5 – தீக்கு தென்றலோடு மோகம்!
எபி – 5
சம்ரித்துக்கு அன்று முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. கண்ணை திறந்துக் கொண்டு அவளோடு கனவில் உலா வந்தான். அவளுக்கு கொடுத்த முத்ததை நினைத்து இதழை வருடினான். இதழ் இனிக்க மாதிரி இருந்தது. பிறகு இதழை உள்ளே இழுத்து ஒரு சப்புக் கொட்டினான். விடிய விடிய ஒரு நிமிடம் கண்ணை மூடவில்லை.ஒரே நிலையில் படுத்து இருந்தான்.
விடிந்தும் வெகு நேரமாகியும் சம்ரித் அறையை விட்டு வெளியில் வரவேயில்லை. விமலா அறையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை உணவுக்கு வராமல் இருக்கவும் ‘என்னவோ தெரியவில்லை இவன் இவ்வளவு நேரம் எழுந்திரிக்காமல் இருக்கமாட்டானா…’ என கதவைத் தட்டினாள். அது உடனே திறந்துக் கொண்டது.
அருகில் போய் பார்த்தால் போர்வையை தலையோடு இழுத்துப் போர்ததிக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தான். போர்த்திருந்த போர்வையை விலக்கி விட்டு பார்த்தால் சம்ரித் உடல் அனலா கொதித்துக் கொண்டிருந்தது. அது இல்லாமல் “ம்மா… ம்மா… “ என்று அனத்திக் கொண்டிருந்தான்.
உடனே விமலா”டார்லிங்… டார்லிங்…” பதறியடித்துக் கொண்டு ஈஸ்வரை கூட்டி வர ஓடினாள்.ஈஸ்வர் கீழே ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
அப்படியே படித்துக் கொண்டிருந்த பேப்பரை போட்டு விட்டு,“யாருக்கு என்னாச்சு… அது முதல்ல சொல்லுமா…” என்றார்.
“நம்ம சம்ரித்துக்கு தான் ஃபீவர் மாதிரி இருக்கு… உடம்பு நடுங்கி அனத்திட்டு இருக்கான்…”
“பதட்டப்படாதே… வா…” என்று முன்னால் சென்றார்.
விமலா ஈஸ்வர் பின்னாலேயே சென்றார். இருவரும் உள்ளே வரும் போதே சம்ரித் உடல் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. ஈஸ்வர் அருகில் வந்து நெற்றி கழுத்தில் எல்லாம் கை வைத்துப் பார்த்தார். உடம்பு நெருப்பாய் கொதித்தது.
ஈஸ்வர் விரைவாக சென்று மெடிக்கல் கிட் எடுத்து வந்து வெப்பநிலை அளவைப் பார்த்தார். அது நூத்திப் பத்து என காண்பித்தது. ‘என்ன… இப்படி உடம்பு கொதிக்குது…’ என நினைத்து, வெப்பமானி கருவி விமலாவிடம் காட்டினார்.
அதைப் பார்த்ததும் விமலா அதிர்ந்து,”என்னங்க… ஹை ஃபீவரா இருக்குது… இப்ப என்ன பண்றது…” எனக் கேட்டாள்.
“இரு… இரு… மெடிஷன் கொடுத்துப பார்க்கலாம்… அதுல ஃபீவர் குறைலன்னா… வேற ஏதாவது செய்யலாம்… கொஞ்சம் கஞ்சி காய்ச்சி கொண்டு வா… அத கொடுத்தது அப்புறம் மெடிஷன் கொடுக்கலாம்.” என்றார்.
விமலா வேக வேகமாகச் சென்று கஞ்சி தயாரித்துக் கொண்டு வந்து தன் கையால் புகட்டினார். பிறகு ஈஸ்வர் மாத்திரை கொடுத்து அவன் தூங்கும் அவரை இருவரும் அருகில் இருந்தார்கள்.
இரவெல்லாம் முழித்திருந்ததுக்கும் சேத்தி பகலில் தூங்கினான்.தூங்கி எழுந்தும் காய்ச்சல் குறையவேயில்லை.
அங்கே அம்ரீதா வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதட்டோடு உதடு வைத்து கிஸ் கொடுத்து அப்புறம் ஷோரும் ஆட்களை அழைத்து இந்த பைக்க அம்ரீ வீட்டில் கொண்டு நிறுத்தச் சொல்லிட்டு தான் போனான்.
‘இதுல போலாமா… இல்ல வேண்டாமா…’ ஒரு நொடி தான் நினைத்தாள். ‘சேச்சே… வேண்டாம்…’ என்று நினைத்துக் கொண்டு பஸ் பிடிக்க வேகமாக ஓடினாள்.
வழக்கம் போல இவள் போகும் பஸ் இவளை விட்டுட்டு சென்றுவிட்டது. அடுத்த பஸ்ஸைப் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தாள். சம்ரித் இன்று அலுவலகத்துக்கு வரவில்லை. விசாரித்து அறிந்துக் கொண்டதில் அவனுக்கு தீவிர காய்ச்சல் என அலுவலகத்தில் உள்ளவர்கள் அறிந்துக் கொண்டனர்.
இதை அம்ரீதா காதில் கேட்டதும், ‘ஏன்னு தெரியலயே… சம்ரித்துக்கு உடம்பு எப்படி இருக்குதோ… அவனை பார்க்கனும் போல இருக்குது… அவனை பார்க்கனும்னா வீட்டுக்கு தான் போகனும்… நா மட்டும் எப்படி தனியா போயி பார்ப்பது…’ என பலவாறு நினைத்துத் துடியாய் துடித்துப் போனாள். அவளால் அலுவலகத்தில் இருப்புக் கொள்ளவில்லை.அம்ரீதா அன்று முழுவதும் அலுவலகத்தில் ஒரு வேலையும் செய்யாமல் பித்துப் பிடித்ததுப் போய் இருந்தாள். வீட்டிற்கு வந்தும் அதே கவலையுடன் இருந்தாள்
அவள் சித்தி கூட,”அம்ரீ ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறே…” எனக் கேட்டாள்.
அதற்கு வருத்ததுடன்,”சம்ரிக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சிருக்காங்க சித்தி…” சொன்னாள்.
அதற்கு யசோ,”கவலைப்படாதே… அவர் உடம்புக்கு ஒன்னும் சீரியஸாக இருக்காது.” என அவளைத் தேற்றினார்.
இருந்தும் அவள் மனது சமாதானம் ஆக மறுத்தது. அவள் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பிசைந்துக் கொண்டிருந்தது.
சம்ரித்துக்கு உடல் சூடு குறையவே இல்லை நேரமாக ஆக அதிகமாயிட்டு போய் கொண்டிருந்தது. ஈஸ்வர் எவ்வளவு முயன்றுப் பார்த்தும் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. விடிய விடிய சம்ரித் உடம்பு சூடு அதிகமாக வந்து கைகால் எல்லாம் இழுத்து ஜன்னி கண்டது. உடனே சம்ரித்தை தீவிரசீகிச்சைப்பிரிவுல சேர்க்கப்பட்டான். அந்த விஷயம் சொந்தக்காரங்களுக்கு காட்டுத்தீ போல பரவியது.
இஷாராவுக்கும் அவள் பெற்றோரும் உடனே பார்க்க வந்தார்கள். இஷாராவும் அவள் தந்தையும் ஐ.சி.யூவுக்கு வெளியே நின்றுப் பதறிப் போனார்கள். லதாவோ யாருக்கு வந்த விருந்து என இருந்தார். அம்ரீதா இருந்த காலனி முழுவதும் சம்ரித் ஐ.சி.யூவுல அனுமதிக்கப்படிருந்தான் என்ற செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து அம்ரீதாவுக்கு வீட்டில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை.
உடனே அவனைப் பார்க்க போக வேண்டும் என கால்கள் பரபரத்தது. என்ன செய்யலாம் என யோசித்து சுற்றி முற்றியும் பார்த்தாள். அப்போது வாசலில் நிற்கும் பைக் கண்ணில் பட்டது. எதையும் யோசிக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தாள். அங்கே போய் சம்ரித்தை பார்த்தவுடன் கைகால் நடுங்கியது. ஒன்றும் பேச முடியாமல் போக, கடவுள் நம்பிக்கை இல்லாதவள் நேராக கோவிலுக்கு சென்று கடவுள் முன் சரணடைந்தாள். ஒரு தூண் அருகே அமர்ந்துக் கொண்டு சம்ரித்துக்காக மனம் உருக வேண்டினாள். கண்களில் அருவியாக நீர் கொட்டியது. தந்தை இறப்புக்கு கூட கண்ணீர் விடாமல் இறுக்கமாக இருந்தவள் சம்ரித் மேல் எந்த அளவுக்கு காதல் இருந்தால் கண்களில் கண்ணீர் வரும்…
அம்ரீதாவின் வேண்டுதலுக்கு பலன் இருந்தது. சம்ரித்தின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் இருந்தது. அவன் உடல்நிலை தேறி வருகிறது என்ற செய்தி அவள் காதுக்கு எட்டியது. அப்போது தான் அவளுக்கு நிம்மதியானாள். அவள் எழுந்து கடவுளை வணங்கிட்டு அவனுக்கு பிரசாதம் வாங்கிக் கொண்டுப் போனாள். அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. அம்ரீதா சம்ரித்தைப் பார்த்து நெற்றியில் விபூதி பூசி விடும் நேரம் அவள் கைப்பட்டு கண் விழித்தாள்.
சம்ரித் அம்ரீதாவைப் பார்த்து,”அம்ரீ… நீயா… கடைசியில் என்னய பார்க்க வந்துடியா…” என காய்ச்சல் கண்ட நிலையில் ஏதோயதோ பிதற்றினான்.
அவளும்,”நா வந்துட்டேன்… உங்கள பார்க்க ஓடியோடி வந்துட்டேன்…” என கண்களில் ஆனந்தக் கண்ணீரோடும் உதட்டில் புன்னகையோடும் உண்மையைச் சொன்னாள்.
“ஐ லவ் யூ அம்ரீ… ஐ லவ் யூ அம்ரீ…” என நான்கு நாளாக மனதில் அடைத்து வைத்திருந்த காதலை போட்டு உடைத்தான்.
அவன் அருகில் அமர்ந்து,”ஐ டூ லவ் யூ சம்ரித்…” என இவ்வளவு நாட்களாக போட்டு புதைத்து வைத்திருந்த காதலை போட்டு உடைத்தாள்.
இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டு கட்டியணைத்தனர். இருவருக்கும் அந்த அணைப்பு அவசியமாகிற்று. எவ்வளவு நேரம் இவர்கள் இந்த மாதிரி இருந்தார்களோ… அவர்களுக்கே தெரியவில்லை… இவர்கள் நெருக்கத்தை கலைக்கும் விதமாக கதவு தட்டும் ஓசைக் கேட்டு அவசரமாக அவசரமாகப் பிரிந்தார்கள். நர்ஸ் தான் உள்ளே வந்தார்.
“இந்த டைம்ல ஒரு இஞ்செக்ஷன் போடனும்… திரும்பி இடுப்பை காமிங்க…” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
இருவரும் திரு திருவென முழித்தார்கள். உடனே வேகமாக அம்ரீதா வெட்கப்பட்டு திரும்பி நின்றுக் கொண்டாள். அவள் திரும்பி நின்றதைப் பார்த்துக் கொண்டே ஊசிப் போட்டுக் கொண்டான். அந்த நர்ஸ் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார். பிறகு ஒருவர் முகத்தைப் பார்க்கவே சங்கடப்பட்டு தலைக் குனிந்து அமர்ந்திருந்தனர்.
நேரமாகவது தெரிந்து அம்ரீதா தான்,”நேரமாகுது நா கிளம்பறேன்…” என சொல்லிக் கொண்டு கிளம்ப ஆயுத்தமானாள். அவன் சரி என்று தலையாட்டவும் அவள் கிளம்பினாள்.
அம்ரீதா விசிலடித்துக் கொண்டு மிகவும் சந்தோஷமான மனநிலையில் வீட்டிற்கு வந்தாள். அவள் நுழைந்தவுடன் கருணாகரன்,”என்னம்மா… விசில் எல்லாம் பலமாக இருக்கு… என்ன இவ்வளவு ஹாப்பியா இருக்க… கொஞ்சம் சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல…” அவருக்கு அவளோட காதலைப் பற்றி தெரியாது இல்ல… அதனால் அவ்வாறு கேட்டார்.
என்ன சொல்வது என தெரியாமல்,”அது வந்து சித்தப்பா… அது வந்து…” என இழுத்தாள்.
“அது வந்து… எது வந்து… என சொல்லு அம்ரீ” எனக் கேட்டார்.
அவர் கேட்க கேட்க… இவள் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கும் போது, யசோதா உதவிக்கு வந்தார்.
“என்ன அம்ரீ… சித்தப்பா தான் கேட்கறாங்கல… ப்ரண்ட் எங்கெஜ்மெண்ட் அங்க தான் நாள் பூரா இருந்துட்டு வரேன் சொல்ல வேண்டியது தானா…” என சொன்னாள்.
யசோதா சொல்லிக் கொடுத்தப்படியே இவளும்,”ஆமாம் சித்தப்பா… என் ப்ரண்ட்கு எங்கெஜ்மெண்ட் அதுக்கு போயிருந்தேன்.” என சமாளிப்பாக…
உடனே கருணாகரன்,”யார் அந்த ப்ரண்ட்… எனக்கு தெரியாமல் இருக்காதே…” கேட்டார்.
என்ன சொல்வது என தெரியாமல் மீண்டும் முழிக்க, இப்பவும் யசோ தான்,”கருணாஸ்… அவ அந்த அநாதை பொண்ணு… அவ நீங்க அதிகம் பார்த்தில்ல… அவ எங்கெஜ்மெண்ட் போய் கூட இருந்து எல்லா முடிஞ்சது அப்பறம் வர்றா… களைச்சு போயி வர்றவள…. இப்படி நிற்க வச்சுட்டு தொணதொணன்னு கேள்வி கேட்டா எப்படி… உங்களுக்கு ஒரு நியாயம் வேண்டாமா…” என்று கேட்டு போ என கை அசைத்து அவளை கருணாகரனிடம் காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
அவரும் நமக்கு தெரியாத யார் அந்த ப்ரண்ட் என யோசிக்க ஆரம்பித்து, என்ன யோசித்தும் ஞாபகம் வராமல் போக… கடைசியில் மண்டையை பிச்சுக்காத குறை தான்…
சமையல் அறைக்கு வந்த யசோதாவை கட்டி அணைத்து,”சூப்பர் சித்தி… என்னய சித்தப்பாகிட்ட இருந்துட்டு காப்பாத்திட்டிங்க… ரொம்ப ரொம்ப தேங்கஸ்…” என கூறினாள்.
யசோதா“இதுக்கெல்லாம் தேங்கஸ் சொல்வாங்க… இன்னும் சின்ன புள்ளயாட்டம் இருக்க… போ போயி ஆகுற வேலய பாரு…” என சொல்லி அவள் அறைக்கு அனுப்பினார். அவள் நிம்மதியுடன்அறைக்கு சென்றாள்.
அம்ரீதா யாரும் இல்லாத நேரத்தில் போன் செய்து விட்டு சம்ரித்தைப் பார்க்க செல்வாள். இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் விளையாட்டுக்கு சம்ரித் அம்ரீதாவைப் பார்த்து,”உன்னய விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன செய்வ…” எனக் கேட்டான்.
“அப்படி நடந்திடுமா… நான் நடக்கவிட்டுவேனா…” எனரௌத்திரமாகக் கேட்டாள்.
“நீ என்ன பண்ணுவ… நா முதலாளி… நீ ஆப்டர்ஆல் என்கிட்ட சம்பளம் வாங்கற தொழிலாளி…”
“தொழிலாளினா என்ன… நீங்க செய்யற அநியாயத்த பார்த்துகிட்டு சும்மா இருப்பேனா…” என பொங்கி எழுந்தாள்.
“பார்த்துகிட்டு சும்மா தான் இருக்கமுடியும்… வேற என்ன பண்ணமுடியும்…” இவனும் பதிலுக்கு வம்பு இழுத்தான்.
“நா என்ன செய்வேனா… எப்படி கல்யாணம் நடந்திடும் பார்க்கறேன்…” என ஆவேசமாகக் கேட்டாள்.
“நடந்துட்டா… நீ என்ன செய்வ…” கண்களில் சிரிப்போடுக் கேட்டான். அவளுக்கு இருந்த கோபத்தில் அதை கவனிக்கவில்லை.
“முகூர்த்தம் நடக்கற நேரத்தில் வந்து போராட்டம் பண்ணுவேன்…” என்றாள்.
“எனக்கு ஆள்பலமிருக்கு… அங்க கூட்டத்தில் வந்து நீ என்ன செய்வ…”
“ஆள்பலமிருந்தா என்ன… அதுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்….” வீரவசனம் பேசினாள். அவளை விட்டால் அவனை அடித்துவிடுவாள் போல இருந்தது.
“கூல்… கூல்… சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். அதுக்கு இவ்வளவு கோபப்படுவியா…”
“அதுக்கு எதுஎதில விளையாடுவீங்கனு இல்ல…” என திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.
“அதுக்குள்ள கோபமா…”
“பின்னே நீங்க சொன்னது சாதரணமா விஷயமா என்ன…”
“சாதாரணமான விஷயமில்ல… அதுக்குன முகூர்த்த நேரத்தில் போராட்டம் எல்லாம் செய்வேன்னு சொன்ன பாரு… இதெல்லாம் உனக்கு டூம்மச்சா தெரியல…”
“பின்னே நீங்க உண்மையாலும் சொன்னிங்க நினைச்சேன்…. எனக்கு என்ன தெரியும்… அது விளையாட்டுக்கு சொன்னது…”
“ஓகே… லீவ்இட்…” என்றான்.
கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். “உங்ககிட்ட பேசியதுனால நேரம் போனதே தெரியல…”
“அந்த கொஞ்ச நேரமும் சண்ட தான் போட்டு இருந்த…”
“சார்… ஒரு சின்ன திருத்தம்… நானில்ல… நாம…” என விளக்கினாள்.
“கொஞ்சம் மாத்தி சொல்லிட்டேன்… அதுக்கு மறுபடியும் சண்டைக்கு வருவியா…”
“சண்டைக்கு எல்லாம் வரல… உங்களுக்கு கொஞ்சம் புளி போட்டு விளக்கினேன்…”
“நீ புளி போட்டு விளக்கிட்டாலும்… விளங்கிடும்…” என நொடித்துக் கொண்டான்.
“மறுபடியும் ஆரம்பிக்காதிங்க… ஓகே… பைபை… ஸீ யூ லேட்டர்…” சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் போன பிறகும் அவளோடு சண்டைப் போட்டதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். விளையாட்டுக்கு சொன்னதை உண்மையாலும் சொல்றமோனு நினைச்சுகிட்டு பெரிதாக எண்ணி அவனோடு சண்டையை வளர்க்கிறா… என எண்ணி எண்ணியே தனக்குள் நகைத்தான்.
சம்ரித் தாத்தா ஆதிகேசவன் மாதாந்திர செக்கப்புக்காக அங்கேயே மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு நடுவில் இவர்கள் செல்லச்சண்டை நடந்தது. இதைக் கேள்விப்பட்டு இவர்களைக் கண்காணிக்க தனக்கு நம்பகமான வேலைக்காரையை அனுப்பி வைத்தார். இந்த கூத்துல் இவர்கள் இதையெல்லாம் கவனிக்கவில்லை.
வேலைக்காரன் சோனு இதையெல்லாம் பார்த்து விட்டு வந்து,”சாப், அவங்க ரெண்டு பேரும் காதலிகிறாங்க போல இருக்குது…” என்று கூறி அவர்களுள் நடந்த செல்லச் சண்டைகளையும் சொல்லிச் சிரித்தான்.ஆதிகேசவனும் சிரித்தார்.
அவர் யாரையும் கலந்தோசிக்காமல் சட்டென முடிவு எடுத்து சமயம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என முடிவு செய்தார். சோனுக்கு மட்டும்,”நீ எதையும் பார்க்கல… என்கிட்ட எதையம் சொல்ல… என்ன புரிஞ்சுதா…” அவன்கிட்ட சொன்னார். ஏதோ புரிந்தது போல இருக்கவும் பேசாமல் தலையாட்டினான்.
இதை அறியாமல் மீண்டும் இருவருக்கும் காதல் தொடர்ந்தது.
வஞ்சியவள் காதலை கண்டு மயங்கி…
கள்ளனும் அவள் மேல் காதல் கொள்கிறான்.
இருவரும் கடினப்பட்டு காதலை பரிமாற…
அதற்குள் இருவருக்கும் நடுவில்…
செல்ல சண்டை வர…
இதை அறியாமலே ஒற்றர் ஒருவர் சொல்ல…
மூத்தோர் இருவருக்கும் மணமுடிக்க…
திட்டம் தீட்டுகிறார்.