உரசி மலர்த்தாதே மாறா !-3,4&5
மலர்தல்-3 அவன் மனமெல்லாம் அவள் நினைவுகள் ..ஒரு ஆழிப்பேரலையாய் எழுந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தன்னையும் அறியாமல் அவனது அறையின் சோபாவில் மயங்கிக் கிடக்கின்றாள் அவள். உரிமைப்பட்டவனாக இருந்தும், தள்ளி நின்று பார்க்க வேண்டிய பரிதவிப்பான நிலை அவனுக்கு. சர்க்கரை வியாதிக்காரன் மிட்டாய்க்கடையை பார்ப்பது போல. அவள் வனப்புக்களை..ஏக்கத்துடனும்,தாபத்துடனும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..அவளில் நின்றும் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான். தற்போதோ, அவன் பழைய அர்ஜூன் மனோஹராக மீண்டிருந்தான்.ஆம்,அவன் முகத்தில் இறுக்கமும், […]
