ATM Tamil Romantic Novels

6886A170-EE8B-40BF-B421-94AD0BC57D23

28 – ஆடி அசைந்து வரும் தென்றல்

28 ஆடி அசைந்து வரும் தென்றல்

மூன்று நாட்கள் கழித்து ரிப்போர்ட் வந்தது.. அதில் ஷாஷிகா தனது மகள் என இருக்க..தான் நினைத்தது போல ஷாஷிகா தன் மகள் தான்.. ஆனந்தத்தில கண்கள் கலங்கி விட்டது. ரிப்போர்ட் எடுத்து கொண்டு தேவர்ஷி வீடு வந்தான்.

முன் அறிவிப்பின்றி வந்து நின்ற அனிவர்த்தை ஷாஷிகாவை பார்க்க வந்திருப்பதாக நினைத்து..

“ஷாஷிகா ஸ்கூலுக்கு போயிருக்கா..” என்றார்.

“இல்லை.. உங்களை தான் பார்க்க வந்தேன்.” என உள்ளே வந்து உட்கார்ந்தவனை கேளவியாக பார்த்தார்..

அனிவர்த் திருகுமரனிடம் “ஷாஷிகா பெர்த் சர்டிபிகேட் பார்க்க முடியுமா..” என கேட்டான்.

திருகுமரன் “ அது எதுக்கு உங்களுக்கு..” என்க

அவரை நேருக்கு நேர் பார்த்து..” மாமா.. எடுத்திட்டு வாங்க..” என மாமாவில் ஓர் அழுத்தம் கொடுக்க..

அவருக்கும் ஏதோ புரிவது போல இருக்க… மாமா என்ற சொல் திருகுமரனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.

வேகமாக சென்று எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தார். ஒரு பரபரப்புடன் கைகள் நடுங்க…அதை வாங்கி பார்த்தான்.

அப்பா பெயர் வர்தா என்றிருந்தது. பார்த்தவுடன் அப்படி ஒரு ஆனந்தம்.. என்னவோ ஷாஷிகா இப்போ தான் பிறந்தது போல அப்படி ஒரு பரவசம்..

“மாமா.. மாமா.. வர்தா..” அவனுக்கு கோர்வையாக பேச்சு வராமல் தொண்டை அடைத்தது.

“வர்தா.. நான்” என தன் நெஞ்சில் கை வைத்து சொல்ல..

திருகுமரனுக்கும் ஒன்றும் பேச முடியவில்லை. தன் மகளை நினைத்து தானும் மனைவியும் கவலையில் தூங்காமல் விழுத்திருந்த இரவுகள் எத்தனை எத்தனை.. மகள் வாழ்க்கை சீராகிடாதா என எத்தனை வேண்டுதல்கள்..

இன்று அதற்கு எல்லாம் விடிவெள்ளியாக அனிவர்த் தெரிந்தான்..

“என்ன சொல்லறிங்க நீங்க..” என உண்மை தானா என்ற பரிதவிப்புடன் கேட்டார்.

“ஆமாம்.. நான் சொல்றது உண்மை தான் நம்புங்க..” என்றவன் டிஎன்.ஏ.டெஸ்ட் ரிப்போர்ட்டையும் காண்பித்தான்.

“ஆனால்.. நீங்க சண்டை போட்டு.. வேணாம்னு விட்டுட்டு வெளிநாடு போயிட்டதா.. தேவா சொன்னாளே..”

இதற்கு என்ன பதில் சொல்வான். அதுவும் ஒரு தந்தையிடம் உன் மகளை உறவுக்கு மட்டுமே அழைத்தேன் என எப்படி சொல்வான். தன் மேலும் தவறு இருக்கு தானே.. இப்ப உணர்ந்த காதலை அவளோடு வாழந்த கார்கால பொழுதில் உணரந்திருந்தால்.. எப்படி எல்லாம் இருந்திருக்கலாம்.. இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்..ஆனால் சொல்லி தானே ஆகவேண்டும். மனைவி மகள் என குடும்பமாக ஆக வேண்டுமே.. மனைவி என்றதும் தான் தாலி ஞாபகம் வந்தது. தாலி எப்படி அதை அவளிடம் தான் கேட்க வேண்டும்.. எப்படி எல்லாம் மறைத்து ஏமாற்றியிருக்கிறாள்..

பிள்ளை உண்டானதை சொல்லியிருந்தால் அப்பவே கல்யாணம் செய்திருக்கலாம் இப்போ பெரியவர்களிடம் எதை எப்படி சொல்லி விளக்கம் கொடுத்து சமாளிக்க வேண்டிய நிலையில் இப்படி கொண்டு வந்து நிறுத்திவிட்டாளே.. என தேவர்ஷி மேல் கோபம் கொண்டான்.

‘இருடி உன்னை நல்லா வச்சு செய்யறேன்.. என்னையவே பைத்தியகாரனாக்கிட்டல்ல… கொசு மாதிரி இருந்துகிட்டு என்ன என்ன வேலை செஞ்சு வச்சிருக்கா.. இரு நீயா என்னை தேடி வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்லடி..’

திருகுமரன் “மாப்பிள்ளை.. என்னாச்சு..”

“இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்துச்சு.. லவ் பண்ணினோம்.. கொஞ்சம் மிஸ்
அண்டர்ஸ்டேன்டிங் வந்து ஈகோல பிரிஞ்சிட்டோம்.. “ என இரத்தின சுருக்கமாக முடித்துக் கொள்ள..

பெண்ணை பெற்றவராக அவருக்கு இன்னும் விளக்கம் தேவைப்பட..

“நான் கேட்கறேனு தப்பா எடுத்துக்காதிங்க.. உங்க வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் நானும் கேள்வி பட்டு இருக்கேன்…அது தான் தேவாவுக்கும்… உங்களுக்கும்…. பிரச்சினையா..” என தயங்கி கேட்க..

மற்ற பெண்களை போல தான் என் பெண்ணிடமும் பழகினாயா.. என நியாயப்படி சட்டையை பிடித்து கேட்கவேண்டும்.. ஆனால் பெண்ணையும் பேத்தியையும் மனதில் கொண்டு பொறுமையை கையில் எடுத்துக் கொண்டார்.

அவரின் எண்ணத்தை புரிந்தவனாக வேகமாக மறுத்தான்…

“ச்சேச்ச.. அப்படி எல்லாம் இல்லை.. மற்ற பெண்ளை போல நான் வர்ஷியை நினைத்து பழகவில்லை.. அவளை மிகவும் பிடித்துப் போய் தான் பழகினேன்.. அவளின் சிறுபிள்ளைதனம்.. சேட்டைகள் இது எல்லாம். ஆரம்பத்தில் மிகப் பிடித்திருந்தது.. ஆனால் நாளடைவில் அதுவே இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருக்கலாம் என தோன்றியது.. அவள் தன் குடும்பத்திறகு கொடுத்த இம்பார்ட்ன்ஸ் எனக்கு கொடுக்கவில்லை.. இன்னொன்று எனக்கும் அவளுக்கும் ஸடேட்டஸ் ஒத்துவராது என நினைத்தேன் எங்களுக்குள் அதுவே சண்டை ஆகி பிரிஞ்சிட்டோம்”

“தேவா எங்க குடும்பத்தை பற்றிய விவரம் எதுவும் உங்களிடம் சொன்னதில்லையா…” என கேட்டார்.

“இல்லை… ஒன்றும் சொன்னது இல்லை.. ஏன் மாமா..”

“இல்லை.. சுந்தரமூர்த்தி அன் சன்ஸ் நிறுவனம் கேள்விபட்டிருக்கிங்களா..”

“ம்ம்.. தெரியும்.. ரொம்ப பெரிய ஸ்தாபனம்..”

“அந்த சுந்தரமூர்த்தியோட பேத்தி தான் தேவா..” என்றார் அமைதியாக…

அனிவர்த்தால் நம்பவே முடியவில்லை.. அந்தஸ்த்தில் தங்களை விட பல படிகள் உயர்ந்தவர்கள்.. மூன்று தலைமுறையாக பேர் சொல்லும் குடும்பம்.. அந்த குடும்பத்து பெண் தன்னிடம் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.. இதையும் தன்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… அந்த கடைசி நாள் நான் அந்தஸ்த்தை பற்றி பேசிய போது கூட ஒன்றும் சொல்லாமல் அமுக்கமாக இருந்துவிட்டாளே… எத்தனை என்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… இன்னும் தாலி அதற்கான விடை தெரிவில்லை.. இருடி அதையும் கண்டுபிடித்து விட்டு உன்னை பேசிக்கிறேன்..என தேவர்ஷியின் மீதான அனிவர்த்தின் கோபத்தின் அளவு எகிறி கொண்டிருந்தது.

அத்தனையும் இவள் செய்துவிட்டு.. என்னை ஏமாத்தி விட்டு.. நான் இவளை விட்டுட்டு போய்விட்டதாக சொல்லி என்னை வில்லனாக்கி வச்சிருக்கா.. நீயே என்கிட்ட வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்ல..என முடிவு செய்து உடனே செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.

திருகுமரனிடம் “மாமா.. ஏதோ இரண்டு பேருமே தப்பும் தவறுமா புரிஞ்சுகிட்டு.. பிரிஞ்சிட்டோம்.. வர்ஷி கர்ப்பமா இருக்கானு தெரிஞ்சிருந்தா.. நான் எப்படியாவது வர்ஷியை சமாதானம் பண்ணி பிரிஞ்சி போக விட்டு இருக்கமாட்டேன். உங்க குடும்பத்தை பற்றி சொல்லியிருந்தா.. நானே உங்ககிட்ட வந்து பேசி சேர்ந்து வாழ முயற்சி செய்திருப்பேன்.. எல்லாமே எங்கிட்ட இருந்து மறைச்சிட்டா.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சதில இருந்து என் பொண்ணோட ஆறு வருடங்களை நான் வாழ முடியவில்லையே என எவ்வளவு தவிப்பா இருக்கு தெரியுமா உங்களுக்கு.. “என கேட்கும் போதே கண்கள் கலங்கி விட..

திருகுமரனுக்கு நொடியில் மருமகன் உசந்து தான் போனான். தன் மகள் தான் தவறாக புரிந்து கொண்டு தப்பு செய்துவிட்டதாக நினைத்தார். மருமகனை சமாதனம் செய்யும் விதமாக..

“அவளுக்கு அப்போ அவ்வளவு விவரம் பத்தவில்லை மாப்பிள்ள.. அதான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பண்ணிட்டா.. விடுங்க நீங்க வருத்தப்படாதிங்க..” என்றவர்.. மேற்கொண்டு என்ன செய்லாம் என கேட்க..

தன் பெற்றவர்களை அனுப்புவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு சென்றவன் ஷோபாவில் உட்கார்ந்திருந்த கங்காவின் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டான்.

கங்கா என்னடா இது இவன் தீடீரென பாசப்பயிரை வளர்க்கறான்… என உஷாராகி அவன் கையை தட்டிவிட்டார்.

“கங்கா ப்யூட்டி.. பெத்த பையன் பாசமா தோளில் கை போட்டா இப்படியா தட்டிவிடறது.. இது நியாயமா இது தர்மமா..” என வீரவசனம் பேச…

“என்னால உனக்கு ஆக வேண்டியது என்னவோ.. அத முதல்ல சொல்லு..” என்றார் விறைப்பாக..

“எதுக்கு இப்படி இரண்டு சோல்டரையும் தூக்கிட்டு இருக்கறிங்க.. இறங்குங்க..” என இரண்டு தோள்களையும் இதமாக அழுத்திவிட்டவன்…

“இந்த அட்ரஸல உங்க மருமக இருக்கா.. ஒரு நல்ல நாள் பார்தது கூட்டிட்டு வந்திடுங்க..” என விசிட்டிங் கார்டை நீட்டினான்.

கங்கா சிதம்பரம் இருவரும் அதிர்ந்து போயினர். இவன் பணத்திற்காக சுற்றும் எதாவது ஒன்றை பிடித்துவிட்டானா.. மருமகள் வரமாட்டாளா கவலை பட்டவர்கள்.. இப்ப இந்த வீட்டிற்கு ஒரு மருமகள் வர போகிறாள் என சந்தோஷமும் பட முடியாமல் பயந்தனர்.

விசிட்டிங்கார்டை வாங்கி பார்த்த சிதம்பரம்.. “ இந்த வீட்டு பொண்ணா… நாம் போய் கேட்டா தருவாங்களா..” என சந்தேகத்துடன் கேட்டார்.

“எல்லாம் நடக்கும்.. நீங்க போய் பேசி கூட்டிட்டு வந்திடுங்க.. நான் இன்னைக்கு நைட் ஜெர்மன் போறேன். அங்க கம்பெனில எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வர ஒரு மாசம் ஆகும். நான் வரும் போது உங்க மருமக வீட்ல இருக்கனும்..” என்க…

“ஏதே.. கூட்டிட்டு வரதா.. டேய் அப்படி எல்லாம் கூட்டிட்டு வர முடியாது.. முறைப்படி கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வரனும்..”

“நீங்க நேர்ல போய் பாருங்க… உங்களுக்கே எல்லாம் புரியும்…” என சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

“என்னங்க… இவன் இப்படி குழப்பி விட்டுட்டு போறான்…”

“தெரியலையே… கங்கா போய் பார்ப்போம் விடு.”

“போனா தானே தெரியும்… என்ன வில்லங்கம் பண்ணி வச்சிருக்கானு… எப்படியோ நம்மள சிக்க வச்சுட்டு தர்ம அடி வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டான். அது மட்டும் நல்லா தெரியுது…” என வழக்கம் போல மகனால் புலம்பினார்.

தன் அன்னையிடம் சொல்லிவிட்டோம்… எப்படியும் தேவர்ஷியை கூட்டிக் கொண்டு வந்திடுவார் என்ற நம்பிக்கையில் அன்றிரேவ ஜெர்மன் பறந்துவிட்டான்.

அனிவர்த் நினைத்து எல்லாம் நடத்திடுமா..? கங்காவால் நடத்திட முடியுமா..? தேவர்ஷி நடக்கவிடுவாளா..?

28 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

b2eec4d2-f6fd-46fa-a29f-b09d7e4d44d8

எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [19]   விக்னேஷின் தெளிந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறங் கொள்ளத் தொடங்கியது.  தன்னை கண்ணாடி வழியாக குழம்பிய முகத்துடன் பார்க்கும் நண்பனின் மனைவியைப் பார்த்தவன்,  அழுந்த மூடிய இதழ்களைத் திறந்து சொன்னான்,  “நான் இதுநாள் வரை சொன்னதுலாம் தான் பொய்!!! .. இப்போ..இந்த நிமிஷம்..சொல்றது தான் உண்மை.. என் மச்சி த்தேவ் உயிரோட இல்ல.. உனக்கு ஆபரேஷன் நடக்குறது.. ஒரு நாள் முன்னாடியே அவன் போய் சேர்ந்துட்டான்..!இதோ இப்போ

எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா) Read More »

8E0BD04D-A14F-4C8B-9C5C-42F878291A93

27 – ஆடி அசைந்து வரும் தென்றல்

27 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அனிவர்த்திடம் பேசவிடாமல் தடுக்கவே தன்னை கிளப்பியுள்ளாள் என தெளிவாகிற்று.. ஆனால் ஏன்.. அவரை கண்டு தடுமாறுவதேனோ…

அவரின் கம்பெனி பேர் என்னவோ சொன்னாரே..சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமே.. என வெகு நேரம் யோசித்து கண்டுபிடித்தார்.. சி. கே டிரேடர்ஸ்.. ஆமாம் சி்.கேடிரேடர்ஸ. இது.. இது… தேவர்ஷி முன்பு வேலை செய்த கம்பெனி அல்லவா.. அங்கு சென்ற வந்த போது தானே.. காதல் குழந்தை என வந்து நின்றாள்.

ஒரு வேளை அந்த சமயத்தில் கூட வேலை செய்த யாரிடமாவது ஏமாந்து போயிருப்பாளா.. அனிவர்த்தை விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் அதை கொண்டு மகளி்ன் வாழ்க்கையை சீரமைக்க முடியுமா.. பேத்தி அந்த சின்னசிட்டின் தந்தை ஏக்கத்தை போக்கி விட முடியாதா.. என நினைத்தவர் போன் நம்பர் வாங்கி வைக்காது விட்டமோ என வருந்தியவர்…

கூகுளில் அனிவரத் பேர் கம்பேனி பேர் போட்டு அனிவர்த்தின் செல் நம்பரை எடுத்துக் கொண்டார். மாலையில் போன் பண்ணி அனுமதி வாங்கி கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என முடிவு செய்தார்..

இங்கோ அனிவர்த்திற்கு ஆபிஸில் வேலையில் கவனம் வைக்க முடியாமல் திண்டாடினான். அவனுள் பல யோசனைகள்…ஏனோ அவளின் கணவன் யார் என தெரிந்து கொள்ள வேண்டும் என துடித்தான். இன்னும் தன் தீண்டலில் மயங்குகிறாள் என்றால் தன் மீதான் காதல் அப்படியே தான் இருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. அப்படி இருக்கும் போது எப்படி இன்னொருவனை மணந்திருப்பாள்… ஷாஷிகா எப்படி..

தன்னை விட்டு பிரிந்த பிறகு தேவர்ஷி வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்தே ஆகவேண்டும் என மண்டையை குடைந்தது. ஏன் மனம் இப்படி அலை பாய்கிறது.. அப்படி என்ன ஸ்பெஷல் இவள் எனக்கு என நினைக்க.. ஸ்பெஷல் இல்லையா.. எத்தனை பெண்களை இப்படி நினைவுல் வைத்திருக்கிறாய்.. அவளோடு இருந்த கார்கால பொழுதுகளை மறக்காமல் அதை ஏன் மற்ற பெண்களிடம் தேடி அலைந்தாய் என மனம் கேட்க..

ஆமாம் அப்படி தானே இருக்கிறேன்.. அப்போ எனக்கு ஸ்பெஷல் தான் அவள்… அது தான் காதலா.. நான்அவளை காதலித்திருக்கிறேனா.. அதை உணராமல் தான் இப்படி எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறேனா.. அவள் காட்டிய காதலை காசு கொடுத்து தேடியிருக்கிறேனே முட்டாளாட்டம் என தலையில் அடித்துக் கொண்டான்.

இப்போ உணர்ந்து என்ன பண்ண… அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே.. என வருத்தப்பட்டான். அப்போது அவன் போன் சிணுங்கியது. புது எண்ணில் இருந்து அழைப்பு..

“ஹலோ.. மிஸ்டர் அனிவர்த்..”

“எஸ்.. நீங்க..”

“ஷாஷிகாவின் தாத்தா திருகுமரன்..”

“சொல்லுங்க சார்..” குரலில் ஒரு மரியாதை..

“நான் உங்களை மீட் பண்ணனுமே..”

“பண்ணலாம் சார்.. எனக்கும் உங்ககிட்ட பேசனும்..”

“ஓ.. பேசலாமே.. என்ன பேசனும்.. “என திருகுமரன் கேட்க..

“ஷாஷிகா பாதர் பற்றி…”

‘எனக்கு தான் என் மகள் வாழ்க்கைகாக தெரிந்து கொள்ள வேண்டும்.. இவர் எதற்காக கேட்கிறார்..’ என குழம்பினார். பாவம் அன்று அவருக்கு குழப்பம் தொடர்கதையாகி போனது…

“உங்களுக்கு எதுக்கு அந்த விபரம்..”

“நேரில் பேசலாமே..” அனிவர்த் கேட்க..

“ஓகே.. எங்க மீட் பண்ணலாம்” என திருகுமரன் கேட்க…

“வீட்டிற்கே வருகிறேன் ..” என சொல்லி வைத்துவிட்டான்.

வரவா.. என அனுமதி கூட கேட்கவில்லை பாரேன் என மெல்ல சிரித்தார் திருகுமரன்…

இருவரும் சந்தித்து பேசி கொண்டால் எல்லாம் தெளிவாகி விடும்.. தேவர்ஷி என்ன பண்ண போகிறாளோ…

மதிய உணவு கூட இறங்கவில்லை அனிவர்த்துக்கு உண்மை அறியாமல்.. தன் காதலை காலம் கடந்து உணர்ந்த தன்னை தானே மனதார திட்டி தீரத்தான். இதற்கு மேல் உண்மை அறியாது தலை வெடித்திடும் போல இருக்க… உடனே தேவர்ஷி வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

அனிவர்த் மாலை வருவான் என திருகுமரன் நினைத்திருக்க… மதியமே வருவான் என எதிர்பார்க்கவில்லை அவர். அவன் பாடு அவனுக்கு தானே தெரியும்.. இன்னொன்று தேவர்ஷி மாலையில் இருந்தால் பேசவிடாமல் துரத்தி விடுவதிலேயே குறியாக இருப்பாள். அதை எல்லாம் மனதில் கொண்டே உடனே கிளம்பி வந்துவிட்டான்.

அனிவர்த் வந்து அமர்ந்ததும் நேரடியாக விசயத்திற்கு வந்துவிட்டான்.

“ஷாஷிகா பாதர் யார்… உங்க மருமகன் எங்க இருக்கார்..”

அவனின் பரபரப்பு கண்ட திருகுமரனுக்கு ‘இவர் ஏன் இப்படி பரபரப்பாக கேட்கிறார்.. எனக்காவது என் பொண்ணு.. இவருக்கு இதில் என்ன இருக்கு..’ என யோசனை ஓடியது…

“சொல்லுங்க.. ஏன் அமைதியாக இருக்கறிங்க..” என்றான் அனிவர்த்..

“அது உங்களுக்கு எதுக்கு.. நீங்க எதுக்கு தெரிஞ்சுக்கனும்..”

“இல்லை என் ஆபிஸ்ல வேலை செஞ்சாங்க.. நல்ல திறமையான பொண்ணு.. அவங்க மேல உள்ள அக்கறைல தெரிஞ்சுக்கலாம்னு..” என சாமர்த்தியமாக பேசினான்.

அவனின் சாதுர்யமான பேச்சை நம்பி எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.

“உங்க ஆபிஸில் வேலை செய்யும் போது தான் யாரையோ காதலித்திருப்பா போல… ஒருநாள் அழுதழுது ஓஞ்சு போய் உயிரை கையில பிடிச்சு கிட்டு வந்து நின்னா.. நாங்க எவ்வளவோ கேட்டோம் வாயே திறக்கல.. அப்புறம் ஒருநாள் மயங்கி விழுந்துட்டா.. தூக்கிட்டு ஓடினோம்.. அங்க டாகடர் பார்த்துட்டு சொல்லவும் தான் கர்ப்பமா இருக்கறதே எங்களுக்கு தெரியும்.. அப்பவும் கேட்டோம்… நான் ஒருத்தர லவ் பண்ணினேன்.. நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். கொஞ்சநாள் வாழ்ந்தோம்.. ஒத்து வரல.. பிரிஞ்சிட்டோம்னு சொன்னா.. யாருனு சொல்லு நாங்க வேணா பேசி பார்க்கிறோம்னு எவ்வளவு தூரம் கேட்டோம்… சொல்லவே இல்லை.. மீறி கேட்டா எங்கயாவது போயிடுவேனு சொல்லிட்டா.. நாங்களும் பயந்து போய் எங்க கண் முன்னாடி இருந்தா போதும்னு அமைதியாகிட்டோம்..” என சொல்லியவர் கண்கள் கசிந்தது..

அதை கேட்ட அனிவர்த்துக்கோ சர்வமும் நடுங்கியது… உடல் வியர்க்க.. மூளை மரத்துப் போய்… மனம் ஸ்தம்பித்த நிலை..

“தம்பி என்னாச்சு.. இந்தாங்க தண்ணீ குடிங்க..” திருகுமரன் அனிவர்த்தை பார்த்து பதறி பருக தண்ணீர் கொடுத்தார்.

தண்ணீரை குடித்து கொஞ்சம் ஆசுவாசமானவன்.. யோசிக்க ஆரம்பித்தான்…

என்னோட வேலை செய்த போதுனா.. அது நான் தானே.. என்னை தான் காதலித்தாள்.. அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ஆனால் கலயாணம் செய்து கொண்டோம் என சொல்லியிருக்காளே.. அது தானே இடிக்குது…

“தேவர்ஷி கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாளா..”

“ஆமாம் தம்பி தாலியை காண்பித்தாளே.. இன்னும் அந்த தாலி அவ கழுத்தில தான் இருக்கு..”

‘என்னது தாலியா.. நான் அப்படி எதுவும் கட்டலையே..’ குழம்பத்துடனே திருகுமரனிடம் கூட விடை பெறாமலேயே எழுந்து சென்றுவிட்டான்.

திருகுமரனும் இவருக்கும் ஒன்னும் தெரியலை போல.. எப்படி கண்டுபிடிக்கறது.. கடவுளே என் பொண்ணுக்கு ஒரு வழி காட்டேன் என கடவுளிடம் தனது கவலைகளை கொட்டினார்…

குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தான் அனிவர்த்…

மகனின் முகத்தை பார்த்த கங்காவிற்றகு ஏதோ சரியில்லை என தோன்றியது. காலையில் கிளம்பி சென்ற உற்சாகம் என்ன.. இப்போ மகனின் இருண்ட முகத்தை பார்தது சற்று பயம் தட்டியது.

சிதம்பரத்திடம் “என்னன்னு கேளுங்க.. நான் கேட்டா சொல்லமாட்டான்..” என்க..

சிதம்பரம் கேட்பதற்குள் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான். தன அறைக்கு வந்தவன் தலையை தாங்கி கொண்டு அமர்ந்துவிட்டான்.

கங்கா முறைக்க.. சிதம்பரம் அவசரமாக “கீழே இறங்கி வருவான்ல கண்டிப்பா கேட்கிறேன்” என சொல்லி தப்பித்து கொண்டார்.

‘தாலி என எதுவும் நான் கட்டவில்லையே.. என்னோடு வேலை பார்த்த சமயம் என்றால என்னோடு தானே பழகினாள். அவள் என்னை தானே லவ் பண்ணியதாக சொன்னாள். அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ‘

சில கணக்குகள் போட்டவன் ‘ஷாஷிகா வயதை பார்த்தால் என்னோடு இருந்த நாட்களோடு ஒத்துப் போகிறதே.. அப்போ ஷாஷிகா என் பொண்ணா.. எனக்கு ஒரு பொண்ணா..’ மனதில் ஆனந்தம் கூத்தாட.. கண்களில் மகிழ்ச்சி பெருக்கு நீராக உகுக்க.. கைகள் நடுங்க.. தாளமுடியாமல் அப்படியே படுக்கையில் மல்லாக்க சாய்ந்துவிட்டான்.

எதேதோ உணர்வு அவனுள் கத்தவேண்டும் போல.. குதிக்கவேண்டும்போல.. சத்தமாக சிரிக்கவேண்டும் போல.. வாய் விட்டு அழுகவேண்டும் போல… அது எல்லாம் அவன் இயல்பு இல்லை என்பதால்.. சிறுபிள்ளைதனமாக இருக்கும் என வெகு பாடுபட்டு தன்னை அடக்கிக்கொண்டான்.

தன் உணர்வுகளோடு சில மணிதுளிகள் போராடியவன் முதலில் ஷாஷிகா தன் பெண் தானா உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தான். எப்படி எனவும் முடிவு செய்தவன்.. எதையும் நினைத்தவுடன் செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால் உடனே கிளம்பிவிட்டான்.

ஷாஷிகா பள்ளி விடும் நேரம் என்பதால் நேரே பள்ளிக்கே சென்றான். பள்ளி வாசலில் திருகுமரன் பேத்திக்காக காத்திருந்தவர் அனிவர்த்தை பார்த்தும் இவர் எதற்கு இங்கே வந்திருக்கார் என்ற கேள்வி தான் தோன்றியது.. அனிவர்த் திருகுமரனின் பார்வையை கொண்டே அவரின் மனதை படித்தவன்..

“ஷாஷிகா நினைப்பாகவே இருக்கு.. அதான் அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன்.. ப்ளீஸ் சார்.. நான் கொஞ்சம் அவளை வெளியே கூட்டிட்டு போய் வருகிறேனே.. ஒரு ஹாப்னவர் சார்..” என கேட்க..

திருகுமரனுக்கே என்ன சொல்வது என தெரியவில்லை. அதிக பழக்கமும் கிடையாது… அதற்காக தெரியாதவரும் கிடையாது.. என்ன செய்வது என தெரியவில்லை..

“ப்ளீஸ் அங்கிள்..” என நெருக்கத்தை கூட்டினான். மாமா என சொல்லிவிடலாம் என நினைத்தான் தான் அவனுக்கே உறுதியாக தெரியாமல் எப்படி என விட்டுவிட்டான்.

கண்களில் இறைஞ்சுதலுடன் கேட்கவும் திருகுமரனும் சரி என தலையை அசைத்துவிட்டார்.

பள்ளி மணி அடிக்கவும்.. குழந்தைகள் வெளியே வரவும் ஷாஷிகாவை மிகவும் ஆர்வமாக துழாவினான். ஷாஷிகா இவனை பார்த்ததும்..

“ஹாய் அங்கிள்..” என துள்ளலாக ஓடி வந்தது..

ஷாஷிகாவை தூக்கி இரு கன்னத்திலும் முத்தம் வைக்க.. அவனின் செயல் எல்லாம் பார்த்து கொண்டிருந்த திருகுமரனுக்கு ஒன்றும் புரியவில்லை..

ஷாஷிகாவை தூக்கி தோளோடு அணைத்து கொண்டு திருகுமரனிடம் தலை அசைத்து விடை பெற்றவன் காருக்கு சென்று முன் சீட்டில் அமர வைத்து காரை எடுத்தவன் நேராக சென்றது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்..

ஏற்கனவே டி.என்.ஏ. டெஸ்ட்கு தன் மருத்துவ நண்பனிடம் முன்பதிவு செய்திருந்தான். உடனே அனிவர்த்துக்கும் ஷாஷிகாவிற்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வர மூன்று நாட்களகும் என சொல்லிவிட.. மூன்று நாளா என மலைத்து போனான். ஏனோ அவன் மனம் ஷாஷிகா தன் மகள் தான் நம்ப.. ஆதாரபூர்வமாக தெரிந்தால் தான் அடுத்து செய்யவேண்டியதை செய்ய முடியும்…

ஷாஷிகா அவனை கேள்வியாக கேட்டது..

“எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்திங்க..”

“ஊசி போடுவாங்களா..”

“எனக்கு பீவர் கூட இல்லையே அங்கிள்..”

“எதுக்கு ப்ளட் எடுத்தாங்க..”

“எனக்கு வலிக்குது..”

“அம்மாவும் தாத்தாவும் தானே எப்பவும் ஹாஸபிட்டல் கூட்டிட்டு போவாங்க..”

“நீங்க ஏன் கூட்டிட்டு வந்திங்க..”

‘ஹப்பா.. எத்தனை கேள்வி..’ மகளின் புத்திசாலிதனத்தில் மெச்சி போனான்..என் மகள் என்னை போல கர்வம் வேறு…

“அங்கிள்.. நான் கேட்டுட்டே இருக்கேன்.. சைலண்ட்டா இருக்கறிங்க..”

மகளின் அதட்டலில் சிரிப்பு வந்திட..

“ஷாஷிமா.. ஒன்னும் இல்ல சும்மா.. நாம ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா..” என்க..

ஐஸ்கிரீம் என்றதும் அந்த சுட்டியும் குஷியாகிவிட்டது.

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து வீடு வர ஒருமணி நேரம் கடந்துவிட்டது. வீட்டிற்கு வந்தனர். இவர்களுக்காக திருகுமரன் காத்திருந்தார். ஷாஷிகாவை கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டான்.

27 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

ba8fd40c-f0d7-4493-89c3-3b0a6180dd05

எங்கேயும் காதல்! – 16, 17 & 18 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!         [16] தன்னுடைய ப்ளேசருடன் அணிந்திருந்த போவ்வை, கண்ணாடி முன் நின்று, சற்றே கழுத்தை உயர்த்தி சரி செய்து கொண்டிருந்தான் தேவ்.  அவனைச் சுற்றி இருந்த செல்வ வனப்பில் அவன் முகம் சற்றே புஷ்டியாகிப் போயிருந்தாலும் கூட, அவன் இதழ்களோ ரொம்ப காலமாக அவன் கடைப்பிடிக்கும் புகைப்பழக்கம் காரணமாக கன்னங்கரேர் என்று கறுத்துப் போயிருந்தது.  சிவப்பு நிறத்தில், ரொம்பவும் செக்ஸியாக, உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் மிடி அணிந்து,  நாற்காலியில் அமர்ந்து, ஒரு

எங்கேயும் காதல்! – 16, 17 & 18 (விஷ்ணுப்ரியா) Read More »

5dd8b6e0-d4ef-449f-aa8d-b739e50bc9ab

எங்கேயும் காதல்! – 14&15 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [14] அவனது முதுகந்தண்டும்,காலும் ஏடாகூடமாக கல்லில் பட்டு.. மோத, அப்போதும் மனைவியை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தான் அதிமன்யு.  அவள், பதற்றமும், கலக்கமும் ஒருங்கே தோன்ற தன் மன்னவனின் மூச்சுக்காற்று பட்டுத் தெறித்த திசை பார்த்தாள்.  அவனோ, பட்ட வலியில் வாய் விட்டு கத்தினால்… எங்கே அவள் பயப்பட்டு விடுவாளே? என்ற ஒரே காரணத்திற்காக, கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு வலியை அடக்கிக் கொண்டான்.  இருப்பினும் கல்லில் இருந்து சறுக்கியதை,

எங்கேயும் காதல்! – 14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

7d5b5697-16f4-4b8b-b67f-3ab6b94ae1c6

எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!            [11]   இரண்டு மாதங்களுக்குப் பிறகு,  “இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியில் விதம் விதமான நேயர்ஸோட, பல சுவாரஸ்யமான எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கேட்டோம்.. டுமோரோ மோர்னிங் ஒரு ‘ஹாட் டாபிக்’குடன் வரேன்..திரும்பவும் இதே போல.. நிறைய பேசலாம்னு சொல்லிக்கிட்டு உங்களிடமிருந்து விடை பெறும் நான் ஆர். ஜே மித்ரா.. அன்டில் தென்.. ஸ்டே டியூன்ட் பபாய்..”என்று முயன்று உற்சாகமான குரலில் பேசியவள்,  நேயர்களின் விருப்புக்கேற்ப இளமை துள்ளும் ஓர்

எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

C9EF4DE2-FD93-49A0-9C45-C252AC084179

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

விடிய விடிய தன் மனம் என்னும் கேலரியில் ஷேவ் செய்து வைத்திருந்த தேவர்ஷியோடான காலங்களை திகட்ட திகட்ட எடுத்துப் பார்த்து திளைத்து போனவனுக்கு தூக்கம் டெலிட் ஆகிவிட்டது. காலையிலேயே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்க முடியவில்லை. எப்படி பாரக்க.. என்ன சொல்லி.. என யோசித்தவனுக்கு ஷாஷிகா வந்து மின்ன.. தன் பிகரை கரெக்ட் செய்ய போகும் விடலை பையனாக துள்ளி கொண்டு கிளம்பினான்.

எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்டவனுக்கு ஏன் தேவர்ஷி மட்டும் நினைவில் நிலைத்துவிட்டாள் என இப்பவும் யோசிக்க மறந்தான். யோசித்து இருந்தால் தேவர்ஷியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து இருக்கலாம். சேதாரம் குறைவாக இருந்திருக்கும்.. கர்மா அவனை யோசிக்க விடவில்லை..

படிகளில் குதித்து இறங்கி வந்த மகனை பார்த்து காபி குடித்து கொண்டிருந்த கங்கா வாயில் ஊற்றிய காபியை கூட விழுங்காமல் ஹாங் என வாயை பிளந்து.. வாயின் கடைவழியே காபி ஒழுக.. அதை கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தார்.

அனிவர்த்கோ தாயை பார்த்ததும் வந்த சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கினான். கங்காவின் அருகில் வந்தவன் தாடையை தட்டி வாயை மூட வைத்தவன்.. அவரின் சேலை தலைப்பை எடுத்து வாயை துடைத்துவிட்டான்.

“பை கங்கா டார்லிங்..” என ஸ்டைலாக கையை அசைத்து… கார்கீயை விரலில் சுழட்டிக் கொண்டு ஒரு சினிமா பாட்டை விசிலடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து கங்காவிற்கு மயக்கம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிதம்பரத்தின் மேலேயே மயங்கிவிட்டார்.

“கங்கா.. கங்காம்மா..” சிதம்பரம் கன்னத்தில் தட்ட… மெதுவாக கண்களை திறந்து பார்த்தவர்..

“ஏங்க.. இது நம்ம அனிவர்த் தானுங்களா..”

“ஆமாம்.. உம்மவன் தான்..”

“ஏதாவது மோகினி பிசாசு அடிச்சிருக்குமோ..”

“அப்படி எல்லாம் இருக்காது..”

“ஒருவேள எந்த சீமை சித்தராங்கிய புடிச்சுட்டனோ..”

“இப்ப எல்லாம் அவன் அப்படி இல்லையே கங்கா..”

“இவ்வளவு நேரமா எழுந்து இத்தனை ஆர்பாட்டமா எங்க கிளம்பி போறானாம்..”

“தெரியலையே ம்மா..”

“க்கும்.. கத்திரிக்கா முத்தினா.. கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..” என நொடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

அனிவர்த் ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான். ஷாஷிகாவிற்கு ஏதாவது வாங்கி போகலாம் என்றால் ஒரு கடை கூட திறக்கவில்லை. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இவ்வளவு நேரமாக எப்படி போய் நிற்பது என்ற யோசனை வேறு.. ஒரு உணவகத்திற்கு சென்றவன்.. எந்த உணவு தயாரித்து கொண்டு வர லேட்டாகும் என கேட்டு அந்த உணவையே கொண்டு வருமாறு சொல்லி தன் போனோடு தன் நேரத்தை நெட்டி தள்ளினான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் போனில் தேவர்ஷியின் போட்டோ இருக்கா என துழாவினான். பொன்முடியில் எடுத்த சிலது இருக்க… தொட்டு தடவி “குட்டிம்மா..” என்றான் ஏக்க பெருமூச்சோடு…

உணவு வந்து மெல்ல சாப்பிட்டு என ஒரு மணி நேரம் கடத்தியிருந்தவன்.. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில பார் சாக்லேட்களும் ஐஸ்கீரீமிம் வாங்கி கொண்டு தேவர்ஷியின் வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி அடிக்க.. திருகுமரன் வந்து திறந்தார். அவருக்கு அனிவர்த் யார் என்று தெரியவில்லை..

“நீங்க..”

“நான் ஷாஷிகா ப்ரண்ட்.. அவளை பார்க்கனும்..”

இந்த வயதில் தன் பேத்திக்கு ஒரு ப்ரண்டா என வியந்தவர்.. அவனின் பகட்டான தோற்றம் தவறாக நினைக்க விடவில்லை. உள்ளே அனுமதித்தார்.

உள்ளே வந்து அமர்ந்தவனிடம்…

“நீங்க யாரு.. ஷாஷிகாவ எப்படி தெரியும்..” திருகுமரன் கேட்க..

“நான் அனிவர்த்.. சி.கே டிரேடர்ஸ் எம்.டி..”என்றவன்..

ஷாஷிகாவை சந்தித்த நிகழ்வுகளை உற்சாகமாக சொன்னான். பேத்தியின் பெருமைகளை கேட்டதில் அனிவர்த தன்னை பற்றி கூறியதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.

“காபி.. டீ..” என திருகுமரன் அனிவர்த்தை கேட்க…

“நோ.. தேங்க்ஸ் சார்..” என் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தவன்.. உள்ளே தலையை எக்கி பார்த்தான்.

“கௌசி.. ஷாஷிகாவை கூட்டிட்டு வா..” உள்ளே குரல் கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக உள் பக்கமாகேவ பார்த்திருந்தான். பார்வை நாலு திசையிலும் பயணித்தது. எங்கயாவது தேவர்ஷி தென்படுகிறாளா என.. யூனிபாரம்மில் அழகாக வந்தது குட்டி ஏஞ்சல்.. ஷாஷிகாவை பார்த்ததும் ஒரு பாசம் சுரந்தது தான்.. இருந்தாலும் அந்த பாசத்தை கூட ஓரங்கட்டிவிட்டது தேவர்ஷியின் மீதான காதல்.. ஆனால் இன்னும் அந்த காதலை உணரவில்லை அவன்..

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..” என தான் வாங்கி வந்த பொருட்களை நீட்டினான்.

அந்த வாண்டோ வாங்காமல் தன் தாத்தாவை பாரத்தது.. உடனே இவன் முகம் சுருங்கிவிட்டது. அவரின் தலை சம்மதமாக அசையவும் வாங்கி கொண்டது.

“தேங்க்ஸ்.. அங்கிள்..”

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமிடத்திற்கொரு ஒரு முறை அவன் பார்வை உள்ளே சென்று மீண்டது.

திருகுமரன் இதை எல்லாம் அவதானித்து கொண்டு தான் இருந்தார்.

தேவர்ஷி வந்தாள்.. அனிவர்த் பார்வை ஜவ்வுமிட்டாயாக அவள் மேல் ஒட்டிக் கொண்டது.

அழகாக பின்னலிட்ட கூந்தல்.. நெற்றி வகிட்டில் குங்குமம்.. அதை பாரத்தவனுக்கு மனம் சுணக்கம் கொண்டது.. புருவங்களுக்கு மத்தியில் சிறு சிகப்பு பொட்டு..

பார்வை சற்று கீழே இறங்கி கழுத்திற்கு வந்தடைந்தது. தாலி இருக்கா என பார்த்தான்.. ஒன்றும் தெரியவில்லை.. குளோஸ்ட் காலர் நெக் பிளவுஸ் அணிந்திருந்தாள்.

சட்டென் அவளின் மச்சம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.. அதை பார்க்க துடித்தது மனது.. வளைவான பள்ளத்தில் இருப்பதை சாதரணமாகவே பார்க்க முடியாது. இப்ப எங்கே காண.. ஏக்க பெருமூச்சு..

நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக இருந்தாள். பார்த்தவுடன் மதிக்கும் படியான தோற்றம்..

தான் ரசித்திருந்திருந்த சின்ன பெண் தோற்றம போய் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவளை இன்னும் இன்னும் பிடித்து போனது.. ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.

தேவர்ஷியோ இவனை பார்வையால் நெருப்பாக சுட்டு கொண்டிருந்தாள்.

‘ஆளை பாரு.. பார்வையை பாரு.. நெட்டபனமரம் ..கண்ணாமுழியை நோண்டறேன் இருடா.. காலங்கார்த்தால எதுக்கு வந்திருக்கானு தெரியலையே.. இவனுக்கும் ஷாஷிக்கும் எப்படி பழக்கம் அதுவும் தெரியலை.. ஷாஷிய சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட ஏதாவது வம்பு பண்ணட்டும்.. அப்புறம் இருக்கு.. நடு மண்டைலயே எதயாவது எடுத்து போடறேன்..’ மனதினுள் ஆயிரம் வசைபாடி அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.

அனிவர்த்ததோ.. ‘ ம்ம்ம்… இந்த மொத்த அழகையும் எவன் ஆண்டு அனுபவிக்கிறானோ தெரியலயே.. ‘

ஏனோ தேவர்ஷியின் கணவனை பற்றி தெரிந்து கொள்ள துடித்தான். ‘அப்படி எவன தான் கல்யாணம் பண்ணியிருக்கா.. என்னை விட ஹேண்ட்சம்மா இருப்பானா.. என்னை விட பெரிய பணக்காரனோ..என்னை வேணாம்னு சொல்லிட்டு எந்த மன்மதராசாவ கட்டி இருக்கானு பார்க்கலாம்..’

“சார்…ஷாஷிகா பாதர்..”

“அவரு..”

“ப்பா..” தேவர்ஷி சத்தமாக இடையிட்டாள்…

திருகுமரன் அனிவர்த்தை விட்டு மகளைப் பாரக்க…

“புதுசா யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல.. யாரு என்னனு வாசல்ல வச்சு பேசி அனுப்ப மாட்டிங்களா..” என்றாள் அனிவர்த்தை அந்நிய பார்வை பார்த்தவாறு…

“இல்லம்மா.. இவரு ஷாஷிகா ப்ரண்டுனு..”

“ப்பா.. ஷாஷிகா ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாருங்க.. கிளம்புங்க…”

திருகுமரன் சுவர் கடிகாரத்தை பார்க்க… இன்னும் பள்ளிக்கு செல்ல நேரமிருந்தது..

அப்பாவின் பார்வையை அறிந்தவள்..”ப்பா.. அவ கிளாஸ் மிஸ் பார்க்கனும் சொன்னாங்க… நீங்க கிளம்புங்க..”

“ம்மா.. மிஸ் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல..” என்றது ஷாஷிகா விவரமாக….

குட்டி பிசாசு என பல்லை கடித்த தேவர்ஷி..”எனக்கு போன் பண்ணினாங்க.. அப்பா கிளம்புங்க..” என பிடிவாதமாக நின்றாள்.

எதாவது பேசி இவன் யார் என்று குடும்பத்திற்கும்… ஷாஷிகா இவன் குழந்தை என்று இவனுக்கும் தெரிந்துவிடுமோ.. என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது..

“சாரி சார்.. ஸகூலுக்கு போகனும்.. இன்னொரு நாள் ப்ரீயா பேசலாம்..” என திருகுமரன் சொல்லிவிட்டு.. ஷாஷிகாவை கூட்டி கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் செல்லும் வரை பார்த்திருந்த அனிவர்த்..

“நான் என்ன தெரிஞ்சுக்க கூடாதுனு.. இப்படி உங்கப்பாவ துரத்திவிடற.. என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கற போல..” என்றான் அவளை கூர்மையாக பார்த்து…

“யார் சார் நீங்க.. நீங்க யாருனே எனக்கு தெரியாது… உங்ககிட்ட இருந்து மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..” என்றாள் தெனாவட்டாக..

“நான் யாருனு தெரியாது உனக்கு.. அப்படி தான.. சரி விடு.. ஆனாலும் அப்ப இருந்தத விட இப்ப தான் நல்லா கும்முனு இருக்கற…” என அவளின் கொஞ்சம் சதைபிடிப்பான உடலை மேலிருந்து கீழ வரை பார்வையால் மேய்ந்தான்.

அவனின் பார்வையில் அவளின் காதல் மனது மயங்கி தான் போனது. இத்தனை பட்டும் தன் மானங்கெட்ட மனது அவனின் பார்வையில சொக்கியதில் தன் மேலேயே எரிச்சல் கொண்டவள் அதையும் அவன் பக்கம் திருப்பினாள்.

“எதுக்கு இப்படி பார்க்கறிங்க.. கண்ணை நோண்டிருவேன்..”அவனின் முகத்திற்கு நேராக கையை ஆட்டி பேச..அவளின் கையை பிடித்து விரல்நுனிகளில் தன் உதட்டை உரச…

இப்போதும் அவன் தீண்டல் அவளை பாதிக்க… குப்பென முகம் சிவக்க.. ஒரு நொடி பேச்சற்று நின்றவளை பார்த்து உல்லசமாக சிரித்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் தொப்பென ஷோபாவில் அமரந்தாள். படபடப்பு.. பயம்.. கண்கள் தானாக நீர் உகுக்க… எங்கே மறுபடியும் தன் மானங்கெட்ட மனசு அவன் பின்னால் போயிடுமோ.. மீண்டும் அவமானபடும் படி ஆகிவிடுமோ என பயம் கொண்டாள்.

கௌசல்யா தேவர்ஷியின் லஞ்ச் பேக்கை எடுத்து வந்தவர் மகளை பாரத்து…

“என்னாச்சு தேவாம்மா.. ஏன் அழுகற..” என பதட்டமாக கேட்க..

அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்..”ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..” என சொன்னவள் தன் பேகையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு..

“வரேன் மா..” சொல்லி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.

இப்ப மகள் அழுதாளா.. இல்லையா.. என குழம்பி போய் அமரந்திருந்தார் கௌசல்யா.. திருகுமரனும் ஒரு குழப்பத்தோடு தான் வீடு வந்தார்.

ஷாஷிகாவின் டீச்சர் நான் வர சொல்லவில்லையே.. நன்றாக படிக்கும் குழந்தை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட.. மகள் எதற்கு இப்படி பொய் சொன்னாள் என குழப்பம்…

வீடு வந்தவர் தான் வந்தது கூட தெரியாமல் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்தவர்.. என்ன ஏது என விசாரித்தவர்.. மனைவி சொன்னதை கேட்டு மேலும் குழம்பி போனார்.

தேவர்ஷி திருகுமரனின் வழிகாட்டுதலில் மீண்டும் படித்து தேசிய வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்த பிறகு எதிலும் எங்கயும் தெளிவாக தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்து முடிவு எடுக்கும் மகளை கண்டு வியந்து தான் போயிருக்கிறார். இத்தனை காலங்கள் கழித்து மகளின் நடவடிக்கை அவரை யோசிக்க வைத்தது..

மனைவியை சமாதனப்படுத்தி தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு அனுப்பி விட்டு யோசித்தார்.மனைவியிடம் சொன்னது போல வேலை டென்ஷன்லாம் இருக்காது என தெரியும் மகளின் வேலை திறனை நன்கு அறிந்தவர் தானே..

மகளின் இந்த மாற்றம் எப்போதிருந்து என யோசித்தார்..முன்தினம் வேலையில் இருந்து வரும் போது ஷாப்பிங் மால் போய் வீட்டிற்கும் தன் மகளுக்கும் ஏதேதோ வாங்கி கொண்டு சந்தோஷமாகவே வந்தாள். காலையில் எழுந்து நல்ல மூடில் தான் வேலைக்கு கிளம்பி ஆயத்தமானாள்.. அதுக்கப்புறம் அனிவர்த்தை பார்தத பின் தான்… பிரச்சினையின் ஆரம்ப நூலை பிடித்துவிட்டார்.

26 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

55FE2D4F-A9FC-4C72-B366-DB9A980B11EC

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

விடிய விடிய தன் மனம் என்னும் கேலரியில் ஷேவ் செய்து வைத்திருந்த தேவர்ஷியோடான காலங்களை திகட்ட திகட்ட எடுத்துப் பார்த்து திளைத்து போனவனுக்கு தூக்கம் டெலிட் ஆகிவிட்டது. காலையிலேயே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்க முடியவில்லை. எப்படி பாரக்க.. என்ன சொல்லி.. என யோசித்தவனுக்கு ஷாஷிகா வந்து மின்ன.. தன் பிகரை கரெக்ட் செய்ய போகும் விடலை பையனாக துள்ளி கொண்டு கிளம்பினான்.

எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்டவனுக்கு ஏன் தேவர்ஷி மட்டும் நினைவில் நிலைத்துவிட்டாள் என இப்பவும் யோசிக்க மறந்தான். யோசித்து இருந்தால் தேவர்ஷியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து இருக்கலாம். சேதாரம் குறைவாக இருந்திருக்கும்.. கர்மா அவனை யோசிக்க விடவில்லை..

படிகளில் குதித்து இறங்கி வந்த மகனை பார்த்து காபி குடித்து கொண்டிருந்த கங்கா வாயில் ஊற்றிய காபியை கூட விழுங்காமல் ஹாங் என வாயை பிளந்து.. வாயின் கடைவழியே காபி ஒழுக.. அதை கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தார்.

அனிவர்த்கோ தாயை பார்த்ததும் வந்த சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கினான். கங்காவின் அருகில் வந்தவன் தாடையை தட்டி வாயை மூட வைத்தவன்.. அவரின் சேலை தலைப்பை எடுத்து வாயை துடைத்துவிட்டான்.

“பை கங்கா டார்லிங்..” என ஸ்டைலாக கையை அசைத்து… கார்கீயை விரலில் சுழட்டிக் கொண்டு ஒரு சினிமா பாட்டை விசிலடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து கங்காவிற்கு மயக்கம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிதம்பரத்தின் மேலேயே மயங்கிவிட்டார்.

“கங்கா.. கங்காம்மா..” சிதம்பரம் கன்னத்தில் தட்ட… மெதுவாக கண்களை திறந்து பார்த்தவர்..

“ஏங்க.. இது நம்ம அனிவர்த் தானுங்களா..”

“ஆமாம்.. உம்மவன் தான்..”

“ஏதாவது மோகினி பிசாசு அடிச்சிருக்குமோ..”

“அப்படி எல்லாம் இருக்காது..”

“ஒருவேள எந்த சீமை சித்தராங்கிய புடிச்சுட்டனோ..”

“இப்ப எல்லாம் அவன் அப்படி இல்லையே கங்கா..”

“இவ்வளவு நேரமா எழுந்து இத்தனை ஆர்பாட்டமா எங்க கிளம்பி போறானாம்..”

“தெரியலையே ம்மா..”

“க்கும்.. கத்திரிக்கா முத்தினா.. கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..” என நொடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

அனிவர்த் ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான். ஷாஷிகாவிற்கு ஏதாவது வாங்கி போகலாம் என்றால் ஒரு கடை கூட திறக்கவில்லை. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இவ்வளவு நேரமாக எப்படி போய் நிற்பது என்ற யோசனை வேறு.. ஒரு உணவகத்திற்கு சென்றவன்.. எந்த உணவு தயாரித்து கொண்டு வர லேட்டாகும் என கேட்டு அந்த உணவையே கொண்டு வருமாறு சொல்லி தன் போனோடு தன் நேரத்தை நெட்டி தள்ளினான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் போனில் தேவர்ஷியின் போட்டோ இருக்கா என துழாவினான். பொன்முடியில் எடுத்த சிலது இருக்க… தொட்டு தடவி “குட்டிம்மா..” என்றான் ஏக்க பெருமூச்சோடு…

உணவு வந்து மெல்ல சாப்பிட்டு என ஒரு மணி நேரம் கடத்தியிருந்தவன்.. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில பார் சாக்லேட்களும் ஐஸ்கீரீமிம் வாங்கி கொண்டு தேவர்ஷியின் வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி அடிக்க.. திருகுமரன் வந்து திறந்தார். அவருக்கு அனிவர்த் யார் என்று தெரியவில்லை..

“நீங்க..”

“நான் ஷாஷிகா ப்ரண்ட்.. அவளை பார்க்கனும்..”

இந்த வயதில் தன் பேத்திக்கு ஒரு ப்ரண்டா என வியந்தவர்.. அவனின் பகட்டான தோற்றம் தவறாக நினைக்க விடவில்லை. உள்ளே அனுமதித்தார்.

உள்ளே வந்து அமர்ந்தவனிடம்…

“நீங்க யாரு.. ஷாஷிகாவ எப்படி தெரியும்..” திருகுமரன் கேட்க..

“நான் அனிவர்த்.. சி.கே டிரேடர்ஸ் எம்.டி..”என்றவன்..

ஷாஷிகாவை சந்தித்த நிகழ்வுகளை உற்சாகமாக சொன்னான். பேத்தியின் பெருமைகளை கேட்டதில் அனிவர்த தன்னை பற்றி கூறியதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.

“காபி.. டீ..” என திருகுமரன் அனிவர்த்தை கேட்க…

“நோ.. தேங்க்ஸ் சார்..” என் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தவன்.. உள்ளே தலையை எக்கி பார்த்தான்.

“கௌசி.. ஷாஷிகாவை கூட்டிட்டு வா..” உள்ளே குரல் கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக உள் பக்கமாகேவ பார்த்திருந்தான். பார்வை நாலு திசையிலும் பயணித்தது. எங்கயாவது தேவர்ஷி தென்படுகிறாளா என.. யூனிபாரம்மில் அழகாக வந்தது குட்டி ஏஞ்சல்.. ஷாஷிகாவை பார்த்ததும் ஒரு பாசம் சுரந்தது தான்.. இருந்தாலும் அந்த பாசத்தை கூட ஓரங்கட்டிவிட்டது தேவர்ஷியின் மீதான காதல்.. ஆனால் இன்னும் அந்த காதலை உணரவில்லை அவன்..

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..” என தான் வாங்கி வந்த பொருட்களை நீட்டினான்.

அந்த வாண்டோ வாங்காமல் தன் தாத்தாவை பாரத்தது.. உடனே இவன் முகம் சுருங்கிவிட்டது. அவரின் தலை சம்மதமாக அசையவும் வாங்கி கொண்டது.

“தேங்க்ஸ்.. அங்கிள்..”

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமிடத்திற்கொரு ஒரு முறை அவன் பார்வை உள்ளே சென்று மீண்டது.

திருகுமரன் இதை எல்லாம் அவதானித்து கொண்டு தான் இருந்தார்.

தேவர்ஷி வந்தாள்.. அனிவர்த் பார்வை ஜவ்வுமிட்டாயாக அவள் மேல் ஒட்டிக் கொண்டது.

அழகாக பின்னலிட்ட கூந்தல்.. நெற்றி வகிட்டில் குங்குமம்.. அதை பாரத்தவனுக்கு மனம் சுணக்கம் கொண்டது.. புருவங்களுக்கு மத்தியில் சிறு சிகப்பு பொட்டு..

பார்வை சற்று கீழே இறங்கி கழுத்திற்கு வந்தடைந்தது. தாலி இருக்கா என பார்த்தான்.. ஒன்றும் தெரியவில்லை.. குளோஸ்ட் காலர் நெக் பிளவுஸ் அணிந்திருந்தாள்.

சட்டென் அவளின் மச்சம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.. அதை பார்க்க துடித்தது மனது.. வளைவான பள்ளத்தில் இருப்பதை சாதரணமாகவே பார்க்க முடியாது. இப்ப எங்கே காண.. ஏக்க பெருமூச்சு..

நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக இருந்தாள். பார்த்தவுடன் மதிக்கும் படியான தோற்றம்..

தான் ரசித்திருந்திருந்த சின்ன பெண் தோற்றம போய் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவளை இன்னும் இன்னும் பிடித்து போனது.. ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.

தேவர்ஷியோ இவனை பார்வையால் நெருப்பாக சுட்டு கொண்டிருந்தாள்.

‘ஆளை பாரு.. பார்வையை பாரு.. நெட்டபனமரம் ..கண்ணாமுழியை நோண்டறேன் இருடா.. காலங்கார்த்தால எதுக்கு வந்திருக்கானு தெரியலையே.. இவனுக்கும் ஷாஷிக்கும் எப்படி பழக்கம் அதுவும் தெரியலை.. ஷாஷிய சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட ஏதாவது வம்பு பண்ணட்டும்.. அப்புறம் இருக்கு.. நடு மண்டைலயே எதயாவது எடுத்து போடறேன்..’ மனதினுள் ஆயிரம் வசைபாடி அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.

அனிவர்த்ததோ.. ‘ ம்ம்ம்… இந்த மொத்த அழகையும் எவன் ஆண்டு அனுபவிக்கிறானோ தெரியலயே.. ‘

ஏனோ தேவர்ஷியின் கணவனை பற்றி தெரிந்து கொள்ள துடித்தான். ‘அப்படி எவன தான் கல்யாணம் பண்ணியிருக்கா.. என்னை விட ஹேண்ட்சம்மா இருப்பானா.. என்னை விட பெரிய பணக்காரனோ..என்னை வேணாம்னு சொல்லிட்டு எந்த மன்மதராசாவ கட்டி இருக்கானு பார்க்கலாம்..’

“சார்…ஷாஷிகா பாதர்..”

“அவரு..”

“ப்பா..” தேவர்ஷி சத்தமாக இடையிட்டாள்…

திருகுமரன் அனிவர்த்தை விட்டு மகளைப் பாரக்க…

“புதுசா யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல.. யாரு என்னனு வாசல்ல வச்சு பேசி அனுப்ப மாட்டிங்களா..” என்றாள் அனிவர்த்தை அந்நிய பார்வை பார்த்தவாறு…

“இல்லம்மா.. இவரு ஷாஷிகா ப்ரண்டுனு..”

“ப்பா.. ஷாஷிகா ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாருங்க.. கிளம்புங்க…”

திருகுமரன் சுவர் கடிகாரத்தை பார்க்க… இன்னும் பள்ளிக்கு செல்ல நேரமிருந்தது..

அப்பாவின் பார்வையை அறிந்தவள்..”ப்பா.. அவ கிளாஸ் மிஸ் பார்க்கனும் சொன்னாங்க… நீங்க கிளம்புங்க..”

“ம்மா.. மிஸ் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல..” என்றது ஷாஷிகா விவரமாக….

குட்டி பிசாசு என பல்லை கடித்த தேவர்ஷி..”எனக்கு போன் பண்ணினாங்க.. அப்பா கிளம்புங்க..” என பிடிவாதமாக நின்றாள்.

எதாவது பேசி இவன் யார் என்று குடும்பத்திற்கும்… ஷாஷிகா இவன் குழந்தை என்று இவனுக்கும் தெரிந்துவிடுமோ.. என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது..

“சாரி சார்.. ஸகூலுக்கு போகனும்.. இன்னொரு நாள் ப்ரீயா பேசலாம்..” என திருகுமரன் சொல்லிவிட்டு.. ஷாஷிகாவை கூட்டி கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் செல்லும் வரை பார்த்திருந்த அனிவர்த்..

“நான் என்ன தெரிஞ்சுக்க கூடாதுனு.. இப்படி உங்கப்பாவ துரத்திவிடற.. என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கற போல..” என்றான் அவளை கூர்மையாக பார்த்து…

“யார் சார் நீங்க.. நீங்க யாருனே எனக்கு தெரியாது… உங்ககிட்ட இருந்து மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..” என்றாள் தெனாவட்டாக..

“நான் யாருனு தெரியாது உனக்கு.. அப்படி தான.. சரி விடு.. ஆனாலும் அப்ப இருந்தத விட இப்ப தான் நல்லா கும்முனு இருக்கற…” என அவளின் கொஞ்சம் சதைபிடிப்பான உடலை மேலிருந்து கீழ வரை பார்வையால் மேய்ந்தான்.

அவனின் பார்வையில் அவளின் காதல் மனது மயங்கி தான் போனது. இத்தனை பட்டும் தன் மானங்கெட்ட மனது அவனின் பார்வையில சொக்கியதில் தன் மேலேயே எரிச்சல் கொண்டவள் அதையும் அவன் பக்கம் திருப்பினாள்.

“எதுக்கு இப்படி பார்க்கறிங்க.. கண்ணை நோண்டிருவேன்..”அவனின் முகத்திற்கு நேராக கையை ஆட்டி பேச..அவளின் கையை பிடித்து விரல்நுனிகளில் தன் உதட்டை உரச…

இப்போதும் அவன் தீண்டல் அவளை பாதிக்க… குப்பென முகம் சிவக்க.. ஒரு நொடி பேச்சற்று நின்றவளை பார்த்து உல்லசமாக சிரித்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் தொப்பென ஷோபாவில் அமரந்தாள். படபடப்பு.. பயம்.. கண்கள் தானாக நீர் உகுக்க… எங்கே மறுபடியும் தன் மானங்கெட்ட மனசு அவன் பின்னால் போயிடுமோ.. மீண்டும் அவமானபடும் படி ஆகிவிடுமோ என பயம் கொண்டாள்.

கௌசல்யா தேவர்ஷியின் லஞ்ச் பேக்கை எடுத்து வந்தவர் மகளை பாரத்து…

“என்னாச்சு தேவாம்மா.. ஏன் அழுகற..” என பதட்டமாக கேட்க..

அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்..”ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..” என சொன்னவள் தன் பேகையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு..

“வரேன் மா..” சொல்லி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.

இப்ப மகள் அழுதாளா.. இல்லையா.. என குழம்பி போய் அமரந்திருந்தார் கௌசல்யா.. திருகுமரனும் ஒரு குழப்பத்தோடு தான் வீடு வந்தார்.

ஷாஷிகாவின் டீச்சர் நான் வர சொல்லவில்லையே.. நன்றாக படிக்கும் குழந்தை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட.. மகள் எதற்கு இப்படி பொய் சொன்னாள் என குழப்பம்…

வீடு வந்தவர் தான் வந்தது கூட தெரியாமல் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்தவர்.. என்ன ஏது என விசாரித்தவர்.. மனைவி சொன்னதை கேட்டு மேலும் குழம்பி போனார்.

தேவர்ஷி திருகுமரனின் வழிகாட்டுதலில் மீண்டும் படித்து தேசிய வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்த பிறகு எதிலும் எங்கயும் தெளிவாக தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்து முடிவு எடுக்கும் மகளை கண்டு வியந்து தான் போயிருக்கிறார். இத்தனை காலங்கள் கழித்து மகளின் நடவடிக்கை அவரை யோசிக்க வைத்தது..

மனைவியை சமாதனப்படுத்தி தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு அனுப்பி விட்டு யோசித்தார்.மனைவியிடம் சொன்னது போல வேலை டென்ஷன்லாம் இருக்காது என தெரியும் மகளின் வேலை திறனை நன்கு அறிந்தவர் தானே..

மகளின் இந்த மாற்றம் எப்போதிருந்து என யோசித்தார்..முன்தினம் வேலையில் இருந்து வரும் போது ஷாப்பிங் மால் போய் வீட்டிற்கும் தன் மகளுக்கும் ஏதேதோ வாங்கி கொண்டு சந்தோஷமாகவே வந்தாள். காலையில் எழுந்து நல்ல மூடில் தான் வேலைக்கு கிளம்பி ஆயத்தமானாள்.. அதுக்கப்புறம் அனிவர்த்தை பார்தத பின் தான்… பிரச்சினையின் ஆரம்ப நூலை பிடித்துவிட்டார்.

26 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

ba8fd40c-f0d7-4493-89c3-3b0a6180dd05

எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!            [9] ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு,  ‘தேவ்’ என்றெண்ணி, மனைவி ஏற்படுத்திய காயம் குணமடைந்து தேறி வந்ததன் பின்னர்,  அவன் வீட்டு சமையலறையில், வெற்று மேனியில் கையில்லா பெனியனுடனும், தோளில் ஓர் செந்நிற துண்டுடனும் தோசை ஊற்றிக் கொண்டிருந்தான் அதிமன்யு. அந்தக் கையில்லா பெனியன் வழியாகத் தெரிந்த முறுக்கேறிய திண்ணிய தசைகள்.. இவன் மெய்க்காப்பாளனாக இருப்பதற்கு அனைத்து தகுதியும் வாய்க்கப் பெற்றவன் என்று சொல்லாமல் சொல்லியது.  இருந்தாலும் அவனின்

எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top