ATM Tamil Romantic Novels

Screenshot_20240422-194056_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா)

 ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [2]   இந்தியா, தில்லி.  டெராஸிலிருந்தும் வந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் நிற மின்விளக்கொளி அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் பட்டுத் தெறிக்க,  கரை தட்டிக் கொண்டிருந்த நீர் அலைகளோ பொன் வண்ணமாக காட்சி தருவது… பார்ப்பதற்கு அத்தனை இரம்மியம்.  சீமெந்திலான மூன்று பக்கச் சுவர்களும், இன்னொரு பக்கம் பாரிய கதவுகள் கொண்ட ஓர் கண்ணாடிச் சுவரும்…  அதனையொட்டி அமைந்த டெராஸூம்… டெராஸோடு மினுங்கும் நீச்சல் தடாகமும் என… வெகுசொகுசான அறை தான் […]

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

SAVE_20240403_163620

7 சில்லுன்னு ஒரு காதல்

7 ஜில்லு லியா பிளாட் ல யாரும் கதவை தட்ட மாட்டார்கள்.அவவரவரிடம் சாவி இருக்கும் வந்துருவாங்க. தொல்லை செய்யவும் மாட்டார்கள் அத்தனை நாகரிகமானவர்கள். கோழிகள் வாழும் கூட்டில் சேவலுக்கு என்ன வேலை? கேசியின் எதிர்பாராத வரவுக்கு லேசா முகம் மாறினாள் லியா. எந்த காரணமாயிருந்தாலும் பிடிக்கல. இருந்தாலும்.. “வாங்க! ” என்று அழைத்து டராயிங் அறையில் அமரவைத்து பிரிட்ஜ் ல உள்ள கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றை எடுத்து தர.. கையில் வாங்கி வைத்து சும்மா இருந்தான்

7 சில்லுன்னு ஒரு காதல் Read More »

Screenshot_20240421-181033_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா!![1] கிபி 1815, பங்குனி மாதம், 01,நிலத்தின் ஆழத்தில் இருந்து.. உச்சியை நோக்கி.. அசைக்கவே முடியாத திடகாத்திரத்துடன் வளர்ந்திருந்தன கரும்மலைகள்!! பேருந்தின் நெரிசலில் போகிற போக்கில் கன்னிப்பெண்களிடம் சில்மிஷம் புரியும் விடலைப் பையன்கள் போல, அந்தக் கரும்மலைகளின் முகடு தொட்டு.. உரசிப் போய்க் கொண்டேயிருந்தன வெண்பஞ்சு மேகங்கள்!! மலைமுகடுகள் தொட்டு உரசி வந்த வெண்பஞ்சு மேகங்கள், முழுமதி நிலவையும் உரச வருவது பிடிக்காத தென்றல் காற்றோ, அவை நிலவை நாடி வந்த போதெல்லாம்..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

SAVE_20240403_163620

6 சில்லுன்னு ஒரு காதல்

6 ஜில்லு என்னடா இது ஷாஷாக்கு வந்த சோதனை! உடல் சார்ந்த உறவுக்குத்தான் சக்தி அதிகமா?! நான்! என் லவ்! என்னிடம் உள்ள அவனுக்கான நினைவுகள் அனைத்தும் வீணோ?! விளையாடும் மனநிலையிலிருந்தவள் தீவிரமானாள். உன்னை வாடா போடா சொல்றேன் ரோஷம் வரலியாடா.. கடுப்பாகி தமிழில் அடித்தாள். வரல.. நேரம் கழிச்சு விடை வந்தது.. கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில்ல போடறான் பிராடு பாஸ் “ம்ம்ம். மன்னிச்சுட்டேன் மறந்துட்டேன்.. குட் பை..” ஆப்பை டெலிட் பண்ணிட்டு வெளி வந்துவிட்டாள். அந்த டம்மி

6 சில்லுன்னு ஒரு காதல் Read More »

SAVE_20240403_163620

5. சில்லுன்னு ஒரு விவாகரத்து

5 ஜில்லு   ஷால்யாக்கு பசியில்லேன்னாலும் பாஸ் சொன்னால் சாப்பிட்டு தான் ஆகணும் சும்மா பேருக்கு கொரித்தாள்.     எதிரில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கேசி. எதற்கு இவளிடம் மட்டும் இளகுகிறேன்? ஓர் இரவு என்னோடு இருந்தவளையும் பிடிக்குதே! புதிதாய் தோன்றும் வினோத உணர்வுகளால் திணறினான். ஒருகாலத்தில் இரும்பு இதயம் எனப்பட்டது பேப்பர் போல கசங்கியது.   டைனிங் லாபியிலிருந்து கீழே போனால்தான் ரிசப்ஷன் வரும் அமைப்பு கொண்டது அந்த ஹோட்டல். உண்ட பின் இருவரும் லிப்ட்டில் ஏறும் பொழுதே பின்னோடு

5. சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »

Photo-20240402-144052-S-993x1291

23 ஆசை வெட்கமறியாது

26 ஆசை   “முகரக்கட்ட” இன்னும் லோ கிளாஸ் கெட்டவார்த்தை நாலு சேர்த்து போட்டு பல்லைக்கடிச்சு வாய்க்குள் திட்டோ திட்டு விஜி செல்வாவுக்கு..   “அஸீ சட்டைய கொத்தா பிடிச்சு என் பொண்டாட்டிய எப்டி கூட்டிட்டு போவேன் சொல்லுவ? மூஞ்ச பேக்க  வேணாம்.. என்னத்த லவ் பண்ணான் இவன்லாம்.. தடிமாடு.. மேலே ஏறி படுத்து மூச்சு மூட்ட வச்சு சாகடிக்க மட்டும் உடம்பு வளர்த்து வச்சுருக்கான் மலை மாடு…”   அஸீயிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியவள் செல்வாவிடம் 

23 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

22 ஆசை வெட்கமறியாது

22 ஆசை வெட்கமறியாது   செல்வா உடற்பயிற்சி செய்ய சீக்கிரம் எழுவான்..விஜி படிக்க எழுவாள்.. அதனால் இருவருக்கும் வழமை போல ஒரே நேரம் விழிப்பு வர,    அப்பொழுதுதான் கண்ணசந்த தம்பதியர் இருவரும் காதல் மதுவுண்ட போதையில் மயங்கி கிடக்க.. எழணுமா? சோம்பேறியா நெளிய முட்டிக்கொண்டனர்.. பின் அசடும் வழிந்தனர்..   விஜிக்கும் செல்வாக்கும் இது சுக இத காலை..   விஜி, “குட்மார்னிங் ம்ம்ம்ம்”.. என்று மோகனமாய் லேசா செல்வாவை இடிக்காது நெளிக்க.. அதில் அவளின்

22 ஆசை வெட்கமறியாது Read More »

871E8D70-CA19-43D1-9B90-81BAB6FE1597

புள்ளி மேவாத மான் -25 இறுதி பகுதி

25 – புள்ளி மேவாத மான்

தனா சொல்லாமலேயே அவன் மனதை படித்தவள் சந்தோஷமாக காரில் ஏறி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். எழிலை அனுப்பி விட்டு சோககீதம் வாசிப்பான். இவனை எப்படி சமாளிக்க என எல்லோரும் கவலைப்பட…
தனாவோ முகம் கொள்ளா சிரிப்புடன் வீட்டினுள் வந்தான். மனைவியை அனுப்பி விட்டு இவன் என்ன இவ்வளவு சந்தோஷமா வரான் பைத்தியம் பிடிச்சிருச்சோ என மொத்த குடும்பமும் அவனையே பார்த்திருந்தனர்.
எல்லோரையும் பார்த்து என்ன என்பதாக புருவம் உயர்த்தி கேட்க…ஒன்றும் இல்லை என அனைவரின் தலையும் ஆடியது.
எப்படியோ கவலை இல்லாமல் இருக்கான் என நினைத்து கொண்டு அவரவர் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
தாய் வீட்டிற்கு சென்ற எழில் இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கப் போகும் முன்
“டேய் அண்ணா இராத்திரில எப்ப வேணாலும் காலிங்பெல் அடிக்கும் எழுந்து திறக்க ரெடியா இரு”என சொல்லி படுக்க சென்றுவிட்டாள்.
இவள் என்ன சொல்லுகிறாள் மூவரும் யோசிக்க.. கற்பகத்திற்கு தெரிந்து விட்டது மகள் சொன்னதின் அர்த்தம். மகளின் மீதான மருமகனின் அன்பை நினைத்து ஒரு தாயாக பெரும் உவகை கொண்டார்.
தனாவோ இன்றே போக வேண்டுமா.. போனால் மாமனார் வேற முறைப்பார். தெரிந்தா இவனுங்க வேற ஓட்டியே கொல்லுவானுங்க நாளைக்கு போகலாம் என யோசித்து தூங்க போனான்.
ஆனால் மனைவியின் அணைப்பும் பாப்புகுட்டியின் ஸ்பரிசமும் இல்லாமல் ஒன்றும் முடியவில்லை. தினமும் தூக்கம் வரும் வரை பாப்புகுட்டியிடம் பேசுபவனுக்கு பேச ஆளில்லாத தனிமையும்.. யாரும் இல்லாத வீடும்.. என்னவோ வெறிச்சோடி போய் இருக்க.. அதுவே ஒரு அழுத்தத்தை கொடுத்தது.
தூங்க முயற்சித்து வெகு நேரம் புரண்டு படுத்தவன் இனி இது வேலைக்கு ஆகாது என கிளம்பிவிட்டான் மாமனார் வீட்டுக்கு..
தனா வந்து பெல் அடிக்க.. தமிழரசன் கீர்த்தியை நினைத்து வெகு நேரம் உறக்கம் வராமல்.. அப்போது தான் உறங்கி இருக்க.. முத்துக்குமார் எழுந்து மணியைப் பார்க்க.. மணி பன்னிரண்டு..
எழுந்து வந்து கதவை திறந்தவர் சற்றும் மருமகனை எதிர்பார்க்கவில்லை. மாமனாரின் முகத்தை பார்த்தவன் சற்றே அசடு வழிந்து தலையை கோதிக் கொண்டு முகத்தை திருப்பி வேறுபுறம் பார்த்தவாறு நின்றான்.
ஒன்றும் சொல்லாமல் விலகி நின்று வழிவிட்டார். உள்ளே சென்றவன் மாமனார் ஏதும் சொல்லாததிலேயே.. நிம்மதி கொண்டவனாக “ஊப்”என பெருமூச்சு விட்டான்.
எழிலின் அறைக்கு வந்தவன் அன்றைய விழாவின் களைப்பில் நன்றாக தூங்கி கொண்டு இருந்த எழிலை அணைத்து கொண்டு படுக்க..அந்த உறக்கத்திலும் கணவனின் அருகாமையை உணர்ந்தவள்
“வந்துட்டிங்களா” என கண்களை திறக்காமலேயே சோபையாக சிரித்து விட்டு மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
ஆனால் அவன் பாப்புகுட்டி தந்தைக்காக விழித்திருந்ததோ என்னவோ.. அவனின் கைகளில் அசைந்தது.
“பாப்புகுட்டி இன்னும் தூங்கலையா நீங்க…
அப்பா இப்ப சொல்லறத நல்லா கேளுங்க..அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடுங்க..அம்மா கஷ்டப்பட்டா அப்பாவால தாங்க முடியாது பாப்புகுட்டி”என்றான் கொஞ்சம் வருத்தமாக..
தந்தையை சமாதானம் பண்ணியது பாப்புகுட்டி தன் வழக்கமான பாணியில்..
கதவை பூட்டி விட்டு அறைக்கு வந்த முத்துக்குமாரிடம் கற்பகம்
“யாருங்க.. மாப்பிள்ளையா..”என்று கற்பகம் கேட்க.. ஆச்சரியமாக பார்த்தவர்
“உனக்கு மாப்பிள்ளை வருவாருனு தெரியுமா..”
“ஏன் தெரியாம என்ன.. உங்க மக மேல வச்சு இருக்கிற அன்புக்கு வராம இருந்தா தான் ஆச்சரியம். உங்க மக வச்சது தானே சட்டம். அவ பேச்சை மீறமாட்டாரு..அவள விட்டு இருக்கமாட்டாரு..” என மருமகன் புகழ் பாட..
முத்துக்குமாருக்கு மருமகன் மேல கொஞ்சமே கொஞ்சம் கோபம் போயி.. துளியிலும் துளி பாசம் வந்தது.
தினமும் காலையில் பேக்டரிக்கு செல்பவன் இரவானதும் மனைவியிடம் வந்துவிடுவான். தினமும் தன் பாப்புக்குட்டியிடம் அம்மாவ கஷ்டப்படுத்தாம வந்திடுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஒரு நாள் தனா பேக்டரிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே எழிலுக்கு பிரசவவலி வந்திட… அன்று காலையில் எழுந்ததில் இருந்தே மனதிற்குள் ஏதோ உணர்வு தனாவிற்கு. பேக்டரிக்கு போக வேணாம் என நினைத்தவனை எழில் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள்.
முத்துக்குமார் வீட்டிலேயே இருக்க.. தனாவிற்கு போன் பண்ணி சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போன் வரவும் பதட்டத்துடன் வந்தான். அவன் வருவதற்குள் எழிலை லேபர்வார்டுக்கு கூட்டி சென்றிருந்தனர்.தனா டாக்டரிடம் மனைவியின் அருகில் இருக்க அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.
எழிலைப் பார்த்ததும்”ரொம்ப வலிக்குதாடி..நான் தான் இன்னைக்கு உன் கூடவே இருக்கேன் பேக்டரிக்கு போகலைனு சொன்னே கேட்டியா..” என லேசாக கடிந்து கொள்ள…
தனாவின் கையை பிடித்துக்கொண்டு “மாமா ஒன்னும் இல்லை இப்ப தான் வலி ஆரம்பிச்சிருக்கு..”
“நான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன். ரொம்ப கஷ்டப்படறியோனு டென்ஷன் வேற..”
“பயமா இருக்காடி.. பயப்படாத நம்ம பாப்புகுட்டி உன்னைய கஷ்டப்படுத்த மாட்டாங்க..” என அவளின் கையை பிடித்து ஆதரவாக தட்டி கொடுத்து தலை கோதி தடவி கொடுத்து அவளுக்கு தைரியம் கொடுத்து கொண்டு இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிக்க.. எழில் வலியிலும் பயத்திலும் வியர்வை கொட்டி முகம் வெளிறி உடல் நடுங்க.. என பிரசவ வேதனையில்..
தனாவிற்கு அவள் படும்பாட்டை பார்க்க தானாகவே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
டாக்டர் “குழந்தை சிரசு இன்னும் திரும்பவில்லை. சிறிது நேரம் பாராக்கலாம். இல்லையென்றால் சிசேரியன் தான் பண்ணனும்” என்றிட..
தனா உடனே எழில் வயிற்றில் கைவைத்து
“பாப்புகுட்டி அம்மா பாவம்டா.. சிரமப்படுத்தாம வந்திருங்கடா..”என கெஞ்ச..
தனா சொன்னதும் எழிலுக்கு உயிர் போகும் அளவிற்கு ஒரு வலி ஏற்பட.. இரண்டு நிமிடங்களில் குழந்தை தாய்க்கு கொடுத்த சிரமம் போதும் என்றோ.. இல்லை தந்தை சொல் கேட்டோ.. உலகை பார்க்க வந்துவிட்டது. தனாவின் பாப்புகுட்டி…அவன் வீட்டு மகாலட்சுமியின் ஜனனம்.
எழில் களைப்பில் லேசான மயக்கத்தோடு … தனா அவள் களைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி விட்டு வியர்த்திருந்த அவள் முகத்தை தன் வேட்டியால் துடைத்துவிட்டு நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.
கணவனின் முத்தத்தில் களைப்பை மீறிய முறுவலுடன் கணவனை பார்க்க… தனாவிற்கோ சோபையான முறுவலோடு மனையாளின் முகத்தை பார்க்க பார்க்க காதல் கூடி தான் போனது. மீண்டும் நெற்றி கன்னம் என முத்தம் வைக்க..
டாக்டர் அடுத்து அவனின் எண்ணம் அறிந்தவர் போல..
“தனா கொஞ்சம் வெளியில் இருங்க.. பேபிய கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்து தரோம்”
டாக்டரை முறைத்துக் கொண்டே வெளியேறினான்.
குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து கொடுக்க.. சுந்தரம் கண்ணன் திலகா தேவி முத்துக்குமார் கற்பகம் எல்லோரும் இருக்க..
தன் பாப்புக்குட்டிய தானே முதலில் கையில் ஏந்த வேண்டும் என்ற ஆசையில் அனைவருக்கும் முன்பு சென்று வாங்கினான்.
ரோஜா நிறத்தில் பட்டு போல மென்மையாக இருந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கையை பூவை பற்றுவது போல பற்றி அதன் விரலில் மெல்ல முத்தம் வைத்தான் தனா. உடலை நெளிந்து லேசாக வாய் கோணி கொட்டாவி விட்டு கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்த பாப்புகுட்டியின் அழகில் சொக்கி போனான் தனா.
வீட்டிற்கு அடுத்த தலைமுறையின் முதல் வரவு.. மூத்தவாரிசு அதுவும் பெண் குழந்தையாக இருக்க.. வீட்டுக்கு மகாலட்சுமி.. அதுவுன தனாவின் அம்மா லட்சுமியே வந்து பிறந்தாக எண்ணி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பதினொரு மாதங்கள் கடந்த நிலையில் தனஞ்ஜெயன் எழிலரசியின் மகள் அன்பரசிக்கு வீட்டில் காது குத்து விழா.
தனா மகளுக்கு அன்பரசி என்று பெயர் வைத்திருந்தான். ஆனால் எப்பவும் அவனுக்கு பாப்புகுட்டி தான்.
எப்பவும் போல யாரையும் விடாமல் இவனே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய…வழக்கம் போல ஆண்களின் வசவையும் வயிற்று எரிச்சலையும் சிரித்தபடியே சமாளித்தான்.
அதுகூட பெண்களுக்கு எழில் மீதான காதலாக தெரிய.. அதுவும் ஆண்களை கடுப்பாக்கியது.
குலதெய்வ கோயிலில் காலையில் தமிழரசன் மடியில் அமர வைத்து மொட்டை அடித்திருந்தனர். மதிய விருந்துக்கு அசைவ சமையல் தடபுடலாக தயராகிக் கொண்டு இருக்க…வீட்டிலேயே காது குத்து விழா.
காது குத்தும் நேரம் மகளின் அருகில் வந்துவிட்டான் தனா. அதுவரை தன் தாத்தா முத்துக்குமாரிடம் இருந்த அன்பரசி தந்தையை பார்த்ததும் தாத்தாவிடம் இருந்து தாவிக் கொண்டு தந்தையிடம் வந்தது.
முத்துக்குமாருக்கோ உடனே முகம் மாறிவிட்டது. என் மகளைபோலவே என் பேத்தியையும் மயக்கி வச்சிருக்கான்.என மனதோடு நொடித்து கொண்டார்.
மாமனாரின் முகத்தை கொண்டே அவரின் எண்ணப்போக்கை கண்டு கொண்டவன் உதட்டை கடித்து நமுட்டு சிரிப்பு சிரித்தான்.அதை கண்ட முத்துக்குமார் முகத்தை திருப்பி கொண்டார்.
எழில் தனாவின் அருகில் வந்து அன்பரசியை வாங்கி கொண்டு தனாவை முறைத்தாள்.
“ஏன்டி மாமன் அவ்வளவு அழகாவா இருக்கேன். இப்படி பாசமா பார்த்து வைக்கற” என்றான் நக்கலாக..
அவன் பேச்சில் உக்கிரமாக முறைத்து “ஏன் மாமா எப்ப பாரு எங்க அப்பாவ சீண்டிக்கிட்டே இருக்கறிங்க.. பாவம் மனுசன் ஒரு நல்லநாள் கூட அவர நிம்மதியா இருக்க விடறிங்களா..”என்றாள்.
“இதென்னடி வம்பா இருக்கு.. எப்ப பாரு அவரு தான் என்னய முறைக்கறாரு.. நான் எதுவும் பண்றதில்ல..”என்றான் அப்பாவியாக..
“எல்லாம் பண்ணிட்டு பச்சபுள்ள மாதிரி முகத்தை வச்சிக்கிறது. இராத்திரிக்கு எழிலு எழிலுனுட்டு கிட்ட வருவிங்கல்ல அப்ப வச்சுக்கிறேன் உங்களை”
“எப்படி வச்சுக்குவ”என்றான் அவளை மேலிருந்து கீழே வரை விழுங்குவதை போல பார்த்து கொண்டு…
“ச்சீ பேச்சப் பாரு”என கழுத்தை நொடித்து கொண்டு அன்பரசியோடுஉள்ளே சென்றுவிட்டாள்.
குழந்தை பிறந்த பிறகு சற்று பூசிய உடல்வாகுடன் இன்னும் கொஞ்சம் அழகு கூடிப் போய் இருந்த மனைவியை சைட் அடித்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.
உறவினர்கள் கூடியிருக்க.. நடுவீட்டில் ஜமுக்காளம் விரித்திருக்க..அதில் நடுநாயகமாக தழிரசன் அமர்ந்திருக்க.. சுற்றிலும் இரு குடும்பத்தாரும் இருந்தனர். அதிலும் கீர்த்தி தமிழரசனின் அருகிலேயே அமர்ந்து இருந்தாள்.
எழிலின் வளைகாப்பு முடிந்து சில தினங்கள் கழித்து கீர்த்தியை விரும்புவதை தனது குடும்பத்திலும் தனாவிடமும் சொல்லிவிட்டான்.
தனா அதை சுந்தரத்திடம் சொல்லி சம்மதம் வாங்கினான். முத்துக்குமாரும் பொண்ணு கேட்டு வர நிச்சயம் செய்துவிட்டனர். ஆனால் ஒரு வருடம் கழித்து தான் கல்யாணம் என்பதில் இருகுடும்பமும் ஏகமனதாக முடிவு செய்தனர். எழில் பிள்ளைபேறு முடிந்து தாயும் சேயும் தேறி வரனும் என காரணம் சொன்னனர்.
தமிழரசனுக்கோ என்ன தான் தங்கைகாக என்றாலும்.. ரொம்பவே ஏமாற்றம் தான். இருந்த போதும் போனிலேயும் நேரிலேயும் காதலை வளர்த்தான்.
இப்போது கூட தள்ளி அமர்ந்திருந்த கீர்த்தியை கண்களாலேயே மிரட்டல் விடுத்து தன் அருகே உட்கார வைத்திருந்தான்.
இளசுகள் தனாவை ஓட்டுவது போல இப்ப எல்லாம் தமிழரசனையும் செய்தனர்.அதுக்கு தமிழரசனோ “நான் யாரோட மச்சான்” என கெத்து காட்டுவான்.
தமிழரசனின் மடியில் அமர வைத்து காது குத்த.. வலியில் சொப்பு வாயை திறந்து கத்த ஆரம்பித்ததும்
“பாப்புகுட்டி அப்பாவ பாருங்க அழகூடாது” என தனா கன்னம் தட்டி சொல்லவும் அழுகையை அடக்கி உதடு பிதுக்கி தேம்பியது அன்பரசி. வாஞ்சையோடு அள்ளி எடுத்து மகளை தன் நெஞ்சில் சாய்த்து தட்டி கொடுத்தான்.
தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு எளிதில் சமாதானம் ஆகி சிரிக்க தொடங்கிவிட்டது. இதை பார்த்த எழிலுக்கோ கொஞ்சம் பொறாமையாக இருந்தது. எப்பவும் தனாவின் அன்பிற்கு இருவருமே போட்டி போடுவர்.
விருந்து எல்லாம் முடிந்து உறவினர்கள் எல்லாம் சென்று இருக்க.. குடும்பத்தினர் மட்டும் இரவு உணவை முடித்து கொண்டு சென்றனர். எல்லோரையும் அனுப்பி விட்டு கதவை பூட்டி விட்டு எழில் தந்கள் அறைக்கு வர…
தனா மகளை நெஞ்சில் போட்டு தட்டி கொடுத்து கொண்டு இருந்தான். பாப்புகுட்டி எல்லோரும் எடுத்து கொஞ்ச என கொஞ்சம் துவண்டு போயிருந்தாள். அதனால் தூக்கம் வராமல் தந்தையின் நெஞ்சில் முகத்தை பிரட்டி பிரட்டி தூங்க முயற்ச்சித்து கொண்டு இருந்தது.
இதை பார்த்த எழிலோ தனாவை முறைத்துக் கொண்டே தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டாள். மகள் வந்த பிறகு தன்னை கண்டு கொள்வதில்லை என எழிலுக்கு ஒரு எண்ணம். அதனால் இப்படி அப்பப்ப தனாவை முறைத்துக் கொண்டு திரிவாள்.
மகளை தூங்க வைத்து அவளுக்காக தனா கேரளாவில் இருந்து பிரத்யேகமாக சின்ன தேக்கு கட்டில் சுற்றியும் அழகான மரவேலைப்பாடு செய்த தடுப்புகளுடன் கூடிய கட்டில் சொல்லி வரவழைத்திருந்தான். அதில் உறக்கம் கலையாதவாறு படுக்க வைத்து விட்டு மனைவியின் அருகே வந்து அவளை பின்புறமாக அணைத்தான்.
அவனை வெடுக்கென்று தள்ளிவிட்டாள்.அவனும் விடாப்பிடியாக அவளை கோழி அமுக்குவது போல மொத்தமாக அவளை இழுத்து அணைக்க…
“இப்ப எல்லாம் உன்னை கட்டிப்பிடிக்க இரண்டு கை பத்தமாட்டிங்குதுடி” என வேண்டும் என்றே சீண்ட..
அவனிடம் இருந்து விடுபட திமிறிக்கொண்டு இருந்தவள் அவனின் பேச்சில் கோபமாக…
“நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன்.. எப்ப பாரு இப்படியே சொல்றது”என அவனை அடிக்க..
அவளின் அடித்த கைகளை லாவமாகப் பற்றி அவளை நெருங்கி இதழோடு இதழ் சேர்த்தான். அவனிடம் இருந்து விலக எத்தனித்தவள் மெல்ல மெல்ல தன் மாமனின் காதலிலும் ஆளுமையிலும் கரைந்து கொண்டு இருந்தாள்.
அங்கே பாப்புகுட்டி உறக்கம் கலையாதவாறு சத்தமில்லாத சிணுங்கல் ஒலியும் காதல் அரங்கேற்றமும் நடந்து கொண்டு இருந்தது.
இரண்டு வருடங்கள் கடந்த நிலையில்..
அன்பரசி எழிலின் போனில் இருந்து தனாவிற்கு அழைத்தது.
“சொல்லுங்க பாப்புகுட்டி”
“அப்பா.. அம்மா சூஸ் குடிச்சு.. ஓ.. ஓனு ஒரே வாமிட் ப்பா.. டையர்டா.. படுத்தாங்க” என்றதும்..
“அப்பா இப்ப வரேன் பாப்புகுட்டி. அம்மாவ பார்த்துங்கங்க”என்று சொல்லி உடனே கிளம்பிவிட்டான்.
தனா வீட்டுக்கு வந்த போது அன்பரசி எழிலின் அருகில் அமர்ந்து தன் கவுன் கொண்டு எழிலின் முகத்தை துடைத்து கொண்டிருந்தது. வேகமாக எழிலின் அருகில் வந்தவன் காலை மடக்கி அமர்ந்து எழிலை மடி தாங்கி கொண்டான்.
எழில் கர்ப்பம் மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. எப்பவும் போல யாரையும் விடாமல் தானே எழிலை தாங்கினான். இப்போது அப்பாவிற்கு துணையாக அன்பரசியும் சேர்ந்து கொண்டது.
தனா என்ன சொன்னாலும் அடி பிசகாமல் செய்யும் அன்பரசி. ஜீஸ் எடுத்து வைத்து விட்டு அம்மாவுக்கு கொடுங்க என தனா அன்பரசியிடம் சொல்லி சென்று இருக்க..
தந்தை சொல் தட்டாமல் அதுவும் எழில் மறுக்க.. மறுக்க.. குடிக்க வைத்துவிட்டது. வயிற்றை பிரட்டி குடித்ததை விட இரண்டு மடங்கு வெளியே வந்துவிட்டது. சோர்ந்து போய் படுக்கவும் தனாவை அழைத்து விட்டது.
தனா வழக்கம் போல் இந்த குழந்தையிடமும் பேசினான்.
“ராசுக்குட்டி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கடா”என்க
அன்பரசியும் “அப்பா நானு.. நானு..”என எழிலின் வயிற்றில் கை வைத்து
“தம்பி ராசுக்குட்டி அம்மா பாவம் சமத்தா இருக்கனும்.. ம்ம்”என்றது.
தனா மகளின் செய்கையை புன்சிரிப்போடு பார்த்து கொண்டு இருந்தான். எழிலோ எப்பவும் போல தனாவை கண்ணில் காதல் வழிய ரசித்து கொண்டு இருந்தாள்.
தனாவின் வறட்சியான வாழ்க்கையில் வசந்தமாக வந்து தன் காதல்கொண்டு அவனை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறாள் எழிலரசி.
எழிலின் ஆழிக்காதலில் விரும்பியே தன்னை தொலைத்து கொண்டவன் அளப்பற்கரிய பதில் காதலை செலுத்தி எழில்தாசன் என்னும பட்டத்தை விரும்பியே ஏற்றுக் கொண்டான்.
இவர்களின் காதலால் இவர்கள் வாழ்க்கை அழகான நீரோட்டம் போல செல்லும்.

கண்பாராமல் செவி வழியே
கரை காணாத காதல் கொண்டு
பிருந்தாவன கண்ணன் மேல்
பித்தாகி போனாள் மீரா

கண்விழி அல்லாமல்
கேள்வி ஞானம் கொண்டு
குறிஞ்சி நில கடவுளின் மேல்
புள்ளி மேயா(வா)த மான்
தீரா காதல் கொண்டாள்
குறிஞ்சிமலை மகள் வள்ளி

அன்பில் எழில் வடிவமானவள்
தன் மனம் நிறைந்த மன்னவன் மேல்
தணியாத காதல் கொண்டாள்
தனஞ்ஜெயனின் வாழ்வரசி
புள்ளி மேவாத மான் எழிலரசி

வாழ்க வளமுடன்

புள்ளி மேவாத மான் -25 இறுதி பகுதி Read More »

Photo-20240402-144052-S-993x1291

21 ஆசை வெட்கமறியாது

21       இருக்காது போன்று ஏதோ சொல்ல வாயெடுத்த விஜியை.. உதட்டில் முத்தமிட்டு நிறுத்தி..   நீ காட்டிய பொழுது எனக்கு கண்ணீர் தான் வந்தது.. தாயில்லா பெண் குழந்தை என்று என் கண்ணம்மா.. மொச்சு மொச்சு வென்று முகமெங்கும் செல்வா முத்தமிட.. உப்பு கரித்தது சுவை..   என்னடா ஏன்? பதறிவிட்டான் செல்வா..   சாரி தப்பா நினைச்சுட்டேன் உன்னை.. வெரி சாரி செல்லு..   ப்ச் விடு விடு நானும் இப்படி

21 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

20 ஆசை வெட்கமறியாது

20.2 ஆசை   நம்பவே மாட்டேன் போடா போடான்னு ரொம்ப வெறி பிடிச்ச யட்சிணி போல அவனை உதைச்சி கிள்ளி கடித்து காதலோடு ஊடல் விஜி.. அவன் சொல்வதை அவளால் ஏற்க முடில..   நீ ஏன் பெரிய விஷயமா எடுத்துக்கிற.. விவரம் இல்லாதப்போ நடந்ததை இப்போ போட்டு பிரட்டாதே   டேய் தடியா என்னை சொல்ற நீ அதுதான் காண்டாவுது.. முறைத்தாள் விஜி..   விஜியின் காது மடலை தன் நாவால் நீவி முத்தமிட்டு கோவம்

20 ஆசை வெட்கமறியாது Read More »

error: Content is protected !!
Scroll to Top