்க்க.. அவளை எடுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டு
“பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு”
அவளுக்கும் ஒன்றும் தெரியாததால் அவனின் பயம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள… பயத்தில் அமைதியாக இருவரும் அணைத்து கொண்டு படுத்திருந்தனர்.
இதற்கு நடுவே தமிழரசன் கீர்த்தியை யாரும் அறியாமல் சைட் அடிக்க.. கீர்த்தி மனசில் ஒரு சின்ன தடுமாற்றம்.. அதை மீறி தன் குடும்பத்தினரை நினைத்து பயம்.
எழிலின் கல்யாணத்தின் போது தமிழரசனுக்கு கீர்த்தி மீதான பார்வை சிறுபிள்ளை என இருக்க… வெற்றியின் கல்யாணத்தில் சிறு சலனம்.. சலனம் சஞ்சலமாகி.. காதலாகி… இப்போ உரிமையோடு அவள் மீது பார்வையை பதிக்க…
கீர்த்தியை பொறுத்த வரை தமிழரசன் அண்ணியின் அண்ணன் அவ்வளவே… விபத்து பிறகு தமிழரசன் தனாவை பார்க்க வரும் சமயங்களில் கீர்த்தியை சந்திக்க நேர்ந்த போது அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது தான்.
சிறுபெண் தானே ஏற்பதா.. எதிர்பார்ப்பதா.. என புரியாத நிலை.
எழிலின் கர்ப்பம் தனாவுள் பல மாற்றங்கள். தன் மனைவி தன் குடும்பம் அதனுள் ஒரு புது வரவு பொறுப்புகள் கூடி போக.. இயலாமையை எரிச்சலாக காண்பிக்காமல்… எழிலை கஷ்டப்படுத்த விரும்பாமல்… அப்பா என்ற பதவி உயர்வு புத்துணர்ச்சியோடு ஓடும் வேகத்தை கொடுக்க… முன்பைவிட முனைப்பாக தன் உடலை நிலைப்படுத்த அனைத்தும் செய்தான்.
ஒருமாதம் ஓய்வு மீதமிருக்க… தன் முயற்சியில் பதினைந்து நாளில் முடித்து கொண்டு… டாக்டரிடம் முழுபரிசோதனை பண்ணிக் கொண்டு பேக்டரிக்கு கிளம்பிவிட்டான்.
கோவிலுக்கு சென்று வந்த அடுத்தநாளே மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்து வந்தனர் பெண்கள்படை.
இதுநாள் வரை தனாவை கவனிக்க நேர்ந்ததால்… சரியான நேரத்திற்கு சரியான உணவு எடுத்து கொள்ளவதில் அசட்டை. அதனால் எழிலின் உடலில் கொஞ்சம் பலவீனம். மருத்துவரிடம் அதற்கான அறிவுரையோடு மருந்து மாத்திரைகளோடும் வீடு வந்தனர்.
தாய்மார்கள் இருவருக்கும் சேர்த்தே இதை செய் அதை செய்யாதே என பட்டியலிட்டனர். ஒரு குழந்தை பிறப்பில் இவ்வளவு இருக்கா… என்ற மலைப்பே தனாவின் உத்வேகத்திற்கு காரணம்.
தனாவுக்கு எழில் செய்தது போய் எழிலுக்கு தனா செய்தான். எழில் சமைத்தாளா என பார்க்காமல் திலகாவும் தேவியும் செய்து கொடுத்தனுப்பி விடுவர்.
அவளை வேளைக்கு சாப்பிட வைக்கும் வேலை தனாவின் பொறுப்பாக்கி கொண்டான்.
“எழில் சொன்னா கேளும்மா.. இந்த ஒரு இட்லி மட்டும் சாப்பிடு…”
“மாமா… ப்ளீஸ் மாமா வேணாம் மாமா..”
“சொன்னா கேளுடி.. கொஞ்சம் சாப்பிடு” என வலுகட்டயாமாக ஊட்ட…
ஓடிப்போய் அத்தனையும் வாந்தி எடுத்தாள். சோர்வுடன் வந்தவளை லேசாக அணைத்து முகம் துடைத்து கைவளைவிலேயே அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்து அவனும் அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் அவனின் மீசையை பிடித்து இழுக்க… காதை கடிக்க… இதழோடு இதழ் உரச.. என சேட்டைகள் செய்ய…
எதற்கு இந்த சேட்டை என அறியாதவனா தனா… ஆனால் அவள் உடல்நிலை கருதி அமைதியாக இருந்தான். அவள் அவனை சீண்டிக் கொண்டே இருக்க…
“ஹேய்.. பேசாம இருக்கமாட்டியா…”
“மாமா..மாமா” சிணுங்க…
“வேணான்டி சொன்னா கேளு..மனுசன உசுப்பேத்திகிட்டு இருக்காதே…பாப்பாவுக்கு ஏதாவது ஆகிட போகுது..”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது”
“அதெப்படி உனக்கு தெரியும்.எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசாதே…”
“எல்லாம் தெரிஞ்சிகிட்டு தானே சொல்றோம்”
“யாரு சொன்னா.. டாக்டரா…”
“என் மாமியார்களும் உங்க மாமியாரும் நடத்தின பாடத்துல இதுவும் தான் அடக்கம்”
“நிஜமாவா… ஒன்னும் ஆகாதா”
“ஹூம்ம்…”என தலையாட்ட..
அதற்கப்புறம் அங்கு பேச்சுகளற்ற மௌனபாஷை தான் ஆட்சி செய்தது. அவளுக்கு வலிக்குமோ குழந்தைக்கு பாதிக்குமோ என பயந்து பயந்து மென்மையாக அவளை ஆட்கொண்டான்
பயத்துடனே இருந்தாலும் நிறைவான தாம்பத்தயமாக தான் இருந்தது இருவருக்குமே.. அவளிடமிருந்து பிரிந்தவன் அவளருகே படுத்து வயிற்றை வருடி கொடுத்து

“வலிக்குதாடி… ஏதாவது பண்ணுதா…டையர்டா இருக்கா… ஒன்னும் ஆகாதுல்ல..” என்றான்.
“ஒன்னும் ஆகாது மாமா..எதுக்கு இவ்வளவு பதட்டப்படறிங்க..” என்க
இருந்தாலும் அவன் முகம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட.. இவனுக்கு தான் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. அவளிடம் சிறு அசைவு ஏற்பட்டாலும் என்னவோ என பதறிப்போய் பார்த்தான்.
காலையில் எழுந்த பிறகும் அவளை பார்த்து கொண்டே அவள் பின்னாடி சுற்றி கொண்டு வயிறு வலிக்குதா… என்னாவது பண்ணுதா… கேட்டுகிட்டே இருக்க…
எழிலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க… அதற்கும் பயந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கே எரிச்சலாகிவிட… போய்யா போய் பொழப்ப பாரு.. என திட்டிய பிறகே கிளம்பி பேக்டரிக்கு சென்றான்.
செல்லும் போது எதுனாலும் எனக்கு கூப்பிடு என சொல்ல.. இவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைக்கவுமே.. கிளம்பி சென்றான்.
வீட்டில் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள பெரியவர்கள் இல்லாத நிலை.. இருளாயி இருந்தாலும் வேலைக்கு என இருப்பவர் உரிமையாக முடியாதல்லவா.. அதுமட்டுமின்றி வயதாகி தள்ளாமை வேற…
அதனால் தான் தான் அவளை கவனித்து கொள்ள வேண்டும். அவளுக்கும் குழந்தைக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணமே.. அவனுடைய இந்த பதட்டத்திற்கு காரணம்.
தன்னை எப்படி எழில் கவனித்து கொண்டாள். அதைவிட இருமடங்கு அவளை கவனித்து கொள்வது தனது கடமை என நினைத்தான். கடமையாக தான் செய்ய நினைத்தான். காதலாக இல்லை. கடமைவுணர்ச்சி அதிகமாகி எழிலின் சீற்றத்துக்கு ஆளானான்.

புள்ளி மேவாத மான் – 16 Read More »

என் மோகத் தீயே குளிராதே 06

அத்தியாயம் 6   “என்ன ஹாசி.. ஊர்ல இருந்து எப்ப வந்த?”    “நேத்து தான் வந்தேன் சிந்து..”   “நீ பாட்டுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்ட.. அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துடுச்சு..”   “என்ன சொல்ற சிந்து? அப்படி என்ன நடந்துச்சு?”   “என்ன நடந்துச்சா? நம்ம கம்பெனிய ஏஹெச் கம்பெனியோட ஜாயின் பண்ணிட்டாங்க..”   “என்னது ஏஹெச்சா?”   “ஆமா.. அதுக்கு நீ ஏன் இவ்ளோ சாக்காகுற?”   “ஒன்னுமில்ல..

என் மோகத் தீயே குளிராதே 06 Read More »

B658A867-BAE8-41C3-BE68-4008F2C08441

புள்ளி மேவாத மான் – 15

15 – புள்ளி மேவாத மான்

என்ன தான் வெற்றியும் கருணாவும் பேக்டரியை பார்த்து கொண்டாலும் தன் சொந்த முயற்சியால் ஆரம்பித்து அதை இரவு பகல் என பாராது வாலிப வயதுக்கு உண்டான சந்தோஷங்களை தியாகம் செய்து அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தான். இரவில் தூக்கத்தில் கூட பேக்டரியை பற்றிய நினைவோடு தான் தூங்குவான்.
அவனின் லட்சிய தொழிலான் சுகர் பேக்டரியை பார்க்க முடியாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையை தனா அறவே வெறுத்தான். அதனால் சில சமயங்களில் எழிலிடம் எரிச்சலை காண்பித்து விடுவான். பிறகு அதற்காக வருத்தம் கொண்டு எழிலிடம் சமாதானமும் பேசுவான்.
அவனை புரிந்து கொண்டு இருக்கும் எழில் அவனின் கோபத்தையும் எரிச்சலையும் தன் வழக்கமான சிரிப்புடன் கடந்து விடுவாள். அவனை தன் அன்பாலயே இயல்புநிலைக்கும் கொண்டு வந்துவிடுவாள் .
விபத்து முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தனா ஓரளவு யாரையும் எதிர்பார்க்காமல் வாக்கரின் உதவியோடு தன் வேலைகளை தானே செய்து கொண்டான். திடகாத்திரமான உடல் என்பதாலும் எழிலின் ஆரோக்கியமான கவனிப்பாலும் அவனின் எலும்புகள் விரைவாக கூடிவிட… டாக்டர் அறிவுரைப்படி காலையிலும் மாலையிலும் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடக்க பழகினான். முதலில் காலை ஊன்றி நடக்க சிறிது தடுமாறினாலும் அவனின் தொழில் வெறியே அவனை நடக்கும் உத்வேகத்தை கொடுத்தது.
தினமும் வேலை முடிந்து தங்கள் வீட்டிற்கு செல்லும் முன் சுந்தரமும் கண்ணனும் தனாவை வந்து பார்த்து விட்டு தான் செல்வர். அன்றும் அது போல வந்தவர்கள் தனாவிடம்,
“தம்பி வெற்றி கல்யாண படி அரிசிய கொண்டு போய் குலதெய்வத்துக்கு பச்சப் போடனும். இப்பவே ரொம்ப தள்ளி போயிடுச்சு.. வர வெள்ளிக்கிழமை போலாமா.. உன்னால வரமுடியுமாய்யா… மெதுவா அலுங்காம காருல போயிட்டு வந்திடலாமா..”
“நீங்க போயிட்டு வாங்க சித்தப்பா.. என்னால ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு வரமுடியாது. அது இல்லாம அங்கயும் வந்து உட்கார்ந்து தான் இருக்கனும் கால்வலி எடுத்துக்கும்”
“நீ இல்லாம எப்படிய்யா.. உன்ன விட்டு எதுவும் செஞ்சதில்லையே… வேணா பூசைய அடுத்த மாசம் வச்சுக்கலாமா..”
“அதனால என்ன சித்தப்பா சந்தர்ப்ப சூழ்நிலை… எனக்காக பண்ண வேண்டிய பூசைய தள்ளி போட வேணாம். நான் வேணா எழில அனுப்பி வைக்கறேன்”
சுந்தரம் என்ன செய்ய என யோசனையில் ஆழ்ந்து விட கண்ணன் தான் “அண்ணா….அதான் தனா சொல்றான்ல… அவன் உடம்பையும் பார்க்கனும்ல.. அரசிய அனுப்பறான்ல.. தம்பிக்காவும் வேண்டிக்கலாம் ண்ணா..சாமி காரியத்த தள்ளி போட வேணாம்” என்க
சுந்தரமும் ஒருவழியாக சமாதானமாகி வெள்ளிக்கிழமை போவது என முடிவு செய்து எழிலை வருமாறு அழைத்து விட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்று சிறிது நேரம் தனா டீவி பார்த்து கொண்டு இருக்க… எழிலின் சத்தமே இல்லை. முதலில் தனா கவனிக்கவில்லை. ஏதாவது கொண்டு வந்து சாப்பிட சொல்லி நச்சரிப்பா.. இல்லையா இப்படி உட்காரதிங்க.. நடங்க.. என படுத்துவா.. இபப என்னடா ஆளையே காணோம் என கொஞ்ச நேரம் கழித்தே உணர்ந்தவன்
“எழில்.. எழில் எங்க இருக்க… இங்க வா” என கூப்பிட்டான்.
எப்ப கூப்பிட்டாலும் சொல்லுங்க மாமா என வருபவள் அமைதியாக வந்து நின்றாள். என்னடா இது என முகம் பார்க்க.. முகத்தை தூக்கி வைத்து கொண்டு எங்கோ பார்த்து கொண்டு நின்றாள்.
“எழில்.. என்னாச்சு”
அதற்கும் பேசாமலே முறுக்கி கொண்டு நிற்க… எரிச்சல் அடைந்தவன்…
“ஏய்… இப்ப எதுக்குடி இப்படி நிற்கற… சொல்லப் போறியா இல்லையா” சத்தம் போட…
” நீங்க எப்படி பெரிய மாமாட்ட அப்படி சொல்லலாம். என்னைய அனுப்பி வைக்கறேனு.. நீங்க வராம நான் மட்டும் எப்படி போவேன். அதுவும் இப்படி உங்களை விட்டுட்டு என்னால எல்லாம் போக முடியாது…” படபடவென பொரிந்தாள்.
அவள் பொரிந்து கொட்டியதில் கலகலவென சிரித்துவிட்டான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க சிரிச்சிட்டு இருக்கறிங்க… என்னய பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா…”
“அது இல்லடி குலதெய்வ கோயிலுக்கு தான கூப்பிடறாங்க.. நம்ம வீட்டு சார்பா யாராவது போகனும் தான…”
“உங்கள தனியா விட்டுட்டு என்னால போகமுடியாது. உங்களுக்கு ஏதாவது தேவைனா யார் செய்வா.. இல்லையா வாங்க இரண்டு பேருமே பூசை நேரத்துக்கு போயிட்டு முடியவும் வந்திடலாம்”
“சொன்னா கேளு எல்லாரும் பார்க்க ஸ்டிக் வச்சு நடக்க சங்கடமா இருக்கு…. ஆயா இருக்குது எதுனா அதுகிட்ட கேட்டு வாங்கிகறேன்”
அப்பவும் எழில் ஏதும் பேசாமல் இருக்க…
“கண்டிப்பா நீ போற..” என்றான் கட்டளையாக..
இரவு வரை முகத்தை தூக்கி வைத்து கொண்டே எல்லாம் செய்தாள். அறைக்கு வந்கவள் பாயை விரித்து போட்டு படுத்தாள். அன்றைய இரவுக்கு பிறகு அவனை லேசாக அணைத்தவாறு படுப்பவள் இன்று வேண்டும் என்றே செய்ய….
பார்த்ததும் தனா எரிச்சலுடன்
“எழில் மேல வந்து படு”
சுவற்று பக்கம் திரும்பி படுத்திருந்தவள்அமைதியாகவே இருக்க…”ப்ச்ச் இப்ப மேல வரயா இல்ல நான் உன்கூட கீழ படுக்கவா..”
அப்பவும் அமைதி அமைதியோ அமைதி.
தனா எழுந்து வாக்கிங் ஸ்டிக் எடுக்க… அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அவனுக்கு அந்தபுறமாக சென்று படுத்துக் கொண்டாள்.
இப்பவும் தனாவிற்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை பார்க்க எரிச்சல் போய் சிரிப்பு தான் வந்தது. இவனே இழுத்த அணைக்க.. அவள் திமிற…. கொஞ்ச நேரம் இழுபறியாக இருக்க…
“ஆ…ஆ.. அம்மா வலிக்குது” என தனா கத்த..
“ஐயோ.. மாமா.. எங்க வலிக்குது” என பதறி போய் முதுகு இடுப்பு என ஆராய்ந்தவளை பார்த்து கடகடவென சிரிக்க..
“எல்லாம் நடிப்பா.. உங்கள..” என சிணுங்கி கொண்டே நெஞ்சில் குத்த…
அவளை மேலே இழுத்துப் போட்டு கொண்டான்.
“வேணாம் மாமா வலிக்கும்”
“வேணும்டி” என்றான் விசமமாக…
“மாமா ப்ளீஸ் ஆப்ரேஷன் பண்ண உடம்பு ஏதாவது பிரச்சினையாகிட போகுது”
“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி”என கெஞ்சி கெஞ்சியே அவளை மசிய வைத்தான்.மெது மெதுவாக அவளை ஆக்ரமித்தான். நிதானமாக அவளை ஆட்கொண்ட போதும்.. அவனுக்கு அவள் ஒத்துழைத்த போதும்… அவள் மனதில் பயம் இருக்க தான் செய்தது.
ஆனால் அவனுக்கோ தொழிலை பார்க்காமல் வீட்டில் முடங்கி கிடந்ததால் மனதில் மண்டி கிடந்த எரிச்சல் மறைந்து மனம் இறகு போல லேசான உணர்வு.
அவன் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்ட பிறகே அவளுக்கு நிம்மதியும் சந்தோஷமும்… அவளுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த கணவனின் அருகாமையல்லவா…
ஊடலை கூடலில் முடித்து வைத்தவன்”எழில் நாளைக்கு கோயிலுக்கு போற தான” என்க
“மாமா நீங்க இல்லாம..” என மெல்ல இழுக்க..
“அடம் பண்ணாத எழில் கோயிலுக்கு போகலைனு சொல்லகூடாது. எனக்காக.. நமக்காக போயிட்டு வா”என மேலும் ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினான்.
வெள்ளிகிழமை காலையிலேயே எல்லோரும் கோயிலேக்கு கிளம்பினர். எப்போதும் எல்லோருக்கும் முன்ன கிளம்பி மாமியார்களிடம் என்ன செய்ய ஏது செய்ய என கேட்டு எல்லாம் இழுத்து போட்டு கொண்டுசெய்பவள்…
இன்று தனாவையே சுற்றி சுற்றி வந்தாள். விடியும் முன்பே எழுந்து அவனுக்கு சமைத்து எடுத்து வைத்து…அவனுக்கு தேவையான எல்லாம் செய்து என…
மாமா காலைலயும் மதியமும் டைமுக்கு சாப்பிடுங்க.. டேப்லெட் எடுத்து வச்சிருக்கேன்… அதிகம் நடக்காதிங்க…எதுனாலும் ஆயாகிட்ட கேளுங்க… என எதாவது நிமிடத்துக்கு ஒரு தரம் சொல்லி கொண்டே இருந்தாள்.
இருளாயி பாட்டி கூடநான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன் ராசாவ என சொல்ல…
தனாவிற்கே சலித்து போய் முதல்ல கிளம்புடி என சத்தம் போட.. அப்போதும் மாமா பத்திரமா இருங்க.. என சொல்லி அவனின் முறைப்பை வாங்கி கொண்டு தான் சென்றாள்.
காலை உணவை சாப்பிட்டு விட்டு டீவி பார்த்து கொண்டு இருந்தான் தனா. கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு எழில் இல்லாது ஏதோ போல இருந்தது. எந்நேரமும் மாமா மாமா என நாய்குட்டிபோல பின்னாலயே திரிவாள். இப்ப வீடே வெறிச்சோடி போனது போல இருந்தது தனாவிற்கு…
அவளை பற்றி அசை போட்டு கொண்டு இருக்க… அதை கலைக்கவென பேக்டரி மேனேஜர் வந்தார்.
“குட்மார்னிங் சார்”
“குட்மார்னிங்.. சொல்லுங்க குமார் ”
“சார் ஜி எஸ் டி பைல் பண்ணனும் சார். அந்த பைல் உங்ககிட்ட தான் இருக்குனு கருணா சார் சொன்னார் இன்னைக்கு ஆடிட்டர் கிட்ட சப்மிட் பண்ணனும்” என சொல்ல..
விபத்துக்கு முன்பு அக்கௌன்ட் செக் பண்ண வீட்டுக்கு எடுத்து வந்து மேலே தங்கள் அறையில் வைத்தது ஞாபகம் வந்தது . மேலே செல்லவேண்டும். வேறு வழியின்றி தானே வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் ஒவ்வொரு படியாக மெல்ல ஏறி சென்றான்.
எங்கு வைத்தோம் என ஞாபகம் இல்லாமல் எல்லா கப்போர்டிலும் தேடினான். அப்படி தேடும்போது எழிலின் துணிகளுக்கு இடையே ஒரு டைரி இருப்பதை கண்டவன் என்ன இது என அதையும் பைலையும் தேடி இரண்டையும் எடுத்து கொண்டு கீழே வந்தான்.
மானஜேரிடம் பைலை கொடுத்து அனுப்பி விட்டு டைரியோடு
அறைக்கு வந்தான். டைரியை பிரிக்க முதல் பக்கத்தில் நட்ட நடுவே ஜெய் மாமா என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தாள்.
அடுத்த பக்கத்தில்….
மார்ச் மாதம்
கடைசி எக்ஸாம் அப்பாடா முடிச்சிட்டா.. நாளைல இருந்து ப்ரீபேர்ட் தான். பத்மா கலையோட பாண்டி தாயம் அஞ்சாங்கல் எல்லாம் விளையாடனும். டிவி பார்க்கனும்.. தூங்கனும்..என நினைத்துக் கொண்டே எக்ஸாம் எழுதினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சீக்கிரம் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள்
காலையிலேயே அம்மா என்ன எழுப்பி தாத்தா இறந்துட்டாராம் மலையனூர் போகனும்னு சொன்னாங்க.
என் ஆசையெல்லாம் புஷ்வானமாகிவிட்டது. இந்த தாத்தா லீவுல தான் சாககனுமா.. என எரிச்சலாக வந்நது.
நாங்க எல்லோரும் மலையனூர் போனோம். அம்மா தாத்தாவை பார்த்ததும் கதறி அழுதாங்க. யார் யாரோ வந்தாங்க பாட்டியையும் அம்மாவையும் கட்டி பிடிச்சு அழுதாங்க… நேரமாக ஆக எனக்கு பசிச்சுது.. யாருகிட்ட கேட்க என தெரியலை… பின்புற திண்ணைல உட்கார்ந்து இருந்த என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாங்க லட்சுமி அத்தை. அப்ப எனக்கு அவங்களை தெரியாது.
“பாப்பா.. உன் பேரென்ன..”
“எழிலரசி”
“முகம் வாட்டமா இருக்கு… பசிக்குதா…” என முகத்தை வாஞ்சையடன் தடவி கேட்க…
உதடு பிதுக்கி.. கண்களில் கண்ணீர் தேங்க…ஆமாம் என தலையாடட்டினேன்.
“பக்கத்து வீடு தான் அத்தை வீடு. வரயா… அத்தை சாப்பாடு கொடுக்கறேன்”
கண்களில் சாந்தமும் புன்னகை நிறைந்த முகத்தோடு அன்பாக பேசும் லட்சுமி அத்தையை பார்த்தவுடன் எனக்கு பிடித்திருந்தது.
“ம்ம்.. வரேன்” என தலையாட்டிய என்னை கூட்டிக்கொண்டு போனார் அத்தை. துக்கவீட்டிற்கு திரும்பவும் போகனும்ங்கறதால வீட்டுக்குள் போகாம பின்வாசலுக்கு தான் போனோம்.
அங்க தொழுவத்துல புசுபுசவென குட்டி குட்டி முடியோடு நல்ல ப்ரௌன் கலர்ல பெரிய முழியோடு அழகா இருந்தா செல்லா…
“இருளாயி.. இருளாயி.” என அத்தை குரல் கொடுக்க…
உள்ள இருந்து குள்ளமா கருப்பா பேருக்கு ஏத்த மாதிரி ஒரு கிழவி வந்துச்சு…
“ஏன் தாயி அதுக்குள்ள வந்திட்ட.. எடுத்திட்டாங்களா..” என்றது என்னை பார்த்து கொண்டே…
“பாப்பா யாரு தாயி”
“நம்ம கற்பகத்தோட புள்ள.. துக்கத்துல இவள யாரும் கவனிக்கல.. பசி போல வாட்டமா இருந்தா.. அதான் கூட்டிட்டு வந்தேன். சாதம் போட்டு எடுத்துட்டு வா”என அத்தை சொல்ல…
இருளாயி கொண்டு வந்து கொடுக்கவும் அத்தையே எனக்கு ஊட்டிவிட்டாங்க.. இப்ப எல்லாம் அம்மா எனக்கு ஊட்றதில்ல… அதனால எனக்கும் பிடிச்சிருந்துச்சு…
யாராவது வந்து போயிட்டு இருக்க என்ன கவனிக்க யாருக்கும் நேரமில்ல… அதனால நான் அத்தையை தேடி அவங்க வீட்டுக்கு போயிடுவேன்.
காரியங்கள் முடிந்து துக்கவீடு இயல்புக்கு திரும்புவும் பாட்டி தனியா இருப்பதால் தாத்தாவின் இழப்பில் இருந்து மீள்வதற்காகவும் என்னை அங்கேயே விட்டுட்டு போக சொல்லி எல்லோரும் சொல்ல.. அப்பாவும் சரி என்றுவிட்டார்.
தாத்தா இறந்தது சிக்ஸ்த் முடிந்து லீவ் என்பதால் செவன்த் அங்கேயே சேர்த்து விட்டு அப்பா அம்மா அண்ணனோடு ஊருக்கு போயிட்டாங்க…கொஞ்ச நாள் அம்மா விட்டுட்டு இருக்க கஷ்டமா இருந்துச்சு.

ஜீன் மாதம்

லீவ் முடிந்து ஸ்கூலுக்கு போனேன். புதுஸ்கூல் எல்லாம் புதுசு ஒருபயம்.. பாட்டிக்கு வயசாயிட்டதால ஏதோ அவங்க முடிந்தளவு செய்வாங்க.. அத்தகிட்ட சடை போட்டு கொள்ள போவேனா அப்ப தான் ஜெய் மாமா ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருப்பாங்க..
அம்மாடி மாமா எவ்வளவு உசரம்..குட்டி மீசை வச்சுகிட்டு… சிரிக்கவே மாட்டாங்களா பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கும்.
மாமா ப்ளஸ்டூவாம்… நல்லா படிப்பாங்களாம்.. அத்தை சொன்னாங்க…
ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும் அத்தை வீட்டுக்கு ஓடிடுவேன். பெரிய கண்ண உருட்டி உருட்டி பார்த்துகிட்டு என்ன பார்த்தும் துள்ளிகிட்டு என்னைசெல்லமா முட்டி விளையாடும் செல்லாகூட விளையாடி…ஹோம்ஒர்க முடிச்சிட்டு நானும் அத்தையும் முத்தத்துல படுத்துகிட்டு நட்சத்திரலாம் எண்ணுவோம்.
மாமா கோச்சிங் கிளாஸ் முடிச்சிட்டு வரதுக்குள்ள நான் வீட்டு வந்துடுவேன்.அத்தைகூட சாப்பிட்டு போனு சொல்வாங்க.. மாமா வந்துட்டா.. பயந்து ஓடி வந்துடுவேன்.
மாமா ப்ளஸ்டூ முடிச்சிட்டு மேல படிக்க குவாலியர் போயிட்டாங்க. ஜெய் மாமாவ பிரிஞ்சு அத்தையால இருக்க முடியல.மாமா தினமும் நைட்டு போன் பண்ணுவாங்க… இருந்தாலும் அத்தை புலம்பிட்டே இருப்பாங்க.. மாணிக்க மாமா கூட அத்தைய திட்டுவாங்க.
அதனால மாமவ பத்தி என்கிட்ட தான் நிறைய… நிறையா சொல்வாங்க… ஜெய் மாமாவுக்கு செய்ய முடியாத ஆதங்கத்தை எனக்கு செஞ்சு கொடுத்து தீர்த்துகுவாங்க..
எழிலின் சிறுவயதில் எழுதியதை படித்து கொண்டு இருந்தவன் போன் அடிக்கவும்.. போன் பேசிவிட்டு சின்னவயசுல ஏதோ பொழுது போகாம கிறுக்கி வச்சிருக்கா… என நினைத்து மேற்கொண்டு படிக்காம அங்கிருந்த கப்போர்டின் மூலையில் தூக்கி போட்டுவிட்டான்.
அவனுடைய துரதிர்ஷ்டம் அடுத்தடுத்த பக்கங்களை படிக்காமல் போனான். படித்து இருந்தால் எழிலின் காதலை தெரிந்து கொண்டு இருப்பான். பின்னாளில் எழிலை பிரிய நேர்ந்திருக்காது….

புள்ளி மேவாத மான் – 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top