ATM Tamil Romantic Novels

7 – தீக்கு தென்றலோடு மோகம்

7 – தீக்கு தென்றலோடு மோகம்!

விமலாவும் யோகேஷ் சொன்ன மாதிரி ‘எந்த தேதினு தெரிஞ்சிக்க…’ ஒன்றும் நடக்காத மாதிரி இவர்களின் உரையாடல் கேட்கும் தூரத்தில் அமர்ந்துக் கொண்டார். பேச்சு சுராஸ்யத்தில் அவர் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

“அடுத்த மாதம் வருகிற முதல் முகூர்த்தில் நிச்சயம் பண்ணிக்கலாம்…” ஆதிகேசவன் சொல்ல, ஈஸ்வரும் சம்ரித்தும் சரி என்பது போல தலையாட்டினார்கள். அதை குறித்துக் கொண்ட விமலா உடனே யோகேஷிடம் சொல்ல ஓடிப் போனார்.

யோகேஷிடம் செல்போனில்,”ண்ணா… அடுத்த மாதம் முதல் முகூர்த்த தேதில என்கேஜிமெண்ட் வச்சிருங்காங்கண்ணா… அதுக்கு முன்னாடியே நீங்க இஷாவ கூட்டிட்டு வந்துடுங்க…” விமலா சொன்னார்.

அதுக்கும் யோகேஷ்,”சரிம்மா… நாங்க வந்திடுறோம்…. நீ ஒன்னும் கவலப்படாதே….” என சொல்லி போனை வைத்துவிட்டார்.

இஷாவை அழைத்து,”இஷா… உங்க அத்த இப்ப தான் போன் செஞ்சா…” என சொல்லி முடிக்கும் முன்,

இஷா பரபரப்பாக,”ப்பா… அவங்க என்ன சொன்னாங்க…” என்று கேட்டாள்.

“என்னம்மா… நா சொல்லாங்காட்டி உனக்கு அவசரந்தான்…”

“நீங்க சொல்லறதுக்குள்ள விடிஞ்சே போயிடும்ப்பா…” என்று சலித்துக் கொண்டாள்.

“கொஞ்சம் இரும்மா… உங்கம்மா எங்க இருக்கானு பார்த்திட்டு வாம்மா…”

“அப்பா… நீங்க விஷயத்த முதல்ல சொல்லுங்கப்பா… என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல…” என அவசரப்படுத்தினாள்.

“உங்கம்மா விஷயத்த கேள்விப்பட்டால் முதல அவங்கிட்ட போயி பத்த வச்சிடுவா… அதுக்கு தான் சொன்னேன் அவ எங்க இருக்கானு பார்த்திட்டு வாம்மா…” என்று விளக்கினார்.

“ஷிட்… சாரி… சாரிப்பா… இது எனக்கு தெரியாம போயிடுச்சு… இருங்க… இந்தம்மா எங்க இருக்குதுன்ன பார்த்திட்டு வரேன்ப்பா…” என கூறி தன் தாயைப் பார்க்கச் சென்றாள்.

அவர் ‘தன் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு…’ என்று பூஜையறையில் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அதைப் பார்த்து விட்டு ‘பாவம் இதுக்கு என்ன கவலையோ…’ நினைத்துக் கொண்டு சென்றாள். ‘இவளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்…’என்ற வேண்டுதலை அறியாமல்…

தன் தந்தையிடம்,”அப்பா… அம்மா கடவுளிடம் தீவிரமாக எதையோ வேண்டுதல் வைத்துக் கொண்டியிருக்குது…” எனச் சொன்னாள்.

இது தான் சமயம் என்று,”நல்லவேளைம்மா… உன்ம்மா இங்க இல்ல… உங்க அத்தை சம்ரித்துக்கு நிச்சயத்துக்கு முன்னாடி நம்மள தட்டு மாத்திக்க வர சொல்லிக்க இருக்காம்மா… இத சொல்லங்காட்டி அந்த பற பறந்தே… நா என்ன பண்ணட்டும் சொல்லு….” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

“சூப்பர்… சூப்பர்ப்பா…” என்று சுற்று்பபுறம் மறந்து சத்தமாச் சொல்லிக் கொண்டு இரு கைகளையும் தட்டி ஆர்பரித்தாள்.

“ஷ்ஷ்… சத்தமா பண்ணாதே… இத கேட்டு உன்னம்மா வந்துட்டா நமக்கு தான் ஆபத்து…” என்றார்.

“சாரிப்பா… தெரியாம செஞ்சுட்டேன். என்னய மன்னிச்சிடுங்கப்பா…” மெதுவாக பேசினாள்.

“பரவாயில்ல… விடும்மா… ஒரு ஆர்வத்துல பண்ணிட்டே… இனி மேல் நாம எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஃஸ்டெப்ம் ஜாக்கிரதையா எடுத்து வைக்கனும்…” என மெதுவாக சொன்னார்.

“ம்ம்… சரிப்பா…”என்று குசு குசுவென பேசினாள். இருவரும் தன் தாய்க்கு நிச்சயதேதியை சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

இதோடு விஷயம் முடிந்தது என்று இஷா வழக்கம் போல் ஜிம்கும், யோகேஷிம் தன் அலுவலகத்தையும் பார்க்க சென்றனர்.

அம்ரீதா வீட்டில் யசோ,”உங்க மகள் சம்ரித்தை லவ் பண்ணறா தெரியுமா…” சொன்னார்.

இதை கேட்டதும் மிகவும் அதிர்ந்து போய்,”என்ன யசோ சொல்ற…” என கேட்டார்.

“ஆமாம் ப்பா… நிஜமா தான்…” என யசோ சொல்ல, அதற்கு கருணாகரன்,”அம்ரீ… அம்ரீ… இங்க வா…” என்று கத்தினார்.

உள்ளே இருந்து தன் சித்தப்பா என்ன சொல்வாரோ என பயந்து நடுங்கிக் கொண்டே வந்தாள்.

அவளைப் பார்த்ததும்,”நீ சம்ரித்த காதலிக்கறா…” என கோபமாக வினவினார்.

“ஆமாம் சித்தப்பா…” என பயந்துக் கொண்டே சொன்னாள்.

அப்போது போன் சிணுங்கி இடையூறு செய்தது.போனை கருணாகரன் தான் எடுத்தார்.

ஆதிகேசவன் தான்,”ஹலோ… உங்க வீட்டு பொண்ணும் எங்க வீட்டு பையனும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணறாங்க… உங்களுக்கு தெரியுமா…” என்று பேசினார்.

தன் முதலாளி அழைத்து அப்படி கேட்கவும்,கருணாகரன்,”எனக்கு விஷயம் இப்ப தான் கேள்விப்பட்டேன். அதைப் பத்தி தான் என் மககிட்ட விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றார்.

அதற்கு ஆதிகேசவன் தான்,”அதையே நா சொன்னேன். அவங்க இரண்டு பேரும் காதலிக்கறாங்க…” என்றார்.

கருணாகரன்,“ நீங்க என்ன சொல்றிங்கனு புரியல…” என்று கேட்டார்.

ஆதிகேசவன் புன்னகைத்தவாறே,”உங்க பொண்ணும் எங்க பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க… இப்ப புரிஞ்சிருக்குமே…” என சொன்னார்.

“அதனால் நீங்க என்ன சொல்ல வரிங்க…” என்றார்.

“பேசாமல் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடலாமே… நீங்க என்ன சொல்றிங்க…”

“நா என்ன சொல்றது… அவங்க வாழ்க்கை அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க… நா அப்பனா… ஃஏப்ட் ஆல் நா சித்தப்பா தானே…” என கோபமாக போனை வைத்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அம்ரீதா என்ன செய்வது என்று தலை குனிந்தும் கைகளை பிசைந்தும் தவித்தாள். யசோதா கண் ஜாடையில் அம்ரீதாவை சமாதானம் செய்து வைத்துவிட்டு கோபமாக சென்ற கணவரிடம் பேசச் சென்றார்.

யசோதா கதவைத் திறந்துக் கொண்டு வரும் அரவம் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தார் கருணாகரன்.

“கருணாஸ்” என அழைத்து அவரை சமாதானம் செய்ய முயன்றார். அவர் தனிமையில் இருக்கும் போது எல்லாம் யசோ அப்படி தான் காதலோடு கூப்பிடுவார். அவ்வாறு அழைக்கும் போது எல்லாம் அப்படியே தீயில் இட்ட பனிகட்டியாக உருகிவிடுவார். அதனால் இப்பவும் அப்படியே அழைக்கவும் செய்தார்.

அவர் இதுக்கெல்லாம் அசையமாட்டேன் என கோபமாக இருந்தார். அவர் கோபம் இன்னும் கூட குறையவில்லை என்பதில் இருந்து அருகில் சென்று கருணாவை பிடித்து இழுத்து படுக்கையில் அமர வைத்து, தானும் அவரின் பக்கத்தில் அமர்ந்து, அவர் கன்னத்தைப் பிடித்து அவரை தாஜா செய்தார்.

“ப்ளீஸ் கருணாஸ்… ப்ளீஸ் கருணாஸ்…”

“என்னய விடு சொல்றேன்…” அப்பவும் முறுக்கிக் கொண்டார்.

“கருணாஸ்… நா சொல்றத கொஞ்சம் கேளுங்க…” என்றார்.

அவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு,”என்ன சொல்லு…” என்றார்.

“அவங்க இரண்டு பேரும் காதலிங்கறாங்க தான்… உங்கள சம்மத்துக்காக காத்துட்டு இருக்காங்க… நீங்க அவங்களுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யவேயில்ல… நீங்க பண்ணறது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல…”

கருணாகரன் கொஞ்சம் இளகி வந்தார். இது தான் நல்ல தருணம் என யசோதா நினைத்துக் கொண்டு, மேலும் அவரை பேசிய கரைக்கலாம் என முடிவு செய்து,”கருணாஸ் நீங்க என்ன சொல்றிங்களோ… அதன்படியே அவங்க கேட்டு நடந்துப்பாங்க…” என்றார்.

உடனே கருணாகரன் தீவிரமாக சிந்தனை செய்தார். அவர் யோசிக்கட்டும் என அவரை தனிமையில் விட்டுட்டு யசோதா வந்துவிட்டார். ‘ஆனது ஆகிப்போச்சு… இனி மேல் நாம சொல்லி மாற போகுதா… அவங்க லவ் பண்ணிட்டாங்க… என்ன தான் என் சம்மத்த வேண்டி நின்னாலும்… எத்தன காலத்துக்கு தான் தடுத்த நிறுத்த முடியும்… தடுத்தாலும் அவர்கள் மனம் மாறப் போவதில்ல… பேசாமல் நாமளே திருமணம் செய்து வைத்துவிடலாம்… கேட்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டால் நம்ம கௌரவத்துக்கு அழகு…’ என்ற முடிவு செய்தார்.

அவர் சிந்தித்தும் சிந்தித்தும் தெளியும் போது மாலையாகிவிட்டது. அவர் மனம் முடிவு செய்த படி,’அவர்கள் திருமணத்தை தானே நடத்திவிடலாம்.’ என தெளிந்தார். பின்பு அறையை விட்டு வெளியில் வந்தார்.

நேராக ஆதிகேசவனுக்கு போன் செய்து,”நானும் யோசனை பண்ணி பார்த்தேன். எப்படி பார்த்தாலும் இவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பது தான் சரியாக இருக்கும்… சோ, இந்த திருமணத்தை நடத்தி வைக்கலாம்னு நா முடிவு பண்ணிட்டேன்.” என்று அவருக்கு மட்டும் இல்லாமல் அவர் வெளியில் வந்தவுடன் அவரை சுற்றிக் கொண்ட குடும்பத்தினருக்கும் சேர்ந்து சொன்னார்.

அவர் சொன்னவுடன் அம்ரீதா மகிழ்ச்சியில் தன் சித்தப்பாவை ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டாள். யசோவும், இராகுலும் கூட மகிழ்ந்தார்கள்.

அந்த பக்கம் இதை கேட்டவுடன் ஆதிகேசவனும் சந்தோஷப்பட்டார். போனை அதன் தாங்கியில் வைத்து விட்டு,”சம்ரித்… இங்க வாப்பா…” என்றார்.

“என்ன தாத்தா… என்ன விஷயம்…” என பரப்பாக ஓடி வந்தான்.

“உங்க சின்ன மாமனார் உன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்.” என்கவும், தீடிரென சின்ன மாமனார் என சொல்லவும் சம்ரித் புரியாமல் முழித்தான்.

ஆதிகேசவன் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டு,”இன்னும் புரியலயா… அம்ரீதாவுக்கு சித்தப்பா என்றால் உனக்கு சின்ன மாமனார் தானே…” விளக்கினார்.

சம்ரித் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தப்படியால் அவனுக்கு இந்த உறவுமுறை எல்லாம் சட்டென்று புரியவில்லை.

“ஆமாமில்ல…”

“ஆமாம்மா… இல்லயா… இரண்டுல ஒன்ன தான் சொல்லனும்…”

“ஆமாம் தாத்தா… ஆமாம்… இல்லைனு நா எப்பவும் சொல்லமாட்டேன்.”

“இல்லங்கற வார்த்தை எப்பவும் உன் வாயிலருந்து வராதே…?”

“ஆமாம் தாத்தா… எப்பவும் வரவே வராது…”

“அதையும் பார்க்கலாம்… இப்ப உன்கிட்ட சில கேள்வி கேட்பேன். அதுக்கு எவ்வளவு சாமர்த்தியமா பதில் சொல்றின்னு பார்ப்போம்…” என சவால் விட்டார்.

“கேளுங்க… அதற்கு நா பதில் சொல்றதில், நீ அசந்து போயிடுவிங்க…”

“நீ அம்ரீதாவ காதலிக்கல்ல…”

“நா அம்ரீய காதலிக்கல… ஆனால் அவள அதற்கு மேல… என் உயிருக்குள்ள வச்சு பொத்தி பாதுகாக்கறேன்…” நெஞ்சை மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சொன்னான்.

“ஆஹா! அப்படியா…”

“ஆமாம்… அப்படித்தான்…” நெஞ்சை நிமிர்த்தி பெருமையாக சொன்னான்.

“இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாமல் போச்சே…” என ஆச்சரியப்பட்டு பேசினார்.

“இனி மேல் தெரிஞ்சுக்கோ…” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான்.

இவனின் சிரிப்பு சத்தம் கேட்டு ஈஸ்வரும், விமலாவும் என்னவென்று தெரியவில்லையே என விரைவாக வந்தார்கள்.

இருவரும் இது தான் விஷயம் என்று சொன்னதும், ஈஸ்வர் வாய் விட்டு உல்லசமாக சிரித்தார். இதற்கு நேர்மாறக விமலாவோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மதியம் போல் சம்ரித் அம்ரீதாவின் செல்லுக்கு அழைத்து அவளை தனிமையில் சந்திக்கனும் என்று சொன்னான். எங்கே எத்தனை மணிக்கு வருகிறதுனு முடிவு பண்ணிட்டு சொல்லுமாறு வைத்துவிட்டான்.

யசோவிடம்,”சித்தி, சம்ரித் வெளியே போகனும்னு சொல்றார். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா…” என்று கேட்டாள்.

அதற்கு யசோ,”எங்க போறது முடிவு பண்ணிட்டிங்களா…” பதிலுக்கு கேட்டாள்.

“இல்ல… சித்தி… என்னய முடிவு செய்ய சொல்லிகிறார். நா இன்னமும் எங்கே போறது தான் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்…”

சிறிது நேரம் யசோதா யோசித்து,”இல்ல சாயங்கலாம் தான போறிங்க… பேசாம ஃபீச்க்கு போயிட்டு வாங்க…” என்றார்.

“ஆனா தனிமையில் சந்திக்கனும்னு சொல்றார்.”

“அதுக்கு நீங்க நைட் டின்னர் போலாமே…”

“ஆஹா… இது நல்ல ஐடியாவே இருக்குது… நா இப்பவே அவருக்கு கூப்பிட்டு சொல்றேன்…”துள்ளி குதித்தாள்.

“பொறு… பொறு… இப்பவே அவரய வீட்டுக்கு வர சொல்லி காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு டின்னர் போங்க…” சொன்னார்.

அம்ரீயும் அப்படியே சொன்னாள்.

உடனே விமலா யார் அறியாமல் இஷாவின் செல்லுக்கு அழைத்து,”எல்லோரும் ஒரே கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு கேட்கவே முடியல… ஒரே நாரசமாக இருக்குது…” அருவருப்புடன் சொன்னார்.

“ஏன்… என்ன விஷயம்… இவ்வளவு அருவருப்புடன் சொல்றிங்கத்த…” இஷா கேட்டவுடன்,

விமலா நடந்தவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தார். அதே எள்ளும் கொள்ளும் இப்போது இஷாவின் முகத்தில் வெடித்தது.

“இருங்கத்த… இதுக்கெல்லாம் முடிவு கட்டறேன்.”

“எப்படி…” என விமலா கேட்டார்.

“ஏன் உங்களுக்கு தெரியாத… எல்லாம் உங்க மருமகளாக வந்து, சம்ரித்த ஆட்டி படைக்கிறேன்.”

“நீ பேசறது எல்லாம் கேட்கும் போது இந்த காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்குது…”

“எல்லாம் நடக்கும் அத்த… நீங்க எதுக்கு கவலப்படறிங்க…”

“நீ சொலறது எல்லாம் கேட்க ஆசையாயிருக்கு… நிஜத்துல நடந்த எவ்வளவு நல்லா இருக்கும்…”

“நடக்காமல் எங்க போகுது… நடக்கலைன்னாலும் நாம நடத்தி முடிச்சுடமாட்டோம்… நீங்க கவலப்படாமல் போங்கத்த… நா போனை வைக்கிறேன்.” என சொல்லி போனை வைத்தாள்.

மாலையானதும் சம்ரித் அம்ரீதா வீட்டுக்கு வந்தான். அம்ரீதா,”வாங்க… உள்ளே வாங்க…” அழைத்து விட்டு, “சித்தி… சம்ரித் வந்திருக்கிறார்.” என உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.

தன் அறையில் இருந்த யசோதா வெளியில் வந்து,”வாங்க மாப்ளே வாங்க… உட்காருங்க…” என்று சோபாவை காண்பித்தாள் உடனே சம்ரித் கூச்சப்பட்டவாறே,”புதுசா என்ன மாப்பிள்ளனு சொல்லிகிட்டு இருக்கிங்கத்த… என்னய சம்ரித்துனு கூப்பிடலாமேத்த…” என்று உட்கார்ந்தான்.

“நீங்க மட்டும் என்னய அத்தைனு கூப்பிடறிங்க… மாப்ளே… நா உங்கள அப்படி கூப்பிடகூடாதே…” என்றார்.

“எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்குதுன்னு தான் அப்படி சொன்னேன். சரி நீங்க உங்க இஷ்டப்படி கூப்பிடுங்க… எனக்கு போக போக பழகிடும்னு நனைக்கிறேன்…” என சொன்னான்.

அம்ரீ இருவரையும் சிரித்துக் கொண்டே பார்த்திருந்தாள். யசோ காபி கொடுத்தாள். சம்ரித் அதை வாங்கி குடித்தான்.

பிறகு யசோ அம்ரீய பார்த்து,”மாப்ள… கூட்டிட்டு உன் ரூம்கு போ…” என்றதும், அவள் சம்ரித்தை தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள்.

சம்ரித் அறைக்குள் நுழைந்ததும் சுற்றியும் பார்த்து விட்டு,”பரவாயில்ல… உன்ன போலவே ரூமையும் நீட்டாக வச்சிருக்க… இஷா தன்க்கு மட்டும் மேக்கப் பண்ணிக்குவா… ஆனா ரூமை மட்டும் அன்டைடியா வைத்திருப்பா…” என்றான்.

“சிலர் அப்படித்தான்… என்ன செய்யறது… அவங்க மேக்கப் பண்ணிக்குற அளவுக்கு அவங்க சுற்றியுள்ள இடத்தய பத்தி கவலப்படமாட்டாங்க… அது தான் அவங்க சுபாவம்…” என்று சொல்லிச் சிரித்தாள்.

அவள் சிரிப்பு அவனை மயக்கிவிட… உடனே அவளை இழுத்து கட்டியணைத்தான். அவன் கட்டியணைத்ததில் தீடிரென அவன் கட்டிணைத்தில் அவள் திமிறினாள். அவள் திமிறவும்,”ஷ்ஷ்… இது என்ன உன்னய கட்டி பிடிக்கறது எல்லாம் புதுசா… இதுக்கு ஆபிஸ், ஹாஸ்பிட்டலில் எல்லாம் கட்டி பிடிச்சதில்ல பாரு…” கடிந்தான்.

“ரூம் கதவ திறந்திருக்கு… அதனால் தான் கொஞ்சம் சங்கடப்பட்டேன். இதுக்கு எல்லாம் கோவிச்சுகிட்டிங்களா…” சொன்னாள்.

அப்புறம் தான் தனக்கு பின்னால் இருக்கும் அறைக் கதவை கவனித்தான். “ஷ்ஷ்… நா ஒரு ஃபூலிஸ்… ரூம் கதவ லாக் பண்ணாம எனக்கு ரொமான்ஸ் கேட்குதா…” என நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அவனுக்கு வலிக்குமே என்று அடித்தை இடத்தை அவள் நீவிக் கொடுத்தாள். மறக்காமல் கதவை சாற்றி விட்டு வந்து, அவளை கட்டியணைத்தான். அவளும் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இருவரும் பேச்சற்ற ஒரு மோனநிலைக்கு சென்றனர். மாலை போய் இரவு வந்தது கூட தெரியாமல், டின்னர் போக வேண்டும் என்பதை கூட மறந்து, அதே மோனத்திலே லயிருந்திருந்தனர்.

விமலாவும் மேற்கொண்டு என்ன நடக்குதுனு பார்க்க முடிவு எடுத்து, நடப்பதை கவனிக்கலானாள்.

மும்மரமாக நிச்சயத்துக்கு உண்டான வேலை எல்லாம் ஆதிகேசவனும் கருணாகரனும் கலந்து பேசி, எங்கே எப்போது நடத்துவது என முடிவு எடுத்தார்கள்.

அதே போல் இஷாராவின் வீட்டிலும் இஷாவின் தந்தையும் இஷாவும்,’இந்த நிச்சயத்துக்கு முன்னால் தாங்கள் போய் நிச்சயத்தை நடத்தலாம்…’ என பேசிக் கொண்டிருப்பதை, அந்த வழியாக லதாவின் காதில் விழுந்தது.

உடனே லதா சத்தப்படாமல் வீட்டில் இருந்து வெளியேறி தெருமுனைக்கு வந்து ஒரு ஆட்டோ பிடித்து, சம்ரித்துக்கு வீட்டுக்கு வந்தாள். வரும் வழியில் விமலா வீட்டில் இருக்ககூடாது என கடவுளை வேண்டிக் கொண்டு வந்தார்.

நல்லவேளை அவர் வேண்டுதல் வீணாகாமல் விமலா இஷா தனக்கு மருமகளாக வரவேண்டும் என கடவுளிடம் முறையிட சென்றிருந்தார்.

இது தான் நல்ல சமயம் என்று லதா ஆதிகேசவனிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட, கருணாகரனுக்கு போன் செய்து லதா வந்ததையும், அவர் சொன்னவற்றை முழுவதும் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் இருவரும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

முறைப்படி பெண் வீட்டில் தான் நிச்சயத்தை நடத்துவார்கள். ஆனால் ஆதிகேசவன் கேட்டுக் கொண்டதால் கருணாகரன் வழக்கத்திற்கு மாறாக சம்ரித் வீட்டில் நிச்சயத்தை நடத்த ஒத்துக் கொண்டார்.
அதன்படி இஷா வீட்டினர் வருவதற்கு ஒருமணி நேரம் முன்பு கருணாகரனை தங்கள் வீட்டிற்கு வரச் சொன்னார். அதற்கும் கருணாகரனும் ஒத்துக் கொண்டார்.

உடனே அலுவலகத்தில் இருந்து வரவழைத்து சம்ரித்துக்கும் மருத்துவமனையில் வரவழைத்து ஈஸ்வருக்கும் லதா வந்து சொல்லிவிட்டு, அதற்கு கருணாகரனை முன்பே நிச்சயத்தை நடத்த வருமாறு சொன்னதையும் சொன்னார்.

சம்ரித் கோபப்பட்டு,”உங்க வுட்பி செஞ்சிட்டு இருக்கற வேலயெல்லாம் பாருங்க… நமக்கு ஆப்போஸிட்டா வேலய செய்யறது எல்லாம் நல்லாவ இருக்கு…” என்றான்.

ஈஸ்வர்,”இருடா நா உன்ன மாதிரியெல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகாதுடா… அப்பா நீங்க சொல்ற மாதிரி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடலாம்…” முதலில் மகனிடம் ஆரம்பித்து, இறுதியில் தந்தையிடம் முடித்தார்.

மோகத்தில் முத்தெடுக்க….

மோனநிலைக்கு செல்ல…

அந்நிலையில் லயித்திட…

சுற்றம் மறந்திருக்க…

அவ்வறையே சாட்சியாக அமைய…

7 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

11.காதல் இரவு மாறன் சந்தியா இருவரும் அந்த வீட்டில் உணவு உண்டு முடிக்க அவன் பார்வை அவளை மேய்ந்தது. .தனிமையில் பக்கத்தில் இளமான் இருக்க மாறன் டி. வி யில் காதலை கொண்டாடும் இரவு நேர பாடல்கள் எல்லாம் ஒலிக்க அந்த நிமிடம் இருவரும் சோபாவின் அருகருகே அமர்ந்திருந்தனர்…தியா கடைக்கு போறேன்..உனக்கு ஏதாச்சும் வேணுமா டி.. எதுக்கு போறீங்க..எல்லாம் தான் வரும்போதே வாங்கிட்டு வந்தாச்சே.. அது இல்ல டி..____ம் வாங்கிட்டு வரல..இப்போவே குழந்தை வேண்டாம் டி..கொஞ்ச நாளுக்கு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

10.காதல்   “உங்க ஆசைக்காக வேணும்னா… உங்க கூட ஒரு நாள் இருக்கேன்… ஆசை தீர்த்துக்கோங்க…” என்று சந்தியா கண்ணீருடன் கூறினாள். பளார்!அவளது கன்னத்தில் மாறனின் கை பதிந்தது.சந்தியா அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள். “என்ன டி நினைச்சுட்டு இருக்க…?!” என்று அவன் கோபத்தில் கர்ஜித்தான்.”நான் உன்னை அப்படி நினைக்கிறவனா…? என் காதலுக்கு நீ கொடுக்கிற மதிப்பு இதுதானா?”சந்தியா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “அப்போ வேற என்ன பண்ண சொல்றீங்க…?எல்லாரும் நான் உங்களை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 14   செந்தூரன் அவளது கண்களை நேராகப் பார்த்தவன். “நீ சம்மதிச்சா… உன்னை என் வாழ்க்கைத் துணையா ஏத்துக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன் முல்லை.”   அவன் சொன்ன அந்த வார்த்தைகள் பேரிடி மின்னல் போல் விடியற்காலையின் அமைதியை கிழித்துக் கொண்டு அவளது இதயத்திற்குள் இறங்கின. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.   “சின்னையா… என்ன சொல்றீங்க நீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.   “நான் சொல்றது உண்மை தான் முல்லை. உன்னை என் மனைவியா

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 13 மருதப்பன் தன் நடுங்கும் கைகளோடு மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே நேரத்தில், கதிரேசனின் ஆட்கள் யாருடைய பார்வையிலும் சிக்காமல் இருக்க சுற்றுமுற்றும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டே மருதப்பன் வீட்டை நோக்கி வந்தனர். ஆனால், அவர்களுக்கு முன்னதாகவே அந்த வீட்டின் வாசலில் கம்பீரமாக நின்றிருந்த ஒரு உருவத்தைக் கண்டதும் மருதப்பனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. நெற்றியில் பெரிய திலகம், வெள்ளை வேட்டி சட்டை, அதிகாரம் பொங்கும் தோற்றம், கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

  9.காதல்         மாறன் கோபத்தில் சந்தியாவை விட்டுட்டு அலுவலகத்திற்கு சென்றிருந்தான்…   என்ன ப்பா சந்தியாவை வீட்ல விட்டுட்டு நீ மட்டும் ஆபிஸ் போற..என்று நாயகி ஆரம்பிக்க..    எனக்கு முக்கியமான வேலை இருக்கு..அவ பொறுமையா வரட்டும் நான் முன்னாடி போறேன்.என்று அவளை பார்த்து கொண்டே கூறினான்..சந்தியா சமையலறையில்  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது நாயகி ஹாலில் அமர்ந்திருந்த கண்மணியை பார்த்தார். அத்தை அவளையே தான் பாக்கிறார் மாறன்..”இப்படி போனா மாறன் மனசை

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 12 அரண்மனை வாசலில் வந்து நின்ற புல்லட்டின் இன்ஜினை அணைத்துவிட்டு, நேராக பெரியசாமி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி புயலென நடந்தான் செந்தூரன். அவனது முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கோபமும், கண்களில் தெரிந்த தீட்சண்யமும் அங்கிருந்த வேலையாட்களைப் பதற வைத்தது. வழக்கமாக எல்லோரிடமும் புன்னகையோடு பேசும் செந்தூரனின் இந்தக் கோலம் அவர்களுக்கு புதிதாக இருந்தது. அந்த நேரத்தில், கையில் கணக்கு புத்தகங்களுடன் அமர்ந்திருந்த பெரியசாமி, மகனின் கனமான காலடிச் சத்தத்தைக் கேட்டு தலைநிமிர்ந்தார். செந்தூரனின் முகத்தில்

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

8.காதல்     கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.“சார்… ப்ளீஸ் மெதுவா போங்க…” என்று சந்தியா பயத்தில் சீட் பெல்ட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.மாறன் ஒரு நொடி அவளை பார்த்தான்.அவளது முகத்தில் இருந்த பயத்தை பார்த்ததும் காரின் வேகத்தை கூட்டினான். “தியா பயப்படுறியா டி…?” “ஆமா சார் ரொம்ப பயமா இருக்கு…”“நீ பயப்படுறதை என்னால பார்க்க முடியல… வேகம் குறைங்க சார்.. குறைச்சிறலாம் ஆனா என் மடி மேல ஏறி வந்து வேகம் குறைங்க மாமான்னு சொல்லி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 11

பூ  – 11 ‘யாரு இந்த மருதப்பன்? எங்க அப்பா பெயரை கேட்டதும் ஏன் இந்த மனுஷன் இப்படி பதறிப்போய் கொந்தளிக்கிறாரு? இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்தால இவருக்கு என்ன பாதிப்பு நடந்திருக்கும்? அதுவும்… உன் அப்பன் பெரியசாமியைப் போய் கேளுன்னு சவால் விட்டுட்டுப் போறாரே!’ குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிபட்ட காலோடு தவித்த முல்லையின் முகம் மட்டும் தான் அவனது கண்ணுக்குள் வந்து போனது. தன் தந்தையிடம் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது எப்படியாவது காரை

நெஞ்சோரம் பூத்தவளே 11 Read More »

error: Content is protected !!
Scroll to Top