ATM Tamil Romantic Novels

33E9EAC7-71DB-4889-B2E0-86D31F386E9D

15 – ஆடி அசைந்து வரும் தென்றல்

15 – ஆட அசைந்து வரும் தென்றல்

தனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு நெருப்பாக எரிந்த கண்களை பிரித்துப் பார்க்க… திரையில் ‘ரெட்சில்லி’ என காட்டியது. உயிர்பித்து காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…

காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…

அவளின் குரலை கேட்ட அனிவர்த் துடித்துப் போனான்.

“குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னடா ஆச்சு..” என உருகினான்.

“அது ஒன்னும் இல்ல வர்தா.. நேற்று மழைல நினைஞ்சேனில்ல… அதான் பீவர் வந்திடுச்சு போல…”

அவள் பேச்சை சரியாக கவனிக்காமல்…

“அதுக்கு தான்.. என்கூட வானு கூப்பிட்டேன்.. நீ எங்கடி கேட்ட..” என கோபப்பட்டான்.

“ஆமாம்.. அப்படி திட்டுவிங்க… அப்புறம் கூப்பிட்டா ரோசம் கெட்டு போய் பின்னாலயே வந்திருவாங்களா..”

“உன்மேல தப்பு இருக்கவும் தான திட்டினேன்.. சரி அத விடு.. டாக்டர்கிட்ட போனியா.. மெடிசன் எடுத்துகிட்டயா..”

“டாக்டர் வந்து பார்த்திட்டு மெடிசன் கொடுத்தாங்க.. இப்ப தான் சாப்பிட்டு டேப்லெட் போட்டேன் வர்தா..”

“ஏய்… இப்ப என்ன சொன்ன..” ஒரு வித பரபரப்பாக கேட்டான்.

“டேப்லெட் போட்டேன்னு சொன்னேன்..”

“அது இல்லடி.. நீ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட..”

கண்களை சுருக்கி… நுனி நாக்கை கடித்து… கையை உதறி…

“அச்சோ.. எப்பவும் மனசுக்குள்ள கூப்பிடற மாதிரி.. சொல்லிட்டேன் போல” என முணுமுணுக்க..

தெளிவாக அனிவர்த் காதில் விழ….

“அப்போ என்னை அடிக்கடி நினைப்பியா… கூப்பிடுவியா… அப்படி என்ன தான் நினைப்ப.. சொல்லு..”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை… போங்க… நான் கால் கட் பண்ணறேன்..”

“ஏய்ய்ய்.. ஒரு நிமிசம் வர்தா கூப்பிடு..”

“ம்கூம் மாட்டேன்..”

“ப்ளீஸ் குட்டிம்மா.. ஒரே ஒருதடவை… கேட்கனும் போல ஆசையாயிருக்கு.. ப்ளீஸ்டி செல்லம்ல…”

“வர்தா.. “என கிசுகிசுப்பாக அழைக்க..

“சரியா கேட்கல.. கொஞ்சம் சவுண்டா.. ப்ளீஸ்டாம்மா..”

“போடா வர்தா..” என வேகமாக.. சத்தமாக சொல்லிவிட்டு போனை அணைத்துவிட்டாள்.

போனையே உல்லாசமாக பார்த்திருந்தான் மனம் நிறைந்த சிரிப்போடு…

இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் மனம் நிலை கொள்ளவில்லை தான். இருந்த போதும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசி ஆறுதல் தேடிக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து வந்தவளை அள்ளி அணைத்து முத்தமிட.. கைகள் பரபரக்க… அவள் தன் அறைக்கு வரும் வரை கூட காத்திருக்க முடியாமல் தவித்துப் போனான்.

தேவர்ஷி அனிவர்த் அறைக்கு வந்தாள். இரண்டு நாட்கள் அவனோடு போனில் பேசியதில் இது வரை இல்லாத ஒரு நெருக்கம் உரிமையும் வந்திருந்தது. அதுவும் இரவில் வெகு நேரம் பேச… என்ன பேசினார்கள் என தெரியாமல் பேசினார்கள்… சிரித்தார்கள்.. ரசித்தார்கள்..

தேவர்ஷிக்கு இந்த இரண்டு நாட்களில் பிடித்தம் காதலாக மாறி இருந்தது. காதல் என்ற உணர்வு அவளை முழுதாக அமிழ்ந்து அழுத்த… ஆபிஸ் வந்தவள் அவனை பார்க்க போவதற்குள் மூச்சு முட்டும் உணர்வு… கால்கள் பின்ன… நடையில் சற்று தேக்கம்… முகத்தில் துளியளவு நாணம்… ஏற்கனவே இருந்த சிவப்போடு இன்னும் தூக்கலான சிவப்பு கன்னங்களில் ஏறியிருக்க… காஜல் தீட்டிய கண்களில் காதல் மயக்கம்…

காதலை முழுதாக உணரும் முன்பே அவன் அணைப்பு.. இதழ்முத்தம் எல்லாம் பிடித்திருந்தது. இப்போது இன்னும் கூடுதலான எதிர்பார்ப்பு மனதில்… காதலை சொல்லாமலே இருவரும் உணர்ந்திருந்தனர்..இப்போது இன்னும் என்னன்ன செய்வானோ என நினைக்க.. உடலில் சிறு நடுக்கம் ஓடியது.

அவளது அறையில் இருந்து தனது அறைக்கு வரும் வரை கேமராவின் வழியாக பார்த்திருந்தவனுக்கு அவளின் அன்ன நடை… முகம் காட்டும் கலவையான உணர்வுகள் எல்லாம் புதிதாக இருக்க… அவனுள்ளும் சின்ன படபடப்பு…

உள்ளே வந்தவள் குனிந்து கொண்டே “குட்மார்னிங் சார்..”

அவனிடம் இருந்து பதில் வரவில்லை சில நிமிடங்கள்… மெல்ல கண்களை உயர்த்தி பார்த்தாள். புருவங்களை ஏற்றி இறக்கினான். வெட்கம் மிகுந்திட சட்டென பார்வையை தழைத்து எங்கோ பார்த்தாள். கருவிழி இரண்டும் இங்கும் அங்கும் உருண்டது. அனிவர்த் எழுந்து அவளை கண்களால் விழுங்கியவாறு ஒவ்வொரு அடியாக அழுத்தமாக எடுத்து வைத்து நெருங்கினான். அவனின் அழுத்தமான காலடி ஓசை அவன் வரவை சொல்ல… இனம் புரியாத பயம்… கைகால் உதறல்.. என்ன செய்வானோ… பதட்டம்…ஏதாவது செய்வானோ.. எதிர்பார்ப்பு.. எல்லாம் காதல் படுத்தும் பாடு..

அவளை நெருங்கியவன் சிறிது இடைவெளி விட்டு கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டி நின்றவன்… அவளிடம் விளையாண்டு பார்க்ககும் ஆசை தோன்ற…

“என்ன தேவவர்ஷி… எதுக்கு இவ்வளவு டென்ஷன்… கம்பெனி சேர்மென்கு ஒரு குட்மார்னிங் சொல்லறதுக்கு இத்தனை பதட்டம் எதுக்கு…”

‘என்னது சேர்மென்னா.. வேற எதுவும் இல்லையா..’ விழிகளில் நீர் கசிய படக்கென நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க…

கண்களில் குறும்பு மின்ன… காதல் கண்ணாக நின்றவனை கண்டு…

‘எல்லாம் விளையாட்டா..’ என கோபம் கொண்டு அவனை நெருங்கி அவன் தோளில சரமாரியாக அடிக்க… அவளை இழுத்து மார்ப்புக்குள் பொதித்து கொண்டான். அவன் மாரப்பில் முகம் புதைத்திருந்தவள் கண்களில் கண்ணீர் வடிய.. அவன் சட்டையை நனைக்க… அவள் முகத்தை நிமிர்த்தியவன்…

“எதுக்குடா அழுகற குட்டிம்மா.. “

“நான் உங்களை எப்படி பார்க்க வந்தேன்.. நீங்க சேர்மன் சொல்லறிங்க..”

“பின்னே.. சேர்மன் இல்லையா…” என இழுக்க..

“எனக்கு சேர்மன் மட்டும் தானா..” கொஞ்சலாக..

“நோ.. சம்திங் ஸ்பெஷல் பார் யூ..”

அவன் சொல்லிய சந்தோஷத்தில்.. அவனே எதிர்பாராத நேரம் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தாள்.

“தப்பு… தப்பு.. முத்தம் கொடுத்த இடம் தப்பு… இதோ இங்க கொடுக்கனும்” தனது உதடுகளை தட்டி சொல்ல…

“ம்ம்ம் கொடு… கொடு… இங்க கொடு..” என்றான் உல்லாசமாக…

“ம்கூம் மாட்டேன்.. போங்க..”

“கொடுக்காம இங்க இருந்து உங்களை அனுப்பமாட்டேன்.. வாங்க..” என அவளை போலவே பேச…

தேவர்ஷி கெஞ்சுதலான பார்வை பார்க்க… அனிவர்த் பிடிவாதமாக நிற்க… வேறு வழியில்லை என நினைத்து கதவை பார்த்தாள்.

“என் அனுமதி இல்லாம என் ரூம்கு வர துணிச்சல் உனக்கு மட்டும் தான் இருக்கு..” என சிரிக்க…

அவனின் நெஞ்சில் செல்லமாக குத்த.. அவள் கையை பிடித்து தடவி..

“ஏய் இப்படியே நேரத்தை கடத்தி சீட்டிங் பண்ணலாம்னு நினைக்கறியா…”

எக்கி அவன் பின்னந்தலையில் கை கொடுத்து அவனை தன் உயரத்திற்கு குனிய வைக்க… அவளுக்கு சிரமம் எதுக்கென அவளை தன் உயரத்திற்கு தூக்கி பிடித்தான்.

அவன் தூக்கி பிடித்த இடம் பின்புறம் அவன் கைகள் அழுந்த…. அது வேறு அவஸ்தையாக இருக்க நெளிந்தாள். இவள் வேலைக்காக மாட்டா என நினைத்தவன் தானே அவள் இதழில் தன் இதழை கோர்த்தான். சில நிமிடங்களில் அவன் இதழ் அவளின் கழுத்து நரம்பை கவ்வி இழுக்க… கண்ணனின் மாயங்கள் எல்லாம் காதல் ராதையை பித்து கொள்ள.. அவனின் தோளிலேயே துவண்டு சாய்ந்தாள். துவண்டவளை தூக்கி கொண்டு அங்கிருந்த சோபாவிற்கு செல்ல எத்தனிக்க… அவனின் மொபைல் சிணுங்க… காதலில் கரைந்து… கனவில் மிதந்து.. காற்றில் பறந்த இருவருக்கும் மொபைலின் ஒலி தரை தட்டி நிற்க வைத்தது.

“ம்ப்ச்..”என காற்றில் கைகளை வீசி..கோபமாக மொபைலைப் பார்க்க… அவனின் ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிய… அதை பார்த்து கிளுக்கி சிரித்தாள்.

“ஏய் உன்னை..” கை நீட்டி அவளை எட்டி பிடிக்க போக… அடித்து ஓய்ந்திருந்த மொபைல் மீண்டும் ஒலி எழுப்ப… ஏமாற்றமாக அவளை பார்க்க..

“பை வர்தா..” என நிற்காமல் ஓடிவிட்டாள்.

தன் முகம் பார்த்து வர்தா என அழைக்க சொல்ல ஆசை கொண்டிருக்க… நிற்காமல் சொல்லி சென்றவளை ஏக்கமாக பார்த்தான்.

அனிவர்த்தும் காதலை சொல்லவில்லை.. தேவர்ஷியும் சொல்லவில்லை.. சொல்லாமலேயே இருவருக்கும் ஒரு புரிதல் வந்திருந்தது. அவளை பார்த்திருப்பதும்.. அவளோடு சின்ன சின்னசில்மிஷங்கள்… இரவில் போனில் மோகப்பேச்சும் முத்த சத்தமுமாக காதலை அரங்கேற்றி கொண்டிருந்தனர்.

ஒருநாள் ஆயாம்மா தேவர்ஷியிடம்…

“தேவா பாப்பா… எம் புருஷன் வாங்கற சம்பளத்தை பூராத்தியும் குடிச்சே அழிச்சிபுடறான். வூட்ல ஒரே கஷ்டமா இருக்கு.. பையனுக்கு இஸ்கூல் பீசு கட்டனும்.. ஏதாவது உதவி பண்ணு பாப்பா..” என சேலை தலைப்பால் கண்ணை கசக்கி வராத கண்ணீரை துடைக்க…

தேவர்ஷி் ‘அச்சோ பாவம்.. எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு…’ என மனம் இளகிவிட…

“பாவம் ஆயாம்மா நீங்க.. எவ்வளவு பணம் கட்டனும்..”

‘ஆஹா.. லூசு நம்பிடுச்சு லம்பா ஒரு தொகை பார்த்திடலாம்’ என கண்ணில் ஆசை மின்ன…

“பெரிய இஸ்கூலுல படிக்கறான் பாப்பா… இந்த கூட்டி துடைக்கற பொழப்பு என்னோடு போகட்டும்.. அவனாவது நல்லா பெரிய ஆபீசரா போகனும்னு என் கஷட்த்த மீறி படிக்க வைக்கறேன்.. முப்பதாயிரம் ரூவா.. பீசு கட்டமுடியல.. பள்ளிகூடத்துக்கு வரவேணானு பெரிய வாத்தியார் சொல்லிபுட்டாரு.. ஏதாச்சும் உதவி பண்ணு பாப்பா..” என வராத கண்ணீரை வரவைக்க.. சேலை தலைப்பில் கண்களை தேய்க்க.. உண்மை என நம்பிவிட்டாள் தேவர்ஷி.

அவ்வளவு தொகை பணமாக கையில் இல்லாதால் தனது வலது கைவிரலில் இருந்த ஒரு பவுன் மீன் மோதிரத்தை கழட்டி கொடுத்தாள்.

“ஐயோ பாப்பா இது எல்லாம் வேண்டாம்… பணமா இருந்தா கொடு… அதுவும் கடனா கொடு.. திருப்பி அடைச்சிடறேன்..”

“என்கிட்ட பணமா இல்ல ஆயாம்மா.. இதை வச்சுக்குங்க..திருப்பி எல்லாம் தர வேண்டாம்..” என கை பிடித்து அழுத்தி கொடுத்தாள்.

“ரொம்ப டேங்க்சு பாப்பா..” என கண்களில் ஆசை மின்ன.. வாங்கிவிட்டு வேகமாக சென்றுவிட்டது அந்தம்மா..

பார்த்திருந்த அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு… இவ்வளவு ஏமாளியா இருக்கறளா… பேசாம என் ரூம்லயே இவளுக்கு ஒரு கேபின் போட்டறளாமா..’ என யோசித்தான்.

தேவர்ஷியிடம் மோதிரத்தை வாங்கியதும் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் வேலையாக விற்று காசு பார்த்துவிட எண்ணி.. அனிவர்த் அறைக்கு வந்தது அந்த ஆயாம்மா..

ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்…” சொல்லுங்க.. ஆயாம்மா..”

“சார்… அரைநாளு லீவு வேணும்..”

“எதுக்கு..”

“ஒரே பேதியாக போவுது.. சார்… டாக்டர்கிட்ட போவுனும்…”

“ம்ம்ம்…அப்படியா…” புருவ சுளிப்புடன்…

“ஆமாம் சார்..ரெம்ப சோர்வா இருக்கு….குளுகோசு ஏத்தனும்..”

“அச்சச்சோ… பாவம்..”

அனிவர்த் பரிதாபப்பட்டு பேசுகிறான் என நினைத்து கொண்டு அதிகமாக அளந்து விட்டு கொண்டிருந்தது அந்தம்மா…

“குளுக்கோசு ஏத்த சொன்னா கைல துட்டு கூட இல்ல சாரு..”

“ம்கூம்..”என்றான் பார்வையை உயர்த்தி ஆச்சரியமாக…

‘என்னாதிது .. எப்பவும் எதுவும் கேட்காமல் பணம் தருவாரு.. இன்னைக்கு இப்படி கேட்கறாரு’ என பேந்த பேந்த முழித்தது.

ஆயாம்மாவின் திருட்டு முழியை பார்த்தவாறு இரண்டாயிரம் ரூபாய் தாளகளை ஐந்தை எடுத்து டேபிள் மேல் வைத்தான்.

கண்களில் ஆசை மின்ன.. அசட்டு சிரிப்பு சிரிக்க…

“பணம் வேணுமா..”

“ஆமாம் சார்.. டாக்டரு பீசு கொடுக்கனும்..”

“அப்ப ஓகே.. மோதிரத்தை கொடுத்திட்டு இந்த பணத்தை எடுத்துக்குங்க…”

“மோதிரமா… எந்த மோதிரம் சார்…எனக்கு எதும் தெரியாது..” என திடுக்கிட்டு தட்டு தடுமாறி பேசியது.

“ஒழுங்கா கொடுத்திட்டா ஒன்னும் பண்ணாம மன்னிச்சு விட்றுவேன்.. எல்லாம் கேமரால ரெக்காரட் ஆகியிருக்கு…இல்ல அப்படினா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்…” அனிவர்த் மிரட்டவும்…

போலீஸ் என்றதும் பயந்து போய் சேலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து டேபிள் மேல் வைத்தது.. ஒரு இரண்டாயிரம் தாளை மட்டும் எடுத்து கொடுத்து…

“இனி இந்த மாதிரி யார்கிட்டயாவது ஏதாவது வாங்கினிங்க… வேலையை விட்டு தூக்கிடுவேன்.. போலீஸ்லயும் சொல்லிடுவேன்”

“இல்ல.. சார்.. வாயே திறக்கமாட்டேன்..” என குனிந்து ஒரு கும்பிடு போட…

“லீவ் எல்லாம் கிடையாது.. போய் வேலையை பாருங்க..” என விரட்ட…

வந்தவரை இலாபம் என பணத்தை வாங்கி கொண்டு ஓடிவிட்டது..

மோதிரத்தை கைகளில் எடுத்துப் பார்த்தான். மீன் வடிவத்தில் கண் பகுதியில் ஒற்றை வெள்ளை கல் பதித்திருக்க..அழகாக இருந்தது.

15 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [22] சத்யாதித்தன்.. அந்தக் கல்லுமலையின் உச்சிக்கு ஏறி வந்ததும், தன்னிரு முழங்கால்களைப் பிடித்துக் கொண்டே, குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டே, தன்னவளை நாடிப் போனான்.  அவள் இல்லாத போது அவனில் உருவாகியிருந்த பதற்றம்..அவளைக் கண்டதும்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டும் அகல்வது போல இருக்க, இரவில் கானகம் தேடி அநாயசமாக வந்திருக்கும் மனைவியின் மீது.. பொல்லாத கோபம் எழுந்தது அவனுக்கு.  இருந்தாலும் அவனது கோபத்துக்கும் மேலாக அவன், அவள் மேல் வைத்திருந்த

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா) Read More »

என் மோகத் தீயே குளிராதே 22

அத்தியாயம் 22   ரோட்டின் இருபுறம் இருக்கும் மரத்தினையும் மண்வாசனையையும் முகர்ந்தபடி சென்று கொண்டிருந்தவளின் முன்னே கத்தியோடு ஒருவன் வந்து குதிக்க, துடிக்கும் இதயம் தொண்டை குழி வரை வந்து போனது.    “ரவுடி சார்.. ரவுடி சார்.. இப்ப எதுக்கு கத்தியோட வழி மறிக்குறீங்க? நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு நானெல்லாம் ஒர்த்தில்ல சார்.. என்னைய விட்டுடுங்களேன்..”   “பார்க்க பளபளன்னு பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்க.. காசில்லேங்குற.. ஒழுங்கா பர்சை எடுக்குறியா? இல்ல.. உன்

என் மோகத் தீயே குளிராதே 22 Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [21] அன்று மதியம், தான் ஏற்கனவே திட்டமிட்டது போல இந்தியா செல்ல நாடியவன், தன் லக்கேஜில்.. உடைகளை அடுக்கி வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.  அவனுடைய லக்கேஜ்.. யௌவனாவின் மஞ்சத்தில் , “ஆ”வென்று திறந்திருக்க, வார்ட்ரோப்பிலிருந்து அவனது உடைகளை எடுத்து வந்து.. லக்கேஜிக்குள் திணிப்பதும், மீண்டும் வார்ட்ரோப்பை நோக்கி நடைபயில்வதுமாக இருந்தான் சத்யன்.  இன்று மாலை அவன் இலங்கையை விட்டும் இந்தியா செல்லப் போகிறான். அதுவும் தனக்கென்று சொந்தமான ‘பீகாக் ஏர்லைன்ஸ்” விமானத்தில். 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா) Read More »

d4a03913-c6ff-4025-b45f-c98ff3d8e7bc

ஏகாந்த இரவில் வா தேவதா! – 20 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா [20]அடுத்த நாள் காலை. முந்தைய நாள் இரவு மனைவி.. பித்துப் பிடித்தவள் போல நடந்து கொண்டதில்… இன்னும் அவள் பால் ஊடலுற்றவனாக, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்து கொண்டிருந்தான் சத்யாதித்தன். தன் அன்புக் கணவனின் கோபத்தின் காரணம் இன்னதென்று அறியாமல்.. அவனை மலையிறக்குவதற்காக.. முன்பு போல் அவளை கண்களாலேயே காதல் செய்யும் அந்தப் பழைய சத்யாதித்தனை மீளவும் வரவழைப்பதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் யௌவனா. சத்யனோ.. இன்னும் சீற்றம்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 20 (விஷ்ணுப்ரியா) Read More »

A0B9BA23-E25E-4B7C-A37C-2EA931B9EC11

ஆடி அசைந்து வரும் தென்றல் – 14

14 -ஆடி அசைந்து வரும் தென்றல்

“ரெட்சில்லி.. ஓரங்குட்டான்… மூஞ்சிய பாரு உர்ருனு… கொஞ்சம் சிரிச்சா தான் என்ன..” என முணுமுணுத்தவள்.. வேலையை பாரக்கலாம் என சிஸ்டத்தை பார்க்க ஒன்றும் புரியலை…

“அடியேய்.. தேவா தலையும் புரியல.. வாலும் புரியல.. இப்ப என்ன பண்ண… முடிச்சிட்டு தான் போகனும் சொன்னாரே… ப்ச்ச.. விடு பார்த்துக்கலாம்… எவ்வளவோ பார்த்துட்டோம்… இவர சமாளிக்க முடியாதா…”

மீண்டும் கேம் விளையாட்டில் மூழ்கி போனாள். அனிவர்த் பார்த்து விட்டு பரவாயில்லை நாம ஸ்டிரிக்டா சொல்லவும் செய்யறா.. இனி இவகிட்ட இப்படி தான் நடந்துக்கனும் என தன்னையே மெச்சிக் கொண்டான். அவளை பற்றி சரியாக தெரியாமல்…

அலுவலகம் முடிய ஒருமணி நேரம் இருக்க… அனிவர்த்திற்கு ஒரு பிசினஸ் சர்க்கிள் பார்ட்டிக்கு செல்ல வேண்டியதாக இருந்ததால்.. தேவர்ஷி எந்த அளவுக்கு முடித்திருக்கிறாள் என பார்த்து விட்டு செல்லலாம் என அவள் கேபினுக்கு சென்றான். அவன் வந்தது கூட தெரியாமல் விளையாடி கொண்டு இருக்க… பார்த்தவனுக்கு கோபம்…

“வர்ஷி… என்ன பண்ணிட்டு இருக்க…”

திடீரென பின்னால் கேட்ட அவன் சத்ததில் பயந்து போய் அடித்து பிடித்து எழுந்தவள் தடுமாறி அவன் மேலேயே விழுகப் போக.. அவளை பிடித்து நிறுத்தியவன்…

“எப்ப பாரு.. எதிலும் விளையாட்டு… ஒரு இடத்தில் ஆடாம கொள்ளாம உன்னால நிக்க முடியாதா.. அவ்வளவு தூரம் சொல்லிட்டு போனேன்.. மறுபடியும் கேம் விளையாடிட்டு இருக்க… அறிவிருக்கா உனக்கு.. நம்ம ஒர்க்ல சின்சியரா இருக்கனும்… ஒரு டெடிகேசன் இருக்கா… உன் விளையாட்டுக்கு சேலரி தரமுடியுமா.. வாங்கற சேலரிக்கு ஒர்க் பண்ணனும்ங்கற எண்ணம் இல்லையா.. என்ன நினைச்சுகிட்டு இருக்க… ஒர்க் பண்ற எண்ணம் இருந்தா வா.. இல்லயா வரவே வராத… என்ன பண்ணுவியோ தெரியாது… இன்னைக்கு நான் கொடுத்த ஒர்க்க முடிச்சுகொடுத்துட்டு தான் போகனும்.. மைண்ட் இட்.. “ என மூச்சு விடாமல் கத்த..

உண்மையிலேயே சற்று பயந்து தான் போனாள் தேவர்ஷி. அவள் முகத்தை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் ஏறியது.

“எப்ப பாரு முகத்தை பாவம் போல வச்சுகிட்டு.. ஆளை ஏய்க்கறது… ஒழுங்கா வேலையை முடிச்சு கொடுத்திட்டு தான் போகனும் புரிஞ்சுதா…” என கத்தி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

கண்ளில் நீர் கோர்க்க… ‘எப்படி எல்லாம் பேசிட்டு போறான்.. ரெட்சில்லி.. பெரிய இவனாட்டம் என்னை திட்டிட்டு போறான்.. இன்னைக்கு வேலையை முடிச்சு கொடுத்துட்டு இவனை வச்சுக்கிறேன்’ என ரோசத்தோடு செய்தாள்.

அனிவர்த் வீட்டிற்கு சென்று ப்ரஷ்ஷாகி பார்ட்டிக்கு சென்றவன் கொஞ்ச நேரத்திலேயே தேவர்ஷியை மறந்து போனான். இரவு ஏழு மணி போல ஆபிஸ் செக்யூரிட்டி அனிவர்த்துக்கு போன் பண்ணி இன்னும் தேவர்ஷி கிளம்பலை என சொல்லவும்.. அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க.. அவள் எடுக்காமல் போக… உடனே ஆபிஸ்கு கிளம்பி போனான்.

இவன் போன போதும் அவள் வேலை செய்து கொண்டு இருந்தாள். பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

“டைம் என்னாகுது.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க…”

அவனுக்கு பதில் சொல்லாமல்.. அவனை கண்டு கொள்ளாமல்… அவள் வேலையில் கண்ணாக இருக்க..

இவளை என பல்லை கடித்தவன்.. “ஏய்… நான் சொல்றது காதுல விழுகல..” என அவள் கையை பிடித்து எழுப்ப.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“கிளம்பு முதல்ல..” என அவளது தோளை பிடித்து தள்ள.. அவன் கையை உதறிக் கொண்டு நகராமல் கைகளை கட்டிக் கொண்டு விரைப்பாக நின்றாள்.

“சொன்னா கேட்கமாட்ட..” என திட்டியவன்.. சிஸ்டத்தை சட்டவுன் பண்ண போகவும்…

“அச்சோ நான் இன்னும் சேவ் கொடுக்கல..” என பதற…

அவனே உட்கார்ந்து சேவ் கொடுக்கப் போக.. அவன் சொன்னது மட்டும் இல்லாமல்.. இதுவரை செய்யாமல் இருந்தவற்றையும் முடித்திருந்தாள்.அவன் மெச்சுதலாக பார்க்க… உதட்டை சுழித்து வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவன் சேவ் கொடுக்க.. “இன்னும் எரர் செக் பண்ணல..” எங்கோ பார்த்துக கொண்டு சொன்னாள்.

“எல்லாம் நாளைக்கு பண்ணிக்கலாம் கிளம்பு..” என்றான்.

அவள் தனது பேகை எடுத்துக் கொண்டு கிளம்பவும்.. எதுவும் பேசாமல் சிறு குழந்தையாக கோபித்து கொண்டு செல்ல.. அனிவர்த்துக்கோ அவளை அப்படி அனுப்ப மனம் கேட்கவில்லை.

“வர்ஷி..” மென்மையாக அழைக்க… அவள் நிற்காமல் செல்ல…

“வர்ஷிம்மா..”

“டேய்.. குட்டிம்மா..”

என பின்னால் உல்லாசமாக சிரித்து கொண்டே சென்றான். அவளோ நிற்காமல் நடக்க.. இரண்டு அடி வேகமாக சென்று அவள் கையை பிடித்து தன்புறம் திருப்பியவன்…

“பேசுடா.. கண்டுக்காம போற..” என சிரிப்புடன் கேட்க..

“போ.. ஒன்னும் வேணாம்.. என்ன திட்டிட்டல்ல.. உன் கூட பேசமாட்டேன்..” என முறுக்கிக் கொண்டு சென்றாள்.

பேசிக் கொண்டே வெளியே வந்துவிட்டார்கள். செக்யூரிட்டி இவர்களை வித்தியாசமாக் பார்க்க… அதை எல்லாம் பாரக்கும் நிலையில் இருவரும் இல்லை.

இவர்கள் வெளியே வந்த போது லேசாக மழை தூறிக் கொண்டு இருக்க… பார்க்கிங் ஏரியாவிற்கு வருவதற்குள் நன்றாக பெருமழையாக மாறியிருக்க…

தேவர்ஷி மழையில் நனைந்து கொண்டே.. வண்டியை எடுக்க…

அவளருகே வேகமாக சென்று..”வர்ஷி.. இந்த மழைல உன்னால போகமுடியாது.. வா நான் டிராப் பண்றேன்..”

எதுவும் பேசாமல் வண்டியை ஸடார்ட் பண்ண… வண்டி முன் வந்து நின்று…

“சொன்னா கேளுடா.. நைட் டைம் மழை வேற.. சேப் கிடையாது..” என அவன் சொல்லி கொண்டிருக்க…

அவனை தாண்டி வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

அனிவர்த் “திமிரு…அவ்வளவும் திமிரு.. சின்ன பொண்ணா இருக்காளேனு பார்த்தா.. ரொம்ப தான் துள்ளறா..” என வழி எங்கும் அவளை திட்டியவாறே வீடு வந்து சேர்ந்தான்.

அவர்களுக்குள் முதல் ஊடல்…

நேரம் செல்ல.. செல்ல.. அனிவர்த்தால் இருப்பு கொள்ள முடியவில்லை.

‘வீட்டிற்கு போயிருப்பளா.. வழில ஏதும் ப்ராப்ளம் ஆகியிருந்தா… இந்த காலத்துல டீவில நியூஸ் எவ்வளவோ பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வருதே… அவ பின்னாடியே அவ வீடு வரைக்கும் போயிருக்கனுமோ..’ என பயந்து போய் அவளுக்கு அழைக்க.. அவள் இவன் அழைப்பை ஏற்கவில்லை என வரவும்.. பயம் அதிகமாக… மணியை பார்த்தான் இந்நேரம் அவள் வீடு போயிருக்கனுமே.. மீண்டும் அழைக்க.. அவள் எடுக்கவில்லை.

அவள் வீட்டிற்காவது போய் பார்க்கலாமா என நினைத்தான். ஆனால் இராத்திரி நேரத்தில் வயசு பொண்ணை தேடி சென்றால் அவள் குடும்பத்தினர் எவரோ.. எப்படியோ.. வீண்பிரச்சினை வேண்டாம் என விட்டு விட… அவன் மனமோ அப்படி எல்லாம் விட முடியாது என அலையாக ஆர்பரிக்க..

வாட்சப்பில் ஒரு மெசேஜ்..

‘வர்ஷி.. வீட்டுக்கு போயிட்டியா…’

அவள் ஆன்லைனில் இல்லை எனவும் பதட்டம் கூடியது..

‘வர்ஷிம்மா.. ஆர் யூ ஓகே..’

‘குட்டிம்மா.. ஏதாவது சொல்லுடா..’

என வரிசையாக மெசேஜ் பறக்க… பதில் என்னவோ அவனுக்கு சாதகமாக இல்லை.. வருத்தமாக போனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ப்ளூ டிக் டக் டக்கென் வரிசையாக வர… விடலைபையனை போல..

“யாஹூ” என துள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

‘குட்டிம்மா.. வீட்டிக்கு போயிட்டயா..’

கோப ஸ்மைலி..

சிரித்துக் கொண்டே.. ‘கால் பண்ணவா..’

அரிவாள் பறந்து வந்தது.

அவளின் குறும்பு அவனையும் தொற்றிக் கொள்ள..

இவன் இதயம் அனுப்ப…

அவளோ நாக்க மடித்து விரலை நீட்டி மிரட்டும் விஜயகாந்த படம் அனுப்ப…

இப்படியே கொஞ்ச நேரம் இருவரும் விளையாட..

குட்நைட் பிக் போட்டுபோய் தூங்கு என அனிவர்த் விளையாட்டை முடித்து வைத்தான்.

ரொம்ப உற்சாகமாக அவன் மனம் இருக்க.. தூக்கம் வராமல் அவளை நினைத்துக் கொண்டே உறங்காமல் விழித்திருந்தான். நாளைக்கு வரட்டும் அவளை என்ன பண்றேன் பாரு.. அப்படியே பிச்சு திங்க்னும் என தலையணையை பிச்சு கொண்டு இருந்தான்.

அனிவர்த் மனம் கட்டுக்கடங்காத காளையாக துள்ள… தேவர்ஷிய பார்க்க என்னவோ காதல் சொல்லப் போகும் டீன்ஏஜ் பையன் போல பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான். ஒரு பத்து தடவையாவது கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டான்.லேசா விசில் அடித்தவாறே படிகளில் இறங்கி வந்தவனை கண்டு கங்கா ஆவென வாயை பிளந்து பார்த்தார்.

‘ம்ம் சரி தான் பையன் எங்கயோ வசமா சிக்கிட்டான் போல.’

“மாம்.. சீக்கீரம் டிபன் வைங்க…” டேபிளில் தாளம் போட்டவாறு உல்லாசமாக…

கங்கா தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..

“என்ன மாம்… எப்ப பாரு இட்லி சட்னி சாம்பாரு தானா..” களிப்புடன் சலித்துக் கொள்ள…

“தோசை சுடவா..”

“மாம்.. இட்லி தோசை எல்லாம் விட்டுட்டு புதுசா ஏதாவது டிரை பண்ணுங்க..”

“நான் புதுசா டிரை பண்றது இருக்கட்டும்… நீ எங்கயாவது லாக் ஆகிட்டயா.. ம்ம்ம்.. என்ன..”

“ச்சேச்ச. அப்படி எல்லாம் இல்லை.. “என அவசர அவசரமாக மறுத்தான்.

“இல்லயே டவுட்டா இருக்கே..”

அனிவர்த்தின் முகத்தை இந்தபுறம் அந்தபுறம் திருப்பி பார்த்தவர்..

“முள்ள கட்டி விட்ட மாதிரி இருக்கற மூஞ்சில பாலும் தேனும் வடியுதே… எந்த புள்ளகிட்டயாவது ப்ரபோஸ் பண்ணிட்டயா…”

“உங்களுக்கு வேற பேச்சே இல்லையா.. எப்ப பாரு லவ் கல்யாணம்.. விடுங்க ஆளை..”

என விட்டால் போதும் என பாதி உணவில் கிளம்பிவிட்டான்.

“ஏம்மா.. இப்படி பண்ற…பாரு அவன் சாப்பிடாம போயிட்டான் பாரு…” என சிதம்பரம் வருத்தப்பட..

“இந்த வீட்டுக்கு மருமகள் வரனும்னு நான்லாம் வாரத்தில் மூனுநாள் விரதம் இருக்கேன்.. அதை நினைச்சு ஒரு நாளாவது வருத்தப்பட்டு இருக்கறிங்களா…உங்களுக்கு உங்க மகன் ஒருவேளை சாப்பிடாம் போனது வருத்தமா இருக்கா… அவன் உங்க இரத்தம்.. நான் வேற இரத்தம் அப்படி தான..”

‘ஆமாம் கேட்டாலும் திட்டுவ.. கொஞ்சமாவது மகனுக்கு கல்யாணம் ஆகலையேனு கவலை இல்லையானு..’ சிதம்பரத்தின் மைண்ட் வாய்ஸ்..

“அவ்வளவு பாசமிருந்தா உங்க மகனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைங்க பார்க்கலாம்”

“அம்மா.. கங்காம்மா..நீயாச்சு.. உம்மகனாச்சு என்னை ஆளை விடு.. உங்க ஆட்டத்துக்கு நான் வரல..” என கை எடுத்து கும்பிட…

“அது… உங்களுக்கு என்ன முடியுமோ.. அத மட்டும் பாருங்க புரிஞ்சுதா.. போங்க வழக்கமாக பண்ற… நியூஸ் சேனல பாருங்க போங்க..”

சிதம்பரமும் விட்டால் போதும் என அமைதியாக போய் டீவியோடு ஐக்கியமாகிவிட்டார்.

“பயபுள்ள சிக்கமாட்டேங்கறானே… ஆனாலும் இன்னைக்கு என்னவோ ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுது.. ஒரு கோடு போட்டா போதும் அத பிடிச்சுகிட்டே ரோடே போட்டறனும்..” என தனக்கு தானே பேசிக் கொள்ள..

பார்த்திருந்த சிதம்பரம் ‘மகனுக்கு கல்யாணம் ஆகாத கவலைல பைத்தியம்கீது பிடிச்சுகிச்சா… ‘ என உற்றுப் பார்க்க..

“என்ன பார்க்கறிங்க..” கங்கா அதட்டல் போட…

“ஒன்னுமில்லம்மா..” என்றார் பவ்யமாக… நினைத்தை சொல்லமுடியுமா…

அனிவர்த் பரபரப்பாக ஆபிஸ் வந்தவன் தனது அறைக்கு வந்தவன் தேவர்ஷிய பார்க்க வசதியாக அவளின் அறையின் கேமராவை மட்டும் தன் மானிட்டரில் தெரியுமாறு வைத்துக் கொண்டு… நொடிக்கொரு முறை பாரத்திருந்தான்.

‘என்ன இன்னும் இவளை காணோம்..’ என தனது கைகடிகாரத்தை பார்க்க.. அது அலுவலகம் ஆரம்பிக்க இன்னும் நேரம் உள்ளது என சொல்லாமல் சொல்ல…. நெற்றியில் தட்டி சிரித்துக் கொண்டான்.

‘என்னடா.. அனிவர்த்… இப்படி ஆகிட்ட… குட்டி பிசாசு நல்லா நம்மள ஆட்டி வைக்கறா…’

நேரம் சென்று கொண்டிருக்க.. அனிவர்த்திற்கோ இருப்பு கொள்ளவில்லை. எல்லோரும் வந்து தங்கள் வேலையில் மூழ்கி ஆபிஸே பரபரப்பாக இருக்க… அனிவர்த எதிர்பார்த்தவளோ வரவில்லை. அவளை காணாமல் மனதின் உற்சாகம் எல்லாம் வடிந்து கொஞ்சம் டல்லடிக்க…

‘ஏன் இன்னும் இவளை காணோம்..’ என கொஞ்சம் கவலை எட்டி பார்த்தது.

‘இன்னைக்கு லீவா..’

‘போன் பண்ணி இன்பார்ம் பண்ணலாம்ல..’

‘ஒரு வேளை மெயில் பண்ணியிருக்காளோ..’ என மெயில் செக் பண்ண…

நினைத்து போல உடம்பு சரியில்லை என இரண்டு நாள் லீவு கேட்டு மெயில் அனுப்பி இருந்தாள். அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதே அனிவர்த்தை எதையும் யோசிக்க விடவில்லை. உடனே தேவர்ஷிக்கு அழைத்துவிட்டான்.தன்னிடம் வேலை பாரப்பவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் இப்படி தான் அழைத்திருக்கமோ.. என யோசிக்க எல்லாம் இல்லை.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 14 Read More »

என் மோகத் தீயே குளிராதே 21

அத்தியாயம் 21   “ஏன் என்னாச்சு? எதுக்கு எல்லோரும் ஒருமாதிரி நிற்குறீங்க?”   “அது ஒன்னுமில்ல மச்சான்.. நம்ம ஆட் சூட்டிங் அரேஜ் பண்ணிருந்தோம்ல..”   “ஆமா.. அந்த வேலையை விட்டுட்டு இங்க என்னடா பண்றீங்க?”   “மாடல்ஸ் வர்ற வழில சின்ன ஆக்ஸிடென்ட்..”   “சோ?”   “இப்ப நீ தான் மச்சான்.. நம்ம கம்பெனியை காப்பாத்தணும்..”   “இடியட் மாதிரி பேசாதீங்கடா.. வேற மாடல்ஸ் ராமையா அரேஞ்ச் பண்ணுவோம்..”   “நாங்களும் காலைல இருந்து

என் மோகத் தீயே குளிராதே 21 Read More »

759dbac65bca78457ba41212582adf60

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [18] மஞ்சத்தில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவன் தொடுகை அவளது ஆத்மா உள்ளூற ஓர் அருவெறுப்பைக் கொடுக்கலானது.  அவள் அருகே அமர்ந்திருப்பது… இருநூறு வருடங்களாக அவள் வன்மம் வைத்து காவு வாங்கக் காத்திருக்கும்.. அதே இராஜசிங்கன்!!  அவளுக்கென்றிருந்த ஒரே உறவான அவள் கணவனை, அவளிடம் இரு‌ந்து பிரித்து, கணவன் காட்டிய உன்னத அன்பில் விளைந்த முத்தான வாரிசையும் அழித்த.. அவளது பரம எதிரி இராஜசிங்கன்.  சத்யாதித்தன் வேறு.. அரசன், ‘ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனி’ன்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா) Read More »

9b472f10-c28b-4882-a3ad-19d5928eb98a

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்..                    வா தேவதா                        [16] தலைக்கு குளித்து விட்டு வந்து.. கையில்லாத வெறும் பெனியன் மற்றும் வேஷ்டியில், மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனின் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் யௌவனா.  இந்தியாவிலிருந்து.. திருமணமான ஒரே மாதத்தில், ‘கணவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டான்’ என்றழுது கொண்டு, ‘ஊடல் உற்றவளாக வந்து நின்ற

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா) Read More »

6DE7F38B-C6D1-437E-A571-B8E480E83C94

ஆடி அசைந்து வரும் தென்றல் – 13

13 – ஆடி அசைந்து வரும் தென்றல்

லிப்டிற்கும் அவளுக்குமான இடைவெளி பத்தடி தூரம் இருக்க…லிப்ட் மூடும் முன் அவனோடு இணைந்து கொள்ள துடிக்க… வேகமாக ஓடி சிறிய இடைவெளியில் தன்னை நுழைத்து கொள்ளும் வேகத்தில் சென்றவள்… கால்கள் வழுக்கி அனிவர்த் மேலேயே விழுந்தாள்.

அனிவர்த் போனை பார்த்து கொண்டிருந்தவன் தேவர்ஷியை கவனிக்கவில்லை. அவள் எதிர்பாராமல் விழுகவும் அவளோடு சேர்ந்து அனிவர்த்தும் அவளை அணைத்தவாறு விழுந்தான்.அவனே தேவர்ஷியை கண்டு திகைத்தவன்… பின்பு தாங்கள் இருக்கும் நிலை அறிந்து உல்லாசமாக அவளை நெருக்கத்தில் ரசிக்க… ருசிக்க… துடிக்க…

அனிவர்த் மேல் தேவர்ஷி இருக்க… காலையில் அவன் ரசித்த அழகெல்லாம் அவன் அருகே.. அவன் கையணைப்பில் இருக்க… சித்தம் கலங்கிய பித்தனாகி போனான்.

தேவர்ஷியோ விழுந்த பயத்தில் அனிவர்த்தின் சட்டையை இறுக பிடித்து… முகத்தை அவன் நெஞ்சினில் அழுந்த புதைத்து இருக்க..

“வர்ஷி.. குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னைப் பாரேன்..” என குழைந்தான்.

மெல்ல தலையை உயர்த்தி..அவனின் முகம் பாரக்க.. அவளின் செவ்வரி ஓடிய இதழ்கள் பயத்தில் நடுங்க.. அதன் நடுக்கத்தை நிறுத்தும் முயற்சியாக… இதழ்களை இழுத்து தன் வாயினுன் அதக்கி சுவைக்க… அவன் முரட்டு கைகளோ அவள் பின்னுடலில் சுகந்திரமாக மேலும் கீழும் தொட்டு தடவி அழுத்த… பஞ்சு தேகம் இன்னும் போதையை கூட்ட.. அவன் பிடி இறுகியது…

மையல் கொண்ட பெண்ணுக்கோ.. கந்தர்வனின் செயல்கள் காதலாக கட்டிப் போட… கட்டுண்டு கிடந்தாள்.

மேலும் முன்னேற துடித்த உணர்வுகளை கட்டுப்படுத்த … சடுதியில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்.. மென்மையாக தேவர்ஷியை தன்னில் இருந்து பிரித்தவன்… தானும் எழுந்து அமர்ந்தவன்.. அவளின் முகத்தை சங்கடத்துடன் பார்க்க.. அவளோ இனிப்பை பறிகொடுத்த குழந்தையாக வாடிப் போய் இருக்க… அவள் தோளில் கை போட்டு லேசாக அணைத்து..

“நீ இதெல்லாம் தாங்கமாட்ட டா…” என நெற்றியில் முத்தமிட்டு சொல்ல..

அவளோ லேசாக விசும்ப.. அவளை தட்டிகொடுத்து சமாதானம் செய்ய.. அவர்கள் செல்ல வேண்டிய தளமும் வந்திட…லிப்ட் திறப்பதற்குள் எழுந்து நின்று அவளையும் எழுப்பி.. விலகி இருந்த துப்பட்டாவை சரி செய்து…

“பை குட்டிம்மா..” என சொல்லி கடந்து நடந்துவிட்டான்.

அவன் விட்டு சென்ற இடத்திலேயே ஏதும் புரியாமல் மலங்க விழித்து நின்று கொண்டு இருந்தாள்.

‘ஏன் இப்படி விட்டுட்டு போயிட்டாங்க… ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு உறவு என்பது தப்பு தான் தெரியாமல் இல்லை… ஆனால் காதல் கொண்டவர்கள் அணைப்பதும் முத்தமிடுவதும் இன்று சாதாரணமாக நடப்பது தானே…’

‘எங்கே இவளை இன்னும் காணோம்..’ தனது காரில் இருந்தவாறு தேவர்ஷி வருவதற்காக பார்த்ததிருந்தான்.

‘சின்ன பொண்ணு மனசுல தேவையில்லாம ஆசையை வளர்க்கறமோ.. என்னோட தேவைக்கு அவளை யூஸ் பண்றமோ..’

வாடிய முகத்துடன் மெல்ல நடந்து வந்தாள். சுற்றுப்புறம் கவனிக்காமல் தன்போக்கில் வண்டியை எடுத்து கிளம்பி சென்றாள். அவள் கிளம்பிய பிறகே அனிவர்த்தும் கிளம்பினான்.

இன்றும் சோர்வாக வீடு வந்தவள் சோபாவில் உட்காரந்திருந்த கௌசல்யா மடியில் தலை வைத்து படுக்க…. மகளின் சோரந்த முகத்தை கண்டு வருத்தப்பட்டவர்…அவள் முடியை கோதிக் கொடுத்தவாறே..

“தேவாகுட்டி இன்னைக்கும் டயர்டா தெரியற… ரொம்ப வேலையா… இப்படி கஷ்டப்பட்டு வேலைக்குப் போகனுமா.. வீட்ல ஜாலியா இருடா.. போதும்…”

“ப்ச்ச்.. ஒன்னுமில்லம்மா.. பசிக்குது அதான்..”என்றிட…

“அட லூசுப்புள்ள.. வந்தவுடன் பசிக்குதுனு சொல்லறதுக்கு என்ன… இரு வரேன்..” அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு சென்றார்.

‘என்னாச்சு.. நல்லா தானே இருந்தாரு.. தீடீர்னு ஏன் அப்படி சொன்னாரு.. தாங்கமாட்டேனா… அப்படினா..எதை தாங்கமாட்டேன்… முத்தமிடுவது தப்பா… எனக்கு பிடிச்சிருந்துச்சே… அதை கூட வேண்டாம் என ஏன் சொல்லவேண்டும். ஒருவேளை இன்று கேன்டீனில் அவர்கள் சொன்னது போல இவருக்கு அல்ட்ரா மார்டனா…. எல்லாம் தெரிந்த டேக்இட் ஈஸி பெண்கள் தான் பிடிக்குமா… இவருடைய பேஷன்ஸ்கு நான் செட்டாக மாட்டேனோ… அதை தான் அப்படி சொன்னாரா..’ என மிகவும் யோசித்து தன்னை வருத்திக் கொண்டாள்.

“தேவாம்மா.. எழுந்திரு..” கையில் தட்டோடு வந்த கௌசல்யா தேவாவை அமர வைத்து.. தோசையை வெங்காய தொக்கோடு வைத்து தானே ஊட்டி விட.. அமைதியாக சாப்பிட்டாள். எப்போதும் வாய் ஓயாமல் பேசும் மகள் இன்று அமைதியாக இருக்கவும் தாயாக கௌசல்யாவிற்கு கவலை… பட்டாம்பூச்சி மாதிரி இருந்தவளை வேலைக்கு அனுப்பி இருக்ககூடாதோ..

சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து படுத்தவளுக்கு அனிவர்த் பற்றிய எண்ணமே… ஏதேதோ யோசித்தவள்… இறுதியில்…

‘எனக்கு அவரை பிடிச்சிருக்கு…. அவருக்கும் என்னை பிடிச்ச மாதிரி தான் இருக்கு.. பார்ப்போம் எவ்வளவு தூரம் தான் இந்த பிடித்தம் போகும் என… அதுவரை மனதை போட்டு ஒலட்ட வேண்டாம்’ என முடிவு எடுத்தவுடன் நிம்மதியாக உறக்கம் கொண்டாள்.

மனதில் ஒரு முடிவு எடுத்த பிறகு வாழ்க்கை முன்பை விட கொஞ்சம் உற்சாகமாக தான் சென்றது தேவர்ஷிக்கு… தினமும் எப்பவும் போல தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொள்வதிலோ… அனிவர்த்துக்கு குட்மார்னிங் சொல்வது போல அவனுக்கு காட்சி கொடுத்து… தானும் அவனை ரசிப்பதிலயோ எந்த மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.

அனிவர்த் பாடு தான் படு திண்டாட்டமாகி போனது. தினமும் இவளை பக்கத்தில் வைத்துக் கொண்டு.. பார்க்காது போல பார்த்திருக்க முடியவில்லை. அதிலும் அவள் சேட்டைகளே பார்த்துவிட்டால் அவனின் உடலும் மனதும் நிலை கொள்வதில்லை. இவளை வேண்டாம் என அனுப்பிவிட்டால் இந்த அவஸ்தை இருக்காது அல்லவா.. என்று கூட நினைத்தான். ஆனால் வேண்டாம் போ என சொல்ல தான் முடியவில்லை.

தேவர்ஷி அணிலோடு கூடிய நட்பை பார்த்து… தினமும் சாக்லேட் வைக்க.. அதுவும் பயம் இல்லாமல் இவள் கையில் இருந்து எடுத்து கொள்ளும் அளவிற்கு பழகிட.. அதனோடு அவள் விளையாடும் அழகை ரசிக்க என அவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இப்படியே இவர்களுக்குள் காதல் இழுபறியாக தான் இருந்தது.

அனிவர்த் அன்று ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தான். அவன் மிகவும் எதிர்பார்த்த டென்டர் சிறிய தொகை வித்தியாசத்தில் கை விட்டுப் போயிருக்க… கிடைத்திருந்தால் பெரும் பணத்தை இலாபமாக பார்த்திருக்கலாம். அதைவிட அவன் கம்பெனி வளர்ச்சி பாதையில் பல படிகள் முன்னேறியிருக்கும்.

அந்த டென்ஷனை கோபமாக ஆபிஸில் எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருந்தான். தேவர்ஷியின் டிரையினர் சுந்தர் அன்று வசமாக சிக்கி கொண்டான். அவன் வேலைக்கு நடுவே தேவர்ஷியையும் டிரைன் பண்ண வேண்டும். சுந்தர் சொல்லுவதை எல்லாம் அவள் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருக்க… அவளிடம் போராடியே பாதி நேரம் செல்ல… இவனின் வேலையும் தேங்கிவிட்டது.

“சொல்லுங்க சுந்தர்… ஏன் பெண்டிங்ல இருக்கு…”

“சார் அது வந்து…” என இழுக்க…

“இங்க பாருங்க.. எனக்கு கரெக்டான ரீசன் வேணும்.. சும்மா சாக்குபோக்கு சொல்லாதிங்க..” என கோபப்பட..

“சார்.. தேவர்ஷி ஒர்க் கான்ஷியஸ் கிடையாது. அவங்களுக்கு என்னால டிரைன் பண்ண முடியலை. அவங்க ஒர்க்கையும் நான் தான் பார்க்க வேண்டி இருக்கு.. நான் ஒரு டைம் உங்ககிட்ட சொன்னேன் தேவர்ஷிய பத்தி நீங்க தான் சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கலை…” என அனிவர்த்தையே குற்றம் சாட்டும் விதமாக பேச…

“இப்ப என்ன சொல்ல வரிங்க… தேவர்ஷியால தான் உங்க் ஒர்க்க முடிக்க முடியாம போச்சா.. “

“எஸ் சார்” என்றான் தெனாவட்டாக…

“ம்ம்.. அப்படியா.. உங்களுக்கு ஒரு நியூஜாயினிய ட்ரைன் பண்ற கெப்பாசிட்டி இருக்குனு நினைச்சு தானே இந்த போஸ்ட்ல உங்கள வச்சிருக்கேன்… இந்த போஸ்ட்க்கு நீங்க தகுதியில்லைனு நீங்களே சொல்லறிங்களா…”

சுந்தரோ பதறி போய்… “நோ சார்.. நோ சார்.. அப்படி எல்லாம் இல்லை..”

“என்கிட்ட பேசும் போது யோசிச்சு பேசனும் சுந்தர். இல்லனா இந்த ஆபிஸ்ல இன்னொரு இன்டர்வியூ நடத்த வேண்டியிருக்கும்”

“சாரி சார்..” தலையை குனிந்து பவ்யமாக சொல்ல…

“நீங்க உங்க ஒர்க் பார்க்காம அடுத்தவங்கள ப்ளேம் பண்ணாதிங்க.. ஓகே..”

“சாரி சார்… “

“அப்புறம் இனி தேவர்ஷிய நான் டிரைன் பண்ணிக்கிறேன். இனி நீங்க் உங்க ஒர்க்கை எந்த டிஸ்டபர்ன்சும் இல்லாம கன்டினியூ பண்ணுங்க..” என்றான் நக்கலாக.

சுந்தரோ பயந்து போய்.. “இல்ல சார்… நானே…” என பேசியவனை கைநீட்டி தடுத்தவன்…

“கோ டூ யுவர் சீட்..” என வெளியே போகுமாறு கை நீட்டி சொல்ல..

முகம சிறுத்துப் போய் சுந்தர் வெளியேறிட..

அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு என்ன பண்றதுனு தெரியல.. விளையாட்டுத்தனமாவே இருக்கா… கொஞ்சம ஸ்டிரிக்டா தான் ஹேண்டில் பண்ணனும்.. வரட்டும் இருக்கு இவளுக்கு இன்னைக்கு…’ என கோபமாகவே அவளை தனது அறைக்கு அழைத்தான்.

‘ம்க்கும்… நீ பண்ணிட்டாலும்..’ என மனசாட்சி காறி துப்ப.. அதை சட்டை செய்யாமல்…

அவனது அறைக்கு துள்ளலோடு வந்தாள். நேற்று அவன் முத்தமிட்ட தித்திப்பு மனதில் உழாவ.. இனம் விளங்கா உணர்வு என கொஞ்சம் மனம் தத்தளித்தது. அவனை காண மானாக துள்ளல் நடையோடு தான் வந்தாள்.

“குட்மார்னிங் சார்..”

அவளை பார்த்ததும் அனிவர்த்தின் கோபம் எல்லாம் இருக்கவா.. போகவா.. என்றது. மலர்ந்த முகத்துடன்… கண்கள் ஒளிர.. கால்கள் தரையில் பாவாமல்.. கைகளை கோர்த்துக் கொண்டு.. தலையை லேசாக சரித்து புன்னகையுடன் நின்றிருந்தவளை கோபமாக பேசகூட வரலை..

“உனக்கு கொடுத்த ப்ரோகரம் முடிச்சிட்டயா..” என கோபத்தை இழுத்து பிடித்தவாறு கேட்டான்.

“ஹீஹீ..எந்த ப்ரோகரம் “என அசடு வழிய…

“எதுனு உனக்கு தெரியாது.. உனக்கு எத்தனை கொடுத்தாங்க..”

ஒன்று என ஆட்காட்டி விரலை ஆட்டி காண்பித்தாள்.

“அப்புறம் எதுனு கேட்கற… முடிச்சிட்டயா இல்லையா..”

“அது வந்து அந்த சுந்தர் மெட்டல் மண்டையன்.. டவுட் கேட்டா கிளீயர் பண்ணவேமாட்டேங்கறான்..”

“ஒரு சீனியர இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா..”

“அவன் மட்டும் என்ன லூசு.. முட்டாள்னு திட்டுவானா..அதுவும் டிஸ்டிங்கசன்ல வந்த என்னை பார்த்து..”

“சரி விடு.. நான் சொல்லி தரேன் வா.. “ என அவள் கேபினுக்கு சென்று அவளை அருகில் இருத்தி அவள் சிஸ்டத்தில் பார்த்தால் ஒரு வேலையும் செய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அப்ப நான் பாரக்கும் போது என்ன செய்திருப்பாள். என்ன செய்தாள் என அதையும் கண்டுபிடித்தான். அத்தனை கேம்ஸ் டவுன்லோட் பண்ணி விளையாடி இருக்கிறாள்

தேவர்ஷியை அனிவர்த் முறைத்துப் பார்க்க…

‘ச்சே.. இப்படி சிக்கிக்கிட்டயே.. ஏதாவது சொல்லி சமாளிக்கனுமே… என்ன சொல்லலாம்.. அச்சோ அவசரத்துக்கு ஒன்னும் தோனமாட்டேங்குதே…’

“என்ன ரொம்ப யோசிக்கற.. என்ன சொல்லி சமாளிக்கறதுனா…”

“ஹீ..ஹீ.. அப்படி… எல்லாம்… இல்ல…”

“ரொம்ப வழியாத…”

சிலவற்றை சொல்லி.. “இதெல்லாம் முடிச்சிட்டு தான் நீ வீட்டுக்கு போகனும் புரியுதா..” என கண்டிப்பான குரலில்..

மற்றவர்களிடம் கோபத்தை காட்டியவனால் அவளிடம் காட்ட முடியாமல்.. அவளை திட்ட மனம் வராமல்.. சற்று கண்டிப்புடன் சொல்லி சென்றான்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 13 Read More »

error: Content is protected !!
Scroll to Top