ATM Tamil Romantic Novels

IMG-20240823-WA0012

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8

8     கண்களில் கணிக்க முடியா பாவம்.. உடற்மொழியில் நெருங்கி வரும் வேங்கையின் வேகம்.. வார்த்தைகளில் துள்ளிவரும் அலட்சியம்..   இவை எதுக்கும் சம்பந்தமே இல்லாமல் கைகளில் கிப்ட் பார்சல் ஒன்று..   ஏற்கனவே இரவு கனவுகளில் மட்டும் அல்லாமல் பகல்நேர நினைவுகளிலும் வந்து அவளுக்கு இம்சை கொடுக்கும் இந்த இம்சை அரசனை பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது என்னவோ உண்மை?   அதிலும் அவளருகே நெருங்கி அவளின் அந்த மச்சத்தை வருடியவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் தீப்பொறி […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8 Read More »

36358CD5-3A15-4A51-8FB4-ECF7C30E7878

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நண்பனிடம் பேசியவன் கிளம்பும் முடிவை எடுத்துவிட்டான் நிமிடத்தில் ஆனால் தன்னை அணைத்து கொண்டு படுத்திருந்தவளை பார்க்கும் போது நெஞ்சம் ஒரு நிமிடம் அதிர தான் செய்தது.

ஆனால் அவளோடு மனம் இசைந்து வாழ முடியாமல் தவிப்பாக இருக்கிறதே… இந்த தவிப்பு இவளை விட்டு பிரிந்தால் ஒரு வேளை நீங்க கூடுமோ.. அவள் வாழ்க்கை தரத்திற்கு இணையான ஒரு வாழ்வை என்னால் கொடுக்க முடியாது. இந்த வசதி எல்லாம் விட்டு என்னோடு வாழ வா என அழைத்தால் வருவாளா என தெரியவில்லை.வந்தாலும் அவள் கஷ்டப்படுவாள். அதை பார்க்க.. பார்க்க.. தனக்கும் வேதனை.

இதை எல்லாம் வீட்டினரிடம் சொல்லி அனுமதி வாங்க முடியாது. நிறைய போராடினாலும் அனுமதி கிடைக்காது. அவர்கள் இது தான் இப்படி தான் என முடித்து விடுவார்கள். அதன் பிறகு அவர்களை மீற முடியாது. எனவே சொல்லாமல் செல்வதே நல்லது என முடிவு எடுத்தான்.

விடியும் வரை அவளை இறுக்கி அணைத்து படுத்திருந்தான். மறுபடியும் இப்படி அணைக்க முடியாது என நினைத்தானோ என்னவோ அவனுக்கே தெளிவில்லை. நான்கு மணி போல எழுந்து குளித்து தயாரானான். ஒரு சிறு டிராலியில் நாலு செட் டிரஸ் எடுத்து வைத்தான். அதிகம் கொண்டு போக முடியாது சந்தேகத்திற்கு இடமாகிவிடும். தேவைபடுவதை போய் வாங்கி கொள்ளலாம் என நினைத்தான். கூடவே விசா பாஸ்போர்ட் முக்கிய ஆவணங்கள் எல்லாம் எடுத்து வைத்தான்.

நிகிதா எதுவும் அறியாமல் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அவளருகே சென்று அமர்ந்தவன் குனிந்து சில முத்தங்கள் கொடுத்து..

“சாரிடா… அமுல் பேபி.. உன்னைய விட்டுட்டு போறேன். என்னால இங்க மனசு ஒத்து இருக்க முடியலை.. நமக்கு இந்த பிரிவு அவசியம் தேவை. உனக்கு ஏத்தவன் நான் இல்ல.. கொஞ்சநாள் போனால் நீயே என்னை வேணாம்னு மறந்துடுவியோ என்னவோ… நானும் உன்னை விட்டு இருப்பனா தெரியலை. உன்னை விட்டு தள்ளி போனால் தான் எனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். பார்த்து பத்திரமா இருடி.. சந்தோஷமா இருக்கனும் அமுல்பேபி” என அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி நடந்தான்.

நேராக பெரியவர்களின் அறைக்கு வந்து கதவை மெல்ல தட்டினான். அப்போதுதான் எழுந்திருந்த பாட்டி கதவை திறக்க.. சத்தத்தில் தாத்தாவும் எழுந்து விட.. பெட்டியுடன் நின்ற வீராவை…

“என்னய்யா…. இந்த நேரத்துல பெட்டியோட..” என தாத்தா கேட்க..ஒரு நிமிடம் தயங்கியவன்.. சட்டென சுதாரித்து கொண்டு..

“என் ப்ரண்ட் மேரேஜ் பெங்களூருல இரண்டு நாள் போயிட்டு வந்திடறேன்”

“சரிப்பா… நிகிதாவையும் கூட்டிட்டு போலாம்ல.. நீங்க இரண்டு பேரும் எங்கயும் போனதில்லைல..” என பாட்டி கேட்க…

“இல்ல.. அம்மாச்சி…ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம்… யாரும் பேமிலியோட வரல..”

“சரி நிகிதா எங்க.. அவகிட்ட சொல்லிட்டல…”

“அவ தூங்கறா பாட்டி.. நைட்டே சொல்லிட்டேன்.. அவள டிஸ்டர்ப் பண்ண வேணாம்..”

“எப்படி போற..”என தாத்தா கேட்க..

“ப்ளைட்ல..”

“டிரைவர வர சொல்லிட்டயா…”

“இல்ல தாத்தா..கேப் புக் பண்ணியிருக்கேன்..”

“ஏன் நைட்டே டிரைவர கிட்ட வர சொல்லி இருக்கலாம்ல..”

“இல்ல..பரவாயில்லை..”

“சரி பார்த்து போயிட்டு வா.. ” என தாத்தா சொல்ல..

தலையாட்டி விட்டு விறுவிறுவென நிற்காமல் சென்று விட்டான். கேப் வாசலில் தயாராக நிற்க ஏறி அமர்ந்தவன்.. அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை “ஊப்” என விட்டு ஆசுவாமானான்.

ஹப்பா எத்தனை கேள்வி.. சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. இதில் அவளிடம் சொல்லி இருந்தால் அவ்வளவு தான் கல்யாணத்துக்கு தானே நானும் வரேன் சொன்னாலும் சொல்லுவா..என நினைத்தவாறே.. சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தான்.

நிகிதா வீரா சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் எழுந்துவிட்டாள். அருகில் வீரா இல்லை எனவும் நேரமாக ஜாகிங் போயிட்டாங்க போல என நினைத்து கொண்டு குளித்து தயாராகி வந்தாள்.

நிகிதா கிச்சனுக்கு வரவும் பாட்டியும் பின்னோடு வந்தார்.

நிகிதா ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காய்ச்சி டீ போட்டு நான்கு கோப்பைகளில் ஊற்ற.. பாட்டி புரியாமல் பார்த்தார்.

“நிகிதா.. யாருக்கு இன்னொரு கப்” என கேட்க.. இப்போது நிகிதா புரியாமல் பாட்டியை பார்த்தாள்.

“ஏன் கீரேனீ உங்களுக்கு தாத்தாவுக்கு எனக்கு மாமாவுக்கும்..” என்றாள்.

பாட்டிக்கு இவளிடம் அவன் சொல்லி விட்டு செல்லலையா.. என லேசாக அதிர்ச்சி.. ஒருவேளை இருவருக்குள் ஏதாவது சண்டையா..என நினைத்தவர் அதை அவளிடம் கேட்கவும் செய்தார்.

“உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.. நீ அவனிடம் ஏதாவது மரியாதை குறைவா பேசினியா..”

நிகிதாவிற்கு இன்னும் விசயம் தெரியாததால் இது எல்லாம் எதுக்கு கீரேனீ கேட்கறாங்க…நேத்து மாமா ஏதோ டென்ஷன்ல இருந்தாங்க தான்…ஆனா அதுக்கு அப்புறம் தான் என்கிட்ட அவ்வளவு காதலா… ரிலாக்ஸ் ஆகி தூங்கிட்டாங்களே..

“எதுக்கு கீரேனீ கேட்கறிங்க.. அப்படி எல்லாம் எதுவும் இல்லையே..”என மறுப்பாக தலை அசைத்தாள்.

“இல்ல..உன்கிட்ட சொல்லாம எப்படி போனான்..”

அவள் முகத்தில் சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டி கொண்டது.

“எங்க போயிட்டாங்க.. எங்கிட்ட எதுவும் சொல்லயே..”

“பெங்களூரு ப்ரண்ட் கல்யாணத்துக்கு போறேனு நாலரை மணிக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனானே.. கேட்டதுக்கு உன்கிட்ட நைட்டே சொல்லிட்டேனானே.. உங்கிட்ட சொல்லலையா..”

முணுக்கென கண்களில் நீர்.

பாட்டி அவளை பார்த்து கொண்டு இருந்தவர் “எதுக்கு கண்ணு கலங்கற.. நீ தூங்கிட்டு இருந்ததால சொல்லாம போயிருக்கலாம். போன் பண்ணுவான். இல்லாட்டி மெசேஜ் ஏதாவது போட்டு இருப்பான் பாரு..”

உடனே தங்கள் அறையில் இருந்த தனது போனை பார்க்க ஓடினாள்.போனை எடுத்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. மிஸ்டு கால் மெசேஜ் எதுவும் இல்லை.. அப்படியே சோர்வாக அமர்ந்து விட்டாள்.என்னவோ பெண் மனதில் சொல்ல முடியாத அலைப்புறுதல்.

எங்கிட்ட சொல்லாம போயிருக்காங்க..நைட் நடந்த சண்டை.. அதன் பிறகான சமாதானம்… அதில் சொல்ல மறந்திருந்தா கூட.. காலைல எழுப்பி சொல்லிட்டு கிளம்பியிருக்கலாமே… ஏன் சொல்லாம போனாங்க.. சொன்னால் நானும் வரேனு சொல்வேனு நினைச்சு சொல்லாத போயிட்டாங்களா.. நீ வேணாம்னு சொன்னா நான் என்ன பிடிவாதமா பண்ண போறேன்.. சொல்லிட்டு போயிருக்கலாமே…என மனதில் பல குழப்பங்கள்..

மாமாவுக்கு அழைக்கலாமா… பெங்களூரூ ரிச் ஆகியிருப்பாங்களா… எத்தனை மணி ப்ளைட்ல போனாங்களோ தெரியலையே.. என யோசித்தவள் அவனின் எண்ணிற்கு அழைக்க.. தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக அறிவிக்கவும்.. இன்னும் போய் சேரவில்லையா…என நினைத்தவள் உடனே தனது போனில் அன்றைய பெங்களூரூ ப்ளைட் அட்டவணையை பார்க்கலானாள்.

அவன் வீட்டில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு ரீச்சாகியிருக்கலாம். என்னவோ தெரியலையே.. ஒருவேளை ப்ரண்ட்ஸ் பார்த்ததும் போனை ஆன் பண்ண மறந்துட்டாங்க போல.. கொஞ்ச நேரம் கழித்து பார்க்கலாம் என தன்னை சமாதானம் செய்து கொண்டவள்… சிறிது நேரத்தில் அழைக்க.. சுவிட்ச்ஆப் என வர..
மதியம் வரை இப்படியே சுவிட்ச்ஆப்னு வர…இவளுக்கு வெவ்வேறு சந்தேகங்கள் எழ…

உடனே அவனது வார்ட்ரோப்பை திறந்து பார்க்க.. அங்கு அவனது பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இல்லை..இல்லை பெங்களூரு செல்லவில்லை.. வேறு எங்கோ சொல்லாமல் சென்று இருக்கார்.

உடனே தன் அத்தைக்கு அழைத்தாள்.

விசாலா எடுத்ததும் “அத்தை..மாமா..உங்களுக்கு போன் பண்ணினாரா..”

“என்னடா நிகிதா கண்ணு.. மூனு நாளைக்கு முன்னாடி போன்பண்ணினான். ஏன் என்னாச்சு..”

” இல்ல ப்ரண்ட் கல்யாணத்துக்கு பெங்களூரூ போறேன்னு இங்க சொல்லிட்டு போயிருக்காரு..ஆனா பெங்களூரு போன மாதிரி தெரியல.. அதான் உங்ககிட்ட ஏதாவது சொன்னாறா..”

“இல்லையேடா கண்ணு.. எங்களுக்கு ஏதும் பண்ணலையே.. நீ பதட்டப்படாதாடா வந்துருவான்”

இவங்களுக்கு ஒன்னும் தெரியல.. இவங்கிட்டயும் சொல்லல போல.. சம்திங் ராங்..என நினைத்தவளுக்கு பதட்டம் கூடி அழுகை பொங்கி கொண்டு வர.. அறையை விட்டு படிகளில் தடதடவென இறங்கி ஓடினாள். நிகிதா இறங்கி வரும் வேகத்தை கண்டு தாத்தா பாட்டி இருவரும் என்னவோ என பதறி எழுந்து வர…

நேராக அவர்களிடம் வந்தவள் கதறி அழுது கொண்டே..

“மாமா.. பெங்களூரூ போகலை.. வேற எங்கயோ போயிட்டாங்க.. என்னை விட்டுட்டு போயிட்டாங்க..” வெடித்து கதறி அழுக…

இருவரும் அவள் சொன்னதில் திகைத்து பார்க்க..

தாத்தா”நிகிதா.. அப்படி தான சொன்னான்.. எப்படி இல்லைங்கற..”

“பொய் சொல்லிட்டு போயிருக்காங்க.. அவங்க பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இங்க இல்ல… போனையும் சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்காங்க..” அழுது கொண்டே சொல்ல.. அவள் சொன்ன விசயங்களில்பெரியவர்களும் கலங்கி போயினர்.

அப்போது பாட்டி “இது ஆடி மாசம்ல இந்த மாசத்துல யாரும் கல்யாணம் வைக்கமாட்டாங்களே.. இந்த பய நம்மள ஏமாத்திட்டானே..” என ஆதங்கப்பட..

உடனே வெங்கட்டை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

வீட்டுக்கு வந்த வெங்கட்டும் என்ன செய்வது என திகைத்து போனார். நிகிதாவோ விடாமல் அழுது கொண்டே இருக்க..மகளை பார்த்து பயந்து போனார்.

சொக்கலிங்கம் வெங்கட்டிடம் “போன் போட்டு விசாலாவையும் அவ புருஷனையும் உடனே வர சொல்லுடா” என கத்தினார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் விசாலாவும் அய்யாவும் பதறியடித்து வந்தனர்.

அதற்குள் வெங்கட் தன் செல்வாக்கை பயன்படுத்தி வீரா பெயரை சொல்லி அன்று சென்ற அனைத்து வெளிநாட்டு விமானங்களில் சார்ட் லிஸ்டில் உள்ளதா என விசாரிக்க… கனடா சென்ற ப்ளைட் பேஸஞ்சர் லிஸ்ட்ல வீராசாமி அய்யாவு என்ற பெயர் உள்ளதை கண்டு பிடித்தார். அதை கேட்டு வீட்டினர் கோபத்தில் கொதித்து போயினர்.

விசாலா தம்பதியரும் வந்துவிட.. அவர்களுக்குமே வீரா செய்தது அதிர்ச்சி தான். அந்த அதிர்ச்சியை விட நிகிதாவின் அழுகையை கண்டு பயந்து போயினர்.

அய்யாவு மூலம் வீராவின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க.. எல்லோரும் தெரியாது என சொல்ல.. ஒருத்தன் மட்டும் கல்யாணத்திற்கு முன்பே வேலைக்கும் வெளிநாடு செல்வதற்கும் எல்லா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்ததும்.. இரண்டு வருட கான்ட்ராக்டில் கனடா சென்று இருப்பதாக சொல்ல.. மொத்த குடும்பமும் நிலை குலைந்து போயினர்.

இவர்களை பார்த்ததும் சொக்கலிங்கம் “விசாலா உம்மவன்.. பண்ண காரியத்த பார்த்தியா.. எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். பொறுப்பா எல்லாம் பார்த்துகிடுவான் தான..இப்படியா விட்டுட்டு ஓடுவான்..”

அவர்கள் என்ன சொல்வார்கள் அவர்களுமே வீரா இப்படி செய்வான் என நினைத்து பார்க்கவில்லையே…தலை குனிந்து நின்றனர். அவர்கள் பேசாமல் இருக்க.. வெங்கட்டிற்கும் கோபம் தலைக்கேற…

“அக்கா பதில் சொல்லு.. வீரா உங்ககிட்ட சொல்லிட்டு தான் போனானா.. பேசாம இருந்தா என்ன அர்த்தம்..”

அய்யாவு “வீரா பொறுப்பில்லாதவன் இல்ல.. அவன் இப்படி செய்ய.. ஏதோ காரணம் இருக்கும்..” என மகனுக்காக வக்காலத்து வாங்க..

“என்ன வேணா இருக்கட்டும் அத சொல்லிட்டே போயிருக்கலாம்ல.. எதுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம ஓடனும்.. ஓடறவன் என் பொண்ண கட்டிகிடறதுக்கு முன்னாடியே ஓடி இருக்கலாம்ல…”என வெங்கட் கோபத்தில் வார்த்தைகள் விட..

“மச்சான் வார்த்தைய பார்த்து பேசு..என் மகன் ஒழுக்கம் கெட்டவன் இல்ல.. வீட்டுக்கு பெரியவர் சொன்னாரேனு அவனுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டேன்” என பதிலுக்கு திருப்பி பேச..

சொக்கலிங்கம் “பேரனுக்கு பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சா ஒன்னுக்குள்ள ஒண்ணா போயிடும். எங்களுக்கு பிறகும் குடும்பமும் உடையாம இருக்குமேனு நினைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேன்” என ஆதங்கப்பட..

இவர்களுக்குள் சண்டை போட்டு கொள்ள…

“எல்லாம் கொஞ்சம் நிறுத்தறிங்களா..” என கூச்சலிட்டாள் நிகிதா. எல்லோரும் அதிர்ந்து பார்க்க..

“என்ன ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிகிட்டு இருக்கறிங்க.. என் வாழ்க்கையே போச்சு உங்களுக்கு அதை பத்தி கவலயில்ல.. சண்டை போட்டுட்டு இருக்கறிங்க..”

“நிக்கி பேபி..” என ரோஹிணி வந்து அணைக்க.. அவரை பிடித்து தள்ளிவிட்டாள்.

வெங்கட்”நிக்கி..”என அதட்ட..

“உங்க பொண்டாட்டிய தள்ளி விடவும் இவ்வளவு கோபம் வருதா..இவங்க என்னைக்காவது வீட்ல இருந்து பொறுப்பா எங்கள வளர்த்திருங்காங்களா.. இவங்களுக்கு இவங்க ப்ரண்ட்ஸ் கிளப் இதுதான் முக்கியம்.. உங்களுக்கு உங்க பிசினஸ் தான் பெரிசா போச்சு.. ஒரு நாளாவது நாங்க சாப்பிட்டமா..படிச்சமா.. அன்பா கேட்டு இருக்கறிங்களா..”

தாத்தாவும் கீரேனியும் வரலைனா நாங்க என்னவாகியிருப்போம் நினைச்சு
பார்க்கவே பயமா இருக்கு ”

“நீங்க பொறுப்பா இருந்திருந்தா என் ப்ரண்ட்ஸால தப்பான வழிக்கு போயிருக்க மாட்டேன்.. அதனால இவங்க.. அவங்க பேரனுக்கு கட்டி வச்சிருக்க மாட்டாங்கல்ல.. ஒரு பேரண்ட்ஸா நீங்க எங்களுக்கு நியாயம் செய்யல..”

அடுத்து தாத்தா பாட்டியிடம் ” உங்க பேரன் பொறுப்பானவர் தான கட்டி வச்சிங்க… பொறுப்பானவன் இப்படி தான் பொண்டாட்டிய விட்டுட்டு ஓடுவானா..வச்சு வாழற மாதிரி இருந்தா தாலி கட்டி இருக்கனும் இல்லையா..”

அடுத்து அய்யாவுவிடம் வந்தாள். யாரையும் விட்டு வைக்கவில்லை அவளுக்கு அளவுக்கு அதிகமான கோபம் ஆத்திரம். ஒருத்தரையும் விட்டு வைக்க தயாராக இல்லை. வீரா சிக்காத கோவத்தை அனைவரிடம் காட்டி கொண்டு இருந்தாள்.

“உங்க மகனுக்கு பொண்டாட்டிகிட்ட தான் சொல்ல தான் முடியல.. பெத்தவங்கிட்டயாவது சொல்லிட்டு போகனும்னு அறிவில்ல… இப்படி ஒரு பொறுப்பில்லாதவரை தான் நம்பி என் வாழ்க்கையை ஒப்படைச்சிங்க எல்லாரும்.. இப்ப உங்களுக்கு ஒரு கஷ்டமோ நஷ்டமோ இல்லை… நான் தான என் வாழ்க்கைல அடுத்து என்ன பண்ண தெரியாம நிக்கறேன்”
சர வெடியாக வெடித்தாள்.யாரிடம் அவள் கேள்விக்கு பதிலில்லை. அவளுக்கு கேட்டது போதவில்லை. மனம் ஆறவில்லை.

நான் இவன் மேலே இத்தனை காதலாக இருக்க.. இவனுக்கு என் காதல் புரியவில்லையா.. என் நேசத்தை உணரவிலாலையா..நான் தான் இவன் மேல் பைத்தியமாக இருந்தேனா.. என நினைத்து மருகினாள்.

இப்போது தான் அவளுக்கு தெளிவாக ஒன்று புரிந்தது. என்றைக்கு என் மேல் ஆசை வந்திருக்கு.. எப்பவும் நானே தானே அவனை அணைத்திருக்கேன்.. என் ஆசையை அவனிடம் நெருங்கி பலவழிகளில் தெரியப்படுத்தினால் மட்டுமே அவன் நெருங்கியிருக்கான்.. அவனாக இதுவரை அணைத்திருக்கவில்லையே.. இப்போ மேல விழும் வேசி போல தன்னை நினைத்து அருவருத்து போனாள்.

அருவருப்பில் குமட்டி கொண்டு வர.. ஓடி சென்று வாந்தி எடுத்தாள். வாந்தி எடுக்கவும் எல்லோரும் முகத்திலும் ஆராய்ச்சி பார்வை..

வாயை கொப்பளித்து கொண்டு வந்தவளுக்கு இவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் அடிவயிறு பத்தி கொண்டு வந்தது.

“என்ன .. நீங்க நினைக்கற மாதிரி.. இங்க ஒன்னும் இல்லை..” அடிவயிறை தட்டி சொன்னவள்..

“வாழ்ந்தானே இருக்கும்… வாழவே இல்லையே.. எப்பவும் உங்க பேரன் என்ன தள்ளி தான் வச்சிருந்தாரு..” என அவனாக மனைவியாக உரிமை எடுத்து கொள்ளாத ஆத்திரத்தில் சொல்ல.. பாட்டியை தவிர மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குள் எந்த ஒட்டு உறவில்லை என நினைத்தனர். ஆனால் பாட்டியோ இல்லையே என் பேரன் இவளோடு குடும்பம் நடத்தியிருக்கானே.. இவள் என்ன இப்படி சொல்கிறான் ஏன குழப்பம் கொண்டார்.

வெங்கட்டோ “நிக்கி பேபி நீ கவலப்பாடதா பேபி.. அவன் இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் நான் இழுத்து கிட்டு வரேன்”

“எப்ப நான் வேண்டாம்னு விட்டுட்டு போனாரோ.. இனி எனக்கும் அவரு வேண்டாம்..இதுநாள் வரை அவரு மனசு ஒத்து என்னோட வாழல.. இனி அவரா வந்தாலும் என் மனசு ஏத்துக்காது. எனக்கு அவரு வேண்டாம்”

“அப்ப அவன டைவர்ஸ் பண்ணிட்டு உனக்கு வேற நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன்”

“வெங்கட்”

“தம்பி”

“மச்சான்”

என எல்லோரும் ஆட்சேபிக்க..

நிகிதாவோ டைவர்ஸ் என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து போனாள்.அவன் மேல் கோபம் தான். அவன் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளகூடாது என நினைக்கிறாள் தான். ஆனால் ஒரே நாளில் டைவர்ஸ் என்ற வார்த்தையை அவளால் ஜீரணிக்க முடியவில்லை அதுவே இன்னும் கோபத்தை கூட்ட..

“உங்களுக்கு என்னை பார்த்தா நீங்க ஆட்டி வைக்கற பொம்மை மாதிரி தெரியுதா.. வீராவ கட்டிக்க சொன்னிங்க.. இப்ப அவன் ஓடிட்டானதும்.. இன்னொருத்தனா.. உங்களுக்கு அசிங்கமா இல்லை.. நீங்க எப்பவும் எனக்கு நல்லா அப்பாவ இருக்க போறதில்லை.. இனி இந்த வீட்ல நான் இருக்கமாட்டேன்..” என்றவள்..

யாரிடமும் எதுவும் பேசாமல் மகனின் செயலை நினைத்து சத்தமின்றி அழுது கொண்டு இருந்த விசாலாவிடம் சென்றவள்..

“அத்தை நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா.. ஆனால் உங்க மருமகளா இல்ல.. உங்க தம்பி பொண்ணா..எப்பவும் எதையும் எதிர்பார்க்காம நீங்க காட்ற பாசத்துக்காக தான் உங்க வீட்டுக்கு வரேன்.. உங்க மகனை பத்தி எப்பவும் பேசகூடாது அப்படினா வரேன்.. இல்லைனா நான் எங்கயாவது லேடீஸ் ஹாஸ்டல் பார்த்துகிறேன்” என்றாள்.

விசாலா என்ன சொல்ல என தெரியாமல் தன் கணவரையும் தந்தையும் பார்க்க இருவருமே நிகிதா அறியாமல் சரி சொல் என்பதாக தலை ஆட்ட..

” நான் அவன பத்தி உன்கிட்ட பேசமாட்டேன் வாடி ராசாத்தி நம்ம வீட்டுக்கு போகலாம்” என கைபிடித்து அழைக்க.. தன் உடமைகளை எடுத்து கொண்டு நிகிதா கிளம்பிவிட்டாள்.

இருபத்தியொரு மணிநேரம் பயணத்திற்கு பிறகு கனடா சென்று இறங்கினான் வீரா..இவனை விமான நிலையத்திற்கே வந்து அவன் நண்பன் அழைத்து அவனுடைய ப்ளாட்கு அழைத்து சென்றான்.

வீராவால் கனடா குளிரை தாங்க முடியவில்லை. அவன் அதிக துணிகள் கொண்டு வர முடியாததால் அவன் கொண்டு வந்த சாதாரண ஜெர்கினால் குளிர தாங்க இயலவில்லை.

குளிருக்கு ஏதாவது கதகதப்பாய் வேண்டும் என நினைத்த நொடி..நிகிதாவின் வெம்மை கொண்ட தேகமே… அவளை இறுக்கி அணைத்தால்தான் இந்தகுளிரை அடக்கமுடியும். அவனின் எண்ணம் செல்லும் பாதையை கண்டு திகைத்தான். அவளை விட்டு பிரிந்து முழுதாக இருபத்திநாலு மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அவளை நாடும் தன் புத்தியை தானே காறி துப்பி கொண்டான்.

உறவாய் நெருங்கியவள் மனமோ வேணாம் என ஒதுக்கி செல்ல.. உறவை வெட்டி சென்றவன் மனமோ வேணும் என நினைக்க… விதி விளையாடும் விளையாட்டின் ஆரம்பம் இனி தான்..

15 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

IMG-20240823-WA0013

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 7

  7     ஆரனின் நெருக்கத்தில் பயந்து கதவோரம் சென்று தஞ்சம் கொண்டவளை விடாமல் நெருங்கி நெறித்து நின்றான் ஆரன்.   அங்கங்கள் மட்டுமல்ல அதரங்கள் கூட ஒன்றையொன்று ஒட்டி ஒட்டாத நிலை.‌..       அவளது பயந்த விழிகளை பார்த்து அசுரனுக்குள்ளோ கொண்டாட்டம்..    விரல்களால் அவள் தாடையை மெதுவாக நெருங்க.. தன்னை நெருங்கும் அந்த விரல்களை அவள் மிரட்சியோடு பார்க்க.‌. அவனோ விரல்களால் இறுக்கி அவள் தாடையை தன்னை நோக்கி இழுத்தான்.

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 7 Read More »

IMG-20240823-WA0014

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6

  6     சங்க விழாவில்..  நேரம் நெருங்க நெருங்க ஆரனால் அந்த வலியை.. மயூரி அவர்கள் வீட்டு பெண் என்ற‌ உண்மையை நிதர்சனத்தை தாங்க முடியவில்லை.   முதல் முதலாக அரும்பு விட்ட காதல்.. விரிந்து மலர்ந்து மணம் பரப்பும் முன்னால்.. காய்ந்து கருகியது போன்று உள்ளுக்குள் தகித்தது ஆரனுக்கு.   அவ்வப்போது யாரும் அறியாமல் தன் இடது பக்க நெஞ்சை நீவி கொண்டான். பேசும்போது நிறைய கவனச்சிதறல் வந்தது. தலையைக் கோதி.. உதட்டை

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6 Read More »

555BE0C8-1F01-46D7-A3C1-9CFA44D14F31

14 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

14- புயலோடு பூவுக்கென்ன மோகம்

வழக்கம் போல எழுந்த வீரா பக்கத்தில் பார்க்க நிகிதா இல்லை. என்னங்கடா இது இவ இவ்வளவு சீக்கிரமாவா எழுந்துட்டா..இருக்காதே…பெட்ல இருந்து புரண்டு கீழ விழுந்து கிடக்கிறாளோ.. என அவள் படுக்கும் பக்கம் எட்டி பார்த்தான்.அங்கும் அவள் இல்லை.

இங்க தான் எங்கயாவது இருப்பாள் என நினைத்து தோளை குலுக்கி கொண்டு.. குளியலறைக்கு சென்று தன் காலை வேலைகளை முடித்து கொண்டு ஜாகிங் செல்ல கீழே இறங்கி வந்தான்.

கிச்சனில் நிகிதாவின் குரலும் அம்மாச்சி குரலும் கேட்க…அங்கு சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கு நிகிதா பாட்டியின் மேற்பார்வையில் ஏதோ சமைத்து கொண்டு இருந்தாள். குளித்து தலைமுடி ஈரம் சொட்ட.. கிளிப் போட்டு அப்படியே விட்டு இருந்தாள். புடவை வேற கட்டி இருக்க… அவளின் பிளவுஸ் அளவிற்கே வெட்டப்பட்டு இருந்த முடியில் நீர் சொட்டி.. சொட்டி.. பிளவுஸ் நனைந்து முதுகோடு ஒட்டி அவளின் உள்ளாடை தெரிய.. சுற்றி முற்றி யாராவது வேலைக்கார்கள் இருக்கிறார்களா.. என பார்க்க.. யாரும் கண் படும் தூரத்தில் இல்லை.

இவளை என பல்லை கடித்தவன் “ஏய்.. என்ன பண்ணிட்டு இருக்க.” என அவளருகே சென்றான்.

“வாங்க மாமா .. ஜாகிங் போகலையா..” முகத்தில் தவழும் புன்னகையுடன்..

வீராவை கண்டதும் பாட்டி “நிக்கி.. இதை பாரு.. நான் தாத்தா எழுந்துட்டாரு பார்த்து விட்டு வரேன்..” என வெளியே சென்றுவிட்டார்.

போகிற பாட்டியை பார்த்து “ம்ப்ச் இவளோட ரொமான்ஸா பண்ண போறேன்” என முணுமுணுத்தான்.

“என்ன மாமா சொன்னிங்க..”

“ஒன்னுமில்லை.. எதுக்குடி இப்படி ஈரம் சொட்ட கீழ வந்த.. பின்னால எல்லாம் நனைச்சு.. ஒரு மாதிரியா இருக்கு..”

“என்ன மாமா… ஒரு மாதிரி..”என தன் முதுகை திருப்பி பார்த்தவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

எப்படி சொல்ல என தெரியாமல்.. இவர்களுக்குள் இன்னும் சாதாரண கணவன் மனைவிக்குள் இருக்கும் சகஜமான பேச்சு வரவில்லை. எட்டி அடுப்பை அணைத்தவன்..

“போடி.. போய் முதல்ல டிரையர் போட்டு காய வைத்துவிட்டு வேற பிளவுஸ் மாத்திட்டு வா”என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

வேகமாக தங்கள் அறைக்கு வந்தவள் கண்ணாடியில் பார்க்க.. அவன் சொன்னது புரிந்து மெல்லிதாக வெட்கம் வர சன்ன சிரிப்புடன் நெற்றியில் தட்டி கொண்டாள்.

அவன் சொன்னது போலவே செய்து கொண்டு கீழே வந்தவள்.. வீரா ஜாகிங் முடித்து கொண்டு வரவும் அவளே டீ போட்டு கொண்டு போய் கொடுத்தாள்.

டீயை கொடுத்து விட்டு அவன் முகம் பார்த்து கொண்டு நின்றாள். குடித்தவன் முகம் சுழித்து விட்டு டீபாய் மேலே வைத்துவிட்டான்.

ஒன்றும் சொல்லாமல் பேப்பர் படிக்க ஆரம்பித்து விட.. அந்த டீயை எடுத்து குடித்தவளின் முகம் அஷ்ட கோணாலானது. எடுத்து கொண்டு போய் சிங்கில் கொட்டியவளுக்கு தனக்கு ஒரு டீ கூட தயாரிக்க தெரியலையே என கழிவிரக்கம் கொண்டாள்.

என்ன ஆனாலும் நல்லா கத்துகிறோம்.மாமாவ அசத்தறோம் என தன்னை தேற்றி கொண்டாள்.

காலை உணவையும் பாட்டியின் மேற்பார்வையில் அந்த வீட்டின் ஆஸ்தான சமையல்காரம்மா கண்ணம்மாவின் உதவியோடு செய்து முடித்தாள்.

எல்லோருக்கும் அவளே பரிமாறவும் செய்தாள். ரொம்பவே சுமாராக இருந்த போதும்.. நிகிதா செய்தாள் என்றதிலேயே.. மகிழ்ச்சியோடு நன்றாக இருப்பதாக சொல்லியே சாப்பிட…அதிலும் வெங்கட்கு தன் பெண் பொறுப்பாக எல்லாம் செய்வதை கண்டு மனது நிறைந்து போக ஒரு பிடி சேர்த்தே உண்டார்.

ஆனால் யாருக்காக இத்தனை சிரத்தை எடுத்து செய்தாளோ.. அவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே சாப்பிட்டான். ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

எப்பவும் மேக்கப் கலையாமல்… உடை நலுங்காமல்.. இருப்பவள் வேர்த்து வடிந்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து கொண்டு பரிமாறியவளையும்.. அவள் புறக்கையில் எண்ணெய் பட்டு கொப்பளித்து இருந்ததையும் கவனித்தான்.சமையல் அவளுக்கு புதுசல்லவா.. அதான் தெரியாமல் தாளிக்கும் போது எண்ணெய்யில் வேகமாக வெங்காயத்தை கொட்டிவிட.. அவள் புறங்கையில் மணிக்கட்டுக்கு சற்று மேலே எண்ணெய் பட்டு கொப்பளித்து ரணமாக இருந்தது.

இப்பவும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு ஆபிஸ்கு கிளம்பிவிட்டான். நிகிதாவிற்கு மனம் வாடி போனது. நல்லா இல்வை என இரண்டு திட்டு திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என நினைத்தாள்.

சராசரி கணவர்களை போலவும் வேலை செல்லும் முன் யாரும் அறியாமல் சின்ன சின்ன.. சில்மிஷங்கள் செய்து சொல்லி கொண்டு செல்ல வேண்டும். வேலை முடிந்து வரும் போது பூ வாங்கி வரவேண்டும் அந்த பூவை சூடி அவன் முன் நிற்கும் போது அவன் கண்ணில் மையல் பார்வை இருக்க வேண்டும் என சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அவளுக்குள் இப்போது எல்லாம்.

வீராவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப… அவனின் எதிர்பார்ப்பை அறியாமலேயே நிகிதா தன்னை அவனின் எதிர்பார்ப்புக்குரிய மனைவியாக விரும்பியே மாறிக் கொண்டு இருக்க…

அவளின் காதலை கொண்டு அவள் அவனுடைய காதலை பெற.. அவள் அவனுடைய வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கி கொள்வதை கூட உணர்ந்து கொள்ளாமல் அந்தஸ்து பேதம்… தன் இலட்சியம் என தேவை இல்லாததை மனதில் சுமந்து கொண்டு.. அவளை புரிந்து கொண்டு வண்ணமயமாக வாழ வேண்டிய வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு அவளை வருத்தி கொண்டு இருக்கிறான்.

நிகிதாவோ காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போதும் வீரா.. வீரா.. என அவனை சுற்றியே தன் எண்ணங்களை செலுத்தினாள். அவனுக்கு முன் எழுந்து குளித்து தயாராகி.. முன்பு எல்லாம் ஒருமணி நேரம் கண்ணாடி முன்பு நின்று தன்னை அலங்கரித்து கொள்பவள்.. அவள் சிந்தை முழுக்க அவனின் தேவைகளை நிறைவேற்றும் சேவைகளே ஆக்கிரமித்து கொள்ள .. குளித்து தலைமுடியை கிளிப்பில் அடக்கி பொட்டிட்டு கொண்டு.. அவன் அன்று உடுத்த வேண்டிய உடைகளை எடுத்து வைத்து விட்டு கீழே சென்றுவிடுவாள்.

அவனுக்காக சமைப்பது… பரிமாறுவது வாஷிங் சென்று வந்த அவன் துணிகளை அவனுடைய வார்ட்ரோப்பில் வைப்பது..அவனின் பாடி லோஷன் சோப் சேவிங் கீரிம் என அவன் வழக்கமாக உபயோகிக்கும் பொருட்களை தானே பார்த்து பார்த்து வாங்கி வைப்பது என..

இரவில் அவன் அணைக்க வேண்டும் என எல்லாம் நினைக்கமாட்டாள். தன் உரிமை என நினைத்து இவளே அவனை நெருங்கி அணைத்து கொண்டு குட்டி முத்தங்கள்.. பட்டும் படாமல் இதழ் தீண்ட…. அவனின் மார்பில் மூக்கின் நுனியை உரச.. மீசையை பிடித்து இழுக்க.. கன்னத்தை கடிக்க.. என ஏதாவது செய்து அவனை தவிக்க வைப்பாள். மனம் ஒத்து நெருங்கவும் முடியாமல்.. விலகவும் முடியாமல் ஒவ்வொரு இரவையும் போராடி கடந்தான்.அவனை விலகவே விடவில்லை நிகிதா.அவளின் சின்ன சின்ன காதல் சேட்டைகள் தாளாமல் அவனும் விரும்பியோ விரும்பாமலோ அது அவனுக்கே தெரியவில்லை கூடல் கொண்டான்.

அதுக்கு பிறகு அவள் நிம்மதியாக உறங்கி விட.. இவன் தான் தேவையில்லாத பலவற்றை நினைக்க.. மனம் உறுத்த தொடங்கி விடும்.

அவள் அவனை நெருங்க.. நெருங்க.. இவனுக்கோ மூச்சு முட்டுவது போல இருந்தது.இது எல்லாம் யாராலே தன்னால தானே.. அவளை தொடாமல் தள்ளியே நிறுத்தி இருந்தால் அவளும் தன்னை விட்டு ஒதுங்கியே இருந்திருப்பாள். பிடிக்காத புருஷன் என அவளும் வெறுப்புடன் இருந்திருப்பாள்.

கோபம் தன் மீதுதான்… என்ன ஆனபோதும் அவளோடு உறவாடி இருக்ககூடாது. அதனை தொட்டு அவள் மனசில் ஆசைகளை வளர்த்து இருக்ககூடாது.

அவள் கண்களில் அவனுக்கான ரசனையும்.. அவள் செயல்களில் அவளுடைய நேச மனதும் புரிய… தன் மேலேயே கோபம் கொண்டான்.

அதுவும் அவள் கைகளில் சூட்டு காயத்தை காணவும் மனதுள் சொல்ல முடியாத வேதனை.எப்படி இருப்பாள்.. குடிக்கும் தண்ணீர் கூட அவள் இருக்கும் இடம் தேடி வரும்.தனக்காக தான் என புரிகிறது என தெரிந்த போதும் அவள் தன்னால் கஷ்டப்படுவதாக நினைத்தான்.

அன்று ஆபீஸ் வேலையை முடித்து விட்டு அதே வளாகத்தில் இருக்கும் பேக்டரிக்கு ரவுண்ட்ஸ் சென்றான். இவன் வந்தது தெரியாமல் அங்கு வேலை செய்யும் இருவர்..

“டேய் புதுசா வந்தவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா…”

“யாரைடா சொல்ற..”

“அதான் முதலாளி பொண்ணை கட்டி இருக்கானே.. அவன் தான்.. மாச சம்பளத்துக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ்… பணத்துலயே முக்குளிக்கிறான்”

“அவன் மாமனார் மட்டும் என்ன.. வேலைக்கு வந்தான். எப்படியோ முதலாளிய மயக்கி அவரு பொண்ணை கட்டி ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கு வாரிசாகிட்டான். இப்ப தன் அக்கா மவனையே கூட்டிட்டு வந்து அடுத்த வாரிசாக்கிட்டான்”

” இவனுங்களுக்கு அமைஞ்ச மாதிரி வாழ்க்க அமையனும் நமக்கு தான் இருக்குதே…” எனபொறாமையில் பெருமூச்சு விட்டனர்.

அவர்கள் பேச்சை கேட்டவனுக்கு ஆத்திரம். அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. ஊர் பேச்சு இதுவா தான இருக்கும். இது போல பேசுபவர்களை எல்லாம் அடிக்கவா முடியும். குடும்பத்தினர் கட்டாயத்திற்கு ஒத்து கொண்டு இருந்திருக்கவே கூடாது. தப்பு செய்து விட்டோம். யார் நான் சொன்னதை கேட்டார்கள். பிடிவாதமாக செய்து வைத்து விட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். நான் தான் அவமானப் படுகிறேன் என மிகுதியான கோபத்தோடு வீடு வந்தான்.

வழக்கத்திற்கு சற்று முன்பாக வீடு வந்தவனை கண்டு தாத்தா..

“வீரா சீக்கிரமே வேலை முடிந்ததா.. ” என கேட்க.. பதில் சொல்லாமல் வேகமாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்த நிகிதாவிடம் பாட்டி “வீரா வந்துட்டான்.. டீ போட்டு… ரூம்ல இருக்கான் கொண்டு போ..”

நிகிதா டீ எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். வீரா உடை கூட மாற்றாமல் கண்மூடி படுத்து இருந்தான்.

“மாமா.. டீ..”

அவளின் குரல் கேட்டும் அசையாமல் படுத்து இருந்தான்.

“மாமா டையர்டா இருக்கா.. டிரஸ் சேஞ்ச் பண்ணல.. டீ குடிச்சிட்டு படுத்துக்குங்க..”

அவளின் அக்கறை அவனின் அகத்தில் இருந்த கோபத்தை தூண்டி விட… எழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த டீ கப்பை தட்டி விட்டான்.அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.

அவனின் இந்த கோபத்தை எதிர்பார்க்காத நிகிதா அதிர்ந்து கைகால் எல்லாம் நடுங்க..ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

அவளருகே அடிப்பதை போல வேகமாக வந்தவன்.. “என்னடி எப்ப பாரு மாமா.. மாமானுட்டு.. இளையற… பிடிக்காம தான கல்யாணம் பண்ண.. இப்ப என்ன.. காதல் பொங்கி வழியுதோ.. உன்னை பார்த்தாவே ஆத்திரமா வருது.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. இங்கிருந்து போ..”

இது நாள் வரை அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக அவள் கண்டதில்லை.
அவனுடைய கோபம் கண்டு பயந்த நிகிதா அதற்கு மேல் அங்கே நிற்காமல் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தவள் யாரும் அறியாமல் கண்ணீரை துடைத்து கொண்டு கிச்சனில் புகுந்து கொண்டாள்.

அவள் சென்ற பிறகு கோபத்தை கட்டுபடுத்த முடியாமல்.. சோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.

இரவு உணவுக்கும் வீரா கீழே வரவில்லை. நிகிதா சென்று அழைக்க.. அவளை முறைத்த முறைப்பில்… எதற்கு இந்த கோபம் என குழம்பி போய் அமைதியாக வந்துவிட்டாள். தூங்கிவிட்டதாக குடும்பத்தினரிடம் சொல்லி சமாளித்துவிட்டாள்.

நிகிதாவும் ஏதோ சாப்பிட்டு விட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். இப்போதும் சோபாவில் தலையை தாங்கி கொண்டு தான் அமர்ந்து இருந்தான்.

உணவை அங்கிருந்த டீப்பாய் மேல் வைத்தவள்.. அவனருகே செல்ல பயந்து கொண்டு சற்றே தள்ளி நின்றே…

“மாமா.. சாப்பிடறிங்களா..எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் மெதுவாக..

நிமிர்ந்து உணவை பார்த்தான் அவளை பார்த்தான். மீண்டும் கண்களை மூடி கொண்டான்.

நல்ல சாப்பாடு தான் வேளைக்கு ஒரு தினுசு தான். ஆனால் அவனாக சமைத்த உணவு சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவு அவனுக்கு அமிர்தமாக இருந்தது . ஆனால் இங்கு வந்த பிறகு சுவையான உணவாக இருந்தும் அவனுக்கு அது தொண்டையில் சிக்குவது போல தான் இருந்தது.

அவன் சாப்பிடுவதற்காக சற்று நேரம் நின்று பார்த்தவள்அவனின் அமைதி மேலும் பயத்தை கூட்ட.. புடவையை கூட மாற்றாமல் போய் படுத்து கொண்டாள்.

அவன் இவ்வளவு நாளாக மனதுள் போட்டு அழுத்தி வைத்திருந்தது எல்லாம் வெடித்து சிதற காத்திருக்கும் எரிமலையாக பொங்கி கொண்டு இருக்க…

சில மணிநேரம் கடந்தும் அவன் அதே நிலையிலேயே இருக்க..நிகிதா அவனையே பார்த்து கொண்டு உறங்காமல் படுத்து இருந்தவள்..எழுந்து அமர்ந்து மெல்ல…

“சாப்பிடலைனாலும் பரவாலை.. வந்து தூங்குங்க மாமா…” என அழைக்க…

அவ்வளவு தான் அவளுடைய அழைப்பில் உள்ளே புகைந்து கொண்டு எரிமலை வெடித்து சிதற…வேகமாக அவளருகே வந்தவன்.. குனிந்து அவளுடைம முடியை கொத்தாக பிடித்து இழுத்து..

“என்னடி இப்ப கட்டில்ல கட்டி பிடிச்சு உருளனுமா…இப்ப உனக்கு அது தான தேவை.. உன்னால என் நிம்மதி போச்சு.. சந்தோஷம் போச்சு.. எல்லாமே போச்சு.. உனக்கு உன் சுகம் தான் முக்கியம்..என்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டினேனோ.. அன்னைக்கே என் வாழ்க்கையே போச்சு..” என்றவன் அவளை படுக்கையில் தள்ளி விட்டு தன் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு.. அவளுடைய புடவையை வெறி வந்தவன் போல பிடித்து இழுக்க…

பயத்தில் நடுக்கத்துடன் நிகிதா”மாமா.. பின் குத்தி… இருக்கேன்…. புடவை… கிழிஞ்சிடும்..”

“ஆமாண்டி எனக்கு வாழ்க்கையே போச்சு.. உனக்கு சேல தான் முக்கியமா..” என்று அவளை ஆவேசமாக ஆக்ரமித்தான். ஏற்கனவே நடுங்கி கொண்டு இருந்தவள் அவனில் ஆவேசத்தில் உடல் தூக்கி போட.. அழுகை வெடிக்க..

“மாமா.. முடியல..விட்டுருங்க.. மாமா..”என அவனிடம் கெஞ்ச.. முதலில் அவனின் ஆவேசத்தில் அவளை கவனிக்கவில்லை. அவளை பேச விடாமல் அவளின் இதழை வன்மையாக இழுத்து கடித்து கொண்டு இருந்தவன் அவளின் எச்சில் நீரில் அவளுடைய கண்ணீரின் உவர்ப்பு சுவை கலக்கவும் தான். ..

தங்கள் நிலை உணர்ந்தான். எழுந்து அமர்ந்தவன் தலையில் அடித்து கொண்டான். தானா இப்படி என..

அவன் அவ்வாறு வருந்துவது பிடிக்காமல்.. பின்னால் அவனின் வெற்று முதுகில் தோள் சாய்ந்தவள்..

“நீங்க ஒன்னும் பீல் பண்ணாதிங்க மாமா.. எனக்கு ஒன்னும் இல்லை. கொஞ்சம் பயமா இருந்துச்சு.. அதான் அழுகை வந்திடுச்சு..”

அவளின் வார்த்தைகள் மனதை அறுக்க.. திரும்பி அவளை அணைத்து தட்டி கொடுத்து “தூங்கு ” என்றான்.

அவள் உடனே “நீங்களும் வந்து படுங்க..”என்கவும்.. அவனுக்கு இநத நேரத்திலும் லேசாக சிரிப்பு வந்திட.. அவளின் எண்ணம் புரிந்தவனாக.. அணைத்து கொண்டு படுத்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் வழக்காமான தன் காதல் சேட்டைகளை அரங்கேற்ற.. “மாமா.. வீரா மாமா..”

சீலீங் பேனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தவன் அவளை சட்டை செய்யவில்லை.

“யோவ் வீரா மச்சான்..” என அவனை வம்பிழுக்க..

“அடிங் உனக்கு கொழுப்பாடி” என்றவனிடம்

“எனக்கு தூக்கம் வரலை” என ராகமிட..

அதற்கு மேல் அவளை அவனால் தள்ளி வைக்க முடியவில்லை. அவளை கட்டி அணைத்து இதழ் கவ்வி உயிரமுதம் பருக…அவனின் கைகளோ அவளின் மேனி எங்கும் உலாவ.. அதற்கு தடையாக இருந்த ஆடைகளை நீக்கும் பணியை செவ்வன செய்தான். அவளின் உடலெங்கும் இதழால் உலா வர.. அவள் உடலின் ரோஜா இதழின் மென்மை அவனை பித்தனாக்கியது. அணைப்பை இறுக்கினால் கூட அவளின் பாலில் கலந்த ரோஜா நிற தேகம் கன்றி சிவந்து விடுமோ.. என கவலை கொண்டு பூவையை கசக்காமல் மென்மையாக கைகளில் தாங்கி “அமுல் பேபி.. அமுல் பேபி..” என கொஞ்ச.. அவளோ “வீரா மாமா.. வீரா மாமா..” என பிதற்ற..

அவனின் இளமையோ கட்டுகடங்காமல் துடிக்க… மென்மையை விட்டு கொஞ்சம் வன்மையாக அவளை ஆட்கொள்ள.. முதலில் மிரண்டவள் தன் ஆணின் விருப்பம் அதுவென அறிந்து ஒத்திசைக்க.. தன் பெண்ணவளின் இசைவு அவனை கிறங்க வைக்க… காதல் போதை தலைக்கு ஏற… அவன் கடல் அலையாய் ஆர்பரிக்க.. அலையின் சீற்றம் தாங்காமல் துடித்து துவண்டு போனாள். அங்கு அழகான நிறைவான கூடல் நடந்தேறியது.அவளோ களிப்பிலும்.. களைப்பிலும் உறங்கி விட..

இவனோ உறக்கம் தொலைத்தான். ஒருவேளை அவள் அமைதியாக தூங்கி இருந்தால் அவனும் நிம்மதியாக தூங்கி இருந்திருப்பான். எல்லா புதுமண தம்பதிகள் எப்படி இருப்பாரோ அதை தான் நிகிதா வீராவிடமும் எதிர்பார்க்கிறாள் என வீராவுக்கு புரிய தான் செய்கிறது. அதற்காக அவள் அவனிடம் செய்யும் காதல் சேட்டைகளும் அவனுக்கு மேலும் ஒரு அழுத்தத்தை தான் கொடுத்தது. அவளோடு கூடி குழாவும் போது உணர்ச்சியின் பிடியில் இருப்பவன்.. எல்லாம் முடிந்து அவள் உறங்கி விட… இவனின் கொள்கைகள் இலட்சியம் எல்லாம் விழித்து கொள்ள.. இவன் தான் உறக்கம் தொலைத்து தவித்து போனான்.

இன்று இரவும் உறக்கம் தொலைத்தவன் வெகு நேரம் யோசித்து இனியும் இது போல இருக்கமுடியாது என தன் நண்பனுக்கு அழைத்து பேசியவன்.. உறங்காமல் விடியலுக்காக காத்திருந்தவன் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிட்டான் நிகிதாவை விட்டு அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல்..

வரம் வரும் தேவதையே..

வாழ்வாக வந்திட…

வாழ்வின் வசந்தமே

தன் தேவதையிடம் இருக்க..

கானல் நீரை வசந்தமே என..

தேவதையை புறக்கணித்து..

வாழ்வை துறந்து..

கிட்டாத வசந்தத்தை தேடி

இருக்கும் இடத்தை விட்டு..

இல்லாத இடம் தேடி செல்கிறான்

கிட்டாது என உணரும் போது

காலம் இவனுக்கு வைத்திருக்கும்

கோலம் என்னவோ..

14 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

26071999-C143-4E3D-B726-B4764668FF53

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

ரூபேஷ் குளியலறை கதவை பலமாக இடித்து கொண்டு இருந்தான்.நிகிதா கதவையே உடல் நடுங்க பார்த்து கொண்டு இருந்தாள். வாயோ வீரா மாமா .. வீரா மாமா.. என ஜபம் போல சொல்லி கொண்டு இருக்க… அறையின் கதவு படபடவென தட்டப்பட…

“ஷீட்.. எவன் டா அது..” என வேகமாக சென்று கதவை திறக்க.. வீரா புயலாக உள்ளே வந்தான். ரூம் சர்வீஸாக இருக்கும் என நினைத்து கதவை திறந்தவன்.. வீராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே வந்தவனின் விழிகள் ஒரு நொடி அறையை சுற்றி வர.. நிகிதா அங்கு இல்லை எனவும் அடித்து துவைத்து எடுத்துவிட்டான்.

முதலில் வீராவை எதிர்த்த ரூபேஷால் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க.. முடியவில்லை. சொகுசான வாழ்க்கையினால் விளைந்த உடல்.. போதை என ..பலவீனமான உடல் ருபேஷ்.. உழைத்து உரம்பேறிய உடல் கொண்ட வீராவின் அடியால் சுருண்டு விழுந்தான்.

கீழே விழுந்த ரூபேஷை நிகிதா எங்கே என கேட்டு நாலு எத்து எத்த.. அவனால் வாயை திறந்து கூட பேசமுடியவில்லை. குளியலறை நோக்கி கை நீட்ட..

வீரா சென்று கதவை தட்ட.. மறுபடியும் கதவு தட்டப்பட.. பயத்தில் கதவை திறக்கவில்லை நிகிதா. வீரா கதவை தட்டியது.. ரூபேஷை அடித்தது.. அவன் அடி தாங்காமல் அலறியது எதுவும் அவள் உணரவில்லை. பயத்தில் உறைந்து போயிருந்தாள்.

“நிகிதா..நிகிதா.. கதவை திற..”என.வீராவின் குரல் கேட்கவும் தான் சுரணை வந்தது. படாரென கதவை திறந்து கொண்டு ஓடி வந்து வீராவை அணைத்து கொண்டு கதறி அழுதாள்.

நிகிதாவை பார்த்தும் ரூபேஷ் மேல் ஆத்திரம் இன்னும் அதிகமாகியது வீராவிற்கு… நிகிதாவின் தோள்பட்டடையில் நககீறல்கள் அதில் இரத்தம் கசிய… கையை பிடித்து இழுத்ததில் கன்றி போய்.. அவளுடைய பால் நிற தேகத்தில் அவை எல்லாம் அதிக சிவப்புடன் தெரிய… அழுது கரைந்ததால் முகம் எல்லாம் கோவை பழமாக…

வீரா நிகிதாவை கை அணைப்பில் வைத்து கொண்டே அவனை மீண்டும் புரட்டி எடுத்தான். நிகிதா “மாமா…. போ..லாம்..” எனவும் தான் அவனை விட்டான்.

“உன் டாப்ஸ் எங்க..”என்றான்.

கட்டிலுக்கு பின்புறம் கைகாட்ட..அதை எடுத்து வந்து அவளை போட வைத்து அவளை அழைத்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

வீடு வரும் வரை இருவரிடமும் பேச்சில்லை. வீராவோ கோபத்தின் உச்சத்தில்… நிகிதாவோ தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பிவிட்டோம் என நம்பமுடியாமல்.. அச்சத்தில் கார் இருக்கையில் ஒடுங்கி போய் உட்கார்ந்து இருந்தாள். அவ்வாறு அவளை பார்க்க.. பார்க்க… அவள் மேல் கோபம் அதிகமானது.

வீடு வந்தும் இறங்காமல் இருந்தவளை..”நிகிதா.. இறங்கு..” என சத்தமிட.. தூக்கி வாரி போட.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவளை கைபிடித்து உள்ளே இழுத்து வந்தவன் பெரியவர்களை பார்த்ததும் நிதானமானான்.

“நீயே கூட்டிட்டு வந்துடட்டியா.. வீரா.. “என்ற தாத்தா.. நிகிதாவிடம் “போன் பண்ணியிருந்தா டிரைவரை அனுப்பி இருப்பேன்ல..”என்று சொன்னவர் அப்போது நிகிதாவை கவனித்தனர்.

“ஏய் நிகிதா.. என்னாச்சு” என்ற பாட்டியின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தாள். என்ன என்று சொல்வது..

“இல்ல எனக்கு போன் பண்ணினா.. நான் போவதற்குள்.. ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எனக்காக காத்திருக்கும் போது ஒரு தெரு நாய் கடிக்க
வந்திருக்கு..பயந்து ஓடி வரும் போது கீழ விழுந்திட்டா..” என்று ஏதோ கூறி சமாளித்தான்.

பெரியவர்களுக்கு தெரிந்தால் தாங்கமாட்டார்கள் பாவம் என மறைத்துவிட்டான்.

“எதுக்கு வெளிய எல்லாம் வந்து நிக்கற.. காலம் கெட்டு கிடக்கு..வீராவ வந்துட்டு கால் பண்ண சொல்லி இருக்கலாம்ல..”என்ற பாட்டியிடம்..

“அம்மாச்சி அவளே பயந்து போய் இருக்கா..”

“விடு மங்களா.. காலைல பேசிக்கலாம்.சரி போய் படுங்க..”என்றார் தாத்தா.

அவளை மறுபடியும் இழுத்து கொண்டு அறைக்கு வந்தவன்.. வந்த வேகத்தில் அவளை அங்கிருந்த சோபாவில் தள்ளினான்.

“இந்த சகவாசத்த எல்லாம் விட்டு ஒழினு சொன்னேன்ல.. கேட்டியா.. இப்ப என்னாச்சு பார்த்தியா..” என்று சீறி கொண்டு அடிக்க கையை ஓங்கி கொண்டு வர…

அவனின் கோபத்தில் இன்னும் பயந்து நடுங்கி போய்.. அவன் அடிக்கும் முன் அவன் கையை பிடித்துக்கொண்டு..

“இல்ல மாமா… அந்த ரூபேஷ் தான் ப்ரண்ட்ஸ எல்லாம் மறந்துட்டியானு கேட்டு அதை இதையும் சொல்லி.. நான் கில்டியா பீல் பண்ற மாதிரி பேசினான். ப்ரண்ட்ஸ பார்த்தும் ரொம்ப நாளாச்சுனு தான் போனேன்”

“பட்.. அவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல..”

“சரி…. அவனோட ஹோட்டல் ரூம் வரைக்கும் எப்படி போன..” என கேட்க…

தன்னை சந்தேகப்படறானோ என கவலை கொண்டவள்.. மறுப்பாக தலை அசைத்தவாறு..

தயக்கத்துடன்..”என்னை ட்ரிங்ஸ் எடுத்துக்க சொன்னான்.” அவனின் கோபப்பார்வை கண்டு பேச்சு தடை பட…எச்சில் கூட்டி விழுங்கினாள். ..

பின் அவசரமாக …”இல்ல நான் எடுத்துக்கல.. அவன் போர்ஷ் பண்ணினான் தான்” என நடந்த அனைத்தையும் சொன்னாள். ஹோட்டல் அறையில் ரூபேஷ் நடந்து கொண்டதை சொல்ல முடியாமல் அழுகை வர திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தவள் அவனை அணைத்து கொண்டு கதறினாள்

இவளின் நண்பர்களால் தான் இவளுக்கு இந்த கெட்ட பழக்கம்.. அதனால் வீட்டினர் எடுத்த நடவடிக்கை…தங்கள் வாழ்க்கை சிக்கலானது என்று வீராவுக்கு கோபம் வந்த போதும்…

அவள் கதறுவதை பார்த்தவனுக்கு மனது வலிக்கவே செய்தது.என்ன இருந்தாலும் ரத்த உறவல்லவா.. சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள்…

தன்னை போலவே அவன் கைகள் அவளை அணைத்திருந்தன. தேம்பி தேம்பி அழுபவளிடம் கோபத்தை காட்ட மனம் வராமல் ஆறுதல் படுத்தினான்.

“நிகிதா.. சொல்றத கேளு.. அழுகாத..”என்றவன் அவளை அழைத்து வந்து படுக்க வைத்து விட்டு பார்மல் டிரஸ்ஸில் இருந்தவன் ப்ராஷாகி வரலாம் என செல்ல… கையை பிடித்து நிறுத்தினாள்.

“என்னடி..” என்றான் திரும்பி பார்த்து..

“எனக்கு பயமா இருக்கு..என் கூடவே இருங்க மாமா..”

“ப்ராஷாகிட்டு வரேன் இரு”கையை விடுவித்து கொண்டு சென்றவன் சில நிமிடங்களில் வழக்கமான இரவு உடையில் வந்து படுத்தான்.

நிகிதா உடலை குறுக்கி கொண்டு உடல் நடுங்க விசும்பியபடியே இருக்க.. பார்த்திருந்த வீராவுக்கு மனம் தாளவில்லை. தன் மாமனின் செல்லமகள். அவனுக்கு தெரிந்து இவள் இப்படி அழுது பார்த்ததில்லை. அவளின் அருகே நகர்ந்து நெருங்கி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டு கொண்டான். வஜ்ரம் பாய்ந்த தேக்கு போன்ற அவனுடைய அகன்ற.. வாட்ட சாட்டமான உடம்பில் அவள் ஒடிசலான.. பூவையான தேகம் அல்லி கொடி போல படர்ந்திருந்தது.

அவன் அள்ளி தன் மேல் போட்டு கொண்டதும் அவனின் மார்ப்புக்கு மத்தியில் அழுத்தமாக முகம் புதைத்து மேலும் விசும்ப… அவனோ அவள் முதுகை நீவி ஆறுதல் படுத்த முனைய.. அவனின் ஆறுதல் போதாது என்னும் விதமாக அவன் கழுத்தை கட்டி கொண்டு இறுக்கி அணைத்தாள். அவனோ மல்லாக்க படுத்து இருக்க.. அவனின் நேர் மேலே கவிழ்ந்து படுத்து இருந்தவளின் அணைப்பு அவனை தடுமாற வைக்க…

“நிகிதா.. ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக..

முடியாது எனும் விதமாக தலையாட்டி அவனுடைய கை இல்லாத டீசர்டை மேலே சுருட்டி விட்டு.. அவளுக்கு மிகவும் பிடித்த அவனுடைய மார்பு ரோமங்களை முகம் கொண்டு உரச.. “என் வீரா மாமா.. என் வீரா மாமா…” என புலம்ப… ஒரோர் வீரா மாமாவிற்கும் மார்பில் ஒரு செல்லகடி கடிக்க… கண் திறக்காத நாய் குட்டியாக அவன் மார்ப்பில் முட்டி மோதினாள். அவன் மார்ப்பே அவள் காதல் ஆட்சி செய்யும் இடமானது. அவனின் அவஸ்தையின் அளவு ஜெட் வேகத்தில் எகிறியது. இனி அவளை தீண்டாமல் முடியாது என்னும் நிலையில் அவன்.. உண்மையில் அந்த நேரத்தில் அவளுக்கும் அவனின் சாதாரண அணைப்பு.. ஆறுதல் வார்த்தைகள்.. பற்றவில்லை.அதற்கு மீறிய நெருக்கத்தை ஆறுதலுக்காக தேடினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக..

“நீ போய் நைட் டிரஸ் போட்டு வந்து படு.. ஜீன்ஸோடு படுக்காத.. போ..” என தன்னிடம் இருந்து விலக்க பார்க்க…

அவள் நகரவில்லை. அவனின் வார்த்தைகளுக்கு அவளின் மறுப்புகள் எல்லாம் மௌனமொழியாகவே இருக்க…அவளை தன்னில் இருந்து பிரிக்க பார்க்க.. இன்னும் இன்னும் பசையாக ஒட்டினாள்.

அவனின் நிலையோ மிக மோசம்.. பேரலையாக எழும்பும் உணர்வுகளை தன்னுள் அடக்க.. அடக்க.. நீரில் அழுந்த மறுக்கும் பந்து போல எதிர் விசையில் எகிறி கொண்டு மேலே கிளம்பியது.

அவளின் தேவையை உணர்ந்தவனுக்கு அதை பூர்த்தி செய்ய.. ஆசை கிளர்ந்த போதும்…அவனின் வரட்டு பிடிவாதமும்.. அவன் நினைத்து கொண்டு இருக்கும் பொருந்தாத வாழ்க்கை என்ற எண்ணமும் தடையாக வந்து நின்றன.

இரு மனங்கள் கூடிய சங்கமம் என்பது எந்த ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறியும் என்ற நியதியை அறியாமல் அழகாக.. அன்பாக. ஆளவேண்டியவளை தள்ளி நிறுத்தப் பார்க்க.. அவன் தடைகள் எல்லாம் உடைப்பெடுக்கும் நிலையை உருவாக்கி கொண்டு இருந்தாள்.

அவன் மார்ப்பை சுற்றி சுற்றி விடாது முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள் நங்கை. அவன் பாதத்தின் மேல் தன் பாதத்தை வைத்து…அவன் தோள்களில் தன் கைகளை ஊன்றி.. எக்கி எழுந்து.. அவனின் இதழை தன் இதழால் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் மாற்றி மாற்றி உரசி உரசியே சிக்கிமுக்கி கல்லாக அவனுள் காதல் தீயை பற்ற வைத்தாள்.

அவனின் பிடிவாதங்களை எல்லாம் அவளின் பிடித்தம் ஜெயிக்க.. சிறு சிறு அலையாக எழுந்த மோகங்கள் எல்லாம் ஆழி பேரலையாக எழுச்சி பெற…

தன் மேல் கிடந்தவளை புரட்டி கீழே போட்டு.. அவள் மேல் இவன் படர… நிகிதாவின் நயனங்களில் காதல் மின்ன.. மென்னகை பூக்க.. நம்ப முடியாமல் “மாமா” எதிர்பார்ப்போடு கணவனை பார்க்க…

“சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டல்ல.. இனி வரும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.. பார்த்துக்கோ..” என்றான் குறும்பு புன்னைகையுடன்..

“ம்ம்ம்.. ஹாஹாங்.. அதையும் பார்க்கலாம்”என்று அவனை மேலும் உசுப்பேத்தி விட..

“உன் கொழுப்பை எல்லாம் இன்னைக்கு அடக்கறேன்டி” என்றான் உல்லாசமாக..

“வீராச்சாமி மச்சானுக்கு ஒருவழியாக வீரம் வந்துடுச்சு போல..” என்றாள் உதட்டை சுழித்து நக்கலாக..

அவளின் பேச்சின் நோக்கம்அறிந்தவனுக்கு மனதை மயிலிறாக வருட..

“திமிரா பேசற இந்த வாயை..” என்றவன் அவள் இதழ்களை இழுத்து கவ்வி சுவைக்க..

இதழ் சிந்தும் தேனை பருக… பருக..வயாகாரா ஜீஸ் குடித்தது போல கிறங்கி போனான்.

அடுத்து அவளை ஆவேசமாக ஆலிங்கனம் செய்தான். அன்று போதையில் அரங்கேறியது வீராவுக்கு எதுவும் நினைவில் இல்லை. இன்று சுய நினைவோடு தன் இல்லாளின் பேரழகை காண… இப்போது மது அருந்தாமலேயே போதை தலைக்கு ஏற… கிறுகிறுத்து போக…

அவன் ஆவேசமாகவே காதல் போர் தொடுக்க… எதிர்கொள்ள முடியாமல் திணறினாள். அவள் திணறும் போது எல்லாம் தலை கோதி.. முத்தம் வைத்து..

“அமுல் பேபி..அமுல் பேபி..” என கொஞ்ச..

“மாமா.. வீரா மாமா..”என கிள்ளையாக மிழற்ற…

இருவருக்குமே வாழ்நாளின் வசந்தமாக.. நிறைவான கூடலாக.. அரங்கேறியது.

அவன் காதலை அவன் உணர்ந்தானோ இல்லையோ.. நிகிதா உணர்ந்தாள். உணர வைத்து இருந்தான் நிகிதாவின் ஒவ்வொரு அணுவிலும் பதியுமாறு…

காதல் போதை தெளிய.. தெளிய.. மீண்டும் மீண்டும் மனைவியை நாடினான். வேண்டாம் என ஒதுங்கியவன் தான் இன்று வேண்டும்.. வேண்டும் என அடம்பிடித்து தனக்கு தேவையானதை நடத்தி கொண்டான்.

ஒரு கட்டத்தில் நிகிதா சோர்ந்து மயங்கும் நிலைக்கு வரவும் தான் விடுவித்தான். ரூபேஷினால் ஏற்பட்ட அதிர்ச்சி.. இரவு உணவு எடுத்து கொள்ளாதது.. வீராவின் ஆவேசமான ஆலிங்கனம்.. எல்லாம் அவளுக்கு லேசான மயக்கம் ஏற்பட..

தங்கள் அறையில் மினி ப்ரிட்ஜில் இருந்த ஜீஸை எடுத்து வந்து அவளுக்கு புகட்டி.. அவனும் சாப்பிடவில்லையே.. இப்போது தான் பசி தெரிய.. தானும் கொஞ்சம் குடித்துவிட்டு.. அவளை தன் மேல் சாய்த்து தட்டி கொடுத்து தூங்க வைத்து.. தானும் தூங்கி போனான்.

மையல் கொண்டு நங்கை பேதலிக்க..

மோகம் கொண்ட நாயகன் கிறங்க..

மன்மத தேசத்தில்..மயங்கும் பொழுதில்..

காதல் மழையில் நனைந்து…

மோக கடலில் மூழ்கி…

தாப அலை அடித்து செல்ல..

தீராத தாகம் தணிய… தணிந்து

உருகி கரைந்து போயினர்..

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

IMG-20240823-WA0015

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5

  5     ஆரனின் மயூபேபி.. இந்திராக்ஷி ஆனது எப்படி??     மயூ பேபி.. மயூ பேபி என்று குழைந்து குழைந்து அழைத்தவன், இன்று இந்திராக்ஷி என்று மானைக் கண்ட வேங்கையாக கண்களில் வெறியுடன் அழைக்கக் காரணம் என்ன??     மறுநாள் மதியம் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்றது. அதன் பின் தான் அனர்த்தம் ஆனாது.       அங்கே செந்தூராரின் வீட்டில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், மயூரியை தெளிய

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5 Read More »

IMG-20240821-WA0010

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 4

4     தான் செந்தூரார் குரூப்ஸூக்கு எதிராக டீலிங் எடுத்த கப்பலின் பாகங்களை உடைத்தெடுக்க போதுமான ஆட்கள் வசதி எதுவும் தற்போது ஆரனிடம் இல்லை.   இவன் இம் என்று சொன்னால் ஒரு படையே மும்பைலில் இருந்து வர காத்திருக்க.. இங்கே திருச்செந்தூரில் சட்டென்று வெளியாட்களை யாரும் உள்ளே அனுமதித்து விடமாட்டார்கள். அவரவர்களுக்கு என்று தனித்தனியே அமைப்புகளும் சங்கங்களும் இருக்கிறது.  இவன் ஏற்கனவே அதிலும் ஆன்லைன் மூலமாகவே உறுப்பினராக சேர்ந்து இருந்தான். பத்தோடு பதினொன்று அத்தோடு

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 4 Read More »

IMG-20240821-WA0009

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 3

3       ‘ஆடிட்டர் வரதராஜன்!!’ அந்த போர்டை பார்த்தப்படி தான் கேட்டைத் தாண்டி உள்ளே கொண்டு நிறுத்தினாள் தனது வெஸ்பாவை மயூரி. வரதராஜனிடம்தான் ஜூனியர் ஆடிட்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் இவள்.   தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி இந்த வட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்களுக்கு எல்லாம் ஆடிட்டிங் என்றால் முதல் சாய்ஸ் வரதராஜன் தான்!!     வழக்கம் போல அவரது ஜூனியர் நான்கைந்து பேர் அங்கு அமர்ந்திருக்க மயூரி அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 3 Read More »

7F095FA0-6F54-4AE5-97B2-B57A9C8D7E48

11 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

11- புயலோடு பூவுக்கென்ன மோகம்

காஞ்சிபுரம் போயிட்டு வந்ததில் இருந்து நிகிதா வீராவிடம் தன் காதலை தடம் பதிக்கும் வேகம் கூடியது. அது வீராவிற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க.. பிரிய வேண்டும் என்ற முடிவை துரிதப்படுத்தினான்.

ஏற்கனவே இவர்களுக்குள் நடந்த கூடலுக்கு பிறகு விலகி செல்லும் முடிவை செயல்படுத்த முயற்சித்தான்.நிகிதாவிடம் பேசி புரிய வைக்கலாம் என்றால் அவளோ புரிந்து கொள்ளாமல் இம்சை பண்ணுகிறாள் என கோபம் வந்தது.

இவர்கள் வீரா வீட்டிற்கு சென்ற போது.. நிகிதாவும் வருவாள் என எதிர்பார்க்காத அய்யாவு விசாலாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. விசாலா மருமகளை பார்த்ததும்…

“வாடா.. நிகிதா கண்ணு..” என கைபிடித்து உள்ளே அழைத்து செல்ல.. இவனை வாவென என ஒரு தலையசைப்பு கூட இல்லை. எப்போது இவன் சென்றாலும் இவனுக்கு வரவேற்பும் உபசரிப்பும் தடபுடலாக தான் இருக்கும்.

இன்று நிகிதாவை எதிர்பாராமல் பார்த்ததும் வீராவை கவனிக்க மறந்தார் விசாலா..வீராவின் முகம் சுண்டிவிட்டது. மகனை கவனித்த அய்யாவு தான் “வாய்யா.”என தோளில் தட்டி அழைக்கவும் முகத்தை சீராக்கி கொண்டான்.

அன்று முழுவதும் நிகிதா அத்தை அத்தை என விசாலாவின் பின்னாலேயே சுற்ற..ஏற்கனவே தம்பி மகளாக இருக்கும் போதே நிகிதாவை அவ்வளவு பிடிக்கும். மருமகளாக ஆன பின் அதுவும் இப்போ தன்னிடம் ஒட்டி கொள்ளவும் ரொம்பவே பிடித்துபோனது.

பொன்னியும் வந்திட.. அவளுடைய ஒன்றரை வயது மகனை ஆசையாக தூக்கி வைத்துக்கொண்டு விளையாடினாள். அவ்வப்போது வீராவை யாரும் அறியாமல் கள்ளப்பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் அய்யாவுவும் வீராவும் தறிப்பட்டறைக்கு சென்றுவிட…

இவளையே கவனித்து கொண்டு இருந்த பொன்னிக்கு நிகிதா மனம் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டாள்.

ஆண்கள் வெளியே செல்லவும் பெண்கள் மாநாடு தொடங்கியது.

“ஓய்… என்ன என் தம்பிய சைட் அடிக்கறியா..”

சேட்டை செய்து தாயிடம் மாட்டி கொண்ட குழந்தையாக முழித்தாள். பதறி போய் பயந்து ஏதாவது சொல்வார்களா.. என பார்க்க..

அவளின் பதட்டத்தை பார்த்து ” ஏய் நிகிதா சும்மா கிண்டல் தான் பண்ணினேன். நான் கூட இவளுக்கு என் தம்பிய பிடிக்கலையானு கோபப்பட்டு இருக்கேன். உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு..”

விசாலா நிகிதாவிடம்”நீயும் சீக்கிரம் ஒரு பேரனோ… பேத்தியோ பெத்து குடு கண்ணு” ஆசையாக கேட்க…

பொன்னியும் “ஆமாமாம் சீக்கிரமே பெத்துக்கோ… இப்ப வேணாம்னு ஏதாவது தள்ளி வைச்சிருங்கிங்களா..” என கேட்க..

நிகிதாவோ முதலுக்கே மோசம் இது எங்க தள்ளி வைக்க…என ஏக்க பெருமூச்சு விட்டாள்.

“என்னடியம்மா..பெருமூச்சு பலமா இருக்கு.. அப்படி தானா.. நான் வேணா வீராகிட்ட பேசவா..”

“ஐயோ..அக்கா அப்படி எல்லாம் இல்லை.. அவர்கிட்ட ஒன்னும் பேச வேணாம்”

“ஓஹோ.. ஏன் நீயே பார்த்துக்குவியோ..” என மேலும் ஏதேதோ சொல்லி கிண்டலடிக்க… நிகிதா முகம் சிவந்து போனாள்.

கேலியும் கிண்டலுமாக பொன்னியும் நிகிதாவும் பேசி கொண்டு இருக்க.. விசாலா மீன் சமைத்து இருக்க.. அதுவும் நிகிதாவுக்காக காரம் குறைவாக செய்து இருக்க.. நன்றாக சாப்பிட்டாள்.

மாலை வரை இருந்து விட்டு கிளம்பிவிட்டனர். பயணம்.. அவன் வீட்டில் வாசம்… சாப்பாடு..என எங்கயாவது முகம் சுழிப்பாள் என வீரா பார்த்திருக்க..அவனின் எதிர்பபார்ப்பை எல்லாம் பொய்யாக்கினாள்.

வீரா வீட்டுக்கு சென்று வந்ததில் இருந்தே நிகிதாவிற்கும் தனக்கு வீராவை போல ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை வந்தது.

பிள்ளையாரை சுத்தினால் பிள்ளை வரம் கிடைக்காது புருஷனை சுத்த வேண்டும் என கிராமத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. நிகிதாவும் புருஷனை சுற்றி தான் வருகிறாள். ஆனால் இவளையே சுத்தல்ல விட்டு வேடிக்கை பாராப்பவனை என்ன செய்ய….

இப்படியே நிகிதா நெருங்கவும்.. வீரா கண்டு காணமால் விலகுவதும்..ஒரே இழுபறியாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்க…

ஒருநாள் ரூபேஷ் நிகிதாவிற்கு போன் செய்தான்.

“நிக்கி … ஹவ் ஆர் யூ ? ஏன் இப்ப எல்லாம் ப்ரண்ட்ஸ மீட் பண்றதில்லை. எங்களை அவாய்ட் பண்ற.. எனி ப்ராப்ளம்” என கேட்க..

“நோ..நோ.. நத்திங் ரூப்ஸ்.. லிட்டில் பிசி..அதனால தான்.. நீ சொல்லு எப்படி இருக்க.. ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க..”

அவள் பேச்சு அவனுக்கு எரிச்சலை கிளப்ப.. இருந்தும் அதை குரலில் காட்டாமல்..

“நீ தான் எங்க கூட டச்லயே இல்ல..அப்புறம் எப்படி தெரியும்..” என்றான் குற்றம் சாட்டும் குரலில்…

அவன் பேச்சு அவளுள் லேசா குற்றவுணர்வை கிளப்ப…

“சாரி ரூப்ஸ்… ” சின்ன குரலில்…

“இட்ஸ் ஓகே.. எங்களை மறந்துட்டியோனு தான் வருத்தமா இருந்துச்சு..”

“என்ன ரூப்ஸ் இப்படி பேசற… எனக்கு கில்டியாகுது..”

அதானே எனக்கும் வேண்டும் என மனதில் நினைத்து கொண்டு நிகிதாவிடம்..

“லீவ் இட்… கம்மிங் ப்ரை டே.. எனக்கு பர்த்டே… எப்பவும் போல பார்ட்டி இருக்கு… ஹோட்டல் கீரின்பார்க்ல வந்திடு… கண்டிப்பா வரனும் நிக்கி…”

“கண்டிப்பா வருவேன் ரூப்ஸ்..” என அவள் வருவதை உறுதிபடுத்தி கொண்டே போனை வைத்தான்.

ரூபேஷ் பர்த்டே பார்ட்டிக்கு போகனும்.. எப்படி போறது..முதல் போல வீட்டில் பொய் சொல்லி விட்டு போக.. இப்ப இருக்கும் நிகிதாவால் முடியவில்லை. உண்மை சொல்லி பர்மிஷன் கேட்கவும் பயம்..இப்படியான சிந்தனைகளோடவே இரண்டு நாள் கழிந்தது.

அன்று வெள்ளிக்கிழமை வீரா பாட்டி இருவரிடமும் சொல்ல வேண்டும். போகாமல் தவிர்க்க முடியவில்லை. ரூபேஷின் பேச்சு அவளை போக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

வீராவிடம் கேட்க சந்தர்ப்பம் எதிர்பார்த்தவள் அவன் குளித்து தயராகி வரும் வரை அறையிலேயே காத்திருந்தாள். அலுவலகம் செல்ல தயராகி வந்தவன் சற்றும் இவளை கண்டு கொள்ளாமல் செல்ல..

“மாமா..”என்று அழைத்து அவனை நிறுத்தினாள். என்ன என்பது போல அவளை ஏறிட்டு பார்க்க..

“இல்ல..வந்து…”தயங்கியவளை அவன் முறைத்துப் பார்க்க…

“அது வந்து ரூபேஷ் பர்த்டே பார்டி கீரீன்பார்க்ல ஈவ்னீங்….. பார்டிக்கு இன்வைட் பண்ணான். போகவா…” என வேகமாக சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லியதை கேட்டவன் மேலும் முறைக்க.. அவனின் முறைப்பிற்கான காரணம் புரிந்தவளாக…

“இல்ல ட்ரிங் பண்ணமாட்டேன்.. ப்ராமிஸா பண்ணமாட்டேன்.இப்ப அதெல்லாம் இல்லை. ப்ரண்ட்ஸ் பார்க்க கூட போறதில்லை.பார்த்து ரொம்ப நாளாச்சா.. அதான் ஜஸ்ட் மீட் பண்ணி பேசிட்டு மட்டும் வரலாம்னு தான்” என்றாள் பயத்தோடு அவன் முகம் பார்த்து..

என்ன நினைத்தானோ… இவளை பிரிய நினைக்கும் தனக்கு அவளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என நினைத்தானோ.. என்னவோ…சரி என தலையாடி விட்டு சென்று விட…

அப்பாடி என இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டவள் அவனுக்கு டிபன் எடுத்து வைக்க.. பின்னோடு சென்றாள்.

பதினோரு மணிவாக்கில் பாட்டி தாத்தாவிற்கு செகண்ட் டோஸ் காபி எடுத்து சென்றவள்… அவர்களுக்கு கொடுத்து விட்டு அருகேயே அமர்ந்து கொண்டாள்.

இருவரும் காபி அருந்தி முடிக்கும் வரை அவர்களிடம் எப்படி பர்மிஷன் கேட்பது என தயங்கி யோசித்து கொண்டு இருக்க..

அவளை கவனித்து கொண்டு இருந்த பாட்டியே “என்ன நிகிதா..”என்க..

“அது வந்து கீரேனீ..”

“என்ன தயங்குறவ.. சொல்லு”

நிகிதா படபடவென எல்லாம் சொல்லி முடிக்க.. பாட்டி கோபத்துடன்..

“இப்ப தான..ஒழுங்கா இருக்கனு நினைச்சு சந்தோஷப்பட்டோம்.பழையபடி ஆரம்பிக்கறியா..” என கேட்க…

அவசரமாக.. மறுப்பாக..”இல்ல கீரேனீ..அப்படி எல்லாம் இல்லை.ப்ரண்டஸ பார்த்து ரொம்ப நாளாகுது. சும்மா பார்த்துட்டு வரலாம்னு தான்.. எப்படி போறனோ அப்படியே வந்திடுவேன் ப்ராமிஸா..”என்றாள்.

அவள் பயமும் பதட்டமும் அவள் பழையபடி செய்யமாட்டாள் என உணர்த்த..

தாத்தாவும்”மங்களா விடு.. அதான் பேத்தி அவ்வளவு தூரம் சொல்றால்ல.. போயிட்டு வரட்டும்” என்றவர் நிகிதாவிடம்..

“எத்தனை மணிக்கு போகனும் நிக்கி.. டிரைவர் கூட நம்ம வண்டியிலேயே போ.. எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடு கார் அனுப்பி வைக்கிறேன்” என்றார். நிகிதாவும் சந்தோஷமாக தலையாட்டினாள்.

மாலை கிளம்பி வந்தவள் பெரியவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள்.

“பத்திரம் நிக்கி.. சொன்னது நினைப்பு இருக்குல்ல..”என்று எச்சரித்த
பாட்டியிடம் சரி என்றாள்.

“நீ போயிட்டு டிரைவரை திருப்பி அனுப்பிடு.. முடிந்ததும் கால் பண்ணு.. நான் அனுப்பி வைக்கிறேன்” எனவும்…சொல்லி கொண்டு கிளம்பிவிட்டாள்

வெகு நாட்களுக்கு பிறகு நண்பர்களை பார்க்கவும்.. உற்சாகம் தொற்றி கொண்டது நிகிதாவிற்கு…

ரூபேஷ் கேக் வெட்ட.. நிகிதாவிற்கு தான் முதல் துண்டை ஊட்ட வந்தான். அதை லாவகமாக கையில் வாங்கி கொண்டாள். ரூபேஷின் முகம் ஒரு பிடித்தமின்மையை காட்டியது. நொடியில் முகத்தை திருத்தி கொண்டான். ஒருவருக்கு ஒருவர் கேக்கை முகத்தில் பூசி கொண்டு.. ஆட்டம் பாட்டம் என களைகட்டியது.

கொஞ்ச நேரத்தில் ட்ரிங்ஸ் வர.. நிகிதா வேணாம் என மறுக்க…

“ஓவ்.. நோ.. நிக்கி.. கமான் ஹேவ் இட்”என ரூபேஷ் சொல்ல…

“நோ.. ரூப்ஸ்.. நாட் இன்ட்ரஸ்ட்டட்..” என பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவள் குடித்தால் தான் தன் திட்டம் நிறைவேறும் என வற்புறுத்த.. அவள் பிடிவாதமாக மறுக்க.. அவனுக்கு கோபம் கனன்றது. அதை மறைத்து கொண்டு போலியான சிரிப்புடன்..

“ஓகே பேபி.. யுவர் விஷ்..” என்றவன் ஒரு ஜீஸ் வரவழைத்து தன் கையாலேயே கொடுக்க வரும்போது டேபிளில் இடித்து.. கையில் இருந்ததை நிகிதாவின் மேலேயே கொட்டினான்.

உடேனே பதறிபோய் “ஓ.. நோ..சாரி.. சாரி நிக்கி..” என அவசரமாக ஒரு டிஷ்யூ எடுத்து அவளின் உடையை துடைக்க வர நாசுக்காக நகர்ந்து நின்றாள்.

“பரவாயில்லை ரூப்ஸ்.. ஐ வில் மேனேஜ்”

“இல்ல.. என்னோட மிஸ்டேக் தான் சாரி நிக்கி.. இப்படியே எப்படி உன்னால இருக்கமுடியும்..”

அவன் சொல்லவும் தான் நன்றாக தன்னை குனிந்து பார்த்தாள்.அவளுடைய ஹாப் ஒயிட் டாப்ஸில் அங்காங்கே திட்டுதிட்டாக கறை படிந்தது போல இருக்க.. பார்த்தவள் சங்கடத்துடன் முகம் சுழிக்க…

“நீ தப்பா எடுத்துக்கலைனா.. இங்க எங்களுக்கு கெஸ்ட் பிசினஸ் பீப்புள் வந்தா ஸ்டே பண்ண எப்பவும் ஒரு ரூம் இருக்கு.. அங்க வந்து டிரஸ் வாஷ் பண்ணிட்டு கொஞ்சம் டிரை ஆகற வரைக்கும் இரு..”

கள்ளம் கபடம் அறியாத நிகிதா அவன் பேச்சை நம்பி அவனோடு சென்றாள்.

அறையினுள் சென்றதும்”போய் வாஷ் பண்ணிவிட்டு வா நிக்கி.. நான் வெயிட் பண்றேன்” என்றான் நல்லவனாக…

பாத்ரூம்மில் டாப்ஸை கழட்டி வாஷ் செய்தவள் அங்கிருந்த ஷவர் கோட்யை போட்டு கொண்டு வெளியில் வந்து டாப்ஸை அங்கிருந்த டீப்பாய் மேல காய வைத்தாள்.

அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டாள். எதிரில் பெட்ல உட்கார்ந்து இருந்த ரூபேஷை பார்க்க கூட கூச்சமாக இருந்தது. என்ன தான் ஜீன்ஸ் மேல தான் கோட் போட்டு எங்கும் விலகாத மாதிரி நாட் போட்டு இருந்தாலும்… தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

அவள் அறியாமல் பார்வையால் துகிலுரித்து கொண்டு இருந்தான் ரூபேஷ். அவளுக்கு அருகே இருந்த மற்றொரு சோபாவில் வந்து அமர்ந்தான். மெல்ல அவள் கையை பிடிக்க.. என்ன தான் நண்பனாக இருந்தாலும் ஹோட்டல் அறையில்ஒரு ஆணோடு தனித்து இருக்க ஒரு பெண்ணாக மனதில் இனம் புரியாத பயம்…விதிர்விதிர்விதிர்த்து போனாள்.

“ஹேய்.. கூல்.. கூல்..ஜஸ்ட் பேசிட்டு இருக்கலாமேனு..”

“ம்ம்ம்..”

“ஹவ் இஸ் யுவர் மேரிட் லைப்”

“இட்ஸ் கோயிங் நைஸ்..”

நிகிதாவின் இந்த பதில் ரூபேஷ்கு உவப்பானதாக இல்லை.எரிச்சல் மேலிட..

“எப்படி உன்னால இப்படி சொல்ல முடியுது”

“ஏன் ரூப்ஸ்.. எனக்கும் முதல்ல பிடிக்கல தான்.. ஆனா மாமா.. மேன்லி.. ஹேண்ட்சம்..யூநோ வெரி கேரிங்.. சோ ஐ லவ் ஹிம் வெரி மச்” என கண்களில் காதல் மிக.. சொன்னவளை கண்டு வெறியானவன்…

“ஸ்டாப் இட்.. நிகிதா.. என்னால டால்ரெட் பண்ணமுடியல.. போயும்போய் அந்த கருவாயன.. இப்படி…டாமிட்”

“ஏன் கருப்பா இருந்தாலும்.. லுக் லைக் அ ஹுரோ..”

“ஏய்ய்.. என்னடி பெரிய ஹுரோ.. ஹேண்ட்சம் என உளறிகிட்டு இருக்க.. என்னைய விட பெரிய அழகா அவன்.. ம் சொல்லு..”என கத்தி கொண்டே எழுந்து அவள் முன் வந்து நிற்க..

அவன் கத்தியதிலேயே.. வெலவெலத்து போனவள் நடுங்கி போய் நிற்க.. கிட்டே நெருங்கி வந்தவன்…

“உனக்கு என்னை பார்த்தா ஹேண்ட்சமா தெரியலையா.. நானும் உன்னை இம்ப்ரஸ் பண்ண எவ்வளவோ டிரை பண்ணினேன். ஃபூல் உனக்கு அதெல்லாம் புரியவே இல்லை. சரி பேரண்ட்ஸ் கிட்டபேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா உன் பேமிலி அந்த கருவாயனுக்கு உன்னை மேரேஜ் பண்ணி வச்சிடாங்க..”

அவன் பேச்சில் அதிர்ச்சியாகி..மூளை மறுத்து போய் நின்றாள்.

“நானும் உன்கிட்ட பேசி எப்படியாவது வீட்டை விட்டு வெளியே வரவச்சு நான் நினைத்ததை நடத்திக்கலாம்னு பார்த்தேன்.ஆனா அந்த கிழவனும் கிழவியும் உன்னை பார்க்க விடலை போனை வாங்கி வைத்து கொண்டு பேசவும் விடலை”

“இப்ப அதெல்லாம் எதுக்கு .. எனக்கு உன் பியூட்டி நைட் எல்லாம் தூங்க விடாம டார்ச்சர் பண்ணுது.. ஒரு ஒன் நைட் ஜஸ்ட் ஒன்நைட் என் கூட பெட் ஷேர் பண்ணிட்டு போ.. ஒரு நைட் இந்த அழகை ரசித்து அனுபவித்தால் போதும்” அவளை இழுத்து அணைக்கவும்..

ரூபேஷ்ஷின் கை தன் மேல படவும் தான் சுரணை வந்தது நிகிதாவிற்கு.. அவனை நெட்டி தள்ளி கொண்டு விடுபட முயற்சித்தாள்.

அதில் ஏற்கனவே குடித்து இருந்தவன் அந்த போதையோடு நிகிதா மேல் கொண்ட போதையும் சேர்ந்து கொள்ள..வெறி கொண்டவன் போல.. அவள் மேல் துணியை பிடித்து இழுக்க.. அது அவன் கையோடு வந்தது. அவன் முன் ஸிலிப்போடு அரை குறை ஆடையில் நிற்க அசிங்கமாக இருக்க… தன்னை மறைத்து கொள்ள.. அவள் டாப்ஸை எடுக்கப் போக.. அவள் நோக்கம் அறிந்தவன் அவளுக்கு முன் சென்று அதை எடுத்து சுருட்டி தூக்கி எறிய… அது படுக்கைக்கு பின்புறம் சென்று விழுந்தது.

அதில் நிகிதா மனதளவில் சோர்ந்து போனாள். அவன் அவளின் சோர்வை பார்த்து வெற்றி களிப்பில் சிரிக்க…

“கமான் நிக்கி.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத.. இதெல்லாம் இந்த காலத்துல ஜஸ்ட் காபி குடிக்கற மாதிரி.. என்ஜாய் பண்ணிட்டு போவியாம்..அத விட்டுட்டு ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா ஹீரோயின் மாதிரி ரியாக்ட் பண்ற… ” என சொல்லி கொண்டே மெல்ல.. மெல்ல.. அவளை நெருங்கினான். அவனை பிடித்து தள்ளி விட்டு அறையை சுற்றி ஓட ஆரம்பித்தாள். வெறி நாயாக துரத்த தொடங்கினான்.

மனதும் உடலும் களைத்து போக.. இதுக்கு மேல் முடியாது என தெரிந்ததும் அழுகை வந்தது. அவள் கிட்ட நெருங்கி படுக்கைக்கு கையை பிடித்து இழுத்து செல்ல..எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ..அவனின் இடுப்புக்கு கீழே எட்டி ஒரு உதை விட்டாள். அதில் அவன் வலியில் சுருண்டு துடிக்க…

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குளியலறைக்குள் புகுந்து கதவை அடைத்தாள். அவளால் தாங்க முடியவில்லை. தான் நண்பன் என நினைத்திருக்க.. இப்படி ஒரு சாக்கடை புத்தியோடு.. அவன் தன்னிடம் பழகியிருக்கான் என நினைக்க… நினைக்க… நெஞ்சம் வலியில் துடித்தது. சற்று நேரம் முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் கரைந்தவள்…

இங்கிருந்து எந்த சேதாரமும் இல்லாமல் தப்பிக்க வேண்டும் என தோன்ற… அப்போது தான் அவளுக்கு வீரா ஞாபகம் வந்தது. உடனே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து வீராவுக்கு அழைத்துவிட்டாள்.

வீரா அப்போது தான் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருந்தான். இவள் அழைப்பை பார்த்தும் எரிச்சலோடு தான் அழைப்பை ஏற்றான்.

“மாமா.. மாமா.. என்னை காப்பாத்துங்க.. “என்று கதற…

முதலில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.. அவள் கதறல் ஏதோ ஆபத்து என உணர்த்த..

“ஏய். நிகிதா.. இப்ப எங்க இருக்க.. என்னாச்சு தெளிவா சொன்னா தான என்னால எதுனாலும் செய்ய முடியும்”

அவன் சொன்னது புரிய கண்களை துடைத்து கொண்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு..

“மாமா இங்க.. இந்த ரூபேஷ் என்கிட்ட..” சொல்ல..மீண்டும் அழுகை வெடித்தது. அழுது தேம்பி கொண்டே..

“இங்க கீரின் பார்க்ல.. தேர்ட் ப்ளோர்ல.. ரூம் நம்பர் த்ரீ நாட் செவன்” என்க..

அவனோடு அறைக்கு எதுக்கு சென்றாள் என கோபம் வர… பல்லை கடித்து கொண்டு..

“லரேன் வை..” என போனை வைத்தவன் காரை எடுத்தவன் புயலாக வந்து கொண்டு இருந்தான்.

இங்கு குளியலறை கதவை தட்டி “ஏய் திறடி..” உடைக்க தொடங்கினான் ரூபேஷ்..

நிகிதா நடுக்கத்துடன் கால்களை கட்டி கொண்டு ஒரு மூலையில் ஒண்டினாள்.

வெறி கொண்ட நாயாக.. தன்னை வேட்டையாட துடிப்பவனிடம் இருந்து தன்னை காத்து கொள்ள முடியாமல்.. உயிரை கையில் பிடித்து கொண்டு நிகிதா..

வெறி நாயை கொன்று புதைக்கும் சிங்கமாக.. வந்து கொண்டு இருக்கும் வீரா..நிகிதா வெறி நாயால் கடித்து குதறப்படுவாளா…வீராவால் காக்கப்படுவாளா…. ?

11 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top