ATM Tamil Romantic Novels

6757D25E-7922-45BC-8481-4B2F97C65322

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா செயலில் வீராவின் மனதில் லாலிபாப் மிட்டாயின் தித்திப்பு அந்த சிறு தித்திப்பு மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு இருக்க…உற்சாகமாக வேலை பார்த்தான்.

மதிய உணவுக்கு வருவான் என எதிர்பார்த்தாள். அவன் வரவில்லை. பாட்டி சொன்ன மாதிரி வேலை இருக்குமோ.. அழைக்கலாமா..திட்டுவாரோ.. என யோசித்து நேரம் கடத்தினாள்.மாலை நான்கு மணி வரை பார்த்து விட்டு இவள் சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்து கொண்டாள்.

நேரம் கடக்க..கடக்க..வீராவை பார்க்க வேண்டும் என ஆசை அதிகமாகி கொண்டே போக.. ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டுவருவாரா என வாசலைப் பார்க்க.. அழைக்கலாமா என போனைப் பார்க்க.. என இருக்க…

ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வந்த பாட்டி இவளை பார்த்து ஆச்சரியமாகி..

“நிகிதா.. என்ன பண்ணிட்டு இருக்க…”

சோகமாக முகத்தை வைத்து கொண்டு

“மாமா இன்னும் வரல.. கீரேனீ”

பாட்டி பக்கென சிரித்து விட்டார்.

பாட்டியின் சிரிப்பில் முகம் சிவக்க… “போங்க கீரேனீ சிரிக்காதிங்க..”சிணுங்கினாள்.

“எதுக்கு இப்படி வாசலையே பார்த்துட்டு இருக்கற..”

“மாமா இன்னும் சாப்பிட வரலையே..”

பாட்டி கடிகாரத்தை பார்த்து விட்டு “அஞ்சு மணியாகுது. அவன் இவ்வளவு நேரமாகவா சாப்பிடாம இருப்பான்.ஏதாவது ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டு இருப்பான்.நீ இன்னும் சாப்பிடலையா..”

“சாப்பிட்டுடேன்.ஆனா மாமாவ இன்னும் காணலயே..” என்றாள் ஒரு ஏக்க பெருமூச்சுடன்…

ஆஹா.. பேத்தி செம்ம பார்ம்ல இருக்கா.. ஆனா இந்த வீரா பையன் அதை புரிஞ்சுக்காம சுத்திகிட்டு இருக்கானே..என வீராவை மனதோடு திட்டி கொண்டு…

“அவன் வர எட்டு மணியாகும்.போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. ஏழு மணி போல கிளம்பி வா”என சொல்ல..

இரண்டு முறை வாசலை திரும்பி திரும்பி பார்த்தவாறே தனதறைக்கு சென்றாள். அடுத்த ஒருமணி நேரத்தில் கீழே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு பூச்சரம் சூடி அமர்ந்திருந்தவளை பார்த்து ஆராத்யா விசித்திரமாக பார்த்தாள்.

பாட்டியிடம் தமிழ் பாடம் படிக்க வந்த ஆராத்யா நிகிதாவை கண்டு விழி அகல பாராத்தாள்.

“அக்கா..நீயா இது..” என நிகிதாவை சுற்றி வந்து கேலிப் புன்னகையோடு கேட்க…

“ச்சீ… போடி..”என்றாள் வெட்கத்துடன்..

“ம்ம்.. அக்கா… சூப்பர்.. சூப்பர்..” என அவள் வெட்கத்தை பார்த்து சொல்லி சிரிக்க… பாட்டி தாத்தா இருவரும் கூட சேர்ந்து சிரிக்க..

“கீரேனீ..தாத்தா…நீங்களும் அவ கூட சேர்ந்து என்ன ஓட்டறிங்களா..” என்றாள் போலி கோபத்துடன்..

“பின்னே என்னக்கா..ஓவர் நைட்ல.. நீ ஓவர் ஸ்மார்ட்டாயிட்டா.. நாங்க என்ன தான் பண்றது சொல்லு..”என்றாள் பொய்யாக முகத்தை சோகமாக வைத்து கொண்டு..வராத கண்ணீரை துடைத்து கொள்ள…

நிகிதா ஆராத்யாவை அடிக்க துரத்த… அக்காவிற்கு போக்கு காட்டி கொண்டு தங்கை ஓட..

“நில்லு ஆரு..”

தமக்கையின் கைகளுக்கு சிக்காமல் ஓட..பேத்திகளின் விளையாட்டை பார்த்த பெரியவர்கள் கண்கள் கலங்கி விட…

வீட்டில் எப்போதும் இது போல கலகலப்பு இருந்ததில்லை. அவரவர் வேலை.. அவரவர் நேரம் காலம் என இருக்க…

தன் நண்பர்களின் வீடுகளை பார்த்து குடும்ப சூழலுக்காக ஏங்கும் ஆராத்யா தந்தை டியூஷன் செல்ல சொன்ன போது.. மறுத்து விட்டு மாலையில் தாத்தா பாட்டி அமர்ந்து பேசி கொண்டு இருக்க.. அவர்கள் அருகே அமர்ந்து படிப்பாள்.

எப்பவும் வீடு ஒருவித அமைதியுடன் தான் இருக்கும்.

உடனே ஆராத்யா ஓடி வந்து பாட்டியை அருகே அமர்ந்து தாடையை பிடித்து “அச்சோ கீரேனீ என் ஸ்வீட்டில.. க்யூட்டீல.. “என கொஞ்ச…

“போடி போக்கிரி..” என சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொள்ள…

“அதென்ன வீரா மாமா கொஞ்சினா மட்டுமே ஒன்னும் சொல்லமாட்டிங்க.. அதே நான் கொஞ்சினா திட்டறது..”

தாத்தாவின் அருகே அமர்ந்து அவரின் கைகளை ஆறுதலாக பற்றிய இருந்த நிகிதா வீரா கொஞ்சியது இவளுக்கு எப்படி தெரியும் என பார்க்க..

“என்னக்காக அப்படி பார்க்கற…”

ஒன்றுமில்லை என்பதாக தலையாட்ட.. தமக்கை கேட்கவில்லை என்றாலும் ஆராத்யா சொன்னாள்.

“மாமா.. மாசம் ஒரு தடவையாவது தாத்தாவையும் கீரேனியும் பார்க்க வருவாங்க… அப்ப கீரேனிய இப்படி தான் கொஞ்சுவாங்க..”

தான் வீட்டில் இருந்திருந்தால் தானே இதெல்லாம் தெரிந்திருக்கும் என நினைத்து கொண்டாள்.

வீராவின் மேல் கொண்ட காதலால் இன்னும் இன்னும் அவனை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டாள்.

இரவு வீரா வரும் வரை நால்வரும் ஏதோ சலசலவென பேசி கொண்டே இருந்தனர்.ஆராத்யாவிற்கு மனசில் அவ்வளவு சந்தோஷம்.

இரவு எட்டு மணி ஆகியும் வீரா வராததால் நிகிதா அவனுக்கு அழைத்தாள். அப்போது தான் வேலையை முடித்து கிளம்பி காரில் வந்து கொண்டு இருந்தவன் போனின் மணி சத்தத்தில் அழைப்பது யார் என பார்த்தவன் நிகிதா என திரை ஒளியில் மின்ன…அவளது எண்ணை நிகிதா என பதிவு செய்து கொண்டான் அவள் முதன்முதலாக அழைக்கும் போதே.. அழைத்தது அவள் தான் என தெரிந்ததும் அழைப்பை ஏற்கவில்லை. அதுவே அவளுக்கு கம்ப்யூட்டர் வாய்ஸாக வரவும்..மீண்டும் முயற்சித்தாள். முழுவதும் போய் கட்டாகும் கடைசி நொடியில் எடுக்காவிட்டால் மீண்டும் அழைப்பாளோ என எண்ணி எடுத்தான்.

“ஹலோ.. மாமா.. வீட்டுக்கு இன்னும் வரலயே.. வந்துடுவிங்களா.. லேட்டாகுமா…”அவன் எடுத்ததும் அவனை பேசவிடாமல் ஒரே மூச்சில் இவள் பேச…

மாமா என்ற அழைப்பே இவனுக்கு எரிச்சலை கிளப்ப..மேலும் அவளின் உரிமையான பேச்சு வேற இவனின் எரிச்சலில் எண்ணையை ஊற்ற.. உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது.

“வரேன் வைடி”என்று போனை அணைத்து டேஷ்போர்டில் தூக்கி போட்டவன்..ம்கூம் இவ சரியில்லை.. இவ இப்படியே போனால் நமக்கு நல்லதில்லை.. பிரச்சினை இல்லாமல் இவளை விட்டு பிரிஞ்சி போயிடனும். அதுக்கு இவகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டென் பண்ணனும் என நினைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். காலையில் இருந்தே இருந்த உல்லாசமான மனநிலை போய் ஒரு எரிச்சல் வந்து உட்கார்ந்து கொண்டது.

வீட்டினுள் நுழைந்தவன் பேத்திகளோடு பேசி கொண்டு இருந்த பெரியவர்களின் முகத்தை தான் முதலில் பார்த்தான். அதில் என்றுமில்லாத அளவுக்கு பூரிப்பு. அதே அவனின் எரிச்சலில் சற்று தண்ணீர் தெளிக்க..கொஞ்சம் அடங்கியது.

பாட்டியின் அருகில் அமர்ந்தவன் “என்ன அம்மாச்சி.. ஒரே குதுகலாமா இருக்கறிங்க போல..ப்யூட்டி கூடி தெரியுது.”என கிண்டல் செய்ய..

“போடா படவா..”என அவனின் தோளில் செல்லமாக அடிக்க..

தாத்தாவோ “என் பொண்டாட்டி எப்பவும் ப்யூட்டி தான். எம் பொண்டாட்டியவே எப்ப பாரு கொஞ்சிகிட்டு.. போ..போ.. அதான் உனக்கு கொஞ்சறதுக்குனு ஒரு ஆளை சேர்த்து வச்சிருக்கோம்ல..அவளை போய் கொஞ்சுவானாமா.. அத விட்டுட்டு எப்ப பாரு எம் பொண்டாட்டி கூடவே ரொமான்ஸ் பண்ணவேண்டியது..” என கடுப்பில் பேச..

பாட்டியின் காதில் “தாத்தாவிற்கு பொறாமை அம்மாச்சி” என கிசுகிசுக்க..

பாட்டி சத்தமாக சிரித்து விட… தாத்தாவின் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டுவதாக அவன் முகம் சிரிப்பில் இருந்து கடுப்புக்கு மாறியது. இருந்து போதும் அதை மறைத்து கொண்டு ஆராத்யாவிடம்

“ஆரு… என்ன படிச்சிட்டு இருக்க…ஏதாவது டவுட் இருந்தா கேளு சொல்லி தரேன்”

“தமிழ் தான் படிக்கறேன்.. கீரேனீ சொல்லி தராங்க.. வேற சப்ஜெக்ட்ல டவுட் இருந்தா கேட்கறேன்..”

சரி என்பதாக தலையாட்டியனான். எல்லோரிடமும் பேசியவன் மறந்தும் நிகிதா பக்கம் பார்வையை திருப்பவில்லை. ஆனால் நிகிதாவோ ஒரு விநாடி கூட அவனிடமிருந்து பார்வையை அகற்றவில்லை.

வீராவை… அவனின் ஒவ்வொரு செயலையும்.. பேச்சையும்.. காதல் மிகுந்த பார்வையோடு ரசித்து கொண்டு இருந்தாள். உள்ளே வரும்போது நிமிர்ந்த வேக நடையை.. பாட்டியின் தோளில் கை போட்டு கண்ணை உருட்டி பேசியது… தாத்தா சொன்ன போது அவன் முகம் மாறியது.. அதை சடுதியில் மாற்றி இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டது. ஆருவிடம் பேசிய போது அவன் குரலில் இருந்த பாசம்…… பேசும் போது அவன் முகம் காட்டிய பாவனை…கைகளின் அசைவு.. கணீர் என இருந்த கம்பீரமான குரல்… என அத்தனையும் காதலோடு ரசித்து மனம் எனும் கேலரியில் இமேஜாக சேவ் செய்து கொண்டாள்.

தாத்தா சொன்னாற் போல தன்னை ரொமான்டிக்காக பார்த்தால்.. பேசினால்.. எப்படி இருக்கும் என சிந்திக்க.. சொல்லாமல் கொள்ளாமல் அவர்களின் கூடல் பொழுதுகள் ஞாபகத்தில் வந்து ஒட்டி கொண்டது. கன்னம் சிவக்க.. அன்று வீராவின் காதல் மொழிகளை அசை போட்டவளுக்கு… அதுக்கு பிறகு அவனுடைய பாராமுகமும் நினைவுக்கு வந்தது.

நிகிதாவின் ரசிகமனம் கொஞ்சம் வாடவும் செய்தது. யாருக்காக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாளோ.. வீடே தங்காமல் ப்ரண்ட்ஸ் கூட சுற்றி திரிந்தவள் இப்போது எல்லாம் யாருக்காக வீட்டிலேயே சுகமாக அடைந்து கிடக்கிறாளோ.. யாரின் வரவுக்காக காத்திருந்தாளோ.. அவனின் நேர்பார்வை என்ன கடைகண் பார்வை கூட கிடைக்கவில்லை எனவும் வாட்டம் கொண்டது.

நிகிதா தன்னை விழி மூடாமல் பார்த்து கொண்டு இருப்பதை… அவளை பார்க்காமல் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவளின் செயல் எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் பின்னால் எடுக்க போகும் முடிவுக்கு அது உகந்தது அல்ல.. அதை எப்படியாவது அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.

அவன் செல்லவும்.. அவன் பின்னோடு இவளும் சென்றாள். தன் பின்னாலேயே வருவாள் என நினைத்தான். அதை மெய்பிப்பது போலவே தான் அவளும் வந்தாள். வீரா வீட்டில் இருந்தால் அவன் இருக்கும் இடத்தில் நிகிதா இருப்பதை கண்டு கொண்டு இருந்தான்.

அவளை எரிப்பது போல பார்த்தவன்.. உடை மாற்றி ப்ரெஷாகி வர செல்ல.. அவனுக்கு முன்பு சென்று அவனின் டீசர்ட் டிராக் பேண்டை எடுத்து கொடுத்தாள். அதில் அவன் பார்வையின் வெப்பம் கூடியது. அதை வசிய பார்வை ஒன்றை செலுத்தி தணிக்க முயன்றாள்.

இதுக்கு எல்லாம் மசியமாட்டேன் என முகத்தை திருப்பி கொண்டு குளியலறைக்கு செல்ல.. அங்கும் அவனை முந்தி கொண்டு உள்ளே செல்லப் பார்க்க..

“ஏய் நில்லு.. இப்ப எதுக்கு என்ன இடிச்சு தள்ளிகிட்டு உள்ள போற…” என்றான் கோபமாக..

“இல்ல… உள்ள டவல் இருக்கானு பார்க்கத் தான்..”என்றாள் அசடு வழிந்தவாறே…

கோபத்தில் அவளின் கைபிடித்து இழுத்து தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்ட வேகத்திற்கு கீழே விழுந்தவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி எச்சரித்தவன்..

“இங்க பாரு.. உனக்கும் எனக்கும் என்றைக்கும் பொருந்தாது. நா… பொருந்தாமல் ஒட்டாமல் வாழறதையே வீட்டு பெரியவர்களுக்காக சகிச்சிகிட்டு இருக்கேன். இதுல நீ இப்படி எல்லாம் நடந்து என்னை இரிடேட் பண்ண.. பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டேன்”என காட்டமாக பேசியவன் எழுந்து குளியலறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான்.

சிறிது நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்தவன் எப்படி விட்டு சென்றானோ.. அதே நிலையில் இருக்க.. பேதலித்து போய் இருந்தவளை கையை பிடித்து தன்னை நோக்கி வேகமாக இழுக்க..இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து மோதியவள் என்ன செய்கிறான் மலங்க விழிக்க… ஹப்பா என்ன பார்வை டா.. என சிலிர்த்தவன்.. கண்கள் இரண்டிலும் முத்தம் வைக்க.. விழி மூடி மெல்ல கிறங்கினாள்.

“ம்ஹா…”கிறக்கமான அவளின் குரல் உசுப்பேத்த…அவள் இதழை தன் இதழால் வன்மையாக கடித்து சுவைக்க… தீரவில்லை தாகம்.. கண்ணாளனுக்கு…

அவளின் உமிழ் நீர் எல்லாம்

அவனின் தாகம் தீர்க்கும் உயிர் நீராக…

போதவில்லை…. தாகம் தீர வில்லை..

தாகம் தீராது… அதிகமாகி போனது…

கடிகார மணியின் கூக்கூ ஓசையில் கலைந்தவள் “ச்சே.. இதெல்லாம் கனவா… நிஜமில்லையா… ” வெட்கத்தில் சிவந்த முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்.

என்னவோ போடி நிகிதா.. இப்படியே கனவுல தான் வாழனுமோ..என ஏக்க பெருமூச்சு விட்டாள்.

மாமா ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்க.. எனக்கும் முதல்ல பிடிக்கல தான் ஆனா இப்ப ரொம்ப பிடிக்குதே.. வேணாம்னு சொன்ன நானே நெருங்கி வரும்போது இவங்க ஏன் தள்ளி தள்ளி போறாங்க..என்னய பிடிக்கலயோ… எல்லோரும் சொல்லற மாதிரி நான் அழகாக தானே இருக்கேன்… இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி யாரயையாவது லவ் பண்ணி இருப்பாங்களோ… அந்த காதல மனசு வச்சுகிட்டு தான் இப்படி நடந்துகிறாங்களோ.. என்ன காரணமாக இருக்கும் என்னை பிடிக்காம போக… என பலவிதமாக யோசித்து கவலைப்பட்டாள்.

அது எல்லாம் சிறிது நேரம் தான் எதுவாக இருந்தாலும் இனி மாமாவுக்கு என்னை பிடிக்கற மாதிரி நடந்து.. அவர் மனசு மாத்தி.. அவர் கூட சந்தோஷமா வாழ்ந்திரனும் என முடிவு எடுத்தவள்.. சுற்றும் முற்றும் பார்க்க.. அவன் அறையிலேயே இல்லை.

ப்ரெஷாகி குளியலறையில் வந்தவன் இவன் தள்ளி விட்டு சென்றவாறே தலையில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ சிந்தனையில் இருந்தவளை பார்த்தவன் முகத்தை திருப்பி கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

தெளிந்த மனதுடன் எழுந்து கீழே சென்றாள். எல்லோரும் சாப்பிட அமர்ந்திருக்க.. வேலையாட்கள் உணவை டேபிளில் எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

வேலையாட்கள் எடுத்து வைத்ததும் நகர சொல்லி கையசைத்தவள் தானே எல்லோருக்கும் தானே பரிமாறினாள். அன்று ராகவ்வும் வீட்டுக்கு நேரமாக வந்திட.. இவர்களோடு சாப்பிட உட்கார்ந்தவர் மகளின் நடவடிக்கையை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தார்.

தன் மகளா இது..ஜீன்ஸ் டீசர்ட்.. நடை உடை பாவனை எதிலும் ஒரு ஆண்பிள்ளை போல சுற்றி கொண்டு இருப்பவள்.. இன்று அழகான காட்டன் சுடிதாரில் எப்பவும் விரித்திருக்கும் கூந்தலை சிறு பின்னலிட்டு பூ சூடி.. பொட்டு இல்லாமல் இருக்கும் நெற்றியில் சிறு கருப்பு பொட்டு ஒட்டி.. வகிட்டில் குங்குமம் வைத்து.. பார்க்க கண் நிறைந்திருக்க.. அதற்கு மேல் கையசைவில் வேலைக்காரர்களை நகர்த்திய விதம் அனைவருக்கும் அருகே இருந்து தேவையறிந்து பரிமாற.. தன் மகளை இப்படி பார்க்க தானே ஆசை கொண்டார். கண்கள் கலங்கிவிட..

தாத்தா கையை அழுத்தி கொடுத்து “சாப்பிடு ராகவா..” என சொல்ல…

மகளிடம் கேட்டு கேட்டு வாங்கி வழக்கத்தை விட அதிமாகவே சாப்பிட்டார். மனதும் வயிறும் நிறைந்தது அவருக்கு.

ஆராத்யா”டேடி நாம தினமும் நைட் இப்படியே எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாமா.. இது நல்லா இருக்குல்ல..மம்மியும் வந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்”

“அதுக்கென்னடா..மம்மிகிட்ட நான் சொல்றேன். எப்பவும் இப்படியே சாப்பிடலாம்” என ராகவன் சொல்ல..

“ஹே…சூப்பர்” என துள்ளி குதித்தாள். சாதாரண குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்று ஆராத்யாவிற்கு பெரியதாக பட.. அவளின் மகிழ்ச்சியை எல்லோரும் ஆதுரமாக பார்த்து கொண்டு இருந்தனர்.

வீரா ஆருவின் ஏக்கத்தை சரியாக புரிந்து கொண்டவன் ” ஆரு பேபி.. கண்டிப்பா சாப்பிடலாம் ” என தலையை தடவி கொடுத்தவன்.. “மாமா.. இனி எந்த வேலை இருந்தாலும் கரெக்ட் டைமுக்கு சாப்பிட வந்திடலாம்” என ராகவ்விடம் சொன்னான்.

நிகிதாவிற்கோ பற்றி கொண்டு வந்தது. எல்லார்கிட்டயும் நன்றாக பேசு.. ஆனால் என்கிட்ட மட்டும் கடுவன் பூனை மாதிரி விழுந்து பிராண்ட வேண்டியது என அவனை திட்டி கொண்டு இருந்தாள் மனதோடு…

ஒட்டி உறவாட தவிக்கும்

அவள்…

வெட்டி பிரிய துடிக்கும்

அவன்…

சொல்லாமலே இருவரும்

ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்

ஆட்டம் நிறைவுக்கு வரும் நாளில்

வெற்றி என்பது யாருக்கு..

முடிவு மகிழ்ச்சியா..

மனவருத்தமா…

வாழ்க்கை இனிமையா..

கசப்போடு செல்லுமா…

கேள்விக்கு பதில் யார்

சொல்வது…

காலத்தின் சட்டதிட்டம்

என்னவோ….

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

A266E203-0948-4A20-8941-D349A9B77763

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

காலையில் வழக்கம் போல வீரா தான் முதலில் விழித்தான். தன்னை அணைத்து படுத்திருந்த நிகிதாவை கண்டு எரிச்சல் வந்தது.

“ச்சே..இவளுக்கு இதே வேலையா போச்சு”

எப்பவும் போல தள்ளிவிட இன்று மனசு இடம் கொடுக்கவில்லை. மெல்ல அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு எழுந்து சென்று விட்டான்.

மொபைலில் அடித்த அலாரத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் நிகிதா.நல்ல உறக்கத்தில் இருந்ததால் சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. பிறகே பாட்டி நேரமாக எழுந்து தயராகி வர சொன்னதும் தான் அலாரம் வைத்ததும் ஞாபகம் வந்தது. மணியைப் பார்க்க ஆறு என காட்டியது.

இவ்வளவு நேரமாகவா எழுந்திருக்கனும். கொஞ்ச நேரம் தூங்கலாமா.. என நினைத்தவள் வேண்டாம் அப்புறம் லேட்டாகி விடும் என மனதை மாற்றி எழுந்தவள் வீராவை தேடினாள்.

அவன் அறையில் இல்லை எனவும் எப்படி தானோ.. தினமும் சொல்லி வச்ச மாதிரி அலராம் கூட இல்லாமல் நேரமா எழுந்திருக்காங்களோ.. என நினைத்தாள்.

இவள் எழுந்து குளித்து தயராகி கீழே சென்ற போது… வீரா தனது ஜாகிங் முடித்து வந்திருந்தான்.. வியர்வையில் அவனுடைய டீசர்ட் தொப்பலாக நனைத்திருக்க… தலைமுடி கலைந்து.. நெற்றியில் சில வியர்வை துளிகள் பூத்திருக்க…அதை புறங்கையால் துடைத்தவாறு உள்ளே வந்தவனை கண்டு..

பார்த்தவுடன் சொக்கிப் போனாள்.அழகன் தான்டா நீ என மனதோடு கொஞ்சி கொண்டாள்.

வீரா வந்தவன் பேப்பர் படித்து கொண்டு இருந்தான். பாட்டி கிச்சனில் இருக்க..அங்கு தாத்தாவிற்கு தானே தன் கையால் டீ போட்டு கொண்டு இருந்தார்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேலைக்காரர்கள் பயந்து ஒதுங்கி நிற்க.. மஞ்சள் பூசிய முகத்தில் கொஞ்சம் பெரியதாக குங்கும பொட்டு வைத்து.. கொண்டையை சுற்றி பூ வைத்து.. பார்க்க கம்பீரமாக.. ராஜகளையாக.. நிமிர்வாக.. ஆளுமை உணர்வுடன்.. இருந்த பாட்டியை கண்டு அதியசித்து போனாள். இந்த வயதிலும் என்ன தேஜஸ் என வியந்து தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன பார்க்கிற.. என்னடா வேலைக்கார்கள் இருக்க.. நான் வேலை செய்யறேனுனா..”

ஆம் என இவள் தலையாட்ட…

“என்ன தான் வேலைக்காரர்கள் இருந்தாலும் சிலது எல்லாம் என் கையால உங்க தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்தா.. அவரு சந்தோஷப்படுவாரு… அவர் சந்தோஷத்தில் எனக்கு ஒரு மனதிருப்தி..” என அவர் அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி..

இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா.. என ஆச்சரியப்பட்டாள். அவரின் மலர்ச்சி கண்டு இவள் முகமும் புன்னகை பூசி கொள்ள..

சிரித்த முகமாக இருந்தவளை பார்த்து…

“என்ன என்னைய பார்த்து சிரிச்சிகிட்டு இருக்க… இந்தா இந்த டீயை வீராவுக்கு கொண்டு போய் குடு.. அதுக்கு முன்ன ப்ரிட்ஜில் பூ இருக்கு எடுத்து வை.. தினமும் காலையிலும் சாயங்காலமும் பூ வச்சுக்கனும். தினதினம் சொல்லிட்டு இருக்கமாட்டேன் புரிஞ்சுதா..”என்றார் மிரட்டும் தொனியில்..

எப்ப பாட்டி திட்டினாலோ மிரட்டினாலோ கோபமும் எரிச்சலும் கொள்பவள்.. இன்று சிரித்தபடி தலையாட்டினாள்.எல்லாம் புருஷன் நடத்திய காதல் பாடத்தின் எபெக்ட்..

பூவை சூடிக் கொண்டு டீயை எடுக்க வந்தவள் பாட்டி டீகப்பை எடுத்து வருவதை கண்டு..

“கொடுங்க கீரேனீ..நான் கொண்டு வரேன்”

“எம் புருஷனுக்கு என் கையால கொடுக்கனும். உன் புருஷனுக்கும் உனக்கும் அங்க வச்சிருக்கேன் எடுத்துட்டு போ” சொல்லி சென்று விட..

இவர்களுக்கு நிகிதா எடுத்து கொண்டு செல்ல.. அதற்குள் அங்கே பாட்டி தனக்கு டீ தருவார் என வீரா பார்க்க.. அவர் கையில் இருந்தது என்னவோ இரண்டு கப் ஒன்றை தன் கணவருக்கு கொடுத்து விட்டு அவனை கண்டு கொள்ளாமல் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு கணவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.

வீரா பாட்டியிடம் “அம்மாச்சி..எனக்கு டீ” என்றான்.

“உம் பொண்டாட்டி கொண்டு வருவா…” என்றார் கண்டு கொள்ளாமல்..

என்னங்கடா இது எல்லாம் ஒரு புதுசா இருக்கு என நினைக்க.. சன்ன சிரிப்போடு வந்த நிகிதா வீராவின் கையில் டீயை கொடுக்க..

இவளுக்கு என்னாச்சு என ஆராய்ச்சியாக அவளை பார்த்தவாறு.. டீயை வாங்கியவன் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நியூஸ் பேப்ரில் மூழ்கி போனான்.

பூவையவள் முகம் வாடி போனது.

சிறிது நேரம் கழித்து ஏதோ உறுத்த…டக்கென நிமிர்ந்து பார்த்தான். எதிர் சோபாவில் அமர்ந்து அதுவரை வீராவை சைட் அடித்து கொண்டு இருந்த நிகிதா நொடியில் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.

இவ எதிர்ல உட்கார்ந்துட்டு என்ன பண்றா..என யோசித்தவன்..நம்மள சைட் அடிக்கிறாளோ.. ச்சேச்ச.. இவளுக்கு தான் நம்மள புடிக்காதுல..என.. எனக்கும் இவள புடிக்காது என தன் எண்ணப்போக்கை வெட்டி விட்டு.. மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்தினான்.

மீண்டும் உறுத்த.. இவன் பார்க்க.. அவள் பார்வையை திருப்ப…. மீண்டும்… மீண்டும்… இந்த விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது.

நிகிதாவை கண்டு கொண்டான் வீரா. இவளை.. பல்லை கடித்தவன்…பேப்பரை மடித்து டீப்பாய் மேல் போட்டு விட்டு விடு விடுவென தங்களது அறைக்கு சென்றுவிட்டான்.

போனவனையே.. ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன பார்த்துகிட்டு இருக்க..போ அவனுக்கு டிரஸ் எடுத்து வை.. வேணுங்கறத கேட்டு செய் போ..”என பாட்டி சொல்ல…

ஹை சூப்பர் என சத்தமின்றி சொன்னவள் தங்கள் அறைக்கு ஓடினாள்.படாரென கதவை திறந்து கொண்டு மூச்சிரைக்க வந்து நின்றவளை தோளில் துண்டோடு குளிப்பதற்காக சென்றவன் போன் வரவும் பேசி கொண்டு இருந்தவன் புரியாத பார்வை பார்த்தான்.

போனில் பேசி கொண்டே..என்ன என்பதை போல புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க… சொக்கி போனாள் சுந்தரி.

ஒன்றுமில்லை என வேகமாக தலையாட்டியவள் அங்கிருந்த சோபாவில் நிதானமாக நடந்து சென்று அமர்ந்து கொண்டாள்.

பேசி முடித்து அலைபேசியை அணைத்து விட்டு.. இவள் மூச்சிரைக்க வந்தது என்ன.. இப்போ அன்னநடை நடந்து சென்று உட்காருவது என்ன…சம்திங் ராங்… ஏதோ சரியில்லையே தாடையை தடவி கொண்டு யோசித்தவன்..

இவ என்ன செஞ்சா நமக்கென்ன.. என தோளை குலுக்கி கொண்டு குளிக்க சென்றுவிட்டான். அவன் சென்றதும் டிரஸ்ஸிங் ரூம்க்கு சென்று அவனின் வார்ட்ரோப்பை திறந்தவள் அவன் துணிகள் பொருட்கள் எல்லாம் நேர்த்தியாக வைத்திருப்பதை பார்த்து மிஸ்டர் பெர்பெக்ட் தான் என மெச்சி கொண்டாள்.

அவனுக்கு எதை எடுத்து வைக்கலாம் எது நல்லா இருக்கும் என சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தவள்.. ஐவரி கலர் பேண்ட்.. லைட் வைலட் சர்ட் என எடுத்து அங்கிருந்த டேபிள் மேல் வைத்து விட்டு வந்து ஒன்றும் அறியாதவள் போல பழையபடி சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

குளித்து விட்டு வந்தவன் அங்கிருந்த உடைகளை பார்த்தும் இதெப்படி இங்கே என ஒரு நிமிடம் தான் யோசித்தான். நிகிதாவின் வேலை என புரிந்து விட..இவளை என பல்லை கடித்து கொண்டு..வேகமாக படுக்கையறைக்கு வந்தான்.

அதுவரை டிரஸ்ஸிங் அறையையே பார்த்து கொண்டு இருந்தவள்.. கதவு திறக்கவும் குனிந்து அலைபேசியை நோட்டம் விடுவது போல நடிக்க..

அதையும் அவன் கவனித்துவிட்டான். அவன் கடுப்புடன்..

“ஏய்..” என்று கத்தினான்.

“சொல்லுங்க மாமா” என்று எழுந்து நின்றாள் பவ்யமாக..

அவளின் செயல் எல்லாம் இவனுக்கு பிடிக்காமல் எரிச்சலையே தர…

“என்னடி ஓவரா நடிக்கற..எதுக்காக இதெல்லாம் செய்யற.. உனக்கு இது செட்டாகலை..” என்றான்.

அவள் எங்கே இவன் பேசுவதை கவனித்தாள். இடுப்பில் துண்டோடு துவட்டியும் துவட்டாமல் தலை முடிகளில் இருந்து சொட்டிய நீர் திவலைகள் கன்னம் காது என வழிந்து அவன் தோள்களில் இறங்கி அவன் மார்ப்பில் இறங்க.. அந்த நீர் திவலைகள் அடர்ந்த கரு கருவென இருந்த மார்பு ரோமங்களை நனைந்திருக்க.. அதிலும் அங்காங்கே நீர் திவலைகள் சொட்ட.. வெற்று மார்ப்புடன் அழகோவியமாக.. நின்று கொண்டு இருந்தவனை இன்ச் பை இன்சாக.. ரசித்து கொண்டு இருந்தாள்.

ரோமங்கள் அடர்ந்த வெற்று மார்ப்பில் முத்தமிட்ட ஞாபகங்கள் வந்து அலைகழிக்க.. மீண்டும் முத்தமிட… ரோமங்களை கைகள் கொண்டு கோதிட.. அந்த ஈர மார்ப்பில் முகம் வைத்த புரட்டி அந்த சில்லிப்பை உணர .. என அவள் ஆசை எல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்க..

“நிகிதா..” என அவன் கூச்சலில் உடல் தூக்கி வாரி போட நிகழ்வுக்கு திரும்பினாள்.

“கூப்பிட்டு கிட்டு இருக்கேன்.. அதை கூட கவனிக்காம நினைப்பு எல்லாம் எங்க வச்சிருக்க..”

உன்னை தான் நினைச்சிட்டு இருக்கேன் மாமா..என் வீரா மாமா.. மனதோடு கொஞ்சி கொண்டாள்.

மறுபடியுமா..இவளை..

“ஏய்..” என அழுத்தி கூப்பிட்டவன் “நீ என்னவோ பண்ணிட்டு போ.. ஆனால் என்னை வெறிச்சு.. வெறிச்சு பார்க்கறது…டீ கொடுக்கறது..சாப்பாடு போடறது.. டிரஸ் எடுத்து வைக்கறது.. இதெல்லாம் சரியில்ல…உனக்கும் எனக்கும் என்னைக்கும் செட்டாகாது.இனி இது மாதிரி வேலை எல்லாம் செய்யாதே” என்றான் அதட்டலாக…

அன்றலர்ந்த மலர் போல மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பி போனது. வாடிய முகத்தை கண்டும் காணாமல் சென்றுவிட்டான்.

அவனை பொறுத்தவரை இருவருக்கும் குணம், பழக்கவழக்கம், வாழ்க்கை தரம் எதிலும் ஒத்துவராது. சேர்ந்து வாழ்ந்தாலும் சரிவராது.கொஞ்ச நாள் பெரியவர்களுக்காக இருப்போம். வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என முடிவு செய்திருந்தான்.

அதனால் நிகிதாவிடம் ஒதுங்கி இருக்கவே முடிவு செய்திருந்தான். அவர்களுக்குள் நடந்தது ஒரு விபத்து என்பதே வீராவின் எண்ணம்.அதற்காக வாழ்க்கையை பணயம் வைக்க தயாராக இல்லை வீரா

சுட்ட கத்திரிக்காய் போல வதங்கிய முகத்துடன் வந்து அமர்ந்தவளை பார்த்த பாட்டி அருகில் வந்து என்ன என கேட்க..அவர் தோளில் சாய்ந்து விசும்பியவாறே.. அவன் சொன்னதை சொல்லி முடிக்க..

இவனை.. என பல்லை கடித்தவர்..இவளே தளைந்து வரா… இந்த சமயம் இவன் முறுக்கிட்டு திரியறான்..என நினைத்தவர்.. தலை கோதி கொடுத்து…

“இங்க பாரு..முதல்ல நீ அவன மதிக்கல..எடுத்தெறிஞ்சு எல்லாம் பேசின.. இப்ப தான உனக்கு அவன் மேல அன்பு வந்திருக்கு..இதெப்படி அவனுக்கு தெரியும். நீ தான் சொல்லி அவனுக்கு புரிய வைக்கனும். அத விட்டுட்டு அழுதினா சரியா போயிடுமா… நீ மாறிட்டங்கறதா சொல்லாம எப்படி தெரியும் அவனுக்கு.. சொல்லு பார்க்கலாம்” என கேட்க..

அதானே அதை சொல்லாமல் அழுது என்ன பிரயோஜனம் என யோசித்தாள்.

“நீ தான் வாய் வார்த்தையிலும் செயல்லயும் உனக்கு அவன் எவ்வளவு முக்கியம் என உணர்த்தனும் போ அவனை கவனி..”

பாட்டியின் வார்த்தைகள் அவளுக்கு உள்ளும் புறமும் ஒரு நிமிர்வை தர… சட்டென தன்னை நிலைபடுத்தி கொண்டாள்.

அதே சமயம் வீரா ஆபிஸ் செல்ல தயாராகி வர…அவனை பார்த்ததும் மலர்ச்சியுடன் எழுந்து சென்றாள்.

சாப்பிட அமர்ந்தவனுக்கு தட்டை வைத்து நிகிதா பரிமாற… இவன் பாட்டியை தேட..இந்த முறை பாட்டி இவர்கள் அருகில் வரவில்லை. வீரா தன்னை பார்க்கவும் தாத்தாவிடம் பேசுவது போல திரும்பி அமர்ந்து கொண்டார்.

அவனுக்கு புரிந்துவிட்டது அம்மாச்சியின் தூண்டுதலின் பேரில் இவள் இவ்வாறு செய்கிறாள் என…. ஆனால் இவள் அம்மாச்சி பேச்சை கேட்கமாட்டாளே.. என்றவாறே அவளை பார்த்து முறைக்க..

அவளோ அவனின் முறைப்பை சட்டை செய்யாமல்.. அவனுக்கு இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..

சாப்பிட பிடிக்காமல்.. தட்டை தள்ளி விட்டு எழுந்து கொள்ள..ஒரு நொடி அவனின் கோபத்தில் பயந்தவள்..மறு நொடி பாட்டியின் உபதேசங்கள் ஞாபகம் வர..

வீராவின் கையை பிடித்தவள் “உட்காருங்க மாமா.. சாப்பாட்டுல கோபத்தை காமிக்காதிங்க.. இனி இப்படி தான் நான் தான் உங்களுக்கு எல்லாம் செய்வேன்.பழகிங்க..”

“ஏய்..கையை விடுடி..”என கோபத்தை அடக்கி கொண்டு மெதுவாக சீற..

“சில்..சில்..சில்.. கோபப்படாம சாப்பிடுங்க..”

சாப்பிடாமல் நகரப் பார்க்கவும்..நிகிதா தட்டை கையில் எடுத்தவள் “நான் ஊட்டி விடனும்னு ஆசையா இருக்கா.. அப்ப சரி நானே ஊட்டிவிடறேன்” இட்லியை ஒரு விள்ளை பிட்டு எடுத்து சாம்பாரில் தோய்த்து ஊட்ட போக..

அவள் கையை தட்டி விட்டு அவளிடம் இருந்து தட்டை பிடுங்கி… அமர்ந்து உண்ண ஆரம்பித்தான் அவள் பரிமாற… சாப்பிட்டு கை கழுவ அவன் எழுந்து செல்லவும்..

சத்தமில்லாமல் “ஓ..ஓ..ஓ..” என்றாள் ராகமாக.. அது அவன் காதுகளில் விழுந்திட.. திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.

அவன் கண்டு கொண்டான் என கண்களை சுருக்கி.. நுனி நாக்கை கடித்து கொண்டு நெற்றியில் லேசாக அடித்து கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.

பார்க்க ரசனையாக இருந்தது. ரசிக்கவும் மறுக்கவில்லை வீரா.. ரசனையான புன்னகையோடு கிளம்பிவிட்டான். ஆனால் அவன் ரசித்ததை நிகிதா கவனிக்க தவறிவிட்டாள். அலுவலகம் சென்றவனுக்கு நிகிதாவின் செயலால் வெகுநாட்களுக்கு பிறகு மனது இதமாக இருக்க.. அவனுக்கு பிடிக்காத வேலை தான் எரிச்சோடு எப்போதும் செய்பவன் இன்று விரும்பத்தோடு செய்தான். நிகிதா அவனுக்கு அழைக்கும் வரை தான் அதெல்லாம்….

இராப்பொழுது நினைவுகள்..

இராஜாவின் சேவைகள்..

ரோஜாவின் எதிர்பார்ப்புகள்..

கண்ணன் காதல் லீலைகள்..

காரிகை கொண்ட பித்துக்கள்…

பித்தம் தெளிய வைக்கும் வித்தைகள்..

வித்தகனின் கைகள் செய்யும் மாயங்கள்…

மாயங்கள் தேடும் பெண் மனம்..

பெண் மனம் அறியா.. பேரழகன்…

பேரழகன் அறிவானோ.. தீர்ப்பானோ..

அழகி கொண்ட தாக(ப)ங்களை..

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

6797CA3F-0BF8-4494-9CC9-E059B602E15C

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா தன்னை அழகாக திருத்தமாக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாள். மாமாவுக்கு இந்த கலர் பிடிக்குமா.. இது பிடிக்குமா… தனது வார்ட்ரோப்பையே கலைத்து போட்டு ஒரு சுடிதாரை தேர்வு செய்து உடுத்தி கொண்டாள்.

நிகிதாவை பார்த்த பெரியவர்கள் இருவருக்கும் மனதில் மகிழ்ச்சி. ஒரு திருப்தி. தயங்கி தயங்கி வந்தவளை பாட்டி தன்னருகே அமர்த்தி கொண்டார். நிகிதாவிற்கு இதெல்லாம் புதிது. கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.

வீரா வந்தால் என்ன செய்வது என கூட அவளுக்கு தெரியவில்லை.அவள் அம்மா தந்தைக்கு எதுவும் செய்து பார்த்ததில்லை. எல்லாம் வேலைக்கார்கள் தான். பாட்டி தாத்தாவிற்கு செய்வதை வீட்டில் இருக்கும் சமயங்களில் பார்த்து இருக்கிறாள்.

மாமா வந்தா என்ன செய்யனும் என யோசித்தாள். என்கிட்ட பேசுவாரா.. என்னை பிடிக்குமா.. அருவருப்பா இருக்குனு சொல்லிட்டாரே..எனக்கு வந்த பீலிங் அவருக்கு வரலையா…அமுல் பேபினு எப்படி கொஞ்சினாரு.. ஆசை இல்லாமலா கொஞ்சினாரு..மறுபடியும் அப்படி கூப்பிடுவாரா.. காலைல மாதிரி முகத்த திருப்பி கிட்டு போயிடுவாரா..என பலவாறு கவலை கொண்டாள்.

அவளுடைய கவலை கொண்ட முகத்தை பார்த்த தாத்தா பாட்டியிடம் கண்களால் பேத்தியை சுட்டி காண்பிக்க…

பாட்டி நிகிதாவிடம் “என்ன நிகிதா.. என்ன கவலை..”

அவளுக்கே சொல்ல ஒரு மாதிரியாக இருந்தது. கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் தான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஞாபகம் வர …இன்று தன் மனதை உணர்ந்த பின்பு தன் தவறு பெரியதாக தெரிய… எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள்.

பாட்டி நிகிதாவின் தாடையை பிடித்து முகம் பார்க்க… வாடி போய் களையிழந்து இருக்க..

“என்னடா… ஏன் இப்படி இருக்க..என்ன வருத்தம் சொன்னா தான தெரியும்” என்று கனிவாக கேட்க…

கண்கள் கலங்கி “பாட்டி நான் மாமாவ இதுக்கு முன்னாடி மரியாதை இல்லாம பேசி உதாசீனப் படுத்தியிருக்கேன். இனி அப்படி பண்ணமாட்டேன். பட் மாமாவுக்கு என்னை பிடிக்காதுல.. மாமா என்கிட்ட பேசுவாங்களா..” என கேட்க…தவறு செய்த சிறு குழந்தையாய்…

பெரியவர்களுக்கே மனதிற்கு வருத்தமாகி விட்டது.

“எல்லாம் பேசுவான். எங்க போயிடறான். நாங்க இருக்கோம். எல்லாம் சரி பண்றோம்”என தாத்தா சொல்ல.. பாட்டியும் ஆமோதிப்பாக தலை அசைத்தார். அதில் கொஞ்சம் நம்பிக்கை பெற்றவளாக… மாமனின் வரவுக்காக காத்திருந்தாள்.

நேரங்கள் கடந்தது. வீரா தான் வந்த பாடில்லை. பெரியவர்கள் வீராவிற்கு அழைத்து கேட்க சொல்ல.. திரு திருவென முழித்தாள்.

“என்ன முழிக்கிற..” என பாட்டி கேட்க..

நெற்றியை சுட்டு விரலால் சுரண்டிக் கொண்டே.. “மாமா.. நம்பர் இல்லை..”என்றாள் கலக்கமாக..

பாட்டி உடனே முறைக்க.. தாத்தா தான் “விடு மங்களா.. இப்ப தான பேத்தி மனசு மாறியிருக்கா.. என் போன்ல இருக்கு.. சொல்றேன்.. நீ சேவ் பண்ணிக்கிடா..”என்றார்.

தாத்தாவிடம் நம்பர் வாங்கி அவனுக்கு அழைக்க…வீரா வேலையில் மூழ்கி இருந்தவன் புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யார் என தெரியாமல்..

“ஹலோ..”

அவன் குரல் கேட்டு புதிதாக வெட்கம் வந்திட…எப்படி பேச.. தயங்கி.. தழுங்கி.. நிற்க..

அதற்குள் இரண்டு மூன்று முறை ஹலோ.. ஹலோ.. என்றிட..

“யாரு போன் பண்ணிட்டு பேசாம இருக்கறது.. ச்சு..”

எங்கே வைத்து விடுவானோ என்ற படபடப்புடன்..

“நான் நிகிதா.. பேசறேன்” என்றாள் அவசர அவசரமாக..

எதிர்முனையில் முழுதாக ஒரு நிமிடம் அமைதி.

“ஹலோ.. மாமா..” என்றாள் நடுக்கத்துடன்..

என்னது மாமாவா…வீராவின் இதயம் ஒரு நொடி அதிர்ந்து..நார்மலானது.

ஏற்கனவே அவள் மேல் ஏக கடுப்பில் இருந்தவன்..

“என்னடி இன்னும் தெளியலையா.. புதுசா மாமாங்கற..” என்றான் கோபமாக..

அவனின் கோபத்தில் இன்னும் நடுக்கம் அதிமாகிட…

“இல்ல.. வந்து.. நீங்க சாப்பிட வரலையானு கீரேனீ கேட்டாங்க..” கண்களை இறுக்க மூடி வேக வேகமாக சொல்லி முடித்தாள்.

இரவு நடந்ததே அவன் மனம் மூளை என ஆக்ரமித்திருக்க… அதில் இருந்து வெளியில் வர முடியாமல் முயன்று வேலையில் கவனம் செலுத்தி அப்போது தான் ஓரளவு மீண்டு வேலையில் மூழ்கி போனான்.

மறந்து இருந்ததை அவள் போன் அழைப்பு ஞாபகப்படுத்த… அவளிடம் பேச பிடிக்காது

“வரல..எனக்கு வேலையிருக்கு..” என சொல்லி வைத்துவிட்டான்.

நிகிதாவுக்கு பெரும் ஏமாற்றமாக போனது.
“மாமாவுக்கு வேலை இருக்காம்.. வரலையாம்..” என்றாள் வாட்டமாக..

“அது அவனுக்கு வேலை இருந்தா அப்படி தான்.. அங்கேயே ஏதாவது சாப்பிட்டுக்குவான். நீ போய் சாப்பிடு.. நைட் வருவான்ல பார்த்துக்கலாம்” என சமாதானம் செய்தனர் பெரியவர்கள்.

ஏதோ கொஞ்சம் கொறித்து விட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.அறைக்கு வந்தவளுக்கு நேற்றைய பசுமை நினைவுகளே.. இனிமையாக மனதில் உலா வர…அவனுடனான கூடலை விட.. கூடல் பொழுதில் அவனுடைய கொஞ்சல்களே..அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிகிதாவிற்கு சிறுவயதில் இருந்தே பணம் கிடைத்த அளவிற்கு பாசம் கிடைக்கவில்லை. பெற்றவர்கள் பணமாகவும் கேட்டது கிடைக்குமாறு செய்வதே பாசமாக நினைத்தனர்.

பெரியவர்களும் கண்டிப்பை மட்டுமே காட்ட.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே.. பாசமான அழைப்போ.. அன்பான அரவணைப்போ.. இருந்தது இல்லை..

வீரா தன்னை அறியாமலேயே அவளுக்கு அந்த இரண்டையும் கொடுத்து இருக்க.. அதுவே அவன் பால் அவள் மனம் சாய காரணமாகி போனது.

வந்து படுக்கையில் அவன் படுக்கும் இடத்தில் படுத்து கொண்டவள்.. தான் எப்பவும் கட்டி அணைத்து தூங்கும் பெரிய டெட்டிபியரை “இனி நீ எனக்கு வேணாம் போ.. எனக்கு என் மாமா இருக்காங்க..”
என அதன் முகத்தில் இரண்டு குத்து விட்டு தூக்கி எறிந்தாள். ஐயோ பாவம் அது ஒரு மூலையில் போய் விழுந்தது.

வீராவின் தலையணையை கட்டி அணைத்து அதில் அவன் வாசம் பிடித்தவள்…
மாமனின் நினைவுகளில் மூழ்கி போனாள். அமுல்பேபி என கொஞ்சிய பொழுதுகள்..அவன் முத்தத்தின் சிலிர்ப்புகள் எல்லாம் நினைக்க.. நினைக்க.. சுகமான நோவுகளாக வாட்ட… அழகான கனவுகளில் ஆழ்ந்து போனாள்.

அவளின் கனவை கலைக்கும் விதமாக.. அவளின் போன் சிணுங்கியது. எடுத்தவள் ரூபேஷ் எனவும் எடுத்து பேசினாள்.

“சொல்லு ரூபேஷ்”என்றாள் உற்சாகமாக..

அவளின் உற்சாகத்தில் தன் திட்டம் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு..

“என்ன நிக்கி நம்ப ப்ளான் சக்ஸஸா..” என கேட்க..

“என்ன ப்ளான்” புரியாமல் கேட்டாள். அது எல்லாம் எங்கு அவளுக்கு ஞாபகம் இருந்தது.

அவளின் பதிலில் ரூபேஷின் முகம் கர்ண கொடூரமானது. கோபமும் வந்தது.

“என்ன நிக்கி.. இப்படி கேட்கற.. நேத்து பாட்டில் கொடுத்தனே.. அத அவனுக்கு கொடுத்தியா.. அவன் குடிச்சானா..”என்றான் கோபமாக..

அவன் கோப குரலும்.. மரியாதை இல்லாத பேச்சும்.. நிகிதாவிற்கு பிடிக்கவில்லை.

“என்ன ரூப்ஸ் ஒரு மாதிரி பேசற..” என்றாள் வெடுக்கென..

அவளின் கோபம் அவனுக்கு புதிதாக இருக்க.. கொஞ்சம் நிதானித்தான்.

“இல்ல நிக்கி.. பயந்துகிட்டே கொண்டு போனியே.. என்னாச்சோ கவலைல போன் பண்ணினேன்”என்றான் குழைந்து கொண்டு..

நடந்ததை அவனிடம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.. அதனால்

“வேலையிருக்கு ரூப்ஸ்.. அப்புறம் கால் பண்றேன்” என அவசர அவசரமாக சொல்லி அவன் பேசும் முன் வைத்துவிட்டாள்.

மாலை மயங்கும் நேரம் நிகிதா அழகாக புடவை உடுத்தி இரு சரமாக மல்லிகை பூ வைத்து வீராவிற்காக காத்திருந்தாள். மங்களம் பாட்டி தான் நிகிதாவிற்கு புடவை கட்டி விட்டு எப்பவும் ப்ரீ ஹேர் ஆக இருப்பவளை.. அவள் கூந்தலை ஒரு பாண்ட்ல் அடக்கி பூ வைத்து அலங்கரித்திருந்தார்.

நேற்று போல இன்று இரவும் தாமதமாகவே வந்தான். எல்லோரும் உண்டு உறங்கியிருக்க…நிகிதாவும் அவளுக்கு துணையாக பாட்டியும் மட்டுமே இவனுக்காக காத்திருந்தனர்.

வந்தவன் அவளை கண்டு கொள்ளவில்லை. பாட்டியின் அருகில் அமர்ந்தவன்

“அம்மாச்சி சாப்டிங்களா…”

“ம் ஆச்சு பா..”

“தாத்தா தூங்கிட்டாரா..”

“தூங்கிட்டாரு.. நீ ஏன் இவ்வளவு லேட்..”

“வேலை இருந்துச்சு.. நீங்க ஏன் இவ்வளவு நேரம் தூங்காம முழிச்சிட்டு இருக்கறிங்க..”

நிகிதாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வீரா பார்ப்பானா என ஆவலாக நிகிதா அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

“உனக்காக தான்..”

“எனக்காகவா.. நான் போட்டு சாப்பிட்டுக்குவேன்..தூக்கம் கெட்டா.. உங்க பியூட்டி ஸ்பாயிலாகிடுமே.. என் செல்ல க்யூட்டி..” என அழகான மெல்லிய புன்சிரிப்புடன் பாட்டியின் தாடையை பிடித்து கொஞ்ச..

நிகிதா இதுவரை பார்த்திராத முகம் அது. கொஞ்சம் கனிவாக.. குறும்பு மின்ன.. மலர்ந்த புன்னகையுமாக.. கண்களை உருட்டி.. அவன் பேசிய அழகில் வஞ்சியவள் சொக்கி போய் தன்னை மறந்து கணவனையே இமை சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

“டேய் பேராண்டி.. அழகான பொண்டாட்டி பக்கத்தில் இருக்கும் போது.. என்னை போய் பியூட்டி.. க்யூட்டினு ரைமிங்கா.. கொஞ்சிகிட்டு இருக்க..”

உடனே வீரா முகம் இறுகி.. எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டான். பாட்டிக்கே அவன் செயல் மனதிற்கு பிடிக்கவில்லை. சட்டென நிகிதாவை பார்க்க.. அவள் முகம் கசங்கி கலங்கி இருந்தது.

நிகிதாவிற்கு அவன் செயல் ரம்மியமான கனவில் இருக்கும் போது யாரோ சுடுநீரை கொட்டி கலைத்து விட்டது போல ஆனது.

பாட்டி தான் நிலைமையை சரி செய்யும் பொருட்டு..

“சரி.. சரி..பேசினது போதும்… சாப்பிட..வா..எனக்கு தூக்கம் வருது”

அவன் எழுந்த செல்ல..அவன் பின்னாலேயே பாட்டியும் செல்ல…

போவதா.. வேண்டாமா.. இப்ப தான் என்ன செய்யவேண்டும் என தெரியாமல் நின்றுவிட்டாள் நிகிதா.

நிகிதா பின்னோடு வருவாள் என நினைத்து கொண்டு சென்ற பாட்டி சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தவர் இவளை.. என பல்லை கடித்தவர் வா என சைகை செய்ய.. வேகமாக சென்று பாட்டியோடு இணைந்து கொண்டாள்

டைனிங்கில் வீரா அமர்ந்து இருக்க.. அவனருகில் பாட்டி அமர்ந்து கொண்டு…

“நிகிதா.. தட்டை வை..”

“தண்ணீர் எடுத்து வை..”

பாட்டி சொல்ல.. சொல்ல.. நிகிதா ஒவ்வொன்றாக செய்ய…

இது எல்லாம் என்ன புதுசா இருக்கே..இவள் இப்படி எல்லாம் செய்யகூடியவள் இல்லையே.. என ஆராய்ச்சியாக பார்த்தான் வீரா.. ஒரு வேளை அம்மாச்சி தான் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறாங்களோ என நினைத்தான்

நிகிதா இரண்டு சப்பாத்தி வைத்து குருமா ஊற்ற அமைதியாக சாப்பிட்டான். மேலும் நிகிதா சப்பாத்தி வைக்கப் போக.. போதும் என கையை அசைத்தவன் எழுந்து கொள்ள…

அவன் நன்றாக சாப்பிட கூடியவன் என அவளுக்கு தெரியும் காஞ்சிபுரம் போன போது பார்த்து இருக்கிறாளே…

பாட்டியும் அதையே தான் கேட்டார்.”வீரா போதுமா.. இரண்டு தான வச்சா..”

“மாண்புமிகு நிகிதா மேடம் பரிமாறினதுல… வயிறு நிறைஞ்சு போச்சு” என்றான் நக்கலாக…

நிகிதாவின் கண்கள் கரை கட்டி நின்றது.

பாட்டி நிகிதாவை பார்த்து விட்டு கண்டன குரலில் “டேய் வீரா..”

அதை எல்லாம் சட்டை செய்யாமல் சென்று விட்டான். கலக்கத்துடன் பார்த்த நிகிதாவை

“எதுக்கு இப்படி இருக்கிறவ.. நீ மாறின மாதிரி அவனும் மாறுவான். அதுக்கு கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் நீ பொறுமையா தான் இருக்கனும்”

“மாறிடுவாங்கல்ல..” என்றாள் சந்தேகமாக..

“பொறுப்பு இல்லாத நீயே மாறிட்ட.. அவன் பொறுப்பானவன் கண்டிப்பாக மாறிடுவான்” என்று அவளை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.

மேலே தங்கள் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தான். அமைதியாக உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றி வந்தாள்.இப்போது அவன் முன்னால் மினி ஷார்ட்ஸ் போட கூச்சமாக இருக்க..முழு பேண்ட் போட்டு இருந்தாள்.

படுக்கையில் படுக்காமல் உட்கார்ந்து இருந்தவன் இவள் வரவும்

“என்ன புது டிராமா.. இதெல்லாம்”என்றான்.

“இல்ல… மாமா..அது வந்து..”

“என்னவோ புதுசா மாமங்கற..உன் போக்கே சரியில்லையே..” என்றான் தாடையை சொறிந்து கொண்டே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

தன் மனதில் உள்ளதை சொல்ல முடியவில்லை. பெண்களுக்கே உண்டான நாணம் ஒருபுறம்..சொன்னால் நம்புவானா என்ற சந்தேகம் ஒரு புறம்.. சொன்ன பிறகு எப்படி எடுத்து கொண்டு என்ன பேசுவானோ என பயம் ஒரு புறம்..என அவள் மனம் அலைகழிக்க…

மிரட்சியுடன் அவனை பார்த்தாள்.அவளுடைய மருண்ட பார்வையை கண்டு அவனுக்கு ஆச்சரியம் . இவள் பயப்படுகிறாளா.. அதுவும் என்னை கண்டு என…

“என்ன மேடம் கேட்டால் பதில் சொல்லாமல் திமிரா பார்க்கறிங்க..”என்றான் வேண்டுமென்றே…

அந்த பேச்சில் உதறல் எடுக்க.. “இல்லல்ல அப்படி எல்லாம் இல்ல.. மா..” மாமா என சொல்ல வந்தவள் பாதிலேயே நிறுத்தி கொண்டாள்.

தான் எதற்கு இப்படி பயப்படுகிறோம் என அவளுக்கே தெரியவில்லை.

“அம்மாச்சி தான் இப்படி கூப்பிட சொல்லுச்சா.. அம்மாச்சி கட்டாயத்துக்காக எல்லாம் உனக்கு விருப்பம் இல்லாம எதையும் செய்யவேண்டாம்” மங்களம் பாட்டி வீராவிற்கு பரிமாற சொன்னதை வைத்து இவனாகவே நினைத்து கொண்டு பேச…

அடப்பாவி..இவரு தானே.. மாமா சொல்லு.. மாமா சொல்லு.. என டார்ச்சர் பண்ணினாரு… என நினைக்க.. அவளது மனசாட்சியோ..அடியே நிகிதா உனக்கு டார்ச்சராவ இருந்துச்சு என கேட்க…ஹீஹீஹீ..சுகமான டார்ச்சர் என லேசாக அசடு வழிந்தவாறு மனதை சமாதானப் படுத்தினாள்.

வீரா இவள் முகத்தில் அசட்டு சிரிப்பை பார்க்க.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவ என்ன இப்படி இளிச்சிட்டு இருக்கா… குடிச்சிருக்காளோ..என எண்ணி..

“குடிச்சிருக்கியா..”என அவளிடமே கேட்க.. சட்டென முகம் கூம்பி போனது நிகிதாவிற்கு..

இல்லை எனும் விதமாக தலையாட்டியவள் ஒன்றும் பேசாமல் திரும்பி படுத்துக் கொண்டாள். அவன் கேட்டது மனதை வாட்ட.. இது நாள்வரை தவறாக தெரியாத ஒன்று இப்போது அவளுக்கே தவறாகப் பட்டது.

நிகிதாவை பார்த்தவன் தோளை குலுக்கி கொண்டு படுத்தவன் படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட..

நிகிதாவிற்கு தான் நேற்றைய சரசங்கள்.. இன்றைய அவனின் பேச்சு..என மனதில் பலவும் ஓட.. உறக்கம் வரவில்லை. அவனை அணைத்து படுத்தால் உறங்கி விடுவாள் என அவளுக்கே தெரியும்.

சுருக்கென்று ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்து அவன் உறங்கும் வரை பொறுத்தவள் அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு அவனை லேசாக அணத்தாற் போல படுத்து கொண்டாள். படுத்த சில நிமிடங்களிலேயே அவள் மனம் அமைதி அடைய.. நிம்மதியான உறக்கம் கொண்டாள்.

கண்ணனின் கைப்பாவையாக..

கண்மணி ஆவா கொள்ள…

மோகம் கொண்ட கணங்கள்..

தேகம் கூடல் பொழுதுகள் தேட…

தலைவியோ அண்மை நாட..

தலைவனோ தள்ளி நிற்க..

என்று தீரும் இந்த மாய நாடகம்..

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

என் மோகக் தீயே குளிராதே 26

அத்தியாயம் 26   “மெதுவா.. மெதுவா.. வா ப்ரியா..” என்ற நகுல், மெல்ல நொண்டியபடியே வந்த ப்ரியாவை கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வர,    “என்னடா வீடு ரொம்ப நிசப்தமா இருக்கு? குட்டி பிசாசு அவங்க வீட்டுக்கே திரும்பி போயிடுச்சா?” என்று அவர்களுக்கு பின்னோடு ப்ரியாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான் சஜன்.    “அப்படி போனா.. நல்லது தான்.. எப்பப்பாரு ஹர்ஷூ பின்னாடியே சுத்திட்டுருக்கா.. நமக்கும் ப்ரைவஸியே இல்ல..” என்ற நகுலனை ஒருமாதிரி பார்த்த

என் மோகக் தீயே குளிராதே 26 Read More »

8F4BD7E1-38EF-47A3-A4E2-40C72D29E7CD

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம

அன்று பௌர்ணமி… ஏகாந்தமான இரவு வேளை…. மிதமான ஏசி குளிர் அந்த அறையை நிறைத்திருக்க…. வீராவும் நிகிதாவும் தங்கள் சுயக்கட்டுப்பாட்டில் இருவருமே இல்லை.

படுக்கைக்கு வரும்போது சரி வந்த பின்பும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் இம்மியளவு கூட இடைவெளியின்றி இணைந்து பிணைந்து தான் இருந்தனர்.

வீரா அவள் இதழ் ரச போதையில் நீண்ட நேரம் திளைத்திருக்க..அவள் இதழின் தித்திப்பு எல்லாம் திகட்டி போக.. அவன் உதடுகள் நிகிதாவின் முகமெங்கும் முத்தங்களாக இன்றி இதழ் தீண்டலாக… உலா செல்ல…

அவனின் இதழ் தீண்டல் அவளின் காதல் உணர்வின் முடிச்சுக்களை எல்லாம் மொட்டவிழ்க்க… நிகிதா முதன்முதலாக காதல் என்ற உணர்வுக்குள் இழுத்து செல்லப்பட்டாள் வீராவால்..

பெண்ணவளின் தேகமோ…மலரினும் மெல்லிய தேகம்.. பார்லரின் உபயோகத்தில் மேலும் பட்டு போல வளவளக்க… கண்ணாளனுக்கோ.. மலர் தேக ஸ்பரிசமோ பித்துக் கொள்ள செய்தது

வீரா நிகிதாவை மெல்ல மெல்ல… மிக மிக மென்மையாக…நிதானமாக… பூவை போல… தயங்கி தாங்கி… ஒவ்வொரு அடியாக முன்னேறி அவள் அழகில் திளைத்து… திக்குமுக்காடி… காதலாடி கொண்டாடி தீர்த்தான் தன் இணையை…

ஒவ்வொரு தீண்டலுக்கும் “அமுல் பேபி” “அமுல் பேபி” என கொஞ்சி கொஞ்சியே காரியம் சாதித்து கொண்டான். போதைக்கு அடிமையாக இருந்தாலும் பெண்மையை மென்மையாக தான் கையாண்டான்.அவனின் மென்மையான நிதானமான தொடுகையே…நிகிதாவிற்கு வீராவின் மேல் ஈர்ப்பு கூட காரணமானது.

அவனோ காமத்தின் பிடியில்… இவளோ காதலின் சுவடில்….விடிய விடிய…. மன்மத தேசத்தில் இந்திர விழா அரங்கேறியது.

மன்னவன் தான் சுய நினைவின்றி போதையின் மயக்கத்தில்… மங்கையவளோ சுய நினைவோடே மன்னவனை தாங்கி கொண்டாள்.

காதல் அவளை ஆட்கொண்ட நொடி வீராவின் மேல் அவள் கொண்ட அபத்தம் எல்லாம் பிடித்தமாக மாறின. வீராவின் மேல் கொண்ட வெறுப்பு எல்லாம் விருப்பமாக மாறிய தருணம் அது.

“வீரா” என்று உருகியவளை “மாமா சொல்லுடி அமுல் பேபி” என படுத்தி எடுத்தான். அவளின் “மாமா” என்ற ஒவ்வொரு அழைப்பிற்கும் அவன் அணைப்பின் வேகம் கூடியது.

விடியலின் நெருக்கத்தில் பெண்ணவளை விட்டு நீங்கியவன் அமுல் பேபி அமுல் பேபி என பிதற்றி கொண்டே நிகிதாவை அள்ளி தன் மாரின் மேல் போட்டு அணைத்தவாறே உறங்கி போனான்.

கணவனின் ஆளுமை நிகிதாவின் மனதிற்கு நிறைவாக பூரிப்பாக இருக்க… இது நாள் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் விகல்பமில்லாமல் பழகியவளுக்கு… தன் ஆண் தன்னிடம் கொண்ட மோகம் எல்லாம் புதிதாக இருக்க.. பிடித்தும் இருந்தது. அவனோடு ஒன்றி இறுக அணைத்து களைப்போடு உறங்கினாள்.

விடிந்து வெகுநேரம் ஆன போதும் இருவரும் கீழே இறங்கி வராததால் பெரியவர்கள் இருவரும் கவலையுடன் மாடியையே பார்த்து கொண்டு இருந்தனர்.

எப்பவும் நிகிதா நேரம் கழித்து தான் எழுந்து வருவாள். வீரா விடியலில் எழுந்து தனது உடற்பயிற்சி முடித்து குளித்து தயராகி தனது அலுவலை பார்க்க சென்று விடுவான். இன்று அவனும் வராததால் இரவு அவன் எப்போது வந்தான் என்பதும் தெரியாததால் பாட்டி தான் மிகவும் கவலை கொண்டார்.

மங்களம் பாட்டி எப்பவும் வீரா விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். விருப்பமில்லாமல் தான் இங்கு இருக்கிறான்.. எதையும் அவனாக கேட்கமாட்டான்… எனவே அவனுக்கு எந்த ஒரு சவுகரியம் குறைவான.. சங்கடமான நிலை ஏற்படகூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

வீரா விழித்து எழுந்த போது வழக்கம் போல நிகிதா அவனை அணைத்து படுத்திருக்க…அவளை பிடித்து தள்ளிவிட்டான். அதில் உறக்கம் கலைந்து எழுந்தவள்.. இருவரின் நிலை கண்டு நாணம் கொண்டு அவசரமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அப்போது தான் வீராவும் கவனித்தான் இருவரையும்…படுக்கையும்… நடந்ததை ஊகித்தவன் தன் மேலேயே எரிச்சல் கொண்டான்.இரவு என்ன நடந்தது என்று யோசிக்க.. யோசிக்க…தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது.

தலையை கையில் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தவனை கண்ட நிகிதா…அவனின் தலைவலிக்கான காரணம் அறிந்து.. தன் உடையை சரிபடுத்தி கொண்டு கீழே வேகமாக சென்றாள்.

இவர்களின் அறையையே பார்த்து கொண்டு இருந்த பாட்டி நிகிதா வேகமாக இறங்கி வந்து கிச்சனுக்கு செல்வதை பார்த்தவர்.. என்ன என தெரியவில்லையே
பதறி பின்னோடு சென்றார்.

அங்கு நிகிதா லெமன் ஜீஸ் செய்து கொண்டு இருப்பதை கண்டவர்.. புரியாமல்..

“என்ன பண்ணிட்டு இருக்க.. எதுக்கு காலங்கார்த்தால லெமன் ஜீஸ்..”

என்ன சொல்வாள். சொன்னால் அவ்வளவு தான்.. தொலைத்துவிடுவார்கள். செல்ல பேரன் அவனை குடிக்க வைத்தது தெரிந்தால்.. போச்சு வசமாக மாட்டிக் கொண்டேன் என பதட்டத்துடன் நின்றாள்.

“கேட்கிறேன்ல.. சொல்லு” என அதட்டி.. அவள் முகம் பார்க்க… அவளோ பார்வையை தழைத்து கொண்டு எங்கோ பார்த்தாள்.

அவள் முகத்தில் கழுத்தில் சில இடங்களில் வீராவின் பல் தடயங்கள்.. அவளின் உடல்மொழி எல்லாம் வேறு சொல்ல… நடந்தவற்றை ஒருவாறு யூகம் செய்தவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேளாமல் “சரி போ..”என்றிட..

விட்டால் போதும் என அடித்து பிடித்து ஓடி வந்துவிட்டாள்.வீராவிடம் லெமன் ஜீஸை நீட்ட..என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“இல்ல.. உங்களுக்கு கொஞ்சம் ஹேங்ஓவர் ஆகிடுச்சு.. அதான் லெமன் ஜீஸ் எடுத்து வந்தேன்”என தயங்கியவாறு சொல்ல…

சடாரென வேகமாக எழுந்தவன்”ஏன்டி என்னை உசுப்பேத்தி குடிக்க வச்சதும் இல்லாம.. இப்ப லெமன் ஜீஸ் வேற தரீயா…என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..”

அவன் கோபமாக எழுந்த போதே பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தவள் பயத்துடனே..

“இது குடிச்சா… சரி.. ஆகிடும்..” சொல்ல…அவளிடம் இருந்து பிடுங்கி ஒரே மிடறாக குடித்து முடித்தான்.

டிரிங்க்ஸா இருந்தாலும்.. ஜீஸா இருந்தாலும் கல்ப்பா தான் அடிப்பாரா.. என அவனை ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

குடித்திருந்த ஜீஸ் அவனை கொஞ்சம் தெளிய வைத்திருக்க..நடந்தது எல்லாம் ஓரளவுக்கு நிழலாக அவனுக்கு தெரியப்படுத்த… ச்சே நானா இப்படி இவளை பிடிக்கலைனு சொல்லிட்டு இவகிட்டேயே இப்படி நடந்து இருக்கேனே… என தலையில் அடித்து கொண்டான்…. ஏற்கனவே கோபத்தில் கனன்று கொண்டு இருந்தவனுக்கு அவள் பார்வை மேலும் தூபம் போட…

எல்லாம் இவளால் தானே..இவள் தானே அந்த கருமத்தை வீடு வரைக்கும் கொண்டு வந்தாள். வந்தது மட்டுமில்லாமல் என்னிடம் சண்டை போட்டு என்னையவே குடிக்க வைத்துவிட்டாள் என தன் இயலாமையை எல்லாம் கோபமாக அவள் புறமே திருப்பினான்.

“என்னடி என்னை அப்படி பார்க்கற.. என்னையும் உன்ன மாதிரி குடிகாரனா ஆக்கிடலாம். அப்ப தான் உனக்கு வசதியா இருக்கும்னு பார்க்கறியா…”

“இல்ல.. அப்படி எல்லாம்..” அவளை பேசவிடாமல்..

“இல்லைனா.. எதுக்குடி அதை ரூம் வரைக்கும் எடுத்திட்டு வந்த.. எனக்கு தெரியும் என்கிட்ட சண்டை போட்டதே என்னை குடிக்க வைக்கத் தான..”

ஐயோ கண்டுபிடிச்சிட்டானே.. திரு திருவென முழித்தாள்.

“என்னடி முழிக்கற.. அப்ப எல்லாமே ப்ரீ பிளேனிங்கா தான் செஞ்சிருக்க.. என்னை குடிக்க வச்சு.. என்னை மயக்கி… உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி படைக்க பார்த்திருக்க..”

அடப்பாவி நானாடா உன்னை மயக்கினேன்.. நீ தானடா இங்க வலிக்குதுனு நெஞ்ச தொட்டு புலம்பின.. வலிக்கு ஒத்தடம் கொடுத்தது ஒரு குத்தமாடா என நினைத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளின் முறைப்பு மேலும் கோபத்தை தூண்ட.. நிதானம் இழந்து வார்த்தையை தவறவிட்டான்

“எவ்வளவு திமிரா முறைக்கிற.. என்ன குடிக்க வச்சு.. காரியம் சாதிச்சுகிட்டே இல்ல.. நானும் புத்தி கெட்டு போயி.. உன்னைய தொட்டு இருக்கேன் பாரு.. நினைச்சாவே அருவருப்பா இருக்கு…”என தோளை குலுக்கி கொண்டு சொல்ல…

பங்குனி மாதத்தில் பூக்கும் வேப்பம்பூ சிறியதாக இருந்தாலும் அதன் வாசனை அதிகமாக இருக்கும் அதுபோல பெண்ணவளின் மனதில் பூத்திருந்த காதல் ஒரு இரவில் பூத்ததாக இருந்தாலும்..மனம் முழுவதும் வியாபித்து மணம் பரப்பிக் கொண்டு இருந்தது.

வீராவின் அருவருப்பு என்ற வார்த்தையிலும்… பாவனையிலும் அவளின் மண(ன)ம் நிறைந்த காதல் அடி வாங்கியது.

அவள் கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. இது நாள் வரை கண்ணீரே அறியாத அவள் கண்கள் வெந்நீரை சிந்தின..

அதையும் நடிப்பு என அவளை சாடினான். “என்னடி நீலி கண்ணீர் வடிக்கற..அழுதா நல்லவனு நம்பிடுவேனா..” என அவளை பிடித்து தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்து அலுவலகம் செல்ல தயராகி வந்தவன் அவளை திரும்பியும் பாராமல் வேகமாக சென்றுவிட்டான்.

அவன் தள்ளிவிட்டதில் படுக்கையில் குறுக்காக விழுந்தவள் அழுது கொண்டு இருக்க.. அவன் தன்னை பாராமல் சென்றதில் மேலும் அழுகை கூடியது.

வீரா சாப்பிட டைனிங்கிற்கு வரவும் பாட்டி பரிமாற சென்றார். அருகே அமர்ந்து அவனுக்கு பரிமாறியவர் அவனையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்.

காலையில் பேத்தியை கவனித்ததில் அவர் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் வீராவின் முகத்தில் தெரிகிறதா… என பார்க்க.. அவன் முகம் இறுகி கடுகடுப்பாக இருக்க…

என்ன என தெரியாமல்..குழம்பி.. அவனை எதுவும் கேட்டு சங்கடபடுத்தாமல் அமைதியாக அவனுக்கு பரிமாறினார்.

எப்பவும் பெரியவர்களிடம் சொல்லி விட்டு கிளம்புபவன்.. தான் நடந்து கொண்டதை நினைத்து குற்றவுணர்வில் இருந்தவன் சொல்லாமலயே சென்றுவிட…

சொக்கலிங்கம் பேரன் சொல்லாமல் செல்வதை கண்டவர் மங்களத்திடம்

“மங்களா.. என்னாச்சு பேராண்டி சொல்லாம கிளம்பிட்டான். முகமே சரியில்லை..”என கேட்க…

மங்களம் கணவரின் அருகே அமர்ந்து மெல்லிய குரலில் காலையில் பேத்தி வந்ததையும்.. வீராவின் கடுகடுப்பையும் சொல்லி தான் ஓரளவு நடந்ததை கணித்தவர்

“நடந்தது சந்தோஷமான விசயமா இருந்தாலும்.. இருவரும் சந்தோஷமா இல்லை.. என்ன சொல்ல.. புரிஞ்சுகாத புள்ளைகளா இருக்காங்களே..”என சலிப்பாக பெருமூச்சு விட்டார்.

“விடு மங்களா..எல்லாம் சரியாகும்.. வீரா எல்லாம் சரி பண்ணிடுவான்”என சமாதானம் செய்தார் சொக்கலிங்கம். வீராவை தான் சரி பண்ணனும் என அவருக்கு தெரியவில்லை பாவம்.

அழுது கொண்டு இருந்தவள் மதிய உணவுக்கு கூட கீழே இறங்கி வரவில்லை.நிகிதா வராததால் மங்களம் பாட்டி அவளை பார்க்க அவர்கள் அறைக்கு சென்றார்.

நிகிதா அழுதழுது கண்கள் சிவந்து முகம் எல்லாம் வீங்கி ரோஜா நிறத்தில் கன்றி போய் இருக்க.. தேம்பிவாறு குப்புற படுத்திருந்தாள்.

பார்த்ததும் கோபம் தான் வந்தது பாட்டிக்கு.. என்ன பெண் இவள் என…

“ஏய் நிகிதா.. எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க… எந்திரி முதல்ல..” என்றார் அதிகாரமாக..

எப்பவும் பாட்டியின் அதிகாரத்தில் சிலிர்த்து கொண்டு நிற்பவள்.. எழுந்து அமைதியாக அமர்ந்தாள்.

“என்ன நடந்துச்சுனு இப்படி அழுதுகிட்டு இருக்க…”

“கேட்கறன்ல பதில் சொல்லு”

அதற்கும் அவள் அமைதியாக இருக்க…

இவளுக்கு பிடிக்காமல் பேரன் வலுகட்டாயமாக ஏதாவது செய்து விட்டானா..அப்படி செய்யகூடியவன் இல்லை.என்ன நடந்தது என தெரியலையே இப்படி அழுகறாளே.. எப்படி கேட்பது..என யோசித்தவர்….

“வீரா.. உன்கிட்ட.. உனக்கு பிடிக்காம.. தப்பா நடந்துகிட்டானா..”என தயக்கமாக கேட்க…

இல்லை என தலை அசைத்தாள்.

“அப்புறம் எதுக்கு அழுகற..இப்ப என்ன நடந்துச்சுனு சொல்ல போறியா இல்லையா..” என்று சத்தமிட..

பயத்துடன் தலை குனிந்து ரூபேஷ் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தது.. வீட்டுக்கு கொண்டு வந்தது.. வீராவிடம் வம்பு செய்து அவனை குடிக்க வைத்தது.. என எல்லாம் சொன்னவள்.. அதற்கு மேல் நடந்தவற்றை சொல்ல தயங்கி..

“ம்ம்..அப்புறம் அவங்க.. என்கிட்ட..”

இதை எல்லாம் கேட்ட பாட்டிக்கு கோபம் தாறுமாறாக ஏற..

“ஏய் உனக்கு எவ்வளவு கொழுப்புடி.. அவனை குடிக்க வச்சிருக்க.. குடிச்சிட்டு அவன் தப்பா நடந்துகிட்டானு புகார் வாசிக்கறியா.. உன்னை.. “என அடிக்க கை ஓங்கி கொண்டு போக..

சட்டென அவரை கட்டி கொண்டு “தப்பா எல்லாம் நடந்துக்கல.. எனக்கு பிடிச்சிருக்கு.. மாமாவ எனக்கு பிடிச்சிருக்கு..” என தோள் சாய்ந்து அழுக…

அவள் சொன்னது புரிய ஓரிரு நிமிடங்கள் ஆக… புரிந்ததும் கோபம் போய் அடக்கமாட்டாமல் உல்லாசமாக சிரிக்க…

“கீரேனீ நான அழுதுகிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கறிங்க..”என சிணுங்கினாள்.

“அடியே ராஜாத்தி…இப்ப தான் பார்க்க அழகா இருக்க..” நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க…

“எது.. நா..அழுது வீங்கி இருக்கறதா..” என பொய் கோபம் கொண்டு முறைக்க..

“அதான் உன் மாமன.. பிடிச்சிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அழுகறவ..”

“எனக்கு பிடிச்சிருக்கு..ஆனா மாமா.. என்னை பார்த்து அருவருப்பா இருக்குனு சொல்லி.. தள்ளிவிட்டு போய்டாங்க..” என மீண்டும் தேம்பி கொண்டு அழுக..

“முதல்ல அழுகையை நிறுத்து.. நீ செஞ்ச வேலைக்கு வச்சு கொஞ்சுவானா.. “என திட்டியவர் பின்பு கொஞ்சம் பொறுமையாக..

“நீ செஞ்சது தப்பு தான.. அத நீ தான் சரி பண்ணனும். உனக்கு அவனை பிடிச்சிருக்குனு நீ தான் அவனுக்கு புரிய வைக்கனும்” என சொல்ல..

“புரிஞ்சுப்பாங்களா.. மாமாவுக்கும் என்னை பிடிக்குமா..கீரேனீ” என ஏக்கமாக கேட்க..

“எங்க போயிடறான். எல்லாம் புரிய வைப்போம். நீ மட்டும் நான் சொல்றபடி கேட்டு செய்.. அவன உன் வழிக்கு கொண்டு வந்திடலாம்” என்றார்.

உடனே அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து.. “என் செல்ல கீரேனீ” என்றாள்.

அவளின் முத்தத்தில் கூச்சம் கொண்டு “சீ.. எச்சில் பண்ணிகிட்டு.. பாரு படுக்கை எல்லாம் அலங்கோலமா கிடக்கு.. நீயும் எப்படி இருக்க பாரு.. ஆள அனுப்பி வைக்கறேன். எல்லாம் சுத்தம் பண்ண சொல்லிட்டு நீயும் குளிச்சிட்டு ரெடியாகி அவன் மதிய சாப்பாட்டிற்கு வரங்காட்டி வா..”

“புடவை கட்டிட்டு வா..”

எனக்கு சேரி கட்ட தெரியாது கீரேனீ” என்றாள் பயத்துடன்..

“உன்னை சொல்லி குத்தமில்லை.. எல்லாம் உன் அம்மாவ சொல்லனும்.. சரி இனி பேசி என்னாக போகுது.. நல்ல சுடிதாராவது போட்டுகிட்டு வா..” என சொல்லி சென்றார்.

நிகிதாவும் பாட்டி சொன்னது போல குளித்து நல்ல காட்டன் சுடிதார் அணிந்து வழக்கமான மேக்கப் செய்து கீழே சென்று பாட்டியோடு அமர்ந்து வீராவின் வருகைக்காக காத்திருந்தாள்.

ஆனால் வீராவோ இவள் முகம் பார்க்க பிடிக்காமல் உணவை தவிர்த்து வீட்டுக்கு வரவில்லை.

மாயவன் செய்த மாயங்கள் எல்லாம்

மங்கை நெஞ்சை கொள்ளை கொள்ள..

கள்வனாய் உள்ளம் கவர்ந்தது தெரியாமல்..

கள்ளியின் நேசத்தை அறியாமல்..

பேதையை தள்ளி நிறுத்தி எட்டி நின்று

வாட்டி வதைப்பானோ..

இந்த மாய கண்ணன்….

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

tamil story 1

என்னவளே! எனக்காக பிறந்தவளே!

அஜய் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயர். பாத்துட்டே இருக்கலாம் போன்ற முகம் , குணத்தில் அவன் அம்மாவை போல தங்கம் , மிகவும் திறமைசாலி, ஆனால் கோவக்காரன்.அழகான குடும்பம் – அப்பா ராஜ், அம்மா – மீனா , தங்கை – சரண்யா மற்றும் இவன். அவன் அம்மா தான் அவனுக்கு எல்லாம். அவன் அம்மா மீனுக்கு சின்ன ஹோட்டல் வெக்கணும்னு சின்ன வயசில் இருந்தே ஆசை ஆனால் மிடில் கிளாஸ் பேமிலி சோ ஆசையாவே இருக்கு இன்னும்.

என்னவளே! எனக்காக பிறந்தவளே! Read More »

tamil story 1

என்னவளே! எனக்காக பிறந்தவளே!

அஜய் – திறமையான மற்றும் புத்திசாலியான சாப்ட்வேர் என்ஜினீயர் , படிப்பு, விளையாட்டு, அன்பு, பாசம், கோவம் அனைத்திலும் டாப் ஆனால் சமையல் ரொம்ப ஒர்ஸ்ட். குடும்ப சூழ்நியால் தனது தாயின் ஹோட்டல் பொறுப்பை ஏற்கிறான்.   நிஷா – மாடர்ன் யூடூப் பிளாக்கர். பெரிய வாயாடி, சுட்டி, மற்றும் கோவக்காரி ஆனால் பாசக்காரி.   சமையலே தெரியாத நம்ம ஆளு எப்படி ஹோட்டலை நடத்துவார்? நிஷா அஜய்க்கு யூடூப்பில் பாஸ்டிவ் ரெவியூஸ் குடுத்து உதவுவாளா? அஜய்

என்னவளே! எனக்காக பிறந்தவளே! Read More »

error: Content is protected !!
Scroll to Top