ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 18

அத்தியாயம் 18   “ப்ச்.. இந்த ட்ரெஸ்.. ஜிப்.. ப்ச்.. போட முடியலையே!” என்றவாறே தனது நீள கௌனின் ஜிப்பை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் விளானி. தனது‌ தோழி அர்ச்சனாவிற்கு போனில் அழைத்தவள்,   “என்னடி ட்ரெஸ்‌ வாங்கிருக்க? ஜிப்பைக் கூட இழுத்து விட முடியலை.. அவ்வளவு டைட்டாக இருக்கு..” என்று கூற,   “சாயங்காலம் வாங்கும் போது, சைரஸ் கரெக்ட்டா தானே இருந்துச்சு.. அதுக்குள்ள எப்படி பத்தாம போகும்? உண்மைய சொல்லு.. எனக்கு தெரியாம ஏதாவது […]

என் மோகத் தீயே குளிராதே 18 Read More »

என் மோகத் தீயே குளிராதே 17

அத்தியாயம் 17   காலையில் எழுந்தவள், வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்ய, அவள் ஏதோ கவர் கிடைக்க, அதனை எடுத்து பார்த்தவளுக்கு கோர்ட்டில் இருந்து வந்திருப்பது புரிந்தது.    ‘என்னைய டிவொர்ஸ் பண்ண, கோர்ட் வரைக்கும் போயிட்டீங்களா? நீங்க இவ்வளவு தூரம் என்னைய வெறுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல..’ என்று மனதுக்குள் புலம்பியவள், அதனை எடுத்துக் கொண்டு, ஹரிஷான்தின் அறைக்குள் சென்றாள். அங்கே தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு, கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனின் முன்னால்

என் மோகத் தீயே குளிராதே 17 Read More »

C8F8AE51-A096-448F-8A1D-DD9906DFCFE0

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10

10 – ஆடி அசைந்து வரும் தென்றல்

“ஆல் தி பெஸ்ட் தேவாக்குட்டி” என வாழ்த்தி விட்டு.. “இன்டர்வியூ முடிஞ்சதும் பத்திரமா வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு போயிரு..” செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தான் .. தனது அலுவலகத்திற்கு கிளம்பினார்..

இண்டர்வியூ ஹாலில் உட்கார்ந்திருந்தவளுக்கு இதை எல்லாம் நினைக்க.. பக்குவமில்லா கோபம் அதிகமானது…

“வேலை கிடைச்சு சம்பளம் வாங்கியதும் போறோம் ரெண்டு பக்கட் பிரியாணி வாங்கறோம் அவங்க முன்னாடியே தின்னு வெறுப்பேத்துறோம்..” என கண்களை சுருக்கி… முகத்தை சுழித்தவாறே…விரல்களை மடக்கி குத்துசண்டை வீராங்கனை போல கைகளை உயர்த்தி பிரியாணி சபதம் வெறிகொண்டு எடுத்து முணு முணுக்க…

பக்கத்து இருக்கை பெண் அவளை பார்த்து பயந்து ஓடிப் போய் நான்கு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டது…

அப்போது தான் உள்ளே நுழைந்த அனிவர்த்தின் பார்வையில் இக்காட்சி விழ… பார்த்தும் ஒரு ரசனை தோன்ற… ஒரு லயிப்பு ஏற்பட… மெல்ல அவளை கடந்து சென்றான். அனிவர்த் வந்ததும் இண்டர்வியூ ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொருவராக உள்ளே வெளியே போய் வர, தேவர்ஷி ‘கடவுளே… இந்த வேலை கிடைச்சிடனும்.. இல்லைனா ஒவ்வொரு தடவையும் அவங்க முன்னால போய் நிக்கனும்… அந்த மாதிரி வராம காப்பாத்துங்க..’ என வேண்டி கொண்டு இருந்தாள். தேவர்ஷியும் அழைக்கப்பட… உணர்வுகளின் குவியலில் சிக்கிக்கிடந்தவள் நடுங்கிய படியே அனிவர்த் அறைக்குள் சென்றாள்.

சுந்தரனை பார்த்ததும் ஆ என வாய் பிளந்து நின்றாள்… எல்லாம் மாறிபோச்சு ..

அவள் எதிர்பார்த்து வந்தது படிப்பாளி.. அறிவாளி என காட்டிக் கொள்ளும் ஒரு சோடாபுட்டியாவோ… இல்லை ஒரு வழுக்கை மண்டையனோ…

இப்படி ஹாலிவுட் ஸ்டார் மாதிரி இருக்கானே!… ஆள அசரடிக்கறானே.. இவன் மேட் இன் இண்டியாவா.. இல்ல பாரின் மேடா… இல்லல்ல… கொஞ்சம் இந்திய சாயல் இருக்கே… ஒருவேளை இவன் இண்டியன் பாரின் கொலாப்ரேஷனா இருப்பானோ…. என்னா கலரு.. என்னா ஸ்டைலு… பிரம்மன் இவனை மன்மதனுக்கு போட்டியா படைச்சிட்டாரு போல… வேலைன்னு செஞ்சா இவன்கிட்டதான் செய்யனும்.. மனம் விளம்பர வசனம் பேச, இவனை சைட் அடிச்சுகிட்டே அசால்டா வேலை செஞ்சிடலாம்… என அவனை பராபட்சம் பாராமல் கதவருகே நின்று கொண்டு சைட் அடித்தாள்.

அனிவர்த்துக்கோ அவளைப் பார்க்க.. பார்க்க.. ஒரு சுவராஸ்யம் கூடியது. ஏற்கனவே இவளின் சேட்டையை பார்த்தவனாயிற்றே… இவனும் அவள் கண்கள் காட்டிய ஜாலங்களை ரசித்து கொண்டிருந்தான். அவனைப பாரத்ததும் அந்த நயனங்கள் ஆடிய நர்த்தனங்கள் அவனை ஈர்த்தது. அனிவர்த்தும் தன்னை மறந்து தான் லயிப்போடு மூழ்கியிருந்தான்.

சில பல நிமிடங்கள் இந்நிலை நீடித்ததோ… முதலில் அனிவர்த் தன்னிலையில் இருந்து மீட்டு் கொண்டவன்..

“மிஸ் தேவர்ஷி… கம் அண்ட் சிட்..” என்றான்.

அவனின் குரலில் தான் தன்னை மறந்து அவனை சைட் அடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து… தன் தலையில் லேசாக தட்டி..
‘ஐயோ இப்படியா சைட் அடிப்ப.. பக்கி.. இத மட்டும் அந்த கிழவனார் பார்த்திருந்தா கன்பார்மா உனக்கு ஹவுஸ அரெஸ்ட் தான்டி தேவா..’

“மிஸ் தேவர்ஷி.. ஆர் யூ ஓகே…”

“ஹி ஹி..” என அசட்டு சிரிப்புடன் வந்து உட்கார்ந்தாள்.

அவள் உட்காரந்ததும் அனிவர்த் ஸ்டைலாக கை நீட்ட.. என்ன என புரியாமல் முழிக்க.. அவள் முழுதாக தெளியாததால் ஒன்றும் புரியவில்லை..

அவனை பார்த்ததிலேயே கொஞ்சம் கிறுகிறுப்பு ஏறியிருக்க.. இப்படி ஒரு இடத்தில் வேலைக்காக வருவது இது தான் முதல் தடவை என்பதால் என்ன எப்படி என ஒன்றும் தெரியாமல்.. அவன் நீட்டிய கைக்குள் தன் கையை வைத்தாள்…

அனிவர்த் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான். கிடைத்த வாய்ப்பை விடாமல் அவளின் கையை தன் கைக்குள் பொதிந்து .. ஆழ கண்ணோடு கண் நோக்க… அதில் தேவர்ஷி உடல் சிலிர்க்க.. தன் இன்னொரு கையை அனிவர்த் நீட்ட.. மான் விழி மருண்டு உருவிக் கொண்டவள் சித்தம் பிழன்று .. மிரள..

“பைல்.. பைல்..” உதட்டோரம் சுழிப்பு சிரிப்புடன் கந்தர்வன் எடுத்து கொடுக்க..

‘அச்சோ! தேவா! மானத்த வாங்கறியே..’ என தன்னை திட்டியவாறே.. நுனி நாக்கு கடித்து பைலை நீட்டினாள்.

வாங்கி பார்த்தவன் டிஸ்டிங்க்சன் மாணவி என்று அது கட்டியம் கூற .. ம்ம்ம் அழகோடு அறிவும் இருக்கு ஆனால் அனுபவமில்லை … புரிந்து சில தொழில் முறை கேள்விகள் கேட்டவன்… அவள் பதிலில் திருப்தியாகி..

“ம்ம்.. ஓகே.. மெயில் வரும்..” என பைலை நீட்டினான். அவள் வாங்கி விட்டு.. கொஞ்சம் கூட பயமில்லாது அவனை முழுசா விழுங்கும் பார்வை ஒன்று பார்த்துட்டு வெளியேற..
அவள் ஒயில் பார்வையில் அனிவர்த்துக்கு சிரிப்பு வந்தது…

’ஆளப் பாரு.. சேட்டைய பாரு’ என…

அதற்கு பிறகு வந்திருந்த அத்தனை பேரையும் பார்த்து அனுப்பியவனுக்கு தேவர்ஷியே மனதில் நின்றாள்..

இளமை அழகு படிப்பு என்ன ட்ரைனிங் கொடுத்தால் போச்சு என்று ஏனோ அவன் மனம் தேவர்ஷிக்கே முன்னுரிமை கொடுத்தது.

மானேஜருக்கு அழைத்து தேவர்ஷிக்கு மெயில் அனுப்ப சொல்லியவன்.. அவளின் ரெஸ்யூமை எடுத்து அதிலிருந்த போட்டோவை தன் பெருவிரலால் தடவியவாறே பார்த்திருந்தான். ஏன் பார்கிறோம்… எதற்கு பார்க்கிறோம் என தெரியாமலே பார்த்திருந்தான்.

தேவர்ஷிக்கு ஒரு வாரத்தில் வேலையில் வந்து சேருமாறு மெயில் வந்திருக்க… சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரே ஆர்ப்பாட்டம் தான்..

நாங்களாம் யாராம்??!! என்று ஒரே அலப்பறை..

யார் காதையும் சும்மா விடவில்லை.. என் அருமை என்ன? பெருமை என்ன? அதிர்ஷ்டம் என்ன? இப்படி உயர்வு நவிற்சி அணியிலேயே சுய பெருமை பேசி பேசி ஆர்ப்பாட்டம்..

அவள் வாழ்நாளிலேயே இன்றே பொன் நாள் மகிழ்ச்சி கடலில் தத்தளிதாள்..

அறியாமைகளில் கிடைக்கும் மகிழ்ச்சி தெய்வீகம் ..

மாலை கம்பெனியில் இருந்த வந்த திருகுமரனிடம்..

“ப்பா.. நான் செலக்டாயிட்டேன் ப்பா…” குதியாட்டம்

“எனக்கு தெரியும்டா என் தேவாக்குட்டி அறிவுக்கு உடனே வேல கிடைச்சிடும்னு..”

“அது தான்பா… எனக்கும் டவுட்டா இருக்கு.. இவ அறிவுக்கு எப்படி வேல கொடுத்தாங்க..” என தேவர்ஷி தம்பி பிரவீன் கலாய்க்க…

அப்போது அங்கு வந்த திருக்குமரனின் தம்பி கண்ணனின் மகன் ராகுலும் பிரவீனோடு சேர்ந்து கொண்டு…

“அப்படி சொல்லுடா.. இவளுக்கு எல்லாம் வேல கொடுத்திருக்கானே அந்த கம்பெனியோட நிலமை இனி என்னாகுமோ?.. நினைச்சாலே ஐயோ பாவம்..”

“ப்பா பாருங்கப்பா.. இந்த தடியன்கள..” தகப்பனிடம் சலுகையாக சாய்ந்து கொண்டு புகார் கொடுக்க.

“டேய் சும்மா இருங்கடா… பாப்பாவையும் நம்பி ஒருத்தன் வேல கொடுத்திருக்கான்.. அத பாராட்டாம.. இப்படி கலாய்பீங்களா?..”திருகுமரனும் வெடிச்சிரிப்போடு அவர்களோடு இணைந்து கொள்ள..

“ப்பா.. நீங்களுமா.. போங்க.. உங்ககூட பேசமாட்டேன்..கா க்கா” தேவா ஊட

தன்னருகே அமர்ந்திருந்த மகளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

வேலைக்கு செல்வதற்குள் வீட்டில் உள்ளவர்களை ஒரு வழியாக்கினாள். புதிதாக நிறைய ஆடைகள் அதற்கேற்றாற் போல அஸஸரிஸ் வாங்கினாள்…

பார்லருக்கு சென்றாள். ஏற்கனவே இவளுக்கு என ஒரு வண்டி இருக்க… புதிதாக ஒன்று வேண்டும் என கேட்க… திருக்குமரன் மகளின் விருப்பத்திற்காக வாங்கி கொடுத்தார்.

பிரவீன் தான்…

”இவ வேலைக்கு போறதுக்குள் அப்பா சொத்தை காலிபண்ணிடுவாபோல..” என கிண்டல்அடிக்க.. அவனை துரத்தி துரத்தி அடித்தாள்.

முதல் நாள் தனது புது வண்டியில் ஆர்ப்பாட்ட்மாக அலுவலகத்துக்கு சென்று..
மானேஜரிடம் ரிப்போர்ட் செய்து என்ன… எப்படி வேலை என தெரிந்து கொண்டவள்… மானேஜர் சொன்னது போல் அனிவர்த்தை பார்க்க அவனது அறைக்கு வந்தாள்.

கதவை லேசாக தட்டி.. “மே ஐ கம் இன் சார்..” தேவர்ஷா அனுமதி கேட்க…

அனிவர்த்தும் அன்று அலுவலகத்துக்கு சற்று முன்னதாகவே வந்திருந்தான். ஆனால் அவன் இன்று தேவர்ஷி வருவது எல்லாம் நினைவில்லை. தேவர்ஷியையே மறந்திருந்தான். அவள் குறும்புகளால் ஒரு இரண்டு நாள் அவன் நினைவிலிருந்தாள். பிறகு மெல்ல.. மெல்ல.. மறந்தும் போனான்.

தனது அறைக்கு வெளியே இருந்த கேமரா மூலம் தன் முன் இருந்த திரையில் தெரிந்த அவளை பார்த்தவன் அப்போது தான் நினைவு வர உற்சாகமாக…

“எஸ்..” என்றான்.

உள்ளே வந்தவளை பார்த்து அசந்து போனான்… அன்று அவளது சேட்டைகளை ரசித்தானே.. அவளின் தோற்றத்தை அவ்வளாக கவனிக்கவில்லை. தலை முதல் பாதம் வரை பொறுமையாக ரசித்து பார்த்தான்.

பாலில் சில சொட்டு செஞ்சாந்தை கலந்தது போன்ற நிறம்..

‘ப்பா… பிங்கியா இருக்கா…’

அடர்த்தியான சுருள் சுருளான கேசம் அழகாக கிளிப் போட்டு அடக்கி வைத்திருக்க.. அப்படி இருந்தும் ஒன்றிரண்டு அடங்காமல் அவள் நெற்றியிலும் காதோரங்களிலும் புரள..

‘கேர்லி ஹேர்.. இவளை மாதிரியே.. அடங்காது போல..’

நீண்ட கண்கள்.. கூர்நாசி.. ரொம்பவே சின்ன உதடுகள்.. சற்று ஒல்லியான உடல்வாகு…சராசரியான உயரம்.. அவன் கண்களுக்கு குட்டி பொண்ணாக தெரிந்தாள்.

ப்ளஸ்டு கேர்ள் மாதிரி இருக்காளே.. கொஞ்சம் வித்தியாசமா ஹோம்லி லுக்ல நல்லா தான் இருக்கா… இந்த லுக் கூட அழகா தான் இருக்கு..

“குட்மார்னிங் சார்..”

“ம்ம் சொல்லுங்க தேவர்ஷி.. ஆர் யூ ஹாப்பி…”

“எஸ் சார்..”

“ஓகே.. ஒர்க்ல சின்சீயரா இருக்கனும்.. ஒர்க் பர்ஸ்ட்.. மற்றது எல்லாம் அப்புறம் தான். காட் இட்..” என்றான் அனிவர்த் கண்டிப்புடன்…

“ம்ம்ம் ஓகே சார்” என தலையை நன்றாக ஆட்டினாள்.

லேசாக சிரிப்பு வந்துவிட.. “போய் வேலையை பாருங்க..” என

அதற்கும் தலையை ஆட்டி விட்டு சென்றாள். சின்ன பொண்ணு என சொல்லி சிரித்தான்.

சின்ன பொண்ணு என்ற அவன் நினைத்தது சரி என்பது போலவே அவள் செய்த செயல்களும்.. சேட்டைகளும் இருந்தன. அவன் எந்த அளவுக்கு டென்ஷன் ஆனானோ.. அந்த அளவுக்கு ரசிக்கவும் செய்தான்.. தினமும் அவளை ஸ்கேன் செய்வதே அவன் வேலையாகி போனதை வசதியாய் மறந்தான்.. அந்த ஆறரை அடி ஆணழகன்

தினமும் காலையில் அனிவர்த்தை பார்த்து காலை வணக்கம் சொல்லவதை வழக்கமாக வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவன் அறைக்கு சிட்டுகுருவியாக துள்ளி கொண்டு வருபவள்.. உற்சாகமாக..

“குட்மார்னிங் சார்..” மலர்ச்சியுடன்.. கிள்ளையாக மொழிவாள்.

அவள் மலர்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ளும். முகத்தில் எப்போதும் மின்னல் கீற்றாக… பனித்துளி அளவு புன்னகை ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.அவள் பேசுகையில் அவளின் மீன் விழிகள் அவள் உதட்டசைவிற்கு சுதி சேர்க்கும்.

அனிவர்த் கண்களுக்கு தேவர்ஷி வித்தியாசமாக.. அவன் கண்ட பெண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு.. அவன் கவனத்தை ஈர்த்தாள். அவள் கேபினில் இருந்த கேமரா வழியாக அவளை கவனிக்க தொடங்கினான். ஒழுங்காக வேலை செய்கிறார்களா.. என எல்லோரையும் கவனிப்பது தான். இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேவர்ஷியை அவளின் சிறுபிள்ளைத்தனத்திற்காக கவனித்தான்.

சுழல் நாற்காலியில் லேசாக ஆடிக் கொண்டு தான் வேலை செய்வாள். ‘கால்கள் ஒரு இடத்தில் பாவாது போல..’ என மெல்லிசான சிரிப்போடு பார்த்திருந்தான்.

தேவர்ஷி எப்பவும் சுடி தான்.. நல்ல தரம் உயர்ந்த காட்டன் சுடி… மடிப்பு எடுத்தோ.. பின் குத்தியோ.. எல்லாம் துப்பட்டா இருக்காது. அலட்சியமாக அவள் தோளில் புரண்டு கொண்டு இருக்கும். அது சரிந்து வரும் போது அப்படியே நாசுக்காக தூக்கி போட்டுக் கொள்ளும் பாங்கு… அனிவர்த்தின் ரசனைக்கு இடமானது.

மதிய உணவை வீட்டில் இருந்தே கொண்டு வரும் தேவர்ஷி அங்கு அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஆயாம்மாவிற்கு பாதி உணவை கொடுத்து விட்டு உண்பதை கண்டவனுக்கு.. கோபம் கொள்ள செய்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10 Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா [12] சுமார் இற்றையிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்னர்.. இப்போதிருப்பதையும் விட வெகு அழகாக இருந்தது ‘கண்டி சமஸ்தானம்’.  நாடுபிடிக்க வந்த வெள்ளையனுக்கு நாட்டின் இதர பிரதேசங்களை விடவும் மத்தியிலுள்ள குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி பிடித்துப் போனதுக்கு காரணமே அதன் நிறைவான அழகே.  வானெங்கிலும் புகைமண்டலம் எழுந்து கிளம்பினாற் போன்று.. வெண்பஞ்சு மேகங்கள் பவனி வந்து கொண்டிருக்க, அற்றைக்கும் எற்றைக்கும் யௌவனம் குன்றாத நிலவும்.. தன் பால் வண்ண ஒளியை..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா) Read More »

என் மோகத் தீயே குளிராதே 16

அத்தியாயம் 16   “வாவ்.. எவ்ளோ பெரிய ஆஃபிஸ்?”   “நீ இங்கேயே இறங்கிக்கோ..”   “ஏன்.. ரோட்டுல இறங்க சொல்ற? ஆஃபிஸ்குள்ள போய் நிற்பாட்ட மாட்டியா?”   “நீ இப்ப இன்ட்ரமா தான் சேர்ந்திருக்க.. அதாவது இடைகால ஊழியர்.. உன்னோட எக்ஸம்காக வேலைக்கு சேர்ந்திருக்க புரியுதா?”   “சோ? வாட்? டெம்ப்ரவரியா வேலைக்கு சேர்ந்தா.. டெம்ப்ரவரியா நட்டாத்துல விட்டுட்டு போவியா?”   “என்னது நட்டாத்துலயா? என்ன லாங்குவேஜ் இது? நேத்து என்னன்னா ரீல்ஸ் போடுறேன்னு ஒட்டு

என் மோகத் தீயே குளிராதே 16 Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [10] மரம் வீழப் போன யௌவனாவும் சரி, அவளைக் காப்பாற்ற தன் இன்னுயிரை துச்சமாகத் துறந்து.. தன் உள்ளங்கவர்ந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வீரமாக செயற்பட்ட சத்யாதித்தனும் சரி.. அந்த அகோர நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்க,  அதன் தாக்கத்திலிருந்து மீளவே முடியாமல் நின்றிருந்தது என்னவோ வசுந்தரா தேவியம்மாளே தான்.  பெற்ற மனம் அல்லவா?  மகன்.. தன் இதயம் கவர்ந்த பெண்ணின் உயிர் காக்க.. இடையிட்ட கணம்.. அவன்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா!!  [7] அடுத்தநாள் காலை,  தன்னையொரு பிரேதாத்மா.. இருநூறு வருஷங்களாக நெஞ்சில் சுமந்திருந்த பழிவெறியுடன்.. உயிரைக் காவு கொள்ள வந்ததையும்,  தன் வம்சத்துக்கென்றே உரித்தான காவல் அடிமையின் ஆத்மா அவனைக் காத்ததையும்.. கூட அறியாமல்… இரவில் அவள் பற்றிய கற்பனைகளுடனேயே துயின்று எழுந்திருந்த இராஜகுல சத்யனுக்கு.. காலை நற்காலையாகவே அமைந்திருந்தது.  எப்போதும் இந்தியாவின் தலைநகரான தில்லியில்.. காலை புலர்ந்ததும்.. இயந்திரத்தனமாக எழுந்து.. வாகனங்களின் புகைக்கும் , தூசுதும்பட்டைகளுக்கும் மத்தியில்தன் அலுவலகம் செல்பவனுக்கு,  குறிஞ்சி

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா) Read More »

என் மோகத் தீயே குளிராதே 14&15

அத்தியாயம் 14   “என்ன ஹர்ஷா? நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல!”   “அங்கிள்?”   “அந்த பொண்ணு உங்களை நம்பி வந்துருக்கா.. எவ்வளவு படிச்சவரு நீங்க போய் இப்படி நடந்துகிட்டீங்களே? சரி.. ஒத்துக்குறேன்.. இளம் வயசு தப்பு பண்ணிட்டீங்க.. ஆனா, அதுக்கு அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு? அந்த பொண்ணையும் குழந்தையையும் ஒழுங்கா பார்த்துக்குங்க.. வயசு காலத்துல நாம பண்ற தப்புகளுக்கெல்லாம் நாடி நரம்பு தளர்ந்ததுக்கு அப்புறம் அனுபவிப்பீங்க.. சரி போனதெல்லாம் போகட்டும்..

என் மோகத் தீயே குளிராதே 14&15 Read More »

0A60A30C-A4AC-4148-B12C-B06DFD897C24

ஆடி அசைந்து வரும் தென்றல் – 9

9 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டு இருந்தான். அனிவர்த் பேச்சுக்கள் ஓரிரு வார்த்தையில் இருக்க.. ஷாஷிகா தான் வாய் ஓயாமல் பேசினாள். இளையாளின் பேச்சுக்களை காதில் வாங்கி மூளையில் பதிவு செய்ய… அவளின் முகம் காட்டும் நவரசங்களை… பரவசங்களை.. மனதில் பதிவு செய்ய.. தனியொரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்…

“ஷாஷி.. வா.. லேட்டாகிடுச்சு..”என்ற குரல் இவர்களின் உலகில் உத்தரவின்றி உள்நுழைய… அனிவர்த் மனம் சுணங்க.. கூப்பிட்ட தோழனை கண்டு ஷாஷிகா…

“இருடா.. டீனு.. வரேன்”என கையாட்டி சொன்னவள்.. அனிவர்த்திடம்…

“பை அங்கிள்…” என சொல்லி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்துவிட்டாள்.

அனிவர்த் உற்சாகம் வடிந்து.. சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். ஏதேதோ சிந்தனைகள்.. எத்தனை நாளைக்கு…. அடுத்த வீட்டு பிள்ளையிடம் தனக்கு ஏன் இப்படி ஒரு பிணைப்பு… ஷாஷிகாவை பார்க்கும் போது தன் நெஞ்சில் ஏதோ ஒன்று சுனையாக ஊற்றெடுக்கிறதே.. அது என்ன… இன்னும் குழப்பங்கள் அதிகரிக்க… அங்கிருந்து கிளம்பினான்.

இப்படியே சில நாட்கள் கடக்க… மனம் ஷாஷிகாவையே தேடியது.. சோர்வு…அழுத்தம்..எதற்கு இப்படி… என அனிவர்த் என ஒரு நிலையில் இல்லை.

ஷாஷிகாவை பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலை.. ஷாஷிகாவை தேடி அவள் வீட்டிற்கே சென்றான். முதலில் ஷாஷிகாவை பாரக்க அவள் வீட்டிற்கு செல்ல.. மிகவும் யோசித்தான். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டுக் குழந்தையை பார்க்க வேண்டும் என்றால் என்ன சொல்வார்கள்..அனுமதிப்பார்களா.. ஏகப்பட்ட தயக்கம்..

ஷாஷிகா சொன்ன டிதேர்ட்டி.. காலிங் பெல்லை அழுத்தி விட்டு.. படபடப்புடன் நின்றான்.

ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட… கதவின் உட்புறம் நின்றவளை கண்டு அனிவர்த்திற்கோ.. ஆச்சரியம்…

கதவை திறந்தவளுக்கோ கதவின் வெளிப்புறம் நின்றவனை கண்டு அதிர்ச்சி…

“வர்ஷி..”

“நீயா..”என்றான் ஆச்சரியமான குரலில்…

அவள் தேவர்ஷி..

மற்றவர்களுக்கு தேவா…

அனிவர்த்கோ வர்ஷி…

தேவர்ஷி…

தேவர்ஷி அனிவர்த்தை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சியாகி நின்றாள்.ஆனால் அனிவர்த்கோ அவளை பார்த்ததில் மனதில் இருந்த சோர்வு வெறுமை எல்லாம் போன இடம் தெரியவில்லை.உற்சாகம் குமிழிட…

“வர்ஷி..இது உன் வீடா… அப்போ ஷாஷிகா..”

“அம்மா..” என ஷாஷிகா வர…

தேவர்ஷி வாசலை அடைத்துக் கொண்டு நின்றதால்.. அனிவர்த்தும் ஷாஷிகாவும் ஒருவரை ஒருவர் நேர் கோட்டில் பார்த்து் கொள்ளவில்லை. இருந்த போதும் ஷாஷிகாவின் குரலைக் கொண்டே இனம்கண்டு கொண்டவன்…

“ஷாஷிகா உன் பொண்ணா..”

“உன் ஹஸ்பென்ட் பேர் என்ன…”

“என்ன செய்யறார்..”

அவன் கேள்வியாக கேட்க.. ஏதும் பேசாமல் அவனையே பாரத்திருந்தாள். அதற்குள் அனிவர்த்தின் குரல் கேட்டு தேவர்ஷியின் பின்னிருந்து முன் வந்த ஷாஷிகா…

“அங்கிள்..”

“ஹாய் ஷாஷி..”என அனிவர்த் கை அசைக்க..

இதை அதிர்ந்து போய் பார்த்த தேவர்ஷி ஒரிரு நொடிகளில் தன்னை சுதாரித்து கொண்டாள்.

“ஷாஷி.. உள்ள போ..”என்றாள் உத்தரவாக…

இளையாளோ முகம் கூம்பி போய்.. தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அனிவர்த்க்கும் அடிப்பட்ட உணர்வு.. அதிலும் ஷாஷிகாவின் வாட்டத்தை
பார்த்து வருத்தமாகி போனது.

“ஏன் பாப்பாவை திட்டற… பாவம் முகமே வாடி போச்சு..”

அவனின் பேச்சை சட்டை செய்யாமல்…

“என்ன வேணும்… எதுக்கு வந்திங்க..” என்றாள் எரிச்சலாக..

“நானும் ஷாஷிகாவும் ப்ரண்ட்ஸ்.. ஷாஷிகாவை பார்க்க வந்தேன்..”

அவனை தீர்க்கமான பார்வை பார்க்க… அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. அதை அனிவர்த்தால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பார்வை அவனிடம் என்னவோ சொல்லியது. அது மட்டும் அவனுக்கு புரிந்தது.

“ஷாஷிகாவிடம் பேச முடியுமா…”

“அவளுக்கு உங்க ப்ரண்ட்ஷிப் தேவையில்லை. இனி அவளை பார்க்கவோ பழகவோ.. செய்யாதிங்க..”

“ஏன்..” என்றான் ஒற்றை சொல்லாக..

“அது அவளுக்கு நல்லதில்ல.. இனி இங்க வராதிங்க..” கோபத்துடன்…

“கிளம்புங்க..”என சொல்லி விட்டு.. அவன் கிளம்பும் முன் கதவை அடைத்து விட்டு சென்றுவிட்டாள். முகத்தில் அடித்தாற் போல.. முகம் சுருங்கி.. அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இரவு தனது அறையில் தூக்கம் வராமல் பால்கனியில் அமர்ந்திருந்தான் அனிவர்த். அவன் எண்ணம் முழுவதும் தேவர்ஷியே… அவளை பார்த்ததில் இருந்து எந்த உணர்வுகள் மறுத்துப் போய் இருந்ததோ… அவை எல்லாம் எழுந்து நின்று பேயாட்டம் போட்டது..

அவனின் எண்ணம் போக்கும்… உணர்வுகளும் அவனை நினைத்து அவனுக்கே அசிங்கமாக இருந்தது. அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி எல்லாம் நினைக்காதடா.. என அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான். இருந்தாலும் அடங்க மறுத்தது அவன் உணர்வுகள்.

அவளின் காதலில் மூழ்கி.. மோகத்தில் முத்து குளித்த காலங்கள் எண்ண அலையாக எழுந்து அவனை இம்சித்து கொண்டிருந்தது. தேவர்ஷியின் காதலை நிராகரித்தவனோ.. இப்போது நிராகரிப்பின் வழியை உணர்ந்தான்.

தூக்கம் வராமல் அவனுள் தாபத்தின் தவிப்பு.. தாபத்திற்கு தூபம் போட்டது அவளோடு இருந்த உள்ளி கால நினைவுகள்…

இரண்டு கைகளையும் மடித்து கோர்த்து தலைக்கு அடியில் அணைவாக கொடுத்து மல்லாந்து படுத்து… அவளின் நினைவுகளில் சுகமாக மூழ்கி போனான்.

ஐந்துவருடங்களுக்கு முன்… தேவர்ஷி அனிவர்த் அலுவலகம் வந்த முதல் நாள்…. இப்போதும் காட்சி பிழையின்றி தெளிவாக மனதில் தோன்றியது.

அந்தளவு அவன் நினைவடுக்குகளில் பதிந்துவிட்டாள் என்பதை இப்போதாவது உணர்வானா….

சி. கே டிரேடர்ஸ் வழக்கத்திற்கு மாறாக சற்று பரபரப்பாக இருந்தது. அதன் சுறுசுறுப்புக்கு இணையா தேவர்ஷியும் படபடப்புடன் அமர்ந்திருந்தாள்… நகம் கடிக்காதிருந்தது தான் குறை

படித்து முடித்து முதல் இன்டர்வியூ… தேறுவாளா? காலையிலேயே தாத்தாவும் பெரியப்பாவும் எதிர்மறையாக பேசி டென்ஷனை ஏகத்திற்கும் ஏத்திவிட்டு இருந்தார்கள்.

தங்கள் வீட்டு செல்வமகள் இன்னொரு இடத்தில் வேலைக்கு செல்வதா? என்பதே காரணம்

இன்று தனது அப்பாவோடு தாத்தாவை பார்க்க தன் பெரியப்பா வீட்டிற்கு சென்றாள். பார்க்க என்ன? பார்க்க!!… இன்டர்வியூக்கு செல்ல போவதை சொல்வதற்காக…

சுந்தரமூர்த்தி தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

“அப்பா.. “என திருகுமரன் அழைக்க…

பேப்பரில் இருந்து தலையை உயர்த்தியவர்…

“வாடா… குமரா.. என்ன காலங்கார்த்தால வந்திருக்க..”

அதற்குள் திருகுமரனின் குரல் கேட்டு விஸவநாதனும் வந்துவிட..

“வாப்பா.. குமரா..” வரவேற்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் மறந்தும் தன் தம்பியை அமர சொல்லவில்லை. சொல்லாமல் உட்காரமாட்டார் திருகுமரன்.

“என்ன விசயம்” விஸ்வநாதன்

திருகுமரன் தயக்கமே இல்லாமல் அமைதியாக…

“தேவா வேலைக்கு போக ஆசைபடறா.. இன்னைக்கு இன்டர்வியூ.. அதான் அப்பாகிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்”

வி்ஸ்வநாதன் தந்தையைப் பார்த்தார். சுந்தரமூர்த்தி கோபத்தில் சத்தமாக…

“என்ன நினைச்சிட்டு இருக்க குமரா… நம்ம பொண்ண வேலைக்கு அனுப்பறது இது எல்லாம என்ன புதுசா பண்ணிட்டு இருக்கற…”

“சும்மா இன்டர்வியூ தானே போகட்டும்ப்பா..”

தேவர்ஷி அமைதியாக இவர்கள் பேசுவதை பார்ததுக் கொண்டு நின்றிருந்தாள். அதற்காக அவள் அமைதியான பெண் எல்லாம் கிடையாது. குறும்பையே கும்பிடு போட வைப்பாள். இவர்களை துடுக்காக பேசினால் அதற்கும் தன் தந்தை தான் திட்டுவாங்குவார் என்பதால் அமைதியாக நின்றாள்.

ஆனால் மனதுக்குள் கவுன்டர் கொடுத்து கொண்டு இருந்தாள்.

“நம்மகிட்ட ஆயிரம் பேர் வேலை செய்யறாங்க.. என் பேத்தி இன்னொரு இடத்துல வேலை செய்யறதா..”

‘ம்க்கும்.. பெரிய ராஜ பரம்பரை.. அட போங்கப்பா…’

“ப்பா… நம்ம கம்பெனிய பாரக்கவே இன்னும் பத்து பேரு இருந்தாலும் பத்தாது.. அப்படியிருக்க வெளிய எதுக்கு போய் வேலை பார்க்கனும்.. நம்ம கம்பெனிக்கே வரட்டுமே..”என விஸ்வநாதன் கேட்க…

‘இவங்க புள்ள விட்டுருவானா..’

“இல்லைங்கண்ணா.. வெளியே நாலு இடத்துக்கு போய்ட்டு பார்த்துட்டு வரட்டும்.. ஒருவேளை வேலைகிடைச்சாலும் மாப்பிள்ளை தகையற வரை சும்மா போவட்டும் உலக அனுபவம் கிடைக்கும்ப்பா..”

தகப்பனும் தமையனும் முகத்தை தூக்கி வைத்து விளக்கத்தை ஏற்காதிருக்க..

“உங்க பேத்திக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க… நேரமாகுது.. தேவா தாத்தா கால்ல தொட்டு கும்பிடுடா…”

தந்தை சொன்னது போலவே தேவா செய்ய…சுந்தரமூர்த்தி..

“ம்ம்..

எந்த கம்பெனிக்கு இன்டர்வியூ போற?

தேவா தன் பைல் காட்ட..

“இவன் நிச்சயம் பிரஷர்ஸ் எடுக்க மாட்டான்.. இவ்ளோ நேரம் பேசியதே வேஸ்ட்..போ. போ..”

‘இதுக்கு பேரு ஆசிர்வாதமா..’
அப்பா உங்க குடும்ப அங்கத்தினர்களை மியூசியத்தில் தான் வைக்கனும்..

ஒன்றும் பேசாமல திருகுமரன் மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.

வீட்டிற்குள் வந்தவர்களைப் பார்த்து கௌசல்யா…

“என்னங்க சொன்னாங்க..” பதட்டத்துடன்…

“என்ன சொல்வாங்க.. இவங்க குடும்ப பெருமைய காப்பத்துனுமாம் பெரிய அம்பானி குடும்பம்…” தேவர்ஷி மிகுந்த எரிச்சலுடன்…

“விடுடா தேவா குட்டி அவங்க அப்படின்னு தெரிஞ்சது தான.. இதை எல்லாம் பேசி டென்ஷனான இண்டர்வியூ எப்படி அட்டென்ட் பண்ணுவ… கிளம்பி வா அப்பாவே டிராப் பண்றேன்.”

வர்ஷி உள்ளே செல்லவும் கௌசல்யா…

“ஏங்க என்ன சொன்னாங்க..”கவலையாக கேட்க…

“விடுமா… வழக்கமானது தான..”

“இன்னும் எத்தனை காலத்துக்குங்க.. நாம தான் ஒவ்வொன்னும் அவங்க சொல்றத கேட்டு சகிச்சு வாழனும்.. நம்ம புள்ளைகளுமா…” கண்கள் கலங்க..

“ப்ச் கௌசி.. தேவா வந்திடுவா.. கண்ணை துடை..” என தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினார்.

தேவா வரவும் அவசரமாக விலகினார் கௌசல்யா… இருந்தும் வர்ஷி கவனித்துவிட்டாள்.

“லவ் பேர்ட்ஸ்..லவ்பேர்ட்ஸ.. தகதிமிதா..” என கண்ணடித்து கைகளை சிறாக விரித்து அசைத்து பாடிக் கொண்டே வந்தாள். கௌசல்யாவிற்கு வந்த வெட்கத்தை மறைத்தவாறு…

“வாயாடி. வா வந்து சாமி கும்பிடு..” என பூஜை அறைக்கு அழைத்து சென்று கடவுள் படங்களின் முன்பு கண்மூடி நின்று..

“கடவுளே.. என் பொண்ண விருப்பபட்ட மாதிரி அவளுக்கு இந்த வேலை கிடைக்கனும்..” என அப்பாவியாக வேண்டி திருநீறு பூசிவிட்டார்.

மனைவியின் வேண்டுதலை அறிந்தவராக பார்த்துக் கொண்டு நின்றார் திருக்குமரன்.

அவருக்கும் அண்ணன் சொன்னது உண்மையா இருக்கும் என்று தான் தோணுச்சு.. பொண்ணு விளையாட்டுக்காரி.. தடுத்தால் கோபம் கொள்வாள்.அங்கு செலக்ட் செய்யலேன்னாலும் சும்மா போய்ட்டு வரட்டும் என்று பெருந்தன்மையாக இருந்தார்

ஆடி அசைந்து வரும் தென்றல் – 9 Read More »

A4767459-D0A2-44D1-8D74-E74794FCE038

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7

பார்த்த அனிவர்த் அவமானமாக உணர்ந்தான். இவனை விட நான் எந்த வித்தில் குறைந்துவிட்டேன். என் அழகு அந்தஸத்தில் கால்வாசி கூட இல்லை. என்னை நிராகரிப்பதா… என்ன தான் காதல் என்றாலும் தன்னை இப்படி ஒருத்தனுக்காக நிராகரிப்பதா..என கோபமே அதிகரித்தது.

கங்காவால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை. தன் மகனை சம்மதிக்க வைக்கப பட்டபாடு… எவ்வளவு போராடி இவ்வளவு தூரம் கொண்டு வந்தார். இனி மறுபடியும் முதலில் இருந்தா.. என ஆயாசமாக இருந்தது. இனி இதற்கு பிறகு மகனின் செயல் எப்படி இருக்குமோ.. மகனின் கல்யாணம் வாழ்நாள் கனவாகவே ஆகிவிடுமோ…நினைக்கையில் உண்மையாகவே நெஞ்சுவலி வருவது போல இருந்தது.

ரெங்கு “சாரே… நீங்க சொல்லுங்க.. என்ன செய்யனும்..”

என்ன தான் நேர்மையாக தொழில் செய்தாலும் ஒருவன் தொழிலில் வளர்ந்து வருகிறான் என்றால் அவன் வளர வளர எதிரிகளும் அதிகரிக்கவே செய்கிறார்கள். எதிரிகளை சரிகட்ட.. பணம்.. அரசியல் செல்வாக்கு..சில சமயம் இது போன்ற அடியாட்களின் உதவியும் தேவைப்படுகிறது.

ரெங்கு இந்த மாதிரியான ஆள் தான்.ஆனால் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆட்களை தூக்கி வந்து இரண்டு தட்டு தட்டி மிரட்டி அனுப்பிவிடுவான். அதற்கான கூலி வாங்கி கொள்வான். அவசியமின்றி வேற எந்த அடிதடிக்கும் செல்லமாட்டான். அப்படிபட்ட பழக்கம் தான் அனிவர்த்துக்கு ரெங்கு…

அவர்களை அனுப்பி விடு என கை அசைத்தான். அவர்களை அழைத்து வந்ததது போலவே.. அழைத்து சென்றுவிட்டான் ரெங்கு…

அசோக்கிடம்”இங்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு வா..”

“ப்பா.. போகலாம்….” என பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். வீடு வந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.

கங்கா அயர்ந்து போய் சோபாவில் பொத்தென அமர்ந்தார். கங்கா முகத்தை பார்த்ததும சிதம்பரம் பக்கத்தில் உட்கார்ந்து கங்காவின் கையை தட்டி கொடுத்து…

“கங்காம்மா… கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காத.. விடு பார்த்துக்கலாம்..”

“இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகள பார்க்க ஆசைப்பட்டேன்.. அது ஒரு தப்பா.. எனக்கு அந்த கொடுப்பினை இல்லையா… நான் வச்சிருக்கறது ஒரு பையன் அவனுக்கு கல்யாணம் பண்ண எவ்வளவு போராட வேண்டி இருக்கு.. இனி இவன்கிட்ட இதைப் பத்தி பேசவே முடியாதே.. மறுபடியும் இவன் பார்ட்டி..பொண்ணுங்கனு ஆரம்ப்பிச்சிடுவானே.. எனக்கு நினைச்சாலே நெஞ்சுவலிக்கற மாதிரி இருக்கு..” என சொன்னவர் அழுக ஆரம்பித்து விட..

சிதம்பரம் தனது தோளில் சாய்த்து தட்டி கொடுக்க… கங்கா அழுகை நின்றதே தவிர.. மனம் நிலை கொள்ளவில்லை.

அனிவர்த் தனது அறையில் புலியாக உறுமிக் கொண்டு இருந்தான். ஒரு நாள் உறவுக்கு வரும் பெண்களே அழகாக நளினமாக இருப்பார்கள். வாழ்நாள் உறவாக வரும் பெண் அழகாக இல்லை என்றாலும் பார்க்கும் அளவிற்காகவது ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம்.அதை விட அழகு படிப்பு அந்தஸது எதிலும் தனக்கு ஒரு சதவீதம் கூட பொருந்தாத் ஒருவனுக்காக தன்னை நிராகரித்ததை தான் தாங்கிக் கொள்ள முடிவில்லை அனிவர்த்தால்… எனக்கா இப்படி… இதை போல ஒரு அவமானம் எதுவும் இல்லை. எல்லாம் இவர்களால் தான்.. நான் தான் வேண்டாம்னு சொன்னனே… கேட்டாங்களா.. இனி கல்யாணம் கருமாதினு பேசட்டும் இருக்குது…என கோபம் முழுவதும் தன் தாயின் மேல் திரும்பியது.

அனிவர்த்துக்கு ஒன்று தெரியவில்லை… புரியவில்லை..எல்லா பெண்களும் அழகுக்கும் பணத்திற்கும் மயங்கமாட்டார்கள். மதிப்பு கொடுக்கமாட்டார்கள்..

அந்த பெண்ணின் தகப்பன் தான் வசதி வாய்ப்பிற்கு ஆசைப்பட்டாரே தவிர.. அந்த பெண் தன்னை காதலிப்பவனே வாழ்க்கை துணையாக வரவேண்டும் விருப்பம் கொண்டாள்.

அதன் பிறகு அனிவர்த் தனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஏற்கனவே பேச்சு குறைவு தான் இப்போது சுத்தமாக பேசுவதில்லை. எதுனாலும் சிதம்பரத்திடம் மட்டுமே அவனின் பேச்சு இருக்க… கங்காவிற்கு மகனின் வாழ்க்கையை நினைத்து மனதளவில் ரொம்ப காயப்பட்டு இருக்க.. அனிவர்த்தும் பேசாமல் இருக்க… பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.

அனிவர்த்திடமும் பெரிய மாற்றம்… ஆபிஸ் வீடு என தன் வட்டத்தை சுருக்கி கொண்டான். வீக் எண்ட் கிளப் பார்ட்டி டேட்டிங் என எல்லாத்தையும் விட்டுட்டான்.. விட்டுட்டான் என்ன.. அதில் எல்லாம் ஆர்வம் போய்விட்டது தொழிலை தவிர.. எதிலும் ஒரு பிடிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. வார விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே இருந்தான்.

மகனின் மாற்றம் சிதம்பரத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கங்காவிற்கோ மகனுக்கு வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமல் இப்படியே தனித்து நின்றுவிடுவானோ.. என பயந்தார்.

சிதம்பரம் தனது நம்பிக்கையை சொல்ல… கங்காவிற்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை.. அதை சிதம்பரத்திடம் சொல்லி அவர் நம்பிக்கையை குலைக்க விருப்பாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.

ஒருநாள் மாலை சிதம்பரமும் கங்காவும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.ஆபிஸில் இருந்து வந்த அனிவர்த தனது தந்தையிடம் இரண்டாயிரம் தாள்கள் அடங்கிய சில கட்டு பணத்தை கொடுத்தவன்…

“ப்பா.. இதுல ஒரு கோடி இருக்கு.. அந்த ப்ளாட்ட வித்துட்டேன்.. இந்தாங்க.. நீங்க பார்த்து எதுனாலும் செஞ்சுக்குங்க…” என சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.

ஒரு ஞாயிறு அன்று தனக்கு சில உடைகள் எடுக்க வேண்டும் என தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். தான் வழக்கமாக எடுக்கும் ப்ராண்டட் ஷோரும் சென்று தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு வெளியில் வந்தவன் ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தவுடன்.. அதனுள் நுழைந்தான். தனக்கு ஒரு கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம் ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.

“மாமா.. யூ ஆர் சீட்டிங் மீ..”

மழலையின் குரலை கேட்டதும் ஷாஷிகா என தெரிந்து கொண்டவன்.. தனக்கு எதிரில் இருந்த டேபிளில் பார்க்க… அங்கு ஷாஷிகா ஒரு இளைஞனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள்.

“நோ.. நோ.. பேபி..”

“மாமா..மா..ஆ..”

“ஓகே.. ஷாஷிகா.. ஓகே..”

“நீ எனக்கு பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொன்னல்ல.. இப்ப டூ ஐஸ்கிரீம் தான் வாங்கி தந்திருக்க.. இரு.. இரு.. உன்ன பாட்டிகிட்டயே மாட்டிவிடறேன்.. நீ தக்சாவ பார்த்து கண்ணடிச்சில்ல… அத பாட்டிகிட்ட சொல்லாம இருக்க.. பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொல்லி இப்ப டூ தான் வாங்கி கொடுக்கற…” என விரல் நீட்டி மிரட்டிக் கொண்டு இருந்தாள்.

ஷாஷிகாவின் உடல்மொழியும் வாய்மொழியும் அப்படி ஒரு அழகோவியமாக இருந்தது. அனிவர்த்தின் மனதை மணக்கச் செய்தது.

“ஷாஷி.. ரிமைனிங் ஐஸ்கிரீமை நெக்ஸ்ட் வீக் வாங்கி தரேன்.. கோல்ட் வந்திடும்… குட்டில்ல.. செல்லம்ல்ல.. பாட்டிகிட்ட சொல்லகூடாது. ப்ராமிஸா வாங்கி தரேன் ப்ளீஸ் “என கெஞ்ச…

“ஓக்கே.. ஓகே.. பட் சீட்டிங் பண்ணனும் நினைச்ச.. பாட்டிகிட்ட சொல்லிடுவேன்..” என மீண்டும் மிரட்டினாள்.

“சரி வா போகலாம்..” என அவன் ஷாஷிகாவை அழைத்து கொண்டு செல்ல.. எங்கே ஷாஷிகாவோடு பேச முடியாமல் போய் விடுமோ என… அனிவர்த் வேகமாக “ஷாஷிகா..”என அழைத்தான்.

திரும்பி பார்த்த ஷாஷிகா.. அனிவர்த்தை பார்த்ததும் முகம் எல்லாம் பூவாக மலர.. தன் மாமனின் கையை உதறிக் கொண்டு அனிவர்த்திடம் ஓடி வந்தாள்.

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..”

“ஐஸ்கிரீம் சாப்பிட வந்திங்களா..”

“ம்ம்ம்..”

அப்போது தான் தனக்கு வந்த தான் சாப்பிடாமல் இருந்த ஐஸ்கீரீமை காட்டி “ம்ம்ம் சாப்பிடறியா…” என்றான்.

கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம்… நல்லா குங்கும்ப்பூ பாதாம் பிஸ்தா பருப்பு பன்னீர்ரோஜா இதழ்கள் எல்லாம் மேலே அழகாக டாப்பிங்ஸ் செய்யப்பட்டு இருந்ததை பார்க்க ஷாஷிகா நாக்கை சுழட்டி சப்பு கொட்டினாள் குழந்தை.

அவள் செயலில் வசீகரிக்கப்பட்ட அனிவர்த் தன் உள்ளங்கையில் வைத்து நீட்ட… மறுப்பாக தலை அசைத்தாள் இளையாட்டி..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7 Read More »

error: Content is protected !!
Scroll to Top