ATM Tamil Romantic Novels

D2DD5B3B-15F8-4C38-8035-AA2F692FEA3C

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7

பார்த்த அனிவர்த் அவமானமாக உணர்ந்தான். இவனை விட நான் எந்த வித்தில் குறைந்துவிட்டேன். என் அழகு அந்தஸத்தில் கால்வாசி கூட இல்லை. என்னை நிராகரிப்பதா… என்ன தான் காதல் என்றாலும் தன்னை இப்படி ஒருத்தனுக்காக நிராகரிப்பதா..என கோபமே அதிகரித்தது.

கங்காவால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை. தன் மகனை சம்மதிக்க வைக்கப பட்டபாடு… எவ்வளவு போராடி இவ்வளவு தூரம் கொண்டு வந்தார். இனி மறுபடியும் முதலில் இருந்தா.. என ஆயாசமாக இருந்தது. இனி இதற்கு பிறகு மகனின் செயல் எப்படி இருக்குமோ.. மகனின் கல்யாணம் வாழ்நாள் கனவாகவே ஆகிவிடுமோ…நினைக்கையில் உண்மையாகவே நெஞ்சுவலி வருவது போல இருந்தது.

ரெங்கு “சாரே… நீங்க சொல்லுங்க.. என்ன செய்யனும்..”

என்ன தான் நேர்மையாக தொழில் செய்தாலும் ஒருவன் தொழிலில் வளர்ந்து வருகிறான் என்றால் அவன் வளர வளர எதிரிகளும் அதிகரிக்கவே செய்கிறார்கள். எதிரிகளை சரிகட்ட.. பணம்.. அரசியல் செல்வாக்கு..சில சமயம் இது போன்ற அடியாட்களின் உதவியும் தேவைப்படுகிறது.

ரெங்கு இந்த மாதிரியான ஆள் தான்.ஆனால் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆட்களை தூக்கி வந்து இரண்டு தட்டு தட்டி மிரட்டி அனுப்பிவிடுவான். அதற்கான கூலி வாங்கி கொள்வான். அவசியமின்றி வேற எந்த அடிதடிக்கும் செல்லமாட்டான். அப்படிபட்ட பழக்கம் தான் அனிவர்த்துக்கு ரெங்கு…

அவர்களை அனுப்பி விடு என கை அசைத்தான். அவர்களை அழைத்து வந்ததது போலவே.. அழைத்து சென்றுவிட்டான் ரெங்கு…

அசோக்கிடம்”இங்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு வா..”

“ப்பா.. போகலாம்….” என பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். வீடு வந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.

கங்கா அயர்ந்து போய் சோபாவில் பொத்தென அமர்ந்தார். கங்கா முகத்தை பார்த்ததும சிதம்பரம் பக்கத்தில் உட்கார்ந்து கங்காவின் கையை தட்டி கொடுத்து…

“கங்காம்மா… கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காத.. விடு பார்த்துக்கலாம்..”

“இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகள பார்க்க ஆசைப்பட்டேன்.. அது ஒரு தப்பா.. எனக்கு அந்த கொடுப்பினை இல்லையா… நான் வச்சிருக்கறது ஒரு பையன் அவனுக்கு கல்யாணம் பண்ண எவ்வளவு போராட வேண்டி இருக்கு.. இனி இவன்கிட்ட இதைப் பத்தி பேசவே முடியாதே.. மறுபடியும் இவன் பார்ட்டி..பொண்ணுங்கனு ஆரம்ப்பிச்சிடுவானே.. எனக்கு நினைச்சாலே நெஞ்சுவலிக்கற மாதிரி இருக்கு..” என சொன்னவர் அழுக ஆரம்பித்து விட..

சிதம்பரம் தனது தோளில் சாய்த்து தட்டி கொடுக்க… கங்கா அழுகை நின்றதே தவிர.. மனம் நிலை கொள்ளவில்லை.

அனிவர்த் தனது அறையில் புலியாக உறுமிக் கொண்டு இருந்தான். ஒரு நாள் உறவுக்கு வரும் பெண்களே அழகாக நளினமாக இருப்பார்கள். வாழ்நாள் உறவாக வரும் பெண் அழகாக இல்லை என்றாலும் பார்க்கும் அளவிற்காகவது ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம்.அதை விட அழகு படிப்பு அந்தஸது எதிலும் தனக்கு ஒரு சதவீதம் கூட பொருந்தாத் ஒருவனுக்காக தன்னை நிராகரித்ததை தான் தாங்கிக் கொள்ள முடிவில்லை அனிவர்த்தால்… எனக்கா இப்படி… இதை போல ஒரு அவமானம் எதுவும் இல்லை. எல்லாம் இவர்களால் தான்.. நான் தான் வேண்டாம்னு சொன்னனே… கேட்டாங்களா.. இனி கல்யாணம் கருமாதினு பேசட்டும் இருக்குது…என கோபம் முழுவதும் தன் தாயின் மேல் திரும்பியது.

அனிவர்த்துக்கு ஒன்று தெரியவில்லை… புரியவில்லை..எல்லா பெண்களும் அழகுக்கும் பணத்திற்கும் மயங்கமாட்டார்கள். மதிப்பு கொடுக்கமாட்டார்கள்..

அந்த பெண்ணின் தகப்பன் தான் வசதி வாய்ப்பிற்கு ஆசைப்பட்டாரே தவிர.. அந்த பெண் தன்னை காதலிப்பவனே வாழ்க்கை துணையாக வரவேண்டும் விருப்பம் கொண்டாள்.

அதன் பிறகு அனிவர்த் தனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஏற்கனவே பேச்சு குறைவு தான் இப்போது சுத்தமாக பேசுவதில்லை. எதுனாலும் சிதம்பரத்திடம் மட்டுமே அவனின் பேச்சு இருக்க… கங்காவிற்கு மகனின் வாழ்க்கையை நினைத்து மனதளவில் ரொம்ப காயப்பட்டு இருக்க.. அனிவர்த்தும் பேசாமல் இருக்க… பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.

அனிவர்த்திடமும் பெரிய மாற்றம்… ஆபிஸ் வீடு என தன் வட்டத்தை சுருக்கி கொண்டான். வீக் எண்ட் கிளப் பார்ட்டி டேட்டிங் என எல்லாத்தையும் விட்டுட்டான்.. விட்டுட்டான் என்ன.. அதில் எல்லாம் ஆர்வம் போய்விட்டது தொழிலை தவிர.. எதிலும் ஒரு பிடிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. வார விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே இருந்தான்.

மகனின் மாற்றம் சிதம்பரத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கங்காவிற்கோ மகனுக்கு வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமல் இப்படியே தனித்து நின்றுவிடுவானோ.. என பயந்தார்.

சிதம்பரம் தனது நம்பிக்கையை சொல்ல… கங்காவிற்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை.. அதை சிதம்பரத்திடம் சொல்லி அவர் நம்பிக்கையை குலைக்க விருப்பாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.

ஒருநாள் மாலை சிதம்பரமும் கங்காவும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.ஆபிஸில் இருந்து வந்த அனிவர்த தனது தந்தையிடம் இரண்டாயிரம் தாள்கள் அடங்கிய சில கட்டு பணத்தை கொடுத்தவன்…

“ப்பா.. இதுல ஒரு கோடி இருக்கு.. அந்த ப்ளாட்ட வித்துட்டேன்.. இந்தாங்க.. நீங்க பார்த்து எதுனாலும் செஞ்சுக்குங்க…” என சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.

ஒரு ஞாயிறு அன்று தனக்கு சில உடைகள் எடுக்க வேண்டும் என தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். தான் வழக்கமாக எடுக்கும் ப்ராண்டட் ஷோரும் சென்று தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு வெளியில் வந்தவன் ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தவுடன்.. அதனுள் நுழைந்தான். தனக்கு ஒரு கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம் ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.

“மாமா.. யூ ஆர் சீட்டிங் மீ..”

மழலையின் குரலை கேட்டதும் ஷாஷிகா என தெரிந்து கொண்டவன்.. தனக்கு எதிரில் இருந்த டேபிளில் பார்க்க… அங்கு ஷாஷிகா ஒரு இளைஞனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள்.

“நோ.. நோ.. பேபி..”

“மாமா..மா..ஆ..”

“ஓகே.. ஷாஷிகா.. ஓகே..”

“நீ எனக்கு பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொன்னல்ல.. இப்ப டூ ஐஸ்கிரீம் தான் வாங்கி தந்திருக்க.. இரு.. இரு.. உன்ன பாட்டிகிட்டயே மாட்டிவிடறேன்.. நீ தக்சாவ பார்த்து கண்ணடிச்சில்ல… அத பாட்டிகிட்ட சொல்லாம இருக்க.. பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொல்லி இப்ப டூ தான் வாங்கி கொடுக்கற…” என விரல் நீட்டி மிரட்டிக் கொண்டு இருந்தாள்.

ஷாஷிகாவின் உடல்மொழியும் வாய்மொழியும் அப்படி ஒரு அழகோவியமாக இருந்தது. அனிவர்த்தின் மனதை மணக்கச் செய்தது.

“ஷாஷி.. ரிமைனிங் ஐஸ்கிரீமை நெக்ஸ்ட் வீக் வாங்கி தரேன்.. கோல்ட் வந்திடும்… குட்டில்ல.. செல்லம்ல்ல.. பாட்டிகிட்ட சொல்லகூடாது. ப்ராமிஸா வாங்கி தரேன் ப்ளீஸ் “என கெஞ்ச…

“ஓக்கே.. ஓகே.. பட் சீட்டிங் பண்ணனும் நினைச்ச.. பாட்டிகிட்ட சொல்லிடுவேன்..” என மீண்டும் மிரட்டினாள்.

“சரி வா போகலாம்..” என அவன் ஷாஷிகாவை அழைத்து கொண்டு செல்ல.. எங்கே ஷாஷிகாவோடு பேச முடியாமல் போய் விடுமோ என… அனிவர்த் வேகமாக “ஷாஷிகா..”என அழைத்தான்.

திரும்பி பார்த்த ஷாஷிகா.. அனிவர்த்தை பார்த்ததும் முகம் எல்லாம் பூவாக மலர.. தன் மாமனின் கையை உதறிக் கொண்டு அனிவர்த்திடம் ஓடி வந்தாள்.

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..”

“ஐஸ்கிரீம் சாப்பிட வந்திங்களா..”

“ம்ம்ம்..”

அப்போது தான் தனக்கு வந்த தான் சாப்பிடாமல் இருந்த ஐஸ்கீரீமை காட்டி “ம்ம்ம் சாப்பிடறியா…” என்றான்.

கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம்… நல்லா குங்கும்ப்பூ பாதாம் பிஸ்தா பருப்பு பன்னீர்ரோஜா இதழ்கள் எல்லாம் மேலே அழகாக டாப்பிங்ஸ் செய்யப்பட்டு இருந்ததை பார்க்க ஷாஷிகா நாக்கை சுழட்டி சப்பு கொட்டினாள் குழந்தை.

அவள் செயலில் வசீகரிக்கப்பட்ட அனிவர்த் தன் உள்ளங்கையில் வைத்து நீட்ட… மறுப்பாக தலை அசைத்தாள் இளையாட்டி..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7 Read More »

என் மோகத் தீயே குளிராதே 13

அத்தியாயம் 13   “ஹாய்.. நான் அர்ச்சன..”   “ஓ.. நான் விளானி..”   “நீ காலேஜ்கு புதுசா?”   “ஆமா.. நீ?”   “நானும் தான்.. என்னோட டாடி சர்கிள் இன்ஸ்பெக்டர்.. அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும்.. அவர்கூடவே நாங்களும் ஊர் ஊரா சுத்தணும்..”   “ஓ!”   “ஆமா.. நீ ஏன் ஃபைனல் இயர் ஜாய்ன் பண்ணிருக்க? உங்க டாடிக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சா?”   “இல்ல.. இங்கப்பாரு?”   “என்னது காலியா? உனக்கு மேரேஜாகிடுச்சா?”

என் மோகத் தீயே குளிராதே 13 Read More »

என் மோகத் தீயே குளிராதே 12

அத்தியாயம் 12   “ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா..” என்றவாறே பாடிக் கொண்டு படியில் இறங்கி வந்த விளானி, சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த மாம்பழ மில்க்ஷேக்கை எடுத்து குடித்துக் கொண்டே, “செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி” என்று பாடியபடி நடனமாடிக் கொண்டே வந்தவள், உணவு மேஜையின் மீது

என் மோகத் தீயே குளிராதே 12 Read More »

DF0F036B-6FE5-441C-ACEF-227CFE1F0C28

ஆடி அசைந்து வரும் தென்றல் – 5

அனிவர்த் தன் வாக்கின் மூலம் பெற்றவர்களின் மன சஞ்சலத்தை போக்கி சந்தோஷத்தை மீட்டு கொடுத்துவிட்டான்.கொஞ்சநேரம் அன்னையோடு சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தவன் மருத்துவமனையில் கங்காவிற்கான பத்திய உணவு வரவும் தானே அவருக்கு ஊட்டிவிட்டான். சாப்பாடு பிடிக்காமல் கங்கா முகத்தை சுழித்த போதும் கட்டாயப்படுத்தி கொடுத்தான்.கங்காவின் முகத்தை பார்க்க.. பார்க்க சிதம்பரத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

கங்கா கண்களால் மகனை காண்பித்து அமைதியாக இருங்க என எச்சரித்துக கொண்டு இருந்தார். அனிவர்த் இரண்டு நாட்களாக ஆபீஸ் செல்லாததால் போய் விட்டு மாலை வருவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பியதும் கங்கா..”ஷ்ஷப்பா.. இந்த பத்திய சாப்பாடு எல்லாம் கொடுமை.. எனக்கு மட்டன் பிரியாணி டிரைவரை விட்டு வாங்கி வர சொல்லுங்க..”என்றார் எழுந்து படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு..

மட்டன் பிரியாணி வாங்கி வரவும்.. அதை அவசர அவசரமாக பிரித்து வாயில் அடைத்து் கொண்டே..

“அந்த ஐசியூவுல உப்பு இல்லாத கஞ்சிய கொடுத்து அந்த நர்ஸ் புள்ள குடிங்க குடிங்கனு உசிர வாங்கிட்டா.. ரூம்கு வந்த பிறகாவது இட்லியும் குடல்கறியும் வாங்கி சாப்பிடலாம்னா.. உங்க மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து கிட்டு சென்டிமென்ட்டா பேசிக் கொல்றான். நானே உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. நடிப்பு தானேனு இல்லாம உங்க ப்ரண்ட் அந்த டாக்டரு சும்மா நடிப்புக்கு ஊசி குத்த சொன்னா.. நிசமாலுமே குத்தி வச்சிட்டாரு.. எனக்கு ஒரு மருமகள கொண்டு வரதுக்குள்ள.. நான் என்ன எல்லாம் பாடுபட வேண்டி இருக்கு..” சாப்பிட்டு கொண்டே பேச புரையேறி இருமி கண் எல்லாம் கலங்கிவிட்டது.

சிதம்பரம் தண்ணீர் ஊற்றி கொடுப்பதற்குள் ஷாஷிகா ஓடி வந்து பெட்ல ஏறி மண்டியிட்டு அமர்ந்து தலையை தட்டி கொடுக்க.. யார் இந்த சிறுமி.. எங்கிருந்து வந்தாள்.. என இருவரும் பார்த்தனர்.

“சாப்பிடும் போது பேசக்கூடாது என உங்களுக்கு யாரும் சொல்லி தரலையா..” விழி மலர்த்தி தலையை ஆட்டி ஆட்டி பேச… அவளின் சுருள்முடி முன் நெற்றியை மறைக்க.. அழகாக தலையை சிலுப்பி அதை ஒதுக்கி விட்டு கொண்டாள்.

வெள்ளையில் இளஞ்சிவப்பு கரை கட்டிய ரோஜாப்பூ இருக்குமே அது போல நல்ல பால்வண்ணத்தில் தோலின் நிறமிருக்க… கண் இமை,கன்னக்கதுப்பு, மூக்கு நுனி. உதடு, கைகால் விரல்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க.. அதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அடர்த்தியான சுருள் சுருளான கேசம்…

தீடீரென ஒரு குழந்தை வந்து பேசவும்… கங்காவும் சிதம்பரமும் அதன் அழகிலும் அழுத்தம் திருத்தமான பேச்சிலும் தங்களை மறந்து பார்த்தபடியே இருந்தனர்.

“அச்சோ… நீங்க பேஷன்ட் தான.. உடம்பு நல்லா இல்லைனா நான்வெஜ் சாப்பிடகூடாது தெரியாதா..” கையை ஆட்டி பேச…

இளையாளின் கேள்வியில் கங்கா திரு திருவென முழிக்க… சிதம்பரம் நன்றாக வாய்விட்டு சிரி்த்துவிட்டார்.

வாய் மேல் தன் சுட்டுவிரலை வைத்து “ஷ்ஷ்.. இது ஹாஸ்பிட்டல் இங்கு சைலண்ட்டா இருக்கனும்.. டோன்ட் சவுட்..” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல.. சொக்கி தான் போயினர் பெரியவர்கள் இருவரும்…

“ஐயோ..” என தனது உள்ளங்கையால் உச்சஞ்தலையில் தட்டி கொண்டவள்..

“பாட்டி தேடுவாங்க.. பை..” என சொல்லி அந்த அழகு புயல் அவர்களை கரை கடந்து சென்றது.

இருவருக்கும் இனிமையான பொழுது அது.. பேச்சற்று அந்த இனிமையில் கரைந்து கொண்டு இருந்தனர்.

நர்ஸ் வரவும் தான் அதில் இருந்து மீண்டனர். நர்ஸ் ஒரு இன்செக்‌ஷன் போட்டு விட்டு செல்ல..

“நடிப்ப நிஜமாக்க பார்க்காரு…. உங்க ப்ரண்டுகிட்ட சொல்லி வைங்க… பில் எவ்வளவு வேணும்னாலும் கட்டிடலாம்.. இப்படி சதக் சதக்குனு குத்த வேணாம்.. சொல்லுங்க..” என்றார் முகத்தை சுழித்தபடி…

“செய்வன திருந்த செய் என பழமொழி இருக்குல்ல.. உன் மகன் படுபுத்திசாலி. உன் தில்லாலங்கடி எல்லாம் உம் மகனுக்கு தெரிஞ்சுது.. அவன் கல்யாணம் நமக்கு கனவாவே போயிடும். அத முதல்ல புரிஞ்சுக்கோ..”

கணவனின் பேச்சில் உள்ள உண்மை உரைக்க அமைதியாகவே தலை அசைத்தார்.

சிதம்பரம் தண்ணீர் ஊற்றி கொடுப்பதற்குள் ஷாஷிகா ஓடி வந்து பெட்ல ஏறி மண்டியிட்டு அமர்ந்து தலையை தட்டி கொடுக்க.. யார் இந்த சிறுமி.. எங்கிருந்து வந்தாள்.. என இருவரும் பார்த்தனர்.

“சாப்பிடும் போது பேசக்கூடாது என உங்களுக்கு யாரும் சொல்லி தரலையா..” விழி மலர்த்தி தலையை ஆட்டி ஆட்டி பேச… அவளின் சுருள்முடி முன் நெற்றியை மறைக்க.. அழகாக தலையை சிலுப்பி அதை ஒதுக்கி விட்டு கொண்டாள்.

வெள்ளையில் இளஞ்சிவப்பு கரை கட்டிய ரோஜாப்பூ இருக்குமே அது போல நல்ல பால்வண்ணத்தில் தோலின் நிறமிருக்க… கண் இமை,கன்னக்கதுப்பு, மூக்கு நுனி. உதடு, கைகால் விரல்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க.. அதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அடர்த்தியான சுருள் சுருளான கேசம்…

தீடீரென ஒரு குழந்தை வந்து பேசவும்… கங்காவும் சிதம்பரமும் அதன் அழகிலும் அழுத்தம் திருத்தமான பேச்சிலும் தங்களை மறந்து பார்த்தபடியே இருந்தனர்.

“அச்சோ… நீங்க பேஷன்ட் தான.. உடம்பு நல்லா இல்லைனா நான்வெஜ் சாப்பிடகூடாது தெரியாதா..” கையை ஆட்டி பேச…

இளையாளின் கேள்வியில் கங்கா திரு திருவென முழிக்க… சிதம்பரம் நன்றாக வாய்விட்டு சிரி்த்துவிட்டார்.

வாய் மேல் தன் சுட்டுவிரலை வைத்து “ஷ்ஷ்.. இது ஹாஸ்பிட்டல் இங்கு சைலண்ட்டா இருக்கனும்.. டோன்ட் சவுட்..” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல.. சொக்கி தான் போயினர் பெரியவர்கள் இருவரும்…

“ஐயோ..” என தனது உள்ளங்கையால் உச்சஞ்தலையில் தட்டி கொண்டவள்..

“பாட்டி தேடுவாங்க.. பை..” என சொல்லி அந்த அழகு புயல் அவர்களை கரை கடந்து சென்றது.

இருவருக்கும் இனிமையான பொழுது அது.. பேச்சற்று அந்த இனிமையில் கரைந்து கொண்டு இருந்தனர்.

நர்ஸ் வரவும் தான் அதில் இருந்து மீண்டனர். நர்ஸ் ஒரு இன்செக்‌ஷன் போட்டு விட்டு செல்ல..

“நடிப்ப நிஜமாக்க பார்க்காரு…. உங்க ப்ரண்டுகிட்ட சொல்லி வைங்க… பில் எவ்வளவு வேணும்னாலும் கட்டிடலாம்.. இப்படி சதக் சதக்குனு குத்த வேணாம்.. சொல்லுங்க..” என்றார் முகத்தை சுழித்தபடி…

“செய்வன திருந்த செய் என பழமொழி இருக்குல்ல.. உன் மகன் படுபுத்திசாலி. உன் தில்லாலங்கடி எல்லாம் உம் மகனுக்கு தெரிஞ்சுது.. அவன் கல்யாணம் நமக்கு கனவாவே போயிடும். அத முதல்ல புரிஞ்சுக்கோ..”

கணவனின் பேச்சில் உள்ள உண்மை உரைக்க அமைதியாகவே தலை அசைத்தார்.

சிதம்பரத்திற்கு கங்காவிடம் வம்பு செய்யும் எண்ணம் தோன்ற…

“கங்காம்மா… உன் உடம்புல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்… அதான் ஒரு சர்வீஸ் பண்ணிடுடானு என் நண்பன்கிட்ட சொன்னேன்.. அதான் புல் சர்வீஸ் பண்றான் போல…” என சிரிக்காமல் சொல்ல..

“என்னது… சர்வீஸா.. நான் என்ன உங்க வண்டியா.. சர்வீஸ் விட..”என கோபமாக கேட்க..

“என் வாழ்க்கை ஓட உதவியா இருக்கற வண்டியே நீ தானே…”என கிண்டலடிக்க…

கங்கா தலையணையை தூக்கி சிதம்பரத்தை நோக்கை வீச… அந்த சமயம் பார்த்து அனிவர்த் உள்ளே வந்தான்.

அனிவர்த்தை பார்த்தும் கங்கா ஆடு திருடிய திருடனாய் முழித்தார். அனிவர்த்தின் முகத்தை பார்க்க.. அவன் முகமோ கோபத்தில்…

“ம்மா.. நீங்க பண்றது எல்லாம் சரியில்ல.. என்ன முழிக்கறிங்க.. எனக்கு தெரிஞ்சு போச்சுனா…” என சத்தம் போட…

ஐய்யய்யோ… கண்டுபிடிச்சிட்டானா.. என பயத்துடன் பார்க்க…

“உங்க உடம்பு இருக்கற இந்த கண்டீசன்ல கூட.. நீங்க அடங்கவே மாட்டிங்களா… சின்ன புள்ளையாட்டம் சேட்டை பண்ணாம தூங்குங்க..” என அனிவர்த் திட்ட..

சிறுபுள்ளை போல உதட்டை பிதுக்கி முகத்தை திருப்பிக் கொண்டு படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டார். தந்தையிடம் டாக்டரை பார்த்து விட்டு வருவதாக சொல்லி அனிவர்த் சென்று விட… அவன் சென்றதும் கண்களு திறந்த கங்கா…

“என்னால இவன சமாளிக்க முடியல.. நாம இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்.. உங்க ப்ரண்ட்டுகிட்ட கேளுங்க..”

“ஏம்மா.. உன் நடிப்புல ஒரு லாஜிக் வேணாமா.. ஹார்ட் அட்டாக் வந்த பேசன்ட.. குறைந்தது இரண்டு நாளாவது ஐசியூவுல இருக்கனும்.. நீ அடமா அங்க இருக்கமாட்டேன். மானிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் பார்த்தா பயம் இருக்குனு ரூம்கு வந்துட்டா…இங்கயாவது இரண்டு நாள இருக்காம..உடனே கிளம்பனும்னு சொல்லி எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லனு நீயே காட்டிக் கொடுத்துடுவ போல… இப்ப தான் உன் மகன் கல்யாணத்துக்கு சரி சொல்லி இருக்கான்..பாரத்துக்க… பத்திரம்..”

“சரி.. சரி.. அதையே சொல்லி மிரட்டாதிங்க.. நைட்டுக்கு பரோட்டாவும் மட்டன் சால்னாவும் வாங்கிடுங்க…”

“ஏம்மா டாக்டருக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்….. மூனு வேளையும் நான்வெஜ் சாப்பிட்ட.. உன் நடிப்பு நிஜமாக சான்ஸஸ் உண்டு.. அதையும் பார்த்துக்கோ..”என்றுவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டார்.

“வாழை பழத்தில் ஊசிய ஏத்தற மாதிரி பேசிட்டு.. அப்பாவி போல பாவ்லா காட்ட வேண்டியது..” என சத்தமாகவே முணுமுணுத்தார். சிதம்பரம் காதில் வாங்காது போல செய்திதாளில் புதைந்து கொண்டார்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 5 Read More »

என் மோகத் தீயே குளிராதே 11

அத்தியாயம் 11   “என்னடா.. இப்படி முடிய சொல் சொதன்னு வைச்சுருக்க.. துவட்டலையா? சளி பிடிச்சுக்கப் போகுது..” என்ற அர்ஜுன், ஹாசினி கையில் வைத்திருந்த துண்டை வாங்கி, அவளது தலையை துவட்டினான். துவட்டும் போதே, அவளது தோளிலும் கழுத்திலும் கன்றி போயிருந்த காயங்களை பார்த்தவன்,    “டாடி ரூம்ல.. டேபிளுக்கு கீழே ஒரு ஆயின்மெண்ட் இருக்கும்.. அதை எடுத்துட்டு வா..” என்று கூறியவாறே முடியில் இருக்கும் நீரை துடைத்து காய் வைத்தவன், அவளை தனது அறைக்கு அனுப்ப,

என் மோகத் தீயே குளிராதே 11 Read More »

1D36D68A-326B-4B1E-B65E-88BF2529476E

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு போகாமல் இருந்தால் பயந்த போய் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என நினைத்திருக்க.. அவர்களின் அமைதி அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆனது. பெண் பார்த்து இருக்கிறார்கள் பாரு.. ஒரு முக லட்சணம் உண்டா.. கலரும் கறுப்பு.. குட்ட வாத்து மாதிரி படிக்காத பட்டிக்காடு போல…

இவங்க அழகு படிப்பு நாகரிகத்துல பாதியாவது இருக்கற மாதிரி பார்க்க கூடாது. சி். கே எண்டர்பிரைசஸ் எம்டிக்கு ஒய்பா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணாமா.. இந்த மாதிரி பொண்ணை என்ஆபீஸ் ப்யூன் கூட மேரேஜ் பண்ணிக்க யோசிப்பான். ச்சே எனக்கு போய் இப்படி ஒரு பெண் லைப் பார்ட்னரா என கடுங் கோபம் கொண்டான்.

அவன் மேல் ஒரு பந்து வந்து விழுகவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர்ந்து பந்தை கையில் எடுக்கவும்.. பந்தை வாங்க வந்தாள் ஷாஷிகா. அனிவர்த்தை பார்த்தும்…

“ஹாய் அங்கிள்” என அவனருகே அமர்ந்து கொண்டது.

அனிவர்த்துக்கும் ஷாஷிகாவை பார்த்தும் அவன் மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் வடிந்து ஒரு புது உற்சாகம் தொற்றிக் கொள்ள…

“ஹேய்.. பேபிடால்..” என்றான்.

ஷாஷிகா அவனை பார்த்து முறைக்க.. அதை பார்க்க அனிவர்த்துக்கு அன்று அவள் சொன்னது நினைவில் வர…

“ஹே…சாரி சாரி ஷாஷிகா..” என தன்னை திருத்திக் கொள்ள..

“அஃது” விரலை நீட்டி எச்சரிப்பது போல மிரட்டினாள் குட்டி பொண்ணு..

அவளும் ஏதோ கேட்க இவனும் பதில் சொல்ல.. நெடுநேரம் குட்டி கைகளை ஆட்டி… கண்ணை உருட்டி….சலசலத்து கொண்டிருக்க.. இவனும் பதிலுக்கு வாயாடி கொண்டு இருந்தான். நடுவே அவளின் தோழர்கள் வந்து அழைத்த போது கூட.. செல்லாமல் நீங்க விளையாடுங்க.. என அனுப்பிவிட்டாள் பெண்.

மாலை மங்கும் நேரத்தில் “ஏய்… ஷாஷி வீட்டுக்கு போகலாம் வா..” என வந்து நின்றான் ஒரு சிறுவன்.

“இரு ரித்தீஷ் வரேன்.. இவன் என் கஷின் பிரதர் ரித்தீஷ்.. “

ரித்தீஷோ..”நீ இப்ப வரையா இல்லயா..” என மிரட்ட..

“சாரி அங்கிள்.. இவன் இப்படி தான் யார்கூடயும் பேசமாட்டான். சிடுசிடுனுனே இருப்பான்..” என ஷாஷிகா சொல்ல..

ரித்தீஷ் முறைக்க.. “பை அங்கிள்.” என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் குட்டி..

வந்த போது இருந்த மனநிலைக்கு நேர்மாறாக சந்தோஷமாக… உற்சாகமாக திரும்பி சென்றான்.

அனிவர்த் வீட்டிற்கு வராததில் கங்கா மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. கங்காவிற்கு மட்டும் என்ன ஆசையா மகனிற்கு இப்படி ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க.. அழகாக இல்லைனாலும் படிப்பாவது இருக்க வேண்டும் என நினைத்தார் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகும் மகனின் வீக் என்ட் பழக்கம் தொடருமேயானால் படித்த பெண்ணாக இருந்தால் நியாயம் கேட்டு நின்றால் குடும்ப மானம் போகப் போவது உறதி.

அழகு இல்லைனாலும் படிக்காத வெகுளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற பத்தாம் பசலி நாகரிகத்தில் ஊறிப் போன பெண் தான் தன் மகனுக்கு சரி. அப்போது தான் குடும்பம் உடையாது என கல்யாண தரகருக்கு பத்து மடங்கு கமிஷன் கொடுத்தது தான் நினைத்தது போல பெண் பார்த்து முடித்தார். கங்காவிற்கு மனதே ஆறவில்லை தான். தன் மகனின் அழகிற்கும் படிப்புக்கும் இணையாக பெண் பார்த்து கண் நிறைவாக மணமுடித்து… மனம் நிறைவாக வாழ்வதை பார்க்க ஆசை தான் ஆனால் என்ன செய்ய அப்படி பட்ட பெண் வீட்டிற்கு இவர் செல்லும் முன்பே மகனின் அருமை பெருமைகள் போய் நின்று விடுகிறதே…

இதை எல்லாம் நினைத்து கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவருக்கு நடு இரவில் மாரடைப்பு வந்து விட சிதம்பரம் பதறி போனார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கங்காவை அள்ளி போட்டு கொண்டு சென்றார்.

அனிவர்த்கு சிதம்பரம் அழைக்க.. அனிவர்த்தோ நல்ல உறக்கத்தில்…

ஷாஷிகாவோடு பேசியதில் மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து மனம் இலகுவாகிட.. ரொம்ப நாள் கழித்து நிம்மதியான உறக்கம்..

சிதம்பரம் மகனுக்கு விடாமல் அழைக்க… ஒரு கட்டத்தில் போனை எடுத்தான் அனிவர்த் ஒரு வழியாக… நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ போன் மணி அடிப்பது போல இருக்க..
கண்களை கசக்கி கொண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் தந்தையின் எண்ணை பார்த்ததும் பதறி போய் எடுத்துப் பேசினான். அவர் கூறிய செய்தில் அதிர்ந்து போய் அரக்கப் பறக்க காரை ஓட்டி கொண்டு வந்தவன் தன் அம்மாவை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனான்.

தீவிர சிகிச்சை பிரிவில் கைகள் மூக்கில் நெஞ்சில் என நிறைய ஒயர்களோடு.. மயக்கத்தில் இருந்தார் கங்கா.. தன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான் அனிவர்த்..

எந்த உறவுக்கும் கட்டுப்படாதவர்கள் அம்மா என்ற உறவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…

அத்தனை ட்யூப் ஒயர்களுக்கு நடுவே தனது அம்மாவை பார்க்கவும் ஆடி போய்விட்டான் அனிவர்த். எப்பவும் அவன் அம்மாவை தான் அதிகம் தேடுவான். நடுவில் கொஞ்ச காலம் தேவை இல்லாத பழக்கவழக்கங்கள் அவனை தள்ளி நிறுத்தி இருந்தது. தன் கல்யாணம் தான் அவர்களை அதிகம் பாதிக்குது போல அம்மாவிற்காக அவர்கள் கைகாட்டும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நொடி முடிவு செய்தான்.

கங்கா கண் விழித்திருக்க காத்திருந்தனர். காலையில் ஒரு ஏழு மணி போல கண் விழித்தவரை பல டெஸட்கள் அப்சர்வேசன் என ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார்.அறைக்கு மாற்றப்பட்டதும் தன்அம்மாவின் கையை பிடித்து கொண்டு…

“உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டு அழுதான். மகனி்ன் அழுகையை கண்டு கங்காவின் மனம் துடிக்க.. அவர் கண்களிலும் கண்ணீர் திரை.

“அனிவர்த் கல்யாணம் பண்ணினா நீ அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கனும். உன்னோட வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் விட்டுடனும்”அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு வேதனை..

அவரின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தவனுக்கு அந்த வேதனை எல்லாம் தன்னாலே தான். அவனுக்கு தெரிந்து அவன் அன்னை என்றும் கவலையாகவோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை. எப்பவும் சிரிப்புடன் கலகலப்பான டைப் தான்.எதற்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.

கங்கா சிதம்பரத்தை கல்யாணம் செய்யும் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக தான் இருந்தார். குரூப் தேர்வுகள் எழுதியும் சர்வீஸ் அடிப்பையிலும் தாசிலதார், சப் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று ரிடையர் ஆகிவிட்டார். இருவருக்கும் கூடப் பிறந்தவரகள் யாரும் கிடையாது. ஒன்றுவிட்ட சொந்தங்கள மட்டுமே.. இருவருக்குமே பூர்வீக சொத்துக்கள் சில இருந்தது. அனிவர்த் பிறந்த சில வருடங்களிலேயே இவர்களின் பெற்றவர்களும் அடுத்தடுத்து இறந்து விட.. கங்காவிற்கு உறவுகளாலோ வருமானத்திலோ எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை.

கங்காவின் ஒரே கவலை.. அனிவர்த் தங்களை போலவே ஒற்றை பிள்ளையாக போய் விட்டது தான். எப்பவும் கங்கா எதற்காகவும் கவலை பட்டதில்லை. அப்படிபட்டவரை அனிவர்த் தன் செயலால் வருத்தி கொண்டு இருந்தான்.

அனிவர்த் தன் தாயின் கைகளின் மேல் தனது கைகளை வைத்து…

“இந்த பதினைந்து நாட்களில் ப்ளாட்டில் தனியாக தான் இருந்தேன். பப் கூட போகல.. யாரையும் வீட்டிக்கு வரவைக்கல.. இனியும் இப்ப எப்படி இருக்கேனோ அப்படி தான்..” என்றான் சின்ன குரலில்… பெற்றோரை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டான்.

மகனை பார்க்க பார்க்க… பெற்றவர்கள் இருவருக்கும் மனது துடித்தது. சிதம்பரம் மகனின் தோளில் தட்டி கொடுக்க… அவரின் கையை பிடித்து புறங்கையில் முத்தம் கொடுத்தான். அவனின் இந்த பழக்கங்கள் பிடிக்காத போதும் கங்கா தான் அவ்வப்போது பிடிக்கவில்லை என எதிர்ப்பை காட்டுவாரே தவிர செய்யாதே என கண்டித்தது இல்லை.. அதிலும் சிதம்பரம் அந்த எதிர்ப்பை கூட காட்டியது இல்லை.

சிதம்பரத்தை பொறுத்த வரை மகன் புத்திசாலி படிப்பு தொழில் எல்லாம் சுய முயற்சியில் ஏற்படுத்திக் கொண்டான். அவன் தப்பு என உணர்ந்து விட்டால் அதை செய்யமாட்டேன். உணரும் காலத்திற்காக தான் அமைதியாக இருந்தார்.

அவனுக்கு தெரியவில்லை அழகு படிப்பு இதை எல்லாம் விட பெண்ணை பெற்றவர்களுக்கு பையனின் நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்கள் தான் முன் வந்து நிற்கும என்று..

ஆபீஸ் சென்று வந்த பின்னால் ப்ளாட்டில் தனிமை இவனுக்கு ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது. இங்கு வந்த பின்பு பப்பிற்கு சென்றவனுக்கு ஏனோ மனதில் இருந்த அழுத்தம் பெண்கள் துணையையும் நாட அனுமதிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம் பப்பிற்கு போக கூட ஏனோ பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருக்க முடியாமல் சற்று காலார நடக்கலாம் என நினைத்தவன்… தனது ப்ளாட்டுல் இருந்து கிளம்பி கால் போன போக்கில் நடக்க.. வழியில் ஒரு பார்க் தென்பட உள்ளே சென்று அங்கு உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ யோசனையில் இருந்தான்.. ஏதோ யோசனை என்ன.. தன் திருமணத்தை நிறுத்தும் யோசனை தான்..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4 Read More »

என் மோகத் தீயே குளிராதே 10

அத்தியாயம் 10   “ம்ம்.. ப்ச்.. தலையெல்லாம் ஒரே  வலி..” என்றவாறே எழுந்த ஹரிஷான்த், தான் இருக்கும் கோலத்தை உணர்ந்ததும், அருகினில்  இருப்பது யார் என்று பார்க்க, அங்கே யாரும் இல்லாது குழம்பிப் போனான்.    “ஹாசி.. ஹாசி..” என்று குரல் கொடுத்தவாறே தனது ஆடைகளை அணிந்தவன்,   “எங்க போனா இவ?” என்று தன் வாயிற்குள் முணுமுணுத்தவாறே ஹாலிற்கு வந்தவனின் கண்ணில், இன்னும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் பட,   “டேய்.. எந்திரிங்கடா..

என் மோகத் தீயே குளிராதே 10 Read More »

C1D6F803-2A1B-417F-924C-532BB0E3F042

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3

3 -ஆடி அசைந்து வரும் தென்றல்

தனது ப்ளாட்டிற்கு செல்லப் பிடிக்காமல் வீட்டிற்கு சென்றான்.இவன் போன நேரம் சிதம்பரமும் கங்காவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். கங்கா தான் இவனை முதலில் கவனித்தார்.
தனது தட்டில்இருந்த மட்டன் பிரியாணியை படுமும்மரமாக சாப்பிட்டு கொண்டு இருந்த சிதம்பரத்திடம்…

“ஏங்க மழை வருதானு பாருங்க..” என்றார் கங்கா.

அப்போதும் மகனை கவனிக்கவில்லை சிதம்பரம்.

“ஏன் கங்கா வெளியே துணி காயப் போட்டு இருக்கறியா..வள்ளிய விட்டு எடுக்க சொல்லு..”

“ம்ம்ம.. நீங்க மழைல கரைஞ்சிடுவிங்களானு செக் பண்ணனும்”என்றார் கடுப்புடன்..

“என்னது..” கங்காவை பார்க்க…

கங்கா இவரை கண்டு கொள்ளாமல் “அனிவர்த்… இன்னைக்கு சன்டே மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டியா.. அச்சச்சோ..” என நக்கலாக கேட்க…

அனிவர்த் கடுப்பாகி தனது அம்மாவை பார்த்து முறைத்தவாறு..

“தெரிஞ்சு தான் வந்துருக்கேன்… ஏன் இந்த வீட்டுக்கு நினைச்ச நேரம் வர எனக்கு உரிமையில்லயா…”

“அப்போ உன்னோட உருப்படாத பழக்கவழக்கத்தை எல்லாம் விட்டு ஒழிச்சிட்டியா.. அப்ப பொண்ணு பார்க்கவா..” என்றார்.

கங்காவிற்கு தெரியும் தன் மகன் பிடிவாதக்கரன். அப்படி எல்லாம் உடனே மாறி விடமாட்டான்என…

“எப்ப பாரு இதே பேச்சு தானா… எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு ஒருத்தி வந்து என் தலைல ஏறி உட்கார்ந்து என்னை ஆட்டி படைக்கனும்… அத பார்த்து ரசிக்கனும் உங்களுக்கு அதானே..”

“ஆமாம்டா மகனே… வர வர லைப் திங்க தூங்கனு ரொம்ப போரிங்கா போகுது.. உங்கப்பாவும் என் கூட சண்ட போடமாட்டேங்கறாரு.. நான் எது பேசினாலும் வாயை கப்னு மூடிக்கிறாரு.. இப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்டேனு வை..பகல்ல உன் பொண்டாட்டி கூட சண்ட போடுவேன். அப்படியே ஜாலியா பொழுது போயிடும். இராத்திரி நீ வந்ததும் உன் பொண்டாட்டி என்னை பத்தி புகார் வாசிப்பா.. நானும் என் மருமகளும் உனக்கு நாட்டாமை பதவி எல்லாம் கொடுப்போம். நீயும் பஞ்சாயத்து பேச.. அப்படியே நைட் சாப்பாட்டு நேரம் வந்திடும். சாப்பிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்..” என கங்கா சிரிக்காமல் பேச…

சிதம்பரத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினார். ஏற்கனவே கங்காவின் பேச்சால் அனிவர்த் கடுங்கோபத்தில் இருக்க.. தானும் சிரித்தால் சிவபெருமானைப் போல நெற்றிகண்ணை திறந்து பஸ்பமாக்கிடுவான் என உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார்.

“உங்களுக்கு பொழுது போக… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு… என்னை நிம்மதி இல்லாம பண்ணனும் அப்படி தான..” என்று கத்த…

“அது அப்படி இல்லடா மகனே..”

“கங்கா..போதும் அவன் சாப்பிட்டானா என்னனு தெரியல..அதப்பாரு முதல்ல..” சிதம்பரம் அப்போதைக்கு மகனையும் மனைவியையும் விலக்கிவிட்டார்.அப்போதைக்கு அமைதியாகிவிட்டார் கங்கா. ஆனால் அதற்காக எப்போதும் அமைதியாகவா இருப்பார். தனக்கு ஒரு மருமகளை கொண்டு வராமல் ஓய்வதில்லை என உறுதியாக இருந்தார்.

ஒரு வாரம் பிரச்சனை இல்லாமல் சென்றது. மகனை ரொம்ப படுத்த வேண்டாம் ஒரு வாரம் கேப் விட்டு செய்யலாம் என விட்டுவிட்டார்.

அடுத்த வாரத்தின் மத்தியில் ஒரு நாள் கங்கா அனிவர்த்கு போன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கு வந்திருப்பதாகவும் உடனே கிளம்பி வா.. என சொன்னார்.

அனிவர்த் தனது தொழில் துறை மீட்டிங் ஒன்றிற்காக அசோக் கூட காரில் சென்று கொண்டு இருந்தான். அப்போது அனிவர்த் போன்அடிக்க.. பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் தனது தாய் தான் என தெரிந்ததும் சைலண்ட் மோடில் வைத்துவிட்டான்

அனிவர்த்கு கங்கா எதற்கு அழைக்கிறார் என தெரியும். காலையில அனிவர்த் அலுவலத்துக்கு செல்லும் முன் சாப்பிட வந்தவனிடம் …

“அனிவர்த்…. சாயங்காலம் நாம ஒரு இடத்துக்குபோகனும்… சீக்கிரம் வந்துடு…”என இட்லியை தட்டில் வைத்துசாம்பார் ஊற்றிக் கொண்டே கூறினார்.

உடனே உஷாராகிய அனிவர்த்”எதுக்கு.. எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டீங் இருக்கு…”

“எந்த மீட்டிங்கா இருந்தாலும் கேன்சல் பண்ணிடு.. உன்னை மாப்பிள்ள.. பார்கக வராங்க..”

“என்னது மாப்பிள்ள பார்க்க வராங்களா.. எல்லாம் பொண்ணு தான பார்ப்பாங்க…”

“நீ ஒரு பொண்ணப் பார்த்து ஓகே சொல்லி.. கல்யாணம் பண்ண முடியுமானு..எனக்கு தெரியல… அதான் பொண்ணு ஓகே சொன்னா கல்யாணம் தான்..” கங்கா சொல்ல.. சொல்ல..அனிவர்த்கு கோபம் ஏறிக் கொண்டே போனது.

“என் பெர்மிஷன் இல்லாம மேரேஜ் எப்படி பண்ணுவிங்க.. நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. புரிஞ்சுக்கவே மாட்டிங்களா..
எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம் இதை தவிர வேற பேசமாட்டிங்களா..இட்லிய தட்டுல போட்டுட்டு இடியை தலைல போடறிங்க..”

“இனி இட்லிக்கு பதிலா இடியாப்பம் போடறேன்..”

“என்னது..” என ஒரு நிமிடம் புரியாமல் விழித்தான்.

“இட்லிய தட்டுல போட்டு இடியை தலைல போடறே..ஏ..ஏ.. னு சொன்னில்ல..ல..ல.” என இழுக்க..

“அதுக்கு..” என்றான் இன்னும் புரியாமல்..

“இல்ல.. இனி இட்லிக்கு பதிலா.. இடியாப்பம் போடறேன்.. இட்லி மாதிரி இல்லாம இடியாப்பம் சாப்ட்டா இருக்கும்..”

“ச்சே.. உங்ககிட்ட மனுசன் பேசுவானா..”என கோபமாக கத்தி விட்டு சாப்பிடாமல் கிளம்பி சென்றுவிட்டான்.

அதை கண்டு கொள்ளாத கங்கா தட்டில் அரை டஜன் இட்லிகளை வைத்து சாப்பிட ஆரம்பித்தவர் சிதம்ரம் சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை பார்த்தவர்….

“என்னை பார்க்காம நல்லா தட்டு நிறையா வச்சு சாப்பிடுங்க.. இந்த வீட்டுக்கு மருமக வரனும்னா இவன்கிட்ட காவடி எடுத்து நடையா நடக்கனும்.. அதுக்கு தெம்பு வேணாம்.. ம்.. நல்லா சாப்பிடுங்க..”

“ஏன் கங்கா கொஞ்சம் விட்டு புடிக்காலாம்ல..”

“ரொம்ப விட்டாச்சுங்க… அதான் புடிக்க முடியாத தூரத்துக்கு போயிட்டான். இனிமே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு குடும்பம்னு ஒன்னு இருக்கவே இருக்காது.. நான் கண்ணை மூடறதுக்குள்ள அவன் குடும்பமா வாழறத பார்த்துடனும்..” என்ற கங்கா கண்களில் சிறு துளி கண்ணீர்…

“கங்கா அழுகறாளா.. என் கங்காவுக்கு அழுக கூட தெரியுமா..” கங்காவின் மனதை மாற்றும் விதமாக சிதம்பரம் சிறு கிண்டலுடன் பேச…

“அதானே கங்கா.. நீ இதுக்கே அழுகளாமா..இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு.. செய்ய வேண்டி இருக்கு..” தன்னை தானே தேற்றிக் கொள்ள…

பார்த்து இருந்த சிதம்பரம் கங்காவின் கையை ஆறுதலாக பிடித்து “சாப்பிடு..” என்றார்.கணவரின் ஆறுதலில் இன்னும் கொஞ்சம் திடமாக உணர்ந்தார்.

மீண்டும்.. மீண்டும் கங்கா அழைக்க.. ஒரு கட்டத்தில் வழக்கம்போல் சுவிட்ச்ஆப் பண்ணிவிட்டான். உடனே அசோக் போனையும் அணைத்து வைக்க சொல்லிவிட்டான்.

இரண்டு மணிநேரம் கழித்து மீட்டிங் முடிந்து கார் பார்க்கிங் வந்தான். இவனின் கார் அருகில் கங்கா நின்று கொண்டு இருந்தார்.

அனிவர்த் அம்மாவை பார்த்தவன் இவங்க எங்க இங்க..என பார்த்தவன்.. திரும்பி அசோக்கை பார்த்து முறைத்தான்.

“நோ பாஸ்.. அம்மா தான்..”

தனது அம்மாவை பார்ததவன் “ இங்க எதுக்கு வந்திங்க..”

“நீ வரல.. அதான் நான் வந்துட்டேன்..”

சற்று தள்ளி நின்று இருந்தவர்களை “இங்க வாங்க” என கூப்பிட்டார் கங்கா..

ஒரு இளம்பெண் அந்த பெண்ணின் பெற்றோர் வந்தனர். அவர்களிடம் கங்கா..

“இது தான் என் மகன்.. நல்லா பார்த்துக்குங்க..”

அந்த பெண்ணோ அனிவர்த்தை விடாமல் பார்த்தது மேலிருந்து கீழாக… அந்த பார்வையில் அனிவர்த்கு தான் கூச்சமாகி போனது. அந்த பெண் ரொம்பவே சுமாரான ரகம்.

ஐயோ இது தான் பொண்ணா.. எங்க பாஸ் அழகென்ன.. அறிவென்ன.. அவர் கூட வீக் என்ட்ல பார்ட்டி பண்ண வரவளுகங்க கூட மாடல் ரேஞ்சுக்கு இருப்பாளுக..இந்த கங்காம்மாவுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ.. என அசோக்கின் மைண்ட் வாய்ஸ்..

அசோக் நினைப்பது போல தான் அனிவர்த் நல்ல கலராக… அடர்த்தியான அலை அலையாக அவனை போலவே அடங்காமல சிலிர்த்து கிட்டு நிற்கும் கேசம்… பட்டை மீசை.. தினமும உடற்பயற்சி செய்வதால் உறுதியான பரந்த தோள்களை கொண்ட ஆறடி உயர தேகம்… பார்த்தவுடன் யாரையும் ஈர்க்கும் வசீகரமான முகம்.. அதுவும் ஜெர்மன வாசம் அவனை இன்னும் வசீகரனாக்கி இருந்தது.

கங்கா “ பார்த்துட்டிங்கல்ல்.. ஏம்மா உனக்கு என் பையனை பிடிச்சருக்குல்ல…” என கேட்க..

அந்த பொண்ணு எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தது.

“சரி வாங்க..” என தான் வந்த காரிலேயே அவர்களை கூட்டி கொண்டு சென்றுவிட்டார்.

கங்காவின் செயலை அனிவர்த்தால் ஜீரணிக்க முடியவில்லை. அசோக்கோ என்னடா நடக்குது என முழித்தான். வந்தாங்க.. பார்த்தாங்க.. போயிட்டாங்க.. அந்த பொண்ணு இருக்கற லட்சணத்துக்கு பாஸை பார்த்து போனா போகுது கட்டிங்கற மாதரி மண்டைய ஆட்டுது.. பாஸ்க்கு சம்மதமானு கேட்கல.. போயிட்டாங்க.. கேட்டாலும் இவரு சம்மதிக்க போவதில்லை.. அதான் அதிரடியாக கங்காம்மா களத்துல இறங்கிட்டாங்க போல.. என நினைத்தவாறே நின்று கொண்டு இருந்தவனை அனிவர்த்தின் கார் ஹாரன் சத்தம் கலைக்க..

“இப்ப காருல ஏறியா.. இல்ல உன் டீரிம் எல்லாம் முடிச்சிட்டு கேப்ல வந்துடு..” என அனிவர்த்தின் மிரட்டலில்… அடித்து பிடித்து ஏறினான். அசோக் ஏறியதும் கார் தாறுமாறாக பறந்தது. அன்னை மேல் இருக்கம் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்தான்.

அனிவர்த் வீடு வந்தவன் ஒன்றும் தெரியாத சாது போல அமைதியாக உட்கார்ந்து இருந்த கங்காவை பார்த்ததும் தன் கைகளில் இருந்த கார்கீ மொபைல் இரண்டையும் விசிறி அடித்தான். மொபைல் தரையில் சிதறி விழுந்தது.

அவனின் கோபம் கண்டு சிதம்பரம் தான் பதறினார். கங்காவோ அமைதியாக “ வாங்க வந்து படுங்க.. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.. நாளைக்கே போய் பாலப்பட்டி ஜோசியர பார்த்து நாள் குறிச்சிட்டு வரனும்..” என சிதம்பரத்தை கூப்பிட..

சிதம்பரமோ மகனையும் மனைவியையும் பார்த்துக் கொண்டே நின்றார்.

“மாம்.. என்னை கட்டாயப்படுத்தி எல்லாம் மேரேஜ் பண்ணி வைக்க முடியாது..”

“கண்டிப்பா உன் கல்யாணம் ஜோசியர் சொல்லற தேதில நடக்கும்.. நடத்தி காட்டுவேன்”

“நான் இருந்தா தான கல்யாணம் பண்ணுவிங்க.. நீங்க இத ஸ்டாப் பண்ணல நான் வீட்டுக்கே வரமாட்டேன்..”

அவன் பேசும் வரை அமைதியாக இருந்த கங்கா எதுவும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றுவிட…தன் பேச்சில் பயந்து போய்விட்டார் கங்கா.. இத்தோடு கல்யாண பேச்சை விட்டுவிடுவார் என நினைத்தான். அப்படி எல்லாம் விட முடியாது என காலையிலேயே நிருபித்தார் கங்கா

காலையில் அனிவர்த் தனது ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன்…

“மாம் காபி..”

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவனிடம்.. “தம்பி காபி “ என வள்ளி நீட்ட..

“அம்மா.. எங்க க்கா..” என கேட்டுக் கொண்டே வாங்கியவன்…

“அம்மாவும் அப்பாவும் பாலப்பட்டி ஜோசியர பார்க்கப் போயிருக்காங்க தம்பி..” சொல்லி விட்டு அவர் சென்று விட..

காபியை குடிக்காமல் வைத்து விட்டு தனது அறைக்கு சென்று குளித்து கிளம்பி சாப்பிடாமலேயே ஆபீஸ்கு கிளம்பிவிட்டான்.

அன்று சென்றவன் தான் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவில்லை. ஜோசியரை பார்த்து விட்டு மாலை தான் வந்தனர். வந்ததும் வள்ளி மூலம் அனிவர்த் சாப்பிடாமல் சென்றதை அறிந்தவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை அப்போது.. ஆனால் இரண்டு நாட்களாகியும் வீடு வராமல் போகவும் மெல்ல கவலை எட்டிப் பார்த்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3 Read More »

என் மோகத் தீயே குளிராதே 9

அத்தியாயம் 9   “அது.. அது வந்து..”    “ப்ச்.. இவளுக்கு இப்ப தான் மேரேஜாச்சு.. திடீர் மேரேஜ்.. சோ, யாரையும் கூப்பிட முடியல..”   “ஹஸ்பெண்ட்..”   “இப்போதைக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க.. எப்போ, ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்குறாங்களோ.. அப்போ சேர்ந்திருப்பாங்க.. போதுமா? இப்ப வந்த வேலைய பாருங்க.. எப்பப்பாரு தொணத்தொணன்னு..”   “சரி அதை விடுடா.. அவ‌ ஏன் உன் கூட இருக்கா?”   “அவளோட ஜாப் இங்க தான்.. சோ, என் கூட

என் மோகத் தீயே குளிராதே 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top