பாவையிடம் மையல் கூடுதே 03
அத்தியாயம் 3 “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி, “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..” “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா? […]







