ATM Tamil Romantic Novels

பாவையிடம் மையல் கூடுதே04

அத்தியாயம் 4   ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை […]

பாவையிடம் மையல் கூடுதே04 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 03

அத்தியாயம் 3   “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி,   “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..”   “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா?

பாவையிடம் மையல் கூடுதே 03 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 02

அத்தியாயம் 2   பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.    “ஹலோ..”    “மிஸ்டர்.. தேவ்..”   “எஸ்..

பாவையிடம் மையல் கூடுதே 02 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 01

அத்தியாயம் 1   “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..”   “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..”    “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..”   “இருடி..  அவ்வளவு தான்

பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »

கதைப்போமா காதலே‌… 24

கதைப்போமா 24   “அடப்பாவிகளா…. கடங்காரன்களா!!” என்று நண்பர்களை அவன் திட்டிக் கொண்டிருக்க.. புரியாமல் பார்த்த நவியிடம் அந்த கடிதத்தை அவன் காட்ட… முதலில் அவனது புரமோஷனுக்கு மனதார வாழ்த்தியவள், பின் அதில் குறிப்பிட்டு இருந்த தேதியை பார்த்ததும் ‘பக்கேன்று’ அவள் சிரித்து விட அவளை திரும்பி நன்றாக முறைத்தான் விதுரன்.   “சாரி.. சாரி.. சாரி..!!” என்று அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்தாலும் நவியால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.   திருமணம் என்று பேச்சு

கதைப்போமா காதலே‌… 24 Read More »

கதைப்போமா காதலே‌… 22,23

கதைப்போமா 22   முதல் நாள் அவன் செய்த காதல் அட்டகாசங்களை நினைத்தவாறு மீட்டிங்கு கிளம்பி கொண்டிருந்தாள் நவி. கூடவே பெங்களூரை சேர்ந்த சிந்துவும் அவளோடு தங்கி இருந்தாள். அவ்வப்போது இவள் முகத்தில் வந்து செல்லும் அந்த வெட்கம் கலந்த சிவப்பை கண்டு விட்டு “ஏய்.. நவ்னீதா யூ ஆர் ப்ளஷிங்… சோ ப்யூட்டி ஃபுல்.. என்ன காதல் கனவா?” என்று அவள் கிண்டலாக கேட்க சிரித்து மழுப்பினாள் பெண்.   “ம்ம்.‌. நடத்து.. நடத்து!!” என்று

கதைப்போமா காதலே‌… 22,23 Read More »

கதைப்போமா காதலே‌… 20, 21

கதைப்போமா 20     நவ்னீதா வீட்டு வாசலில் தான் அன்றைய விடியல் விதுரனுக்கு!!   காலையிலேயே வீட்டு காலிங்பெல் அடித்துக் கொண்டிருக்க… வந்து திறந்த புவனா அங்கு நின்றிருந்த விதுரனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!!   அவனை நவி வாயிலாக தெரியும் தான்!! ஆனால் அறிமுகம் கிடையாது. விதுரனாக இருக்குமோ என்று சிறு சந்தேகம் மட்டுமே!!   “சிஸ்டர்… நிதா… நவ்னீதாவ பார்க்கனும்” என்றதும் அச்சந்தேகமும் தீர்ந்து போக ஒரு மென் சிரிப்பு அவளது இதழ்களில்…  

கதைப்போமா காதலே‌… 20, 21 Read More »

கதைப்போமா காதலே‌.. 18,19

கதைப்போமா 18   கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்த்து நவிக்குள் அத்தனை கும்மாளம்!!   எவ்வளவு சொன்னாலும் சென்னையில் அவளோடு வந்து தங்க மறுத்துவிட்டார் அவர். “எனக்கு அந்த ஊரும் புகையும் ஒத்துக்கவே ஒத்துக்காது!! இவ்வளவு தண்ணில புழுங்குனவள.. அந்த ஊரு ஒரு பக்கெட் தண்ணில குளிக்க சொன்னா நான் எப்படி குளிப்பேன்?” என்று ஆதங்கப்படுபவர்!!   அவ்வப்போது மட்டும் அவளும் அவளது ஃபிரண்ட்சம் சேர்ந்து எடுத்திருக்கும் வீட்டில் இரண்டு ஒரு நாள் தங்கி

கதைப்போமா காதலே‌.. 18,19 Read More »

இத இதமாய் கொன்றாயடி – 8

8 – இத இதமாய் கொன்றாயடி   அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான். ‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு

இத இதமாய் கொன்றாயடி – 8 Read More »

கதைப்போமா காதலே‌.. 17

கதைப்போமா 17     திருச்சி வரைக்கும் அவளுடன் தான் பயணித்தான் விதுரன். ஒரே கூபேயில் இருந்தாலும் சிறு சிறு முத்தங்களும்.. ஆழ்ந்த அணைப்புகளும்.. சீண்டலும் தீண்டலுமாய் சென்றது அவர்களது பயணம்!! அதை தாண்டிய அந்தரங்கம் எதுவும் இல்லை. அவளை உரிமையோடு தான் களவாட வேண்டும் கள்ளத்தனமாக களவாடக்கூடாது என்று நினைத்து இருந்தான் விதுரன்.   நபிக்கு அவனின் அருகாமையை போதுமானதாக இருந்தது மூன்று வருடங்களாக மனதில் வைத்திருந்த காதல் சுமையாக இருந்தது அதை இறக்கி வைத்த

கதைப்போமா காதலே‌.. 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top