ATM Tamil Romantic Novels

தொடர் கதை

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [26] அடுத்த நாளில் புலர்ந்த பகலைக் கௌவிக் கொண்ட.. அடர்ந்த இருள் சூழ்ந்த இரவினிலே..  தலைவனினதும், தலைவியினதும் அறையினிலே…  நிகழ்ந்த.. காதல் தருணம் அது!!  அவளைப் பொறுத்தவரையில் அது காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிதிவேல் வீரனைப் பொறுத்தவரையில்..  அந்த இருளின் ஒவ்வொரு செக்கனும் கூட.. உன்னதக் காதலால் நிரம்பி வழிந்தவை!!  அன்றும் போல இன்றும்.. அறையின் டெராஸ் வழியாக… வானத்தில் தெரிந்த வெண்ணிலவை.. வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தது பரிதியின் […]

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா) Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8

ஆசை-6   அன்று!! ஐந்து வருடங்களுக்கு முன்பு !!   பெட்டகத்திற்குள் இருக்கும் டிராகன் முட்டை உடைக்கப்பட்டு ,அதிலிருந்த அவனது உயிர் .. டிராகன் இளவரசனான அவனிடமே போய் சேர்ந்து விட்டிருந்த கணப் பொழுது அது.    நம் பூமி தாண்டி..வானம் தாண்டி..பால்வெளி வீதியில் உள்ள ,அவனது டிராகன் உலகத்தில்..!!   சட்டென்று கருமேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டன.கடும்மழை பெய்யப் போவது போல.. வானிலையும் மாறத் தொடங்கியது .   பெருந்திரள் மேகங்கள் இரண்டு உராய்ந்து கொண்டதில்..இதயமெல்லாம்

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8 Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா!

காதல்காரா-9 அன்றைய இரவு.. நிலவும் உலவிராத.. ஒரு இருண்ட இரவு. நேரமோ.. இரவு பதினொன்றரையைத் தொட்டுக் கொண்டிருக்க.. இன்னும் துயின்றிராமல்.. விழித்திருந்தான் ராகவன்!    அவனது வீட்டு நடுக்கூடத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்தது குளிர்சாதனப்பெட்டி. அதற்கு, அருகாமையில் இருக்கும்.. வட்ட வடிவ மேசையில்.. கையில்.. பெரியளவு கொண்ட.. பீர் கண்ணாடிக் குவளையுடன் அமர்ந்திருந்தான் நாயகன்!!    ‘எப்போதும் குடிக்கும், மொடாக்குடிகாரன்’ வகையறாவைச் சார்ந்தவன் அல்லன் அவன். மாறாக, இன்று ஒரு நல்ல ஆண்தகையான் செய்யக் கூடாதவற்றைச் செய்து விட்ட

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா! Read More »

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா!

காதல்காரா-8     அடுத்தநாள் காலை, ஃபார்மல் வெண்ணிற முழுநீளக்கைச் சட்டை மற்றும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து.. அதற்கும் மேலாக கோர்டுடன்..பக்கா ‘பாடிகார்ட்’ தோற்றத்துடன்.. பூஜாவின் இல்லம் நாடி வந்திருந்தான் வீர ராகவன்.    தன் கைக்கடிகாரத்தில் மணிபார்த்தபடியே வந்தவனின் மறுகையோ.. அவனது பேன்ட் பாக்கெட்டினுள் தஞ்சம் புகுந்திருந்தது.    அவனது வீறு நடை கண்டு.. நிஜத்திலும், ‘ஒரு பணிக்காரனைப் போலில்லா.. ராஜாவைப் போலுண்டு’ என்றது போல.. ‘உயர்தட்டு வர்க்கத்தினைச் சார்ந்த ஆண்மகன்’ என்று காண்பார்

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா! Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4

ஆசை எப்போ..மோகமாச்சு சுந்தரா!! காதல் இளவரசி (விஷ்ணுப்ரியா ) (இது ஒரு லாஜிக் இல்லா மேஜிக் கதை.லாஜிக் பார்ப்பவர்கள் டேக் டைவர்ஷன்!! சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே!!) ஆசை-1 அது சென்னையின் உயர்ரகமான, மேன்னாட்டு தரம் வாய்ந்த உணவகமொன்று.  முழுமையாக மூன்று தளங்கள் கொண்ட அதன் சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச்சுவர்களாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெளிவளாகத்தில்.. கழுகுச்சிலையின் அலகிலிருந்து நீர் பாய்வது போல செயற்கை நீரூற்றொன்றும் வட்டவடிவில் பேரழகாக எழுப்பப்பட்டிருந்தது.  ஆக மொத்தத்தில், சுருங்கச் சொல்லின், ஏழு நட்சத்திர

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [21] ஹாஸ்பிட்டலில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆனவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனின் முகம் சற்றே சோர்ந்திருந்தாலும் கூட சோபையிழந்திருக்கவில்லை!!  அந்த சம்பவத்தின் பின் மனைவியை கண்ணும், கருத்துமாக பார்க்க நாட்டம் கொண்டிருந்தவனோ, இப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும்.. அவனது காதல் மனைவி… தன்னுடைய வளைந்த இடுப்பைத் தூக்கிக் கொண்டு, கைப்பிடி வரிசையினைப் பற்றியவாறு..  நெடும் நெடும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, ஆயாசத்துடன் மெல்ல மெல்ல மாடிப்படியேறுவது புரிந்தவனுக்கு..  அவள் நிலை அவன்

காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [17]   இன்று,..  பரிதி.. மென்னிலாவை.. வலுக்கட்டாயமாக அவனது இல்லத்திற்கு அழைத்து வந்து,  அவளும், அவன் காட்டும் காதலுக்கு.. பதில் காதல் செய்வது போல நடித்து… ஒரு மாதகாலம் ஆகிவிட்டிருந்த தருணம் அது!!!  அவனது அறையோடு உள்ள ‘அட்டாச்டு பாத்ரூமில்’ நின்றிருந்தவளின் இதயம்… அன்று வழமைக்கு மாறாக, “திக் திக்” என்று… தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது;உடல் உள்ளூற வெளவெளத்துப் போயிருந்தது.  கை, கால்கள் எல்லாம் துணுக்குற… நெற்றி,

காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா) Read More »

உரசி மலர்த்தாதே மாறா !-21&22 (விஷ்ணுப்ரியா )

மலர்தல்-21 தன் அன்புப் பாட்டி , ‘மீராவைக் கட்டிக்கொள்’ என்று சொன்ன பிற்பாடு ..அலுவலகம் வந்து சேர்ந்தவன்.. அவன் அவனாகவே இல்லை !!   எப்போதும் தன் அலுவலக ஊழியர்களின் ‘குட்மார்னிங்’குகளை சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக் கொள்பவன்..இன்று யாரையும் நிமிர்ந்து பார்த்தானில்லை.   கால்களில் சக்கரம் கட்டியது போல அப்படியொரு வேகம் அவனுக்குள். விறுவிறுவென்று சென்று நேரே..தன் அறைக்குள் புகுந்திருந்தான்.   அவனது அறை ஏழாம் மாடிக் கட்டிடத்தில் உண்டு. அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதும் கண்ணாடியால்

உரசி மலர்த்தாதே மாறா !-21&22 (விஷ்ணுப்ரியா ) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [15]   அன்றிரவு.. பரிதியின் வீட்டின்.. அவனறையோடு ஒட்டியிருந்த டெராஸின் வழியாகத் தெரிந்த வானத்தில்…. காய்ந்து கொண்டிருந்தது முழுமதி நிலவு!!!  அதனைச் சூழ நின்ற வெண்பஞ்சு மேகங்கள்… நிலவைக் கடந்து போகையிலே.. ஏழுவகையான நிறப்பிரிகைகளைக் காட்டி.. வானவில்லைத் தோற்றுவிக்க.. அதுவும் கூட அந்த ஏகாந்தமான இரவு வேளையில்.. ரம்மியமாகவே இருந்தது. நடுச்சாமத்தை அண்மிக்கும் போது.. மரங்களைத் தழுவிய உற்சாகத்தில்.. வீசும் குளிர்ந்த தென்றல் காற்று.. நாடி, நரம்பெங்கும்

காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top