ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 33,34

33 “ஏண்டி.. மூணு வருசமா என்னை நினைக்கவே இல்லையா?? என்னை பார்க்கணும்னு உனக்கு தோணவே தோணலையா? ஏன் ஷாலு?” என்று மனம் கலங்க, முகம் வருத்தத்தில் கசங்க, உயிர் உருக அவளை பார்த்து கேட்டான் தேவா.‌   அவள் அமைதியாக அவனை பார்த்து கொண்டிருக்க..    “மூணு வருஷத்திலே என்னை மிஸ் பண்ணலையா நீ?” என்று தேவா வருத்தமாக கேட்டான் திரும்பவும்..   காதலில் கசிந்துருகி, அவர்களின் காதலின் சாட்சியாக வைஷாலி வயிற்றில் அவர்கள் மகவு, இப்போது […]

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 33,34 Read More »

புள்ளி மேவாத மான் – 5

5 – புள்ளி மேவாத மான்

குளித்து அவள் பரிசளித்த பேண்ட் சர்ட் அணிந்து தான் வழக்கமாக அணியும் கைகடிகாரத்தை தவிர்த்து அவள் கொடுத்த புதியதை கட்டிக் கொண்டு வந்தான்.
‘மாமா ஜீன்ஸ் போடுவாரா வேட்டி கட்டுவாரா’ என சிந்தனையில் இருந்தவள் பேண்ட் போட்டுவிட்டு வரவும் ஆச்சரியம். தனஞ்ஜெயனின் தந்தைக்கு விவசாயமே பிரதான தொழில் . ஊரில் இவர்களின் நிலபுலன்கள் அதிகம். பூர்வீக சொத்தை சரிசமமாக தம்பிகளுக்கு பிரித்து கொடுத்து இருந்தாலும் அதற்கு பிறகு தன் உழைப்பால் நிறைய விவசாய பூமியை வாங்கி இருந்தார் மாணிக்கவேல்.
தனஞ்ஜெயன் குவாலியர் ஐடிஎம் யூனிவர்சிட்டியில் பி.டெக் அக்ரி படித்து விட்டு வந்தவன் சர்க்கரை ஆலை தொடங்க ஆசைப்படுவதாக கூறவும் தன் மகன் மேல் உள்ள அசாத்திய நம்பிக்கையில் மாணிக்கவேல் அதற்கு தேவையான நிலம், நிதி எல்லாம் கொடுத்தார்.
சர்க்கரை ஆலை தொடங்கி நன்றாக நிர்வகித்து இரண்டு வருடங்களில் அவர் கொடுத்த தொகையை திருப்பிக் கொடுத்தான் . அதில் அவருக்கு அவ்வளவு பெருமை .
மாணிக்கவேல் லட்சுமியிடம் “லட்சு புலிக்கு பிறந்தது பூனையாகுமா… என் சிங்கக்குட்டி” என பெருமையாக மீசையை நீவி விட்டு கொண்டு சொல்ல….
“ஏ மாமா உங்க மவன புலிங்கறிங்களா இல்ல…. சிங்கக்குட்டிங்கறிங்களா….” என லட்சுமி கிண்டலடிக்க.…
“நம்ம மவன் சிங்கக்குட்டி நீ வேணா பாரு இந்த ஊருல என்னை விட ஒரு படி மேல உசந்து தான் நிப்பான்” என பெருமைப்பட்டுக் கொண்டார்.
மாணிக்கவேலின் வாக்கை உண்மையாக்கினான் தனஞ்ஜெயன். தந்தைக்கு பிறகு அவருடைய விவசாய நிலங்களையும் பார்க்க நேரிட்டதால் அது வரை பேண்ட் மட்டுமே அணிந்து வந்தவன் வேட்டி கட்ட ஆரம்பித்தான். அது தான் வயலுக்கு செல்ல வசதியாக இருந்தது . அதுமட்டுமில்லாமல் மாணிக்கவேலின் ஊர்தலைவர் பதவி இவனுக்கு வழங்கப்பட எப்போதும் வேட்டி தான் என்றானது. சட்டை மட்டும் பிளெய்ன் கலர் சர்ட்டாக இருக்கும்.
அதை யோசித்து தான் எழிலரசி தன் ஆசைக்கு ஜீன்ஸ்ம் , அவன் வசதிக்கு வேட்டியும் வாங்கியிருந்தாள். அவன் ஜீன்ஸ் அணிந்து வரவும் ரொம்பவும் மகிழ்ந்து போனாள்.
வந்தவன் பூஜை அறைக்கு சென்று , “எழில் இங்க வா” என அழைத்தான். தன் மாமனின் முகம் பார்க்க வெட்கப்பட்டு பேசாமல் போய் நின்றாள். வந்தவளை கையைப் பிடித்து அருகில் நிறுத்தி கொண்டு சாமி கும்பிடுமாறு கண்களால் ஜாடை காட்டி அவளோடு ஜோடியாக நின்று வணங்கினான்.
வணங்கிய பின் தன் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு , அவள் நெற்றியில் குங்குமம் இட்டான். இதை எதிர்பார்க்காத எழிலுக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டது. கண் கலங்க நின்றவளை தோளோடு சேர்த்து லேசாக அணைத்து விடுவித்தான்.
“ஆயா நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம்.”
“இல்ல மாமா நீங்க போயிட்டு வாங்க….”
“ஏன்” என்றான் கேள்வியாக
“இல்ல மாமா….அது… வந்து…” என தயங்க
அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் அடுத்த நொடி எழிலரசியின் தந்தைக்கு முத்துக்குமாருக்கு அழைத்திருந்தான்.
“மாமா நான் தனா பேசறேன். நான் எழில கூட்டிட்டு கோயிலுக்கு போயிட்டு வரேன்” கூட்டிட்டு போய் வரவா எனவெல்லாம் பெர்மிஷன் கேட்கவில்லை. உத்தரவாக கூட்டிட்டு போகிறேன் என கேட்டான்.
அவர் என்ன சொன்னாரோ”அதை நீங்களே உங்க பொண்ணுகிட்ட சொல்லிடுங்க” என போனை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கி காதில் வைத்தவள் அவள் தந்தை என்ன சொன்னாரோ “சரிங்கப்பா… சரிங்கப்பா…”என்றவள் அவனிடம் போனை கொடுத்தாள்.
“இப்ப கிளம்பலாமா..” என்ற போதும் தயக்கத்துடன் பாட்டியை பார்த்தாள்.
வாழ்ந்த மனுசியல்லவா ஒரு பெண்ணாக அவளின் தயக்கம் புரிந்தவராக “போயிட்டு வா தங்கம் யாரு ஏதும் சொல்வாங்களோனு தயங்காத எங்க ராசாவ எவனாவது வாய் மேல பல்லுப் போட்டு பேசிடுவானுங்களா.. ஊருகுள்ள எவனுக்கு அந்த தகிரியம் இருக்கு”
தனஞ்ஜெயனிடம்”ராசா பிளஷர்ல(காருல) கூட்டிட்டு போய்யா புடுபுடு வண்டில(புல்லட்டில்) வேணாம்”
பாட்டி சொல்லவும் இருவரும் தலையாட்டி காரில் கிளம்பினர். அவளுக்கும் மாமனோடு அவன் இடுப்பில் கைப் போட்டு அவனுடைய ராயல் என்பீல்டுல போகனும் என்பது அவளுடைய தீராத தாகத்தில் ஒன்று. ஆனால் கிராமத்தில் கல்யாணத்திற்கு முன்பு இது போல எல்லாம் செய்ய முடியாதே அது வீணான பல பேச்சுக்களுக்கு இடமாகி விடுமே.
இருவரும் கோயிலுக்கு சென்று எழிலரசி அவன் பெயர் நட்சத்திரம் எல்லாம் சொல்லி அர்ச்சனைக்கு கொடுக்க அவனோ அவளுடைய பேர் நட்சத்திரத்தையும் சொல்லச் சொல்லி இருவருக்கும் சேர்த்தே செய்ய சொன்னான்.
கோயிலுக்கு போயிட்டு திரும்பி வரும் போது ,”என் நட்சத்திரம் உனக்கு எப்படி தெரியும்” என தனஞ்ஜெயன் கேட்க
“இது கூட தெரியாதா எனக்கு என் மாமாவப் பத்தி எல்லாம் தெரியும்”
“அதான் எப்படினு கேட்கிறேன்”
“ஹீ ஹீஹீ…அது அது”
“என்னடி ரொம்ப வழியற..”
“அது… அது.. உங்க ஜாதகத்தை பார்த்துட்டு அப்பா சொன்னாங்க…”
பேசியபடியே வீடு வந்தனர். அவன் காரை நிறுத்தி விட்டு வருவதற்குள் சமைத்தவற்றை டேபிளில் எடுத்து வைத்தாள். அவன் வந்து அமர்ந்ததும் அவனுக்கு அருகில் இருந்து பரிமாற எப்பவும் விட ஒருபிடி சேர்த்தே உண்டான்.
அவன் சாப்பிட்டதும் எழிலையும் உட்கார்ந்து சாப்பிட சொன்னான்.
“நான் சாப்பிட்டுகிறேன் நீங்க கிளம்புங்க மாமா”
“இல்ல நீ சாப்பிடு நான் இருக்கேன் தனியா சாப்பிடறதுக்கு கஷ்டமா இருக்கும்”
அவன் சொல்ல இவளுக்கு வலித்தது. முகம் கசங்க அவனைப் பார்த்து “தனியா சாப்பிட கஷ்டமா இருக்காங்க மாமா”என்றாள்.
அவள் கேட்டதும் அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள் கையை தட்டி கொடுத்து”அது தான் இனி நீ இருப்பில்ல. இப்ப அமைதியா சாப்பிடு” என்றான் கரகரப்பான குரலில்.
அவள் சாப்பிட்ட பிறகே வேலைக்கு கிளம்பி சென்றான்.மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தவனுக்கோ அவன் வீடு தானா என்று ஆச்சரியம்.
ஒற்றை மனிதனாக தான் மட்டும் இருக்கும் வீடு எப்பவும் அமைதியாக இருக்கும் . இன்று வீட்டில் இருந்து சலசலனு பேச்சு குரல்களும் கிண்கிணியாக சிரிப்பு சத்தமுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
வீட்டினுள் நுழைந்தவன் ஹாலில் இவன் சித்தப்பாக்கள் , எழிலின் தந்தை முத்துக்குமார், அண்ணன் தமிழரசு , கருணா, வெற்றி, திரு , பிரசாத் என எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..
இவனின் சித்திகள், எழிலின் அம்மா, கீர்த்தி , வசந்தி, எழில் அனைவரும் சமயலறையில் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தனர் .
கருணாவையும் தம்பிகளையும் பார்த்தவன் ‘ இவனுங்க இவ்வளவு நேரம் ஆலைல எங்க கூட தான இருந்தானுங்க ஒன்னும் சொல்லவே இல்லை . எனக்கு முன்னால வீட்ல இருக்கானுங்க . எல்லாம் கூட்டு களவாணிங்க.’ முறைத்தவாறே நினைக்க
கருணா தனஞ்ஜெயனின் மைண்ட் வாய்ஸை சரியாக படித்தவனாக “டேய் மாப்பிள்ளைகளா உங்க அண்ணன் நம்மள மனசுல வகை வகையா வக்கணையா திட்டிட்டு இருக்கான்டா”
திரு”விடு மாம்ஸ் அவரு திட்றதும் நாம திட்டு வாங்கறதும் புதுசா என்ன நமக்கு தான் பழகி போச்சுல்ல…” என்றான்.
அதற்குள் சுந்தரம்”தனா வந்தாச்சு திலகா.. சாப்பாடு எடுத்து வைங்கமா” என்றார். முன்தினமே வீட்டிற்கு வர அனுமதி கேட்கும் போதே அனைவரையும் மதிய விருந்துக்கு அழைத்திருந்தாள். பெண்கள் அனைவரும் தனஞ்ஜெயன் ஆலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வர அனைவரும் சேர்ந்தே சிரிப்பும் பேச்சுமாக சமையல் செய்தனர்.
பந்தி பாய் விரித்து இலை போட்டு பருப்பு ஒப்பிட்டு, புடலங்காய் கூட்டு, கேரட் பீன்ஸ் பொரியல், சாம்பார், புளிக்குழம்பு , ரசம், தயிர்,வடை, பாயாசம் என இலை நிறைய பெண்கள் பரிமாற ஆண்கள் சாப்பிட என தனஞ்ஜெயனின் வீடே கலகலப்பாக இருந்தது.
சாப்பிடும் போது தனஞ்ஜெயனிடம் அவனருகே அமர்ந்திருந்த அவன் சித்தப்பா கண்ணன் எழில் வீட்டுக்கு வர அனுமதி கேட்டதும் விருந்திற்கு அழைத்ததையும் சொல்லி கொண்டு இருந்தார். தனஞ்ஜெயனுக்கு எழிலரசியை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.
திருமணம் செய்வதற்கு முன்பே தனிக்குடித்தனம் போகவேண்டும். உறவுகளோடு உறவாடகூடாது . உன் வருமானம் என்ன என் செலவுக்கு என்ன தருவாய் கண்டீசன் அப்ளை பெண்களுக்கு நடுவே திருமணத்திற்கு முன்பே தனித்திருக்கும் தன்னை தன் உறவுகளோடு சேர்த்து அரவணைத்து கொள்ளும் அவளின் குணம் தன்னைப்பற்றி அடி முதல் நுனி வரை தெரிந்து வைத்திருக்கும் பாங்கு என தனஞ்ஜெயனுக்கு எழிலரசி எட்டாவது அதியசமாகவே தெரிந்தாள் .
ஆண்கள் உண்டு முடித்து பெண்கள் தங்களுக்குள் தாங்களே பரிமாறி கொண்டு சாப்பிட்டனர் . அப்போது திலகா, “ஏ தேவி… லட்சுமி அக்கா இருந்த போது இந்த வீட்டில் இப்படி எல்லோரும் ஒன்னாக சாப்பிட்டோம் பல வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் இப்படி இருக்கோம்.”
“ஆமாக்கா அது அக்காவோட போச்சு இனி எங்க இந்த மாதிரி ஒன்னா கூடி சேர்ந்து சமைச்சு சாப்பிடப் போறோம்னு பல நாளு நான் நினைச்சு வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா அக்கா மாதிரியே மருமகளும் தங்கமா வந்துருக்கா”
“எங்க காலத்துக்கு அப்புறமும் வீட்டுக்கு மூத்த மருமகளா இருந்து இந்த குடும்பம் ஒடையாம காப்பத்துவேனு எனக்கு நம்பிக்கை வந்திருச்சுமா…” என திலகா எழிலரசியின் கன்னம் வழித்து சொல்ல அதை தேவியும் ஆமோதித்தார்.
உடனே வசந்தி “இதா பாருமா எழிலு… மாமியார் இரண்டு பேரையும் கைக்குள்ள போட்டுகிட்டோம். அதனால பிக்கல் பிடுங்கல் இருக்காதுனு நினைச்சிராத… கொழுந்தியாளுக நாங்க இரண்டு பேரு இருக்கோம் . சும்மா விடமாட்டோம் பார்த்துக்க ஆமாம்” என கீர்த்தியையும் கூட்டு சேர்த்து கொண்டு கேலியாக மிரட்டினாள் .
பதிலடியாக எழில்”நானும் உங்களுக்கு கொழுந்தியா தானுங்க பதிலுக்கு பதில் தான் அண்ணி பார்த்து பதிவுசா இருந்துகுங்க…”என்றாள்.
திலகாவும் தேவியும் சிரித்து கொண்டே ” யாரு எங்க மருமககிட்டயேவா….. பதிலுக்கு பதில் கொடுத்து வாயை அடைச்சாளா….”
“மாமியார் மருமகனு எல்லாம் ஒன்னு கூடிட்டீங்க… ம்ம்ம் இனி என் பேச்சு எங்க அம்பலத்துல ஏறும்.” என சிரிப்புடன் நொடித்து கொள்ள வெகு நாட்களுக்கு பிறகு அந்த வீடு சிரிப்பும் கும்மாளமாக மகிழ்ச்சியாக இருந்தது.
இதை எல்லாம் பார்த்த கற்பகத்திற்கு தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது. பின்னே இருக்காதா தன் மகள் போகும் வீட்டில் அவளை கொண்டாடும் சொந்தங்கள் கிடைத்தால் எந்த தாய்க்கும் பெருமையாகத் தான இருக்கும்.
ஏற்கனவே அவளின் காதலில் திக்குமுக்காடி போயிருந்தான். ஆண்களோடு பேசி கொண்டு இருந்தவனின் பார்வை எல்லாம் தன் நாயகிடமே. அவள் கண்களை சிமிட்டி பேசுவதும், கன்னத்தில் குழி விழ சிரிப்பதும் பார்த்தவனுக்கு புத்தி பேதலித்து கண்கள் மயங்க அவளை அள்ளி அணைத்து இன்றே ஆண்டு விட துடித்தது.அவனின் தாபத்தை அடக்க பெரும்பாடு பட்டு போனான்.
தனஞ்ஜெயனின் தனிமை வாழ்வை விரட்ட அத்தனை வசந்தங்களையும் வாரி சுருட்டி கொண்டு வந்தாள் எழிலரசி என்னும் தேவதை. வரம் தரும் தேவதையாக அல்ல . வரமாகவே வந்தாள் இந்த தேவதை .
எல்லோரும் உண்டு முடித்து அவரவர் வீட்டுக்கு சென்றனர் . முத்துக்குமார் தனஞ்ஜெயனிடம் “அப்ப நாங்களும் கிளம்பறோம் மாப்பிள்ளை” என்க
எழில் கிளம்புகிறாள் என்றதும் சட்டென அவன் முகம் வாடிவிட , நொடியில் தன்னை மாற்றிக் கொண்டவன்”சரிங்க மாமா ” என விடை கொடுக்கும் விதமாக தலையாட்ட ,
வினாடி நேரமாக இருந்தாலும் தன் மாமனின் முகவாட்டத்தை கண்டு கொண்டாள். அவளுக்கு அவன் முகவாட்டத்தை பார்த்து ஒருமாதிரி ஆகிவிட்டது.
எழிலின் தந்தை தனஞ்ஜெயனின் கைகளை பிடித்துக்கொண்டு “போயிட்டு வரோம் மாப்பிள்ளை”என விடைபெற்று கிளம்ப பெற்றோர் முன் எதுவும் பேச வழியில்லாது எழிலும் “போயிட்டு வரேன் மாமா” என சொல்லி கொண்டு வெளியே சென்றவள்
“அப்பா என் செல்ல விட்டுட்டு வந்துட்டேன்.எடுத்துட்டு வந்திடறேன்” என சொல்லி நிற்காமல் ஓடிவிட்டாள். ஓடோடி வந்தவளைப் பார்த்து
“என்னடி என்னாச்சு ஏதாவது விட்டுட்டு போயிட்டியா”
“ஆமாம் மாமா உங்களை அம்போனு விட்டுட்டு போயிட்டேன்” என கூறியவள் சட்டென அவன் தோள்களை பிடித்து எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவனை நெருங்கி நின்று முத்தமிட்டவுடன் அவளின் நெருக்கமும் அவளின் மேனியின் வாசமும் அவனின் தாபம் கிளர்ந்தெழ செய்ய போதுமானதாக இருக்க அவளை அப்படியே அள்ளி அணைத்திருந்தான். எழிலின் இதழ்களை தன் இதழ் கொண்டு சிறை செய்தான் . அவனின் கரங்களோ அவள் மேனி எங்கும் மேய அவள் கூச்சம் கொண்டு நெளிய அவள் இதழை விடுத்து
“கொஞ்ச நேரம் நெளியாம இருடி”என்றான் சற்று எரிச்சலான குரலில்
“மாமா ப்ளீஸ்… அப்பா அம்மாலாம் வெளியே எனக்காக வெயிட் பண்றாங்க ப்ளீஸ் மாமா ப்ளீஸ்….”
அவள் சொன்னதும் சூழ்நிலை உணர்ந்து அவளை விடுவித்தான். அதற்குள் எழிலின் தந்தை அவளை அழைத்திருந்தார்.அவள் தந்தை அழைக்கவும் ஓடியவளை கைப்பற்றி நிறுத்தி இவனால் நெகிழ்ந்து இருந்த உடைகளை காட்டி
“ஏய் அம்மு சரி பண்ணிட்டு போடி” என்றான் மந்தகாச சிரிப்புடன்
அவன் காட்டிய விதத்திலும் பேசிய பேச்சிலும் வெட்கம் கொண்டு திரும்பி நின்று கொண்டு சரி செய்தாள். சரி செய்து கொண்டு அவனிடம்”மாமா நான் போயிட்டு வரவா” என்று மையலாக கேட்டாள்.
அவளின் அருகில் வந்து அவளின் முடிகளை திருத்தி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு “போயிட்டு வா போனதும் போன் பண்ணு” என சொல்லி அவள் எடுக்க மறந்த செல்லை கொடுத்து
” வேணும்னே தான வச்சிட்டு போன”என்று கன்னத்தை செல்லமாக கிள்ளி அனுப்பி வைத்தான்.
எழிலின் அன்பையும் அனுசரனையும் மட்டுமே பார்த்தவனுக்கு எழிலின் கோபத்தையும் பிடிவாதத்தையும் பார்க்கும் நாளும் வந்தது.

கொடும் கோடையில் தவித்து
கிடந்தவனை கைப்பிடித்து
முள்பாதையில் இருந்து
மலர்பாதையில் மெல்ல
நடத்தி வசந்த காலத்திற்கு
அழைத்து வரும் தேவதை
இவள்….!

புள்ளி மேவாத மான் – 5 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 32

32       ஷாலு என்று கதறி தீர்த்தவன் , அடுத்த நொடி கார்த்திக்கை தள்ளிவிட்டு காரை எடுத்தான். அசுரவேகத்தில் செலுத்தியவன் போனில் சொன்ன இடத்திற்குச் சென்றதும் தான் நிறுத்தினான். ஆனால் அவன் கால்கள் இறங்க மறுத்து காரிலேயே வேரோடி நின்றது.   கார்த்திக் தான் முதலில் இறங்கி அங்கிருந்து காவல்துறை அதிகாரிகளை விசாரித்தான். பிறகு தேவாவை அழைத்து கார் விபத்துக்குள்ளான இடத்தை நோக்கி செல்ல.. தேவாவின் இதயம் விட்டுவிட்டுத் துடித்தது. நந்தனோ தேவாவின் கையை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 32 Read More »

புள்ளி மேவாத மான் – 4

4 – புள்ளி மேவாத மான்

மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த எழிலரசி வீட்டார் சாப்பிட்டு விட்டு கிளம்பினர் . மதிய விருந்து என்பதால் சாப்பிடும் போது
தனஞ்ஜெயனை “சாம்பார்ல சாப்பிடுங்க… ” “ஸ்வீட் இன்னொன்னு சாப்பிடறிங்களா…” “கூட்டு இன்னும் கொஞ்சம் வைச்சுக்கறிங்களா…” என இவள் சாப்பிடுவதை விட்டு அவனையே கவனித்து கொண்டு இருந்தாள்.
தனஞ்ஜெயன் “ஏய்…என்னை கவனிக்கறத விட்டுட்டு நீ சாப்பிடு. நீ தான் விருந்தாளியா வந்துருக்க … நான் தான் உன்னை கவனிக்கனும் அமைதியா சாப்பிடு ”
“என்னைய நீங்க எழிலு தான கூப்பிடுவிங்க மறந்துட்டிங்களா என்னைய எப்பவும் அப்படியே கூப்பிடுங்க மாமா எனக்கு அது தான் பிடிக்கும் ”
இதுவரை அவன் இவளை பேர் சொல்லி கூப்பிடதில்லை போனில் பேசும் போது ‘என்ன சொல்லு’ ‘சரிடி’ சில சமயம் கிண்டலாக ‘அம்மணி’ என்று அழைப்பான் பேர் சொல்லி கூப்பிடகூடாதுனு இல்லை அவனுக்கு அது வரலை அவ்வளவு தான். இவளோடான ஞாபகங்களை அவன் இவளை போல மனதில் சேமித்து வைக்கவில்லை.
“சரிடி சாப்பிடு”என்றவனையே விடாமல் பார்க்க….
“சரி எழிலு சாப்பிடு” என சிரித்து கொண்டே சொல்ல ,
தன் மாமன் தன் பேர் சொல்லி கூப்பிட்டதில் மகிழ்ந்தவள்..
“மாமா நான் விருந்தாளி இல்ல நான் இந்த வீட்டுக்கு உடமைப்பட்டவ எப்பவும் உங்களை கவனிச்சுகறது தான் எனக்கு சந்தோஷம்”என்றாள்.
கிளம்பும் போது இவனைப் போல இல்லாமல் எல்லோர் முன்பும் கொஞ்சம் சத்தமாகவே “போயிட்டு வரேன் மாமா”என சொல்ல , அனைவரும் சிரித்து விட்டனர். தனஞ்செயனுக்கு தான் வெட்கமாகிவிட்டது.
எழிலரசி கிளம்பி சென்ற பிறகு கருணா தான் தனஞ்ஜெயனை ரொம்பவே கிண்டல் செய்தான் .
“டேய் மாப்புள்ள அன்னைக்கு என் தங்கச்சிகிட்ட போயிட்டு வரேன் சொல்ல எவ்வளவு அலம்பல் பண்ண..அந்த புள்ள முகத்தை கூட பார்க்காம சொல்லிட்டு வந்த….. ”
“ஆனா இன்னைக்கு என் தங்கச்சி எல்லோர் முன்னாடியும் நெத்தியடியா சொல்லிட்டு போகுது பார்த்தியா …”
“பொட்டபுள்ள அது தைரியமா சொல்லிட்டு போகுது நீ வெட்கப்பட்டு நிக்கற… ஆனாலும் உன் வெட்கம் அழகா தான் இருக்கு மாப்புள்ள..”
“போடா போய் ஆலைல வேலைய பாரு” மிடுக்காக சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
“டேய் உங்கண்ண குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கற மாதிரியே பில்டப்பு கொடுக்கறான்டா வாங்கடா போய் வேலையை பார்ப்போம் ” என தனஞ்ஜெயனின் தம்பிகளை கூட்டி கொண்டு சென்றான்.
வீட்டினுள் வந்தவன் சோபாவில் அமர்ந்து கொண்டான். வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தன் வீடு நிறைந்திருந்தது போல உணர்ந்தான். தன் தாய் லட்சுமிக்கு பிறகு வீடே பொலிவிழந்தது போல தோன்றும். இன்று எழிலரசியின் வருகையால் மீண்டும் பொலிவு பெற்றதாக எண்ணினான்.
எவ்வளவு நேரம் சிந்தனையில் இருந்தானோ அவன் போனின் ஒலி அதிர்வில் சிந்தனையில் இருந்து மீண்டான் . வழக்கம் போல் எழில் தான்.
“மாமா நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீங்க என்ன பண்ணறிங்க ஆலைக்கு போயிட்டிங்களா”
“இல்ல இனிமே தான்”
“ஏங்க மாமா டையர்டா இருக்கா தூங்கிட்டு இருந்திங்களா தொந்தரவு பண்ணிட்டேனா”
“அப்படி எல்லாம் இல்ல சும்மா உட்கார்ந்து இருந்தேன்”
‘மாமா சும்மா உட்காரகூடியவர் இல்லையே’ என நினைத்து
” ஏன் மாமா, அத்தை மாமா ஞாபகம் வந்திருச்சா… கவலப்படாதிங்க நம்மள தெய்வமா இருந்து வாழ்த்துவாங்க”
தன் மனதை சரியாக அறிந்து கொண்டதை நினைத்து பெருமிதப்பட்டவன் “சரி சரி போய் ரெஸ்ட் எடு” என்றான்.
“ரெஸ்ட் எடு எழிலு சொல்லுங்க மாமா” இவள் செல்லம் கொஞ்சி கொண்டே கேட்டாள்.
“எழிலு… ரெஸ்ட் எழிலு… எடு எழிலு ….இராத்திரில எழிலு… பேசலாம் எழிலு…” என வார்த்தைக்கு ஒரு எழில் போட..
“போங்க மாமா என்னைய கிண்டல் பண்றிங்க..” என சிணுங்கினாள் .
அவள் சிணுங்களில் இவன் சத்தமாக வாய் விட்டு சிரித்து விட்டு போனை வைத்துவிட்டான் .
இவனின் சிரிப்பை பார்த்த இருளாயி பாட்டி கைநிறைய உப்பு மிளகாய் கொண்டு வந்து ,
“கிழக்கு பார்த்து நில்லு ராசா” என நிற்க வைத்து திருஷ்டி சுற்றி விட்டு ,
“இந்த மகராசி வந்த பிறகு தான் ஒன் முகத்துல சிரிப்பையே பார்க்கறேன். சீக்கிரம் இந்த வீட்டுக்கு வந்து உங்கம்மா லட்சுமி மாதிரியே இந்த வீட்டையே நெறக்க வைக்கனும்” என சொல்லி கொல்லப்புறம் சென்றார் . தான் நினைத்த மாதிரியே பாட்டியும் சொல்லவும் மனசு நிறைந்த பூரிப்போட ஆலைக்கு சென்றான் .
இப்போழுது எல்லாம் தனஞ்ஜெயனின் நாட்கள் எழிலரசயினால் தொடங்கி எழிலரசியோடு முடிகிறது . தினமும் போனில் பேசி பேசியே அவனோடு குடும்பம் நடத்தினாள் எழிலரசி . போனிலேயே வீட்டு வேலையாட்களை வேலை வாங்கி வீட்டையும் நிர்வாகம் பண்ணினாள் .
இந்த நிலையில் தனஞ்ஜெயன் பிறந்தநாள் வந்தது. அவனுடைய பிறந்தநாளுக்கு எழிலரசி தன் அண்ணன் தமிழரசுவை கூட்டி கொண்டு பொள்ளாச்சி சென்று அவனுக்கு சில பரிசுகள் வாங்கி கொண்டு வந்தாள்.
எப்போதும் தனஞ்ஜெயன் பிறந்தநாளை பெரிதாக கொண்டாடியதில்லை. புது துணி அணிவான். கோயிலுக்கு போவான். வீட்டில் அவன் தாய் லட்சுமி வடை பாயாசத்தோடு சாப்பாடு செய்வார். கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் இரவு ஓட்டலில் சாப்பிட செல்வான்.
பெற்றோர்க்கு பிறகு கோயிலுக்கு மட்டும் சென்று வருவான் அவ்வளவே. தனஞ்ஜெயன் பிறந்தநாள் அன்று தன் பெற்றோரிடமும், சுந்தரம், கண்ணன் ஆகியோரிடம் அனுமதி பெற்றே தனஞ்ஜெயன் வீட்டிற்கு வந்தாள் எழிலரசி.
காலையில் தனஞ்ஜெயன் எழுவதற்குள் வந்துவிட்டாள். தன் வண்டியில் செல்கிறேன் என்றவளை அவள் தந்தை தான் கல்யாணத்திற்கு முன்பு தனியாக செல்வது ஊருக்குள் வேறுவிதமான பேச்சாகிவிடும் என தமிழரசனை கொண்டு போய் விட்டுட்டு வருமாறு கூறியிருந்தார்.
தனஞ்ஜெயனிடம் தன் வரவைப் பற்றி சொல்லவுமில்லை வந்தவுடனேயே சாமியறையில் விளக்கு ஏற்றி வணங்கி விட்டு சமயலறையில் புகுந்தவள்,
“ஓய் கிழவி நகரு.. நகரு… உன் வழக்கமான இட்லிச்சட்டிய தூக்கி அடுப்புல வச்சிட்டியா….”
“ஆமாண்டி யம்மா நான் இப்பவும் கிழவி தான் பத்து வயசுல இருந்தே நீ என்ன கிழவினு தான கூப்பிடற…”
“சரி.. சரி… புலம்பாத ஆயா நானே இன்னைக்கு என் கையால மாமனுக்கு ஆக்கி போடனும்னு வந்திருக்கேன் . உனக்கு இன்னைக்கு ரெஸ்ட் . ஓரமா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாரு ”
“ஏயா என்ன மாதிரி நல்லா சோறு குழம்பு ஆக்க தெரியுமா…”
“உனக்கு கொழுப்பு கூடி போச்சு கிழவி ஏதோ வேற வழியில்லாம என் மாமன் நீ ஆக்கி போடறதை திங்கறாரு… நீ என்னமோ செப் தாமோதரன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க.. நீ பரவை முனியம்மா ரேஞ்சுக்கு கூட ஒர்த் இல்ல … உங்கிட்ட பேசிட்டே இருந்தா வேலை ஆகாது தள்ளு.. தள்ளு…”
அவள் முன்பு மலையனூரில் இருந்த காலத்தில் இருந்தே அப்படி தான் இருளாயி பாட்டியிடம் கிழவி என கூப்பிட்டு ஏதாவது வம்பு வளர்த்து கொண்டு தான் இருப்பாள். அதற்காக மரியாதை தெரியாதவள் என்றில்லை. வெளிஆட்கள் முன்பு ஆயா என்று தான் அழைப்பாள். இருளாயி பாட்டியும் இவளிடம் சரிக்கு சரி வாயாடுவார்.
தனஞ்ஜெயனின் தாய் லட்சுமியும் அவளின் சேட்டைகளை கண்டு ரசிப்பார் . பெண் பிள்ளை இல்லை என்ற ஏக்கத்தை இங்கிருந்த நான்கு வருடங்களில் இவள் கொஞ்சம் தீர்த்து வைத்தாள்.
வாக்கிங் போக கீழே வந்த தனஞ்ஜெயன் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு எழிலு குரலு மாதிரியே இருக்கே என நினைத்து கொண்டே கீழே வந்தான். சமயலறைக்கு சென்று பார்த்த போது இடுப்பில் சேலையை தூக்கி செருகிக் கொண்டு அடுப்பில் ஏதோ கிளறி கொண்டு இருந்தாள்.
தனஞ்ஜெயன் வந்ததை வேலை கவனத்தில் அவள் கவனிக்கவில்லை. ஆனால் பாட்டி கவனித்து விட்டு சத்தமில்லாமல் கொல்லைப்புறம் சென்றுவிட்டார்.
அவளின் பின்புறம் சென்று தோள் வளைவில் எட்டிப் பார்த்தவாறே ” இங்க என்னடி பண்ணிட்டு இருக்க..” என்றான்
அவனின் குரல் தீடிரென்று கேட்கவும் பயத்தில் கையில் இருந்த கரண்டியை நழுவ விட்டு துள்ளி குதித்து திரும்பினாள்.
“ஏன் மாமா இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் பின்னாடி வந்து பேசுவிங்களா…. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.”
“ஹேய்… ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்…. ஒன்னுமில்ல..” என்று சொன்னவாறே பதட்டத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கைகால் நடுங்க நின்றவளை பார்த்து அவளை லேசாக அணைத்து சமாதனப்படுத்தலாம் என நினைத்து அருகில் நெருங்க இன்னும் பதட்டம் கூடி அவள் பின்னால் நகர்ந்து செல்ல…
அது வரை அவனுக்கு ஏதும் விபரிதமான எண்ணம் தோன்றவில்லை. ஆனால் அவன் கிட்ட நெருங்க அவள் இரண்டடி தள்ளி நிற்கவும், அப்போது தான் அவனுக்கு விவகாரமான எண்ணம் எல்லாம் தோன்றியது.
அவள் மாநிறத்திற்கு எடுப்பாக பேபி பிங்க் நிறத்தில் பர்ப்பில் கலரில் சிறு சிறு பூக்கள் போட்ட சேலை உடுத்தி நீண்ட பின்னலில் மல்லிகைசரத்துடன் லேசான ஒப்பனையில் நெஞ்சு கூடு ஏறி இறங்க நின்றவளை பார்த்தவன், ஒரே எட்டில் நெருங்கி அவளை இழுத்து அணைத்து இவனுக்கு தோதாக ஒரு கையால் அவள் கழுத்தை வளைத்து நெற்றி கண் கன்னம் என தன் இதழ்களால் உலா வந்தவன் , இறுதியில் அவளின் இதழில் இளைப்பாறினான். இன்னொரு கையோ அவளின் வெற்று இடையின் குழைவை சோதித்து பார்த்து கொண்டு இருந்தது.
முதலில் மருண்டவள் பின் அவளிள் காதல் கொண்ட மனது விழித்துக் கொள்ள மாமனின் அதிரடி தாக்குதலில் மெல்ல மெல்ல கரைந்து கொண்டு இருந்தாள். தன் மாமனின் பிரத்யேகமான வாசனை அவனுக்கே அவனுக்கு உண்டான வாசனை அவளை மயக்கத்தில் ஆழ்த்தியது. தான் மட்டுமே உணரக்கூடிய தன் ஆணின் வாசனை அவளை கிறங்க வைத்தது.
முதலில் மருண்டவிழிகள் மெல்ல மெல்ல மருட்சி மறைந்து காதலில் சொக்கி விழி மூடி அவள் நிற்க பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு பித்தம் தலைக்கேற இதழில் அழுத்தத்தை கூட்டி சுவைக்க சில பல நிமிடங்கள் கழித்து அவள் மூச்சுக்கு தவிக்கவும் தான் அவளை விட்டு விலகினான்.
அவன் விலகவும் சட்டென்று மாயவலை அறுந்தார் போல முகம் வாடியது எழிலரசிக்கு . அது ஒரு நிமிடம் தான் மறுநிமிடம் நாணம் சூழ்ந்து கொள்ள திரும்பி நின்று கொண்டாள். அவளின் செயல் இவனுக்கு உல்லாசமாக இருந்தது.
தனஞ்ஜெயன் முகம் நிறைந்த புன்னகையுடன் வாக்கிங் சென்றுவிட , இவளுக்கு தான் மனம் ஒரு நிலைக்கு வர சற்று நேரமெடுத்தது.
அவனுக்கு பிடித்தமான உணவுகளாக காலை டிபனுக்கு செய்து கொண்டு இருந்தவளுக்கு ஒரே யோசனை தான் வாங்கி வந்த பரிசுகளை மாமனின் முகம் பார்த்து கொடுக்க வெட்கம் தடுக்க என்ன செய்வது என
ஒரு யோசனை தோன்ற அவனின் படுக்கையறைக்கு சென்று அவன் கண்ணில் படுமாறு படுக்கை மேலே எல்லாம் அழகாக வைத்துவிட்டு வந்து அமைதியாக வேலை செய்தாள்.
வாக்கிங் சென்றவனுக்கோ எதற்காக இன்று வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்ற சிந்தனை அவன் பிறந்தநாள் இன்று என அவனுக்கு தெரியும் அதை தான் அவன் பெரிது படுத்துவதில்லையே . அதனால் அவளிடம் சொல்லவுமில்லை. தன் சித்தப்பா மக்களோ இல்லை கருணாவோ சொல்லியிருக்க கூடும் என நினைத்து கொண்டான்.
வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்தவன் “பாட்டி காபி” என கேட்க
எழில் அவனுக்கு பிடித்த பில்டர் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு டேபிளில் வைத்து உள்ளே சென்றுவிட்டாள். கண்கள் அவளை ரசிக்க வாய் காபியை ருசிக்க என ஐந்து நிமிடம் குடிக்க வேண்டிய காபியை அரைமணி நேரம் குடித்தான்.
பிறகு குளிக்க தன்னறைக்கு சென்றான். சென்றதும் அவன் பார்த்தது அவள் அவனுக்காக வாங்கிய பரிசுகள் தான். அதை கையில் எடுத்தப் பார்த்தான். அதில் ஒரு லைட் பிஸ்தா கலரில் காட்டன் சட்டையும் டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட்டும் கூடவே ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு பாஸ்ட்டிராக் வாட்சும் இருந்தது.
“எழில்….எழில்… ஒரு நிமிஷம் மேல வா” என சத்தமாக கூப்பிட்டான் .
பாட்டி காய்கறி நறுக்க அவள் அடுப்பில் வேலை செய்து கொண்டு இருந்தாள். இவனின் சத்தத்தில் திடுக்கிட்டவள் அவனின் அறைக்கு எப்படி செல்வது பாட்டி வேற இருக்காங்க என தடுமாறினாள் .
பாட்டி “தம்பி கூப்பிடுது பாரு போய் என்னன்னு கேளு”
“நான் எப்படி பாட்டீ…..”
“போ சாமி எங்க ராசாவ பத்தி எங்களுக்கு தெரியாதா….”
தயங்கி தயங்கி மேலே சென்றாள். அவனின் அறை வாசலில் தயங்கி நிற்க இவளை பார்த்தவன்
“உள்ள வா… இதெல்லாம் என்ன” என கேட்க
உள்ளே வந்தவள் கதவருகிலேயே நின்று கொண்டு “அது வந்து.. அது.. உங்க பர்த்டேகு நான் வாங்கிய கிப்ட் ”
“அது ஏன் இங்க வச்சிருக்க..”
அவனை பார்க்காமல் தரையை பார்த்தவாறே ” அது … எனக்கு.. உங்களுக்கு….”
“ம்ம்ம்ம்…. இது… உனக்கு….. எனக்கு…” அவளை போலவே பேசி காட்டி “கையில கொடுக்காம இங்க வைச்சிருக்க”
“அது … நான்… கொடுக்கத் தான் நினைச்சேன். ஆனா எப்படி நான்… ச்சு போங்க மாமா…”வெட்கம் தாளாமல் அவள் ஓடிவிட்டாள். இவளின் வெட்கத்தை பார்த்து சிரித்துவிட்டான்.
‘படபடன பட்டாசு மாறி பொறிவா இவளுக்கு வெட்கமா…வெட்கத்துலயும் அழகா தான் இருக்கா…’ நினைத்து கொண்டே குளிக்க சென்றான்.

ஒட்டாமல் பேசும் வாய்க்கு
அவன் தன் வாய் கொண்டு பூட்டிட
வெட்கம் எனும் திரை கொண்டு
தன்னை மூடி கொண்டவளுக்கு
திரை விலக்கி பூட்டை திறக்கும்
சாவியும் அவன் தான்
பூட்டும் அவனே சாவியும் அவனாகி
போனது தான் விந்தை காதலில் தான்
இம்மாதிரி விந்தைகள் அரங்கேறும் !

புள்ளி மேவாத மான் – 4 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31

31       அன்றைய நிகழ்வுக்கு பின் அவன் சரியாக கூட அவளிடம் பேசுவது இல்லை. இவளே சைட்டுக்கு சென்றாலும் பில்டிங் பற்றிய விவரங்கள், கட்டிடம் எந்நிலையில் உள்ளது , அவள் ப்ராஜக்ட் விஷயங்கள் பேசுவதோடு சரி.. வேறு எவ்வளவுதான் பேசினாலும் அவளை முறைத்துவிட்டு சென்று விடுவான். ஆனால் தவிர்க்கவில்லை.. அந்த மட்டில் போதுமென்று இவளும் தனக்கு தோன்றாத சந்தேகத்தையும், தேவையில்லாத விளக்கங்களையும், ப்ராஜெக்டில் கேட்டே அவனை தன்னுடன் இருத்திக் கொள்ள பார்ப்பாள் அதிக நேரம்.

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31 Read More »

புள்ளி மேவாத மான் – 3

3 – புள்ளி மேவாத மான்

அலுவலக அறைக்கு வந்தவனுக்கு கொஞ்ச நேரம் வேலை மேல் கவனம் செல்லவில்லை . பெண் பார்க்க என்று அழைத்து சென்று கட்டாயமாக திருமணத்தை உறுதி செய்ததே அதிர்ச்சி. தனஞ்ஜெயன் வாழ்க்கையில் எழிலரசி அதிரடியாக வந்ததையே அவன் மனம் ஏற்க தடுமாறி கொண்டு இருக்கும் நிலையில், அவனுக்கான அவகாசம் கொடுக்காமல் மனதிலும் அதிரடியாக உள்ளே நுழைய முயற்ச்சிக்க வெகுவாக தடுமாறி போனான் .
அவன் மனம் எழுதாத கரும்பலகையாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஏற்கனவே ஒரு பெண் எழுதி அழித்து விட்டு சென்ற தடயம் இருக்க , இவளின் வரவை ஏற்க மனம் திண்டாடி போனான் . அவனின் தாய்க்கு பிறகு’ வந்தாயா சாப்பிட்டாயா ‘ என்ற அன்பான உபசரிப்புகள் இல்லை . கேட்பார்கள் தான் அது சம்பிரதாய வார்த்தைகளாக தான் இருந்தது . எழிலரசியின் உரிமையான பேச்சு மனசுக்கு இதமளித்தாலும் , அதையும் மீறி மனம் சஞ்சலமடைந்தது .
சிந்தனையிலிருந்து விடுபட்டு ஒரு பெருமூச்சோடு வேலையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே போன் அடிக்க எடுத்து பார்த்தவனோ பல்லை கடித்தவாறு இவளை என்ன பண்றது என மனதில் வசை பாடியவாறே போனை காதில் வைக்க
“மாமா மதிய சாப்பாடு சாப்பிட்டிங்களா….”
” மணி ஒன்னு தான் ஆகுது சாப்பிட இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்” கோபத்தை அடக்கி கொண்டு பேசினான்
“அச்சோ…. மாமா நேரத்துக்கு சாப்பிடணும் போங்க போங்க போய் சாப்பிட்டு வந்து வேல செய்ங்க..” என சொல்லி போனை வைத்துவிட்டாள்.
எரிச்சலுடன் போனை வைத்து விட்டு வேலையை செய்ய ஒரு அரைமணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தாள் எழிலரசி .
திரையில் அவளின் படத்தை பார்த்தவுடன் சைலண்டில் போட்டு விட்டு வேலையை பார்த்தான் இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது . ஒரு ஐந்து நிமிடம் போன் அமைதியாக இருக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டான்
மில்லை கவனித்து கொள்ளும் காரியதரிசி தயங்கியவாறு இவனின் முன்னால் வந்து நின்றார்
வேலை செய்து கொண்டு இருந்தவன் நிமிர்ந்து “சொல்லுங்கண்ணா ”
“தம்பி அரசி போன் பண்ணுச்சு…. நீங்க போய் சாப்பிட்டு வாங்க தம்பி நான் இருக்கேன்ல…”
வந்த கோபத்தை அடக்கி கொண்டு ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றான் . வீட்டிற்குள் நுழையவும் கீர்த்தி தன் அன்னை கொடுத்த கறிகுழம்பை இருளாயி பாட்டியிடம் கொடுத்து விட்டு வந்தவளை பிடித்து கொண்டான் தனஞ்ஜெயன்.
“கீர்த்தி நில்லு ”
“என்ன அண்ணா”
” என்ன வேலை பண்ணி வச்சிருக்க … ”
“நான் எதும் பண்ணலண்ணா என்ன சொல்லறிங்க எனக்கு புரியல ” அப்பாவியாக அவனையே திருப்பி கேட்க
சுருசுருவென வந்த கோபத்தை ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தவன் “நீ தானே என் போனை வாங்கி எழிலரசியிடம் கொடுத்து அவ நம்பர் போட்டோ சேவ் பண்ணி என் நம்பர அவளுக்கு கொடுத்து என்ன பண்ணி வச்சிருக்க… உன் வயசுக்கு ஏத்த வேலையா இது ” என மிரட்ட…..
அவனின் மிரட்டலில் கண்கள் கலங்கி “நானா ஏதும் பண்ணலண்ணா… வெற்றியண்ணா , கருணா மச்சான் எல்லாம் சொன்னதால தான் ” என உதடு பிதுக்கி அழுகைக்கு தயாராக……
தங்கையின் அழுகையில தன்னையே நொந்து கொண்டு “அழாதே அண்ண ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன் மனசுல வச்சுக்காத” என கன்னத்தில் தட்டி சமாதானம் செய்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் எழிலரசி போன் பண்ணினாள்
“மாமா சாப்பிடிங்களா …” அவ்வளவு தான் அடுத்த வார்த்தை அவள் பேசும் முன் ….
“என்னடி நினைச்சிட்டு இருக்க சும்மா போன் பண்ணி நைநைனு மனுசன தொந்தரவு பண்ணிட்டு இருக்க…. இவ்வளவு நாளா நீங்க சொல்லி தான் நாங்க சாப்பிட்டமா… இனி போன் பண்ண தொலைச்சுப்புடுவேன் பார்த்துக்க …. ” என திட்டிட்டு போனை வைத்துவிட்டான்.
இந்த பக்கம் கேட்டு கொண்டு இருந்த எழிலரசிக்கு கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் . அவன் திட்டியதால் வருத்தத்துடன் வந்த அழுகை என நினைத்தால் அது தவறு பார்க்கமாட்டாமோ பேசமாட்டோமா என ஏங்கிடந்த மனதிற்கு அவனின் திட்டுக்கள் பூமாரியாக பொழிந்தது.
அதற்கு பிறகு அவள் போன் பண்ணவில்லை இரவு வீடு வந்தவுடன் அவனுடைய போனில் வாட்சப் மெஸேஜ் ரிங்காரமிட எடுத்துப் பார்த்தான்.
‘வீட்டுக்கு வந்துட்டிங்களா மாமா …. வரப்பனி பெய்யுது பச்ச தண்ணீ வேணாம். சூடு தண்ணீல குளிங்க …..’
‘ஆளுங்கள வச்சு வேவு பார்ப்பாளோ ‘ என நினைத்தவாறே குளிக்க சென்றான்.
குளித்து வந்து சாப்பிட்டு விட்டு டீவியில் செய்தி சேனல் பார்த்து கொண்டு இருக்க மறுபடியும் வாட்சப்பில் மெஸேஜ் எடுத்துப் பார்த்தான் .
மீண்டும் எழிலரசியே , ‘சாப்பிடிங்களா மாமா…. தூங்கலையா..… டீவி பார்க்கறிங்களா… ‘ படித்தவன் லேசாக அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான் எங்கயவாது ஆள் வச்சு வேவு பார்க்கிறாளா என,
மீண்டும் வாட்சப்பில் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி இவர்களின் நிச்சயதார்த்தின் போது எடுத்த இருவரின் படத்தை முகப்பு படமாக வைத்திருந்தாள்
அடுத்தடுத்து மெஸேஜ்
‘ தூங்கலையா …. ‘
‘ ரொம்ப நேரம் முழிச்சிருக்காதிங்க ….’
‘ தூக்கம் கெடாம காலாகாலத்துல தூங்குங்க மாமா ‘
‘ குட் நைட் ‘
‘ நான் குட் நைட் சொன்னேன்ல பதிலுக்கு நீங்களும் எனக்கு சொல்லுங்க மாமா ‘
இவளின் அடாவடியில் லேசாக சிரிப்பு கூட வந்தது தனஞ்ஜெயனுக்கு
‘ போடீ … ‘ என பதில் அனுப்பினான்
உடனே எழிலரசி உதட்டை சுழித்து முகத்தை நொடித்து கொள்ளும் குழந்தை படம் ஒன்றை அனுப்பி வைத்தாள்
‘ குட் மார்னிங் மாமா ‘ காலையில் தனஞ்ஜெயன் எழுந்தவுடன் வந்த முதல் மெஸேஜ்
சற்று நேரத்திற்கு எல்லாம் இடைவெளி விட்டு அடுத்தடுத்து
‘மாமா வாக்கிங் போயிட்டு வந்துட்டிங்களா….’
‘இன்னைக்கு கோயிலுக்கு போகலையா…. ‘
‘சாப்பிடிங்களா.…. ‘
‘ வயலுக்கு கிளம்ப்பிடிங்களா …. ‘
அன்று நாள் முழுவதும் இதுவே தொடர இரவு படுக்கைக்கு வந்தவனுக்கு ‘குட் நைட் மாமா ‘ எனற மெஸேஜ் வர பார்த்தவனுக்கு யோசனை .
‘இவ இன்னைக்கு போன் பண்ணவே இல்லையே … ‘ என யோசிக்க..
‘ஓ.. அம்மணி போன் பண்ண மாட்டாங்களோ நாம நேத்து திட்னதுக்கு தான் இந்த ரியாக்ஷனா ….’
சிரிப்பு தாளாமல் உடனே இவனே அவளுக்கு அழைத்தான்
போனில் ‘ஜெய் மாமா ‘ என்ற அழைப்பை பார்த்தவுடன் எடுத்ததும் அவனை பேசவிடாமல் ஆர்பாட்டமாக “சொல்லுங்க மாமா இன்னும் தூங்கலையா ….”
“ஏன்டி போன எடுத்தவுடனே ஹலோ சொல்லனும் யார் பேசறது என கேட்கனும் இதெல்லாம் உனக்கு தெரியாதா ” என்றான் உல்லாசமாக
“அது புதுசா பேசறவங்களுக்கு தான் நமக்கெதுக்கு மாமா ”
“ஓஹோ அப்டியா அம்மணி எத்தன நாளா எங்கிட்ட பேசிட்டு இருக்கிங்க … ”
“போங்க மாமா சும்மா கிண்டல் பண்ணிகிட்டு … ”
“எதுக்கு மெஸெஜா போட்டு தள்ளற….”
“அது போன் பேசினா திட்டுனிங்களா அதான் ”
“திட்டவும் பயந்துட்டியா.. ” பயந்துட்டா போல என நினைத்து கனிவாக கேட்க
“ச்சேச்சே அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதிங்க மாமா போன் பண்ணி டென்ஷன் பண்ண வேணாமேனு தான் ”
” பின்ன எப்ப பாரு சாப்பிடயா வந்தயா தூங்குனியானு கேட்டுகிட்டே இருந்தா மனுஷனுக்கு கோபம் வராதா ….”
“நேரத்துக்கு சாப்பிடிங்களா தூங்குனிங்களா உங்களுக்கு கேட்க யாரு இருக்காங்க இனி நான் தான் மாமா கேட்கனும் ”
அவளின் பேச்சு இவன் மனதை ஏதோ செய்தது தொண்டை அடைத்து கொண்டு பேச வரலை
அதற்குள் இவள் “மாமா… மாமா ….. ” என இரண்டு மூன்று முறை அழைத்திருக்க …..
தன்னை சரி செய்து கொண்டு “ஹாங் சொல்லு ”
“நான் போன் பண்ணுவேன் நீங்க எடுத்து பதில் சொல்லனும் சரியா …”
“ம்ம்ம்…”
“சரினு சொல்லுங்க மாமா”
“சரிடி போனை வச்சிட்டு தூங்கு போ”
“நீங்களும் தூங்குங்க” என சொல்லி போனை வைத்து விட்டு
வாட்சப்பில் ‘ ஒரு குட்நைட் ‘ மெஸெஜ் போட்டு விட்டு மாமானோடு பேசியதில் மனசு நிறைந்திருக்க படுத்தவுடன் தூங்கிவிட்டாள்.
இங்கு தனஞ்ஜெயனோ தூங்காமல் யோசித்து கொண்டு படுத்திருந்தான் பார்த்த இரண்டுநாள் மட்டுமே ஆகியிருந்த ஒருத்திக்கு தான் போன் பண்ணியது மட்டுமில்லாமல் அவளிடம் சரிக்கு சரி வாயாடியது ஆச்சரியமாக இருக்க , தன் தாய்க்கு பிறகு யாரிடமும் இப்படி பேசியதில்லை.
ஏன் தான் காதலித்த பூங்கொடியிடம் கூட இப்படி பேசியிருக்கமா என யோசிக்க இல்லை என்றே தோன்றியது என்னை ஏதோ செய்யறா ‘ மாயக்காரி ‘ என சிரித்து கொண்டே தூங்கிவிட்டான்.
நிச்சயம் செய்து பத்து நாள் ஆகியிருக்க எழிலரசி வீட்டார் எழிலரசியோடு மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தனர். இந்த பத்து நாளில் எழிலரசி போனில் பேசி பேசியே தனஞ்ஜெயனோடு மனதளவில் கொஞ்சம் நெருங்கி இருந்தாள்
போனில் இவள் செய்த சேட்டைகள் ஏராளம் தனஞ்ஜெயனும் இவள்சேட்டைகளை ரசிக்க பழகி கொண்டான் காலையில் ‘ குட் மார்னிங் ‘ ஆரம்பித்து ‘ குட் நைட் ‘ என சேட்டிங்கிலும் போனிலும் பேசி பேசியே நெருங்கினாள்.
தனஞ்ஜெயன் சாப்பிட்டான் என தெரிந்த பிறகு தான் இவள் சாப்பிடுவாள் அதை அவனிடம் சொல்லியும் இருந்தாள் அப்படி இருந்தும் சில சமயங்களில் வேலை காரணமாக சாப்பிட தாமதமானால் உடனே ஒரு செல்பி எடுத்து அனுப்புவாள்.
சாப்பாட்டு மேஜையில் தன் முன் தட்டில் சாப்பாடு வைத்து அதை சோகமாக பார்த்து கொண்டு இருப்பது போல படம் எடுத்து அனுப்புவாள்.
அதைப் பார்த்ததும் தனஞ்ஜெயன் சிரித்து கொண்டே ‘ சேட்டைகாரி ‘என அலுத்து கொள்வான். உடனேயே சாப்பிட கிளம்பிடுவான்
எழிலரசி தனஞ்ஜெயன் வீட்டிற்கு மிகவும் ஆர்வத்தோடு வலது காலை எடுத்து வைத்து வந்தாள். வீட்டை பார்த்தவளுக்கு கொஞ்சம் முகம் சுருங்கி விட்டது.
வீட்டை இவள் கண்கள் ஏக்கத்துடனும் முக வாட்டத்துடனும் பார்த்தன . இதை எல்லாம் தனஞ்ஜெயன் கவனித்து கொண்டு தான் இருந்தான் .
பூஜையறையில் விளக்கேற்றி அங்கிருந்த சாமி படங்களை இருவரும் ஜோடியாக வணங்கி அடுத்து தனஞ்ஜெயன் பெற்றோர் படத்தையும் வணங்கினர். அப்போது எழிலரசியின் கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பி நின்றது .
தனஞ்ஜெயன் எழிலரசியின் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டு அழாதே என்பதாக தலை அசைத்தான் . எழிலரசி அவனை பார்த்து முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு முறுவலித்தாள் .
பெரியவர்கள் எல்லாம் ஒருபுறம் பேசி கொண்டு இருக்க இளைய பட்டளாங்கள் ஓரிடத்தில் ஒன்று கூடினர் . அரசியை வைத்து தனஞ்ஜெயனை ஓட்டிக் கொண்டு இருந்தனர் .
கருணாகரன் முதலில் ஆரம்பித்தான் .
” ஏம்மா அரசி எப்படிமா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர இப்படி சிரிப்பு ஆபிசர மாத்தின …. ”
உடனே வெற்றி “ஆமாம் அண்ணி சட்டைக்கு போடற கஞ்சிய எங்க அண்ணன் உடம்புக்கும் போட்ட மாதிரி விறைப்பா இருப்பாரு அவரை அடியோட சாச்சுப்புட்டிங்களே ”
கருணாவின் மனைவி வசந்தி “எல்லாம் சும்மா எங்கண்ணனை கிண்டல் பண்ணாதிங்க ” என சொல்லி விட்டு
தன் கணவனைப் பார்த்து “இவரு ரொம்ப உத்தமரு …. கல்யாணத்துக்கு முன்னாடி என்னை பார்க்க கொல்லப் பக்கம் சுவரேறி குதிச்சு வந்தவரு தான”
“தப்பு தங்கம் இப்படி எல்லாம் பப்ளிக்ல புருஷனோட இமேஜ டேமேஜ் பண்ணகூடாது” என வசந்தியின் தாடையை பிடித்து கொஞ்ச..
“பப்ளிக்ல ப்ரீ ஷோ ஓட்டாதிங்க மச்சான் கன்னி பசங்க சாபம் பொல்லாதது ” என வெற்றி சகோதரர்கள் கூச்சலிட
இதை எல்லாம் அமைதியாக ரசித்து கொண்டு இருந்த தனஞ்ஜெயனை ரசித்து கொண்டு இருந்தாள் எழிலரசி அவளின் பார்வையை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தவனின் கண்களும் அவளின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.
இதை பார்த்த கருணா “டேய் மாப்பிள்ளைகளா என்ன சொன்னிங்களே அங்க உங்க அண்ணன பாருங்கடா …..” சொல்லி கைதட்டி சிரிக்க ….
தனஞ்ஜெயன் கருணாவை இழுத்து முதுகில் இரண்டு வைக்க என சிரிப்பும் கும்மாளமாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து கீர்த்தியை வீட்டை சுற்றிப் பார்க்கனும் வா என அழைத்தாள் எழிலரசி எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க
“நான் காமிக்கறேன் வா” என தனஞ்ஜெயன் எல்லோர் முன்பும் சொல்லியே கூட்டி சென்றான்.
“எங்க அண்ணன் தைரியம் உங்களுக்கு வருமா நீங்க கள்ளத்தனமா சுவேரேறி குதிச்சு வந்தவர் தான ” வசந்தி கருணாவை வார டக்குனு கருணா தலையை தொங்க போட இளசுகள் அடக்கமாட்டால் சிரித்தனர் .
எல்லோரும் இருந்த ஹாலைத் தாண்டி இருவரும் உள் அறைக்கு சென்றனர்
“மாமா இங்க தான முற்றம் இருந்துச்சு நானும் அத்தையும் கயித்து கட்டில்ல படுத்துகிட்டு நட்சத்திரத்த எண்ணுவோம்”
“இங்க தாழ்வாரத்துல ஊஞ்சல் இருந்துச்சுல அதுல என்னை உட்காரவச்சு தான் அத்த சடை பின்னி விடுவாங்க ”
பின்பக்கம் தோட்டத்திற்கு சென்றவள் மாட்டுத் தொழுவத்தைப் பார்த்து விட்டு “மாமா செல்லா கன்னு குட்டி இன்னும் இருக்கா…”
அவளை அழைத்து கொண்டு தொழுவத்திற்குள் போனவன் செல்லாவை காட்டினான் அது ஒரு கன்று ஈன்று கறவையாக நின்று கொண்டு இருந்தது.
” செல்லா ! ஏய் ! செல்லா… என்னை தெரியுதா ..” என அதன் உடலை வாஞ்சையாக தடவி கொடுக்க இவளின் குரலோ இவளின் ஸ்பரிசமோ ஏதோ ஒன்று இவளை இனம் கண்டு கொண்டு இவளை செல்லமாக முட்டி விளையாண்டது .
“மாமா என்னைய இன்னும் ஞாபகம் வச்சிருக்கு பாருங்க …”
“இப்படி தான் என்கூட முட்டி விளையாடும் ”
“இதுக்கு செல்லானு பேரு கூட நான் தான் வச்சேன் ”
கண்கள் மின்ன பேசிய இவளின் பேச்சுக்களை கேட்டவன் மலைத்து போனான் என்ன ஒரு நாலு வருடம் இந்த ஊரில் இருந்திருப்பாளா …அதுவும் விவரமறியாத வயதில்…. இன்னும் ஞாபகம் வைத்து ஒவ்வொன்றையும் சொல்கிறாளே …. என இவளின் செயல் பேச்சு எல்லாம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது .
மங்கை பருவத்திலேயே
மன்னவனிடம்
மையல்கொண்டாள்
மன்னவனை மட்டுமா
நேசித்தாள்
மன்னவனோடு சேர்ந்து
அவனின் இல்லம்
இல்லத்தாரையும் நேசித்தாள்
அதை அவனும் அறியவில்லை
அவன் இல்லத்தாரும் அறியவில்லை

புள்ளி மேவாத மான் – 3 Read More »

என்‌ கர்வம் சரிந்ததடி சகியே.. 30

30     கல்லூரிக்கு விடுமுறை விட்டதை அறியாத தேவா இரண்டு நாட்களாக வைஷாலி சைட்டுக்கு வரவில்லை என்று அவளை தேடி கல்லூரி பக்கம் ஏதேச்சையாக செல்வது போல செல்ல , அங்கே யாருமற்ற கல்லூரியே அவனை வரவேற்றது.   அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களை விசாரிக்கும் போது தான் கல்லூரிக்கு பத்து நாட்கள் விடுமுறை என்று அவனுக்கு தெரிந்தது. பத்து நாளா… என்ற எண்ணம் மேலங்கியது.      வேலையில் மனம் செல்லவில்லை.. எல்லோரிடமும் எரிந்து விழுந்தான்…

என்‌ கர்வம் சரிந்ததடி சகியே.. 30 Read More »

புள்ளி மேவாத மான் – 2

புள்ளி மேவாத மான் – 2

பெரியவர்கள் தட்டை மாற்றியவுடன் தனஞ்ஜெயனையும் எழிலரசியையும் உட்கார வைத்து சந்தன நலுங்கு வைத்தனர். எழிலரசியின் முகம் பூரித்து போய் இருந்தது தன் மாமனின் அருகில் ஜோடியாக உட்கார்ந்து இருப்பதே அவள் மனிதில் ஆனந்தத்தை அள்ளி கொடுத்தது . பத்து வருடங்களாக கண் பாராது அவனின் நினைவை மட்டும் சுமந்து கொண்டு இருந்தவளுக்கு அவன் அருகில் இருப்பது பல நாட்கள் பட்டினி கிடந்தவளுக்கு விருந்து படைத்தது போல இருந்தது.
தனஞ்ஜெயனுக்கோ அந்த இடத்தில் பொருந்தி போக முடியவில்லை அவன் நினைத்து வந்தது வேறு நடந்தது எதிர்பாராதது ஏற்றக் கொள்ளவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை தொண்டையில் சிக்கிய மீன் முள் போல அவஸ்தையாக இருந்தது .
நலுங்கு வைத்து முடித்தவுடன் சுந்தரம் வந்து தனஞ்ஜெயனின் கையில் ஒரு செயினை கொடுத்து அவளுக்கு போட்டு விடச் சொன்னார் .
அதை கையில் வாங்கியவன் அவள் கழுத்தில் அணிவிக்கும் போது நேர் கொண்டு அவள் கண்களை பார்க்க அந்த கண்களில் வழிந்த நேசம் கொண்ட பார்வை இவனின் பார்வையை கவ்வி கொண்டது ஏதோ ஒரு மாய சூழலில் சிக்கி கொண்ட உணர்வு .
அடுத்தடுத்து நடந்த எதுவும் அவனின் கட்டுப்பாட்டில் இல்லை இருவரையும் நிற்க வைத்து போட்டோ எடுத்தனர் எழிலரசி மகிழ்வுடனும் தனஞ்ஜெயன் பிடிப்பில்லாமலும் நின்றனர் .
இருவரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிடும் போதும் அப்படி தான் அவனுக்கு சாப்பாடு தொண்டையில் இறங்கவில்லை அதை பார்த்த எழிலரசியோ ” ஏன் மாமா சாப்பாடு பிடிக்கலையா ஆனா உங்களுக்கு பிடிச்சத தான அப்பாகிட்ட சொல்லி செய்ய சொன்னேன் ”
” உங்களுக்கு பிடிச்ச சாப்பிடுங்க மாமா கஷ்டப்பட வேண்டாம் காபி கொண்டு வர சொல்லவா ” என்றவளிடம் எதுவும் பேசாமல் சாப்பிட்டான் .
இவளோ அவன் சாப்பிட “பூசணி அல்வா உங்களுக்கு பிடிக்கும் தான இன்னும் கொஞ்சம் வைக்க சொல்லவா ”
” மாமா இந்த பூரி வேணாம் ஒரே எண்ணெய்யா இருக்கு வேற சாப்பிடறிங்களா ” என அவள் சாப்பிடாமல் இவன் இலையை பார்த்து கொண்டே தொண தொணக்க எரிச்சலுற்றான் .
“ஏய் என்னைய பார்க்காம உன் இலையை பார்த்து சாப்பிடுடி ” கோபமாக சொல்ல அவன் என்னமோ இவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த மாதிரி முகம் கொள்ளா புன்னகையுடன் சந்தோஷமாக சாப்பிட்டாள் .
அவளின் செய்கை இவன் மனதிற்கு எரிச்சலையும் மீறி கொஞ்சமே கொஞ்சம் இதமளித்தது . இவர்களையே பார்த்து கொண்டு இருந்த தனஞ்ஜெயனின் குடும்பத்தாருக்கு தனஞ்ஜெயன் கோபப்பட்டாலும் எழிலரசி முகம் வாடாமல் சிரிப்போடு பேசுவதை கண்டு நிம்மதியடைந்தனர் .
சாப்பிட்டவுடன் எழிலரசி தன் அறைக்கு சென்று விட தனஞ்ஜெயனின் தங்கை கீர்த்தி (கண்ணன் – தேவியின் மகள் பிரசாத்தின் தங்கை) அவள் வயதுடைய உறவு பெண்கள் சிலரோடு எழிலரசியிடம் சென்று கேலியும் கிண்டலுமாக பேசி கொண்டு இருந்தனர் .
சிறிது நேரத்தில் கீர்த்தி வந்து தனஞ்ஜெயனிடம் ” அண்ணா உங்க போன் கொடுங்க ” என கேட்க எதுவும் கேட்காமல் கொடுத்தான் போனை கொண்டு போய் எழிலரசியிடம் கொடுத்தாள்
கீர்த்தி ஏற்கனவே லாக் ஓபன் பண்ணி கொடுத்து இருக்க எழிலரசி தன் நம்பரை தன் பேர் போட்டு தன் படத்தையும் பதிவு செய்தாள் அதே போல் அவனின் நம்பரை’ ஜெய்மாமா ‘ என போட்டு தன் போனில் பதிவு செய்து கொண்டாள் .
பிறகு எழிலரசி போனை கொடுக்க கீர்த்தி நல்லபிள்ளை போல பதுவிசாக தன் அண்ணனிடம் போனை கொண்டு போய் கொடுக்க தனஞ்ஜெயனும் போனை வாங்கி சட்டைப்பையில் வைத்து கொண்டான் .
கீர்த்தி யாரும் அறியாமல் தன் மற்ற அண்ணன்கள் மற்றும் கருணாவிடம் கண்ணை உருட்டி கட்டைவிரலை உயர்த்தி காட்டி சிரிப்போடு தன் தாயின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
அடப்பாவிகளா ஒருத்தனை சம்சார சாகரத்தில் தள்ள குடும்பமே தீயா வேலை செய்யுது .
மேற்கொண்டு மாப்பிள்ளை வீடு பார்க்க முகூர்த்த தேதி மற்ற சடங்குகள் என எல்லாவற்றிற்கும் நல்லநாள் நேரம் குறித்து பெரியவர்கள் சபையில் வாசிக்க அனைவராலும் சம்மதம் பெறப்பட்டது .
தனஞ்ஜெயனின் குடும்பம் சுந்தரம் குடும்பத்தினரிடம் சொல்லி கொண்டு கிளம்ப எழிலரசியோ தனஞ்ஜெயனின் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள் அவளின் எதிர்பார்ப்பை கண்டு கருணா தனஞ்ஜெயனின் அருகில் வந்து ” டேய் தனா அந்த புள்ளகிட்ட சொல்லிட்டு வாடா ” என்க கருணாவைப் பார்த்து முறைத்தான் .
அவனின் கண்ணன் சித்தப்பா ” தனா புள்ளைகிட்ட சொல்லிட்டு வாப்பா புள்ள முகம் பார்த்து நிக்குது பாரு ” என சொன்னார் வேறு வழியின்றி அவளைப் பார்த்து எந்த உணர்வுமின்றி தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பினான்
அதற்கே எழிலரசியின் முகம் பூவாய் மலர்ந்தது வீடு வரும் வரை தனஞ்ஜெயன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஏதோ சிந்தனையுடனே இருந்தான் வீட்டிற்கு வந்ததும் தாய்தந்தை அறைக்குள் நுழைந்து கொண்டான் .
மனம் குழப்பத்திலோ சோர்வாக இருக்கும் போதோ பெற்றோர் அறையில் தஞ்சம் அடைவான் . அந்த அறையில் சிறிது நேரம் இருந்தாலே அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
இன்றும் அதே போல சென்று தந்தையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் . அவன் பின்னாலேயே வந்தவர்கள் அந்த அறைக்குள் செல்லவதை பார்த்து விட்டு அமைதியாக இருளாயி பாட்டியிடம் சொல்லி விட்டு கிளம்பினர்
சிறிது நேரம் கண்மூடி அமர்ந்தவன் தலையை யாரோ கோதுவது போல இருக்க கண் திறந்து பார்க்க யாரும் இல்லை கோதி விட்டதை அவன் நன்றாக உணர்ந்தான் அவனின் தாய் அப்படி தான் கோதி விடுவார்
மீண்டும் கண்மூடி அமர ” தம்பி மனசு சஞ்சலப்படாதே இந்த பொண்ணால உன் வாழ்க்கை செழிப்பா தான் இருக்கும் ” என தந்தையின் குரல் அசரீரியாக ஒலித்தது
உடல் சிலிர்த்து போக கண்திறந்தவனனுக்கு மனம் சஞ்சலம் நீக்கி தெளிவு கிடைத்தது. அறையில் இருந்து வெளியே வந்தவன் இருளாயி பாட்டியிடம் சொல்லி கொண்டு வேலையை பார்க்க சென்றான்.
எப்பவும் அதிகாலையில் எழுந்து வாக்கிங் மாதிரி வயல் வரப்பை பார்த்து விட்டு வந்து இருளாயி பாட்டி கொடுக்கும் டீயை குடித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பான் அன்றும் அதாவது எழிலரிசியை நிச்சயம் செய்து விட்டு வந்த அடுத்த நாள் அதுபோல வாக்கிங் போயிட்டு வீட்டிற்குள் நுழையவும் அவனது செல்பேசி சிணுங்கவும் எடுத்துப் பார்க்க திரையில் எழிலரசியின் படத்துடன் எழிலரசி அழைக்கிறாள் என்ற எழுத்துக்கள் மின்ன பார்த்தவனுக்கோ ஒன்றும் புரியவில்லை
இவள் போட்டோ மற்றும் நம்பர் நம் போனில் எப்படி வந்தது என புரியாமல் முழித்தான் அதற்குள் போன் நின்று மீண்டும் அடிக்க எடுத்து இவன் ஹலோ சொல்லும் முன்பே ” மாமா எந்திருச்சு வாக்கிங் போயிட்டு வந்துட்டிங்களா டீ குடிச்சிட்டிங்களா இன்னும் அந்த கிழவி டீ கொடுக்கலையா டீயா அதுக்கு கழனிதண்ணி தேவலாம் ” இவனை பேசவிடாமல் அவளே பேசினாள்
அவள் போனை எதிர்பார்க்காதவன் அசந்து நின்றது கொஞ்ச நேரம் தான் ” ஏய் மூச்சு விட்டுட்டு பேசுடி அதென்ன பெரியவங்கள மரியாதை இல்லாம பேசறது சரி அதெல்லாம் விடு என் போன்ல உன் போட்டோ நம்பர் எல்லாம் எப்படி வந்தது யார் பார்த்த வேலை இது உனக்கு தெரியும் தான சொல்லு ”
“அச்சோ மாமா நேரமாச்சு பாருங்க போய் டீ குடிங்க நான் ஒருத்தி நேரம் காலம் தெரியாம பேசிக்கிட்டே இருக்கேன் போன வைச்சிடறேன் ” தனஞ்ஜெயனை பேச விடாமல் போனை வைத்துவிட்டாள் .
எப்படி தன் போனில் இதை யார் செய்தது என யோசிக்கும் போது தான் நேற்று கீர்த்தி தன் போனை வாங்கி கொண்டு எழிலரசியின் அறைக்கு சென்றது ஞாபகம் வந்தது இருந்த குழப்பமான மனநிலையில் அப்போ அதை கவனிக்கவில்லை இப்ப ஞாபகம் வந்தது .
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம மழுப்பிட்டு போன வெச்சிட்டா ” என முணுமுணுத்து கொண்டே உள்ளே சென்றான் டீ குடித்து குளித்து தயாராகி பூஜையறை சென்று வணங்கி விட்டு சாப்பிட சாப்பாட்டு மேஜையில் அமர போன் அடித்தது எடுத்து பார்க்க திரையில் எழிலரசி மின்னினாள் .
போனை எடுத்தவுடன் ” மாமா சாப்பிட்டிங்களா என்ன சாப்பிட்டிங்க வழக்கம் போல கிழவி இட்லி தான் செஞ்சுதா எத்தனை இட்லி சாப்பிட்டிங்க பதில் சொல்லுங்க மாமா ”
“ஏய் என்னை பேச விட்டா தான பதில் சொல்ல இட்லி தான் இன்னும் சாப்பிடல இன்னும் என்ன தெரியனும் உனக்கு அப்புறம் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசாத ”
” சரி சரி சாப்பிடுங்க ” என சொல்லி போனை வைத்துவிட்டாள் லேசான சிரிப்புடன் இருளாயி பாட்டி வைத்த உணவை சாப்பிட பல வருடங்களுக்கு பிறகு இவனின் முகத்தில் நிறைந்த சிரிப்பை காணவும் ” யாருய்யா போனுபொட்டில பேசுனது ” என பாட்டி கேட்டார்
“எல்லாம் உன்ற பேத்தி தான் ”
“ஆடி ஆத்தி அரசி புள்ளயா என்ன கேட்டுச்சு ராசா ”
“ம்ம்ம் சாப்பிடிங்களானு கேட்டா ” இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டு கொண்டே சிரிப்புடன் சொன்னான். இதுவரை எழுந்தியா சாப்பிட்டியா என அவனின் பெற்றோர் மறைவிற்கு பிறகு அந்த வீட்டில் அவனை யாரும் கேட்டதில்லை .
இருளாயி பாட்டி சாப்பாட்டு மேஜைக்கு வந்தவுடன் அந்த வேளைக்கு ஏற்றார் போல சாப்பாடு டீ காபி கொடுப்பார் தான் அதுக்கு மேல் இவனாக ஏதாவது கேட்டால் செய்து கொடுப்பார் தவிர அவராக எதுவும் கேட்கமாட்டார் . இவனும் அவரின் வயோதிகத்தை மனதில் கொண்டு செய்து வருவதை சாப்பிட்டு கொள்வான் .
விசேச நாட்களில் மற்றும் அசைவ உணவு செய்யும் நாட்களில் தனஞ்ஜெயனின் சித்தப்பா வீடுகளில் இருந்துஉணவு பலகாரங்கள் இவனுக்கு வந்துவிடும் . நீண்ட நாட்களுக்கு பிறகு அவனின் மீது உரிமையுடன் கூடிய அக்கறை கொண்ட பேச்சு அவனை கொஞ்சம் நெகிழச் செய்தது .
அதே புன்னகையுடன் வயலுக்கு சென்று வேலைகளை பிரித்து கொடுத்து விட்டு சர்க்கரை ஆலைக்கு வந்தான் . எப்பவும் வேலை செய்யும் இடத்தில் கண்டிப்புடன் இறுக்கமாக இருக்கும் முகம் இன்று கொஞ்சம் இளகி புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்தது போல காட்சி அளிக்க வேலை செய்பவர்கள் ஆச்சரியப்பட்டு போயினர்
முதலாளிக்கு கல்யாண களை வந்துவிட்டதாக பேசிக் கொண்டனர் வெற்றி, திரு , கருணா , மூவரும் தனஞ்ஜெயனை பார்த்து மயக்கம் போடாத குறை தான்
கருணாகிட்ட வந்து தனஞ்ஜெயனின் தாடையை பிடித்து இடது வலமாக திருப்பி “மாப்புள்ள என்னடா தலைக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியுது ஏதாவது சங்கதி உண்டா ” என ஒன்றும் தெரியாதது போல கேட்க வெற்றியும் திருவும் தலையை குனிந்து கொண்டு உதட்டை மடக்கி நமுட்டு சிரிப்பு சிரிக்க இதை எல்லாம் பார்த்த தனஞ்ஜெயனுக்கு வெட்கம் வர அதை மறைப்பதற்காக
“என்னடா என்ன உளறிகிட்டு இருக்கறிங்க போய் வேலையை பார்க்காம வெட்டி அரட்டை அடிச்சுகிட்டு போங்கடா போய் வேலையை பாருங்க ” என விரட்டி கொண்டு இருக்கும் போது தனஞ்ஜெயனின் போன் அடித்தது .
எடுத்துப் பார்க்க போன் திரையில் எழிலரசி சிரித்து கொண்டு இருந்தாள் எல்லாம் இவளால வந்தது பார்த்து ஒருநாள் தான் ஆகுது அதுக்குள்ள என் பொழப்ப சிரிப்பா சிரிக்க வைக்கறா என நினைத்து போனையே எடுத்து பேசாமல் பார்த்து கொண்டு இருந்தான் .
கருணா அருகில் வந்து போன் திரையை எட்டி பார்க்க முயல வெடுக்கென போனை மறைத்து கொண்டு தள்ளி போய் நின்று பேசினான் .
போனை எடுத்தவுடன் “மாமா ஆலைக்கு வந்துட்டிங்களா வெயில்ல அலையாதிங்க எளநீ குடிங்க ”
இருந்த கடுப்பில் “எல்லாம் எனக்கு தெரியும் வைடி போனை ” தனஞ்ஜெயன் எகிற
“மாமா ரொம்ப சூடா இருக்கறிங்க இரண்டு எளநீயா குடிங்க ” என சொல்லி போனை வைத்துவிட்டாள்
இவளை என்ன செய்ய என பல்லை கடித்தவாறு திரும்ப அங்கு ஒரு வேலையாள் இரண்டு சீவின இளநீரோடு நின்று கொண்டு இருந்தான்
அவனை முறைத்துக் கொண்டே ” நான் உன்ன கேட்டனா ”
“இல்லிங்க அய்யா சின்ன அம்மணி தான் போன் போட்டு சொன்னாங்க இனி தினமும் இந்த நேரத்துக்கு உங்களுக்கு எளநீ சீவி கொடுக்கோனும்னு அம்மணி பேச்ச எப்படிங்க அய்யா தட்டறது ”
“டேய் உங்களுக்கு நான் முதலாளியா அவ முதலாளியாடா ”
“நீங்க தான் ய்யா முதலாளி அவங்க முதலாளிக்கு முதலாளிங்க ” கையை கட்டி கொண்டு பணிவுடன் சொல்ல
” போடா முத இங்கிருந்து ” என கத்த இளநீரை நீட்டி கொண்டு அசையாமல் நின்றான்
எரிச்சலுடன் இளநீரை வாங்கி குடித்து வேகமாக தூக்கி எறிந்து விட்டு தன் அலுவலக அறைக்கு சென்று விட்டான்
வில்லாளனின் வாழ்க்கை
வானம் பார்த்த பூமியாக இருக்க
எழிலுக்கு அரசியானவள்
பூவன சோலையாக மாற்ற
மாரியாக வருகை தருகிறாள்
அவளின் வருகையால்
இவனின் வாழ்வில்
வசந்தங்கள் வீசுமோ .…..

புள்ளி மேவாத மான் – 2 Read More »

புள்ளி மேவாத மான் – 1

புள்ளி மேவாத மான் – 1

நாயகன் : தனஞ்ஜெயன்
நாயகி : எழிலரசி

மலையனூர்

பேருக்கேற்றார் போலவே மலைகள் சூழ்ந்த ஊர் இதமான தட்பவெப்பநிலை நல்ல மண்வளம் கொண்ட ஊர் வாய்க்கால் பாசனமும் கிணற்றுப் பாசனமும் உண்டு என்பதால் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறும் பசுமையான ஊர்?
அதிகாலை வேளையிலேயே அந்த வீடு பரபரப்பாக இருந்தது. வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்று சொல்லலாம் அந்த ஊரிலேயே அதான் மிக பெரிய வீடு சுற்றிலும் கோட்டை போன்ற மதில் சுவருடன் மிகப்பெரிய இரும்பு கேட் கேட்டிலிருந்து வீட்டின் தலைவாசலுக்கு இருநூறு அடி நீளம் தூரம் வீட்டு மதில் சுவரை சுற்றிலும் பல விதமான மரங்கள் கேட்டிற்கும் வாசலுக்கும் இடையே ஒரு புறம் மிகப்பெரிய கட்டாந்தரை அதில் நிலக்கடலை தேங்காய் பருப்பு இன்னும் சில தானியங்கள் காய்ந்து கொண்டு இருந்தன இன்னொரு புறம் கார் ஷெட்டில் மகேந்திரா போலரோ ஸ்கார்ப்பியா ஒரு பழைய அம்பாசிடரும் நின்று கொண்டு இருந்தது?
வீட்டின் உள்ளே சலவைகற்களாலும் தேக்காலும் இழைக்கப்பட்டு நவீன வசதிகள் அனைத்துடனும் பின்புறம் மாட்டுத்தொழுவும் காய்கறிசெடிகள் பூஞ்செடிகள் நிறைந்த மிகப்பெரிய தோட்டத்துடனும் பழமையும் புதுமையும் நிறைந்த வீடாக இருந்தது.
வீட்டின் உறுப்பினர் என்று பார்த்தால் ஒருவன் தான் நம் நாயகன் தனஞ்ஜெயன் மட்டுமே ஆனால் அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் வீட்டு வேலைக்கும் சுற்று வேலைக்கும் தோட்ட வேலைக்கும் ஆட்களும் ஊரின் பெரிய தனக்காரர் குடும்பம் என்பதாலும் தனஞ்செயன் ஊரின் பிரசிடென்ட் என்பதாலும் சொந்தபந்தங்கள் அறிந்தவர் தெரிந்தவர் என யாராவது வந்து போய் கொண்டு தான் இருப்பர்?
இன்று அதிகாலை வேளையிலேயே வழக்கத்திற்கு மாறாக அதிக பரப்பரப்புடன் இருந்தது அந்த வீடு தனஞ்ஜெயன் அறையில் அவனை சுற்றி அவன் உயிர் தோழன் கருணாகரன் சித்தப்பா மக்கள் வெற்றிமாறன் திருச்செல்வன் பிரசாத் என நால்வரும் அவனிடம் கெஞ்சி கொண்டு இருந்தனர்.
தனஞ்ஜெயன் அவன் தந்தையை கொண்டே பிறந்தவன் சராசரி ஆண்களை விட உயரம் ஆஜானுபாகுவான உழைப்பின் காரணமாக உளைச்சதை இல்லாமல் இறுகிபோன உடல் தாய் தந்தை இருவரும் நல்ல நிறம் அவர்களின் இருவரின் நிறத்தை பெற்று தூக்கலான கலரில் இருந்தான் அவனின் உயரமான அகன்ற உடலமைப்பே அவனுக்கு மற்றவர்களிடம் ஒரு மரியாதை பெற்று தந்தது.
“டேய் தனா ஏன்டா இப்படி அலும்பு பண்ற சொல்லறத கேளுடா இந்த சட்டையை போட்டு கிளம்பி வா” எனறான் கருணாகரன்.
“அண்ணா நேரமாகுது நல்ல நேரத்துல அங்க இருக்கனும் இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்”
“வெற்றிண்ணா அப்பா போன் போடறாரு என்ன சொல்ல” என்ற திருவிடம் “அவரையே வர சொல்லுடா” என்றான் வெற்றி.
பிரசாத் தனஞ்ஜெயனிடம் “அண்ணா என்னோட பெர்ப்யூம் எடுத்துட்டு வரவா போட்டுகறிங்களா” என கேட்டதும்…
ஏற்கனவே எதுவும் பேசாமல் எல்லோரையும் பார்த்து முறைத்து கொண்டு இருந்தவன் பிரசாத்தை தீப்பார்வை பார்த்தான் தனஞ்ஜெயன்.
கருணா பிரசாத்தின் தலையில் தட்டி “அடேய் அவனே முறுக்கிட்டு நிக்கறான் நீ வேற இன்னும் கொஞ்சம் உசுப்பேத்தி விடற ஏன்டா சும்மா இருடா ”
“டேய் நா சொன்னா சொன்னது தான் எங்கயும் வரல சும்மா என்னய நச்சரிக்காம போய் வேலய பாருங்க” என்ற தனஞ்ஜெயனை நால்வரும் ஒருமணி நேரம் போராடி களைத்து போன இயலாமையுடன் பார்க்க…
அப்போது அங்கு வந்த வெற்றி , திருவின் அப்பா சுந்தரம் “என்ன தம்பி இன்னும் கிளம்பலயா நேரமாவுதுல்ல” என்க…
“இதோ சித்தப்பா” என்றவன் கருணாகரனின் கையில் இருந்த சட்டையை வெடுக்கென பிடுங்கி போட்டு தயாரானான். சித்தப்பா அவ்விடம் விட்டு நகர்ந்ததும் மற்றவர்களை முறைத்துக் கொண்டே எல்லாம் ஒன்னு கூடி ரவுண்டு கட்டறிங்களா எவ்வளவு தூரமுனு பார்க்கறேன் வந்து சம்மந்தபட்டவகிட்டயே பிடிக்கலைனு சொல்றேன் பிடிக்கலைனு சொன்ன புறவு எவ தான் கட்டிக்க சம்மதிப்பா என சந்தோஷமாக திட்டமிட்டான்.
ஆம் தனஞ்ஜெயனுக்கு பொண்ணு பார்க்க செல்வதற்கு தான் அவன் இத்தனை அழிசாட்டியம். தயாராகி வந்தவன் வழக்கம் போல் சாமியறைக்கு சென்று தெய்வங்களையும் தெய்வங்களாகி விட்ட தன் தாய் தந்தையையும் வேண்டி திருநீறு இட்டு வந்தான்.
சாமியறையில் இருந்து வந்த தனஞ்ஜெயனை இருளாயி பாட்டி “எஞ்சாமி” என கன்னம் வழித்து நெட்டி முறிக்க “வரேன் ஆயா”என கிளம்பினான்.
வாசலில் நிற்க வைத்து சகுனம் பார்த்துவிட்டு காரில் ஏற சொல்ல இவனோ நடக்காத கல்யாணத்திற்கு இதெல்லாம் மிச்சமா இல்ல என நினைத்து கொண்டு டிரைவர் இருக்கைக்கு செல்ல அங்கே திரு அமர்ந்திருந்தான். அவனை பார்த்து பல்லை கடித்துக் கொண்டே “டேய் இறங்குடா” என கடுப்புடன் சொல்ல அவன் காரின் அருகே நின்ற தன் தந்தையை பார்க்க…
அவரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தார் “தம்பி இன்னைக்கு ஒரு நாளு திரு ஓட்டட்டும் நீ பின்புறம் உட்காருய்யா” எதுவும் சொல்ல வழியின்றி நடு இருக்கையில் அமர்ந்தான்.
தந்த நிற ஸ்கார்ப்பியோ கேட்டை தாண்டி வெளியே வந்ததும் அடுத்தடுத்த இருந்த இவன் சித்தப்பாக்களின் வீட்டிலிருந்தும் இதே போல கார்கள் வெளியே வர “டேய் பொண்ணு தான பார்க்கப் போலாமுனிங்க அதுக்கு எதுக்குடா இத்தனை பேரு வேற ஏதாவது பிளான் பண்றிங்களடா” வெற்றியை பார்த்து கேட்க… அவன் என்ன சொல்லுவான். உண்மையை சொன்னா நைய புடைச்சுருவாங்களே திருதிருவென முழித்தான்.
“என்னடா முழிக்கற சொல்லுடா இல்லை பல்ல பேத்துருவேன்”
ஆமாம் சொல்லைனா இவரு பேத்துருவாரு… சொன்னா மொத்த குடும்பமும் ஒன்னு கூடி குனிய வச்சு கும்மிடுமே என நொந்தவாறே கருணாவை பார்க்க… வெற்றியின் முகத்தை கொண்டே மனதை படித்தவன் கண்களால் நான் பார்த்துக்கிறேன் என சமிக்ஞை காட்டி விட்டு
“மாப்பிள்ள அது ஒன்னும் இல்ல உன் சித்தில்லாம் பொண்ண பார்க்கனும்னு ஆசைபட்டாங்க அதான்”
எதுவும் சொல்லாமல் அவன் அமைதியாகி விட அப்பாடா தப்பிச்சோம் என வெற்றி நினைக்க அருகில் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த திரு “டேய் அண்ணா ரொம்ப சந்தோஷப்படாத கீரனூர் போனதும் வண்டி வண்டியா அண்ணன் கொடுக்கும் வாங்கிக்க தயாரா இரு” என முனுமுனுக்க…
“எனக்கு மட்டுமாடா எல்லோருக்கும் சேர்த்து தான கொடுக்கும்” என்றான் கிசுகிசுப்பான குரலில்..
கீரனூர் கிராமத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களை கொண்ட அழகான ஊர் விவசாயமே பிரதான தொழில் தனஞ்ஜெயன் வண்டி ஒரு வீட்டின் முன் சென்று நின்றது
தனஞ்ஜெயன் இறங்கி வீட்டை பார்த்தான் வீடு பழைய கிராமத்து பாணியில் முன்வாசல் முற்றம் பின்கட்டு என சற்று பெரியதாக இருந்த மச்சுவீடு.
முன்வாசலில் பந்தல் போட்டு உறவினர்கள் அமர்ந்திருக்க பார்த்தவனுக்கு பொண்ணு பார்க்க இவ்வளவு பேர் எதுக்கு இவன் மனதில் எச்சரிக்கை மணி.. உறவினர் கூட்டத்தில் இவன் உறவினர்களும் இருக்க தம்பிகளை பார்த்து முறைத்தான்.
“மாப்பிள்ளை வந்தாச்சு” என குரல் கொடுத்தவாறே நெடு நெடுவென வளர்த்தியாக உழைத்து முறுக்கேறிய உடம்புடன் வந்து “வாங்க மாப்பிள்ளை” என வரவேற்றவரை பார்த்து லேசாக அதிர்ந்தவன்.
திரும்பி தன் சித்தப்பாக்களை பார்த்தான் அவர்கள் இவனை பார்த்து லேசாக சிரிக்க “வா தம்பி உள்ள போகலாம்” என அவனின் இளைய சித்தப்பா கண்ணன் அழைக்க..
சரி எல்லாம் ஒரு முடிவோட தான் வந்திருங்காங்க என அவனுக்கு புரிந்தது. எதுவும் பேச வழியின்றி உள்ளே சென்றான். வந்தவனை குடும்பத்தினர் வரவேற்க “உட்காருங்க மாப்பிள்ளை” என அமர வைத்தார் முத்துக்குமார். தனஞ்ஜெயனின் தந்தை மாணிக்கவேலின் பால்யகால நண்பர் வந்தவுடன் இவரை பார்த்து தான அதிர்ந்தான் தனஞ்ஜெயன்.
இவனின் அருகில் வர பயந்து எச்சரிக்கையாக கருணா ,வெற்றி, திரு, பிரசாத் எல்லோரும் தள்ளி அமர்ந்து கொண்டனர். இருவீட்டு உறவினர்களும் ஏற்கனவே மாமன்மச்சான் கூட்டம் என்பதால் எல்லாம் உறவினர்களாக இருக்க பேசி கொண்டு இருந்தனர்.
இவனோ எப்படி தட்டி கழிப்பது என யோசித்து கொண்டு இருந்தான். உறவுமுறை இல்லாமல் வெளிசுற்றில் பெண் இருக்கும் சுலபமாக மறுத்து விடலாம் என நினைதிருந்தான். இவனின் எண்ணம் தெரிந்தே தான் இவனின் சித்தப்பாக்கள் இருவரும் வகையாக சிக்க வைத்தனர் இவனிடம் யார் என்ன என சொல்லாமல்,
கூட்டத்தில் ஒரு பெரிசு “ஏப்பா பேசிக்கிட்டே இருந்தா எப்படி நல்ல நேரம் போறதுகுள்ள சட்டுனு வேலையை முடிங்க” என்றார் பிரசாத் திருவிடம் “ஏண்ணே எல்லா விசேஷ வீடுகள்ல இந்த மாதிரி பெருசுங்க ஒன்னு இருக்கும் போல ன”
“இப்ப இது ரொம்ப முக்கியம் உன் சந்தேகத்த தனாண்ணா தீர்த்து வைக்கும் சொல்லவா” என தீர்த்துவில் ஒரு அழுத்தம் கொடுத்து திரு சொல்ல “விட்டுட்டுண்ணே வேணாம் அண்ண இருக்குற காண்டுல செவினிய காட்டி இரண்டு உட்டுடும்” “இனி ஏதாவது கேட்ப” என திரு கேட்க வாயை இருக்க மூடி இல்லை என தலையாட்டினான்.
பிரசாத்தின் செயலில் திரு சிரித்து விட “டேய்.. மாப்பிள்ளைகளா இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு குதூகலமாடா உங்க அண்ணன பார்த்தான் தோல உரிச்சு தொங்கவிட்டுவான்” என்றான் கருணாகரன்.
முத்துக்குமார் தன் மனைவி கற்பகத்திடம் “கற்பகம் அரசிய கூட்டிட்டு வா”
கற்பகமும் சில உறவு பெண்களும் எழிலரசிய கூட்டிட்டு வர வந்தவள் சபையினரை வணங்கி தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள். வந்ததிலிருந்து தனஞ்ஜெயனையே கண் இமைக்காமல் பார்த்தாள் கண்கள் வழியாகவே அவனை கபளீகரம் செய்து விடுவது போல அப்படி ஒரு பார்வை..
எழிலரசியை அளவிடுவது போல பார்த்தான் மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் கருப்பு என்று சொல்லமுடியாது பெரிய விழிகள் அதில் கோலி குண்டு போல கருமணிகள் களையான வட்டமுகம் மாதுளை பூ நிறத்தில் மிக மெல்லிதான உதடுகள் பெண்களிலேயே சற்று உயரம் அளவான உடலமைப்பு சாந்தமான அழகுடன் இருந்தாள்.
எழிலரசியின் விடாத பார்வையை எதிர் கொள்ள முடியாமல் சட்டென்று எழுந்துவிட்டான் எல்லோரும் கேள்வியாக பார்க்க “நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசனும்” அவனின் செயலில் அனைவரும் சிரித்துவிட்னர்.
அவனின் சித்தப்பா சுந்தரம் “போய் பேசிட்டு வாய்யா” என்றார்.
“அரசி மாப்பிள்ளையை தோட்டத்துக்கு கூட்டிட்டு போம்மா” என்றார் முத்துகுமார். எழிலரசியோடு தோட்டத்திற்கு சென்றவன் அவள் முகம் பார்த்து எப்படி சொல்ல என தெரியாமல் தடுமாற “சொல்லுங்க மாமா” என்றாள் எழிலரசி.
மாமவா ம்ஹும் இது சரியில்லையே என நினைத்தவன் “எனக்கு உன்ன கட்டிக்க இஷ்டமில்ல” என்றதும் முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் “என்னய கட்டிக்க இஷ்டமில்லயா இல்ல யாரையுமே கட்டிக்க இஷ்டமில்லயா”
“எனக்கு நீயினு இல்ல யாரையும் கட்டிக்க இஷ்டமில்ல”
“ஏன் மாமா உங்க மனசுல இன்னும் பூங்கொடிக்கா நினைப்பு இருக்கா”
“ச்சீ என்ன பேசற அவ எப்ப அடுத்தவனுக்கு உடமையானாலோ அதுக்கு பிறகு அவள நினைச்சிட்டு இருந்தா அசிங்கம்”
“அப்புறம் என்ன மாமா”
“ஏய் இதுல்லாம் உனக்கு எப்படி தெரியும்”
“என்னை விட உங்கள பத்தி தெரிஞ்சவங்க யாரும் இருக்கமாட்டாங்க மாமா”
“என்ன சொல்ற புரியற மாதிரி சொல்லு”
“அது ஒன்னும் இல்ல மாமா அப்பா சின்ன வயசுல இருந்தே உங்கள பத்தி மாமா அத்தை பத்தி நிறைய சொல்லி இருக்காங்க அதான் உங்கள எனக்கு பிடிக்கும் மாமா”
தனஞ்ஜெயன் ஒன்றை யோசிக்க மறந்தான் எந்த தகப்பனும் வயசு பெண்ணிடம் ஊரில் நடக்கும் காதல் விவகாரங்களை சொல்லமாட்டான் என்பதை…
கல்யாணத்தை நிறுத்தவேண்டும் என வந்தவனுக்கு இவளின் பேச்சுக்களை கேட்ட பிறகு என்ன செய்வது என புரியாமல் குழம்பி போனான். ஆனால் அவளிடம் பேசிய பின் மனசுக்கு இதமாக இருந்தது. அது இன்னும் குழப்பத்தை அதிகமாக்கியது.
குழம்பிய மனதோடு கூடத்திற்கு வந்தவனிடம் யாரும் சம்மதம் கேட்கவில்லை இவனை பார்த்ததும் சுந்தரம் “மச்சான் தட்ட மாத்திக்கலாம்” என்றார்.
சுந்தரம் திலகவதி தம்பதியராக தனஞ்ஜெயன் தாய் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து முத்துக்குமார் – கற்பகம் தம்பதியரிடம் தட்டை மாற்றி கல்யாணத்தை உறுதி செய்தனர்.
தனஞ்ஜெயனை பெண் பார்க்க செல்வது போல் அழைத்து சென்று அதிரடியாக திருமணத்தை உறுதி பண்ணி விடவேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்து இருந்தனர் .
சுந்தரமும் மகளின் விருப்பம் தெரிந்திருந்ததாலும், தனஞ்ஜெயனை சிறுவயதில் இருந்தே பார்த்து இருந்ததாலும், தன் ஆருயிர் சிநேகிதனின் மகன் என்பதாலும் இத்திட்டத்திற்கு சம்மதித்தார்.
தனஞ்ஜெயன் எப்போது திருமணத்தை பற்றி பேசினாலும் ஏதாவது ஒன்று சொல்லி தள்ளி போட்டு கொண்டே இருந்தான். சுந்தரத்திற்கும் கண்ணணிற்கும் எங்கே அண்ணன் மகன் தனித்து நின்று விடுவானோ என்ற பெரிய கவலை. அப்படி ஆகிவிட்டால் தங்களை தாய் தந்தையாக வளர்த்த அண்ணன் அண்ணி ஆத்மா தங்களை மன்னிக்காது என தவித்து போய் அதிரடியாக கல்யாணம் நிச்சயம் செய்தனர்.

புள்ளி மேவாத மான் – 1 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே..29

29       எனக்கு அந்த மோதிரம் ரொம்ப முக்கியம் அது இல்லாம நான் போகமாட்டேன் என்று அழுத்தமாக கூறி நின்றவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் தேவா.   அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்க.. அப்போ இடி இடித்த சமயத்தில் வைஷூ முருகா என்று அழைத்தபோது அவளை தமிழ் என்று உணர்ந்துகொண்ட தேவா, ” அறிவில்ல உனக்கு படிச்ச பொண்ணு தானே.. இந்த நேரத்துக்கு மேல இங்க இருப்பேன் சொல்ற.. இங்க பில்டிங்

என் கர்வம் சரிந்ததடி சகியே..29 Read More »

error: Content is protected !!
Scroll to Top