ATM Tamil Romantic Novels

FB_IMG_1731384131140

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-4

புன்னகை-4 அன்று… மதுராக்ஷி ராமகிருஷ்ணன்.. தான் சென்றிருந்த நூற்றியொறாவது நேர்முகப்பரீட்சையில் தேர்வாகி.. “டாஸிலிங் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸின்” அந்தரங்க காரியதரிசியாக பணி நியமனம் செய்யப்பட்ட அதே நாளின் மாலைப்பொழுதில்!! தந்தை கூறியது போலவே அன்று சாயங்காலம் அவளைப் பெண் பார்க்கும் படலத்திற்காக ஆட்கள் வரும் முன்னம்.. தன்னைத் தானே அலங்கரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் மதுராக்ஷி. அவளுக்குத் துணையாக அலங்கரிக்கவென்றே நின்றிருந்த.. அவளின் உயிர்த்தோழி நிரோஷனாவோ… பேரிகை முன்னர் அமர்ந்திருந்த மதுராக்ஷியின்… பூணுக்கு அழகளிக்கும் அழகைக் கண்டு […]

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-4 Read More »

FB_IMG_1731384142393

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-1

மோகனப் புன்னகையில் வீழ்ந்தேனே  புன்னகை-1 அது சுற்றிலும் மலைப்பாங்கான… பனியடர்ந்த.. பச்சைப்பசேலென்ற…, பனிமுகிலின் எழிலும் சொட்டும் குறிஞ்சிப் பிரதேசம்!! எதிரே இருக்கும் எதிராளி யாரென்பதைக் கூட கண்டுகொள்ள முடியாதளவுக்கு சுற்றிலும் சூழ்ந்திருந்த உறைபனி.. கண்ணின் வெண்விழிப்படலைத்தையும் மறைத்திருக்க… அப்படியொரு குளிர்!! அப்படியான இடம்தனிலே… ஒற்றையில் அதுவும் தனிமையில்.. வெற்று வெண்ணிறப் பாதங்கள் கொண்ட பெண்ணொருத்தி நின்றிருந்தாள் பர்வதத்தின் உச்சியின் மீதினிலே!! சருமத்தினூடாக ஊடுருவி.. என்புமச்சையின் அந்திமம் வரைத் தாக்கும் அதீதக் குளிரில்.. யௌவனப் பெண்ணவளின் பற்களும் தான்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-1 Read More »

1000053883

4 என் மோகினி நீ

4. மோகினி பின்னோடு சுமி காரில் ஏறுவாள் என்று எதிர்பார்த்த நாகா அவள் வராது நிற்பதை கண்டு, தவறுக்காய் தன்னையே நொந்து கொண்டான். வா! என்பதாய் உள்ளிருந்து சைகை காட்டி அழைக்க, போடா! என்பது போல அவள் தலையை சிலுப்பிக்கொண்டு சாலையை நோக்கி விடு விடுவென நடக்கவாரம்பித்தாள் சுமேரா. அடங்காப்பிடாரி! இவ கிட்டே போய் வீழ்ந்தபாரு! எல்லாம் உன் கிரகம்டா பிரசாத்! சலித்துக்கொண்டாலும் பிடித்தது அவளின் அடம். இஷ்டமானது பேயென்றாலும் அது செய்வது யாவும் பிரியமானது சொல்லும்

4 என் மோகினி நீ Read More »

1000058084

3 என் மோகினி நீ

3. மோகினி தன் சதியிடம் சரணடைவதும் ஆண்மை தான் நிரூபித்தான் நாகா. காதலின் கற்பூர வாசமெல்லாம் சுமி எனும் கழுதைக்கு எப்படி தெரியும்?! முன்னே பின்னே யாரையாவது எட்டி பார்திருக்கணும்? உறவு நிலைகளின் இன்ப உணர்வுகளை கற்பனையாவது நினைத்திருக்கணும்.. தன் உடலையே நேசிச்சிருக்கணும். ஒன்னும் கிடையாது. நாகாவின் நேசப்பார்வை இவளுள் மேலுக்கு கலகம் விளைவித்திருக்குமே தவிர வேர்வரை போகல. அவன் பீலிங்ஸ் புரிந்தாலும் சரிவராது என்பதால் இரக்கப்பட்டாள் அவ்ளோதான். பல மவுனங்களுக்கு பதில் “ஆம்” என்றே கொள்ளப்படும்.

3 என் மோகினி நீ Read More »

1000053883

என் மோகினி நீ

2 மோகினி   உலகமெல்லாம் ஆண் என்பவனுக்கு என்ன இலக்கணம் உள்ளதோ! தெரியாது. தமிழன் அடையாளம் ஈரத்துடன் கூடிய வீரம். இளவட்டக்கல் தூக்கியும் மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்து காளைகளோடு திமிறித்திரிவது ஆண்மைக்கு அழகு.   இந்த ஆந்திர கிறுக்கன் இம்புட்டு சாப்டா இருப்பது தமிழச்சிக்கு ஆகல. என்ன இது?  அதிருப்தி வந்தது. மசாலா தெலுங்கு படமெல்லாம் அப்போ சும்மாவா?! கடப்பா கல்குவாரி, பட்டாக்கத்தி, குடம் குடமா ரத்தம், இரும்பு ராடு எல்லாம் இல்லையா?!!   நாகாவின் மென்மைக்கு

என் மோகினி நீ Read More »

1000053883

என் மோகினி நீ

1.என் மோகினி நீ   “என்ன சுமி கிளம்பிட்ட? இன்னும் நேரமிருக்கே பா?” வால் கிளாக்கை எட்டி ஒரு பார்வை பார்த்து பக்கத்து செக்சன் நடுவயது பெண்மணி சல்மா ஷேக் ஸ்நேகமாய் கேட்க, லேசா வெட்கம் வந்தது சுமேராவுக்கு..   அச்சோ! இது ஜஸ்ட் பெண் பார்க்கும் படலம் தானே.. சொல்லிட்டா தொடர்ந்து விசாரணை வருமே! கொஞ்சமே சுமி யோசித்தாலும் நாகரீகம் கருதி சல்மாவிடம் விஷயம் சொல்ல..    “வாழ்த்துக்கள்மா.. தங்கச்சிலை போல இருக்க உன்னை வேணாம்

என் மோகினி நீ Read More »

IMG_0058

2 – கன்னம் கொண்ட கள்வனே

2 – கன்னம் கொண்ட கள்வனே

உஷா மெல்ல வெளியில் வந்து பார்த்தார். அந்த காலை நேரத்திலேயே அந்த வீடு பரபரப்பாக இருந்தது. யாரிடம் கேட்க என தயங்கி தயங்கி வந்தவரை முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ பயிரை முறத்தில் வைத்து சுத்தம் செய்து கொண்டு இருந்த வேலம்மா பார்த்து விட்டு…

“என்ன தாயி வேணும்.. காபி தண்ணீ குடிக்கிறியா..”

“இல்ல… எனக்கு குளிக்கனும்..” தயக்கத்துடன்..

“இந்தா சுகுணா..இங்க வா..”என கட்ட குரலில் சத்தமாக…

“என்னத்த.. “ என வந்தார் சுகுணா… ராஜப்பாவின் அண்ணி

“இந்தா… சின்னவளுக்கு பொறத்தால இருக்கற..தண்ணீ ரூம்ப காமிச்சு கொடு…”

“வா.. இந்தா இது தான்.. குளிச்சிட்டு வா..” என சொல்லி சென்று விட.. பாத்ரூம் டாய்லெட் இரண்டும் அருகருகே இருக்க… இங்க எப்படி குளிக்க என்று தான் தோன்றியது. வெளியே ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் இருக்க.. உள்ளே ஒரு பக்கெட்டும் மக்கும் இருந்தது. தண்ணீர் எடுத்து போய் பயன்படுத்துமாறு இருந்தது. பைப் ஷவர் என பயன் படுத்தி பழகியிருக்க.. இது சிரமமாகவும் ஒரு ஒவ்வாமையும் தந்தது உஷாவிற்கு

ஒரு வழியாக எல்லாம் முடித்து குளித்து உள்ளயே கஷ்டப்பட்டு புடவையை கட்டி கொண்டு வந்து…பூஜை அறை தேட.. அந்த வீட்டில் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. தூணின் அருகே நின்று ஒவ்வொரு அறையை எட்டி பார்த்து கொண்டு இருந்த உஷாவை… அங்கு வந்த முத்தையா…

“என்ன தாயி பார்க்கற..”

“இல்ல சாமி கும்பிடனும் அதான் பூஜை ரூம் எங்கனு பார்த்தேன்..”

உஷா செயல் அவருக்கு புதுசு. அவர் ஊர் பெண்கள் காலையில் எழுந்ததும் குளித்து சாமி கும்பிடுவது எல்லாம் கிடையாது.

அங்கிருந்த ஒரு அலமாரியை காண்பிக்க.. விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு.. தங்கள் அறைக்கு வந்து புருசனையும் பிள்ளைகளையும் எழுப்பி விட..

ராஜப்பா.. “இன்றே சொல்லி விட்டு கிளம்பனும்.. சீக்கிரம் ரெடியாகுங்க..”என்றார்.

ஒருவாறாக குளித்து தயாராகி வந்தனர். அதிலும் மகிழா குளியலறையில் சுடிதார் ஈரம் படாமல் போட முடியாமல்.. வீட்டு ஆட்கள் நடமாடும் இடத்தில் அப்படியே எப்படி வரமுடியும் என கண்களில் நீரே வந்து விட..

காலை உணவு அவர்களுக்கு அதை விட கொடுமை.. ஆசையாக நிறைய பதார்த்தங்கள் செய்து இருந்தனர் தான். ஆனால் காரம் அதிகம். சாப்பிட முடியாமல் சாப்பிட்டனர். உஷா சஞ்சய் மகிழா மூவருமே இந்த ஊரில் ஒரு நாள் கூட இருக்க முடியாது என நினைத்தனர்.

வீட்டினர் அனைவரும் கூடியிருக்க… ராஜப்பாவின் அண்ணன் இரண்டு அக்காள்கள் குடும்பம் இன்னும் சில உறவினர்கள் கூடியிருந்த சபையில் ராஜப்பா தன் மகள் மகிழாவுக்கு பெங்களூரில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாகவும் கல்யாணத்திற்கு அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்தார்.

எல்லாரும் அதிர்ச்சியாகி ஆளாளுக்கு சத்தமிட.. அந்த இடமே ஒரே களேபரமாகி போனது.

ராஜப்பாவின் அண்ணன் கண்ணய்யா அக்காள்கள் வனஜா, சாவித்திரி குடும்பத்தினர் பங்காளிகள் மாமன் குடும்பத்தினர் என காலையிலேயே முத்தையா வீடு உறவுகளால் நிறைந்திருந்த சபையில் ராஜப்பா தனது தந்தையிடம் “என் மகளுக்கு பெங்களூரில் கல்யாணம் வச்சிருக்கேன். எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்”என கை எடுத்து கும்பிட்டு… திரும்பி உஷாவை பார்க்க… உஷா ஒரு தாம்பாலத்தில் பழங்கள் வெற்றிலை பாக்கு அதன் மேல் பத்திரிக்கை வைத்து கொண்டு வர… இருவரும் முத்தையாவிடம் கொடுக்க அவர் அதை வாங்காமல் அவரை அழுத்தமாய் பார்த்து….

“எம் பேத்திக்கு கண்ணாலம் யாரோ மூனாம் மனுசனுக்கு சொல்லற மாதிரி சேதி சொல்ற… எங்ககிட்ட மாப்ள பார்க்கும் போது முறையா சொல்லி.. எங்க அபிப்ராயம் கேட்கனும்.. அதுவும் இல்லாம நாம உறவுகுள்ள தான் கட்டறதும் கொடுக்கறதும்.. இது நாள் வர அப்படி தான்… உறவ விட்டு வெளிய போனவன் நீ தான்….. அதான் உறவும் விட்டு போச்சு… இனி உன்ன அப்படி எல்லாம் விட முடியாது…இனி உம் மகளுக்கு நம்மளகுள்ள தான் கண்ணாலம். நீ ஏற்பாடு பண்ண கண்ணாலத்த நிறுத்திடு…”என மின்னாமல் முழங்காமல் இடியை ராஜப்பாவின் தலையில் இறக்கினார். முத்தையாவின் பேச்சை அனைவரும் ஆமோதித்தனர்.

ராஜப்பா ஸ்தம்பித்து நின்றது சில நொடிகள் தான்.. ராஜப்பா மட்டுமில்லாமல் உஷா சஞ்சய் மகிழா எல்லாருமே அதிர்ச்சியாகினர். அவருக்கு தெரியும் இவர்கள் இப்படி தான் பேசுவார்கள்.அதனால் தான் எல்லாம் செய்து கல்யாணம் வரை கொண்டு வந்துட்டு தான் உறவுகளை அழைக்க ஊருக்கு வந்தார். பத்திரிக்கையை கையில் கொடுத்து விட்டால் ஒன்றும் பேசமாட்டார்கள் என நினைத்திருக்க… இப்பவும் நிறுத்திட சொல்லவும் கோபம் வந்தது.

“அப்படி எல்லாம் நிறுத்த முடியாது. பத்திரிக்கை அடித்து மண்டபம் பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திட்டேன்.. இனி நிறுத்தினால் நான் வாழும் ஊரில் எனக்கு அவமானமாகி விடும்”

“எங்கள கலந்துக்காம கண்ணாலம் பேசினதே தப்புங்கறேன்.. மானஅவமானத்த பத்தி பேசறவன் முதல்ல எங்கள தானே கேட்டு இருக்கனும்.. நீ இப்படி தான் பிறத்தில கட்டி முப்பது வருச ஒட்டுமில்ல.. ஒறவுமில்ல.. இப்ப உன் மக்களுக்கும் பிறத்தில கட்டினா அதோட உனக்கும் இந்த ஊருக்குமான உறவு விட்டு போயிடும்…”

“என் அந்தஸ்து என்ன..என் புள்ளைக படிப்பு என்ன… எனக்கு இணையா இந்த ஊருல யாரு இருக்கா.. என் புள்ளைக அழகுக்கும் படிப்புக்கும் அவங்கள கட்டிக்கற தகுதி இந்த ஊருல யாருக்கு இருக்கு…” என திமிராக பேச….

“ஏ… என்னப்பா.. இப்படி பேசற…”

“நீயும் இந்த ஊருக்காரன் தான்..அத மறந்திடாத…”

“இரண்டு எழுத்து படிச்சு…நாலு காசு சம்பாதிச்சு புட்டா… நீ பெரிய ஆளா….”

ஆளாளுக்கு பேச… அந்த இடம் கூச்சலும் பதட்டமுமாக இருந்தது. ராஜப்பாவும் அவர்களுக்கு சரியாக சண்டை போட்டு கொண்டு இருந்தார். ராஜப்பாவின் மனைவி மக்களுக்கு இது எல்லாம் புதிதாக இருந்தது. மகிழா பயந்து போய் உஷாவின் கையை பிடித்து கொண்டு ஒட்டி நின்றாள். சஞ்சய் கூட தாயின் அருகில் நின்று கொண்டான். சஞ்சய்கு கூட தந்தைக்கு அருகில் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று தோன்றவில்லை.

அந்த ஊரில் ஆண் பிள்ளைகள் பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தது கிடையாது. பெண் பிள்ளைகளோ அதை விட மோசம். பருவம் அடைந்த ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைத்து விடுவர். ஆண் பிள்ளைகளுக்கு பத்தொன்பது இருபது வயதிலும்… பெண்பிள்ளைகளுக்கு பதினைந்து வயதிற்குள்ளும் திருமணம் செய்து விடுவர். இதில் தப்பி தவறி படித்தவர் ராஜப்பா தான்.படிப்பு மேல் இருந்த ஆர்வம்.. காய்சலுக்கு ஊசி போடும் கம்பவுண்டருக்கும்.. ஈபி சர்வீஸகு வரும் லைன்மேனுக்கும் ஊர் மக்கள் கொடுக்கும் மதிப்பை பார்த்து… எல்லாவற்றையும் எல்லாரையும் மீறி படிக்க வைத்தது. ப்ளஸ்டூ வரை பக்கத்து ஊரில் படித்தவர் மேலே படிக்க சென்னை செல்ல ஆசைப்பட்டார்.

வீட்டில் கடைக்குட்டி என்பதாலும் தங்களுக்கு சுட்டு போட்டாலும் வராத படிப்பு ராஜப்பாவிற்கு சுலபமாக கை வர.. ஏதோ ஆசை படுகிறான் என பக்கத்து ஊர் வரை படிக்க சம்மதித்தனர். படிப்பு முடிந்ததும் முத்தையாவின் தங்கை மகளோடு திருமணம் என்ற முடிவில் குடும்பத்தினர் இருக்க… ஐந்து நாட்கள உண்ணாவிரதம் இருந்து விஷம் அருந்துவது போல நடித்து.. குடும்பத்தினரை ஆட்டம் காண வைத்தார்.. பக்கத்து ஊரில் உள்ள தன் நண்பனோடு இணைந்து சென்னை அரசினர் கலை கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.

சென்னை நாகரிகத்திற்கு கொஞ்ச கொஞ்சமா தன்னை மாற்றி கொண்டவர் மூன்று வருட படிப்பு முடிந்ததும் மேற்படிப்பிற்கு வீட்டினரிடம் சொல்லாமலயே சேர்ந்து கொண்டார். இப்போ போல போன் வசதிகள் இல்லாமல் கடிதம் மட்டுமே தொடர்பு சாதனமாக இருந்த காலம்…கடிதம் மூலம் செய்தியாக தெரிவித்துவிட்டார். எங்கே போனாலும் திரும்ப இங்கு தான வரவேண்டும் என நினைத்து வரட்டும் என அமைதி காத்தனர்.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் ராஜப்பா.. பெங்களூரில் இருந்து படிக்க வந்த உஷாவை காதலித்து.. காதலிக்க வைத்து… படிப்பு முடிந்ததும் உஷாவை சட்டபடி திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதம் ஒரு கடிதம் ஆறு மாத்த்திற்கு ஒரு தடவை ஊருக்கு செல்வது என இருந்தவர்.. உஷாவை திருமணம் செய்த பிறகு தனக்கும் ஊருக்குமான உறவை முற்றிலுமாக முறித்து கொண்டார்.

இப்போதும் ஊருக்கு வந்திருக்கமாட்டார். ஆனால் மகிழாவை திருமணம் செய்யும் ஹர்ஷா வீட்டினர் உங்கள் உறவினரும் வரவேண்டும் என கட்டாயப்படுத்த.. வேறு வழியின்றி ஊருக்கு வந்தார். இல்லை என்றால் ஊரையோ உறவையோ திரும்பி பார்த்து இருக்கமாட்டார்.

சண்டை நீடித்து கொண்டு இருக்க.. பெருசுகள் பேச… அது வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த இளவட்டங்கள் களத்தில் இறங்க…

“யோவ்.. மாமா.. உம்மவ பெரிய ரம்பையோ…”

“செத்தா கூட தூக்கி போட சாதி சனம் நாலு பேரு வேணும்யா மாமா..”

“எங்கள பார்த்தா சொம்ப பய மாதிரி இருக்குதா.. நாங்க அவ்வளவு இளப்பமா போயிட்டமா…” என மகிழாவை கட்டும் முறை உள்ள பசங்க எல்லாம் ராஜப்பாவின் வார்த்தையில் கொதித்து போய் எகிறினர்.

“என்ன மாப்பி..இரண்டாம் கட்டு மூனாம் கட்டு முறை உள்ளவனெல்லாம் துள்ளறான்… நீ அமைதியா இருக்க..” என செந்தில் தயாநிதியிடம் கேட்க..

“டேய் மச்சி.. பொண்ணு மூக்கும் முழியுமா இருக்கறால்ல.. அதான் ஒரு சான்ஸ் கிடைக்காதானு அவவன் எகிறி எகிறி அடிக்காறானுங்க… நாம என்ன இந்தாளு மக அழகுல சொக்கி போய் கிடக்கறமா.. “

“டேய் தயா… நிசமா தான்சொல்லறியா… இதில் உள் குத்து எதுவும் இல்லையே…”

“உள்ளூர்காரிகள் வீசற வலைக்கே சிக்காதவன்… போயும் போயி இந்தாளு மவகிட்டயா சிக்குவே…”

“சத்தியமா நம்பலாமா… நீ அமைதியா இருந்தா எனக்கு தான் கிலி தட்டும்…”

“மச்சி.. எனக்கு என் மாமனையே புடிக்காது.. அவரு மகளையா நானா.. ம்க்கும்..” என நக்கலாக சிரிக்க…

“அப்ப சரி விடு… ஊருக்குள்ள இப்படி காரசாரமான பஞ்சாயத்த பார்த்து எவ்வளவு நாளாச்சு.. இன்னைக்கு பொழுது நல்லா போகும்.. அமைதியா வேடிக்க பார்ப்போம்..”

இருவரும் ஓரமாய் நின்று கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.

“கொஞ்சம் அமைதியா இருங்கப்பா.. அதான் பெரியவங்க பேசிட்டு இருக்கம்ல…”என கூட்டத்தில் ஒரு பெரியவர் சத்தம் போட… எல்லோரும் அமைதியாகி விட.. அவரே ராஜப்பாவிடம்…

“முடிவா என்ன தான் சொல்ல வர ராஜப்பா..”

“நான் என் பொண்ணுக்கு முடிவு பண்ண கல்யாணம்.. நான் குறிச்ச நாள்ல குறிச்ச முகூர்த்ததுல நடக்கும்.. நீங்க வந்தாலும் வராட்டியும் நடந்த தீரும்..”

“எங்கள மீறி கண்ணாலம் பண்ணுவினா… என் சொத்துல நயா பைசா தரமாட்டேன் “ என்றார் முத்தையா..

“யாருக்கு வேணும் உங்க சொத்து… என்ன ஒரு பத்து லட்சம்.. இருபது லட்சம்.. மிஞ்சி போனா அம்பது லட்சம் தேறுமா… நான் கோடில சம்பாதிச்சு வச்சிருக்கேன்..உங்க பிச்சகாசு எனக்கு வேணம்..” தூக்கி எறிந்து துச்சமாக பேசினார்.

“ஏ.. என்னப்பா.. இப்படி எல்லாம் பேசினா.. ஊர விட்டு தள்ளி வச்சிருவோம்.. “ கடைசி ஆயுதமாக மிரட்ட…

“நீங்க என்ன தள்ளி வைக்கறது.. முப்பது வருசமா நான் தான் உங்கள் எல்லாம் தள்ளி வச்சிருக்கேன்..” என அசால்ட்டாக அடித்தார்.
.

2 – கன்னம் கொண்ட கள்வனே Read More »

உயிரோடு விளையாடும் அழகியே 05&06

அத்தியாயம் 5   வேதவள்ளியின் உயிரற்ற உடலை பார்த்த சஞ்சயின் அழுகையை யாராலும் மறக்க முடியாது. அவன் கதறியழுததைப் பார்த்த ராசாத்தி அம்மாள் ஒரு முடிவுடன் தனக்கு தெரிந்த கேரள நம்பூதிரியிடம் சென்றார். அதே நேரத்தில் அன்பரே! அன்பரே! என்று தனது வாழ்க்கையை நாசமாக்கிய அந்த கரிய நிழலருவத்தை தேடிச் சென்றான் சஞ்சய்.    “ஏய்.. எங்கடி இருக்க? வெளிய வாடி..” என தனது வீட்டின் நடுகூடத்தில் இருந்து கத்தினான் சஞ்சய். சுற்றியிருந்த அனைவரும் அவனை வித்தியாசமாக

உயிரோடு விளையாடும் அழகியே 05&06 Read More »

உயிரோடு விளையாடும் அழகியே 03&04

அத்தியாயம் 3   “டேய்.. சஞ்சு.. என்னடா இவ்வளோ வேகமா எங்க கிளம்புற?”   “வேதா.. உனக்குத்தான் தெரியுமே.. எங்க அம்மா அப்பாவுக்கு அடுத்த மாதம் அறுபதாம் கல்யாணம்.. அவங்களுக்கே தெரியாம நாங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணிருக்கோம்.. அதுக்குதான் கிளம்பிட்டுருக்கேன்..”   “போடா.. அங்கப் போனதும் நானெல்லாம் உன் ஞாபகத்துக்கு வரவே மாட்டேன்..”   “யார் சொன்னா.. நீ என் ஞாபகத்துக்கு வரமாட்டேன்னு.. பூவப் பார்த்தா உன்னோட இந்த கன்னம் ஞாபகத்துக்கு வரும்.. ஆரஞ்சு

உயிரோடு விளையாடும் அழகியே 03&04 Read More »

IMG_0058

1 – கன்னம் கொண்ட கள்வனோ

1 – கன்னம் கொண்ட கள்வனே

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள சில்லாங்குடி எல்லையை அந்த கார் தொடும் போது மணி நள்ளிரவு பன்னிரண்டு. காரை ஓட்டி கொண்டி இருந்த சஞ்சய் “டாட் இந்த ஊர் தான…. நேம் போர்டு நல்லா பார்த்துட்டு சொல்லுங்க..” என்க

அவன் அருகில் உட்கார்ந்து இருந்த ராஜப்பா எரிச்சலோடு “இந்த ஊர் தான்” என்றார்.

அவருக்கு அந்த ஊருக்கு வர இஷ்டமில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த உஷாவைப் பார்த்து சஞ்சய் முறைக்க… அவளோ கண்களால் அமைதியா இரு என சொல்ல…. அவனும் ஏகப்பட்ட கோபத்தில் இருந்தான். அவனும் தான் என்ன செய்வான். சஞ்சய் இப்ப தான் தமிழ்நாடு முதல் தடவையாக வருகிறான். பெங்களூரில் இருந்து மதியமே புறப்பட்டனர். முதல் தடவை என்பதால் பகலிலேயே ஊர் போய் சேருமாறு பயணம் வைத்து கொள்ளலாம் என சஞ்சய் சொன்னான். ஆனால் ராஜப்பா தான் கேட்கவில்லை. ஒன்பது மணி நேர பயணத்தை நள்ளிரவு அவரை இழுத்து விட்டு விட்டார்.

மதிய உணவை முடித்து கொண்டு கிளம்பினால் போதும் என்று விட்டார். வீட்டில் அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை யாரும் மீறமுடியாது. மீறகூடாது. மீறினால் கோபப்பட்டு சண்டை போட்டு ஏகப்பட்ட ரகளை செய்து வீட்டினரை ஒருவழியாக்கி விடுவார். அவ்வளவு வீம்பு பிடித்தவர். எதற்கு வம்பு என பெரும்பாலும் அவரோடு ஒத்து போய்விடுவர். இன்றும் அவர் பேச்சிற்கு கிளம்பி இருக்க… ஒன்பது மணி நேர பயணத்தை நள்ளிரவு வரை பயணம் நீளுமாறு செய்துவிட்டார்.

அவரும் என்ன தான் செய்வார். அவர் பிறந்து வளர்ந்த ஊர் தான். ஊருக்கும் அவருக்குமான தொடர்பு விட்டு போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்து அவர் வர வேண்டிய கட்டாயம். அதனால் வேறு வழியின்றி வருவதால் மிகுந்த எரிச்சலில் இருந்தார்.

துறையூர் வரும் வரை கூகுள் மேப் உதவியோடு வண்டியை ஓட்டி வந்த சஞ்சய்கு துறையூர் தாண்டிய பிறகு கொஞ்ச கொஞ்சமாக சிக்னல் குறைந்து முற்றிலுமாக கட் ஆகிவிட… ராஜப்பாவிடம் கேட்க.. அவரும் என்ன தான் செய்வார். இத்தனை வருடங்களில் நிறைய மாற்றங்கள்… தெரியாமல் தப்பு தப்பாக வழி சொல்ல.. ஊர் வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது. ஆனால்அந்த ஊர் பெரிதாக மாறவில்லை. அதே மண்சாலை… அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள்.. வெகு சில வீடுகள் மட்டுமே ஓட்டு வீட்டில் இருந்து ப்ரோமஷனாகி தார்சு வீடுகளாக மாறி இருந்தன.

அவர் வீடும் தார்சு வீடாக மாறியிருக்க… பாவம் ராஜப்பாவிற்கு அவர் வீடே அடையாளம் தெரியவில்லை. வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. பின்னே முப்பது வருடங்களுக்கு முன் ஓடிப் போனவரை.. அப்படி தான் அந்த ஊர் சொல்லி கொண்டு இருக்கிறது. அவரை பார்க்கவே ஊரே திரண்டு இருந்தது.

முதலில் ராஜப்பா காரில் இருந்து இறங்கவும் அவரின் அம்மா வேலம்மாள் ஓடி வந்து கட்டி பிடித்து ஒப்பாரி வைக்க… ராஜப்பா முகம் சுழித்தபடி அமைதியாக நின்றார்.

பக்கத்தில் இருந்த தயாநிதியிடம் செந்தில் “டேய் தயா… உங்க மாமனுக்கு ஏத்தத்தை பார்த்தியாடா… உங்க ஆச்சி கட்டி பிடிச்சு அழுவுது அந்தாளு அப்படியே ஜடமாட்டம் நிக்கறாரு…”

இவர்களை சுற்றி இருந்த இளவட்டங்கள் செந்திலின் பேச்சை ஆமோதிக்க…. தயாநிதியும் தலை அசைத்து…

“டேய் மச்சி… அந்தாளு ஒரு எடக்கு தான்னு எங்கப்பாரு எப்பவும் சொல்வாரு..இத்தன வருச கழிச்சு சாதி சனத்தை பார்க்கறமேனு ஒரு சந்தோசம் தட்டு படுதா பாரு என் மாமன் மூஞ்சில… எங்க ஆச்சி தான் இந்தாள நினைச்சு தினவுக்கு அழுவும்…”
வரை
“அடநீ வேற மாப்பி உன் மாமனுக்கு சாதிசனத்து மேல பத்திருந்தா… இப்படியா முப்பது வருசம் பரதேசம் போயிருப்பாரு..”

“க்கும்.. அத சொல்லு மொத..” என தயாநிதி இழுக்க…

“வேலா… வராதவ வந்திருக்கான் வாசல்லயே வச்சு பேசி அனுப்பிடுவியா..” என சத்தம் போட்டார் முத்தையா…

“இல்லங்க மச்சான்.. காணாத மவன கண்டதுல செத்த வெசனமாயிடுச்சு…” முந்தானை தலைப்புல முகத்தை துடைத்தவாறே…

“உள்ளார வா ராசா.. நீ மட்டும் தான் வந்தியா… உன் வீட்டாளுங்கள எல்லாம் கூட்டியாரலயா…”

ராஜப்பாவும் நடுநிசியில் இவ்வளவு கூட்டத்தை பார்க்கவும் மிரண்டு விட்டார். இதில் தன் அம்மா அழுகவும் தன் குடும்பத்தையே மறந்துவிட்டார். அம்மா சொல்லவும் நினைவு வந்தவராக திரும்பி பார்க்க.. அவர்கள் பயந்து போய் காரை விட்டே இறங்கவில்லை..

ராஜப்பா திரும்பி “சஞ்சய்” என்ற அழைக்க..

சஞ்சய்யும் உஷாவும் காரில் இருந்து இறங்க… உஷாவைப் பார்த்து மொத்த ஊரும் வாயை பிளந்து நின்றது. நல்ல சிவந்த நிறம். மாசு மருவற்ற முகம்.. நெடு நெடுவென.. எங்கும் அதிக சதைபிடிப்பு இல்லாத தேகம்… இடுப்பு வரை நீண்ட கூந்தல்… என அந்த மக்களுக்கு உலக அழகியாகவே தெரிந்தாள். சிறுசுல இருந்து பெருசு வரை அவரை நன்றாக சைட் அடித்தது. அதிலும் தயாநிதியோ பார்த்ததும் மயங்கி போனான்.

அவர்களை தன் அருகே வருமாறு கை அசைத்தவர்.. தன் அருகே அவர்கள் வரவும் தன் அம்மாவிடம் “என் பொண்டாட்டி.. மகன்..” என அறிமுகப்படுத்த..

‘என்னது பொஞ்சாதியா…’ என ஊரே அதிர்ந்து போனது. தயாநிதியோ நெஞ்சை பிடித்து கொண்டு மரத்தின் மீதே சாய்ந்துவிட்டான். கருத்த.. பெருத்த.. வாட்ட சாட்டமான தேகம் கொண்ட ராஜப்பாவிற்கு உஷா மகள் போன்ற தோற்றத்தில் தான் இருந்தார்.

“மாப்பி.. என்னாச்சு..” என செந்தில் கேட்க…

“அத்தையாம்டா..”

“ஆமாம் டா மாப்பி.. உன் மாமன் ஏதோ திருகுதாளம் பண்ணி உங்கத்தைய கட்டிபுட்டாருனு நினைக்கேறேன்டா…”

“இருக்கும் டா மச்சி… என் நெஞ்ச வெடி வச்சு தகர்த்துப் புட்டாருடா..”

“என்ன மாப்பி சொல்லற..”அவனை விநோதமாக பார்க்க…

“என் மாமன் மவளா இருக்கும்… நாலஞ்சு வருசம் மூத்து இருந்தாலும் கயிறு கட்டி போட்ருலாம்னு இருந்தேன்டா…” என்றான் அசாலட்டாக..

“என்னாது.. கயிறுகட்டி போட்றலாம்னு இருந்தியா… அடேய் வீக் பாடிடா பொட்டுனு போயிட போறேன்.. எதுனாலும் சொல்லிட்டு செய்யு..” என்றான் செந்தில் நெஞ்சை நீவியபடி..

ராஜப்பா உஷாவிடம் “மகிழா எங்க..” என்று கேட்க…

“கார்ல தூங்கிட்டு இருக்கா.. இதோ கூட்டிட்டு வரேன்..” வேகமாக காரை நோக்கி சென்றார்.

“ஏய் மகி எந்திரி..” என உலுக்கி எழுப்ப…

“ம்மா…இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்… “ கண்களை திறக்காமலே..

சுற்றியுள்ளவர்கள் இவர்களையே பார்க்க உஷா சங்கடமாக உணர்ந்தார்.

“மகி எழுந்திரு மொதல்ல..” என தோளில் இரண்டு வைக்க.. சுரீரென விழுந்த அடியில் தோளை தடவிக் கொண்டே எழுந்தவள்.. சுற்றிலும் பார்வையை ஓட விட்டவள்..

“ஊர் வந்திடுச்சா..” என உடலை நெளித்து சோம்பல் முறிக்க…

இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம பண்ணிட்டு இருக்கா.. “எந்திரிச்சு வாடி” என கையை பிடித்து இழுக்க…

“விடுங்கம்மா வரேன்” என கையை உருவி கொண்டு காரை விட்டு இறங்கியவள் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து உஷாவின் கையை பிடித்து கொண்டாள். பயத்துடன் தாயை ஒட்டி கொண்டே நடந்தாள்.

தன்னருகே வந்த மகளை “இது என் மக மகிழா..” என அறிமுகப்படுத்தினார்.

மகிழா காரில் இருந்து இறங்கி செல்பவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் தயாநிதி.

மகிழா தாயை கொண்டு பிறந்தவள். ஆனால் உஷா போல இல்லாமல் சற்று பூசினாற் போல இருப்பாள். மகிழாவையே பார்த்து கொண்டே இருந்த தயா…. நினைத்தது இது தான் எங்கத்த போல இவ இல்லைனாலும்… சும்மா பால் பன்னு மாதிரி கும்னு இருக்கா…

“என்னடா மாப்பி… உன் பார்வை சொல்ற சேதி ஒன்னும் சரியாப்படலயே..”

“விடுடா மச்சி.. இவ நமக்கு செட்டாகமாட்டா…”

“அப்படிங்கற…” என்றான் நம்பாத பார்வையுடன்..

“அப்படி தாங்கறேன்.. “ என்றான் தலை அசைத்து..

அறிமுகப்படலம் எல்லாம் முடிந்து கொஞ்ச நேரம் பாசப் போராட்டங்கள் எல்லாம் முடிந்ததும் முத்தையா ஊராரைப பார்த்து..

“எல்லாம் போயிட்டு காலைல வந்து விசாரிச்சுக்கலாம்..கிளம்புங்க..” என்றார்.

சஞ்சய்யும் மகிழாவும் இன்னும் காலையில் வேறயா… என ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபமாக முழித்தனர். இப்போ தான் பெரியப்பா பெரியம்மா அத்தைகள் தாத்தா பாட்டி என நல விசாரிப்புகள் முடிந்தது.

அந்த ஊரில் உறவுக்குள் தான் கல்யாணம். அந்த ஊரில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் மூன்று மாத்த்திற்கு பிறகு அந்த பெண்ணின் மேல் விருப்பமுள்ள முறைப்பையன் கோவிலிலோ.. பள்ளிக்கு போகும் வரும் வழியிலோ… பார்க்கும் இடத்தில் மஞ்சள் கிழங்கு வைத்த மஞ்சள் கயிறை மூன்று முடி போட்டு தயாராக வைத்திருக்கும் கயிறை அப்பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டால் அந்த பெண்ணுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவனோடு தான் கல்யாணம். கயிறு போட்ட சில மாத்த்திற்குள் திருமணம் செய்து வைத்து விடுவர். பகை வஞ்சம் போன்ற காரணங்களால் சில பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால்… பெண்கள் பருவம் அடைந்த பிறகு பெரியவர்கள் பார்த்தது முறைப் பையன்களில் ஒருவருக்கு நிச்சயம் செய்துவிடுவர். அப்படி நிச்சயம் செய்து விட்டால் அந்த பெண்ணை வேறு பையன்கள் தவறான நோக்கில் பார்க்க மாட்டார்கள்.

ராஜப்பாவின் குடும்பம் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். அறைக்கு வந்ததும் ராஜப்பா…

“ஆட்டு மந்தை கூட்டம்… இதுக்கு தான் இந்த ஊருக்கு வரவே கூடாதுனு நினைச்சேன். நான் சொல்லறத யார் கேட்டா.. வந்த வேலையை முடிச்சிகிட்டு சீக்கீரம் கிளம்பிடனும். அது வரைக்கும் தேவை இல்லாம யார்கிட்டயும் பேசற வேலை வச்சுக்காதிங்க…” என குடும்பத்தினரை மிரட்டி விட்டு படுத்துக் கொண்டார்.

ஊரில் இருந்து கிளம்பியதில் இருந்து இப்படி தான் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார். மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டவாறே படுத்தனர். காலையில் உஷா தான் முதலில் எழுந்தார். என்ன செய்வது என தெரியவில்லை. ராஜப்பாவை பார்த்தால் அவர் இன்னும் தூங்கி கொண்டு இருந்தார். காலையில் எழுந்ததும் அவருக்கு குளித்து பூஜை செய்ய வேண்டும். புது இடம்.. தெரியாத மனிதர்கள் என்ன செய்ய என தெரியவில்லை. ராஜப்பா எழுந்து விடுவார் என பார்க்க.. அவர் எழுந்திருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.

1 – கன்னம் கொண்ட கள்வனோ Read More »

error: Content is protected !!
Scroll to Top