ATM Tamil Romantic Novels

உரசி மலர்த்தாதே மாறா !-21&22 (விஷ்ணுப்ரியா )

மலர்தல்-21 தன் அன்புப் பாட்டி , ‘மீராவைக் கட்டிக்கொள்’ என்று சொன்ன பிற்பாடு ..அலுவலகம் வந்து சேர்ந்தவன்.. அவன் அவனாகவே இல்லை !!   எப்போதும் தன் அலுவலக ஊழியர்களின் ‘குட்மார்னிங்’குகளை சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக் கொள்பவன்..இன்று யாரையும் நிமிர்ந்து பார்த்தானில்லை.   கால்களில் சக்கரம் கட்டியது போல அப்படியொரு வேகம் அவனுக்குள். விறுவிறுவென்று சென்று நேரே..தன் அறைக்குள் புகுந்திருந்தான்.   அவனது அறை ஏழாம் மாடிக் கட்டிடத்தில் உண்டு. அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதும் கண்ணாடியால் […]

உரசி மலர்த்தாதே மாறா !-21&22 (விஷ்ணுப்ரியா ) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [15]   அன்றிரவு.. பரிதியின் வீட்டின்.. அவனறையோடு ஒட்டியிருந்த டெராஸின் வழியாகத் தெரிந்த வானத்தில்…. காய்ந்து கொண்டிருந்தது முழுமதி நிலவு!!!  அதனைச் சூழ நின்ற வெண்பஞ்சு மேகங்கள்… நிலவைக் கடந்து போகையிலே.. ஏழுவகையான நிறப்பிரிகைகளைக் காட்டி.. வானவில்லைத் தோற்றுவிக்க.. அதுவும் கூட அந்த ஏகாந்தமான இரவு வேளையில்.. ரம்மியமாகவே இருந்தது. நடுச்சாமத்தை அண்மிக்கும் போது.. மரங்களைத் தழுவிய உற்சாகத்தில்.. வீசும் குளிர்ந்த தென்றல் காற்று.. நாடி, நரம்பெங்கும்

காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா) Read More »

உரசி மலர்த்தாதே மாறா!-6&7 (விஷ்ணுப்ரியா )

மலர்தல்- 6   அன்று..திங்கட்கிழமை.அவன் டாக்டர். உஷாவிடம் குறிப்பிட்டது போல மருத்துவமனையின் புது நிர்வாகியான ‘அர்ஜூன் மனோஹருக்கு’ வரவேற்பளிக்க ஏற்பாடாகியிருந்தது .   அதன பொருட்டு.. ஒட்டுமொத்த  ஊழியர்  குழாமும்.. அங்கே திரண்டிருந்தது.    முற்பகல் பொழுதினில்.. ஊட்டியிலும் கூட வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.    அவர்களது மருத்துவமனையில் பேரழகாய் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தினிடையில் ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தது தார் சாலையொன்று.    அதன் வழியாக.. அதிநவீனரக லம்போர்கினி வகையறாவைச் சேர்ந்த  காரொன்று உள் நுழைந்தது.    அதைக் கூடக்

உரசி மலர்த்தாதே மாறா!-6&7 (விஷ்ணுப்ரியா ) Read More »

உரசி மலர்த்தாதே மாறா !-3,4&5

மலர்தல்-3   அவன் மனமெல்லாம் அவள் நினைவுகள் ..ஒரு ஆழிப்பேரலையாய் எழுந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.   தன்னையும் அறியாமல் அவனது அறையின் சோபாவில் மயங்கிக் கிடக்கின்றாள் அவள்.   உரிமைப்பட்டவனாக இருந்தும், தள்ளி நின்று பார்க்க வேண்டிய பரிதவிப்பான நிலை அவனுக்கு. சர்க்கரை வியாதிக்காரன் மிட்டாய்க்கடையை பார்ப்பது போல.   அவள்  வனப்புக்களை..ஏக்கத்துடனும்,தாபத்துடனும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..அவளில் நின்றும் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான்.   தற்போதோ, அவன் பழைய அர்ஜூன் மனோஹராக மீண்டிருந்தான்.ஆம்,அவன் முகத்தில் இறுக்கமும்,

உரசி மலர்த்தாதே மாறா !-3,4&5 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?      [13] அன்றைய நாளின் பின் வீடு வந்தவளுக்கு, உடற்சோர்வும், பிரயாணக்களைப்பும் சேர்ந்து கொள்ள, நாள் முழுவதையும் தூக்கத்திலேயே கழித்தாள் நிலா.  வடமேல் இலங்கையிலிருந்து, தென்னிலங்கை வரை பயணம் என்பது கொஞ்சம் அலுப்பும் தரக்கூடியது என்பதை அறிந்திருந்த மென்னிலாவின் தாயாரும் சரி, அவளது மாமாவும் சரி… நாள் பொழுதில் கூட உறங்கும் மென்னிலாவை யாரும் ஏதும் சொல்லவுமில்லை.  ‘முக்கியமான டாக்குமென்ட்” என்று சொல்லி.. றுஹூணு கேம்பஸ் வரை சென்றாயே? எங்கே

காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா) Read More »

உரசி மலர்த்தாதே மாறா !-1 &2

உரசி மலர்த்தாதே மாறா!    மலர்தல் -1   அது மலையும், மலை சார்ந்த பிரதேசமுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் உதகமண்டலம்!!    பனிப்போர்த்திய முகடுகளை முகில்களுக்கு மட்டும் இரகசியமாகக் காண்பித்தபடி.. ஆழ்ந்த சயனநிலையின் வசம் ஆட்பட்டிருந்தன மலைத்தொடர்கள்!!    எங்கும் பைன் மரக்காடுகளும், ஊசியாய் குத்தி என்பு மச்சை வரைத் துளைக்கும் குளிரும் கொண்ட.. பப்பரப்பான காலநிலை அது!!    உதகமண்டல நகராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை, விடிந்தும், விடிந்திராத

உரசி மலர்த்தாதே மாறா !-1 &2 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?       [11]   மென்னிலாவின் தாத்தா ராஜமாணிக்கம், சரவணன் மற்றும் பரிதிவேல் வீரன் என மூவரும் இணைந்து தொடங்கவிருக்கும் ‘பற்பசை கம்பெனி’க்கான பேச்சு வார்த்தைகள்… அன்றும் மென்னிலாவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது!!.  ‘தன்னவன்.. தன் வீட்டிற்கு வந்திருக்கிறான்’ என்ற சந்தோஷமே.. மென்னிலாவை ஏதோ ஒரு கனவு மயக்கத்தில் ஆழ்த்துவது போன்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது.  ‘’அவன் வந்திருக்கிறான்’ என்று தெரிந்து கொண்ட பின்னரும், அவளது அறையில்.. அவனைப்

காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா) Read More »

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 25 இதற்கு மேல பொறுமை காக்க கூடாதென கரை புரண்டு வெள்ளம் போகும் போது அணைபோட்டு தடுத்து நிறுத்தாவிடில் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மகள் மட்டும் அல்ல தன்னையும் மறுஜென்மம் எடுக்க வைத்த குடும்பத்திற்கு பாதகத்தை விளைவிக்க கூடாதென எண்ணிய சரோஜினியோ மீண்டும் பலத்தை எல்லாம் திரட்டி எழுந்து நின்று கற்சிலையாக நின்ற வர்மனின் கையை பிடித்து அபியின் முன்னே நின்றவர் “யாரை பார்த்து வெளியே போக சொல்லுற இந்த வீடு உன்

நெஞ்சில் வடித்த கவிதை Read More »

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 22 கவிதாவிற்கு பிரசவ வலி வந்து விட்டது. லோகேஷ் அனிதாவை கூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தான். அனிதாவுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்றுதான் அவளை வெளியே கூட்டிச்சென்றிருக்கிறான் லோகேஷ். காஞ்சனாவோ “லோகேஷ் தம்பிக்கு கூப்பிடறேன் கவிமா” என்று போனை எடுத்தார். “அ.அ.அத்தைமா லோகேஷை கூப்பிட வேணாம் அவங்க ரெண்டு பேரும் முதல் முறையா வெளியே போயிருக்காங்க. அ.அவங்களுக்கு தொ.தொந்தரவு கொடுக்க வேணாம் கே.கேப் புக் பண்ணுங்க” என வலியுடன் இடுப்பை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். “அதுவும் சரிதான் கவிமா”

நெஞ்சில் வடித்த கவிதை Read More »

error: Content is protected !!
Scroll to Top